Monday, October 18, 2010

இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின். 

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை. 

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது. 

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை, 

  • என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும். 
  • அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும். 
  • எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும். 

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,

"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது" 

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.

நாட்கள் சென்றன....

இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.

முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.

பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.         

"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"

இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.

என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், காலுறையையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.

"Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)

ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.

பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.

என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.

"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"

நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.

அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.

"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)

"இல்லை, நான் பிரிட்டிஷ்"

"காபி அருந்துகின்றீர்களா?"

இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
                   
"Tawadha" (உளு செய்யலாம் வாருங்கள்)

உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.

"வாருங்கள் தொழப்போகலாம்"...

மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.

"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். "பிறகு இப்படி வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.

நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல செய்யுங்கள்" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.

பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.

பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன், 

"உங்கள் அம்மா எங்கே?"

அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.       

"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்"

அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

"உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.

"ஆம்"

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

"எனக்கு டைம் தேவை"

அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.

"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"

நான் அவருக்கு நன்றி கூறினேன்.

அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.

இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.

எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...

"நீங்கள் முஸ்லிமாகவில்லையா?"

என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்"

"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"

"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே"

எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்"

"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"

அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.

உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம். 

இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.

அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று"


சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...

Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com


இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.

அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,

"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" என்று கேட்க,

அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,

"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.


இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?

இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.    


My Sincere thanks to:
1. Brother Jerome Boulter..
2. Islam Religion Website.

Reference: 
1. Why I became Muslim - http://www.jboulter.com/index_files/Page987.htm


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






Tuesday, October 12, 2010

திருந்த மாட்டீர்களா வினவு?


அஸ்ஸலாமு அலைக்கும், 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நேற்று இத்தளத்தில் வினவின் உண்மை முகம் வெளியூலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்) பிறகு, சகோதரர் வினவு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்று ஒரு பின்னூட்டத்தை இட்டுருக்கின்றார். அடடா, என்னவொரு பதில் என்று மெய்சிலிர்க்க வைத்தது அந்த பின்னூட்டம். அது உங்கள் பார்வைக்கு, 

**********
நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்.

தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால்அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து. 

தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம். பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில் இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள். இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி. மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான். 
**********

என்னவொரு அழகான ஆணித்தரமான பதில். நிச்சயமாக வினவின் இந்த பதில் பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பியிருக்கும். 

1. சென்ற பதிவின் துவக்கத்திலேயே நான் தெளிவாக கூறினேன், தனி நபர் சாடல்களில் இறங்க வேண்டாமென்று. ஆனால், அதைத்தான் ("நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்") முதலில் செய்திருக்கின்றது வினவு. சரி போகட்டும்....


2. அடுத்து வினவு பகன்ற வார்த்தைகள்,
தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார்
இது குறித்து பதிவின் கடைசியில் பார்ப்போம்.


3. பின்னர் வினவு கூறுகின்றது, அலாவுதீன், தகவல்களை சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டாராம். அந்த தோழர்களில் ஒருவரான நந்தன் தகவல்களை பின்னூட்டமாக போட்டுவிட்டார் போல.

மிக்க சந்தோசம்.... 

ஆக, அலாவுதீன் என்ற பெயரில் வெளியான பின்னூட்டத்தை அலாவுதீன் போடவில்லை, நந்தன் போட்டிருக்கின்றார். அது சரி, நந்தன் இந்த தகவல்களை அவரது பெயரிலேயே போட்டு "அலாவுதீன் போட சொன்னார்" என்று கூறியிருக்கலாமே?. எதற்காக அலாவுதீன் பேசுவது போலவே போட்டார். படித்தவர்கள், வினவின் விளக்கத்தை காணும் வரை அலாவுதீன் தான் பின்னூட்டமிட்டார் என்று எண்ணி ஏமாந்தல்லவா போயிருப்பர்...

ஒருவேளை, நந்தன் நேர்மையில்லாத போலி கம்யுனிஸ்டோ? 

சரி....... நந்தன், அலாவுதீன் சொன்னதை போட்டு விட்டார். தன்னுடைய மெயில் ஐடியில் இருந்தே அதனை செய்து விட்டார். அதனால் ஓரே பொம்மை வந்து விட்டது. அதனை அப்படியே விட்டு விட வேண்டியது தானே? எதற்காக அலாவுதீனின் பொம்மை படம் மாற்றப்பட வேண்டும்? அலாவுதீனே பின்னூட்டத்தை இட்டார் என்ற மாயையை உருவாக்குவதற்காகத் தானே? 

பின்னூட்டங்களில் உள்ள படங்களை யார் மாற்றமுடியும்? தளத்தின் moderator தானே? இல்லை என்னை போன்ற பொது ஜனங்கள் கூட தாங்கள் இட்ட பின்னூட்டத்தை அது இடப்பட்ட பிறகு அதன் படத்தை மாற்ற முடியுமா? நந்தனால் அலாவுதீனின் படத்தை மாற்ற முடிகின்றது என்றால் அவர் moderator தானே? அவர் வினவு தானே? வினவு தானே அலாவுதீனின் பெயரில் தங்கள் கொள்கை பரப்பு பின்னூட்டத்தை போட்டுக்கொண்டது?

ஆனால், வினவு சொல்கின்றது "அலாவுதீனின் தோழர்கள் போட்டார்களாம்", ஓஹோ... அந்த தோழர்கள் வட்டாரத்தில் வினவு தான் முதன்மையானவரோ?


4. நந்தன் என்ற பெயரில் வந்து பனிரெண்டு பின்னூட்டங்களை போட்ட வினவு, அந்த பின்னூட்டங்களை தன் பெயரிலேயே போட்டிருக்கலாமே? கேள்வி எழுப்புபவர்களுக்கு தன் பெயரிலேயே பதில் சொல்லலாமே?


5. இந்த களேபரத்தில் மணமகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். அது எப்படி வினவு, முதலில் மணமகனின் படமும், மணமகளின் படமும் ஒன்றாக இருந்தது. சரி, ஒரே தோழர் இவ்விருவரின் கருத்தையும் இட்டார் என்று வைத்து கொள்வோம். பின்னர் எதற்காக மணமகனின் படம் மாற்றப்பட்டது?. ஒரு தோழர் மணமகனுக்காகவும், மற்றொரு தோழர் மணமகளுக்காகவும் பின்னூட்டம் இட்டார்களா என்ன?


6. பின்னர் வினவு அடிச்சதுதான் சூப்பர் காமெடி...

முன்னர் // அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து// என்று சொன்னவர்கள் அந்த பின்னூட்டத்தின் இறுதியில் //மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்// என்று சொல்லி அடித்தார்கள் பாருங்கள் ஒரு பல்டியை. 

  • படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற நினைப்பா வினவு அவர்களே? 
  • ஒருவர் ஒரே பின்னூட்டத்தில் முரண்பட்டு பேசுவாரா?

நல்ல தமாஷ் தான்...


உச்சகட்ட காமெடி:  

இதையெலாம் விட முத்தாய்ப்பாய் ஒரு நகைச்சுவை இருக்கின்றது...அதாவது மணமகன் அலாவுதீன் பணி நிமித்தமாக வெளியூரில் இருந்தாராம். ஆனால் அங்கு பின்னூட்டமிட்ட "காட்டரபி" என்ற நபர், தான் மணமகனுக்கு ஒன்று விட்ட மாமனுடைய மகன் என்றும், மணமக்கள் இரண்டு வார தேனிலவுக்கு சென்றிருக்கின்றார்கள் என்றும் பின்னூட்டமிட்டார். அடடா...மணமக்கள் மணமாகி மூன்று மாதம் கழித்து இரண்டு வாரம் தேனிலவுக்கு சென்றிருப்பது வினவுக்கு தெரியாமல் போச்சே?  மாப்பிள்ளையின் உறவினர் சொன்னது சரியா அல்லது வினவு சொன்னது சரியா? ஒரே குழப்பம். 

குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பார்கள் என்று பார்த்தால், மேலும் பல குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கின்றார்கள். என்னவொரு புரட்சி!!!!!!

நீங்கள் திருந்த வாய்ப்பே இல்லையா வினவு குழுவினரே?

வினவு சகோதரர்களே, நீங்கள் பித்தலாட்டத்தில் ஈடுபட்டீர்கள். அது சுட்டிக்காட்டப்பட்டது. வாசகர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு முடிந்தால் வருத்தம் தெரிவியுங்கள். இல்லை, நாங்கள் இப்படித்தான் தவறு செய்வோம், அதை யாராவது சுட்டி காட்டினால் அதை ஒப்புக்கொள்ளாமல் சுட்டி காட்டியவரை திட்டுவோம் என்றால் உங்களால் புரட்சி என்ன....அதற்கு கிட்டே கூட வர முடியாது...

 "நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42

இறைவனின் இந்த வசனங்கள் எங்களுக்கு நன்றாகவே மனதில் பதிந்திருக்கின்றது...


இறைவன் கூடிய விரையில் வினவு சகோதரர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ 






Monday, October 11, 2010

வினவின் பித்தலாட்டம் அம்பலம்...



அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

முதலில் வினவு தளத்தினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 

இந்த பதிவில் உங்களது பித்தலாட்டம், தில்லுமுல்லு ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவர பட்டுள்ளது. உங்களுடைய நேர்மையின்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதற்காக தாங்கள் தனி நபர் விமர்சனங்களிலோ அல்லது பதிவை திசை திருப்பும் விதமாகவோ இறங்க வேண்டாம். இங்கு தரப்பட்டுள்ள ஆதாரங்கள் தவறு என்று தாங்கள் நினைத்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். திருத்தி கொள்கின்றேன்.  

பதிவிற்கு செல்வோம்..

இரு நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்னையை என் கவனத்திற்கு கொண்டு வந்தது சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்கள் (நெத்தியடி முஹம்மத் என்ற பெயரில் வினவு தளத்தினருக்கு அறிமுகமானவர்).

வினவு தளத்தை பின் தொடர்பவர்களுக்கு தெரிந்திருக்கும், சில நாட்களுக்கு முன்னர் வினவு தளத்தில் "மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. 

இது சம்பந்தமாக விவாதங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக நடந்து கொண்டிருக்கின்றன. 

இரு நாட்களுக்கு முன்னர் முஹம்மது ஆஷிக் வினோதமான இரு பின்னூட்டங்களை கண்டிருக்கின்றார் (அக்டோபர் 8 ஆம் தேதி). அதாவது, நந்தன் என்பவர் பின்வரும் பின்னூட்டத்தை இடுகின்றார். 

1.மணமகனும் மணமகளும் தங்களின் கருத்துக்களை கூறினால் இன்னும் பல உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த பின்னூட்டம் இடப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு "மணமகன் அலாவுதீன்" என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வருகின்றது. 

என்ன ஆச்சர்யம் என்றால், நந்தனுக்கு பக்கத்தில் இருக்கும் படமும் (ரோஸ் கலர் படம்), அலாவுதீனுக்கு பக்கத்தில் இருக்கும் படமும் ஒன்றாக இருந்திருக்கின்றது. ஒரே மெயில் ஐடியில் இருந்து பின்னூட்டம் வந்தால் தான் இரண்டு படமும் ஒன்றாக இருக்கும். ஆக, இந்த இரண்டு பின்னூட்டத்தையும் இட்டது ஒரே நபர். அது நந்தன். அலாவுதீன் என்ற பெயரில் எழுதிய போது மெயில் ஐடியை மாற்ற மறந்திருக்கின்றார் நந்தன். அதனால் தான் ஒரே படம் வந்து விட்டது.

அடுத்து வந்தது மிகப்பெரிய அதிர்ச்சி. அதாவது, சில நிமிடங்கள் கழித்து refresh செய்து பார்த்தால் அலாவுதீனுடைய படம் மாறியிருக்கின்றது. இப்போது, பின்னர் வந்த "மணமகள் சப்னா அஸ்மி" என்ற பின்னூட்டத்தின் படமும், அலாவுதீனுடைய படமும் ஒன்றாக இருக்கின்றது. அதாவது, மணமகளும் மணமகனும் ஒரே ஐடியில் இருந்து பின்னூட்டம் இட்டது போன்ற எண்ணத்தை கொடுப்பதற்காக.

சரி, யார் பின்னூட்டத்தின் படங்களை மாற்ற முடியும்? தள moderator தானே? அப்படியென்றால் நந்தன் என்பவர் moderator பொறுப்பில் இருப்பவரா? வினவின் adminகளில் ஒருவரா நந்தன்?

மணமகன் பெயரில் வினவே ஒரு பின்னூட்டமிட வேண்டிய அவசியமென்ன? யாரை முட்டாளாக்குகின்றது வினவு? படிப்பவர்களுக்கு வினவு செய்யும் துராகமல்லவா இது?

இதையெல்லாம் முஹம்மது ஆஷிக் தெளிவாக விளக்கினார். நான் "இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, உங்களிடம் screen shot இருக்கின்றதா?" என்று கேட்டேன். "இல்லை" என்றார். "அப்படியென்றால் ஒன்றும் செய்ய முடியாது, விஷயத்தை இத்தோடு தள்ளி வைத்துவிடுவோம்" என்று கூறினேன்.

என்னிடம் கூறிய இந்த விஷயத்தை ஹைதர் அலியுடமும், ஷேக் தாவுத்திடமும் கூறியிருக்கின்றார் முஹம்மது ஆஷிக்.  

விஷயம் முடிந்து விட்டது, அரிய வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்று நினைத்தால், நேற்று வினவு அடித்தார்கள் பாருங்கள் மற்றொரு கூத்தை... ஒருவர் ஒருமுறை தில்லுமுல்லு செய்யலாம். ஆனால் மறுபடியுமா?

ஆம், முஹம்மது ஆஷிக் சொன்னது போன்ற ஒன்றை மறுபடியும் அரங்கேற்றி காட்டியது வினவு. இந்த முறை அனைத்தையும் screen shot எடுத்துவிட்டேன்.

சில நாட்களாக மணமகனிடமும், மணமகளிடமும் ஒரு கேள்வியை கேட்டு வருகின்றேன் நான். அதற்கு பதில் என்று "அலாவுதீன்" (பின்னூட்டம் நம்பர் - 29) என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்தது.

இந்த முறை மாட்டுவார்களா என்று போய் பார்த்தால் வசமாக சிக்கிக்கொண்டார்கள். மறுபடியும் நந்தனுக்கு வந்த அதே படம். இந்த முறையும் மெயில் ஐடியை மாற்ற மறந்து விட்டார் நந்தனாகிய வினவு. அனைத்தையும் screen shot எடுத்து வைத்து கொண்டேன். 


(நந்தனுடைய படமும், அலாவுதீனின் படமும் ஒன்று தான் என்பதை கவனியுங்கள்..)



அந்த பக்கத்தை அப்படியே வைத்து கொண்டு மற்றொரு tabபில் மற்றொரு வினவு பக்கத்தை திறந்து வைத்துக்கொண்டேன். எப்படியும் சில நிடங்களில் தன் தவறை உணர்ந்து மறுபடியும் அலாவுதீனின் படத்தை மாற்றுவார்கள், screen shot எடுக்கலாம் என்ற எண்ணம்தான்.

இந்த நேரத்தில் ஹைதர் அலி என்ன செய்தாரென்றால் வினவில் பின்வரும் பின்னூட்டத்தை இட்டார் (அவருக்கு தான் முன்னமே இவர்களுடைய பித்தலாட்டம் தெரியுமே). 

....ஒரு சின்ன கேள்வி ரொஸ் கலர்ல வந்த நீங்க புளு கலர்ல எப்புடி மாறிங்க மாப்புள்ளகாரரு இப்ப ரொஸ் கலர்ல மாறியிட்டாரு என்ன நடக்குது?

ஹைதர் அலி இப்படி சொன்னது தான் தாமதம். தங்கள் அறியாமையை உணர்ந்த வினவு மறுபடியும் அலாவுதீனுடைய படத்தை மாற்றி விட்டது.

இந்த தருணத்திற்காக காத்திருந்த நான் அதனையும் screen shot எடுத்து விட்டேன்.

(அலாவுதீனின் படம் மாற்றப்பட்டிருப்பதை கவனியுங்கள்)


இதற்கு பிறகு நடந்தது தான் இன்னும் நகைச்சுவை. அதாவது, முதலில் வெளியான அலாவுதீனின் படமும் (பின்னூட்டம் நம்பர் - 18) பின்னர் வெளியான அலாவுதீனின் படமும் ( பின்னூட்டம் நம்பர் - 29) வேறு வேறாக இருந்தன. அதனால் என்ன செய்தார்கள் என்றால், 29 ஆம் நம்பர் பின்னூட்டத்தில் உள்ள படத்தை போலவே 18 ஆம் நம்பர் பின்னூட்ட படத்தை மாற்றி விட்டார்கள். அதுவும் அழகாக screen shot எடுக்கப்பட்டது.

(முன்னர் இருந்த 18 ஆம் நம்பர் பின்னூட்ட படம்)

(பின்னர், 29 ஆம் நம்பர் பின்னூட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட 18 ஆம் நம்பர் பின்னூட்ட படம்)


ஆக, இவர்கள் செய்ததெல்லாம் பித்தலாட்டம், தில்லுமுல்லு. அலாவுதீன் என்ற பெயரிலும், சப்னா பெயரிலும் பின்னூட்டமிட்டு மக்களை முட்டாளாக்கி இருக்கின்றது வினவு.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்,
நந்தன்=அலாவுதீன்=சப்னா அஸ்மி=வினவு 

எதற்காக வினவு இப்படியொரு கீழ்த்தரமான செயலை செய்ய வேண்டும்? அலாவுதீன் என்ற பெயரில் வினவு போட்ட பின்னூட்டங்களை கவனித்தால் விஷயம் புரியும். "இஸ்லாமியர்களே கம்யுனிசத்தின் பின்னே வந்து விடுங்கள்" என்று சொல்லுவதாகவே அமைந்தன பின்னூட்டங்கள். 

வினவிற்கு ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்கும், எங்களுக்கும் அடிப்படையிலேயே பிரச்சனைகள். அதனால் உங்களது எண்ணம் (இறைவன் நாடினாலன்றி) நிறைவேறாது. ஆன்மீகத்திற்கு இஸ்லாமும், வாழ்க்கைக்கு கம்யுனிசமும் என்பது போன்ற வாதங்கள் எல்லாம் அறிவுக்கு ஒத்துவராத ஒன்று. இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. எங்களுக்கு ஆன்மீகமும் இஸ்லாம் தான், வாழ்க்கை நெறியும் இஸ்லாம் தான். அதனால் உங்களது எண்ணங்கள் நிறைவேற போவதில்லை.

நான் மறுபடியும் கூறிக்கொள்கின்றேன். இந்த பதிவு உங்களது நேர்மையின்மையை வெளி உலகிற்கு எடுத்து காட்டும் ஒரு முயற்சியே.  நாங்கள்தான் உண்மையான கம்யுனிஸ்ட்கள் என்று தம்பட்டம் அடிப்பீர்களே,  அப்படியென்றால் உண்மையான கம்யுனிஸ்ட்கள் எப்படியிருப்பார்கள் என்று எங்களுக்கு அறிய தந்ததற்கு மிக்க நன்றி. இனிமேலாவது நேர்மையுடன் நடக்க முயற்சியுங்கள்.

இந்த பதிவில் தவறிருந்தால் சுட்டி காட்டவும். திருத்தி விடுகின்றேன்.

உங்களுக்கு இறைவன் நேர்வழியை காட்டட்டும்...ஆமின்.

பின் குறிப்பு: 

இன்னொரு தமாஷ் இருக்கின்றது, அதையும் கேட்டு விட்டு செல்லுங்கள். அதாவது, இந்த நந்தன் இருக்கின்றாரே, அவருடைய கடைசி (இப்போதைக்கு) பின்னூட்டத்தின் (பின்னூட்டம் நம்பர் - 28) படம் மட்டும் வேறாக இருந்தது. அதாவது, அவருடைய மற்ற பதினோரு பின்னூட்டங்களுக்கும் ரோஸ் கலர் படம் இருந்தது, இந்த கடைசி/பனிரெண்டாம் பின்னூட்டத்திற்கு மட்டும் நீல கலர் படம் வந்து விட்டது.  வேறொரு idயில் இருந்து எழுதி இருப்பார் போல.

இதையும் பின்னர் அறிந்து கொண்ட வினவு சகோதரர்கள், குழப்பம் ஏற்படுத்துவதற்காக, நந்தனுடைய எட்டு பின்னூட்டங்களுக்கு ரோஸ் கலர் படத்தையும், நாலு படங்களுக்கு நீல கலர் படத்தையும் போட்டுவிட்டார்கள். அவை அனைத்தையும் screen shot எடுத்தாகி விட்டது. அனைத்தையும் இங்கே போட முடியாது என்பதால் சாம்பிளுக்கு ஒன்று.

(முன்னர் எடுத்தது)


(பின்னர் எடுத்தது)


இன்னும் எத்தனை பொய் பெயரில் வினவே பின்னூட்டம் இடுகின்றதோ...இறைவனே அறிவான். புரட்சி புரட்சி என்கின்றார்களே...ஆமாம் ஆமாம், உண்மையிலேயே புரட்சிதான்...   

இறைவா, வினவு போன்ற பித்தலாட்டகாரர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுவாயாக...ஆமின்.

--------------------------------
இப்பதிவின் தொடர்ச்சியை ("திருந்த மாட்டீர்களா வினவு?") படிக்க இங்கே சுட்டவும்.
--------------------------------

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






Monday, October 4, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - VI



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

   
கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - II

குரங்கு -> நியாண்டர்தல் (Neandertals or Neanderthals) -> மனிதன்? 

இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். "நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றல்லவா படித்ததாக நினைவிருக்கின்றது, அவர்கள் நமக்கு முன்னோர்கள் இல்லையா, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.  

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "நியாண்டர்தல் மனிதர்கள் அறிவில் மனிதர்களை விட குறைந்தவர்கள் என்று கூட கேள்விப்பபட்டிருக்கின்றோமே?" என்றும் கேட்கலாம். 

ஆம், நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எந்த அளவுக்கு என்றால், நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்னோர்கள் என்ற கூற்று போய் இப்போது இவர்களுக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் என்று கூறும் அளவிற்கு....

தற்போதைய பரிணாம புரிதல் (அ) முன்னர் கருதப்பட்டது (ஆ) தற்போது கருதப்படுவது 

"குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் ஏன் குரங்குகள் இருக்கின்றன?" என்று பரிணாமவியலாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினால், உடனே "உங்களுக்கு பரிணாமம் பற்றி தெரியவில்லை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மாறாக நமக்கும் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர்" என்று பதில் சொல்லுவார்களே, அதுபோலத்தான் இப்போது மனிதனிற்கும் நியாண்டர்தல் மனிதர்களுக்கும் உள்ள உறவை விளக்குகின்றனர் பரிணாமவியலாளர்கள்.  

"Neandertals (Homo neanderthalensis) are currently believed to be our closest evolutionary relatives. Although some researchers once thought they were our immediate ancestors in Europe, most now agree that Neandertals and modern humans most likely shared a common ancestor within the last 500,000 years, possibly in Africa." --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org
நியாண்டர்தல் மனிதர்கள் பரிணாமப்படி நமக்கு நெருங்கிய உறவினர்களாக நம்பப்படுகின்றார்கள். அவர்கள் நம்முடைய immediate மூதாதையர் என்று சில ஆய்வாளர்களால் கருதப்பட்டிருந்தாலும், இப்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் நியாண்டர்தல் மனிதர்களும் தற்காலத்திய மனிதர்களும் பொதுவான மூதாதையர்களை கொண்டிருக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றனர் --- (Extract from the original quote of) The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org 

நியாண்டர்தல் மனிதர்களில் இருந்து நாம் வந்ததாக இந்த பதிவை படிக்கும் வரை நீங்கள் நினைத்திருந்தால் (Ape like creatures --> Neandertals --> Modern Humans) இன்றோடு அந்த நம்பிக்கையை புதைத்து விடுங்கள். நமக்கும் அவர்களுக்கும் பொதுவான மூதாதையராம் (Common Ancestor --> Neardertals & Common Ancestor --> Modern Humans). 

அது சரி, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக நியாண்டர்தல்களை காட்டி பரிணாமத்திற்கு இது ஆதாரம் என்று சந்தோஷப்பட்ட பரிணாம உலகத்திற்கு இந்த பலத்த அடி எப்படி ஏற்பட்டது?  

இதற்கு விடைக்காண நீங்கள் நியாண்டர்தல் குறித்த ஆய்வுகளை உற்று நோக்கினால் பரிணாமவியலாளர்களுக்கு அப்படி ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்பதை உணரலாம்.     

முதலில், யார் இவர்கள்?  

1829 ஆம் ஆண்டே நியாண்டர்தல் படிமங்கள் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகள் கற்கால மனிதர்களின் படிமங்களாக  அங்கீகரிக்கப்படவில்லை. பின்னர் 1856 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் தான் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களாக அங்கீகரிக்கப்பட்டன. இந்த படிமங்கள் நியாண்டர்தல்-1 என்று அழைக்கப்பட்டன. 

நியாண்டர்தல் மனிதன் - உருவகப்படம்  

1886 ஆம் ஆண்டு,  பெல்ஜியத்தில் கிட்டத்தட்ட முழுமையான இரண்டு நியாண்டர்தல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல நியாண்டர்தல் படிமங்கள் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தல்கள், சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர். அதாவது இந்த இனம் சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து விட்டது. எப்படி அழிந்தன?...பதிவின் இறுதியில் பார்ப்போம்.      

சரி, நியாண்டர்தல்களுக்கும் தற்காலத்திய மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? 

உடலளவில் வித்தியாசங்கள் உண்டு. நியாண்டர்தல்களின் உயரம் தற்காலத்திய மனிதனை விட சுமார் 5-6 இஞ்சுகள் குறைவு. இதையே 20,000 ஆண்டுகள் முந்தைய ஐரோப்பிய மனிதர்களோடு ஒப்பிட்டால் நியாண்டர்தல்களும் அந்த மனிதர்களும் ஓரே மாதிரியான உயரம்தான். நியாண்டர்தல்கள் திடமான உடலமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள்.  அவர்களுடைய மண்டை ஓடு பெரியதாகவும், மூளை தற்காலத்திய மனிதர்களோடு ஒப்பிடுகையில் சற்று பெரிதாகவும் இருந்துள்ளது.

மனிதர்களுக்கு முன் வந்தவர்களா நியாண்டர்தல்கள் ? 

இல்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித படிமங்கள் காணக்கிடைக்கின்றன. நியாண்டர்தல்களோ சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மறைந்திருக்கின்றனர். ஆக, ஒரே காலக்கட்டத்தில் இருவரும் வாழ்ந்திருக்கின்றனர்.

"A few years ago, they [Neandertals] were thought to be ancestral to anatomically modern humans, but now we know that modern humans appeared at least 100,000 years ago, much before the disappearance of the Neandertals. Moreover, in caves in the Middle East, fossils of modern humans have been found dated 120,000-100,000 years ago, as well as Neandertals dated at 60,000 and 70,000 years ago, followed again by modern humans dated at 40,000 years ago. It is unclear whether the two forms repeatedly replaced one another by migration from other regions, or whether they coexisted in some areas " --- Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006.
சில வருடங்களுக்கு முன்னால், அவர்கள் (நியாண்டர்தல்) உடல்ரீதியாக தற்காலத்திய மனிதர்களுக்கு முன்னோர்களாக கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது நமக்கு கிடைக்கும் தகவல்படி, தற்காலத்திய மனிதர்கள் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கின்றார்கள், அதாவது நியாண்டர்தல்கள் மறைவதற்கு பல காலங்களுக்கு முன்னராகவே. 
அதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் உள்ள குகைகளில், 120,000-100,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும், 60,000-70,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தல்களின் படிமங்களும், பிறகு மறுபடியும் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வகைகளும் மாறி மாறி குடியேறினார்களா அல்லது இருவரும் சேர்ந்தே வாழ்ந்தார்களா என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது --- (Extract of the original quote of) Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006. 

நியாண்டர்தல்கள், மனிதர்களுக்கு முன்வந்தவர்கள் என்றால் அல்லது குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் என்றால், எப்படி ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க முடியும்?....இது முதல் அதிர்ச்சி....

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருந்தால் மிக சமீபத்திய ஆய்வு முடிவுகள் இன்னும் வியப்பை தரும். ஆய்வாளர்களுக்கோ இது ஒரு மிகப்பெரிய ஷாக். என்னவென்றால், மனிதர்களும் நியாண்டர்தல்களும் ஒன்றோடு கலந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கவேண்டும் என்பதுதான் அது.



தற்காலத்திய மனிதர்களின் மரபணுக்களில் (ஆப்ரிக்கர்கள் தவிர) 1-4% நியாண்டர்தல்களிடமிருந்து வந்துள்ளவாம். அதாவது நியாண்டர்தல்கள் அழிந்து விடவில்லை, அவர்கள் இன்னும் நம்மில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்களாம்.

"Researchers sequencing Neandertal DNA have concluded that between 1 and 4 percent of the DNA of people today who live outside Africa came from Neandertals, the result of interbreeding between Neandertals and early modern humans" --- Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.   
நியாண்டர்தல் DNA வை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், ஆப்ரிக்காவிற்கு வெளியே வாழும் மனிதர்களிடம் 1-4% நியாண்டர்தல் DNAக்கள் இருப்பதாக முடிவு செய்திருக்கின்றனர். இது நியாண்டர்தல்களும் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களும் இணைந்ததால் ஏற்பட்டது --- (Extract from the original quote of) Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.         

அது ஏன் தற்காலத்திய ஆப்ரிக்கர்களிடம் நியாண்டர்தல்களின் மரபணுக்கள் காணப்படவில்லை?...இதற்கு எப்படி விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், தற்காலத்திய மனிதர்கள் ஆப்ரிக்காவில் தோன்றியவர்களாம், நியாண்டர்தல்களோ ஐரோப்பாவில் தோன்றி ஆசியா வரை சுற்றியவர்களாம். மனிதர்கள் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி மத்திய கிழக்கிற்கு குடியேறிய போது அங்கிருந்த நியாண்டர்களுடன் கலந்து விட்டார்களாம். அதனால் தான் ஐரோப்பியர்கள், ஆசியர்களது மரபணுக்களில் நியாண்டர்தல்கள் காணப்படுகின்றார்களாம். அதே சமயம் ஆப்ரிக்கர்களிடம் இவர்கள் காணப்படவில்லையாம்.

ஒரு நிமிஷம்........இந்த இருவரும் சேர்ந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கின்றார்கள் என்றால், பிறகு எப்படி நியாண்டர்தல்களை வேறு ஒரு உயிரினமாக பார்க்க முடியும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை மனித இனங்களில் ஒன்றாகத் தானே பார்க்கவேண்டும்?....

ஆம், அறிவியலாளர்கள் இப்போது இந்த கருத்தையும் ஆதரிக்க துவங்கியிருக்கின்றார்கள்.

மரபணு சோதனைகள் ஆரம்ப காலகட்டங்களில் இருப்பதால் பொறுத்திருந்து தான் இவை இன்னும் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

ஆக, குரங்கு போன்ற உயிரினத்திருக்கும் நமக்கும் இடைப்பட்டவர்கள் நியாண்டர்தல்கள் என்ற கூற்றும் தவறு, அதுபோலவே நியாண்டர்தல்கள் மனிதர்கள் அல்ல என்ற கூற்றும் தவறு....

நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களா? 

இதுவும் ரொம்ப காலமாக நம்பப்பட்டு வந்த ஒன்று. அதாவது மனிதர்கள் அறிவில் சிறந்தவர்களாம், நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாம். அதனால் தான் அவர்கள் அழிந்துவிட்டார்களாம்.

முதலில் அறிவில் குறைந்தவர்கள் (நியாண்டர்தல்), பிறகு அறிவில் சிறந்தவர்கள் (தற்காலத்திய மனிதர்கள்) என்று வந்திருப்பதால் இது பரிணாமத்திற்கு ஆதாரம் என்று காட்டினார்கள் பரிணாமவியலாளர்கள். அந்தோ பரிதாபம், அந்த ஆதாரமும் சுக்கு நூறாக நொறுங்கியிருக்கின்றது.

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், நியாண்டர்தல்களுக்கு பின்னர் வந்த மனிதர்கள் உருவாக்கிய கருவிகள் நியாண்டர்தல்கள் உருவாக்கிய கருவிகளை விட சிறந்தவை இல்லையாம். இது பரிணாமவியலாளர்களுக்கு மற்றொரு அடி.

"Research by UK and American scientists has struck another blow to the theory that Neanderthals (Homo neanderthalensis) became extinct because they were less intelligent than our ancestors (Homo sapiens). The research team has shown that early stone tool technologies developed by our species, Homo sapiens, were no more efficient than those used by Neanderthals" --- New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008. 
நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாக இருந்ததால் மறைந்து விட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு மற்றொரு அடியாக விழுந்துள்ளது பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு. மனிதர்கள் உபயோகப்படுத்திய ஆரம்ப கால கருவி யுக்திகள், நியாண்டர்தல்கள் உபயோகப்படுத்திய யுக்திகளோடு ஒப்பிடும் போது சிறந்ததாக இல்லை என்று இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது --- (Extract from the original quote of) New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.   

இது மட்டுமா, இவர்கள் உடல் ஆபரணங்களை செய்திருக்கின்றார்கள், இறந்தவர்களை புதைத்திருக்கின்றார்கள், தாங்கள் வாழும் இடங்களை ஒழுங்குபடுத்திருக்கின்றார்கள் என்று பல...

சுருக்கமாக சொல்லுவதென்றால் இவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நியாண்டர்தல்கள் பேசினார்களா? 

இது போன்ற கேள்விகளுக்கு படிம ஆதாரங்கள் மூலம் விடை கூறுவது கடினம். ஆனால், அவர்கள் பேசுவதற்குண்டான தகுதிகளை கொண்டிருந்தார்கள் என்கின்றன ஆய்வுகள். எப்படி?, மனிதர்கள் பேசுகின்றார்கள் என்றால் அதற்கு காரணமான மரபணுக்களில் FOXP2 என்ற மரபணு முக்கியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களின் இந்த மரபணுவில் உள்ள வேறுபாடுகள் அப்படியே நியாண்டர்தல் மனிதர்களிடமும் உள்ளனவாம்.

"Neandertals and modern humans share the same variant of the language gene FOXP2" --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org

அதனால் அவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"Genetic studies hint Neanderthals were equipped for language" --- Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177
மரபணு ஆய்வுகள் நியாண்டர்தல்கள் பேசுவதற்குரிய தகுதியை பெற்றிருந்ததாக தெரிவிக்கின்றன --- (Extract from the original quote of) Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177 

சரி, எப்படி இவர்கள் மறைந்தார்கள்?

இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. பல்வேறு யூகங்கள் உள்ளன. மற்றொரு மனித இனத்தால் இவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், மற்ற மனிதர்களோடு இணைந்ததால் காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்பது போன்ற யூகங்கள்...

ஆக, நியாண்டர்தல் மனிதர்கள்,

  • தற்காலத்திய மனிதர்களோடு ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் நமக்கு முன்வந்தவர்களோ அல்லது குரங்கிற்கும் நமக்கும் இடைபட்டவர்களோ கிடையாது.
  • அவர்கள் மனித இனம் தான். முன்னர் எண்ணப்பட்டது போல அவர்கள் ape-like கிடையாது...
  • அறிவில் சிறந்து விளங்கியிருக்கின்றாகள்.
  • பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள்.

இனியும் உங்களிடம் யாரும் வந்து நியாண்டர்தல்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றோ, நமக்கும் குரங்கு போன்ற உயிரினத்திற்கும் இடைப்பட்டவர்கள் என்றோ, அவர்கள் அறிவுத்திறனில் நம்மை விட குறைந்தவர்கள் என்றோ கூறினால், ஆய்வு முடிவுகளை எடுத்துக் காட்டி விளக்கம் கொடுங்கள். அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக எடுத்து கூறுங்கள்.

நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் இதையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து தற்காலத்திய மனிதன் வந்ததாக படம் போட்டு காண்பிப்பார்களே...அதுவெல்லாம் சுத்த non-s****.... 

இன்ஷா அல்லாஹ் இது பற்றி எதிர்கால பதிவுகளில்... (மனித பரிணாம பதிவு வெளிவந்துவிட்டது. பார்க்க <<இங்கே>>)

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Pictures taken from:
Picture - 1: Designed by Aashiq Ahamed
Picture - 2: As appeared in Science Daily magazine dated 26th August 2008.
Picture - 3: As appeared in Max Planck Institute's website

My sincere thanks to: 
1. Max Planck Institute, Germany.
2. Science Magazine.
3. Science Daily.
4. Nature Magazine.
5. Scientific American.
6. Wikipedia.
7. New Scientist Magazine.

References: 
1. A Draft Sequence of the Neandertal Genome - Science 7 May 2010: Vol. 328. no. 5979, pp. 710 - 722, DOI: 10.1126/science.1188021.
2. The Neandertal Genome - Sciencemag.com.
3. New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.
4. In praise of… Neanderthal man - The Guardian, Wednesday 13 January 2010
5. Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.
6. Creationist Arguments: A Neandertal in Armor? - FAQs, talkorigins.org.
7. Neanderthals and Humans Likely Interbred - K. Kris Hirst, dated 6th May 2010, archaeology.about.com.
8. The Neandertal Genome Project - The Max Planck Institute for Evolutionary Anthropology. www.eva.mpg.de.
9. Neanderthal genome reveals interbreeding with humans - Ewen Callaway, New Scientist, 6th May 2010.
10. Neandertals, Humans Share Key Changes To 'Language Gene' - Science Daily, 21st October 2007.
11. Neandertals have the same mutations in FOXP2, the language gene, as modern humans - 18th October 2007, anthropology.net.
12. Neanderthal 'make-up' containers discovered - BBC, 9th January 2010.
13. Welcome to the family, Homo sapiens neanderthalensis - New Scientist, Magazine issue 2760, 13th May 2010.
14. Neanderthals, Francisco Ayala, FOXP2 gene - Wikipedia.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ