Showing posts with label Evolution theory greater than Harry potter stories. Show all posts
Showing posts with label Evolution theory greater than Harry potter stories. Show all posts

Monday, December 13, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - VII



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


பூச்சிகளின் தோற்றம் (ORIGIN OF INSECTS):

பரிணாமம் என்பது பரிணாமவியலாளர்களின் கற்பனையில் மட்டுமே நடந்திருக்க வேண்டுமென்பதற்கு பூச்சிகளும் ஒரு உதாரணம்.  

நம் அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்திருக்கும் உயிரினங்களான பூச்சிகள் பரிணாமவியலாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கின்றன.

பூச்சிகளில் (கரையான்கள், ஈக்கள், எறும்புகள், கரப்பான்கள், தும்பிகள், தேனீக்கள் etc) லட்சக்கணக்கான வகைகள் உண்டு. சுமார் 6-10 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்) வகையான பூச்சிகள் தற்காலத்தில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சூழ்நிலைகளிலும் வசிக்கும் தன்மையுடையவை பூச்சிகள்.

1. இந்த பூச்சிகள் எப்படி தோன்றின? 
2. எந்த உயிரினத்திலிருந்து இவை பரிணாமம் அடைந்து வந்தன? 
3. இவைகளில் ஒரு வகையான, பறக்கும் பூச்சிகள் எப்படி வந்திருக்கும்? 
4. அவைகளின் இறக்கைகளின் பின்னணி என்ன? எப்படி அவை பறக்கும் தகுதியை பெற்றன?

இவையெல்லாம் பரிணாமவியலாளர்கள் முன்பு இருக்கும் மில்லியன் டாலர் கேள்விகள். எப்படி பரிணாமத்தின் மற்ற யூகங்களுக்கு ஆதாரங்கள் இல்லையோ அது போலவே இவைகளுக்கும் ஆதாரங்கள் இல்லை.

பதிவிற்கு தேவைப்படும் என்பதால், இந்த தொடரின் மூன்றாம் பதிவில் நாம் பார்த்ததை சற்று நினைவுப்படுத்தி கொள்வோம். அதாவது, சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் (fossils) முதன் முதலாக காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருக்கின்றன. இவை பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவில்லை.

ஆக, இதுவரை நம்மிடமுள்ள ஆதாரங்களின் படி, உயிரினப்படிமங்களில் முதன் முதலாக காணப்படும் உயிரினங்கள் ஏற்கனவே முன்னேறிய நிலையில் இருக்கின்றன.

இதே போன்றதொரு நிலைமைதான் பூச்சிகளுக்கும்.

ஆம், அவைகளும் முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் போதே முன்னேறிய நிலையில் இருக்கின்றன. சுமார் 400-300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிகளின் உயிரினப்படிமங்கள் காணக்கிடைக்கின்றன. அவைகளில் பூச்சிகள் முன்னேறிய நிலையிலேயே இருக்கின்றன.


1. பூச்சிகள் எப்படி தோன்றின? எந்த உயிரினத்திலிருந்து படிப்படியாக மாறி வந்தன?

பரிணாமவியலாளர்களுக்கு இது இன்னும் தெளிவாகவில்லை.

"Insects are the most diverse lineage of all life in numbers of species, and ecologically they dominate terrestrial ecosystems. However, how and when this immense radiation of animals originated is unclear" --- New light shed on the oldest insect, Michael S. Engel & David A. Grimaldi, Nature Journal, 427, 627-630 (12 February 2004), doi:10.1038/nature02291.
இவ்வுலகில் உள்ள உயிரினங்களில் மிக அதிகமான வெவ்வேறு இனங்களை கொண்டவை பூச்சிகள். எனினும், இவை எப்படி தோன்றின, என்று தோன்றின என்பது தெளிவாகவில்லை --- (Extract from the original quote of) New light shed on the oldest insect, Michael S. Engel & David A. Grimaldi, Nature Journal, 427, 627-630 (12 February 2004), doi:10.1038/nature02291.    

ஏன் தெளிவாகவில்லை? பதில் எளிதானதுதான். இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பழமையாக உயிரினப்படிமங்களில் காணப்படும் பூச்சிகள் யாவும் ஏற்கனவே நன்கு முன்னேறிய நிலையில் உள்ளன. பரிணாமவியலாளர்கள் எதிர்ப்பார்க்ககூடிய, சிறுகச் சிறுக வளர்ந்திருக்க கூடிய நிலையில் (Transitional Fossils) எதுவுமே இல்லை.  

இது வரை நாமறிந்த உலகின் மிக பழமையான பூச்சி என்றால் அது Rhyniognatha hirsti என்ற ஒன்றாகும். இது சுமார் 400-410 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த ஆதிகால பூச்சி நன்கு முன்னேறிய தன்மைகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
 
 
பரிணாமத்தின்படி படிப்படியாகத் தான் ஒரு உயிரினம் தோன்றியிருக்க வேண்டுமென்பதால், நாம் மேலே பார்த்த பூச்சிக்கு முன்னரே பூச்சிகள் உருவாகியிருக்க வேண்டுமென்று கருதுகின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.

"The oldest known fossil insect is currently Rhyniognatha hirsti from the early Devonian Rhynie chert of scotland. However, this species, preserved in sinter from an ancient hot water spring active between 400 and 412 million years ago, exhibits some advanced characteristics implying that there are more primitive, older insects still to be dicovered" --- Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.  
நமக்கு தெரிந்த பழமையான பூச்சியின் படிமம் Rhyniognatha hirsti என்ற டெவோனியன் காலத்திய பூச்சியினுடையது. 400-412 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இது, சில முன்னேறிய தன்மைகளை கொண்டிருக்கின்றது. ஆகையால், இவற்றிற்கு முன்பு வாழ்ந்திருக்க கூடிய தொடக்க நிலை பூச்சிகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கின்றது --- (Extract from the original quote of) Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.  

உயிரின படிமங்கள் மூலம் நமக்கு தெரிய வரும் மற்றொரு பழமையான பூச்சி "bristletails" என அழைக்கப்படும் ஒன்றாகும்.  இதுவும் டெவோனியன் (410-360 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய) காலத்தை சேர்ந்ததுதான்.

The oldest known insect fossil for which there is significant remaining structure (head and thorax fragments) is a bristletail (Archaeognatha), estimated to be 390 to 392 million years old --- Archaeognatha, Encyclopedia Britannica.

உயிரினப்படிமம் மூலமாக நாமறிந்த மிக பழமையான பூச்சி Bristletail. 390-392 ஆண்டுகளுக்கு முந்தைய இவற்றில் குறிப்பிடடத்தக்க மிச்சங்கள் தென்படுகின்றன (தலை மற்றும் மார்பு கூடு பகுதிகள்) --- (Extract from the original quote of) Archaeognatha, Encyclopedia Britannica.                                     

எப்படி பழமையான உயிரினப்படிமங்களில் முதன் முதலாக காணப்படும் உயிரினங்கள் எந்த பரிணாம வரலாறும் இல்லாமல் திடீரென தோன்றியிருக்கின்றனவோ அதுபோலவே பூச்சிகளும் தோன்றியிருக்கின்றன.   

பூச்சிகள் எப்படி தோன்றியிருக்கும் என்பதை பற்றிய தெளிவு  பரிணாமவியலாளர்களிடையே இல்லையென்றாலும்  சில யூகங்கள் (Hypothesis) உண்டு, இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று.

ஆக, பூச்சிகளின் தோற்றம் குறித்து பரிணாமவியலாளர்களிடையே குழப்பமே மிஞ்சுகின்றது.


2. பறக்கும் பூச்சிகள் எப்படி வந்தன?

பரிணாமவியலாளர்களுக்கு இன்னும் அதிக குழப்பத்தை தரும் கேள்வி இது.

ஏன்?, முதுகெலும்பில்லாத உயிரினங்களில் பறக்கக்கூடிய தன்மையை கொண்டிருப்பவை பூச்சிகள். மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் காணப்படும் இறக்கையுடைய பூச்சிகள், முதன் முதலாக காணப்படும்போதே பறக்கும் தன்மையை கொண்டிருந்திருக்கின்றன.

"The origins of insect flight remain obscure, since the earliest winged insects currently known appear to have been capable fliers" --- Wikipedia.       
பூச்சிகளின் பறக்கும் தன்மை எப்படி தோன்றியிருக்கும் என்பது தெளிவாகவில்லை, ஏனென்றால், தற்போது நாமறிந்திருக்கும் தகவலின்படி, ஆரம்ப கால இறக்கையுடைய பூச்சிகள் பறப்பதற்குரிய தகுதியை கொண்டிருப்பதாக தெரிகின்றது --- (Extract from the original quote of) Wikipedia.

நாம் மேலே  பார்த்த Rhyniognatha hirsti பூச்சியில் நடத்தப்பட்ட ஆய்வுகள், அவை பறக்கக்கூடிய தன்மையை கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றன. ஆக, நாமறிந்த 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய முதல் பூச்சியே பறக்கும் தன்மையை கொண்டிருந்திருக்கின்றது.

"Engel and Grimaldi found that the mandibles of Rhyniognatha hirsti have two points of articulation (dicondylic) which is only known in true insects: silverfish (Zygentoma) and winged insects (Pterygota). The form of the mandibles is more like that of winged insects than silverfish. Although there is no evidence of wings preserved in the Rhynie Chert, the advanced form of the mandibles of Rhyniognatha indicates that it could have been winged. This is very important as the oldest known fossils of flying insects are 320 million years old; the presence of true insects as far back as 400 million years ago indicates that wings may have evolved much earlier" --- The oldest fossil insect in the world - Natural History Museum, London.

Rhyniognatha hirstiயின் கீழ்த்தாடைகளில் உள்ள இரண்டு மூட்டமைப்பு புள்ளிகள், முழுமையான பூச்சிகளான silverfish (ஒரு வகையான பூச்சி) மற்றும் பறக்கும் பூச்சிகளுக்கு இருப்பது போன்று இருப்பதாக Engel மற்றும் Grimaldi கண்டறிந்துள்ளனர். கீழ்த்தாடையின் வடிவம் silverfishயை காட்டிலும் பறக்கும் பூச்சிகளையே ஒத்திருக்கின்றது. இந்த உயிரினத்தின் இறக்கைகள் படிமத்தில் பதப்படுத்தபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் இவற்றின் முன்னேறிய கீழ்த்தாடைகள் இவற்றிற்கு இறக்கைகள் இருந்திருக்க வேண்டுமென்று தெரிவிக்கின்றன. இது மிக முக்கியமானது, ஏனென்றால் இதுவரை நாமறிந்த பழமையான பறக்கும் பூச்சிகள் 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை. ஆக, 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உண்மையான பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது,  இறக்கைகள் இதற்கு முன்னமே பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றன --- (Extract from the original quote of) The oldest fossil insect in the world - Natural History Museum, London.  

சுமார் 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூச்சி முழுமையான அளவில் பதிந்திருக்க கூடிய உயிரினப்படிமம் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பூச்சியும் நன்கு பறக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.


பறப்பது என்பது நிச்சயம் சாதாரண விஷயம் கிடையாது. பல அற்புத தன்மைகளை தன்னகத்தே கொண்டவை பறக்கும் பூச்சிகள். உதாரணத்துக்கு, நாம், நம் இரு கைகளையும் நீட்டி பூச்சிகளின் இறக்கைகளை போல ஆட்டி அசைத்தால் சில நிமிடங்களிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால் பூச்சிகளோ, ஒரு நொடிக்கு, சுமார் 200-1000 முறை தங்களுடைய இறக்கைகளை ஆட்டி அசைக்கின்றன. ஆனால் அந்த சோர்வை சமாளிக்க கூடிய அளவு அவற்றின் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

Flight is energetically very costly, and the metabolism of winged insects represents an extreme of physiological design among all animals --- "The biomechanics of insect flight: form, function, evolution", Robert Dudley, Princeton University Press, 2000, p.159.   

பறப்பதென்பது சக்தி ரீதியாக  மிக காஸ்ட்லியானது. அதுமட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களை காட்டிலும் பறக்கும் பூச்சிகளின் உடல் வடிவமைப்பு விதிவிலக்கானது ---- "The biomechanics of insect flight: form, function, evolution", Robert Dudley, Princeton University Press, 2000, p.159.

இன்று வரை கூட, இவற்றின் பறக்கும் திறனுடன் மனிதனால் போட்டி போட முடியவில்லை. பூச்சிகள் அந்த அளவு அதி அற்புதமான பறக்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. இன்றளவும் நம்மால் போட்டி போட முடியாத அற்புத பறக்கும் தன்மை பூச்சிகளுக்கு தற்செயலாக வந்து விட்டது என்று சிலர் கூறுவார்கள். சரி அவர்கள் எதையாவது சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் இதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை.  

உலகின் முதல் பறவை சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பரிணாமவியலாளர்களின் எண்ணம். ஆனால் அதற்கு 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே பறக்கும் தன்மையை பூச்சிகள் பெற்றிந்திருக்கின்றன.

பூச்சிகளுக்கு இறக்கைகள் எப்படி வந்தன என்பது வெளிவாகவில்லை என்றாலும், இது பற்றிய யூகங்கள் உண்டு. உதாரணத்துக்கு பின்வரும் யூகம் (தமிழில் மொழிப்பெயர்ப்பதில் சிரமங்கள் இருப்பதால் ஆங்கில கருத்து மட்டுமே கொடுக்கப்படுகின்றது),

"Unfortunately, the fragmentary insect fossil record sheds little light on the origin of flight, as the oldest winged insects already have fully-formed wings. It has been hypothesised that wings originated from flaps that helped animals to land right side-up when jumping or blown by the wind. Enlargement of these flaps into proto-wings may have occured as an adaptation for effective parachuting or gliding from tall plants" --- Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.

ஆக, பூச்சிகளின் தோற்றத்திற்கும் சரி, அவைகளின் பறக்கும் தன்மைக்கும் சரி ஆதாரங்களில்லை.  

3. சரி, எந்த உயிரினத்திற்கு இறக்கைகள் முளைத்து அவை பறக்கும் பூச்சிகளாக மாறியிருக்கும்?

இது மற்றுமொரு விடை தெரியாத கேள்வி. எந்த உயிரினத்திற்கு இறக்கை முளைத்து பறக்கும் பூச்சியாக மாறியிருக்கும் என்பதும் இதுவரை தெளிவாகவில்லை.

உங்களில் சிலர் நினைக்கலாம், பறக்காத பூச்சிகளில் இருந்து பறக்கும் பூச்சிகள் பரிணாமம் அடைந்து வந்திருக்கலாம் என்று. ஆனால் அப்படியொரு முடிவுக்கு வருவதில் பிரச்சனை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மேலே பார்த்த (தற்போதைக்கு) உலகின் பழமையான பூச்சிகளான Rhyniognatha hirsti மற்றும் bristletails ஆகிய இரண்டும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தவை.

அதாவது, உலகின் பழமையான பறக்காத பூச்சியும் சரி, பறக்கும் பூச்சியும் சரி ஒரே காலக்கட்டத்தை சேர்ந்தவைகளாக இருக்கின்றன. அதனால் பறக்காத பூச்சியில் இருந்து பறக்கும் பூச்சிகள் வந்திருக்க வேண்டுமென்ற கருத்து குழப்பத்தையே தரும்.

பூச்சிகளுக்கு இறக்கைகள் தண்ணீரில் (இருக்கக்கூடிய பூச்சி போன்ற உயிரினங்களில் இருந்து) தோன்றியிருக்க வேண்டுமென்று பரிணாமவியலாளர்களில்  ஒரு சாராரும், நிலத்தில் தோன்றியிருக்க வேண்டுமென்று மற்றொரு சாராரும் யூகிக்கின்றனர்.  

எது எப்படியோ, ஒரு உயிரினத்திற்கு சிறுகச் சிறுக இறக்கை முளைத்து பறக்கும் பூச்சியாக மாறியதாக இதுவரை ஆதாரம் இல்லை.

According to the fossil record, it appears as though winged insects appeared out of nowhere with no records indicating a middle stage between wingless insects and winged ones --- Bianca Gonzalez, The South End, dated 14th Oct 2010.

உயிரினப்படிமங்களை பொறுத்தவரை, பறக்கும் பூச்சிகள் திடீரென தோன்றியிருப்பதாக தெரிகின்றது. பறக்காத பூச்சிகளுக்கும், பறக்கும் பூச்சிகளுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படவில்லை --- (Extract from the original quote of) Bianca Gonzalez, The South End, dated 14th Oct 2010.

பறவைகள் எப்படி வந்தன என்று கேட்டால், சிறிய அளவிலான டைனாசர்களில் இருந்து வந்திருக்க வேண்டுமென்று பரிணாமவியலாளர்களில் ஒரு பகுதியினர் கூறுவார்கள். ஆனால், பறக்கும் பூச்சிகளை பொறுத்தவரை, அவை எந்த உயிரினத்திலிருந்து வந்திருக்கும் என்று கேட்டால், எந்த உயிரினத்தை நோக்கியும் நம்பிக்கையாக கை காட்டும் நிலையில் பரிணாமவியலாளர்கள் இல்லை.

"As of 2009, there is no evidence that suggests that the insects were a particularly successful group of animals before they evolved to have wings" --- Wikipedia.

As of 2009, பூச்சிகள் வேறெந்த வெற்றிகரமான உயிரினமாகவும் இருந்து பின்னர் பரிணாமம் அடைந்து இறக்கைகள் கொண்ட ஒன்றாக மாறியதற்கு ஆதாரங்கள் இல்லை --- (Extract from the original quote of) Wikipedia.

ஆக, பூச்சிகளின் தோற்றத்திற்கு, அவைகளின் பறக்கும் தன்மை எப்படி வந்திருக்க வேண்டுமென்பதற்கு, எந்த உயிரினத்திற்கு இறக்கைகள் முளைத்து அவை பறக்கும் பூச்சிகளாக மாறியிருக்கும் என்பதற்கு என்று இவை அனைத்திற்கும் இதுவரை ஆதாரங்களில்லை.    


4. மடங்கும் இறக்கைகள் எப்படி வந்தன?

பூச்சிகளின் இறக்கைகளை பற்றி  பேசும் போது மற்றொரு குறிப்பிடத்தக்க விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

பூச்சிகளின் இறக்கைகளில் இரண்டு விதம் உண்டு. நீண்டுகொண்டிருக்கும் இறக்கை (தும்பிகளில் காணப்படுவது போல) மற்றும் வயிற்று பகுதியோடு மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இறக்கை (கரப்பான் பூச்சிகளில் காணப்படுவது போல).

இந்த மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இறக்கையானது சாதாரண விசயமல்ல. இது ஒரு மிக சிக்கலான அற்புத வடிவமைப்பு.

இந்த மடங்கக்கூடிய இறக்கைகள் எப்படி தோன்றின?.

இது குறித்தும் பரிணாமவியலாளர்களிடேயே தெளிவான பார்வை இருப்பதாக தெரியவில்லை. மடங்கக்கூடிய இறக்கைகள் முதன் முதலாக உயிரினப்படிமங்களில் தோன்றும் போதே முழுவதுமாக காட்சியளிக்கின்றன. நீண்டு கொண்டிருக்கும் இறக்கைகள் பரிணாமம் அடைந்து மடக்கக்கூடிய இறக்கைகளாக மாறியிருக்க வேண்டுமென்று சிலர் கூறலாம். ஆனால், அதுவும் ஒரு யூகமாக இருக்குமே தவிர அதற்கு ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை.         

மொத்தத்தில்,

  • பூச்சிகளின் தோற்றத்திற்கு,
  • பறக்கும் பூச்சிகளின் தோற்றத்திற்கு,
  • எந்த உயிரினத்திலிருந்து பறக்கும் பூச்சிகள் தோன்றியிருக்க வேண்டுமென்பதற்கு,
  • அற்புதமான வடிவமைப்பான மடங்கக்கூடிய இறக்கைகள் எப்படி வந்திருக்க வேண்டுமென்பதற்கு,

என்று பூச்சிகள் தொடர்பான மிக முக்கிய கேள்விகளான இவை அனைத்திற்கும் ஆதாரங்களில்லை.  

நாம் இதுவரை பார்த்தது மட்டுமல்லாது, பூச்சிகளின் (சிக்கலான) கண்கள் (Compound Eyes), அவைகளின் வாழ்க்கை வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது (Metamorphosis, பட்டாம் பூச்சிகளுக்கு நடப்பது போன்று) என்று பூச்சிகளின் இந்த ஆச்சர்ய தன்மைகள் எப்படி தோன்றின என்பது போன்ற கேள்விகள் பரிணாமவியலாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளன. 

மொத்தத்தில், நாம் மேலே பார்த்த அனைத்து கேள்விகளுக்கும் பரிணாமவியலாளர்களின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் "பூச்சிகளை பொறுத்தவரை பரிணாமம் மர்மமான முறையில் வேலை செய்திருக்கின்றது". 


5. சரி, நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரங்கள் இல்லாதது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன விளக்கம் சொல்கின்றனர்?

பூச்சிகளின் தோற்றம் குறித்த தெளிவான பார்வை இல்லாததற்கு காரணம், ஆரம்ப கால உயிரினப்படிமங்கள் மிக மிக குறைவான அளவே இருக்கின்றன என்பது பரிணாமவியலாளர்களின் கருத்து.

ஆனால், நாம் மேலே பார்த்தது போல, நானூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சிகளின் உயிரினப்படிமங்கள் இருக்கின்றன. இந்த கால கட்டத்திற்கு சற்று முன்பு தான் பூச்சிகள்  முதன் முதலில் தோன்றியிருக்க வேண்டுமென்று பரிணாம காலகணக்கு (Evolutionary Timeline) கூறுகின்றது. ஆக, மிக குறுகிய காலத்தில் பூச்சிகள் உருவாகியிருக்க வேண்டும். இத்தனை குறுகிய காலகட்டத்தில் அது சாத்தியமா என்று பரிணாமவியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.

ஏனென்றால், நாம் மேலே பார்த்த உலகின் பழமையான பூச்சியான bristletails, 400 மில்லியன் ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றமடையாமல் இன்று வரை வந்திருக்கின்றது. bristletails போன்றே பெரும்பாலான பூச்சிகளும் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக (பெருமளவில்) மாற்றமடையாமல் வந்திருக்கின்றன (சிலவற்றின் உருவங்களில் வித்தியாசம் உண்டு, உதாரணத்துக்கு தும்பி).  இத்தனை ஆண்டு காலமாக இவற்றிற்கு நடக்காத பரிணாமம், மிக குறுகிய காலத்தில் ஆரம்ப கால உயிரினங்களுக்கு மட்டும் நடந்து அவை பூச்சிகளாக மாறியிருக்குமா என்று பரிணாம ஆதரவு சகோதரர்கள் சிந்திக்க முன்வர வேண்டும்.       

இதையெல்லாம் விட, ஒரு சாதாரண வாழும் செல்லே தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்னும்போது, இன்றளவும் மனிதனால் போட்டி போட முடியாத அதி அற்புத தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள பூச்சிகள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதில் சிறிதளவேணும் லாஜிக் இருக்கின்றதா?

பொறுத்திருந்தால் பூச்சிகள் பரிணாமம் மூலமாக தோன்றிய ஆதார படிமங்கள் கிடைக்கும் என்று பரிணாமவியலாளர்கள் கூறினால் ஏற்றுக்கொள்வோம். பொறுத்திருப்போம்.

அதெல்லாம் சரி, ஆராம்ப கால படிமங்கள் தான் கிடைக்கவில்லை, அதற்கு பிறகு தான் லட்சக்கணக்கான உயிரினப்படிமங்கள் கிடைத்திருக்கின்றனவே? அவை எவற்றிலாவது ஒரு பூச்சி மற்றொரு பூச்சியாக (அல்லது வேறொரு உயிரினமாக) மாறியதாக ஆதாரம் இருக்கின்றதா? ...இல்லையே.  அந்தந்த பூச்சிகள் அந்தந்த பூச்சிகளாகத்தானே இருக்கின்றன!!!!    

பூச்சிகள் குறுகிய காலமே வாழக்கூடியவை, வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. அப்படியென்றால் இத்தனை மில்லியன் ஆண்டுகளாக லட்சக்கணக்கான இடைப்பட்ட பூச்சிகள் (Transitional Fossils) நமக்கு உயிரினப்படிமங்கள் மூலம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லையே.

மொத்தத்தில், உயிரினப்படிமங்களில் முதன் முதலாக காணப்படும் விலங்குகளும் சரி, பூச்சிகளும் சரி, முதன் முதலாக காணப்படும்போதே முழுமையாக, சிக்கலான வடிவமைப்பை கொண்ட முன்னேறிய நிலையிலேயே காணப்படுகின்றன. அவை பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வந்ததாக அறிகுறி இல்லை. 

இது பற்றியெல்லாம் கேட்டால் ஒரு சிலர் இப்படியும் கூறுவார்கள், "பரிணாமம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு ஆதாரங்கள் தான் இதுவரை இல்லை" என்று...

அதுதான் ஆதாரங்களில்லையே...அப்புறம் எப்படி பரிணாமம் நடந்திருக்க வேண்டும்?

டார்வினின் ஆருடம் என்றாவது ஒருநாள் நிச்சயம் பலிக்கும் என்ற அபார நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் பரிணாம ஆதரவாளர்களான சிலர் ...

நாமும் காத்திருப்போம்....கூடிய விரைவில் அந்த சிலரது மூடநம்பிக்கை விலகுமென்று... 
 
பரிணாமவியலாளர்களின் கற்பனைகள் மட்டுமே விதவிதமாக பரிணாமம் அடைந்து கொண்டிருக்கின்றன....

பரிணாம கதை - ஹாரி பாட்டர் கதைகளை விட நிச்சயம் மேம்பட்டது...

மூட நம்பிக்கையாளர்களிடமிருந்து உலக மக்களை இறைவன் காத்தருள்வானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.


Pictures taken from:
1. Natural History Museum London's Website.
2. National Geographic Website.

References:
1. New light shed on the oldest insect, Michael S. Engel & David A. Grimaldi, Nature Journal, 427, 627-630 (12 February 2004), doi:10.1038/nature02291. link
2. Paul D. Taylor & David N. Lewis, Fossil Invertebrates, Harvard University Press, 2007, p.160.
3. The biomechanics of insect flight: form, function, evolution - Robert Dudley, Princeton University Press, 2000, p.159.
4. Claim CC220.1 - Talkorigins.org. link 
5. Oldest insect delights experts - Paul Rincon, BBC, dated 11th feb 2004. link
6. Oldest Insect Imprint Found - Christine Dell'Amore, National Geographic, dated 17th Oct 2008. link
7. The oldest fossil insect in the world - Natural History Museum, London. link
8. Insect - Wikipedia. link
9. Evolution of Insects - Wikipedia. link
10. Insect Flight - Wikipedia. link
11. What insect has the fastest wing beat? - Answers.com. link
12. How many times a minute does a bee flap its wings? - Faqkids.com. link
13. Insects Insecta Invertebrates Arthropods - entomon.net. link
14. Researchers Discover Oldest Fossil Impression of a Flying Insect - newswise.com. link
15. Archaeognatha - Encyclopedia Britannica. link
16. How did Insects get their wings - Jackie Grom, Origins, Science Magazine Blogs, dated Mar 19, 2009. link
17. The 'bug doctor' finds insect missing link - Bianca Gonzalez, The South End, dated 14th Oct 2010. link
18. Insect evolution: a major problem for Darwinism - Jerry Bergman. creation.com.  link
19. The Evolution of Insect Flight - Matthew Vanhorn. apologeticspress.org. link
20. Crustacean, Rhyniognatha, Archaeognatha, Dragonfly, Timeline of evolution, List of transitional fossis, Metamorphosis - Wikipedia.
21. Interesting and Fun Facts About Flies! - Sophie Adams. associatedcontent.com. link
22. Tale of the Headless Dragonfly: Ancient Struggle, Preserved in Amber - Science daily, dated 27th Oct, 2010. link 
23. Long live cockroaches, man's uninvited fellow travellers  - Ed Baker, Natural History Museum London. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






Saturday, September 4, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - V



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 


கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - I:


பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் (The Piltdown Man Forgery): 

பில்ட்டவுன் மனிதன், 
  • அறிவியல் உலகால் மறக்க முடியா பெயர். 
  • இருபதாம் நூற்றாண்டின்  மிகப் பெரிய அறிவியல் மோசடியாக, பித்தலாட்டமாக (The Biggest Scientific Hoax of 20th century) அறியப்படும் நிகழ்வு.  
  • குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து  மனிதன் வந்திருக்க வேண்டுமென்ற பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரமாக (The Missing link) காட்டப்பட்ட ஒன்று. 
  • நாற்பது ஆண்டு காலங்கள் உலக மக்களை முட்டாளாக்கிய பரிணாம ஆதாரம்.    

இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம், 

"இது மோசடித்தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."     

ஆம், அவர்களது கருத்து உண்மைதான். ஆனால், அவர்களுக்கு அதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பது தான் உண்மை. 

பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் எதைப் பற்றியது, எப்படி பித்தலாட்டம் நடந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....இன்ஷா அல்லாஹ்....      

பில்ட்டவுன் மனிதனைப் பற்றி..... 

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள கிராமம் பில்ட்டவுன். 1911 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இங்கு உள்ள ஒரு கல்சுரங்கத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார் தொல்லுயிரியலாளரான சார்லஸ் டாசன் (Charles Dawson, Amateur palaeontologist). 

அங்கு ஒரு மனித எலும்பு படிமத்தை கண்டெடுத்தார் அவர். பலவித படிமங்கள் அங்கு கிடைக்கலாம் என்று யூகித்த அவர், 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி தன் நண்பரான ஆர்தர் கீத் வுட்வர்ட் (Arthur Keith Woodward) அவர்களுக்கு தன் கண்டுபிடிப்புகளை பற்றி தெரிவித்தார். 

ஆர்தர் கீத் அவர்களும் தொல்லுயிரியலாளர் தான். பிரிட்டிஷ் இயற்கை வரலாறு அருங்காட்சியக (British Natural History Museum) பணியில் இருந்தவர். 

பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த இடத்தில் ஆய்வுகளை அதிகப்படுத்தினர். இவர்களுடன் தே சார்டின் (Teilhard de Chardin, priest and amateur geologist) என்பவரும் சேர்ந்து கொண்டார். 



இந்த குழு அந்த இடத்தில் பல்வேறு படிமங்களை கண்டெடுத்தது. அவை, 

  • மனிதக் குரங்கு போன்ற ஒன்றின் கோரைப்பல் நீங்கலான தாடைப்பகுதி (ape-like lower jaw missing the canine). 
  • மனித மண்டை ஓடு பகுதிகள் (human-like skull). 
  • மற்றும் சில விலங்குகளின் மிச்சங்கள்.          



கண்டெடுத்த இந்த படிமங்களை புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர் கீத்தும் டாசனும்.

(மண்டை ஓடு மற்றும் தாடையின் சில பகுதிகள் தான் கிடைத்தன என்றாலும் அவற்றை உதவியாக வைத்து மண்டை ஓட்டை பின்னர் சில ஆண்டுகள் கழித்து புனரமைப்பு செய்தனர் (Re-construction))  


(காலப்போக்கில் அதற்கு முகமும் உருவானது)


  
மனித மண்டை ஓடும், குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமங்கள் தான் என்பது போன்ற கூற்று உருவானது. அதுமட்டுமல்லாமல், தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனித பற்களைப் போன்று இருந்தன. இந்த படிமங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்ற பரிணாம கருத்துக்கு ஆதரவாக இருந்ததால், மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட உயிரினம் (Missing Link) கிடைத்து விட்டதாக நம்பப்பட்டது. 

இந்த உயிரினத்துக்கு "பில்ட்டவுன் மனிதன்" என்று பெயர் சூட்டினர். இவன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கூறினர்.     

ஆனால் இதனை சில அறிவியலாளர்கள் நம்ப மறுத்தனர். இந்த இரண்டு படிமங்களும் வெவ்வேறு உயிரினத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அவர்களது கருத்து எடுபடவில்லை. 

21-11-1912 அன்று இது குறித்த செய்தியை கார்டியன் பத்திரிக்கை வெளியிட விஷயம் படுவேகமாக பரவியது. மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக புகழப்பட்டது. 

1913 ஆம் ஆண்டு பில்ட்டவுன் மனிதன் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டான். அதே ஆண்டு, தாடைப் படிமம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் இருந்து ஒரு கோரைப்பல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கோரைப்பல் குரங்கின் பல்லை விட மனிதனின் பல் போன்று இருப்பதாக கீத் தெரிவித்தார். இது விடுபட்டு போன கோரைப்பல் தான் என நம்பப்பட்டது. 

இது, பில்ட்டவுன் மனிதன், குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் தான் என்ற கூற்றை மேலும் வலுப்படுத்தியது.  

இரண்டு ஆண்டுகள் கழித்து, படிமங்கள் முதலில் எடுக்கப்பட்ட கல்சுரங்கத்திற்கு இரண்டு மைல்களுக்கு அப்பால் இரண்டாவது பில்ட்டவுன் மனிதனின் மிச்சங்களாக சில மூளைப்பகுதி ஓடுகள், ஒரு கடவாய்ப்பல் (molar tooth) போன்றவை கண்டெடுக்கப்பட்டன. 

இப்போது முன்னர் சந்தேகம் தெரிவித்த அறிவியலாளர்களில் பலர் பில்ட்டவுன் மனிதனை நம்ப ஆரம்பித்தனர். 

(இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களும் வெவ்வேறாக இருந்தன. உதாரணத்துக்கு, முதல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில் தாடை இருந்தது. இரண்டாம் இடத்தில் அது இல்லை. முதல் இடத்தில் கோரைப்பல் கிடைத்தது, இரண்டாம் இடத்தில் கடவாய்ப்பல் கிடைத்தது)      

மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், இந்த இரண்டாம் இடத்தை பற்றி அறிந்தவர் சார்லஸ் டாசன் மட்டுமே, வேறு யாருக்கும் இந்த இரண்டாம் பில்ட்டவுன் மனித மிச்சங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று தெரியாது. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் இந்த இடம் முதல் இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளது என்பது மட்டும்தான். இதற்கு காரணம், இரண்டாம் இடத்திலிருந்து மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில காலங்களில் டாசன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார் (1916). அதனால், இன்று வரை அந்த இரண்டாம் இடம் எது என்று அறிவியலாளர்களுக்கு தெரியாது. 

டாசனின் வாழ்வு முடிந்தது, ஆனால் பில்ட்டவுன் மனிதன் குறித்த சர்ச்சைகள் லேசாக வெளியில் வர ஆரம்பித்தன. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, டாசன் மறைவிற்கு பின்னர் அந்த கல்சுரங்கத்தில் இருந்து வேறு எந்த மனித படிமங்களும் கிடைக்கவில்லை. இந்த ஒரு படிமம் மட்டும் தான். இது சந்தேகத்தை அதிகப்படுத்த போதுமானதாக இருந்தது.

எப்போது பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் அம்பலமானது?    
    
1924 ஆம் ஆண்டிலிருந்து காட்சிகள் வேகமாக மாற ஆரம்பித்தன. அதிர்ச்சிகள் பல காத்திருந்தன. 1946 ஆம் ஆண்டு வரையிலான இந்த காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு இடங்களில் இருந்து "ஆதி" மனிதனின் படிமங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. (உதாரணத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து, ஜாவாவில் இருந்து). இவை அனைத்தும் பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் வேறுபட்டன (பில்ட்டவுன் மனிதனின் குரங்கு தாடை போல எதுவும் இல்லை).   

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒரு கையில் பில்ட்டவுன் மனித படிமங்கள் மற்றொரு கையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள். இவற்றில் எது மனித பரிணாமத்தை விளக்குகிறது என்று புரியாமல் பரிணாமவியலாளர்கள் குழம்பி போயினர். 

1924 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழங்கால மனித படிமம் (Australopithecus), பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் ஒத்துபோகவில்லை என்று கூறி அந்த படிமத்தை நிராகரித்திருக்கின்றனர் என்றால் பில்ட்டவுன் மனிதன் பரிணாம உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

உலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி? பில்ட்டவுன் மனித படிமமா? அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா? 

பரிணாமவியலாளர்கள் மற்ற படிமங்களை கைவிட்டு விட்டு பில்ட்டவுன் படிமத்தை விடாப்பிடியாக பிடித்திருக்க முக்கிய காரணம், அது, மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என்ற அவர்களது நம்பிக்கையை மெருகூட்டியதால் தான். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட மற்ற படிமங்களை வைத்து மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தில் இருந்து தான் வந்திருக்கின்றான் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. ஆனால் பில்ட்டவுன் மனிதனை வைத்து அப்படி கூற முடியும், அது மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கான நேரடி ஆதாரம். அதனால் அவர்கள் பில்ட்டவுன் மனிதனை கைவிட விரும்பவில்லை. 

ஆனால், காலம் செல்ல செல்ல, மற்ற இடங்களில் படிமங்கள் அதிகமாக கிடைக்கப்பட, பில்ட்டவுன் மனிதனுக்கு எதிரான கருத்துக்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்தன. அது எப்படி பில்ட்டவுன் மனித படிமம் மட்டும் உலகின் மற்ற படிமங்களோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும்? 

இந்த கேள்வி மிக அதிக அளவில் எழ ஆரம்பித்தது. இப்போது பரிணாமவியலாளர்களுக்கு வேறு வழி இல்லை. பில்ட்டவுன் மனித படிமத்தை தெளிவாக ஆராய வேண்டிய சூழ்நிலை.

1940களில் படிமங்களின் வயதை கண்டிபிடிக்கப் பயன்படுத்தப்படும் ப்லூரின் சோதனை (Fluorine Test) புழுக்கத்திற்கு வந்த நேரம். இந்த புதிய யுக்தியை கொண்டு பில்ட்டவுன் மனிதனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார் கென்னத் ஓக்லி என்ற தொல்லுயிரியலாளர். 

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொண்டு வந்தன ஆய்வு முடிவுகள். 

முதல் ஷாக் என்னவென்றால், பில்ட்டவுன் மனித படிமம் ஐந்து லட்ச ஆண்டுகளுக்கு முந்தையதெல்லாம் கிடையாது, வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் என்பது.

இது பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால், இன்றைய மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தற்போதைய நிலையை அடைந்து விட்டான் என்பது அவர்களது புரிதல்.    

மனிதன் நன்கு பரிணாமித்து விட்ட காலக்கட்டத்தில், பரிணாமித்து கொண்டிருக்கும் பில்ட்டவுன் மனிதன் எப்படி இருக்க முடியும்?..... இது முதல் கேள்வி.    

ஆனால் இதுவெல்லாம் என்ன அதிர்ச்சி என்பது போல இருந்தன அடுத்தடுத்த நிகழ்வுகள். அவை அறிவியல் உலகை ஸ்தம்பிக்க வைத்தன.    

1953 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஜோசப் வெய்னர், கென்னத் ஓக்ளியுடன் சேர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். 

இரண்டாவது ஷாக்.....நன்கு முன்னேறிய யுக்திகளை வைத்து மறுபடியும் பில்ட்டவுன் மனித படிமங்களை சோதனை செய்து பார்த்ததில், மண்டை ஓடு மனிதனுடையது என்றும், தாடையோ ஓராங்குட்டான் குரங்கினுடையது என்றும் தெரியவந்தது. வேதிப்பொருட்களை கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதானவையாக தெரியவைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆக இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் பகுதிகள் அல்ல, இரண்டும் வெவ்வேறு உயிரினங்களின் பகுதிகள் என்ற உண்மை வெளிவந்தது.

அதுமட்டுமல்லாமல், தாடைப்பகுதில் இருந்த பற்கள் ஒராங்குட்டான் குரங்கின் பற்கள் என்றும், மனித பற்களாக தெரிய வைக்க அவை கருவிகளை கொண்டு தீட்டப்பட்டு, மண்டை ஓடு படிமத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை கறைப்படவும் செய்திருக்கின்றனர். 

நேர்த்தியாக செய்யப்பட்ட இப்படியொரு பித்தலாட்டத்தால் அறிவியல் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு தெளிவான ஆதாரமாக காட்டப்பட்ட ஒன்று பரிணாமவியலாளர்கள் கண்முன்னே கரைந்து போனது. 

1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி "தி டைம்ஸ்" மற்றும் "தி ஸ்டார்" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை "பித்தலாட்டம்" என்றும் "நேர்த்தியான மோசடி" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.  



லண்டன் ஸ்டார் பத்திரிக்கையின் தலையங்கமோ  "இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி" என்று கூறியது.

சுமார் நாற்பது ஆண்டு காலம் மக்களை முட்டாளாக்கி இருக்கின்றான் பில்ட்டவுன் மனிதன்.      

ஆனால் காட்சி இதோடு முடியவில்லை. இதற்கு மேல் தான் க்ளைமேக்ஸ்சே இருந்தது.

1959 ஆம் ஆண்டு கார்பன்-14 யுக்தியை கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், பில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடு சுமார் 520-720 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாகவும், தாடையோ சற்று இளையதாகவும் (சுமார் 500 ஆண்டுகள்) தெரியவந்தது. கோரைப்பல்லோ ப்ளீஸ்டோசின் (Pleistocene Age: about 1.8 Million - 10,000 years before current period) கால சிம்பன்சி குரங்கினுடையது என்று தெரிய வந்தது.   

ஆக, மனித மண்டை ஓடு மற்றும் குரங்கின் தாடை என இவ்விரண்டும் மத்திய காலத்தை (Medieval Period) சேர்ந்தவை. இந்த பித்தலாட்டத்தை செய்தவர்/செய்தவர்கள் அவற்றை எடுத்து, அவை பழங்கால உணர்வு கொடுக்க வேண்டுமென்பதற்காக வேதிப்பொருட்களை கொண்டு அவற்றை மாற்றி அந்த கல்சுரங்கத்தில் போட்டிருக்கின்றார்/போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நேர்த்தியாக மோசடியை செய்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக தொல்லுயிரியல் துறை பற்றி நன்கு அறிந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது இந்த பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்தவர்களின் கருத்து.        

இதனை செய்தவர்கள் யார்? 

இதை செய்தது யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. பலர் மீது சந்தேகப்படுகிறார்கள், அவர்களில் சிலர்,

  • Charles Dawson, 
  • Tielhard de Chardin, 
  • W. J. Sollas, 
  • Grafton Elliot Smith, 
  • Arthur Conan Doyle,
  • Martin A. C. Hinton   

போன்றவர்கள் ஆவர். Talk origins தளம் இன்னும் பலரது பெயரை குறிப்பிடுகிறது.

பலரின் மீது சந்தேம் இருந்தாலும் இந்த மனிதனை கண்டுபிடித்த டாசன் மீதே அதிக சந்தேகம் இருக்கின்றது. பிபிசி, டாசனை அதிகமாகவே சந்தேகிக்கின்றது. இதற்கு,  

  • 1900 களில், டாசன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஹாஸ்டிங்க்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து இதே போன்ற ஒரு மண்டை ஓடு காணாமல் போனது, 
  • டாசன் இறந்ததிலிருந்து அந்த பகுதியில் வேறு படிமங்கள் கிடைக்கவில்லை என்பது

போன்ற காரணங்களை கூறுகின்றது.

டாசன் மீது பலரும் சந்தேகப்பட்டாலும் இன்று வரை இதனை செய்தவர் யார் என்பது புரியாதப் புதிராகவே உள்ளது...


"நாங்கள் தானே இதை கண்டுபிடித்தோம்...."
    
இப்போது பதிவின் துவக்கத்தில் நாம் பார்த்த கேள்வியை இங்கே கொண்டு வந்து பொருத்தி பார்ப்போம்.                        

இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம், 

"இது மோசடி தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."     

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.... ஆம், அவர்கள் தான் மோசடியை கண்டுபிடித்தார்கள். நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள் தான் அவர்கள்........

ஆனால் அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வேலை, உலகின் மற்ற இடங்களில் மனித படிமங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே.      

ஆக, இந்த பித்தலாட்டம், பரிணாமவியலாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்பதை காட்டிலும், மனித பரிணாமம் குறித்த இருவேறு குழப்பங்களிருந்து அவர்களை விடுவித்து நிம்மதியடைய செய்தது என்பதே சரி.     


சில கேள்விகள்... '

இந்த பித்தலாட்டத்தின் மூலம் எனக்குள் எழும் சில கேள்விகள், 

  • இந்த பித்தலாட்டத்தின் நோக்கம் என்ன? 
  • ஒரு பொய்யை உண்மையாக காட்ட இத்தனை சிரத்தை எடுத்தது ஏன்?   
  • பரிணாம கோட்பாட்டை உண்மை என்று மோசடி செய்து நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? 


இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது...

இது மூலமாக நமக்கு கிடைக்கும் படிப்பினை, பரிணாமவியலாளர்களும் மனிதர்கள் தான், அவர்களும் தவறு செய்வார்கள், தங்கள் கொள்கையை உண்மை என்று காட்ட எந்த நிலைக்கும் அவர்கள் இறங்குவார்கள் என்பது.

எது எப்படியோ இந்த பித்தலாட்டம் நமக்கு சொல்லக்கூடிய செய்தி,  வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரத்தை பரிணாமவியலாளர்கள் காட்டினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் குறைந்தபட்சம் நாற்பது ஆண்டுகளாவது பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென்பது.

நான் ஏற்கனவே பலமுறை கூறியது தான். பரிணாமத்திற்கு ஆதாரம் என்று வரலாற்றில் எதுவும் இல்லை.

நாய் (அல்லது நரி) போன்ற ஒன்றிலிருந்து குதிரை வந்திருக்க வேண்டுமென்று ஆதாரம் காட்டுவார்கள், பார்த்திருக்கின்றீர்களா?.... உயிரினங்களை, உருவத்தின் படி சிறியதிலிருந்து பெரியது வரை வரிசையாக அடுக்கி வைத்து குதிரை பரிணாமத்தை விளக்குவார்கள். இதுவெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஒன்று.  ஆனால் இன்றும் சிலர் இதனை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டுவது ஆச்சர்யமளிக்கின்றது. 

அதுபோல, மீனுக்கும் நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினம் என்று சீலகந்த் என்ற மீனை ஆதாரம் காட்டினார்கள். அது 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டது என்றும் கூறினார்கள். ஆனால் அந்த மீனோ 1930களின் பிற்பகுதியில் ஆப்ரிக்க கடல் பகுதியில் தென்பட்டு பரிணாமவியலாளர்களை திக்குமுக்காட செய்தது. அதுமட்டுமல்லாமல், ஆழ்கடல் உயிரினமான அந்த மீன் கடலின் தரைப்பகுதில் இருந்து சுமார் 150 மீட்டர்கள் வரை கூட மேலே வராது  என்றும் ஆய்வின் மூலம் தெரிய வந்தது. ஆக, இந்த ஆதாரமும் மறைந்தது. 

இப்படியாக இவர்கள் எதையெல்லாம் ஆதாரமாக காட்டினார்களோ அவை ஒவ்வொன்றாக காணாமல் போயின.

இன்ஷா அல்லாஹ் அவற்றை பற்றி எதிர்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.    

ஆதாரமே இல்லாமல் வெறும் யூகத்தால் அமைந்த ஒரு கோட்பாட்டை அறிவியல் என்று சொல்வது சரியா அல்லது கதை என்று சொல்லுவது சரியா....

இறைவன் இது போன்ற மோசடிகளிலிருந்து நம்மை வழி தவற செய்யாமல் பாதுகாப்பானாக...ஆமின்.  

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to, 
1.Talk Origins Website.
2. Natural History Museum, London.
3. BBC.

References:
1. Piltdown Man, The Bogus Bones Caper - Richard Harter, Talk Origins Website.
2. Creationist Arguments: Piltdown Man, Talk Origins Website.
3. Piltdown Man - Natural History Museum, London.
4. The Unmasking of Piltdown Man - BBC
5. Fossil fools: Return to Piltdown - Paul Rincon, BBC dated 13th November 2003.
6. Piltdown Man: Timeline of deceit - BBC dated 13th November 2003.
7. Charles Dawson: 'The Piltdown faker' - BBC dated 21st November 2003.
8. Piltdown Man Forgery - Times Archive, Times Online Website.
9. Piltdown Man is revealed as fake - PBS
10. Piltdown Man Forgery (The times article extract) - Clark University.
11. Piltdown Man - wikipedia.
12. Piltdown Man - archaeology - famous hoax: Age of the Sage website.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.







Monday, July 19, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - IV




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 



Punctuated Equilibria


இந்த பதிவிற்கு செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய சொல்:
1.தொல்லுயிரியலாளர் - உயிரினப்படிம (fossils) ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
   
          பழமையான உயிரினப்படிமங்களில் காணப்படும் சிக்கலான உடலமைப்பை கொண்ட உயிரினங்கள், எப்படி எந்தவொரு பரிணாம வளர்ச்சியும் இல்லாமல் திடீரென தோன்றியிருக்கின்றன என்று சென்ற பதிவில் பார்த்தோம். 

பரிணாமத்தை உறுதிப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் உயிரினப்படிமங்கள், பரிணாமவியல் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து வருகின்றன. 

சிறுகச் சிறுக உயிரினங்கள் (Gradualism) வேறொன்றாக மாறின என்பதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் அவை தரவில்லை. இந்த ஏமாற்றம் தான் பரிணாமவியலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. 

அப்படி ஏற்பட்ட குழப்பம் தான் "Punctuated Equilibria" என்ற கோட்பாட்டை, ஸ்டீபன் ஜே குட் (Stephen Jay Gould) அவர்கள் முன்வைக்க காரணமாய் அமைந்தது.          


ஸ்டீபன் ஜே குட் (1942-2002), சிறந்த தொல்லுயிரியலாளராக (Paleontologist) அறியப்பட்டவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், அமெரிக்க இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் (American Museum of Natural History) உறுப்பினராகவும் பணியாற்றியவர். சிறப்புமிக்க விருதுகளை பெற்றவர். இவரது பெயரில் பரிணாமவியல் கழகம் (The Society for Study of Evolution) ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.     




பரிணாமவியல் உலகில் நீங்கா புகழை பெற்றுள்ள இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். இதற்கு காரணம் இவர் முன்வைத்த "punctuated Equilibria" என்ற டார்வினின் கூற்றுக்கு எதிரான கோட்பாடு.

டார்வினின் கூற்று என்ன?

உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் ஆதாரங்கள் டார்வினின் இந்த கூற்றுக்கு எதிராக உள்ளதாக சொல்லி தன் கோட்பாட்டை முன் வைத்தார் ஜே குட்.
  
Puntuated Equilibria என்றால் என்ன?, அந்த கோட்பாடு எந்த அளவிற்கு உண்மை? என்பது போன்ற கேள்விகளுக்கு (ஆழமாக சென்று) விடைக்காண முயலும் பதிவல்ல இது. மாறாக அந்த கோட்பாடு கொண்டு வரப்பட்டதற்கு என்ன காரணம் என்று அலசும் முயற்சியே இது. 

டார்வின் தன்னுடைய கோட்பாட்டை முன்வைக்கும் போதே உயிரினப்படிமங்கள் தன் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளதை அறிந்திருந்தார். இதைப்பற்றி தெளிவாக குறிப்பிட்டும் உள்ளார். ஆனால், தோண்டி எடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள் மிகக்குறைவே என்றும், எதிர்காலத்தில் அதிக அளவிலான உயிரினப்படிமங்கள் கிடைக்கும் போது, உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிடும் என்றும் நம்பினார்.


டார்வினுடைய நம்பிக்கை இன்றளவும் நம்பிக்கையாகவே உள்ளது.

அன்று டார்வினுக்கு பரிணாமவியலை உறுதிப்படுத்தும் உயிரினப்படிமங்கள் கிடைக்கவில்லை, இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் அது கிடைக்கவில்லை.

உயிரினங்கள் திடீரென படிமங்களில் தோன்றியிருப்பது (Abrupt Appearance), அவை சிறுகச் சிறுக மாற்றமடைந்ததற்கான ஆதாரங்கள் உயிரினப்படிவங்களில் தென்படாதது மற்றும் பல உயிரினங்கள் நீண்ட காலமாக மாற்றமடையாமல் இருப்பது (stasis) போன்றவற்றை சுட்டிக்காட்டிய ஸ்டீபன், தன்னுடைய "Puntuated Equilibria" கோட்பாட்டை,  நைல்ஸ் எல்ரெச் (Niles Eldredge, American Museum of Natural History) என்பவரோடு சேர்ந்து 1972 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார்.     


இந்த கோட்பாட்டின் படி, உயிரினங்களில், பெரிய அளவிலான (மரபணு) மாற்றங்கள் குறைந்த கால இடைவெளியில் ஏற்பட்டு அவை உருவாகியிருக்கவேண்டும். பிறகு எந்தவொரு மாற்றமும் அடையாமல் அவை தொடர்ந்திருக்க வேண்டும். இப்படி உருவான உயிரினங்களில் (தனிமைப்படுத்தப்பட்ட) சிறு பகுதியினருக்கு மறுபடியும் பெரிய அளவிலான (மரபணு) மாற்றங்கள் குறுகிய காலத்தில் ஏற்பட்டு மேலும் பல உயிரினங்கள் உருவாகி எந்தவொரு மாற்றமும் அடையாமல் தொடர்ந்திருக்க வேண்டும். இப்படியாக இந்த முறை தொடர்ந்து பல்வேறு உயிரினங்களும் வந்திருக்கவேண்டும். 


Punctuated equilibrium predicts that a lot of evolutionary change takes place in short periods of time tied to speciation events --- evolution.berkeley.edu 

சுருக்கமாக சொல்லப்போனால், படிக்கட்டில், எப்படி படிகள் உயர்ந்து, பிறகு சமமாக அமைந்து, பிறகு மறுபடியும் எழும்புகின்றனவோ அப்படி. தான் உயிரினங்கள் வந்திருக்க வேண்டும் என்று விளக்கியது இந்த கோட்பாடு.




சிறிய அளவிலான (தொகையிலான) உயிரினங்கள் விரைவாக மாற்றமடைந்ததால் அவை உயிரினப்படிமங்களில் தென்படவில்லை என்பது இந்த கோட்பாட்டின் நிலை. 

உலகின் மிகச் சிறந்த தொல்லுயிரியலாளர்களில் ஒருவராக மதிக்கப்படும் ஜே குட் அவர்கள், உயிரினப்படிமங்கள் எந்த அளவு டார்வினின் கூற்றை பொய்யாக்குகின்றன என்பதை நன்கு அறிந்திருந்தார். அதனாலேயே தன்னுடைய கோட்பாடு, டார்வினின் "சிறுகச் சிறுக உயிரினங்கள் மாற்றமடைந்து வந்திருக்க வேண்டுமென்ற" கூற்றிற்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டார்.

"Paleontologists have paid an enormous price for Darwin's argument.....The history of most fossil species includes two features particularly inconsistent with gradualism:  
1. Stasis.  Most species exhibit no directional change during their tenure on earth. They appear in the fossil record looking much the same as when they disappear; morphological change I usually limited and directionless.  
2. Sudden appearance. In any local area, a species does not arise gradually by the steady transformation of its ancestors; it appears all at once and 'fully formed"  Gould, Stephen J. The Panda's Thumb, 1980, p. 181-182.
தொல்லுயிரியலாளர்கள் டார்வினின் வாதத்திற்கு மிக அதிக விலை கொடுத்து விட்டனர்.... பெரும்பாலான உயிரினப்படிமங்களில் காணப்படும் இரண்டு விஷயங்கள், "சிறுகச் சிறுக" உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்ற கருத்துக்கு முரணாக உள்ளன.
1. Stasis (மாற்றமடையாதது) . பெரும்பாலான உயிரினங்கள், பூமியில் இருந்த காலம்வரை மாற்றமடையவில்லை. அவைகள் உயிரினப்படிமங்களில் எப்படி தோன்றினவோ அப்படித்தான் மறையும் போதும் இருந்திருக்கின்றன.
2. Sudden Appearance (திடீர் தோற்றம்). ஒரு உயிரினம், தான் வாழ்ந்த இடத்தில் தன் மூதாதையரில் இருந்து சிறுகச் சிறுக மாற்றமடைந்து வரவில்லை. அது திடீரென முழுமையாக தோன்றியிருக்கின்றது. --- (Extract from the original quote of) Gould, Stephen J. The Panda's Thumb, 1980, p. 181-182. 
           
ஜே குட் அவர்களும் பரிணாமவியலாளர் தான். அவரும் உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரு பொதுவான மூதாதையர் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்தான். ஆனால் டார்வின் மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் (முக்கிய) கருத்தான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாற்றமடைந்து வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்பதை நிராகரித்தவர்.  

It is gradualism we should reject, not Darwinism - Gould, Stephen Jay 1980. "The Episodic Nature of Evolutionary Change" The Panda's Thumb. New York: W. W. Norton & Co., p. 181-182.

தொல்லுயிரியலாளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு ஜே குட் அவர்களின் கோட்பாடு உற்சாகத்தை தந்தது. பலமாக இந்த கோட்பாட்டை ஆதரித்தார்கள்.

ஏன்? 

காரணம் எளிமையான ஒன்று தான். ஜே குட் அவர்களின் கோட்பாடு படி தான் உயிரினப்படிம ஆதாரங்கள் இருந்தன, டார்வினின் கூற்று படியல்ல.    

"The Eldredge-Gould concept of punctuated equilibria has gained wide acceptance among paleontologists.....
The punctuated equilibrium model has been widely accepted, not because it has a compelling theoretical basis but because it appears to resolve a dilemma" --- Ricklefs, Robert E., "Paleontologists Confronting Macroevolution," Science, vol. 199, 1978, p. 59.
எல்ரெச் மற்றும் குட் ஆகிய இருவரின் கோட்பாடான "punctuated Equilibria" தொல்லுயிரியலாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.....
இந்த கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அது தீர்க்கமான வாதங்களை முன்வைத்தது என்பது காரணமல்ல, (பரிணாமத்தில்) இருந்த குழப்பத்தை தீர்ப்பதாக தெரிந்ததால் தான் --- (Extract from the original quote of) Ricklefs, Robert E., "Paleontologists Confronting Macroevolution," Science, vol. 199, 1978, p. 59.      

அது என்ன குழப்பம்?, 

வேறென்ன....டார்வினின் கூற்றுப்படி (உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறியதாக) இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லையே என்ற குழப்பம் தான்.  

"Paleontologists ever since Darwin have been searching (largely in vain) for the sequences of insensibly graded series of fossils that would stand as examples of the sort of wholesale transformation of species that Darwin envisioned as the natural product of the evolutionary process. Few saw any reason to demur - though it is a startling fact that, of the half dozen reviews of the On the Origins of Species written by paleontologists that I have seen, all take Darwin to task for failing to recognize that most species remain recognizably themselves, virtually unchanged throughout their occurrence in geological sediments of various ages." --- Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57. 
நீண்ட காலங்களாகவே தொல்லுயிரியலாளர்கள், டார்வினின் கற்பனையான "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கூற்றிற்கான தொடர் நிகழ்வுகளை தேடி வருகின்றனர் (ஆனால் அவர்களது முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது)...
ஆனால் வியப்பளிக்கும் உண்மை என்னவென்றால், Origin of Species குறித்து நான் பார்த்த அரை டஜன் விமர்சனங்களில், அவற்றை எழுதிய தொல்லுயிரியலாளர்கள், பெரும்பாலான உயிரினங்கள் தாங்கள் இருந்த காலங்களில் மாற்றமடையாமல், தாங்களாகவே இருந்துள்ளன என்பதை டார்வின் உணரத் தவறியதாக விமர்சித்துள்ளனர் --- (Extract from the original Quote of) Niles Eldredge, "Progress in Evolution?" New Scientist, 5th June 1986 (volume 110, number 1511), pages 54-57.         
      
இந்நேரம் நீங்கள் ஒன்றை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது, ஒரு கோட்பாடை முன்வைத்து விட்டு அதற்கான ஆதாரத்தை தேடுகிறார்கள் டார்வின் ஆதரவாளர்கள். ஜே குட் அவர்களோ, இருக்கும் ஆதாரத்தை வைத்து அதற்கேற்றார்போல் ஒரு கோட்பாடை உருவாக்கி கொண்டார்.    

படிக்கும் உங்களுக்கு இது நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கும். 


டார்வின் தன் கோட்பாட்டை விளக்க ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதாவது, உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்பது அது. இதற்கு ஆதாரங்கள் இல்லையென்று மற்றொரு பிரபல பரிணாமவியலாளர் வேறொரு கோட்பாட்டை முன் வைக்கிறார். உயிரினங்கள், குறுகிய காலத்தில் விரைவாக மாற்றமடைந்து பின்னர் நீண்ட காலங்களுக்கு மாற்றமைடையாமல் இருந்திருக்கவேண்டும் என்று விளக்குகிறது இந்த கோட்பாடு.


நேரெதிர் திசையில் பயணிக்கும் இந்த இருவரது கருத்தில் எது சரி? எது தவறு?  

ஜே குட் அவர்களது கோட்பாடு சரியென்றால் டார்வினின் கூற்று தொலைந்து போய் விடும். அதே சமயம், டார்வினின் கூற்று உண்மையென்றால், அதற்கு எதிரான ஆதாரங்களைத் தான் உயிரினப்படிமங்கள் கொடுக்கின்றன என்ற ஜே குட் அவர்களின் வாதங்கள் பொய்யாகிவிடும்.    

பரிணாமவியலாளர்களிடையே மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது இந்த கோட்பாடு.

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்திருக்க வேண்டுமென்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்தால், பரிணாமவியல், காலப்போக்கில் அதிக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜே குட் எண்ணியிருக்க வேண்டும். தன்னுடைய கோட்பாடு, இருக்கும் ஆதாரங்களோடு ஒத்துப்போவதால் பரிணாமத்தில் இருக்கும் குழப்பங்கள் தீரலாம் என்று நம்பினார்.

ஆக, தன்னுடைய கோட்பாட்டின் மூலம்,
  • உயிரினங்கள் திடீரென உயிரினப்படிமங்களில் தோன்றியது, 
  • அவைகள் சிறுகச் சிறுக மாறியதற்கு உயிரினப்படிவங்களில் ஆதாரங்கள் இல்லாதது, 
  • உயிரினங்கள் பல காலங்களாக மாற்றமடையாமல் இருப்பது,
போன்ற பரிணாமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக நம்பினார் ஜே குட்.

ஆனால், அவருடைய முயற்சி குழப்பங்களை தீர்க்காமல் அவற்றை அதிகமாக்கி பரிணாமவியலாளர்களிடையே பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. அவர்களிடம் உள்ள குழப்பங்களை வெளியூலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 

ஜே குட் அவர்களது கோட்பாட்டை விமர்சிக்க தொடங்கிய பரிணாமவியலாளர்கள், அந்த கோட்பாடு எந்த அளவு அறிவியலின் மற்ற துறைகளுக்கு முரணாக உள்ளது என்று விளக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் பரிதாபம், தாங்கள் ஆதரிக்கும் டார்வினின் கோட்பாட்டிற்கும் (ஜே குட் சொல்லுவது போல) ஆதாரங்களில்லை, அதுவும் அறிவியலில்லை என்பதை ஏனோ வசதியாக மறந்து விட்டனர்.

நான் முன்னமே சொன்னது போன்று, இந்த பதிவு punctuated Equilibria என்றால் என்னவென்று தெளிவாக விளக்கும் பதிவல்ல. மாறாக, அந்த கோட்பாடு ஏன் முன்வைக்கப்பட்டது என்று ஆராயும் முயற்சி தான் இது.

நீங்கள் இந்நேரம் அறிந்துக்கொண்டிருக்கலாம். டார்வினின் கூற்று தவறு என்பதை உயிரினப்படிம ஆதாரங்கள் மூலம் உணர்ந்த ஒரு பரிணாமவியலாளரின் செயல் தான் "puctuated Equilibria" என்ற கோட்பாடு. 

இப்போது நான் பரிணாமவியலாளர்களிடம் கேட்க நினைக்கும் சில கேள்விகள்,            

  • இதுவரை கண்டெடுக்கப்பட்ட உயிரினப்படிமங்கள், உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும் அவைகளில் பெரும்பாலானவை மாற்றமடையாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை நீங்கள் ஏற்கின்றீர்களா? மறுக்கின்றீர்களா? 
  • ஜே குட் மற்றும் நைல்ஸ் எல்ரெச் ஆகிய இருவரின் கோட்பாடான "puntuated Equilibria" கொண்டுவரப்பட்டதற்கு டார்வினின் கூற்று தவறு என்பதுதான் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்களா? இல்லையா? 
  • டார்வின் மற்றும் ஜே குட், இந்த இருவரது கோட்பாட்டில் எது சரி? எது தவறு?.  இதே கேள்வியை வேறு விதமாக கேட்பதென்றால், உயிரினங்கள் பல காலங்களாக சிறுகச் சிறுக மாற்றடைந்து வேறொன்றாக மாறினவா? அல்லது குறுகிய கால இடைவெளியில் விரைவாக மாற்றமடைந்து வேறொன்றாக மாறி பிறகு மாற்றமடையாமல் தொடர்ந்தனவா?     
  • ஜே குட் அவர்களின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் டார்வினின் "உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக வந்திருக்க வேண்டும்" என்ற கருத்து தவறு என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
  • "இல்லை, இல்லை, டார்வின் சொன்னது தான் சரி" என்றால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் அவரது கருத்துக்கு எதிராக உள்ளனவே? அதற்கு உங்களது பதிலென்ன?
  • மேற்கண்ட கேள்விக்கு, "உயிரினப்படிமங்கள் இன்னும் முழுமையான அளவில் கிடைக்கவில்லை , அதனால் தான் பரிணாமம் தென்படவில்லை" என்று நீங்கள் கூறினால், பிறகு எந்த வரலாற்று ஆதாரங்களை வைத்து நாங்கள் பரிணாமத்தை நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்கள்?
  • பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்காத போது, சென்ற காலத்தில் இப்படி நடந்திருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்படி நம்பமுடியும்?            
  • இன்றைய நிலவரப்படி, வரலாற்று ஆதாரங்கள் "உயிரினங்கள் திடீரென தோன்றியதாகவும், அவை சிறுகச் சிறுக வேறொன்றாக மாறவில்லை" எனவும் சொல்கின்றன. இன்றைய ஆதாரங்கள் இப்படி சொல்கின்ற நிலையில் இவற்றை நம்புவது சரியா? அல்லது ஆதாரங்களே இல்லாத, நீங்கள் சொல்கின்ற கொள்கையை நம்புவது சரியா?     
  • எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் பின்னப்பட்ட ஒரு கருத்தை கதை என்று கூறுவது ஏற்புடையதா? அல்லது அறிவியல் என்று கூறுவது ஏற்புடையதா?

பரிணாமவியலில் உள்ள ஓட்டைகள் காலப்போக்கில் தங்களுடைய அளவிலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, அதிகரித்து கொண்டுதான் வருகின்றன.

ஓட்டைகள் பல நிறைந்த இப்படியான ஒரு கோட்பாட்டை நம்ப மறுப்பவர்களை "அறிவியலை எதிர்க்கின்றார்கள்" என்று முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதை பரிணாமவியலாளர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.   

ஆதாரங்களை தெளிவாக கொடுத்த பிறகு அதை நம்பவில்லை என்றால் பரிணாமவியலாளர்கள் சொல்லுவதில் நியாயம் இருக்கிறது. வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கான எந்த ஆதாரத்தை கொடுத்து விட்டீர்கள் நாங்கள் நம்பாமல் இருப்பதற்கு?

பரிணாமத்தை நம்பும் சகோதரர்கள், இனி மேலும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பரிணாமவியலை நம்பாமல் (உதாரணத்துக்கு, குதிரை பரிணாமம் அடைந்த கதை, ஊர்வன பறவையான கதை (Archaeopteryx)...etc) தாங்களாக இந்த கோட்பாட்டின் உண்மை நிலையை ஆராய்ந்தறிய முன்வர வேண்டும். பரிணாமவியலுக்கும், அறிவியலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த நிலை வராதவரை பரிணாமவியலை "அறிவியல்" என்று கருதும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

இன்ஷா அல்லாஹ், தொடரும்....

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக....ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


பரிணாமம் தொடர்பான மற்ற பதிவுகள்:



My sincere thanks to:
1. Stephen Jay Gould.
2. Niles Eldredge.
3. evolution.berkeley.edu

References: 
1. Punctuated Equilibria: An alternative to Phyletic Gradualism - Stephen Jay Gould and Niles Eldredge.
2. The Panda's Thumb - Stephen J. Gould. 1980, p. 181-182.
3. Paleontologists Confronting Macroevolution - Ricklefs, Robert E., Science, vol. 199, 1978, p. 59.
4. "Progress in Evolution? - Niles Eldredge, New Scientist, vol. 110, 1986, p. 55.
5. Stephen Jay Gould - Wikipedia.
6. Phyletic Gradualism - Wikipedia.
7. Punctuated Equilibrium Theory - Appalachian State university, last updated on 13th April 2006.
8. Punctuated Equilibrium - Principia Cybernetica Web, F.Heylinghen, dated 22nd July 1999.
9. The Structure of Evolutionary Theory  - Stephen Jay Gould
10. The Theory of Punctuated Equilibrium - Academy of Achievement, revised on 17th November, 2009.
11. Punctuated Equilibria - Talkorigins.org, Wesley Elsberry, last updated 4th February 1996.
12. The Quote Mine Project Or, Lies, Damned Lies and Quote Mines, "Sudden Appearance and Stasis" - Talkorigins.org (Quote # 14).
13. The Stephen Jay Gould Prize - The society for the Study of Evolution.
14. Stephen Gould and the Neo-Darwinians - Science and You, Henry Mulder.
15. Evolution as Fact and Theory - Stephen Jay Gould, (originally appeared in Discover 2 (May 1981): 34-37) and re-published as Hen's Teeth and Horse's Toes, New York: W. W. Norton & Company, 1994, pp. 253-262.
16. Stasis - Wikipedia.
17. More on Punctuated Equilibrium - evolution.berkeley.edu


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ







Friday, July 2, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - III



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
  

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில் நாம் "பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life)" குறித்து பார்க்கவிருக்கின்றோம்.   

பதிவிற்கு செல்லும் முன் பரிணாமவியல் குறித்த சில வார்த்தைகளை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன்.  

1. இயல்பு/இயற்கை தேர்வு (Natural Selection (NS))
2. தற்செயலான மாற்றங்கள் (Random Mutations (RM))

பரிணாமம் நடக்க நாம் மேலே பார்த்த இரண்டு உக்திகளும் அதி முக்கியமானது. அதாவது, இயற்கைக்கு ஏற்றவாறு, (பரம்பரை பரம்பரையாக) உயிரினங்களின் உடல்களில் (சிறுக சிறுக) தற்செயலாக ஏற்படும் (மரபணு) மாற்றங்களே புதிய உயிரினங்கள் உருவாக காரணம் (Origin of Species by means of natural selection and random mutations).

உதாரணத்துக்கு, ஒரு வகையான நிலவாழ் உயிரினம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவைகளுக்கு பறக்கும் தேவை ஏற்படுகிறது. (அவைகளில் பகுதியோ அல்லது முழு இனமோ) பறக்க முயற்சிக்கிறது. இப்படியாக பரம்பரை பரம்பரையாக முயற்சிக்கையில், சிறகுகள் (மற்றும் இதர மாற்றங்கள்) சிறிது சிறிதாக ஒவ்வொரு தலைமுறையாக வளர்ந்து, 100 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 1000 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 10000 பரம்பரைகளுக்கு பிறகோ etc etc, அந்த உயிரினம் பறக்கும் சக்தியை பெற்று பறவையாகி விடும். 

3. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.    
Fossils are the remains or evidence of animals and plants which have been preserved naturally - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.   


4. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

5. செல் (Cell) -  உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. ஒரே ஒரு செல் கொண்ட உயிரினங்கள் மற்றும் பலசெல் கொண்ட உயிரினங்கள் என்று அவை பிரிக்கப்பட்டுள்ளன. பலசெல் உயிரினங்களான நம் உடம்பில் மட்டும் சுமார் 60-90 ட்ரில்லியன் செல்கள் (1 trillion = 100,000 crores or 1000 Billion) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Cells are the building blocks of life - "Ask a Biologist" Website

பதிவிற்கு செல்வோம்... 

பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution): 

துரதிஷ்டவசமாக, பரிணாமவியலாளர்களிடையே இது குறித்து ஒருமித்த மற்றும் தெளிவான கருத்து இல்லாதபடியால் என்னால் இங்கு விளக்க முடியாத சூழ்நிலை. 

அதனால் நேரடியாக பரிணாமவியல் என்ன சொல்ல வருகிறது என்று கருத்துக்கு சென்று விடுவோம். 

பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி உலகம் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு (உலகம் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது)  ஒரு வாழும் செல் (Living Cell) உருவாகி இருக்க வேண்டும் (Abiogenesis).

பிறகு அவற்றிலிருந்து பலசெல் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். பிறகு இவை முதுகெலும்பு இல்லாத உயிரினங்களாக, அவற்றிலிருந்து முதுகெலும்பு உள்ள உயிரினங்களாக என்று படிப்படியாக சிறுக சிறுக மாறி இப்போது நாம் பார்க்கக்கூடிய பல்வேறு உயிரினங்களாக வந்திருக்க வேண்டும்.


"No one knows how this happened. But Scientists think that energy from sunlight and lighting strikes triggered the formation of chemicals that could copy themselves. This may have taken place in the chemical "soup" that existed in the oceans, in shallow polls, or around volcanoes. The next crucial step was when the self-copying chemicals became trapped in "bubbles" of oil, which hold them together. These tiny blobs of chemicals were the beginnings of the first living cell. ....Over hundreds of millons of years, some simple animals without backbones, which looked like jelly fish or worms, developed into animals with backbones, including the first fish" - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.      


உதாரணத்துக்கு, பூமியின் வரலாற்றை 12 மணி நேர கணக்காக (0-12 ) எடுத்துக்கொண்டால், உலகின் முதல் எளிமையான பாக்டீரியாக்கள் 3 மணிக்கும், ஜெல்லி மீன்கள் போன்றவை 10 மணிக்கும், முதல் டைனாசர்கள் 11.45 க்கும், மனிதன் 11.59 மணிக்கும் தோன்றியதாக விளக்கம் கொள்ளலாம். (The Oxford Science Library, 2002 edition, Vol-2, p-5).



    
சுருக்கமாக சொல்லப்போனால், இன்று நாம் பார்க்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பொதுவான மூதாதையர் தான்.               

இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலான பரிணாமவியலாளர்களின் கருத்துப்படி, பரிணாமவியல் என்பது, முதல் வாழும் செல் எப்படி உருவானது என்பது பற்றிய கோட்பாடு அல்ல. வேறு விதமாக சொல்லுவதென்றால், பரிணாமவியல், முதல் செல் எப்படி உருவானது என்றெல்லாம் விளக்காது. 

மாறாக, முதல் செல் உருவானப் பிறகு, அதிலிருந்து உயிரினங்கள் எப்படித் தோன்றின என்று மட்டும் தான் கூறும்.

டெக்னிகலாக கூறுவதென்றால் Ribosomes+DNA (these are major components of a cell) உருவானப் பிறகு, NS+RM (Natural selection and Random Mutation) போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களைத்தான் அது பேசும். 

"பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species" - சகோதரர் இரஞ்சித், கையேடு வலைப்பூ.   

NS மற்றும் RM போன்றவை, Ribosomes+DNA உருவானப் பிறகுதான் செயல் பட ஆரம்பிக்கும் என்ற கூற்றை "NON-SENSE" என்று வர்ணிக்கிறது Uncommon Descent இணையதளம். இது பற்றி மேலும் படிக்க இங்கே...
   
ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும்? (Abiogenesis) என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இன்றைய தேதிவரை, விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பிறகும் கூட, பரிணாமவியலாளர்களால் ஒரு வாழும் செல்லை உருவாக்க முடியவில்லை. 

ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும் என்று தெரியாததால் தான் அதை பரிணாமவியலில் ஒரு பகுதியாக சேர்க்கவில்லையோ? 

நாளையே ஒரு செல்லை இவர்கள் உருவாக்கிவிட்டால், அதை பரிணாமவியலின் ஒரு பகுதியாக சேர்த்து, "பரிணாமவியல் பூரணமடைந்து விட்டது" என்று கூறினாலும் கூறுவார்கள்.

இது குறித்து பிரபல அறிவியலாளரான Sir Fred Hoyle அவர்கள் கூறியது,

The random emergence of even the simplest cell is equal to "a tornado sweeping through a junk-yard might assemble a Boeing 747 from the materials therein." - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105. (Emphasis added)
ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது, ஒரு சூறாவளி, வேண்டாத பொருட்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு இடத்தை கடந்து சென்றதால் (அந்த பொருட்களை கொண்டு) Boeing 747 விமானம் உருவாகிவிட்டது என்று கூறுவதற்கு நிகரானது - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.   

அவர் இத்தோடு நிறுத்தவில்லை, ஒரு புரதம் (ஒரு செல் என்பது பல்வேறு புரதங்களால் ஆனது) கூட தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்று சொன்னவர்.
   
எது எப்படியோ, பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் Abiogenesisசை பரிணாமவியலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளாதபடியால், அதை தற்போதைக்கு தள்ளி வைப்போம். பரிணாமவியலாளர்கள் எதை ஒப்புக்கொள்கிறார்களோ அதையே நாம் விமர்சிக்க முயல்வோம். இன்ஷா அல்லாஹ்...  

பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமென்றால் அது பரிணாம மரம். 

பரிணாமத்தின் முக்கிய தூணான இதுவும் பரிணாமவியலாளர்களின் கற்பனைத் திறனால் வடிவமைக்கப்பட்ட ஒன்றே.  இதற்கும் எந்தவொரு ஆதாரமும் வரலாற்றில் இல்லை. 

பரிணாம மரம் என்றால் என்ன?

ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.

"ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது" - சகோதரர் ரஞ்சித், கையேடு வலைப்பூ.  

உதாரணத்துக்கு கீழே உள்ள படங்களை பாருங்கள்.  





ஒரே மூதாதையரில் இருந்து அனைத்து உயிரினங்களும் வந்திருக்க வேண்டும் என்று விளக்கும் பரிணாம மரத்தில் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் இது ஒரு யூகத்தில் அமைந்த ஒன்று என்பது தான். இதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலான காலக்கட்டத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கின்றனர். உதாரணத்துக்கு...



Cambrian  - சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Ordovician - சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Pre-cambrian - உலகம் தோன்றியதிலிருந்து cambrian வரையிலான காலக்கட்டம். உலகம் தோன்றியது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராம். ஆக precambrian காலக்கட்டம் என்பது சுமார் 4 பில்லியன் ஆண்டுகள் கொண்டது.

ஏன் பரிணாம மரம் தவறென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் இதற்கு எதிராகத்தான் உள்ளன. அதாவது, ஒரு மரத்தை தலைகீழாக திருப்பிபோட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் விவகாரங்கள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

இன்னும் தெளிவாக கூறப்போனால், மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் (Fossils) முதன் முதலாக தென்படும் (complex) உயிரினங்கள், முழுமையான உருவங்களில், திடீரென தோன்றியிருக்கின்றன.

உலகின் மிகப் பழமையான உயிரினப்படிமங்கள் என்றால் அவை cambrian காலக்கட்டத்தை சேர்ந்தவை (சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை). அந்த படிமங்களின் படி, அந்த கால கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் திடீரென தோன்றியிருக்கின்றன.

"A half-billion years ago, ...the remarkably complex forms of animals we see today suddenly appeared" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
"அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நாம் இன்று பார்க்கக்கூடிய சிக்கலான வடிவமைப்பை கொண்ட விலங்குகள் திடீரென தோன்றியிருக்கின்றன" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.    

ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்கள் சொல்வதும் இதையேத்தான் பிரதிபலிக்கின்றது,

"we find many of them already in an advanced state of evolution, the very first time they appear. It is as though they were just planted there, without any evolutionary history" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229. 
"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்படும் போதே பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்தவொரு பரிணாம வரலாறும் இல்லாமல் அவைகள் அங்கே நட்டுவைக்கப்பட்டது போன்று உள்ளன" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.  

டாகின்ஸ் சொல்லுவது போல, இப்படி திடீரென்று தோன்றியிருக்கும் உயிரினங்கள் பரிணாமத்தை கடந்து வந்ததாக வரலாறு இல்லை.

  

இது குறித்து எழுதிய "Science" ஆய்விதழ், பின் வரும் தகவலை கூறுகிறது,

"The beginning of the Cambrian period, some 545 million years ago, saw the sudden appearance in the fossil record of almost all the main types of animals (phyla) that still dominate the biota today." - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 
சுமார் 545 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், Cambrian காலக்கட்டதின் துவக்கத்தில், இன்று நாம் பார்க்கக்கூடிய அனைத்து விதமான முக்கிய விலங்குகளும் உயிரின படிமங்களில் திடீரென தோன்றியிருக்கின்றன - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

அதே இதழ் மற்றொரு முக்கியமான செய்தியையும் சொல்கிறது. அதாவது இந்த காலக்கட்டத்திற்கு முன் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான (Gradual Increase) படிம  ஆதாரங்கள் இல்லை என்பது தான் அது.

"This differential evolution and dispersal, too, must have required a previous history of the group for which there is no fossil record" - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

பரிணாமம் உண்மையாக இருந்திருந்தால், cambrian காலக்கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை இல்லை.

இது பற்றி குறிப்பிடும் "Science Daily",

"If Darwin’s theory of natural selection was right, life evolved gradually over millions of years. However, the Cambrian period, which began around 542 million years ago, seemed to herald a sudden rapid increase in species diversity, an event which has come to be known as the ‘Cambrian explosion’"- Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.
"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.    

பரிணாமவியலாளர்கள் சொல்வது போன்று, ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் சிறுகச் சிறுக பெருகின என்பது போன்ற வாதங்கள் கற்பனை அளவில் மட்டுமே உண்மை. நம்மிடமிருக்கும் ஆதாரங்கள் அவர்களுடைய வாதங்களுக்கு நேர் எதிராகத்தான் இருக்கின்றன.      

ஆக, முதன் முதலாக காணப்படும் விலங்கினங்கள், பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவில்லை. பொதுவான மூதாதையர் என்ற கோட்பாடுக்கும் அவைகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.  







ஆக மொத்தத்தில் பரிணாம மரத்தின் அடிப்படையே தவறு. 

இன்ஷா அல்லாஹ், எதிர்க்காலத்தில், இந்த மரத்தின் கிளைகளையும் விமர்சிப்போம். அதாவது, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று கூறுவார்களே அதைத்தான் குறிப்பிடுகிறேன்.    (மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின, டைனாசரிலிருந்து பறவைகள் வந்தன என்று கூறப்படும் கதைகளெல்லாம் படு சுவாரசியமானவை).

அதெல்லாம் சரி, பரிணாமத்தின் அடிப்படையிலேயே இத்தனை கோளாறுகள் இருப்பது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள்? 

cambrian காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மிக மிருதுவான தோல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால் உயிரினப்படிவங்களில் பரிணாமம் தென்படாமல் இருந்திருக்கலாம் என்பது அவர்களது முக்கிய வாதம்.

ஆனால் இதுவும் அவர்களது கற்பனையே தவிர உண்மையில்லை. சுமார் மூவாயிரம் பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினப்படிவங்களில் ஒருசெல் பாக்டிரியாக்கள் காணக்கிடைக்கின்றன (Micro Fossils). இன்றைய தேதிவரை, cambrian காலத்திற்கு முற்பட்ட பல microfossils கிடைத்துள்ளன.

ஆக, இவைகள் மிருதுவாக இருப்பதால் பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற இவர்களின் வாதங்கள் அறிவியலுக்கு ஒத்துவராது.

இவர்கள் கூறும் மற்றொரு காரணமான "Molecular Phylogeny" யும், பரிணாமத்தை நிரூபிப்பதற்கு பதிலாக அதற்கு எதிரான தகவல்களையே தருகின்றது.

So, இவ்வளவு ஆதாரங்கள் பரிணாம மரம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இருந்தும், இன்னும் ஏன் இதை பரிணாமவியலாளர்கள் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றனர்? 

இது, நாம் பரிணாமவியலாளர்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி....

"1999 ஆம் ஆண்டு, சீனாவைச் சேர்ந்த, cambrian கால உயிரினப்படிவங்களில் தனித்துவம் பெற்ற தொல்லுயிரியலாளர் (Paleontologist) ஒருவர், அமெரிக்காவின் பல்வேறு பல்கலைகழகங்களில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். அவருடைய ஒரு உரையை கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.
     அந்த உரையில், cambrian கால உயிரினப்படிவங்கள், டார்வினின் கோட்பாட்டிற்கு எப்படி நேர் எதிராக உள்ளன என்று சுட்டி காட்டினார் அவர். 
      உரை முடிந்ததும், அந்த அரங்கத்தில் இருந்த பல்வேறு விஞ்ஞானிகள் அவரிடம் உயிரினப்படிவங்கள் குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் டார்வினின் கோட்பாடு குறித்து அவர் சொன்ன தகவல்கள் தொடர்பாக எந்தவொரு கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து விட்டனர். 
   நிகழ்ச்சி முடிந்ததும் அவர் என்னிடம் இது பற்றி கேட்டார். நான் கூறினேன்,"டார்வினின் கோட்பாடை விமர்சிப்பது அமெரிக்காவில் விரும்பத்தக்கதல்ல" என்று.
   இதை கேட்டவுடன் சிரித்து விட்டார் அவர். பிறகு அவர் கூறினார், " சீனாவில் டார்வினை விமர்சிக்கலாம், ஆனால் அரசாங்கத்தை தான் விமர்சிக்க கூடாது. ஆனால் இங்கே அமெரிக்காவில் அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் டார்வினை விமர்சிக்க கூடாது" - Jonathan Wells, Icons of Evolution, 2000, pp-58. 

என்ன?, பரிணாமம் இல்லையென்றால் உயிரியல் இல்லையென்று சிலர் சொல்லுகிறார்களா?.....................ஏனென்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்....

நிச்சயமாக, பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மேம்பட்டது..........  

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


குறிப்பு: 
           தயவுக்கூர்ந்து, நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் எந்தவொரு தகவலையும் அப்படியே ஏற்காமல், நீங்களும் இவை சரிதானா என்று ஆராய்ந்து பாருங்கள். இஸ்லாமும் நமக்கு அதைத்தான் கற்று கொடுக்கிறது.


My Sincere Thanks to:
1. Br.Ranjith.
2. Talk Origins Website.
3. Dr.Jonathan Wells.

Pictures Taken from: 
1. The young oxford library of science.
2. Academic American Encyclopedia.
3. Berkeley University (tailored).
4. Icons of Evolution.
5. Atlas of Creation.
6. Encyclopedia Brittannica.

References: 
1. Definition of fossils - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.
2. Cells, Building blocks of life - "Ask a Biologist" Website
3. Origin of Life - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.
4. "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.
5. Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
6. Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.
7. Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439.
8. Solution To Darwin's Dilemma Of 1859 - Science Daily Dated January 9, 2009.
9. Tree of life - Jonathan Wells, Icons of Evolution, pp-29-58.
10. Evolution - Encyclopedia Brittannica.
11. Evolution - Academic American Encyclopedia
12. Cells - Wikipedia.
13. The Fossil Record Refutes Evolution - alberteinstein.ro


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.