Tuesday, November 29, 2011

முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..




நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

                  பிரிட்டனின் பிரபல ஊடகமான "Mail Online", அதிரடியான செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது (28th Nov 2011). 

பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பரிணாம பாடத்தை புறக்கணிக்கின்றனர்/வெளிநடப்பு செய்கின்றனர் என்ற செய்தி தான் அது. இதற்கு காரணம், குர்ஆனின் போதனைகளுக்கு எதிராக பரிணாம கோட்பாடு இருப்பதாக அவர்கள் கூறுகின்றார்களாம்.


பாரம்பரியமிக்க இலண்டன் பல்கலைகழக கல்லூரியின் (University College London) பேராசிரியர்கள் இன்னும் அதிர்ச்சிதரக்கூடிய செய்தியையும் கூறுகின்றார்கள். அதாவது, முக்கிய பாடமான(??) டார்வீனிய கோட்பாட்டை, மத காரணங்களை கூறி புறக்கணிக்கும் உயிரியல் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாம். இது அவர்களுக்கு கவலை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

முஸ்லிம் மாணவர்களின் இத்தகைய எதிர்ப்புக்கு பின்னால் துருக்கியின் ஹாருன் யஹ்யா போன்றவர்களின் பரிணாம எதிர்ப்பு புத்தகங்கள் ஒரு காரணமாக இருக்கலாமென்று கூறப்பட்டுள்ளது. ஹாருன் யஹ்யாவின் குழுக்கள் பிரிட்டனில் தொடர்ந்து பரிணாம எதிர்ப்பு உரைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. 2008-ஆம் ஆண்டு, இலண்டன் பல்கலைகழக கல்லூரியில் பரிணாம எதிர்ப்பு உரையை ஹாருன் யஹ்யாவின் குழு நிகழ்த்தியது. இந்த ஆண்டு பிரிட்டனின் பல்வேறு இடங்களில் அவர்கள் பரிணாம எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். 

பரிணாம கோட்பாட்டின் தூதர்களில் ஒருவரான ரிச்சர்ட் டாகின்ஸ்சை நேரடி விவாதத்திற்கு அழைத்து பிரிட்டனின் பிரபல நாளிதழ்களில் ஹாருன் யஹ்யா விளம்பரம் கொடுத்திருந்தது இங்கு கவனிக்கத்தக்கது. 

ஆக, இதுப்போன்ற தீவிர பிரச்சாரங்கள் மாணவர்களின் புறக்கணிப்பிற்கு பின்னணியில் இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். 

முஸ்லிம் மாணவர்களின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டீவ் ஜோன்ஸ். இவர் இலண்டன் பல்கலைகழக கல்லூரியின் ஓய்வுப்பெற்ற மனித மரபியல் பேராசிரியராவார். தங்கள் நம்பிக்கைக்கு எதிராக உயிரியல் இருப்பதாக நினைத்தால் எதற்காக அந்த துறையை முஸ்லிம் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஸ்டீவ் ஜோன்ஸ். 

ஸ்டீவ் ஜோன்ஸின் இத்தகைய கருத்தை தங்களுக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் விமர்சித்திருக்கின்றது பரிணாம எதிர்ப்பு முன்னணி தளமான 'uncommon descent'. மருத்துவ பாடத்தில் டார்வினிசத்துக்கு என்ன வேலை என்று கேட்டிருக்கின்றது அந்த தளம். மருத்துவ பாடத்தில் டார்வினிசத்தை உள்ளே புகுத்தி மாணவர்களின் நேரத்தை வீணாக்குவது ஒரு அவதூறுச் செயலாக கருதப்பட வேண்டுமென்று கூறியிருக்கின்றது அந்த தளம். 

பரிணாம பாடத்தை புறக்கணிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே முஸ்லிம்கள் என்று குறிப்பிடும் 'Mail online', இதுக்குறித்த தன்னுடைய கவலையை டாகின்ஸ் பதிவு செய்திருப்பதாகவும் கூறுகின்றது. 

அது சரி, பரிணாம கோட்பாட்டை ஏற்காததற்காக உயிரியல் பயிலும் மாணவர்களை விமர்சிக்கின்றார்களே (சில) பேராசிரியர்கள், இந்த ஆண்டு துவக்கத்தில், Science ஆய்விதழில், அமெரிக்காவின் பெரும்பாலான உயிரியல் பாட ஆசிரியர்கள் பரிணாமத்தை ஆதரிக்க தயங்குவதாக செய்தி வெளிவந்ததே.....

ஆசிரியர்களுக்கே இந்த நிலை என்றால் மாணவர்களை சொல்லி என்ன செய்வது??

மூட நம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் நம்மை காப்பானாக..ஆமீன். 

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Muslim medical students boycotting lectures on evolution... because it 'clashes with the Koran' - Mail Online, 28th November 2011. link
2. British Muslim med students refuse to attend Darwin propaganda lectures - Uncommon descent. link
3. High School Biology Teachers in U.S. Reluctant to Endorse Evolution in Class, Study Finds - Science daily, 28th January 2011. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ








67 comments:

  1. Salam bro! Alhamdulilah! Avargalin yugam oru nalum payan tarathu! Verum kurudarglaga than dowkins & co ullathu!
    Ungaludiya ungaludaiya evelution patriya aarvathai ennavenru solvathu!!
    Matra oru sirapana pathivu!!

    ReplyDelete
  2. ASSALAMU ALAIKKUM W.R.B.


    மூட நம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் நம்மை காப்பானாக..ஆமீன்.

    இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன்.

    இறைவனே எல்லாம் அறிந்தவன்...


    ********

    இப்பதிவு மேலும் பல வாசகர்களை சென்றடைய வருகை தரும் வாசகர்கள் அனைவரும் தவறாது அன்பு கூர்ந்து "தமிழ்மணம்" பட்டையில் + ஓட்டளிப்பு இட்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ..

    ReplyDelete
  3. Nice article! We should implement this in Asian countries as well...

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    இந்த அளவிற்காவது இதை வெளியிட்டு ஒத்துக்கொண்டார்களே அது வரை சந்தோஷம் தான் :-)

    ஜஸாக்கலாஹ் க்கைர்

    ReplyDelete
  5. பரிணாமக் கோட்பாடும் மாறுதலுக்கு உட்பட்டதே! தவிர,மாற்றங்கள் என்பது முடிவல்ல இப்போது நாம் கடந்து வந்து இருக்கும் இடம்தான்!

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,
    மேலும் ஒரு நச் பதிவு.
    அதிலும் "முக்கிய பாடமான(??)" ஒரு அழகிய குசும்பு.
    பரிணாமத்தில் நீங்கள் காட்டும் ஆர்வம் போகிற போக்கை பார்த்தால் டார்வின், டாக்கின்ஸ்..... எல்லாம் மறந்து போய் ஆஷிக் நினைவு வரும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  7. Salaam,

    Good job.........
    insha allah reward u....

    ReplyDelete
  8. Starjan ( ஸ்டார்ஜன் ) has left a new comment on your post "முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..":

    Good Post. Thanks

    ReplyDelete
  9. வடக்குபட்டிTuesday, November 29, 2011

    அய்யா எனக்கு மூணு டவுட்டு:

    ௧.பரிணாம வளர்ச்சி பத்தி குரான் என்ன சொல்லுது?
    ௨.எனக்கு ரெண்டு டவுட்டு!மனிதர்கள் காட்டுவாசிகளாக திரிந்த பொது ஏன் இறைவன் தனது தூதரை அனுப்பி மக்களை பண்பட செய்யவில்லை?ஏன் மக்கள் civilized ஆனா பின்பே தூதரை அனுப்பினார்?வேலை மிச்சம் பிடிக்கவா?
    ௩.எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள மூலம் தோன்றியவர்கள் என்றால் தமது உடன் பிறந்தோர்களை அல்லாவா நாம் புணர்ந்து கொண்டிருக்கிறோம்?இது uncivilized இல்லையா?

    ReplyDelete
  10. ''தங்கள் நம்பிக்கைக்கு எதிராக உயிரியல் இருப்பதாக நினைத்தால் எதற்காக அந்த துறையை முஸ்லிம் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஸ்டீவ் ஜோன்ஸ்''.

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    நமது நம்பிக்கைக்கு எதிராக உயிரியல் இருப்பதாக இவர்கள் ( பரிணாமம் சரி என்று நம்பும் மூடர்கள்) சித்தரிக்கிறார்கள். உண்மையை வெகு காலம் அமுக்க முடியாது.இன்ஷா அல்லா உண்மை விரைவில் அனைத்து மக்களையும் சென்றடையும்

    ReplyDelete
  11. சகோதரர் வடக்குப்பட்டி,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் அமைதி நிலவுவதாக...

    1. ///௧.பரிணாம வளர்ச்சி பத்தி குரான் என்ன சொல்லுது?///

    பரிணாமத்தை பற்றி குரான் ஒன்றுமே சொல்லவில்லை சகோதரர். இந்த பிரபஞ்சம், அதில் உள்ளே விதிகள், உயிரினங்கள் என்று சகலத்தின் உருவாக்கத்திற்கு பின்னாலும் இறைவன் இருக்கின்றான் என்று தான் இறைவன் குர்ஆனில் கூறுகின்றான். குர்ஆனின் பல வசனங்கள் படைப்புகளை பற்றி சிந்திக்க சொல்கின்றன. இதேயே தான் இன்றைய ஆய்வாளர்களில் ஒரு பகுதியினரும் கூறுகின்றனர். அதாவது, தற்செயலாக உயிரினங்கள் உருவாக வாய்ப்பில்லை (Natural selection + random mutation), இவற்றின் தோன்றுதலுக்கு பின்னால் ஒரு அறிவார்ந்த சக்தி இருக்க வேண்டுமென்று கூறுகின்றனர். தங்களால் முடிந்தால், நேரம் கிடைத்தால் பரிணாமத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் Intelligent Design கோட்பாட்டை ஆய்வு செய்து பாருங்கள்.

    ReplyDelete
  12. 2. ///௨.எனக்கு ரெண்டு டவுட்டு!மனிதர்கள் காட்டுவாசிகளாக திரிந்த பொது ஏன் இறைவன் தனது தூதரை அனுப்பி மக்களை பண்பட செய்யவில்லை?ஏன் மக்கள் civilized ஆனா பின்பே தூதரை அனுப்பினார்?வேலை மிச்சம் பிடிக்கவா?///

    சகோதரர், தாங்கள் civilised, uncivilised என்று எப்படி தரம் பிரிக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. இஸ்லாத்தை பொறுத்தவரை உலகின் முதல் மனிதரான ஆதாம் (அலை) அவர்களே ஒரு தூதர் தானே..ஆதாம் (அலை) தொடங்கி மக்களை நேர்வழிபடுத்த தொடர்ந்து தூதர்களை அனுப்பிதாக இறைவன் குர்ஆனில் கூறுகின்றானே. அதுமட்டுமல்லாமல் ஆரம்ப கால மனிதர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனவே. அதாவது, ஆரம்ப கால மனிதர்கள் பயன்படுத்திய யுக்திகள் பின்னர் வந்த மனிதர்களின் யுக்திகளோடு compare செய்தபோது சிறந்தவைகளாக இல்லை என்று தானே ஆய்வுகள் கூறுகின்றன. இது மட்டுமா, அவர்கள் உடல் ஆபரணங்களை செய்திருக்கின்றார்கள், இறந்தவர்களை புதைத்திருக்கின்றார்கள், தாங்கள் வாழும் இடங்களை ஒழுங்குபடுத்திருக்கின்றார்கள் என்று தாங்கள் இருந்த காலத்திற்க்கேற்ப பண்பாட்டில் சிறந்தவர்களாக தானே இருந்திருக்கின்றனர்?

    ஆக, இஸ்லாமிய கருத்துக்களின்படி மனிதன் தொடங்கிய காலத்தில் இருந்தே தூதர்கள் வந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். நீங்கள் கூறுவது போல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்புதான் தூதர்கள் வந்தார்கள் என்பது இஸ்லாமிய கருத்துக்கள் அல்ல.

    ReplyDelete
  13. 3. ////௩.எல்லா மனிதர்களும் ஆதாம் ஏவாள மூலம் தோன்றியவர்கள் என்றால் தமது உடன் பிறந்தோர்களை அல்லாவா நாம் புணர்ந்து கொண்டிருக்கிறோம்?இது uncivilized இல்லையா?///

    கிளைகள் விட்ட பிறகு எப்படி தாங்கள் இப்படியான எண்ணத்தை சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை. ஆரம்ப காலங்களில் (சந்ததிகளை பெருக்க வழி என்பதால்) அவை அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும். பிற்பாடு அவை தடை செய்யப்பட்டன. இஸ்லாம் காலத்திற்கு ஏற்றவாரே தன் கொள்கைளை வழிமுறைபடுத்தி இருக்கின்றது. சகோதரர், உங்கள் கூற்றை ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும், இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுமே (நாம் உட்பட) ஒரு உயிரினத்தில் இருந்தே (Last universal common ancestor LUCA) வந்ததாக பரிணாமம் கூறுகின்றது...அப்படியென்றால்..அப்படியென்றால்...உங்கள் கூற்றுப்படி ?????

    சகோதரர், நான் உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் பரிணாமம் என்று கோட்பாட்டை திறந்த மனதுடன் ஆய்வு செய்ய முன்வாருங்கள் என்பது தான். அதுபோல குரானையும்...உங்களிடம் குரான் இல்லையென்றால் எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்பவும். குரான் தமிழ்மொழிபெயர்ப்பு அனுப்பி வைக்கின்றேன்....

    சகோதரர் இன்னொன்று, தர்காவிற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. (தாங்கள் fb-இல் கூறியிருந்ததை பார்த்தேன்)

    நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியும், அமைதியையும் பெற்று வாழ்ந்திட பிரார்த்தித்தவனாக...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    இப்படிலாம் எல்லாரும் எதிர்க்க ஆரம்பிச்சுட்டா இத விட பரிணாம ஆதரவாளர்களுக்கு தலவலி கொடுக்க முடியாது :-)

    அருமையான செய்தி அறிய தந்தமைக்கு நன்றி சகோ

    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
  15. அப்பட்டமான பொய்யை தெரிந்தே படிக்க வேண்டி இருக்கு. என்ன கொடும???

    ReplyDelete
  16. ஸலாம் சகோ.ஆஷிக் அஹமத்,
    இந்த செய்தி வேண்டுமென்றே உண்மையுடன் பொய்யை புனைந்து கூறப்பட்ட தகவலாகவே எனக்குத்தெரிகிறது. அதையும்கூட நீங்கள் விமர்சிக்காமல் அப்படியே இங்கே தந்து விட்டீர்கள்.

    காரணம்,
    படைப்புக்கோட்பாட்டில் நம்பிக்கையுடைய கிறிஸ்துவர்களும் பரிணாமத்தை புறக்கணிக்கவே செய்கின்றனர்.

    படைப்புக்கோட்பாட்டில் நம்பிக்கையுடைய யூதர்களும் பரிணாமத்தை புறக்கணிக்கவே செய்கின்றனர்.

    வர்ணாசிரமத்தில் நம்பிக்கையுடைய பார்ப்பனர்களும் அவர்களை ஆதரிக்கும் ஹிந்துக்களும் பரிணாமத்தை புறக்கணிக்கவே செய்கின்றனர்.

    இதையெல்லாம் விட மிக்க முக்கியமாக...

    அறிவியலை கசடற கற்ற உயிரியலாளர்களும் பரிணாமத்தை ஒரு ஆதாரமற்ற கட்டுக்கதை என்று கூறி intelligent design கோட்பாட்டை முன்மொழிந்து பரிணாமத்தை புறக்கணிக்கவே செய்கின்றனர்.

    ஆகவே,

    நன்றாக அறிவியல் படித்த அந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உயிரியல் வகுப்புக்களில் வெறும் கட்டுக்கதை இருந்தால் அதை புறக்கணிப்பதில் என்ன குற்றம்..? புறக்கணிக்காமல் அங்கே அமர்ந்து இருப்பதே இஸ்லாமிய அடிப்படையில் குற்றம்..!

    ஏனெனில்... இறைவன் குர்ஆனில் கூறுவது என்ன..?

    குர்ஆன் -2:42. "நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."


    இஸ்லாமிய கல்லூரி மற்றும் பள்ளிகளில், இந்த ஆதாரமற்ற பரிணாம கட்டுக்கதைகளை இன்னும் மாணவர்களுக்கு "அறிவியல்" என்ற போர்வையில் போதிப்பதும் இன்னொரு பெரிய குற்றம். ஏமாற்றுவேலை. திருட்டுத்தனம்.


    வேண்டுமானால்... வாரத்திற்கு ஒருநாள் மைன்ட் ரிலாக்ஸ்ஸிற்காக கதைகள் சொல்லித்தரும் leisure story class களில்...

    இனி,
    அம்புலிமாமா...
    ஹாரிபாட்டர்...
    சூப்பர்மேன்... கதைகளுடன்,
    பரிணாமம் பற்றியும்...
    அக்கதையின் கதாசிரியர் டார்வின் பற்றியும் சொல்லிக்கொடுத்தால் மாணவர்களுக்கு நன்றாக பொழுது போகுமே..!

    ReplyDelete
  17. தெற்குப்பட்டிTuesday, November 29, 2011

    //இது uncivilized இல்லையா?//---அப்பாடா... நல்லதொரு சிந்தனை முயற்சி. நன்றி.

    அந்தக்கால மனிதர்கள் இலை/தழையை யாவது ஆடையாக அணிவது civilized என்று இருந்தது. இன்றோ, நிர்வாணமாக பப்ளிக் பீச்சில் சன்பாத் எடுப்பது எல்லாம் civilized society என்றாகிவிட்டது.

    மேலும், தாய்/தந்தை/சகோதரர்களுடன் என, incest sex கூட civilized ஆகிவிட்டது.

    ஆக, எது civilized எது uncivilized என்பது காலத்துக்கு காலம் சமூகத்தில் மாறுகிறது.

    ஆனால், இஸ்லாத்தில் ஒருமுறை ஒன்று மாறியது என்றால், அது மறுமுறை பழைய முறைக்கு திரும்பியதில்லை.

    சகோதரர்கள் மட்டுமே ஆண்/பெண் என்று இருந்த அப்போதைய நிலையில் அப்போது அதுதான் civilized. பின்னர் மக்கள்தொகை பல்கி பெருகிய பின்னர் அது uncivilized. இது ஒருபோதும் civilized ஆகாது.

    சின்னம்மாவை திருமணம் செய்யச்சொன்னால் "ச்சீ இது uncivilized" என்று சொல்லி, தாய்மாமனை 'முறைமாமன்' என்று உரிமையுடன் திருமணம் செய்யும் civilized தமிழ் சமூகம், ஒருவழியாக சிந்திக்க ஆரம்பித்து விட்டது. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. @~முஹம்மத் ஆஷிக் citizen of world~

    +1

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்

    சிறிய பதிவானாலும் சிந்திக்க வைக்கும் பதிவு.மாஷா அல்லாஹ்.

    பதிவில் பிடித்த வரி : மருத்துவ பாடத்தில் டார்வினிசத்துக்கு என்ன வேலை என்று கேட்டிருக்கின்றது அந்த தளம்.

    ReplyDelete
  20. பரிணாமம் பற்றியும்...
    அக்கதையின் கதாசிரியர் டார்வின் பற்றியும் சொல்லிக்கொடுத்தால் மாணவர்களுக்கு நன்றாக பொழுது போகுமே..! ///

    டார்வின் கதையை கேட்டல் பொழுது போகாது.போரடிச்சு தூக்கம்தான் வரும் ஆஷிக் அண்ணா

    ReplyDelete
  21. அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள் ஆசிக். தொடருங்கள்.

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த அளவிற்காவது இதை வெளியிட்டு ஒத்துக்கொண்டார்களே அது வரை சந்தோஷம் தான்.

    ReplyDelete
  23. அழகாக விவரித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  24. Haroon Yahyavin videosai niraya paarka vendum endru meendum thondrukirathu ...

    We have to learn more patience in answering, Alhamdulillah you are doing good.

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    //பரிணாமத்தில் நீங்கள் காட்டும் ஆர்வம் போகிற போக்கை பார்த்தால் டார்வின், டாக்கின்ஸ்..... எல்லாம் மறந்து போய் ஆஷிக் நினைவு வரும் இன்ஷா அல்லாஹ்//

    சகோதரர் ஜாகிர் சொல் தமிழ்பேசும் சமூகத்தில் முற்றிலும் உண்மையாகும் ஒருநாள்!இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    வழக்கம்ப்போல் அறிவியலுக்கு ஆதார பதிவு

    //முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..//

    கவலை - காரணம் அறியப்படும் போது பரிணாமம்....எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கற்பனை கதையாக மாறும்!

    பகிர்ந்த பதிவிற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete
  27. சலாம் ..!!!
    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  28. இதுவரைக்கும் கருத்துல தான் கற்காலத்துக்கு போய்க்கிட்டுருந்தோம் இனி செயல்லயுமா ? நம் ஆண்டவராகிய இறைவன் நம்மைக் காப்பாற்றுவாராக.

    ReplyDelete
  29. நானும் இவர்களை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் ....
    அந்த மூன்று கேள்விகள் ...
    குண்டக்க மண்டக்க தான் கேள்வி எழுப்பயுள்ளார் ...
    அவருக்கு எதிர்குரல் வழியாக பின்னூட்டத்தில் பதில் அழிக்க பட்டுள்ளது ... மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்டால் என்ன நியாயம் பொய் பகுத்தறிவாளர்களே !!!!!
    முதலில் அதற்க்கு உண்டான பதில் படியுங்கள் ... அடுத்து அதில் இருந்து கேள்வி எழுப்புங்கள் ...

    ReplyDelete
  30. சகோதரர் ஜாபர் கான்,

    வ அலைக்கும் ஸலாம்..

    //Avargalin yugam oru nalum payan tarathu!///

    இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக...

    //Verum kurudarglaga than dowkins & co ullathu!//

    :) :)

    //Ungaludiya ungaludaiya evelution patriya aarvathai ennavenru solvathu!!//

    உயிரியலும் இயற்பியலும் மிக ஆர்வமூட்டும் துறைகள். அதிலும் இயற்பியல் நான் சார்ந்துள்ள துறை. ஆகையால் இயல்பாகவே இவற்றின் மீது ஆர்வம் அதிகம். அதுமட்டுமல்லாமல் இந்த ஓட்டைகளை எல்லாம் பார்க்கும்போது அதை விமர்சிப்பது எனபது ஒரு ஜாலியான அனுபவமே...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  31. அன்பு வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..

    ReplyDelete
  32. சகோதரர் லங்கா வாட்ச்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //We should implement this in Asian countries as well...///

    இன்ஷா அல்லாஹ்...

    கருத்துக்கு நன்றி பிரதர்...

    ReplyDelete
  33. சகோதரர் ஜெய்லானி,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

    //இந்த அளவிற்காவது இதை வெளியிட்டு ஒத்துக்கொண்டார்களே//

    ஆமாம். அதே நேரம் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஏனெறால் இந்த நிலை பெருகிக்கொண்டே வருகின்றது. இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் வெளிவந்து தான் ஆக வேண்டும்.

    வருகைக்கும் துவாவிற்கும் நன்றி...

    ReplyDelete
  34. சகோதரர் ஓசூர் ராஜன்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக..

    //பரிணாமக் கோட்பாடும் மாறுதலுக்கு உட்பட்டதே..//

    இதனை பரிணாமவாதிகள் ஒப்புக்கொண்டால், அறிவியல், அசுத்தங்கள் இல்லாமல் ஆரோக்கியமான பாதையில் பயணிக்கும்...

    வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  35. சகோதரர் ஜாகிர்,

    வ அலைக்கும் ஸலாம்,

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்...

    ReplyDelete
  36. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..நல்லபதிவு தொடரட்டும் உங்களின் அழகிய பணி..

    ReplyDelete
  37. சகோதரர் சுல்தான்,

    வ அலைக்கும் ஸலாம்,

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்..

    ReplyDelete
  38. சகோதரர் ஸ்டார்ஜன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்...

    ReplyDelete
  39. சகோதரர் ரப்பானி,

    வ அலைக்கும் சலாம்..

    //நமது நம்பிக்கைக்கு எதிராக உயிரியல் இருப்பதாக இவர்கள் ( பரிணாமம் சரி என்று நம்பும் மூடர்கள்) சித்தரிக்கிறார்கள்.///

    உண்மைதான். இதற்கு தான் uncommon descent தளத்தினர் அதிரடியாக கேட்டார்கள், பரிநாமதிற்கும் மருத்துவ பாடத்திற்கும் என்ன சம்பந்தம் என்று...ஹா ஹா ஹா... அதுமட்டுமில்லாமல், பரிணாமவாதிகள் //நமது நம்பிக்கைக்கு எதிராக உயிரியல் இருப்பதாக// - இப்படி சொன்னால் அது உண்மையாகிவிடுமா என்ன?

    கருத்துக்கு நன்றி சகோதரர்...

    ReplyDelete
  40. //மூட நம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் நம்மை காப்பானாக..ஆமீன்.//
    சிந்திக்க தெரியாதவனே மூடன் எனப்படுவான், சுயமாக சிந்தித்து மனித குலத்திற்கும், அறிவியலுக்கும் பெரிய அளவில் எந்த பங்களிப்புமே இல்லாமல் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கடவுளிடம் இருந்து வந்ததாக சொல்லப்பட்ட வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு அதில் இருப்பது மட்டமே உண்மை மற்றவை எல்லாம் பொய் என்று உங்கள் மூளைகளை ஒரு புத்தகதிற்குள் அடகு வைத்து கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டி கொண்டு இருக்கும் நீங்கள் மற்றவர்களை முட நம்பிக்கையாளர்கள் என்கிறீர்கள். தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான் என்று வேடிக்கையாக கூறுவார்கள். அது போலதான், அந்த புத்தகத்தை தாண்டி உங்களுக்கும் சிந்திக்க தெரியாது, சிந்திப்பவர்களுக்கு இதுபோன்ற பட்டங்களை கொடுக்க தான், முடியும். உங்களை போன்றவர்களை சொல்லி தவறில்லை. உங்களால் முடிந்தது அவ்வளவுதான்.

    http://www.youtube.com/watch?v=bk5q9TeGo14
    இறைவா இந்த வீடியோவில் மக்களிடம் பொய்களையும் புரட்டினையும் சொல்லிக்கொண்டு இருக்கும் இவரை போன்றவர்களிடம் இருந்து உலகை காப்பாற்றுவாயாக

    ReplyDelete
  41. Asslaamu alaikum brother,

    Please have look a this site. You will get an amazing result in it.

    Allah is great.

    /// http://tamil.oneindia.in/editor-speaks/2011/12/14-physicists-find-tantalizing-hints-of-higgs-boson-aid0090.html ///

    ReplyDelete
  42. சகோதரி ஆமினா,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    //இப்படிலாம் எல்லாரும் எதிர்க்க ஆரம்பிச்சுட்டா இத விட பரிணாம ஆதரவாளர்களுக்கு தலவலி கொடுக்க முடியாது///

    :) :)

    வருகைக்கும் துவாவிற்கும் நன்றி...

    ReplyDelete
  43. சகோதரர் முஹம்மது பாஈக்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //அப்பட்டமான பொய்யை தெரிந்தே படிக்க வேண்டி இருக்கு. என்ன கொடும???//

    உண்மைதான்...கூடிய விரைவில் நிலைமை மாறும். இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  44. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் ஸலாம்,

    நீங்கள் கூறுவது உண்மைதான். தற்போதைய காலக்கட்டத்தில் முஸ்லிம்களே பரிணாம கோட்பாட்டை கடுமையாக எதிர்பவர்கள், வியூகம் அமைப்பவர்கள் என்பது மாதிரியான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பானதும் கூட.

    ///வேண்டுமானால்... வாரத்திற்கு ஒருநாள் மைன்ட் ரிலாக்ஸ்ஸிற்காக கதைகள் சொல்லித்தரும் leisure story class களில்...
    இனி,
    அம்புலிமாமா...
    ஹாரிபாட்டர்...
    சூப்பர்மேன்... கதைகளுடன்,
    பரிணாமம் பற்றியும்...
    அக்கதையின் கதாசிரியர் டார்வின் பற்றியும் சொல்லிக்கொடுத்தால் மாணவர்களுக்கு நன்றாக பொழுது போகுமே..!/////

    ஹா ஹா...fantasy கதைகள் போல குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்கலாம். மாயா ஜால கதைகளுக்கு சிறிதும் குறைவில்லாதது பரிணாம கதைகள் ஆச்சே...

    ReplyDelete
  45. சகோதரர் முஸ்லிம்,

    வ அலைக்கும் ஸலாம்,

    //டார்வின் கதையை கேட்டல் பொழுது போகாது.போரடிச்சு தூக்கம்தான் வரும் ஆஷிக் அண்ணா///

    பாஸ். உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்ப தப்பு. படிக்க படிக்க சுவாரசியத்தை கொடுக்க கூடியவை பரிணாம கதைகள். இவைகளுக்கு எந்த கற்பனை கதைகளும் ஈடாகாது...

    ReplyDelete
  46. சகோதரர் நூருல் அமீன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்....

    தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  47. சகோதரர் சுவனப்பிரியன்,

    வ அலைக்கும் ஸலாம்,

    //இந்த அளவிற்காவது இதை வெளியிட்டு ஒத்துக்கொண்டார்களே அது வரை சந்தோஷம் தான்.//

    :) :)

    ReplyDelete
  48. சகோதரர் ஒருவனின் அடிமை,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஊக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
  49. சகோதரர் ஜமால்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //Haroon Yahyavin videosai niraya paarka vendum endru meendum thondrukirathu ...//

    பாருங்கள் சகோதரர். அதேநேரம், அவர்கள் சொல்வதை தாங்களும் ஆய்வு செய்யுங்கள்.

    //We have to learn more patience in answering,///

    exactly said...

    ஊக்கத்திற்கு நன்றி பிரதர்..

    ReplyDelete
  50. சகோதரர் குலாம்,

    வ அலைக்கும் ஸலாம்....

    //கவலை - காரணம் அறியப்படும் போது பரிணாமம்....எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கற்பனை கதையாக மாறும்!///

    இன்ஷா அல்லாஹ்.

    வருகைக்கும் துவாவிற்கு நன்றி குலாம்...

    ReplyDelete
  51. சகோதரி நிஹாஷா,

    வ அலைக்கும் ஸலாம்,

    கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  52. சகோதரர் ராஜன்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

    //இதுவரைக்கும் கருத்துல தான் கற்காலத்துக்கு போய்க்கிட்டுருந்தோம் இனி செயல்லயுமா ?///

    இந்த தளத்தில் உள்ள பரிணாம கட்டுரைகளை படித்து பதில் சொல்ல முயற்சியுங்களேன் பாப்போம். உங்கள் கணக்குப்படி கற்காலம் என்பது விவகாரமான காலமாக இருந்தால் அந்த காலத்திற்கு யார் செல்வது என்று புரியும்.

    அது சரி, கற்கால மனிதர்கள் இந்த கால மனிதர்களோடு ஒப்பிடும்போது அறிவில் சிறந்தவர்கலாமே...சும்மா ஒரு தகவலுக்காக சொன்னேன்.

    //நம் ஆண்டவராகிய இறைவன் நம்மைக் காப்பாற்றுவாராக.///

    ஆண்டவர் = இறைவன். அப்படித்தான் நினைத்திருக்கின்றேன். எனினும் ஆமீன்.

    ReplyDelete
  53. சகோதரர் புதிய தென்றல்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

    வருகைக்கும் ஊக்கதிற்கும் நன்றி...

    ReplyDelete
  54. சகோதரர் நல்ல ப்ளாக்கரை ஆதரிப்பவன்,

    அடடா என்னா ஒரு பெயர்... :)

    //முதலில் அதற்க்கு உண்டான பதில் படியுங்கள் ... அடுத்து அதில் இருந்து கேள்வி எழுப்புங்கள் ...///

    நன்றி சகோதரர். கேட்கட்டும், இறைவன் அதற்குண்டான கல்வி அறிவை கொடுத்தால் பதில் சொல்லுவோம்...இன்ஷா அல்லாஹ்...

    ReplyDelete
  55. சகோதரி மலிக்கா,

    வ அலைக்கும் ஸலாம்,

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..

    ReplyDelete
  56. Aashiq Ahamed,

    வணக்கம் !

    //இந்த தளத்தில் உள்ள பரிணாம கட்டுரைகளை படித்து பதில் சொல்ல முயற்சியுங்களேன் பாப்போம். உங்கள் கணக்குப்படி கற்காலம் என்பது விவகாரமான காலமாக இருந்தால் அந்த காலத்திற்கு யார் செல்வது என்று புரியும்.//

    விவகாரம் என்று எதைச் சொல்கிறீர்கள் ?

    //ஆண்டவர் = இறைவன். அப்படித்தான் நினைத்திருக்கின்றேன். எனினும் ஆமீன்.//

    ஆமென்.

    ReplyDelete
  57. marvelous post. may allah showers his blessing upon you & ur family.

    Regards
    ungalblog1.blogspot.com

    ReplyDelete
  58. Ok I agree to all ur points but...

    As per this essay DNA, Human anatomy are very complex which needs a ID - Intelligent Designer ... If so the Designer who creates this complex design should be created by someone ... If Humnas are so complex to be created automatically from nature.. How GOD who shud be much more complex than man can exist without a creator ???

    ReplyDelete
  59. Also can u give the approximate timeline of creation of Humans in earth as per Koran ??? Because the approximate given as per bible are already proved wrong by Carbon dating technique..

    ReplyDelete
  60. Dear Brother Jenil,

    May peace and blessings of Almighty be upon you..

    //Also can u give the approximate timeline of creation of Humans in earth as per Koran ???//

    Qur'an does not mention any time line.

    thanks,

    ReplyDelete
  61. Dear brother Jenil,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக..

    // If so the Designer who creates this complex design should be created by someone//

    this kinda questions were asked about 1500 yrs ago itself. Prophet (saw) talked about this question and kuran also addresses this in the following manner.

    1. ""அல்லாஹ் ஒருவன்’’ என கூறுவீராக!
    2. அல்லாஹ் தேவைகலற்றவன்.
    3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
    4. அவனுக்கு நிகராக யாருமில்லை.
    ------ குர்ஆன் 112:1-4.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  62. Ha Ha Ha.... Here comes the truth

    1. Ur Koran won't say when MAN was created.. So u r beleiving that GOD created MAN without any proof(just a book can't be proof) but u will laugh at people who believe in EVOLUTION which at least have some points to say... And wait brother one day the science of Evolution will also get deveopled as COMPUTERS and ELECTRONICS on that day the history of HUMAN race will be revealed without any doubt... As of now u people are just like people(christians) who laughed at early scientist who said "WORLD IS SPHERICAL AND IT GOES AROUND THE SUN"

    2.I asked "Who created GOD" for tat u r giving reference from KORAN... This is like a tamil old saying "VELIKKU OONANAN SATCHI"... This shows how biased u ppl are.. U will beleive without any proof(A book can't be a proof) that someone is GOD..But u won't analyse a sceience which is still developing(EVOLUTION)...For ur information all the proofs u r giving here are just set backs for EVOLUTION no one have ever proved that EVOLUTION is totally not acceptable..

    ReplyDelete
  63. Brother Jenil,

    Assalamu Alaikum,

    1. //Ur Koran won't say when MAN was created.. So u r beleiving that GOD created MAN without any proof(just a book can't be proof)// - This is simply a vague argument. Quran came to direct people to straight path. When it said some time and modern science contradicts with that, then we have a problem. But Quran simply says there is God behind the creation of Universe(s) and all those inside it. If we are going to argue that quran should specify some time, then that argument goes endless like when was jesus born, when this and that created etc. Quran doesn't came for that purpose.

    2. //but u will laugh at people who believe in EVOLUTION which at least have some points to say...// - I would love to hear those points. Could u pls summarize for me? First of all let me clear some misconceptions u may have about my position. If you define evolution as simply "change with-in organisms (Horizontal evolution)", I don't have any problem in accepting it. But when you define evolution as a mechanism which changes living beings to another by means of ns+rm (or by any other natural means), then I have a problem. The problem is, vertical evolution does not have any evidence to back up its claim. All those evidences which once thought to be a great support for evolution theory, they all crashed down.

    ReplyDelete
  64. 3. //And wait brother one day the science of Evolution will also get deveopled as COMPUTERS and ELECTRONICS on that day the history of HUMAN race will be revealed without any doubt...//

    thanks for accepting this. But the big problem you have is, the wrong comparison. Computers and electronics invention moved forward, from electron proton neutron invention to transistors to IC's to PLD's to FPGA's etc etc. But the evolution theory moves downwards. If you check out from the period of Darwin, the more and more advancements made in the field of Biology, the more and more evolution theory crashes down. Complexity of living beings are unimaginable and that is what lead to the increase in support of ID theory.

    4. //As of now u people are just like people(christians) who laughed at early scientist who said "WORLD IS SPHERICAL AND IT GOES AROUND THE SUN"//

    this is again a false statement and bad comparison. Please go ahead and understand the difference between Scientific method and a mere observation.

    5. //I asked "Who created GOD" for tat u r giving reference from KORAN... This is like a tamil old saying "VELIKKU OONANAN SATCHI"... This shows how biased u ppl are..//

    Brother, I thought of giving u a answer from Islamic point of view just like the timeline. Who created God? we say there is no start or end for God. Reason is that, God created the physical world and laws inside it. Hence the physical laws doesn't apply to the creator. Also, if u are going to propose who created God question and I say somebody's name then u will ask who created that somebody...this goes on and on and have to stop at some particular point. that becomes ur God. So, Who created God is simply a non-sensible question if u follow logic. Pls see this video (it takes just two mins) of Br.Andreas which coincides with my view. http://www.youtube.com/watch?v=PVQji-psCys

    ReplyDelete
  65. 6. //U will beleive without any proof(A book can't be a proof) that someone is GOD..//

    Wrong statement again. When u believe someday evolution will be clear cutly proved, what is the blame on us when we believe in God? After all, we believe God from the scientific advancements. We see the immense complexity exist on universe and We believe God from the evidence presented. What is the problem with that? As u know, there is a section of scientific community which believes evolution cannot be a answer and Intelligent source should be the answer. Good number of their articles published on peer reviewed journals too.

    7. //.But u won't analyse a sceience which is still developing(EVOLUTION)...For ur information all the proofs u r giving here are just set backs for EVOLUTION no one have ever proved that EVOLUTION is totally not acceptable..//

    I feel so sad for u. you simply have a blind belief. U have to analyse current scientific findings, community and advancements with open mind to understand better. As i told u earlier, even myself can't reject evolution as a whole. I accept horizontal evolution which is quite scientific (and everybody accepts it) and we don't require darwin to explain that. But vertical evolution, no i can't. If you think there is nobody in scientific community to take on vertical evolution, i feel very sad for u. Go ahead and analyse the community.

    And i don't think i have anything more to explain on the topic. pls post ur further opinion and if i think they have to be answered i will be back to answer ur claims. By the way, if u have any interest in going through quran pls contact me in my mail id. i will send u the soft copy of tamil translation of meanings of Qur'an.

    Thanks and take care,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  66. சகோதரர் அபு நதீம்,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    தங்களது ஊக்கத்திற்கும் துவாவிற்கும் மிக்க நன்றி..

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  67. Mr Jenil!

    //1. Ur Koran won't say when MAN was created.. So u r beleiving that GOD created MAN without any proof(just a book can't be proof)//

    16:4. அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.
    19:66. (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.

    19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?


    22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.

    ReplyDelete