Tuesday, December 18, 2012

பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 

ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 



வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை எதிர்க்கொண்டு அபாரமான வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்லாம். இந்த கணக்கெடுப்பு மூலமாக, பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல ஊடங்களும் இஸ்லாமின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே செய்திகளை வெளியிடுகின்றன. 

மேலே கூறியதை ஆழமாக புரிந்துக்கொள்ள சென்சஸ் தகவல்களுக்கு இப்போது செல்வோம். 

பிரிட்டனின் மொத்த மக்கட்தொகை 2001-2011 காலக்கட்டத்தில் 7% அதிகரித்து 5.6 கோடியாக உள்ளது. 

பிரிட்டனை பொருத்தமட்டில், அதிக மக்களால் பின்பற்றப்படும் மதம் என்றால் அது கிருத்துவம் தான். ஆனால் கிருத்துவத்துவர்களின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டு சென்சசை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. 2001-ல் 3.7 கோடியாக இருந்த கிருத்துவ மக்களின் எண்ணிக்கை தற்போது நாற்பது லட்சம் குறைந்து 3.3 கோடியாக உள்ளது.  சதவித கணக்கில் சொல்லப்போனால் 71%-மாக இருந்த கிருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது 59%-மாக குறைந்துள்ளது. 

இது ஆய்வாளர்களுக்கு பலத்த ஆச்சர்யத்தை தந்துள்ளது. 

அதே நேரம், நாத்திகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2001-ல் 14%-மாக இருந்த நாத்திகர்களின் எண்ணிக்கை இப்போது 25%-மாக உயர்ந்துள்ளது. ஆக, பிரிட்டன் மக்கட்தொகையில் நான்கில் ஒருவர் நாத்திகர். 

கிருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம், இப்போதெல்லாம் கலாச்சாரம் சார்ந்து தங்களை கிருத்துவர்கள் என்று அடையாளப்படுத்துவோர் குறைந்துள்ளதாக இங்கிலாந்து சர்ச் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

கிறித்துவத்தின் வீழ்ச்சிக்கும், நாத்திகத்தின் வளர்ச்சிக்கும் ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு பெரும் பங்கிருப்பதாக கருதப்படுகின்றது. 

இங்கு தான், ஆய்வாளர்களை வியப்பூட்டும் அந்த செய்தி வருகின்றது. ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்று பிரபல "டெய்லி மெயில்" ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏன் என்பதற்கு சென்சஸ் தகவல்களை பார்த்தால் விடை சொல்லிவிடலாம். 

பிரிட்டன் முஸ்லிம்களின் மக்கட்தொகை கடந்த பத்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2001-ல் 15 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 12 லட்சம் அதிகரித்து தற்போது 27 லட்சமாக உயர்ந்துள்ளது. சதவித கணக்கில் சொல்ல வேண்டுமானால் 2001-ல் 3%-மாக இருந்த முஸ்லிம்கள் இப்போது சுமார் 5% இருக்கின்றனர். இஸ்லாமின் இந்த வளர்ச்சி மற்ற எந்த மார்க்கத்தை விடவும் மிக அதிகமாகும். இதனாலேயே 'பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம்' என ஊடகங்கள் தலையங்கம் வெளியிடுகின்றன. 



இந்த செய்தி குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் பன்முகத்தன்மையில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 

முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பு மேலும் பல முக்கிய விசயங்களுக்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஈத் விடுமுறைகள் குறித்தும், ரமலான் மாதம் அணுகப்படும்விதம் குறித்தும், பள்ளிகளில் இஸ்லாம் போதிக்கப்படும்விதம் குறித்தும் சிந்திக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் இஸ்லாம்-கிருத்துவ மன்றத்தின் தலைவரான ஜூலியன் பான்ட். 

இப்படியான அபார வளர்ச்சிக்கு தெளிவான காரணங்கள் அலசப்படவில்லை. குடியேற்றம் (Immigration) ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது (பார்க்க <<இங்கே>> மற்றும் <<இங்கே>>). 

இப்போது இந்த பதிவின் தலைப்புக்கு வருவோம். 

சில மாதங்களுக்கு முன்பு தான், கடந்த பத்து ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரித்து, அமெரிக்காவில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்ற ஆய்வு முடிவுகள் வெளிவந்தன (பார்க்க <<இங்கே>>). 

இப்போது பிரிட்டனிலும் அதே நிலைமை உருவாகியிருப்பது குறித்து டெய்லி மெயில் ஊடகம் கருத்து தெரிவிக்கும் போது, 'பிரிட்டன் வாழ்க்கையில் இருந்து கிருத்துவத்தை வெளியேற்ற உற்சாகமாக செயல்படும் நாத்திகர்கள், தங்களின் இச்செயல் இஸ்லாமிற்கான காலியிடத்தை மட்டுமே உருவாக்கியுள்ளதை உணர்ந்துக்கொள்வார்கள். இஸ்லாம் என்னும் நம்பிக்கையை ரிச்சர்ட் டாகின்ஸ்சால் ஒன்றுமே செய்ய முடியவில்லை' என்று தெரிவித்துள்ளது. 

You struck the nail on head regarding dawkins dear DAILY MAIL. :-) :-)

நீங்க முஸ்லிமல்லாதவரா? குர்ஆனில் அப்படி என்ன தான் இருக்கின்றதென்று பார்க்க விருப்பமா? aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பை மின்னூல் வடிவில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Download census report at:
1. Office of National Statistics. link

Picture taken from:
1st Picture - Page 1 of census report 
2nd Picture - Page 7 of Census report 

References:
1. British Census: Islam Fastest-Growing Faith in England; Christians Drop to 59% of Population - CNS News, 12th Dec 2012. link
2. Christians could be minority by 2018, census analysis reveals - The guardian. 11th Dec 2012. link
3. Alien nation: The new census reveals a Britain that would be unrecognisable even to our grandparents - Daily Mail, 15th Dec 2012. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Tuesday, October 30, 2012

National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

ரலாற்றில் சில தருணங்கள் சொல்லப்படாதபோதும், அவை தெரியவரும்போதும், நமக்குள் அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் (நே.ஜி) ஊடகம் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ளப்போகும் இந்த செய்தியும் அந்த ரகத்தை சார்ந்ததே. 

விசயத்தை சில வரிகளில் சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால் அது இதுதான். டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்ததாக கூறி ஒரு ஆதாரத்தை நே.ஜி முன்வைக்க, அது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு, அறிவியல் ஊடகத்துறையில் நீங்காத கரையை நே.ஜி-க்கு ஏற்படுத்தி தந்துவிட்டது. 

நீங்கள் சில வரிகளில் பார்த்த இந்த விவகாரத்திற்கு பின்னால் ஆய்வாளர்கள் வெட்கி தலைகுனியும் அளவு அசிங்கமான உண்மைகளும், நம்பிக்கை சார்ந்த துரோகங்களும் ஒளிந்திருக்கின்றன. 

டிஸ்கவரி ஊடகம் இந்த பித்தலாட்டதிற்கு இரண்டாம் இடத்தை கொடுகின்றது (முதல் இடம் நம்ம பில்ட்டவுன் மனிதனிற்கு தான். பார்க்க <<இங்கே>>). இந்த முக்கிய செய்தியை சரியாக புரிந்துக்கொள்ள சில கிளைச்செய்திகளை நாம் நிச்சயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்வோம். வேறெந்த துறையையும் விட பரிணாமத்துறையில் பித்தலாட்டங்கள் பரவலாக காணப்பட காரணமென்ன? 

மேலே காணும் கேள்விக்கு விடையை கண்டுபிடிப்பது இந்த பதிவுக்கு அவசியமாகின்றது. ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக காலப்போக்கில் மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. டார்வின் காலத்திலிருந்தே இதற்கான ஆதாரங்களை அதன் நம்பிக்கையாளர்கள் தேடிக்கொண்டு தான் வருகின்றனர். தங்களின் இந்த நம்பிக்கையை நிரூபிக்குமாறு ஒரு படிமம் கிடைத்தால் அதனை பெரும் தொகை கொடுத்து வாங்கவும் இவர்கள் தயாராகவே இருக்கின்றனர். 

டைனாசர் படிமங்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடமாக சீனா திகழ்கின்றது. இங்குள்ள பல விவசாயிகள் நிலத்தை தோண்டி படிமங்கள் எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். தாங்கள் எடுக்கும் படிமங்களை இடைத்தரகர்களிடம் விற்றுவிடுவார்கள். இந்த இடைத்தரகர்கள் அவற்றை ஆய்வாளர்களுக்கோ அல்லது அருங்காட்சியகங்களுக்கோ விற்று விடுவார்கள். 

இங்கு தான் நீங்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய இடம் வருகின்றது. ஒரு படிமம் பரிணாம கொள்கையை உறுதிப்படுத்துவது போல இருந்தால் அதற்கு விலை அதிகம். இதனாலேயே விவசாயிகள் இப்படியான படிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிக விலைக்கு ஆசைப்பட்டு, பரிணாம கொள்கை எதிர்பார்ப்பது போன்று, படிமங்களில் மாற்றம் செய்து விற்றுவிடுகின்றனர். 

படிம வியாபாரத்தின் இத்தகைய இருண்ட பக்கத்தில் தான் நே.ஜி மாட்டிக்கொண்டது. காசுக்கு ஆசைப்பட்டு விவசாயிகள் தவறை செய்கின்றனர். ஆனால் பரிணாம ஆய்வாளர்களுக்கு என்ன வந்தது? அந்த படிமங்களை நன்கு ஆராய்ந்தாலே இவை பித்தலாட்டம் செய்யப்பட்டவை என்று புரிந்துவிடுமே? இத்தகைய கேள்விகள் உங்களுக்கு எழுவது புரிகின்றது. இதனை நோக்கி தான் இப்போது பயணிக்க போகின்றோம், பதிவின் மையமும் அதுதான். 

சிறிய அளவிலான டைனாசர்கள் படிப்படியாக உருமாறி பறவைகளாக பரிணமித்ததாக ஒரு கோட்பாடு உண்டு. (இதனை அறிந்த) ஒரு விவசாயி அதிக விலைக்கு ஆசைப்பட்டு, தான் கண்டெடுத்த பழங்கால பறவையின் படிமம் ஒன்றில் அதன் உடலுடன், டைனாசரின் வாலை கொண்ட மற்றொரு படிமத்தை ஒட்டவைத்து ஒரு இடைத்தரகரிடம் விற்றுவிட்டார். 

நுணுக்கமாக செய்யப்பட்ட இந்த பித்தலாட்டம், இயல்பாகவே, ஒரு அதிரடி ஷோவிற்கு ரெடியாகிவிட்டது. காரணம், பறவையின் உடலமைப்பும் டைனாசரின் உடலமைப்பும் ஒருசேர இருந்ததால் "டைனாசரில் இருந்து பறவைகள் வந்தது" என்ற யூகத்திற்கு ஆதாரமாக காட்டப்பட சிறந்த படிமம் இது. டைனாசர்களுக்கும் பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) இதனை காட்டி பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கலாம் (பின்னாளில் இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் என்று பெயர் சூட்டப்பட்டது)

ஆர்க்கியோராப்டர் படிமம் 

காட்சிகள் வேகமாக நகர ஆரம்பித்தன. விவசாயிடம் படிமத்தை பெற்ற தரகர் அதனை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு கடத்திவிட்டார் (ஜூன் 1998). அங்கு இந்த படிமம் எதிர்பார்த்தது போல சலசலப்பை உருவாக்க ஆரம்பித்தது. இந்த படிமம் ஆர்வத்தை தூண்ட, யுடா (Utah) பகுதியில் உள்ள டைனாசர் அருங்காட்சியகத்தின் தலைவரான ஸ்டீபன் ஜெர்கஸ் இதனை சுமார் 80,000 டாலர்களுக்கு வாங்கினார் (பிப்ரவரி 1999). ஒருவித பரவச உணர்வு அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. சும்மாவா, இந்த படிமம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் அதிர்வால் அவருக்கு கிடைக்கக்கூடிய புகழ் லேசுப்பட்டதா என்ன?

பிரபல தொல்லுயிரியலாளரும், துறைச்சார்ந்த வல்லுனருமான பில் க்யூரி-க்கு இதுக்குறித்து ஜெர்கஸ் தெரியப்படுத்த, க்யூரி நே.ஜி-வை தொடர்புக்கொண்டார். இதுக்குறித்த ஆய்வுகளை நே.ஜி முடுக்கிவிட்டது. மற்றொரு பிரபல தொல்லுயிரியலாளரான ஜூ ஜின்க்-கும் இந்த பணியில் இணைக்கப்பட்டார். 

ஆரம்ப கால ஆய்வுகளிலேயே இந்த படிமத்தில் பிரச்சனை இருப்பது க்யூரிக்கு தெரிந்தது. படிமத்தில் காணப்படும் வால், உடலுடன் ஒருசேர ஓட்டவில்லை. மேலும் இந்த படிமத்தின் பகுதிகள் ஒரே கற்பலகையை சேர்ந்தவை இல்லை என்பதும் தெளிவானது. படிமத்தை சி.டி ஸ்கேன் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர் க்யூரியும், ஜெர்கசும். இந்த ஆய்வை மேற்கொண்டவர் டாக்டர் டிமோத்தி ரோவ் என்னும் மற்றொரு வல்லுநர். வால் மற்றும் கால் பகுதிகள் ஒரே படிமத்தை சார்ந்தவை அல்ல என்பது சி.டி ஸ்கேன் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது. இந்த முழு படிமமும் பித்தலாட்டமாக இருக்கலாம் என்று கூறினார் ரோவ். 

சி.டி ஸ்கேன் செய்யப்பட்ட ஆர்க்கியோராப்டர் படிமம் (இடது)

எப்போது பிரச்சனைகள் இருப்பது தெளிவானதொ, அப்போதே இந்த படிமத்திற்கு end card போடப்போட்டிருக்க வேண்டும். இங்கேயே இந்த படிமம் தூக்கி எரியப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் நடந்ததோ வேறு. ஆசை யாரை தான் விட்டது? 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தை நிரூபிக்க  கிளம்பிய ஆய்வாளர்களின் கண்ணை நம்பிக்கை மறைத்தது. பின்னாளில் இதுக்குறித்து கருத்து தெரிவித்த நே.ஜி, படிமத்தில் இப்படியான பிரச்சனைகள் இருந்ததை இந்த ஆய்வாளர்கள் தங்கள் பார்வைக்கு கொண்டு வரவே இல்லை என்று கூறியது. அட்ரா சக்க....அட்ரா சக்க....

ஆக, நே.ஜி கூறுவதை உண்மை என்று நம்பினால், இந்த படிம பித்தலாட்டத்தை நன்கு அறிந்துக் கொண்டே இந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டு சென்றிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. விவசாயிகள் காசுக்கு ஆசைப்பட்டு உண்மையை மறைத்தனர். ஆய்வாளர்கள் என்று அறியப்பட்ட இவர்களோ தங்களின் நம்பிக்கையை நிரூபிக்க பித்தலாட்டதிற்கு ஒத்துப்போயினர். இந்த இரண்டு தவறுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது வேறுபாடு தெரிகின்றதா?

சரி, அது போகட்டும். அடுத்ததுக்கு வருவோம். அறிவியல் உலகை பொருத்தமட்டில் ஒரு கண்டுபிடிப்பு முழுமை பெற வேண்டுமென்றால் அது ஆய்விதழ்களில் (Peer review) தான் முதலில் வெளியிடப்பட வேண்டும். பிறகு தான் நே.ஜி போன்ற அறிவியல் ஊடங்களில் வெளிவரும். இந்த படிமம் குறித்த ஆய்வுகளும் அங்கீகாரத்திற்காக Nature மற்றும் Science போன்ற ஆய்விதழ்களுக்கு அனுப்பப்பட்டன. ஜெர்கஸ், க்யூரி, ரோவ், ஜூ ஆகியோரின் பெயரில் கட்டுரை சமர்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த படிமத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் குறைவாக இருப்பதாக கூறி ஆய்வுக்கட்டுரையை நிராகரித்துவிட்டது நேச்சர். Science இதழை பொறுத்தமட்டில், விலை அதிகம் பெறுவதற்காக இந்த படிமம் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவானதால் அந்த ஆய்விதழும் கட்டுரையை நிராகரித்துவிட்டது (இந்த விசயமும் நே.ஜிக்கு தெரிவிக்கப்படவில்லையாம்...ம்ம்ம்ம்) ஆக, இரண்டு ஆய்விதழ்களும் ஜெர்கஸ் குழுவினரின் கட்டுரையை நிராகரித்துவிட்டன. 

உங்கள் கண்டுபிடிப்பை இரண்டு ஆய்விதழ்கள் நிராகரித்துவிட்டன. அட்லீஸ்ட் இப்போதாவது இந்த படிமத்தை பிரசுரிப்பதில் இருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். நடந்ததா? இல்லையே. 

நே.ஜி, தன்னிச்சையாக படிமம் குறித்த தகவல்களை வெளியிட முடிவு செய்தது. அக்டோபர் 1999-இல் இந்த படிமம் பத்திரிக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நவம்பர் 1999-ஆம் ஆண்டு நே.ஜியின் அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. 'T.Rex எனப்படும் சிறிய அளவிலான டைனாசர்களுக்கு சிறகுகளா (Feathers for T.Rex?)' என்ற கேள்வி தான் கட்டுரையின் தலைப்பு. 

படுகலர்புல்லான அந்த கட்டுரையை எழுதிய கிறிஸ்டோபர் ஸ்லோன், நே.ஜியின் ஆர்ட் எடிட்டர் ஆவார். இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் (Archaeoraptor) என்று பெயர் சூட்டியிருந்தது நே.ஜி. பெரும் பரபரப்பை உண்டாக்கியது கட்டுரை. 

நே.ஜி பிரசுரித்த கட்டுரையின் முதல் பக்கம் 

டைனாசர்களுக்கும், பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) ஆர்க்கியோராப்டர் இருப்பதாகவும், எப்படி மனிதர்கள் பாலூட்டிகள் என்பது தெளிவோ அதுபோல 'டைனாசர்கள் தான் பறவைகள்' என்பது இதன் மூலமாக தெளிவாவதாக அந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. 

இந்த கட்டுரை வெளிவந்தது தான் தாமதம். பிரபல ஸ்மித்சோனியன் இயற்கை அருங்காட்சியகத்தின் பறவைகள் பிரிவு பாதுக்காப்பாளரான ஸ்டோர்ஸ் ஒல்சொன் (Storrs L. Olson) பொங்கி எழுந்துவிட்டார். பறவைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர் இவர். 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தில் மாற்றுக்கருத்து கொண்டவர். நே.ஜியை கடுமையாக விமர்சித்து தள்ளினார் ஒல்சொன். பரபரப்பான, பொருள் இல்லாத செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு நே.ஜி கீழே இறங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார் ஒல்சொன். 

மேலும், 'டைனாசர்களில் இருந்து பறவைகள்' என்ற யூகம் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் வெளியாக இருந்த மற்றொரு கட்டுரைக்காக தன்னை நே.ஜி கூப்பிட்டு கருத்து கேட்டதாகவும், மாற்றுக்கருத்தை அவர்கள் பரிசீலிக்க மறுத்ததில் இருந்து, எவ்வகையான ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் நே.ஜி தயாரில்லை என்பதை தான் புரிந்துக்கொண்டதாகவும் கூறினார். விமர்சனங்களுக்கு எல்லாம் கிரீடமாக, தங்கள் நம்பிக்கைக்கு பிரச்சாரம் செய்பவர்களாக சில ஆய்வாளர்கள் மாறிவிட்டதாக ஒரு காட்டு காட்டினார் ஒல்சொன்.

நம் தலைமுறையின் மிகப்பெரிய அறிவியல் பித்தலாட்டங்களில் ஒன்றாக இது மாறப்போவதாக கூறிய ஒல்சொனின் வார்த்தைகள் காலப்போக்கில் நிரூபனமாயின. ஆம், இந்த படிமத்தில் மேற்கொண்டு நடந்த ஆய்வுகள் இந்த படிமத்தின் உண்மைநிலையை உறுதிப்படுத்தின. நே.ஜி தலைகுனிந்தது. கூடவே இந்த தவறை செய்த ஆய்வாளர்களும் மன்னிப்பு கோரினர். 

அறிவியல் போர்வையில் நடந்த நாடகம் மிக சோகமான க்ளைமாக்ஸ்சுடன் முடிவுற்றது. 

தவறை ஆய்வாளர்கள் மீது சுமத்தி நே.ஜி தப்பிக்க நினைத்த போதிலும் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

  • ஒரு அறிவியல் கட்டுரையை ஆர்ட் எடிட்டர் எழுத அனுமதித்தது ஏன்?
  • மிக விரைவாக இப்படியான கட்டுரையை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?
  • இந்த படிமம் சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்று நே.ஜிக்கு தெரியும். விரைவில் இந்த படிமம் சீனாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், என்ன காரணத்தை கூறினாலும், இப்படியாக ஒரு கட்டுரை பிரசுரிப்பது ஒரு சட்டவிரோத செயலை ஊக்கிவிப்பது போலாகாதா?

இந்த பிரச்சனையில் செமையான காமெடிகளும் உண்டு. இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இதுக்குறித்து பரிணாம ஆதரவாளர்கள் கவலைப்பட்டிருப்பார்களோ இல்லையோ, படைப்புவாதிகள் குறித்து தான் அதிகம் கவலைப்பட்டார்கள். வேறென்ன, இதனை வைத்து படைப்புவாதிகள் எப்படியெல்லாம் ஆடப்போகின்றார்களோ என்ற பீலிங் தான். 

'இது பித்தலாட்டம் தான், ஆனா டைனாசரில் இருந்து பறவை வந்ததற்கு வேறு சில ஆதாரங்கள் உண்டு' என்பார்கள் பரிணாம ஆதரவாளர்கள். அட எப்பா, இப்ப டைனாசரில் இருந்து பறவை வந்ததா பிரச்சனை?, பித்தலாட்டம்னு தெரியுமுல்ல, தெரிந்தே அதனை மேற்கொண்டு தொடர வேண்டிய அவசியம் என்ன? அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. 

இன்னொரு சாராரோ, இந்த கட்டுரையை எழுதியது விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு ஆர்ட் எடிட்டர் மட்டுமே என்று சப்பை கட்டுகட்டுகின்றனர். ஆனால் சிறிதேனும் அவர்கள் யோசித்தால் இப்படியான வாதத்திற்கு வாய்ப்பிருக்காது. எழுதியது ஒரு ஆர்ட் எடிட்டர் என்றாலும், கட்டுரை என்ன தானாகவா வந்து குதித்துவிட்டது? நே.ஜியின் எடிட்டர் மற்றும் ஆய்வு குழு அனுமதித்தால் தானே பிரஸ்சுக்கே போக முடியும்?. மேலும், பித்தலாட்டம் என்று தெரிந்தும் இதனை தொடர்ந்த ஆய்வாளர்கள் தானே இந்த கட்டுரைக்கு பின்னால் இருந்தது? அவர்களின் கருத்துக்கள் தானே அந்த கட்டுரையை அலங்கரித்தது? எய்தவர்கள் இருக்க அம்பின் மீது குறை சொல்வது முட்டாள்தனம் இல்லையா? நல்ல காமெடி தான் போங்க...

இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்.  "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். 

மேலும், "இது பித்தலாட்டம் தான், ஆனா இத யாரு கண்டிபிடிச்சா, நாங்க தானே" என்ற அறிவுக்கு பொருந்தாத கேள்வியையும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். குழந்தையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது சாதனை அல்ல, வேதனை மட்டுமே. 

நம் அனைவரையும் இறைவன் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

References: 
1. Two open letters from Storrs Olson (LONG). link
2. All mixed up over birds and dinosaurs - 15th jan 2000, Science News. link
3. The 5 Greatest Palaeontology Hoaxes Of All Time - 7th June 2011, Science 2.0. link
4. Archoearaptor - wikipedia. link
5. Fake bird fossil highlights the problem of illegal trading - Nature 404, 696 (13 April 2000, doi:10.1038/35008237. link
6. Feathers fly over Chinese fossil bird's legality and authenticity - Nature 403, 689-690 (17 February 2000), doi:10.1038/35001723. link
7. Giant feathered dinosaur found in China was too big to fly - 5th April 2012, The Guardian. link
8. Top 10 scince hoaxes - Discovery Scince. link
9. Philip J. Currie -wikipedia. link
10. Expert: 80% fossils in Chinese museums are fakes - 13th jan 2011. China.org.cn. link
11. Timothy B. Rowe - The University of Texas at Austin. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Saturday, October 6, 2012

கூரி முஸ்லிம்கள்...



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

ஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்). 

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது சிறந்ததாய் அமையும்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.

டாக்டர் ஸ்டீவன்சன், ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரிடையே இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவா?

2006-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும், அதற்கு முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளையும் நாம் பார்த்தோமேயானால் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறியலாம். 1996 மற்றும் 2001 ஆகிய கணக்கெடுப்புகளில் 600-க்கும் சற்றே அதிகமான பழங்குடியின முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

அதேநேரம், 2006-ஆம் ஆண்டு, இந்த தொகை சுமார் 60% அதிகரித்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கட்தொகையை கணக்கிடும்போது இது பெரிய அளவு இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.

இந்த இஸ்லாமிய தழுவல்களுக்கு பின்னணி காரணங்களாக நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டரிந்தவை?

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இவர்கள் கூறும் பல காரணங்கள் சர்வதேசரீதியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் கூறும் காரணங்களை ஒத்தே இருக்கின்றன.

தங்கள் அனுபவங்கள் குறித்து கூறும்போது, உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்ற உணர்வு மகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தங்களை மிகச் சிறந்த முறையில் உபசரிப்பதாகவும் கூறுகின்றனர்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்டதின் மூலம், பல வழிகளில், காலனி ஆதிக்கத்திற்கு முன்பான தங்களின் பழங்குடியின அடையாளத்திற்கும், பாரம்பரியத்திற்கும் திரும்புவதாக இவர்கள் எண்ணுகின்றனர். தங்களின் பழங்குடியின சமூகத்திற்கும்,  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, இஸ்லாம் அனுமதிக்கும் சிலதாரமணம், பெற்றோர்களால்   முன்னேடுத்து செல்லப்படும் திருமணங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பொறுப்புகள் போன்றவற்றை கூறலாம்.

முஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.

மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கிருத்துவ மிஷனரிகளை எதிர்க்கொண்டு இஸ்லாமை தழுவுகின்றனர். இஸ்லாம் என்பது இவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல, இவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்டது.

இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்துவராத தன்மை என்று எதையேனும் நீங்கள் காண்கின்றீர்களா?

அப்படியான எதையும் நான் காணவில்லை. சிலர், தாங்கள் முஸ்லிமானதின் மூலம் தங்களின் பழங்குடியின அடையாளம் கலைந்துவிட்டதாக எண்ணுகின்றனர். இன்னும் சிலரோ, நான் மேலே கூறியது போல, இஸ்லாம் தங்களின் பழங்குடியின அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக நம்புகின்றனர். ஏனென்றால் நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை ஏற்றுக்கொள்கின்றது.

இவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்றால், இவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் மக்களும் இவர்களின் இஸ்லாமிய தழுவலை புரிந்துக்கொள்ளாதது தான். இவர்களின் மனமாற்றத்தை வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

மால்கம் எக்ஸ் குறித்து என்ன சொல்ல போகின்றீர்கள்? அவருடைய பாதிப்பு இங்கே தெரிகின்றதா?

நான் பேசியவர்களில் பலரும், குறிப்பாக சிறைவாசம் அனுபவித்தவர்கள், மால்கம் எக்ஸ் என்ற மனிதர் மீதே முதலில் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அவரின் சுயசரிதையை படித்திருக்கும் இவர்களில் சிலர், தாங்கள் கோபக்காரர்களாகவும், தங்களின் கடுமையான அணுகமுறை மூலம் சட்டரீதியான பிரச்சனைகளை உருவாக்கியதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சொந்த நாட்டிலேயே அன்னியர்களாக தாங்கள் நடத்தப்படுவதாக உணர்ந்த இவர்கள், வெள்ளையர்களுக்கு எதிரானவராக நினைத்து மால்கம் எக்ஸ்சை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். (மால்கம் எக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்)

ஆனால், (மால்கம் எக்ஸ் மூலமாக) இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள ஆரம்பித்தவுடன் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். தங்களை ஏற்றுக்கொண்ட, வெள்ளையர்களில் இருந்தும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று புரிந்துக்கொண்ட, தங்கள் இனத்திற்காக தங்களை தீர்மானிக்காத ஒரு நம்பிக்கையை இஸ்லாமில் அவர்கள் கண்டனர். இஸ்லாமை பொருத்தவரை உலக மக்கள் அனைவரும் சமமே.

ஆகையால், எப்போது அவர்கள் தங்களை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போதே அவர்களிடம் இருந்த தவறான பண்புகள் விலகிவிட்டன.

இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும், தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமை தழுவியதின் மூலம் சிலருக்கு அவர்களது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று கூறுகின்றீர்களா?

ஆம், எல்லாருக்குமே, பல வழிகளில்.

பழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர்.

இஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் உண்டு.

குடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை பொருத்தவரை, மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.

பெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன.

--- End of Interview ---

ம்ம்ம்....அனைத்து தரப்பு மக்களையும் இஸ்லாம் எளிதாகவே கவர்ந்துவிடுகின்றது. பிரபல ஆஸ்திரேலிய குத்துச்சண்டை நட்சத்திரமான ஆண்டனி முண்டேன் ஒரு பழங்குடியின முஸ்லிமே. இவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் இருந்து அதன் பாதிப்பு சமூகத்தில் உணரப்பட்டே வருகின்றது. தற்போது இவர்களிடையே 'கூரி முஸ்லிம் அசோசியேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பழங்குடியின முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் எதிர்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கே இப்படி என்றால், அமெரிக்காவிலோ, கடந்த பத்து ஆண்டுகளில், முஸ்லிம் மக்கள்தொகை சுமார் 16 லட்சம் அதிகரித்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான மக்கட்தொகை ஆய்வு இதனை கூறுகின்றது. இதன் மூலமாக அமெரிக்காவின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வடக்கு மற்றும் தெற்கின் பல பகுதிகளில், வரலாற்றில் முதன் முறையாக யூதர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர்.

"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன" என்று இந்த ஆய்வுக்குறித்து கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிடுகின்றார் கென்டகி பல்கலைகழகத்தின் துணை பேராசிரியரான டாக்டர் பக்பி. (இந்த ஆய்வுக்குறித்த விரிவான கட்டுரையை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் காண்போம்).

அதிரடியா சொன்னீங்க சார் :-)

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
டாக்டர் ஸ்டீவன்சன் அவர்களின் நேர்காணல் பதிவின் நீளம் கருதி முழுமையாக மொழிப்பெயர்க்கப்படவில்லை. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.

References:
1. Q&A: Indigenous and Muslim 'a growing trend' - ABS. 20th July 2012. link
2. A new faith for Kooris - The Sydney morning herald. 4th May 2007. link
3. Koori - wikipedia. link
4. Number of Muslims in the U.S. doubles since 9/11 - New York Daily News, 3rd May 2012. link
5. Anthony Mundine - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ







Wednesday, September 12, 2012

மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

========================================
Please Note:

மனித பரிணாமத்துறை என்பது மிகப்பெரியது. முடிந்தவரை இந்த பதிவை எளிதாக்கி, சுவாரசியமான நடையில் தரவே முயற்சித்துள்ளேன். இன்றைய காலத்திற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அவசியமான இக்கட்டுரையை சற்றே பொறுமையுடன் முழுமையாக படியுங்கள்.
========================================
1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம்.

நல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள்.

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து(?) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது.

மனித பரிணாமம் என்றவுடன் சட்டென நம் நினைவுக்கு வருவது குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக உருமாறும் அந்த படம் தான். யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அந்த படத்தை பிரபல ஓவியரான ருடால்ப் ஜலிங்கர் (Rudolph Zallinger), 1966-ஆம் ஆண்டு வெளியான "Early Man" என்ற புத்தகத்திற்காக வரைந்தார்.

Fig 1: "Early Man" புத்தகத்தில் இடம் பெற்ற ஜலிங்கர் வரைந்த படம்   

குரங்கிற்கும் மனிதனிற்கும் இடையே சுமார் 13 இடைநிலை உயிரினங்களை கொண்டிருந்தது அந்த படம். இந்த படமே இன்று சுருக்கப்பட்டும் வரையப்பட்டு வருகின்றது.

இப்படம் குறித்த சர்ச்சைகள் நீண்ட காலமாகவே புழக்கத்தில் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக இதுக்குறித்து கருத்து தெரிவித்த "நேச்சர்" ஆய்விதழின் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாமத்தை விளக்கும் இந்த வரிசையை முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டார்.

“We have all seen the canonical parade of apes, each one becoming more human. We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it. Ideas of what human evolution ought to have been like still colour our debates.” - Henry Gee, Palaeoanthropology: Craniums with clout, Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a.  
குரங்குகள் படிப்படியாக மனிதனாகும் அணிவகுப்பை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். பரிணாமத்தை விளக்கும் ஒரு படமாக இந்த வரிசை முட்டாள்தனமானது என்பது நமக்கு தெரியும். இருப்பினும் நாம் இதனை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். மனித பரிணாமம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற ஐடியாக்கள் இன்னும் விவாதத்துக்குரியதாகவே இருக்கின்றன - (extract from the original quote of) Henry Gee, Palaeoanthropology: Craniums with clout, Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a.

ஹென்றி ஜீ ஏன் இப்படி குறிப்பிட வேண்டும்?

இந்த கேள்விக்கான பதில் மிக எளிதானது. அது, அந்த படத்தில் உண்மையில்லை என்பது தான். மனிதன் படிப்படியாக மாறுவதை போலவெல்லாம் நம்மிடம் ஆதாரங்களில்லை. 

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக பரிமாணவியலாளர்கள் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தாலும், அது எப்படி நடந்தது என்பதில் கடுமையான குழப்பங்கள் அவர்களிடையே உண்டு. ஒருவர் ஒன்றை ஆதாரம் என்று காட்டுவார், அதனை இன்னொருவர் மறுப்பார். அப்படி இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்ட ஒன்று காலப்போக்கில் ஓரங்கட்டப்படும். அப்படியும் இல்லையா, ஆதாரம் என்று கருதப்பட்டது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு அதிர்ச்சியை உண்டாக்கும். மனித பரிணாம வரலாற்றை உற்று நோக்கினால் நமக்கு கிடைக்கும் சுருக்கம் இதுதான். (பரிணாம பித்தலாட்டங்கள் குறித்த இத்தளத்தின் பதிவினை <<இங்கே>> காணலாம்)

வரலாற்றில் குரங்கினங்கள் இருந்திருக்கின்றன, மனித இனங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் படிப்படியாக மாறியதற்கு தான் இதுவரை நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. இருப்பவை எல்லாம் முன்னுக்கு பின் முரணான தகவல்களும், குழப்பங்களும் மட்டுமே.

அப்படி என்ன குழப்பங்கள் என்கின்றீர்களா? அதனை ஆழமாக அலசி ஆராயவே இந்த கட்டுரை முயற்சிக்கின்றது.

மனித பரிணாமம் என்றால் என்ன? 

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய மனிதர்களின் மூதாதையரும், குரங்குகளின் மூதாதையரும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டார்கள் என்பது பரிணாம புரிதல்.

                                     Fig 2: எளிமைப்படுத்தப்பட்ட மனித பரிணாம விளக்கப்படம் 

சரி, அப்படியென்றால் அந்த பொதுவான மூதாதையர் யார்? அந்த பொதுவான மூதாதையரில் இருந்து வந்த மனிதனின் மூதாதையர் யார்?

இந்த கேள்விக்கான விடை, "இன்னும் தெளிவான முடிவுக்கு பரிணாம உலகம் வரவில்லை" என்பது தான். என்ன, நம்முடைய மூதாதையர் யார் என்ற தெளிவு இல்லாமலேயே மனிதன் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் வந்திருப்பான் என்று சொல்கின்றார்களா? என்று நீங்கள் கேட்டால் அதற்கு கீழ்காணும் கருத்து ஒரு ஹின்ட்டை கொடுக்கும்.

"..Ramapithecus, a species of fossil ape from south Asia, which was mistakenly assumed to be an early human ancestor in the 1960s and 1970s, but later found to be a close relative of the orangutan" - Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry, Science daily, 16th Feb 2011
தென்னாசியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரமபிதகஸ் என்ற படிமம், மனிதனின் மூதாதையர் என்று 1960-1970க்களில் தவறுதலாக எண்ணப்பட்டது. ஆனால் இந்த படிமம் ஓரங்குட்டான் குரங்கின் நெருங்கிய உறவினர் என்பது பின்னர் தெரியவந்தது - (extract from the original quote of) Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry, Science daily, 16th Feb 2011.    

மேற்கண்ட உதாரணம் போலத்தான் இன்று வரை நடந்து வருகின்றது. ஒரு படிமத்தை மனிதனின் மூதாதையர் என்பார்கள், பின்னர் அது குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லை என்றோ நிராகரிக்கப்படும். இன்று வரை மனிதனின் மூதாதையர் "இந்த குரங்கு போன்ற ஒன்று தான்" என்று எந்த ஆதாரத்தை நோக்கியும் பரிணாம உலகால் கைக்காட்ட முடியவில்லை.

ஆக, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. 

இன்னும் ஆழமாக மனித பரிணாமத்தை கீறுவோம்....

அப்படி என்ன தான் பிரச்சனை? 

ரைட். இந்த வவ்வால் பார்த்திருப்பீர்கள் :-). பாலூட்டியான அந்த உயிரினம் நன்கு பறக்கக்கூடியது என்பது நாம் அறிந்ததே. வவ்வால் பறக்கும் தன்மையை கொண்டிருந்தாலும் அது பறவைகளிலிருந்து பரிணாமம் அடைந்தது என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. மாறாக, பறக்கும் தன்மையை வவ்வால் தன்னிச்சையாக வளர்த்து கொண்டது என்றே பரிணாம உலகம் கூறுகின்றது (Convergent Evolution).

ஆக, ஒரே பண்புகள் இருவேறு உயிரினங்களில் காணப்படுகின்றது என்பதற்காக அதிலிருந்து இது வந்தது என்று அர்த்தமல்ல. வவ்வாலிடம் காட்டும் இந்த அணுகுமுறையை மனித பரிணாமத்தில் காட்டாதது தான் குழப்பங்களுக்கு முதல் காரணம்.

மனிதனுக்கும் குரங்கினங்களுக்கும் சிலபல ஒற்றுமைகள் உள்ளனவா, அப்படியென்றால் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆதிகால குரங்கின படிமங்களில் மனிதனின் சில தன்மைகள் தென்படுகின்றவா, அப்படியானால் அவை மனிதனின் மூதாதையராக தான் இருக்க வேண்டும். இப்படித்தான் பல படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று எண்ணி பின்னர் அவை அழிந்து போன குரங்கின் படிமம் என்றோ அல்லது மனிதனின் மூதாதையர் இல்லையென்றோ நிரூபிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விவகாரமும் உண்டு. சுமார் 40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதர்களின் மூதாதையர்களும் சிம்பன்சிக்களின் மூதாதையர்களும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து பிரிந்துவிட்டனர் என்பது பரிணாம யூகம். ஆகையால், இந்த இடைப்பட்ட காலத்தில் மனிதத்தன்மைகள்(?) சிலவற்றுடன் குரங்கு போன்ற படிமங்கள் கிடைக்கின்றனவா, அப்படியென்றால் மனித பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்ட உங்களுக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது :-).

ஆனால் இந்த லாஜிக்கில் அர்த்தமுள்ளதா? நிச்சயம் இல்லை. காரணம், சுமார் 80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பான குரங்கின படிமங்கள் கூட மனிதனின் அதே சில தன்மைகளை பிரதிபலிக்கின்றன. ஆனால் அவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாம உலகம் கூறுவதில்லை. குரங்கின் படிமங்கள் என்றே கூறுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?

Find an ape-like creature between 4 and 8 million years ago that fits at least some of these criteria, and you have a contender for an early human. What remains unclear is whether these characteristics are good indicators of membership in the human family. Wood and Harrison suggest that they might not be - Ancestor Worship, Wired, 22nd Feb 2011.
40-80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில், மனிதனின் சில தன்மைகளோடு காணப்படும் ஒரு உயிரினத்தை கண்டுபிடியுங்கள். அப்படியானால் உங்களுக்கு ஆரம்பகால மனிதனுக்கான ஒரு உறுப்பினர் கிடைத்தாகிவிட்டது. ஆனால் இம்மாதிரியான தன்மைகள் இருப்பது மனித குடும்பத்தில் அவற்றிற்கு ஒரு இடத்தை கொடுத்துவிடுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இல்லை என்றே ஆலோசனை கூறுகின்றனர் வுட் மற்றும் ஹாரிசன் (என்ற உயிரியல் மானிடவியலாளர்கள்) - (Extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.

யாரையெல்லாம் மனிதனின் மூதாதையர் என்று கருதினர்?

1. Sahelanthropus tchadensis - 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய படிமம்.
2. Orrorin tugenensis - 60 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது.
3. ஆர்டி (Ardipithecus ramidus) - 44 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.
4. லூசி (Australopithecus afarensis) - 32 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.
5. செடிபா (Australopithecus sediba) - 19 லட்சம் ஆண்டுகளுக்கு  முந்தையது.

நீங்கள் மேலே காண்பவை எல்லாம் நம்முடைய மூதாதையர் என்று எண்ணப்பட்ட பிரபல படிமங்கள். 

படிமங்கள் என்றவுடன் ஒரு விசயத்தை நினைவில் கொள்வது நல்லது. இந்த பழங்கால படிமங்கள் என்பவை துகள்கலாகவே (fragments) நமக்கு பெரும்பாலும் கிடைத்துள்ளன. அவற்றை மறுசீரமைத்து (Reconstruction) தான் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர் பரிணாமவியலாளர்கள். உதாரணத்திற்கு ஆர்டி மற்றும் லூசியின் மறுசீரமைக்கப்பட்ட படிமங்களை பாருங்கள்.

Fig 3: (a) ஆர்டியின் படிமம் (b) லூசியின் படிமம் 

ஒருவர் ஒருமாதிரியாக இந்த துகள்களை மறுசீரமைத்து ஒரு கருத்தை சொல்லுவார். இன்னொருவரோ வேறுமாதிரியாக மறுசீரமைத்து வேறொரு கருத்தை சொல்லுவார். நீங்கள் ஆதிகால மனிதன் படம் என்பதாக பல்வேறு படங்களை பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் இப்படியாக மறுசீரமைக்கப்பட்டு பின்னர் அவற்றிற்கு கற்பனையில் தோல் போர்த்தப்பட்டு வரையப்பட்டவைகளே.

சரி விசயத்திற்கு வருவோம். ஆர்டி குறித்த தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக (2009) வெளிக்கொண்டுவரப்பட்டபோது மிகப்பெரிய பாதிப்பை பரிணாம உலகில் அது ஏற்படுத்தியது. சைன்ஸ் மற்றும் டைம் போன்ற இதழ்கள் அதனை அவ்வருடத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக வர்ணித்தன. ஆனால் அந்த உற்சாகம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே ஆர்டியின் மனித மூதாதையர் அந்தஸ்து கேள்விக்குறியாக்கப்பட்டது.

"Both TIME and Science named her the "Scientific Breakthrough of the Year." But now Ardi has found herself in a spot of controversy. Two new articles being published by Science question some of the major conclusions of Ardi's researchers, including whether this small, strange-looking creature is even a human ancestor at all" - Ardi: The Human Ancestor Who Wasn't?, Time, 27th May 2010. 
டைம் மற்றும் சைன்ஸ் ஆகிய இரண்டும் ஆர்டியை "அவ்வருடத்தின் அறிவியல் கண்டுபிடிப்பாக" பெயரிட்டன. ஆனால் ஆர்டி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சைன்ஸ் ஆய்விதழில் பிரசுரமாகியுள்ள இரண்டு கட்டுரைகள் ஆர்டி ஆய்வாளர்களின் முக்கிய முடிவுகளை கேள்விக்குறியாக்கியுள்ளன. சிறிய, விந்தையான இந்த உயிரினம் மனித மூதாதையரா என்ற கேள்வியும் அதில் அடக்கம் - (extract from the original quote of) Ardi: The Human Ancestor Who Wasn't?, Time Science, 27th May 2010.

ஆர்டி முதற்கொண்டு நீங்கள் மேலே காணும் படிமங்களை மனிதனின் மூதாதையர் என்று கருத முக்கிய காரணம், அவற்றில் தென்பட்ட மனிதத்தன்மைகளே(?). முக்கியமான தன்மைகள் என்றால் இரு கால்களால் நடப்பதும் (Bipedalism), சிறிய கோரைப்பற்களுமே. ஆனால் மனித மூதாதையர் என்று கருதப்பட்ட இவற்றில் காணப்படும் அதே தன்மைகள் 80-70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குரங்கின படிமங்களிலும் காணப்படுகின்றன (உதாரணத்திற்கு Oreopithecus, Ouranopithecus மற்றும் Gigantopithecus போன்றவை). ஆனால் இவற்றை மனிதனின் மூதாதையர் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவதில்லை.

80-40 லட்சம் ஆண்டுகளுக்கு இடையில் மனித தன்மைகளுடன் குரங்கு போன்ற(?) படிமம் கிடைத்தால் அவை மனித மூதாதையர். அதுவே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தால் அவை குரங்குகள். என்ன லாஜிக் இது? தங்கள் யூகங்களுக்கு ஏற்றார்போல ஆதாரங்களை வளைத்து கொள்கின்றார்கள் என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

அப்படியானால் மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் இந்த பழங்கால படிமங்கள்?

Sahelanthropus tchadensis, Orrorin tugenensis மற்றும் ஆர்டி குறித்து நேச்சர் ஆய்விதழில் சென்ற ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்கள் மீதான எதிர்மறை விமர்சங்களை மேலும் அதிகப்படுத்தியது. இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார்கள் அந்த ஆய்வாளர்கள்.

"We believe that it is just as likely or more likely that they are fossil apes situated close to the ancestry of the living great ape and humans" - Terry Harrison, a professor in New York university's Department of Anthropology and director of its Center for the Study of Human Origins. Science Daily, Feb. 16, 2011. 
இவை குரங்கின் படிமங்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக நாங்கள் நம்புகின்றோம் - (extract from the original quote of) Terry Harrison, a professor in New York university's Department of Anthropology and director of its Center for the Study of Human Origins. Science Daily, Feb. 16, 2011.

அடுத்து லூசிக்கு வருவோம். 

Australopithecus afarensis (லூசி இந்த பிரிவை சேர்ந்தது தான்) குறித்து பாரம்பரியமிக்க PNAS (Proceedings of the National Academy of Sciences) ஆய்விதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை, இந்த படிமங்களில் காணப்படும் கீழ்த்தாடை கொரில்லாக்களை ஒத்திருப்பதாகவும், இவற்றை மனிதனின் மூதாதையர் என்று கூறுவதில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டது. கூடவே மனித மூதாதையர் என்ற நிலையிலிருந்து Australopithecus afarensis வெளியேறுவதாகவும் கூறியது. லூசியை மனித மூதாதையர் இல்லை என்று கூறும் விக்கிபீடியா இந்த ஆய்வுக்கட்டுரையையே மேற்கோள் காட்டுகின்றது.

"Mandibular ramus morphology on a recently discovered specimen of Australopithecus afarensis closely matches that of gorillas......
The presence of the morphology in both the latter and Au. afarensis and its absence in modern humans cast doubt on the role of Au. afarensis as a modern human ancestor"
- Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths, PNAS, 17th April 2007.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Australopithecus afarensis படிமத்தில் காணப்படும் கீழ்த்தாடை உருவமைப்பு கொரில்லாக்களோடு நெருக்கமாக ஒத்துப்போகின்றது.........Australopithecus afarensis மற்றும் Australopithecus robustus ஆகிய இரண்டிலும் இந்த உருவமைப்பு காணப்படுகின்றது. அதே நேரம் தற்காலத்திய மனிதர்களில் இது காணப்படவில்லை. Australopithecus afarensis மனிதனின் மூதாதையர் என்ற கருத்தில் இதன்மூலமாக சந்தேகம் விதைக்கப்படுகின்றது - (Extract from the original quote of) Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths, PNAS, 17th April 2007.

இறுதியாக செடிபா:

ஆஹா...செடிபாவை பொருத்தவரை நிலைமை சற்று வித்தியாசமானது. பொதுவாக மனித மூதாதையர் என்று கருதப்படும் படிமங்கள் முதலில் பரபரப்பாக பேசப்படும். பின்னர், சிறிது காலத்திற்கு பிறகு மனித மூதாதையர் இல்லை என்று ஓரங்கட்டப்படும். ஆனால் செடிபாவை பொருத்தவரை அதுக்குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளும் அலங்கரித்துவிட்டன.

2008-ஆம் ஆண்டு செடிபா படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, 2010-ஆண்டு லீ பெர்கர் மற்றும் அவரது குழுவினரால் இதுக்குறித்த தகவல்கள் வெளிவந்து பரபரப்பூட்டின. இதனை மனிதனின் மூதாதையர் என்று கூறிய பெர்கரின் கருத்து மற்ற ஆய்வாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது, மிகைப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

"..the researchers' suggestion that the fossils represent a transitional species in human evolution, sitting between Australopithecus and Homo species, has been criticized by other researchers as overstated" - Claim over 'human ancestor' sparks furore, 8 April 2010, Nature, doi:10.1038/news.2010.171.
(மனித பிரிவுக்கு முந்தைய) Australopithecus பிரிவுக்கும், (மனித பிரிவான) ஹோமோவுக்கும் இடைப்பட்டவைகளாக செடிபா படிமங்கள் இருப்பதாக கூறும் ஆய்வாளர்களின் கருத்து "மிகைப்படுத்தப்பட்டதாக" மற்ற ஆய்வாளர்களால் விமர்சிக்கப்படுகின்றது - (extract from the original quote of) Claim over 'human ancestor' sparks furore, 8 April 2010, Nature, doi:10.1038/news.2010.171. 

இன்னும் வேண்டுமா என்பது போல, சைன்ஸ் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை லீ பெர்கரின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியது. சற்று காலம் அடங்கியிருந்த செடிபா குறித்த செய்திகள் தற்போது (இவை சார்ந்த பாறைகளில் நடத்தப்பட்ட CT Scan வடிவில்) மறுபடியும் ஆரம்பித்து உள்ளன (July 2012). ஆனால் விடை என்னவோ அதே தான். சில தொல்லுயிரியலாளர்களே செடிபாவை மனித மூதாதையர் என்று ஏற்றுக்கொள்வதாக சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகின்றது. இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம், செடிபா வரலாற்றை மாற்றுகின்றதா என்று... :-)

மொத்தத்தில், மனித பரிமாணம் தன் பர்சனாலிடியை ஒவ்வொருவிதமாக வரலாற்றில் மாற்றிக்கொண்டே தான் வந்துள்ளது. 

"Anyone who has studied the history of paleoanthropology knows how many times the list of our direct ancestors has been changed, and future discoveries of previously-unknown species will continue to change the picture. We have an outline of our ancestry, but the details are still subject to change" - Ancestor Worship, Wired, 22nd Feb 2011.
நம்முடைய மூதாதையர் யார் என்ற பட்டியல் எத்தனை முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை தொல்லுயிரியல்-மானிடவியல் வரலாற்றை படித்த அனைவரும் அறிவர். முன்பு நாம் அறியாத உயிரினங்கள் குறித்த கண்டுபிடிப்புகள் தொடர்ந்து காட்சியை மாற்றியமைத்து வருகின்றன. நம்முடைய மூதாதையர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பது குறித்த சுருக்கமான வர்ணனை நம்மிடம் உண்டு. அந்த தகவல்களும் மாறக்கூடியவையே - (extract from the original quote of) Ancestor Worship, Wired, 22nd Feb 2011.

மனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரியதாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்?

நான் முன்னவே கூறியது போன்று, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர ஆதாரங்கள் என்று ஒன்றுமில்லை. எந்த படிமத்தை நோக்கியும் இது தான் மனித மூதாதையர் என்று ஒருமித்த கருத்தோடு கூறமுடியாத நிலையில் தான் பரிணாம உலகம் இருக்கின்றது. 

அதெல்லாம் சரி, அப்ப நம்ம பிரிவு?

நம்முடைய ஹோமோ பிரிவு ரொம்ப சுவாரசியமானது. இந்த ஹோமோ பிரிவு குறித்து, இறைவன் நாடினால், விரிவாக எதிர்காலத்தில் பார்ப்போம். இப்போதைக்கு இந்த கட்டுரைக்கு ஏதுவாக சில தகவல்களை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

ஹோமோ பிரிவில் முக்கிய உறுப்பினர்கள் என்றால் அவை பின்வருபவை தான். 

1. Homo Habilis
2. Homo erectus
3. Homo Sapiens (நியாண்டர்தல் மனிதர்கள் மற்றும் தற்காலத்திய மனிதர்கள்)

Fine. நம் ஹோமோ பிரிவின் முதல் உறுப்பினரான H.habilis-லேயே சர்ச்சை கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளது. இதன் உடலமைப்பு குரங்குகளை போன்று அமைந்துள்ளதாக விக்கி கூறுகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக "பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக" பல ஊடகங்களும் அல்லோலப்பட்டன. அதற்கு காரணம், மீவ் லீக்கி என்ற பிரபல தொல்லுயிரியலாளரும், அவரது குழுவினரும் கண்டெடுத்த H.habilis மற்றும் H.erectus படிமங்கள் தான். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று அருகாமையிலேயே கண்டெடுக்கப்பட்டன.

H.habilis பரிணாமம் அடைந்து H.erectus-ஆக மாறியதாக நீண்ட காலமாக எண்ணப்பட்டது. ஆனால் லீக்கியின் ஆய்வு இதனை கேள்விக்குறியாக்கியது. இந்த இரண்டு உயிரினங்களும் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகள் ஒன்றுக்கொன்று அருகாமையில் வாழ்ந்ததும், habilis-இல் இருந்து erectus வரவில்லை என்பதும் தெளிவானது.

"Their co-existence makes it unlikely that Homo erectus evolved from Homo habilis" - Meave Leakey, BBC, Finds test human origins theory. 8th August 2007
இரண்டும் சமகாலத்தில் வாழ்ந்தது, Homo Habilis-லிருந்து Homo Erectus வந்திருக்க வேண்டும் என்ற கருத்தினை சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது - (extract from the original quote of) Meave Leakey, BBC, Finds test human origins theory. 8th August 2007

இந்த நிகழ்வை தான் ஊடகங்கள் "பரிணாம கோட்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டதாக" பிரபலப்படுத்தின. ஆக, இதிலிருந்து அது வந்தது என்ற யூகம் (வழக்கம் போல) செயலிழந்து, இரண்டிற்கும் பொதுவான மூதாதையர் என்ற புது யூகம் வந்துவிட்டது.

Fig 4: (a) பழைய பரிணாம யூகம் (b) புதிய பரிணாம யூகம். 

H.habilis குறித்த சர்ச்சைகள் புதிதல்ல. இவற்றை மனித பிரிவிலிருந்து நீக்கி முந்தைய பிரிவான Australopithecus-சில் சேர்க்க வேண்டுமென்று சில துறைச்சார்ந்த வல்லுனர்கள் கூறிவந்தார்கள். அவர்களில் பிரபல தொல்லுயிரியலாளரான ரிச்சர்ட் லீக்கியும் ஒருவர்.

எது எப்படியோ மனிதனின் மூதாதையர் என்ற அந்தஸ்திலிருந்து H.habilis-சும் கீழிறக்கப்பட்டுவிட்டது. 

எந்தவொரு சர்ச்சையும் இன்றி "இவன் தான் மனிதன்" என்று (பரிணாமவியலார்கள்) எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதனின் மூதாதையர் என்றால் அது H.erectus தான். இன்றைய மனிதனின் உடற்கூறுகலோடு ஒத்திருக்கின்றது இவர்களது உடலமைப்பு. சுமார் 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாக கருதப்படும் இவர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று பரிணாமவியலாளர்கள் கூறுவது மற்றுமொரு யூகமே.

இவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள், நெருப்பை உருவாக்கக்கூடியவர்களாகவும், கண்ட்ரோல் செய்யக்கூடியவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். மனிதர்களை போல சமூக கட்டமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள். சிக்கலான கருவிகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிதவை போன்றவைகளில் கடல் கடந்து பயணித்திருக்கின்றார்கள். கடல் மார்க்கமாக இடம் விட்டு இடம் போவதெல்லாம் அறிவில் குறைந்தவர்கள் செய்யக்கூடிய காரியமா?

சுருக்கமாக சொல்லப்போனால் மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான். படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

எப்படி நியாண்டர்தல் மனிதர்கள் விசயத்தில் தங்கள் தவறான பார்வையை பரிணாமவியலாளர்கள் மாற்றிக்கொண்டார்களோ, அதேநிலை விரைவில் H.erectus-க்கும் வரலாம். (நியாண்டர்தல் மனிதர்கள் குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்)

இறுதியாக:

1. மனித பரிணாம படத்தில் காணப்படும் வரிசையில் எந்த உண்மையும் கிடையாது. இனியும் யாராவது அந்த படத்தை காட்டினால், ஹென்றி ஜீ கூறியது போல "முட்டாள்தனமானது" என்று நீங்கள் கூறலாம்.

2. மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் (பிரபல) குரங்கு போன்ற படிமங்கள் எவையும் மனிதனின் மூதாதையர் அல்ல. அல்லது அட்லீஸ்ட் ஒருமித்த கருத்துக்கு பரிணாம உலகம் இன்னும் வரவில்லை.

3. மனித இனம் திடீரென்றே படிமங்களில் தோன்றியுள்ளது. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து  படிப்படியாக மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் இல்லை.

4. மனிதன் தான் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான்.

So, What's more?????? :-) :-)

இறைவன் நம் அனைவரையும் மூட நம்பிக்கைகளில் இருந்து காத்து நேர்வழியில் செலுத்துவானாக.....ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:
1. Smithsonian Institution.

Figure Sources:
Fig 1 - Wikipedia.
Fig 2 - Drawn by Aashiq Ahamed
Fig 3 - Wikipedia
Fig 4 - University of California (Berkeley) website.

References:
1. Human Family Tree - Smithsonian Institution's Nation Museum of Natural History. link
2. Raining on Evolution’s Parade - I.D. Magazine, March/April 2006. link
3. March of Progress - wikipedia. link
4. Australopithecus - Encyclopedia Brittanica. link
5. Claim over 'human ancestor' sparks furore - Nature, 8 April 2010, doi:10.1038/news.2010.171. link
6. Australopithecus africanus - Australian Museum. link
7. Australopithecus sediba: can we stop calling it a 'missing link? - Telegraph blogs. September 10th, 2011. link
8. Convergent evolution - Biology Online. link
9. Behavioral and phylogenetic implications of a narrow allometric study of Ardipithecus ramidus - Homo, Volume 62, Issue 2, April 2011, Pages 75–108. link
10. Ardi: The Human Ancestor Who Wasn't? - Time Science, 27th May 2010. link
11. The evolutionary context of the first hominins - Nature 470, 347–352, 17 February 2011, doi:10.1038/nature09709. link
12. Ancestor Worship - Wired, February 22, 2011. link
13. Was “Ardi” not a human ancestor after all? New review raises doubts - Scientific American blog, February 16, 2011. link
14. Fossils May Look Like Human Bones: Biological Anthropologists Question Claims for Human Ancestry - Science daily, Feb. 16, 2011. link
15. When it comes to evolution, headlines often get it wrong - University of California (Berkeley) Museum of Paleontology, September 2007. link
16. Head to head - Nature, 9 August 2007, doi:10.1038/nature05986. link
17. Finds test human origins theory -  BBC, 8 August 2007. link
18. Fossil Find Challenges Evolutionary Theory - Digital Journal, 9 Aug 2007. link
19. Fossil find casts doubt on origins of man - ABC News, 10 Aug 2007. link
20. Our Species Mated With Other Human Species, Study Says - National Geographic, March 6, 2002.  link
21. Human precursors went to sea, team says - Physorg. August 17th, 2011. link
22. Hominids Went Out of Africa on Rafts - Wired. January 8, 2010. link
23. Primitive Humans Conquered Sea, Surprising Finds Suggest - National Geographic, February 17, 2010. link
24. Ancient Island Tools Suggest Homo erectus Was a Seafarer - Science, 13 March 1998, Vol. 279 no. 5357 pp. 1635-1637, DOI: 10.1126/science.279.5357.1635. link
25. Neanderthals, Humans Interbred—First Solid DNA Evidence - National Geographic, May 6, 2010. link
26. List of human evolution fossils - Wikipedia. link
27. Disappearing Link, Our Evolutionary Ancestors Keep A-Changing - Salvo magazine. link
28. Sahelanthropus - Wikipedia. link
29. Hominid and hominin – what’s the difference? - Australian Museum. link
30. Lucy (Australopithecus) - Wikipedia. link
31. Gorilla-like anatomy on Australopithecus afarensis mandibles suggests Au. afarensis link to robust australopiths - PNAS,  April 10, 2007. doi:  10.1073/pnas.0606454104. link
32. Proceedings of the National Academy of Sciences of the United States of America - Wikipedia. link
33. CT Scans Reveal Early Human Fossils inside Rock - Scientific Amaerican. July 13, 2012. link
34. Surprise Human-Ancestor Find, Key Fossils Hidden in Lab Rock - National Geographic. July 12, 2012. link
35. Australopithecus sediba - Wikipedia. link
36. Ramus - Online Encyclopedia. link
37. The diet of Australopithecus sediba - Nature, 27 June 2012, doi:10.1038/nature11185. link
38. Paleoanthropologist Now Rides High on a New Fossil Tide - Science, 9th September 2011, vol. 333 no. 6048 pp. 1373-1375, DOI: 10.1126/science.333.6048.1373. link
39. Some Prehumans Feasted on Bark Instead of Grasses - New York Times, June 27, 2012. link
40. Candidate Human Ancestor From South Africa Sparks Praise and Debate - Science, Vol. 328 no. 5975 pp. 154-155, DOI: 10.1126/science.328.5975.154. link
41. Palaeoanthropology: Craniums with clout - Nature, 478, 6th October 2011, page 34, doi:10.1038/478034a. link
42. Homo erectus - Wikipedia. link
43. Evolutionary Back Story: Thoroughly modern spine supported human ancestor - Science News, Volume 169, No. 15, May 6, 2006, p. 275. link
44. Bat - Wikipedia. link
45. Australopithecus - Wikipedia. link
46. Laetoli - Wikipedia. link
47. Human ancestors walked comfortably upright 3.6 million years ago, new footprint study says - Scientic American, 20th March 2010. link

வஸ்ஸலாம்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Wednesday, August 1, 2012

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்...

பெங்களூர் மாநகரம். 

1. தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". 

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட, அந்த ஆட்டோ ஓட்டுனரான  ஹபிஸ் முஹம்மத் சாதிக்கிடம் "குர்ஆன் அர்த்தங்களின் கன்னட மொழிப்பெயர்ப்பை" அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றார். 

2. இதே போன்றே மற்றொரு நிகழ்வை விவரிக்கின்றார் மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பாஷா. அன்று ஹெப்பலில் (Hebbal) இருந்து ஒரு வாடிக்கையாளரை ஏற்றிக்கொண்டு ஒரு தொலைத்தூர பயணத்திற்கு ஆயத்தமாகின்றார் பாஷா. பயணத்தின் போது அந்த ஆட்டோவில் இருந்த இஸ்லாம் குறித்த அனைத்து பிரசுரங்களையும் படித்த அந்த கஸ்டமர், தன் வீட்டு முகவரியை கொடுத்து குர்ஆன் அனுப்ப முடியுமா என்று கேட்டுக்கொள்ள பாஷாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்த நாளே குர்ஆன் அடங்கிய பரிசுப்பெட்டகத்தை அந்த கஸ்டமரின் வீட்டிற்கு சென்று கொடுக்கின்றார் பாஷா. புத்தகங்களுக்கு விலையாக ஆயிரம் ருபாய் நோட்டை எடுத்து அந்த வாடிக்கையாளர் நீட்ட நெகிழ்ச்சியுடன் கூறினார் பாஷா, "இல்லை சார். எனக்கு வேண்டாம். மறுமை நாளில் இதற்குரிய வெகுமதி எனக்கு கிடைத்தால் போதும்". 

பாஷாவின் பதில் ஒரு கணம் அந்த வாடிக்கையாளரை திகைக்க வைக்க தன் ஆசையை வெளிப்படுத்தினார் பாஷா, "என்னுடைய ஒரே ஒரு வேண்டுகோள், குர்ஆனை நீங்கள் படித்து புரிந்துக்கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த செய்தியை ஏற்றிவைக்க வேண்டும் என்பதுதான். உங்கள் நண்பர்களுக்கும் குர்ஆனை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் நான் இத்தகைய பரிசுப்பெட்டகத்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்".

3. வெள்ளரா சந்திப்பில் நிசார் அஹமது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் சற்றே கிலியூட்டக்கூடியது. அவருடைய ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த போலிஸ் ரோந்து வாகனம் அவரை மடக்கியது அந்த சந்திப்பில் தான். 

முகத்தில் கலவரத்துடன் என்னவோ ஏதோ என்று பயந்து விசாரிக்க சென்ற அஹமதுவிடம் அந்த ரோந்து வாகனத்தில் இருந்த போலீஸ்காரர், "எனக்கு 'இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்' என்ற புத்தகத்தை கொடுக்க முடியுமா? பாதுகாப்பு பணியில் ஒருமுறை ஈடுபட்டிருந்த போது அதனை பார்த்திருக்கின்றேன். அன்றிலிருந்து அந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்று உங்கள் ஆட்டோவில் அந்த புத்தகத்தை கண்டவுடன் உங்களை பின்தொடர ஆரம்பித்துவிட்டேன்" என்று காரணத்தை கூறினார். 

மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தை அதிகாரிக்கு பரிசளித்துவிட்டு நடையை கட்டினார் நிசார் அஹமது. 

இந்த நிகழ்வுகள் உங்களில் பலருக்கு வியப்பையும், இவையெல்லாம் என்ன என்று அறியும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கலாம். நமக்கே இப்படியென்றால், இந்த பணியை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு  எப்படியிருக்கும்? 

சென்ற மாதத்தின் பிற்பகுதியில் பெங்களூர் நகரின் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு இனம் புரியாத பரபரப்பும், மகிழ்ச்சியும் தொற்றிக்கொண்டிருந்தது. சும்மாவா என்ன? இதுநாள் வரை வாடிக்கையாளர்களை ஏற்றி சென்றுக்கொண்டிருந்த அவர்களது வாகனம், இனி இறைச்செய்திகளையும் தாங்கி செல்லப்போகின்றது. 

இந்த செயல்திட்டத்திற்கு பின்னால் இருப்பது "சலாம் சென்டர்" என்ற அமைப்பு. இவர்களுடைய அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு. 

ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன. பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள். இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம். 


ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன. 
  
சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் நாம் மேலே பார்த்த நிசார் அஹமத் என்ற சகோதரர் தான். 

நிசார் அஹமது ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட. பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர். தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.


ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள். 

"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர். 

இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்தியுங்கள்.  

ஒலிம்பிக்ஸ் 2012:

ஆஹா..வந்துவிட்டார்கள் IERA (இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம்).

பிரிட்டனை சேர்ந்த இந்த அமைப்பின் செயல்திட்டங்கள் என்றுமே ஆச்சர்யத்தையும், புதுமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக்கூடியவை (அல்ஹம்துலில்லாஹ்). உலக நாத்திக மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர்களை அசரடித்தாகட்டும், பிரபல நாத்திகர்கள் என்று அறியப்படுபவர்களுடன் விவாதங்களில் கலந்துக்கொண்டு அவர்களை திணறடித்தாகட்டும், இவர்கள் என்றுமே ஆச்சர்யத்தை கொடுக்க தவறியதில்லை. 

இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 

மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை  பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன்  ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 

ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு  பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)


நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 

IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 

எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 

"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 

IERA குழுவினர் 

உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

News update:

இறைவனின் அளப்பெரும் கிருபையினால் IERA-வின் "ஒலிம்பிக் தாவாஹ் தினம்" கடந்த நான்காம் தேதி அழகான முறையில் நிறைவுற்றது. சுமார் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அசத்தலான செயல்திட்டத்துடனும், அதிகபட்ச ஒழுக்கத்துடனும், நேர்த்தியான கட்டுக்கோப்புடனும் தங்கள் அழைப்பு பணியை மேற்கொண்டனர்.

ஒலிம்பிக் தாவாஹ் தினத்தில் கலந்துக்கொண்ட முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் 

இஸ்லாம் குறித்து மேலும் அறிய விரும்பியவர்களுக்கு குர்ஆன், குர்ஆன் அர்த்தங்களின் ஆங்கில மொழியாக்கம், குர்ஆனின் அறிவியல் உண்மைகள் குறித்த ஆய்வு புத்தகம் மற்றும் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா?" என்ற தலைப்பிலான சிறுநூல் ஆகியவை அடங்கிய பை பரிசளிக்கப்பட்டது.

இஸ்லாம் குறித்து மேலும் அறிய விரும்பியவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள்..

மேலும் தாவாஹ் தினத்தில் மட்டும் 17 சகோதர சகோதரிகள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்லாஹு அக்பர். தொடர்ந்து IERA-அமைப்பினர் தங்கள் அழைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நீங்கள் முஸ்லிமல்லாதவரா? இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள விருப்பமா? நீங்கள் இஸ்லாமை அறிந்துக்கொள்ள விரும்பும் இந்த முடிவு உங்கள் வாழ்வில் மாற்றத்தை, புத்துணர்ச்சியை கொண்டுவரலாம். aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இஸ்லாமின் மூலமான குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு மற்றும் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை மின்னூல் வடிவமைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவேனே எல்லாம் அறிந்தவன்... 

References:
1. Auto Drivers Now Turn ‘Divine Couriers’ - karnataka muslims. link
2. Is life just a game - IERA. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Friday, June 22, 2012

"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா"



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

சார்....கேட்டீங்களா சங்கதிய?

இவ்ளோ ஆர்வமா கேட்குறீங்க...என்ன விசயம்?

உலக பிரசித்திப்பெற்ற நேச்சர் (Nature) ஆய்விதழ் சமீபத்துல ஒரு தலையங்கம் வெளியிட்டிருக்காங்க..."South Korea surrenders to creationist demands" (படைப்புவாதிகளின் கோரிக்கைகளுக்கு தென் கொரியா சரணடைந்தது). எப்படி சார் இருக்கு தலைப்பு?

ரொம்ப டாப்பு சார். செம அதிரடியா இல்ல இருக்கு. நேச்சரின் இந்த தலைப்புக்கு வலையுலகமே அதிர்ந்திருக்குமே?

உண்மைதான். குறிப்பா சொல்லனும்னா பரிணாமவாதிகள் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க :-)

இருக்காதா பின்னே!!! அறிவியல் வளர்ச்சியிலும், கல்வி மேம்பாட்டிலும் முன்னனியில் உள்ள நாடாயிற்றே தென் கொரியா. அப்படிப்பட்ட நாடு படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா சொன்னா ஒருவித ஆச்சர்யம் இருக்கத்தானே செய்யும், பரிணாமவாதிகளின் மனக் குமுறலை சொல்லவா வேணும்....அது சரி, அந்த கட்டுரைல என்னதான் எழுதியிருந்தாங்க நேச்சர்? அத நீங்க இன்னும் சொல்லலையே...

விஷயம் இதுதான். பரிணாமத்துக்கு ஆதாரமா காட்டப்படும் உதாரணங்களை உயர்க்கல்வி அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க சொல்லி பரிந்துரைத்திருக்கின்றது தென் கொரிய கல்வித்துறை.

அட்ரா சக்க......அட்ரா சக்க................................................................அட்ரா சக்க...மேலே சொல்லுங்க சார், ரொம்ப சுவாரசியமா இருக்கு....



"பாடநூல் மறுசீரமைப்பு கழகம் (Society for textbook revise, STR)" என்ற அமைப்பு தான் இந்த மாற்றங்களுக்கு பின்னணியில் செயல்பட்டிருக்கு. இவங்க என்ன செய்தாங்கன்னா, பரிணாமத்துக்கு (வலுவான) ஆதாரமா காட்டப்படும் "குதிரை பரிணாமம்" ஒரு கற்பனையே என்றும், அதனை பாடநூல்களில் இருந்து தூக்கணும் என்றும் அறிவியல் ஆதாரங்களை சுட்டிக்காட்டி அரசுக்கு பெட்டிஷன் போட்டுட்டாங்க...

அப்படி போடு அருவாள...ம்ம்ம் அப்புறம்?

இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் அப்படின்னு ஒரு உயிரினத்த பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.

அட ஆமா...டைனாசர்ல இருந்து பறவைகள் வந்துச்சுன்னு சொல்றதுக்கு ஆதாரமா காட்டுவாங்களே அந்த உயிரினத்த பத்தி தானே சொல்றீங்க..

ஆமா சார். அதே தான். இந்த உயிரினம் குறித்த சர்ச்சைகள் சமீப காலமா அதிகரித்து இருக்கு. இதே நேச்சர், இந்த உயிரினம் "உலகின் முதல் பறவை" என்ற அந்தஸ்த்தில் இருந்து கீழிறக்கப்பட்டதா சிலபல மாதங்களுக்கு முன்னாடி தலையங்கம் வெளியிட்டது நினைவிருக்கலாம்...

எஸ் எஸ்...நானும் படிச்சேன். பரிணாமவாதிகளின் மிச்சம் மீதி இருந்த ஒரே ஆதாரமான(?) ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் அவங்களுக்கு டாடா காட்டிய அந்த செய்திய மறக்க முடியுமா... :-) :-) (பரிணாம ஆதரவாளர்களுக்கு ஆர்க்கியாப்டெரிக்ஸ் bye-bye சொன்னது குறித்த இத்தளத்தின் விரிவான அலசலை <<இங்கே>> காணலாம்) 

ஹி ஹி...இப்ப என்ன மேட்டர்னா, STR சமர்பித்த பெட்டிஷன்ல இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த தகவல்களையும் பாடப்புத்தககங்களில் இருந்து நீக்கனும்னு சொல்லிருக்காங்க. அதற்கான காரணங்களையும் சுட்டி காட்டி இருக்காங்க...

சரியான அணுகுமுறை தானே சார்.

ம்ம்ம்...குதிரை பரிணாமத்தையும், ஆர்க்கியாப்டெரிக்ஸ்சையும் நீக்க சொல்ற இந்த பெட்டிஷனை கூர்ந்து கவனித்த தென் கொரிய கல்வித்துறை அத ஏத்துக்கிட்டாங்க. பாடநூல் தயாரிக்கும் பதிப்பாளர்களிடம் இதுகுறித்து அறிவிப்பு செய்தாகிவிட்டது. விளைவு, பல பதிப்பாளர்கள் அந்த பரிணாம உதாரணங்களை நீக்கும் வேலைய துவங்கிட்டாங்க..


ஓஹோ...அதெல்லாம் சரி சார். ஒரு அமைப்பு ஆதாரங்கள் அடிப்படையில் பெட்டிஷன் போட்டிருக்காங்க. அதன் அடிப்படையில் தவறான தகவல்களை பாடநூல்களில் இருந்து நீக்குறாங்க. இதுல எங்கே படைப்புவாதிகள் வந்தாங்க? ஏன் படைப்புவாதிகளிடம் சரணடைந்ததா நேச்சர் சொல்லணும்?

அதுவா...இந்த STR இருக்குல்ல, அது படைப்புவாதத்தை ஆதரிக்கும் ஒரு அமைப்போட கிளை அமைப்புன்னு நேச்சர் சொல்லுது.

ஒ அதான் மேட்டரா...

இது மட்டும் இல்ல சார். எதிர்க்காலத்துல மனித பரிணாமம் குறித்த தகவல்கள் மற்றும் மேலும் பல பரிணாம உதாரணங்களையும் நீக்க சொல்லி பெட்டிஷன் கொடுக்க போறாங்க STR.

சூப்பரப்பு...செம டெரரா இல்ல இருக்கு. இன்னொன்ன கவனிச்சீங்களா. குதிரை பரிணாமமும் சரி, ஆர்க்கியாப்டெரிக்ஸ்சும் சரி, இவை குறித்த சர்ச்சைகள் அதிகளவில் இருப்பது அறிவியல் உலகம் நன்கு அறிந்த ஒன்னு தான். இப்படியான குழப்பமான உதாரணங்களை பசங்க ஏன் படிக்கணும்? பரிணாமவாதிகளே இந்த உதாரணங்கள நீக்க சொல்லிருக்கணும்.

சரியா புடுச்சீங்க சார் பாய்ன்ட்ட....பரிணாமவாதிகள் இந்த உதாரணங்கள நீக்க சொல்லி அரசிடம் கேட்டிருந்தா இந்த அளவுக்கு நேச்சரோ அல்லது பரிணாம ஆதரவாளர்களோ குதிப்பாங்களா? ஆக, இங்கே மேட்டர் என்னான்னா, தவறான உதாரணங்கள நீக்க சொன்னது பிரச்சனை இல்ல. படைப்புவாதிங்க சொல்லி நீக்கனுமா...இதான் பரிணாமவாதிகளின் கூச்சலுக்கு காரணம்.

தானும் படுக்க மாட்டேங்குறாங்க...தள்ளியும் படுக்க மாட்டேங்குராங்கன்னு சொல்லுங்க...

ஹி ஹி ஹி...வேற விதமா சொல்லனும்னா, தன் கண்ணை தானே குத்திகிட்டா பரவாயில்லை, ஆனா அடுத்தவன் மட்டும் குத்தக்கூடாது. இதுதான் பரிணாமவாதிகளின் தற்போதைய நிலை. தவறான உதாரணங்களை நீக்க சொன்னதை, பரிணாமத்தையே பாட நூல்களில் இருந்து நீக்க சொன்னது போல பரிணாம ஆதரவாளர்கள் சித்தரித்து விசயத்தை திசை திருப்ப முயல்வது மோசமான முன்னுதாரணம்.

:-) :-) இது என்ன அவங்களுக்கு புதுசா சார். லூஸ்ல விடுங்க. இப்படி ஒரு ஒரு ஆதாரமா தூக்கி எரிந்துக்கிட்டு இருந்தா பரிணாமத்துக்கு ஆதாரமா வேற என்ன தான் சார் மிஞ்சும்? பரிணாமத்துக்கு ஆதாரமா இருந்த எல்லாமே மண்ணோட மண்ணா போச்சு. அவற்றில் சிலபல இன்னும் பாடப்புத்தகங்களில் ஓட்டிக்கிட்டு இருக்கு. இப்ப அந்த சில உதாரணங்களை நீக்கி தென் கொரியா நல்லதொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு. இனி கொஞ்ச கொஞ்சமா பல நாடுகளிலும் இதனை மேற்கோள் காட்டி பாடத்திட்டங்களில் இருந்து பரிணாம ஆதாரங்கள் தூக்கப்பட வழிவகுக்கப்படலாம்.

அருமையா சொன்னீங்க...இதான் பரிணாமவாதிகளின் கவலைக்கு காரணம். தவறான உதாரணங்கள பசங்க படித்தாலும் கவலை இல்ல. ஆனா தங்கள் "நம்பிக்கைக்கு" மட்டும் பங்கம் வந்திர கூடாது.

தென் கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பரிணாமவாதிகளின் ரியாக்ஸன் எப்படி இருந்தது?

தங்களிடம் இது குறித்து தென் கொரிய அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லைனு பரிணாமவாதிகள் சொல்றாங்க. ஆனா, தங்கள் குழுவில் உயிரியல் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கம் வகிப்பதாக STR கூறுகின்றது.

ம்ம்ம்...இதுக்கெல்லாம் மதம் தான் காரணம்னும் பரிணாமவாதிகள் குற்றம் சாட்டி இருப்பாங்களே?

எப்படி சார். அவங்க எண்ண ஓட்டங்களை அச்சு பிசகாம படம் புடிக்கிறீங்க...

:-) இது என்ன இன்னைக்கு நேத்தா சார் நடக்குது. கேட்குற கேள்விக்கு பதில் தராம மதத்த நோக்கி தங்கள் கோப பார்வையை திருப்புவதை தானே பரிமாணவாதிகள் காலங்காலமா செய்யுறாங்க.

உண்மதான் சார். தென் கொரியாவில் மத நம்பிக்கைகள் ஆழமா வேரூன்றி வருவது தான் இதற்கு காரணம்னு பரிணாமவாதிகள் குற்றம் சுமத்துறாங்க. ஆனா இதில் உண்மை இல்லைனு தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளதாக நேச்சர் சொல்லுது. தங்களின் பரிணாம எதிர்ப்புக்கும், மத நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லேன்னு ஆசிரியர்கள் சொல்லிருக்காங்க.

ஆஹா...

ஆமா சார். தென் கொரியாவின் 40% உயிரியல் ஆசிரியர்கள் "பரிணாமம் நடக்கின்றதா என்று விஞ்ஞானிகளுக்கு சந்தேகம்" இருப்பதாக சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்லாம, 50% ஆசிரியர்கள் "பரிணாமத்தின்படி தான் மனிதன் வந்தான்" என்பதையும் ஏற்றுக்கொள்ளல.

இந்த புள்ளிவிபரங்கள கேட்க ரொம்ப வியப்பா இருக்கு. இதுல இன்னொரு விசயத்தை கவனித்தீங்களா சார்? பரிணாம எதிர்ப்பு என்பது முன்பெல்லாம் வெளியே மட்டும் தான் இருக்கும். இப்ப கொஞ்ச கொஞ்சமா கல்வித்துறையில் நுழைய ஆரம்பிச்சுருச்சு. முதல்ல அமெரிக்கா, இப்ப தென் கொரியா. இது ஒரு நல்ல அறிகுறி சார். உண்மைய பசங்க தெரிஞ்சுக்க இது உதவும்.

துருக்கிய விட்டுட்டீங்களே...

அப்படியா? துருக்கில தான் ஏற்கனவே படைப்புவாதம், பரிணாமம் என்று இரண்டையும் பள்ளியில் சொல்லி கொடுக்குறாங்களே...

இது வேற மேட்டர். துருக்கியின் பாரம்பரியமிக்க மர்மரா பல்கலைகழகத்தில் "பரிணாமத்தை ஏன் அறிவியல் நிராகரிக்கின்றது? (Why Does Science Deny Inter-Species Evolution?)" என்ற தலைப்பில் படைப்புவாத ஆதரவு கருத்தரங்கு சென்ற மாதம் நடந்திருக்கு. இதில் பல்வேறு துறைச்சார்ந்த பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தி இருக்காங்க. பல்கலைகழக அளவில் இப்படியான கருத்தரங்கு நடப்பது இதுவே முதல் முறைன்னு சொல்லப்படுது. அறிவியல் ஆய்வில் முன்னணியில் உள்ள துருக்கி போன்ற நாட்டில், அதுவும் பாரம்பரியமிக்க ஒரு பல்கலைகழகத்தில் இப்படியான கருத்தரங்கு நடந்திருப்பது பலருடைய புருவத்தை உயர்த்தியிருக்கு.

அடடா.....ஆக மொத்தத்துல (கல்வித்துறையில்) பரிணாம எதிர்ப்பு உலகமயமாக்கப்பட்டு வருதுன்னு சொல்லுங்க....

க க க போ.....

:-) :-)

மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை காத்து, இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References:
1. South Korea surrenders to creationist demands - Nature, 5th June 2012. link
2. Creationists In South Korea Force Removal Of Evolution From High-School Textbooks - Huffinton post. 14th June 2012. link
3. Evolution Under Assault in South Korea’s Schools - Wired. 6th June 2012. link
4. South Korea to evolution from textbooks - New york daily news. 6th June 2012. link
5. Evolutionary Theory to Disappear from Science Textbooks - Korea bang. May 18, 2012. link
6. Lazy biology textbooks, the theory of evolution undergo revision attack - Seoul Newspaper. link
7. Turkey: Creationists Want to Airbrush Darwin Out of Evolutionary Picture - Eurasia. 7th June 2012. link
8. Is South Korea Removing Evolution From Public School Textbooks? - Answering Genesis, 12th June 2012. link
9. Is Nature Presenting the Whole Story about South Korea? - uncommondescent, 5th June 2012. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ