Showing posts with label எழுத்து விவாதங்கள். Show all posts
Showing posts with label எழுத்து விவாதங்கள். Show all posts

Friday, April 2, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - II



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

இந்த தலைப்பில் முன்னர் வெளியான பதிவின் தொடர்ச்சி...


2. சென்ற பதிவு நாத்திகர்களுக்கானது என்றால், இந்த பதிவு இஸ்லாத்திற்க்கெதிராக வைக்கப்படும் வாதங்களை எதிர்க்கொள்வது பற்றியது.  

எழுத்து விவாதங்களில் நம் முன்னால் வைக்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் பெரிய அளவில் சிரமம் இருக்காதென்றாலும் (அல்ஹம்துலில்லாஹ்) பல சமயங்களில் நமக்கெல்லாம் தோன்றுவது, 

சரி, இதையெல்லாம் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்? 

இணைய தளங்களில் அதிகம் உலா வருபவர் என்றால் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இவர்கள் எங்கிருந்து இந்த கேள்விகளை கொண்டு வருகிறார்கள் என்று... 

பெரும்பாலான கேள்விகள் கீழ்காணும் ஆங்கில எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்ட தளங்களாக தான் இருக்கும்,

  • a
  • j
  • f
  • t
  • d        

இந்த தளங்களில் வெளியாகும் தகவல்கள் பல, மனோத்தத்துவ ரீதியாக பாதிப்பை உண்டாக்குவதையே குறிக்கோளாய் கொண்டவை. உள்ளே உள்ள விஷயங்கள் என்றால் ஒன்றும் பெரிதாக இருக்காது. 

உதாரணத்துக்கு, ஒரு பதிவு துவங்கும் போதே இப்படி துவங்கும், "நிச்சயம் இந்த பதிவை முஸ்லிம்கள் படித்தால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள்" 

இதை படித்த உடனே சில முஸ்லிம்களுக்கு மனதில் ஒரு சிறு சலசலப்பு உண்டாகிவிடும். பின்னர் அவர்கள் அந்த பதிவை படிக்கும் போது, ஒரு வேலை இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகிவிடும். 

வேறு சில பதிவுகள் இன்னும் தமாசாக இருக்கும், அதாவது, "இந்த பதிவிற்கு முஸ்லிம்களால் பதில் சொல்ல முடியாது அல்லது பதில் இருக்காது" என்று தொடங்குவார்கள் அல்லது முடிப்பார்கள். 

இது போன்ற பதிவுகளிலும் விஷயம் பெரிதாக இருக்காது, முன்னரே கேட்கப்பட்ட கேள்விகளாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் ஒன்று, இந்த தளங்கள் முஸ்லிம்களுக்கு பெரும் உதவி புரிகின்றன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் இவற்றுக்கு பதில் தேடுவதன் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம், அவர்களுடைய உண்மை முகங்களும் தெரிய வரும், நம் ஈமானும் அதிகரிக்கும்...அல்ஹம்துலில்லாஹ்...

ஆக, நான் கூறிக்கொள்ள விரும்புவதல்லாம், இஸ்லாத்திற்கெதிராக சிலர் கொண்டுவரும் விமர்சனங்களை முடிந்தவரை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டாம் என்பதுதான். 

இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும், நான் பார்த்தவரையில்     இஸ்லாத்திற்க்கெதிரான வாதங்களுக்கு பதிலளிக்கும் பெரும்பாலான நம் சகோதரர்கள் மிகுந்த விவேகத்துடன் வாதங்களை கையாள்கிறார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.     

நான் சொன்ன இரண்டாவது சிறு உதவி இங்கேதான். நான் மேலே சொன்ன தளங்களின் வாதங்களை நம் சகோதரர்கள் எப்படி கையாண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டுமானால் கீழ்க்காணும் தளங்களை பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்திற்க்கெதிரான பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் இந்த தளங்களில் பெறலாம்...இன்ஷா அல்லாஹ்...

  • http://www.muslim-responses.com/answering_the_critics
  • http://www.call-to-monotheism.com/refuting_anti_islamic_websites
  • http://www.bismikaallahuma.org/polemical-rebuttals/
  • http://www.time4truth.com/refutations.htm
  • http://answering-christianity.org/ac.htm
  • thedeenshow.com

இவை எனக்கு தெரிந்த, குறித்து வைத்த தளங்கள். இதுபோல ஏராளமான தளங்கள் இருப்பதாகவே தெரிகிறது. உங்களுக்கு இதுபோன்ற தளங்கள் தெரியுமானால் கமெண்ட் பகுதியில் தெரியப்படுத்தலாம். உபயோகமாக இருக்கும்..இன்ஷா அல்லாஹ்...
 .



சமீபகாலமாக, தமிழ் வலையுலகில் சிலர்,  Ibn Warraq அவர்களுடைய "Why I am not a Muslim (1995)" என்ற புத்தகத்தை பயன்படுத்தி எழுதி வருகின்றனர். இது ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் அந்த புத்தகத்தின் தரம் அப்படி. எது எப்படியிருந்தாலும் சரி, அந்த புத்தகத்தின் அபத்தமான வாதங்களை அம்பலப்படுத்த பல இஸ்லாமிய தளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு...

  • http://www.islamawareness.net/FAQ/warraq1a.html

நான் சமீபத்தில் பார்த்த ஒரு தளம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தளத்தை நடத்துபவர்கள் தங்களை அடையாள படுத்திக்கொள்ள விரும்பவில்லை, தாங்கள் ஆணா பெண்ணா என்பது உட்பட...அவர்களுக்கு பெயர் உண்டு, ஆனால் அந்த பெயரை வைத்து நாம் எதையும் யூகிக்க முடியாது. 

அந்த தளம்...http://www.loonwatch.com/ 

சரி அவர்கள் யாராயிருந்தால் நமக்கென்ன? அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் என்ன என்பதுதான் முக்கியம். 

அவர்களுடைய நோக்கம், இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதில் சொல்லுவது. 

இஸ்லாத்திற்கெதிராக செயல்பட்டு பிரபலமாக உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று ஒரு பகுதி ஒதுக்கி, அவர்களது கருத்துக்களுக்கு பதில் கூறுவது. 



நான் மேல குறிப்பிட்ட இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களின் தலையாய குரு யாரென்றால், ராபர்ட் ஸ்பென்சர் (Robert Spencer) என்பவர்தான். இவர் தான் 'J' என்று தொடங்கும் தளத்தை நடத்துபவர், அதுபட்டுமல்லாமல் இவரது உதவியை/வாதங்களை மற்ற தளங்களும் நிறையவே பயன்படுத்தி கொள்ளும்.

இவரது நூல்களை/கருத்துக்களை அம்பலப்படுத்தி இவரை சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது இந்த தளம். அதுமட்டுமல்லாமல், ராபர்ட் ஸ்பென்சரை எழுத்து விவாதத்துக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.                

நான் மேல குறிப்பிட்டுள்ள முஸ்லிம்களுடைய தளங்கள் ராபர்ட் ஸ்பென்சருடைய வாதங்களுக்கு தெள்ளத்தெளிவாக பதிலளித்து வந்தாலும், இவர்கள் செய்வது சிறிது வித்தியாசமானது. ஏனென்றால் இவர்களுடைய வாதங்களில் நகைச்சுவை ததும்பும். 

ஆக, உங்கள் முன் யாராவது ராபர்ட் ஸ்பென்சருடைய புத்தகங்களை/கருத்துக்களை முன்வைத்தால் நீங்கள் இவர்களுடைய தளத்தையும் ஆவணச்செய்யலாம்.        

இந்த தளத்தில் நான் மிகவும் ரசித்த இரு பதிவுகள்... 
  • All terrorists are Muslims...except the 94% that aren't...
  • Fathima Bary needs to read her Bible...  

நிச்சயமாக உங்களிடம் நீங்கள் கேள்விப்படாத வித்தியாசமான ஒரு கருத்தை நம் முஸ்லிமல்லாத சில சகோதரர்கள் முன்வைத்தால் அவை பெரும்பாலும் இந்த Anti-Islam தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். அந்த கருத்துக்களுக்கு பதிலளிக்க நாம் மேலே பார்த்த இஸ்லாமிய தளங்கள் உதவியாய் இருக்கும், இன்ஷா அல்லாஹ்... 

ஆக, இந்த பதிவின் மூலமாக நான் சொல்ல வருவதெல்லாம் இதுதான், 

இஸ்லாத்திற்கெதிராக கேள்விகள் வைக்கப்படும்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மால் சுலபமாக பதிலளித்து விட முடியும் (இன்ஷா அல்லாஹ்). அப்படி அதில் சிரமமிருந்தால் நாம் மேலே பார்த்த தளங்களை நீங்கள் பரிசீலனை செய்யலாம் என்பதுதான். 

என்னதான் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் அதிகளவில் வைக்கப்பட்டாலும், இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. இஸ்லாத்திற்க்கெதிரான அவர்களது திட்டங்கள்/சூழ்ச்சிகள் பலிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்வதில் மிகச் சிறந்தவன் ஆவான் --- Qur'an 3:54      
 And they planned and Allah too planned, and Allah is the best of planners --- Qur'an 3:54

குரானின் இந்த வசனம் தான் நினைவுக்கு வருகிறது சிலரை நினைத்தால்...

முடிப்பதற்கு முன் ஒரு சிறு யோசனை. இது விதண்டாவாதம் புரியும் சில முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியது. 

நான் நினைப்பதுண்டு, அவர்கள் மட்டும்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? 

நம்மிடம் கேள்வி கேட்கும் பெரும்பாலானோர், நாம் தவறான கொள்கையில் இருப்பதாகவும், அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதாகவும் நினைத்துதானே நம்மிடம் இஸ்லாத்தை பற்றி கேட்கின்றனர், வாதம் புரிகின்றனர்?

நம்முடைய நிலையும் அதுதானே?, அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதாக தானே நாமும் நினைக்கிறோம்?

ஆக,விவாதம் என்று வரும்போது, நம் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை அவர்களும், அவர்கள் கொள்கையைப் பற்றி ஒரு கேள்வியை நாமும் ஏன் கேட்கக்கூடாது? அவர்கள் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாகவும் இருக்கட்டும்,

  • மற்ற மதங்களை சேர்ந்தவர்களாக,
  • நாத்திகர்களாக,
  • இறைவன் இருக்கிறான், ஆனால் மதங்களை/மார்க்கங்களை நம்ப மாட்டோம் என்று சொல்லுபவர்களாக,

என்று யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு கேள்வி நீங்கள், ஒரு கேள்வி நான் என்று ஏன் உடன்பாடு வைத்துக்கொள்ள கூடாது?

அவர்களிடம் பதிலில்லையென்றால் அவர்களை புண்படுத்தாமல் அடுத்த கேள்விக்கு சென்று விட வேண்டியதுதான்.

இது இஸ்லாத்தை பற்றி உண்மையிலேயே அறிந்து கொள்ள வேண்டும் என்று வருபவர்களுக்கு பொருந்தாது. விதண்டாவாதம் புரிபவர்களுக்கு மட்டுமே.  

இது என் தனிப்பட்ட கருத்து. மாற்றுக் கருத்து உடையவர்கள் தங்கள் கருத்துக்களை தயவு கூர்ந்து தெரிவிக்கவும்...


இறைவன் நம் எல்லோரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;
என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும்,நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? - Qur'an 2:170        

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ   







Friday, March 26, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


             நம்மில் பலரும் சில இணையதளங்களில் வரும் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளை எதிர்கொண்டு எழுத்து விவாதங்களில் பங்கேற்றிருப்போம். எழுத்து விவாதங்கள் என்பது, பெரும்பாலான நேரங்களில் திசை திரும்பிதான் போகின்றன. எழுதும் நமக்கும் ஒருவித சோர்வைத்தான் தருகின்றன. விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனென்றால் நம்மிடம் பதிலில்லை என்று நினைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் இந்த விவாதங்கள் சரியான முறையில் நடந்தால் நமக்கு நிறைய பலனுள்ளது. சமீப காலங்களாக எழுத்து விவாதங்கள் நம் சகோதரத்துவத்தை பறைச்சாற்றி வருகின்றன. ஒற்றுமையை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த விவாதங்களை முன்வைப்போரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், நிறைய சகோதரர்களை இப்போதெல்லாம் விவாதங்களில் காணமுடிகிறது. இது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே... 

இந்த பதிவுகள் எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் நம் சகோதரர்களுக்கு ஒரு சிறு உதவி.

இந்த பதிவுகளில் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவும் முழுமையாக அல்ல, சின்ன அடிப்படையை மட்டும்தான்...

1. நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...       

நமக்கெல்லாம் தெரிந்ததுதான், நாத்திகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதும் உதவி புரிவது பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான். அது ரீலா இல்லை ரியலா என்ற விவாதம் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெருமளவு மக்களை திசைதிரும்ப வைத்திருக்கிறது இந்த நிரூபிக்க படாத தத்துவம். பரிணாம வளர்ச்சி கோட்பாடு (அல்லது தத்துவம்) இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.

நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.

மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.

  • Micro or Horizontal Evolution
  • Macro or Vertical Evolution

இந்த Macro பரிணாம வளர்ச்சிதான் விவகாரமே. இதிலிருந்து அது வந்தது, அதிலிருந்து மற்றொன்று வந்தது, (இப்போதைக்கு) கடைசியாய் நாம் வந்தோம் என்று சொல்லுகிற இந்த macro evolution தான் பிரச்சனையே. நடுநிலையோடு சிந்திக்கிற எவரும் இந்த macro பரிணாம கொள்கையால் குழம்பி போவது உறுதி...

"Biological evolution is a change in the genetic characteristics of a population over time. That this happens is a fact. Biological evolution also refers to the common descent of living organisms from shared ancestors. The evidence for historical evolution -- genetic, fossil, anatomical, etc. -- is so overwhelming that it is also considered a fact. The theory of evolution describes the mechanisms that cause evolution. So evolution is both a fact and a theory"  --- Talk Origins Site   

நான் மேலே குறிப்பிட்டுள்ள வாசகம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிக்கும் பிரபல தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களாலும் Macro பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றாலே இந்த Macro Evolution தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதனால் தான் வெறுமனே பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றே சொல்கின்றனர்.

நான் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி இங்கு விளக்க போவதில்லை. ஆனால் நான் கூற விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நாத்திகரை (அல்லது வேறு யாரையும்) விவாதத்தில் சந்தித்தால், அவருக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் நம்பிக்கை இருந்தால், அவரை கண்ணியத்தோடு அணுகி விளக்கம் கேளுங்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று?

மற்றொன்று, எல்லா நாத்திகர்களும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டவர்கள் என்று நாம் நினைத்து விடக் கூடாது. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளாத சில பேர் இருக்கிறார்கள்...
  
எப்படி ஒருவருக்கு பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை இருக்கிறதா என்று அறிவது? 

சுலபம், நமக்கு தெரியாததுமல்ல, நாம் எப்படி இந்த உலகிற்கு வந்திருப்போம் என்ற ஒரே ஒரு கேள்வியை கேட்டால் போதும்....

அதற்கு அவர் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விளக்கமாக கொடுத்தால் அவர்தான் நாம் எதிர்பார்க்கும் சகோதரர். 

அவரிடம் ஆரோக்கியமான முறையில் விவாதியுங்கள். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அபத்தங்களை எடுத்துக் கூறுங்கள். 

அவர்கள்,தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கு வேறெந்த காரணத்தை வேண்டுமென்றாலும்  கூறட்டும், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மட்டும் கூறக்கூடாது என்ற அளவில் விவாதங்கள் இருக்கவேண்டும். 

"சரிப்பா, நான் எப்படியோ வந்துட்டேன்" என்று சொல்லி தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கான காரணங்களை தேடி ஆராயட்டும், பரிணாம வளர்ச்சி என்ற படுத்து விட்ட கோட்பாட்டை மட்டும் உதவிக்கு கொண்டு வரக்கூடாது.     

இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலோட்டமாக அல்ல, ஆழமாக...   

பரிணாம வளர்ச்சியை பற்றி அறிய விரும்புகிறவர்கள், பரிணாம வளர்ச்சி ஆதரவு மற்றும் எதிர்ப்பு தளங்களை பார்க்கலாம்.

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் இரு முக்கிய தூதர்கள் என்றால், அன்று டார்வின் இன்று ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins). 



டார்வினை பற்றி பேச தேவையில்லை, அவரே அவரது புத்தகத்தில் தன்னால் சிலவற்றை தற்போது நிரூபிக்க முடியாதென்றும், எதிர்காலத்தில் நிரூபிக்க படலாம் என்றும் கூறிவிட்டார். 

இப்போது நம்முடைய கவனமெல்லாம், தற்காலத்திய பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் காவலர் ரிச்சர்ட் டாகின்ஸ் பற்றித்தான் இருக்கவேண்டும். டாகின்ஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் விலங்கியல் துறையின் பேராசிரியராய் இருந்தவர். 

இவர் எழுதி பரபரப்பாய் விற்பனையான புத்தகம் "The God Delusion". இதில் கடவுள் ஏன் இல்லை என்று விளக்குகிறார் டாகின்ஸ். அதையாவது  இவர் தெளிவாக சொன்னாரா என்றால்...இல்லை. குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது...




உதாரணத்துக்கு....

"God almost certainly does not exist" --- Richard Dawkins in his book "The God Delusion", Page No:158 

"The God Delusion" என்பதற்கு பதிலாக "The Dawkins Delusion" என்று வைத்திருக்கலாம், பொருத்தமாக இருந்திருக்கும்.

நீங்கள் விவாதங்களில் சிலர் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம். 

டாகின்ஸ்சுடைய இந்த புத்தகம் முஸ்லிம்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மற்றவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. 

இந்த புத்தகத்தில் பரிணாம வளர்ச்சியையும் வைத்துதான் கடவுள் இல்லை என்று வாதிடுகிறார் டாகின்ஸ். 

நான் மேலே சொன்ன ஒரு சிறு உதவி இங்கேதான். நீங்கள் உங்கள் விவாதங்களில் டாகின்ஸ்சை பற்றியோ அல்லது அவரது இந்த புத்தகத்தை பற்றியோ அல்லது பரிமாண வளர்ச்சி பற்றியோ உங்களிடம் கேள்விகள் வைக்கப்படுமானால் நீங்கள் நான் இப்போது குறிப்பிட போகும் இரு நபர்களது விளக்கங்களை பரிசீலனை செய்யலாம். 

உலகளவில் முஸ்லிம்கள் பல நாத்திகர்களுடன் விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் எனக்கு தெரிந்த வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் Shabir Ally, Adam Deen மற்றும் Hamza Andreas Tzortzis ஆவர். 

இவர்களில் ஆடம் தீன் மற்றும் ஹம்சாவை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஆடம் மற்றும் ஹம்சா இருவரும் பல பிரபல நாத்திகவாதிகளுடன் நேரடி விவாதம் புரிந்தவர்கள்/புரிந்து கொண்டிருப்பவர்கள்.




டாகின்ஸ்சுடைய புத்தகத்தை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி வருபவர்கள். மேற்குலகில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து (குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன்) பல பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக இந்த புத்தகத்தை பற்றி பேசி, விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.                           



நீங்கள் இவர்களுடைய தளத்திலிருந்து இவர்களது விவாத வீடியோக்களையும், இவர்களது எழுத்து வாதங்களையும் பார்க்கலாம்/படிக்கலாம், பதிவிறக்கம் செய்யலாம்.


  1. hamzatzortzis.blogspot.com
  2. hamzatzortzis.com
  3. adamdeen.com

ஆக, உங்கள் முன் பரிணாம வளர்ச்சி மற்றும் டாகின்ஸ்சுடைய புத்தகத்தை யாராவது மேற்கோள் காட்டினால் (நிச்சயம் காட்டுவார்கள்) இந்த இரு சகோதரர்களின் வாதங்களையும் நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் கேட்பது புரிகிறது, ஏன் டாகின்சை நேரடி விவாதத்திற்கு அழைக்க கூடாது?

அழைக்காமலா இருந்திருப்பார்கள் நம் சகோதரர்கள்?, நாம் தான் இந்த விஷயத்தில் முன்னோடிகள் ஆயிற்றே (அல்ஹம்துலில்லாஹ்)... பிரிட்டனின் முன்னணி பத்திரிக்கையான டைம்ஸ் தினசரி மூலமும் சில முறை அழைப்பு விடுத்தாகி விட்டது... பயனில்லை...



டாகின்சை பற்றி பேசும்போது உமர் (ரலி) அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.

நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷிகளால் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது,   "இறைவா, உமர் அல்லது அபு ஜஹல் ஆகிய இருவரில் ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வைத்துவிடு" என்று துவா செய்தார்கள். இறைவன் உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தை ஏற்கவைத்து நாயகம் (ஸல்) அவர்களது கரத்தை வலுப்படுத்தினான். அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாத்தை எதிர்த்த பலரும் இஸ்லாமின்பால் தங்களை ஐக்கியப்படுத்தி வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம், டாகின்ஸ்சை இறைவன் இஸ்லாத்தில்பால் கொண்டுவர வேண்டுமென்று...                  

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இறைவன் நம் ஈமானை அதிகரிக்க செய்வானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ