Wednesday, May 12, 2010

உங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்...


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு ஈமெயில் இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் சிலரது எண்ணங்களை பிரதிபலித்தது. சில வருடங்களுக்கு முந்தைய என் நிலையை அதனுடன் ஒப்பிட வைத்தது. அதை அனுப்பிய சகோதரர் அனுமதியுடன் அந்த கடிதம் இங்கே உங்கள் பார்வைக்காக...


அன்பு சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு,

        அஸ்ஸலாமு அலைக்கும். என் பெயர் shanawazkhan. கடந்த ஒரு வருடமாக கணினி உபயோகபடுத்துகிறேன். தமிழ் பிளாக்கர் எனக்கு ஆறு மாதமாக பழக்கம். பொழுது போக்கிற்காக நிறைய தளங்களை வாசிக்க தொடங்கினேன். 

அப்போது நான் பட்ட மன உளைச்சலை வார்த்தைகளாக வடிக்க முடியாது. ஏனென்றால் தூய மார்க்கமாம் இஸ்லாத்தை பற்றியும் இவ்வுலகிற்கே வழிகாட்டிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை பற்றியும் மிகவும் கீழ்த்தரமான சிந்தனைகளை விதைக்கும் பல தளங்களை காண நேர்ந்தது. இஸ்லாத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே அதை கணிக்க முடியும். 

இல்லை! இது தவறான செய்திகள். நீங்கள் கூறுவதை எங்கள் நபி எங்களுக்கு கற்று கொடுக்கவில்லை என்று என் மனம் ஓலமிடும். ஆனால் இந்நேரத்தில் என்னுடைய இஸ்லாமிய அறிவும் மிக குறைவே. எப்படி என்றால் யாராவது தொழ அழைத்தால் என்ன! இன்று வெள்ளிகிழமையா! அதற்குள் வந்து விட்டதா! என்று திகைக்கும் அளவிற்கு :). 

பிறகு என்னுடைய தேடலை அதிக படுத்திய பொழுது நம் சகோதரர்களின் வலைத்தளங்கள் காண கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்! இம்மக்கள் தங்களுடைய பணிசுமைகளுக்கிடையிலும் பதிலடி கொடுப்பது கண்டு உளம் வியந்தேன். 

ஆம்! அப்போது ஆயுதங்களால் தாக்கினார்கள். பதில் கொடுத்தோம். இப்போது கருத்துருவாக்கங்களால் தாக்குகிறார்கள். பதில் கொடுத்தோம். கொடுப்போம்.

அவ்வாறு தங்களுடைய தளத்தையும் கண்டேன். ************************************ 

அல்லாஹ் தங்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் கூலியை வழங்குவானாக.ஆமின்!.

பின் குறிப்பு:

என்னுடைய பணி online job வகையை சேர்ந்தது. எனக்கு வந்த வேலைகளில் ஒன்று கனடா நாட்டு தொண்டு நிறுவனங்களின் விவரங்களை சேகரிக்கும் பணி. அந்த தொண்டு நிறுவனங்களில் பெரும்பாலானவை கிருஸ்தவ சபைகளாகும். அந்த சபைகளின் தளங்களை ஆய்வு செய்யும் போது Islam is cult மற்றும் 'வழிதவறிய ஆடுகள் ' என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை போதிக்கவும், பரப்பவுமாகிய வகுப்புக்களின் பட்டியலை காண நேர்ந்தது. இத்தகவலை தங்களின் வரும் பதிவுகளில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

நம் சகோதரர்களின் தளங்களில் மெயில் தொடர்புக்கான முகவரி காண கிடைக்கவில்லை.அதனால் தங்களிடமே அனைத்து விஷயங்களையும் பகிர்து கொள்ள நாடினேன். அஸ்ஸலாமு அலைக்கும்...
-----end of email-----


"பொருள், பதவி என்று எது வேண்டுமென்றாலும் கேளுங்கள், கொடுக்கிறோம். ஆனால் இஸ்லாத்தை போதிப்பதை மட்டும் நிறுத்தி விடுங்கள்" என்று குறைஷிகள் வேண்டிய போது, 

"ஒரு கையில் சூரியனையும், மற்றொரு கையில் சந்திரனையும் கொடுத்து நிறுத்த சொன்னாலும் என்னால் முடியாது" என்று கூறினார்களே, அவர் சந்திக்காத சவால்களையும், துயரத்தையுமா நாம் சந்திக்கிறோம்? அன்றைய நிலைமையோடு ஒப்பிடும்போது இன்றைய சூழ்நிலையெல்லாம் ஒன்றுமில்லை. 

  • இஸ்லாம், இன்று நேற்றா இதையெல்லாம் சந்திக்கிறது? 
  • வரலாறு முழுவதும் இதையெல்லாம் சந்தித்து தானே வந்திருக்கிறது? 
  • நமக்கு முன் சென்ற ஒவ்வொரு தலைமுறையும் இதையெல்லாம் அனுபவித்தவர்கள் தானே?. 

1800 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை, சுமார் 60,000 புத்தகங்கள் இஸ்லாத்திற்க்கெதிராக எழுதப்பட்டுள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டது (The Times, dated 16th April 1979).  

ஆனால், இஸ்லாத்திற்கெதிரான எந்த ஒரு முயற்சியும் இதுவரை பலனளிக்கவில்லையே. இறைவனின் கிருபையால் இஸ்லாம் மென்மேலும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நிச்சயமாக இவர்களுக்கு நாம் தரும் மிகச் சிறந்த பதிலடிகளில் ஒன்று, நாம் முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவது தான். 

அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்போம். அழகிய முறையில் விவாதிப்போம்.  ஆனால், அது விதண்டாவாதமாக இருந்தால், அவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் நமக்கு சொல்லியிருக்கிறான், சலாம் சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்போம். 

இவர்கள் நிச்சயமாக நமக்கு மாபெரும் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். நம் ஈமானை அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். நிறைய முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளை இஸ்லாம் என்றால் என்ன என்று பார்க்க வைத்திருக்கிறார்கள்.

நம்மை விட மும்முரமாக முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் உதவிக்கு நன்றி என்பது நிச்சயமாக மிகச் சிறிய வார்த்தை....    

இறைவன் நம்மை என்றென்றும் இஸ்லாத்தில் நிலைக்கச்செய்வானாக...ஆமின் 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ







8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்! அன்பு சகோதரர் ஆஷிக் அவர்களே!என் உள்ள கிடக்கையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி(jasaakkalaahul khair). நான் தங்களின் தளம் குறித்த தகவலையும் பதிவு செய்ய கேட்டு கொண்ட பின்பும் தங்கள் அதை போடாத மாண்பு வியக்க வைக்கிறது.அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக! ஆமின்!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    //இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் சிலரது எண்ணங்களை பிரதிபலித்தது.//
    நிச்சயமாக. இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் விஷமப்பிரச்சாரத்தைக் கண்டு மனம் வெதும்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் அதற்கான போதிய அறிவு என்னிடம் இல்லாததால் இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு வேறு தளங்களில் பதிவான பதில் கட்டுரைகளை என்னுடைய வலைப்பூவில் மீள்பதிவு செய்கிறேன்.

    ஆனால் அது மட்டும் தீர்வாகாது. இஸ்லாம் மீதான தவறான எண்ணங்களை மாற்ற சரியான தீர்வு, நீங்கள் குறிப்பிட்டது போல்,
    //நாம் முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவது தான். //


    //நிறைய முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளை இஸ்லாம் என்றால் என்ன என்று பார்க்க வைத்திருக்கிறார்கள்.//
    எந்த இரட்டைக்கோபுர தாக்குதல் மூலம் 'இஸ்லாம் என்றாலே தீவிரவாதம்' என்ற விஷமத்தை பரப்ப நினைத்தார்களோ, அந்த தாக்குதலுக்குப் பின் தான் அமெரிக்காவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
    [3:69] வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் ஷாநவாஸ்,
    இஸ்லாத்திற்கெதிரான கட்டுரைகளை இணையத்தில் காணுகின்ற சில இஸ்லாமிய இளைஞர்களின் உள்ளக்கிடக்கையை தங்களிம் மடல் மூலம் பதிவு செய்திருக்கின்றீர்கள். இஸ்லாத்திற்கெதிராக வருகின்ற கட்டுரைகளின் அடிப்படை அறியாமை அல்லது காழ்ப்புணர்வு. அறியாமையால் எழுதுகின்றவர்களை நாம் பதில் கருத்துக்களை எடுத்து வைப்பதன் மூலம் திருத்தி விடலாம். ஆனால் காழ்ப்புணர்வுடன் எழுதுபவர்களை நம்முடைய பதில் கருத்துக்கள் ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு தேவை இஸ்லாத்தை பற்றிய அவதூறுகளை பரப்புவது தான். ஆனால் சகோதரர் ஆஷிக் கூறியது போன்று இவர்கள் எழுதுவதை பார்த்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் நமது தேடல் ஆர்வத்தை இவர்களுடைய எழுத்துக்கள் இன்னும் அதிகப்படுத்துகின்றன. ஆனால் நம்முடைய தேடல் சரியான விதத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். இருட்டில் சாவியை தொலைத்தவன் வெளிச்சத்தில் போய் தேடிய விதமாக இருந்து விடக் கூடாது நமது தேடல். இஸ்லாம் என்ற நேரான வழியிலேயே இறைவன் நம்மை என்றென்றும் வைத்திருப்பானாக

    ReplyDelete
  4. முஹம்மத் ஆஷிக்Wednesday, May 12, 2010

    அன்பு சகோதரர் ஆஷிக் அவர்களே!
    அஸ்ஸலாமு அலைக்கும்!

    //நிச்சயமாக இவர்களுக்கு நாம் தரும் மிகச் சிறந்த பதிலடிகளில் ஒன்று, நாம் முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவது தான்.//

    //அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்போம். அழகிய முறையில் விவாதிப்போம். ஆனால், அது விதண்டாவாதமாக இருந்தால், அவர்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று இறைவன் நமக்கு சொல்லியிருக்கிறான், சலாம் சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்போம். //

    100% வழிமொழிகிறேன்....

    ReplyDelete
  5. எதிர்ப்பிரச்சாரங்கள் வர வரத்தான் நாம் சரியான பாதையில் செல்றோமான்னு நம்மையும் சீர்தூக்கி பார்க்க இயலும்.

    நமது நம்பிக்கை வலுபெரும்,

    முழு கான்ஃபிடன்ஸ் இருந்தாத்தான் நாம் அடுத்தவருக்கு பரிந்துரைப்போம் - இவ்வுலகில் எதனையும் ...

    நல்ல பகிர்தல்.

    ReplyDelete
  6. Assalamu Alaikum,
    Please pass this information to all muslim students(no need to appear here)
    http://www.sit-india.org/scholarship.html

    The Islamic Development Bank Scholarship:-

    IDB SCHOLARSHIP PRORGRAMME
    The Islamic Development Bank Jeddah, in order to improve the socio-economic conditions of the Muslim Communities in Non-Member Countries around the world and to make meaningful contributions to the development of their countries, launched its scholarship programme in 1983. The Bank is trying to assist and develop the potentialities of Muslim students by awarding scholarship to the scholars who are unable to pursue studies due to financial difficulties. The programme is now in operation in 48 countries.Objective of the Programme:
    The objective of the programme is to provide opportunities for the academically meritorious and financially needy students to pursue study in professional degree courses in the fields of Medicine, Engineering, Agriculture and other related fields in order to become competent professionals with dedication and commitment to the development of the community and the country.
    Nature of the Programme:
    The scholarship is an interest-free loan (qard-e-hasan) to the students. It covers the cost of living, clothing, books, tuition fees and medical expenses (wholly or partly) recipients are therefore required to refund the scholarship in easy instalments after expiry of one year of the completion of graduation or after being settled down in profession whichever is earlier. This is necessary because the scholarship is a grant from the Bank to the local community to enable it to sustain into the future to benefit deserving students to enjoy the same educational opportunity.
    Eligibility:
    The scholarship is open to the students who are meritorious but financially needy and have passed or appearing in SSC (10+2) examination and are desirous to pursue undergraduate profession studies in session 2009-2010 in one of the fields of study approved under the programme. The Master Degree Courses and the students going abroad for study do not fall within the purview of the programme. Students joining Degree Courses after Diploma will not be eligible considered for scholarship.

    ReplyDelete
  7. நிச்சயமாக இவர்களுக்கு நாம் தரும் மிகச் சிறந்த பதிலடிகளில் ஒன்று, நாம் முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவது தான்.

    நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  8. Dear brother pebble,

    wa alaikum salaam,

    since it may be useful for people who are reading this blog, i published your comment here. And will send the news to those in my mailing list..insha allah..

    yours,
    aashiq ahamed a

    ReplyDelete