Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts

Tuesday, December 18, 2012

பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 

ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 



வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை எதிர்க்கொண்டு அபாரமான வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்லாம். இந்த கணக்கெடுப்பு மூலமாக, பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல ஊடங்களும் இஸ்லாமின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே செய்திகளை வெளியிடுகின்றன. 

மேலே கூறியதை ஆழமாக புரிந்துக்கொள்ள சென்சஸ் தகவல்களுக்கு இப்போது செல்வோம். 

பிரிட்டனின் மொத்த மக்கட்தொகை 2001-2011 காலக்கட்டத்தில் 7% அதிகரித்து 5.6 கோடியாக உள்ளது. 

பிரிட்டனை பொருத்தமட்டில், அதிக மக்களால் பின்பற்றப்படும் மதம் என்றால் அது கிருத்துவம் தான். ஆனால் கிருத்துவத்துவர்களின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டு சென்சசை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. 2001-ல் 3.7 கோடியாக இருந்த கிருத்துவ மக்களின் எண்ணிக்கை தற்போது நாற்பது லட்சம் குறைந்து 3.3 கோடியாக உள்ளது.  சதவித கணக்கில் சொல்லப்போனால் 71%-மாக இருந்த கிருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது 59%-மாக குறைந்துள்ளது. 

இது ஆய்வாளர்களுக்கு பலத்த ஆச்சர்யத்தை தந்துள்ளது. 

அதே நேரம், நாத்திகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2001-ல் 14%-மாக இருந்த நாத்திகர்களின் எண்ணிக்கை இப்போது 25%-மாக உயர்ந்துள்ளது. ஆக, பிரிட்டன் மக்கட்தொகையில் நான்கில் ஒருவர் நாத்திகர். 

கிருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம், இப்போதெல்லாம் கலாச்சாரம் சார்ந்து தங்களை கிருத்துவர்கள் என்று அடையாளப்படுத்துவோர் குறைந்துள்ளதாக இங்கிலாந்து சர்ச் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

கிறித்துவத்தின் வீழ்ச்சிக்கும், நாத்திகத்தின் வளர்ச்சிக்கும் ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு பெரும் பங்கிருப்பதாக கருதப்படுகின்றது. 

இங்கு தான், ஆய்வாளர்களை வியப்பூட்டும் அந்த செய்தி வருகின்றது. ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்று பிரபல "டெய்லி மெயில்" ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏன் என்பதற்கு சென்சஸ் தகவல்களை பார்த்தால் விடை சொல்லிவிடலாம். 

பிரிட்டன் முஸ்லிம்களின் மக்கட்தொகை கடந்த பத்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2001-ல் 15 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 12 லட்சம் அதிகரித்து தற்போது 27 லட்சமாக உயர்ந்துள்ளது. சதவித கணக்கில் சொல்ல வேண்டுமானால் 2001-ல் 3%-மாக இருந்த முஸ்லிம்கள் இப்போது சுமார் 5% இருக்கின்றனர். இஸ்லாமின் இந்த வளர்ச்சி மற்ற எந்த மார்க்கத்தை விடவும் மிக அதிகமாகும். இதனாலேயே 'பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம்' என ஊடகங்கள் தலையங்கம் வெளியிடுகின்றன. 



இந்த செய்தி குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் பன்முகத்தன்மையில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 

முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பு மேலும் பல முக்கிய விசயங்களுக்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஈத் விடுமுறைகள் குறித்தும், ரமலான் மாதம் அணுகப்படும்விதம் குறித்தும், பள்ளிகளில் இஸ்லாம் போதிக்கப்படும்விதம் குறித்தும் சிந்திக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் இஸ்லாம்-கிருத்துவ மன்றத்தின் தலைவரான ஜூலியன் பான்ட். 

இப்படியான அபார வளர்ச்சிக்கு தெளிவான காரணங்கள் அலசப்படவில்லை. குடியேற்றம் (Immigration) ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது (பார்க்க <<இங்கே>> மற்றும் <<இங்கே>>). 

இப்போது இந்த பதிவின் தலைப்புக்கு வருவோம். 

சில மாதங்களுக்கு முன்பு தான், கடந்த பத்து ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரித்து, அமெரிக்காவில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்ற ஆய்வு முடிவுகள் வெளிவந்தன (பார்க்க <<இங்கே>>). 

இப்போது பிரிட்டனிலும் அதே நிலைமை உருவாகியிருப்பது குறித்து டெய்லி மெயில் ஊடகம் கருத்து தெரிவிக்கும் போது, 'பிரிட்டன் வாழ்க்கையில் இருந்து கிருத்துவத்தை வெளியேற்ற உற்சாகமாக செயல்படும் நாத்திகர்கள், தங்களின் இச்செயல் இஸ்லாமிற்கான காலியிடத்தை மட்டுமே உருவாக்கியுள்ளதை உணர்ந்துக்கொள்வார்கள். இஸ்லாம் என்னும் நம்பிக்கையை ரிச்சர்ட் டாகின்ஸ்சால் ஒன்றுமே செய்ய முடியவில்லை' என்று தெரிவித்துள்ளது. 

You struck the nail on head regarding dawkins dear DAILY MAIL. :-) :-)

நீங்க முஸ்லிமல்லாதவரா? குர்ஆனில் அப்படி என்ன தான் இருக்கின்றதென்று பார்க்க விருப்பமா? aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பை மின்னூல் வடிவில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Download census report at:
1. Office of National Statistics. link

Picture taken from:
1st Picture - Page 1 of census report 
2nd Picture - Page 7 of Census report 

References:
1. British Census: Islam Fastest-Growing Faith in England; Christians Drop to 59% of Population - CNS News, 12th Dec 2012. link
2. Christians could be minority by 2018, census analysis reveals - The guardian. 11th Dec 2012. link
3. Alien nation: The new census reveals a Britain that would be unrecognisable even to our grandparents - Daily Mail, 15th Dec 2012. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Friday, December 23, 2011

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். 

அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை. 

அறிவியல் கடவுளை மறுக்கின்றது என்று அவர்கள் எப்படி எண்ணுகின்றார்களோ, அதுபோலவே, அறிவியல் வளர்ச்சி இறைவனை மெய்ப்பிக்கின்றது என்று ஆத்திகர்கள் நம்புகின்றனர். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், உலகின் செல்வாக்கு மிகுந்த நாத்திகர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆத்திகத்திற்கு தங்கள் எண்ணங்களை மாற்றியதற்கு காரணம் இதே அறிவியல் வளர்ச்சி தான்.  

பேராசிரியர் ஆண்டனி ப்ளு (Antony Flew) - இன்று எப்படி நாத்திகர்களினால் ரிச்சர்ட் டாகின்ஸ் கொண்டாடப்படுகின்றாரோ, அதுபோல இருபதாம் நூற்றாண்டில் நாத்திகர்களால் கொண்டாடப்பட்டவர். 


நாத்திகத்தின் முன்னணி சாம்பியனாக கருதப்பட்ட இவர், சுமார் ஐம்பது ஆண்டு காலம் நாத்திகத்திற்காக தன் வாழ்நாளை கழித்தவர். விவாதங்கள், புத்தகங்கள், பல்கலைகழக சொற்பொழிவுகள் என்று நாத்திகம் குறித்து பேசினாலே இவர் பெயர் தவிர்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாத்திகர்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்தார்.

இறைநம்பிக்கை ஏன் அர்த்தமற்றது என்பது குறித்து இவர் எழுதிய "Theology and Falsification" என்ற கட்டுரை, சென்ற நூற்றாண்டின் அதிகம் மறுபதிப்பு செய்யப்பட்ட தத்துவ கட்டுரையாகும். 

இதுவரையிலான இவருடைய அறிமுகத்தை வைத்து, இவர் எந்த அளவு நாத்திகர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். 

இப்படியான ஒருவர் ஆத்திகத்தின்பால் திரும்பினால்? தன் திசை மாற்றத்திற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளே காரணம் என்று கூறினால்?

Dec 9, 2004-ஆம் ஆண்டு, Associated Press ஊடகம், நாத்திகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கும்விதமாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்தியின் தலைப்பு இதுதான், 

"Famous Atheist Now Believes in God" - AP report, 9th Dec 2004. 
"பிரபல நாத்திகர் தற்போது கடவுளை நம்புகின்றார்" - AP report, 9th Dec 2004.

Associated Press ஊடகத்தின் அந்த கட்டுரையின் நாயகன் ப்ளு அவர்கள் தான். இது நாத்திகர்களால் நம்பவே முடியாத செய்தி. 

ஆத்திகராக மாறினார் ப்ளு என்பது மிக அதிர்ச்சியான தகவல் என்ற போதிலும் அதனை அவர்கள் காலப்போக்கில் கடந்து வந்துவிடலாம். ஆனால், அந்த கட்டுரையின் உபதலைப்பு தான் நாத்திகர்களை கடுமையான கோபத்திற்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கியிருக்கும். அந்த உபதலைப்பு இதுதான். 

"One of World's Leading Atheists Now Believes in God, More or Less, Based on Scientific Evidence" - AP report, 9th Dec 2004.
"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்" - (Extract from the original quote of) AP report, 9th Dec 2004.

ooopppsss....

எதிர்ப்பார்த்தது போலவே இந்த செய்தி நாத்திகர்களிடையே பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. டி.வி, ரேடியோ, நாளிதழ்கள் என்று அனைத்து தரப்பட்ட ஊடங்கங்களிலும் இந்த செய்தி பெரிதாக பேசப்பட்டது. ப்ளு ஆத்திகரானது எந்த அளவு முக்கியத்துவம் பெற்றதென்றால், Associated Press ஊடகம் மட்டுமே இதுக்குறித்து தொடர்ச்சியாக மூன்று கட்டுரைகளை வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

நாத்திகத்திற்காக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ப்ளு. தன் ஐம்பது ஆண்டு கால பிரச்சாரத்தில் எத்தனை வாதங்களை நாத்திகத்திற்கு எதிராக பார்த்திருப்பார்? எத்தனை விதமான சவால்களை சந்தித்திருப்பார்? அப்படிப்பட்டவர் ஆத்திகத்தின்பால் திரும்புகின்றார் என்றால் மிக  வலிமையான வாதங்கள் ஆத்திகத்திற்கு ஆதரவாக, நாத்திகத்திற்கு எதிராக அவருக்கு கிடைத்திருக்க வேண்டும்.

எதற்காக ஆத்திகத்தின்பால் திரும்பினீர்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் "Follow the evidence, wherever it leads" என்பதாகும். அதாவது, ஆதாரங்களை பின்தொடர்ந்து செல்லுங்கள், அவை என்ன சொல்கின்றனவோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.

Dec, 2004-ல், இறைவனை தான் நம்புவதாக ப்ளு வெளிப்படையாக அறிவித்தாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே "Philosopy Now" இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையில் தன் நிலை குறித்து பின்வருமாறு க்ளூ கொடுத்திருந்தார்,

"It has become inordinately difficult even to begin to think about constructing a naturalistic theory of the evolution of that first reproducing organism," - Antony flew on August-September issue of Britain's Philosophy Now magazine (As reported by AP)
(இனப்பெருக்கம் செய்யும்) உலகின் முதல் உயிரினம், இயற்கையாக பரிணாமம் அடைந்திருக்கும் என்பதை நம்புவது குறித்து யோசிப்பது கூட வர வர கடினமாக இருக்கின்றது - (extract from the original quote of) Antony flew on August-September issue of Britain's Philosophy Now magazine (As reported by AP)

உயிர் குறித்து வெளிவரும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் சிக்கலான வடிவமைப்பு போன்றவை தன் நாத்திக நம்பிக்கையை பதம் பார்த்துவிட்டதாக கூறினார் ப்ளு.

குறிப்பாக, DNA-க்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், நம்பவே முடியாத அளவுக்கு சிக்கலான  வடிவமைப்பை அவை கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாகவும், இவையெல்லாம் தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை எனவும், நிச்சயம் ஒரு அறிவார்ந்த சக்தியாலேயே இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் தன் நிலையை தெளிவாக அறிவித்தார் ப்ளு.

இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. உயிரியல் உலகை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாய் புரியும் உண்மை என்னவென்றால், உயிர் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை நாளுக்கு நாள் அறிவியல் முடிவுகள் தெளிவுபடுத்தி வருகின்றன என்பதுதான்.

பேராசிரியர் ப்ளு, அறிவியல் முடிவுகளின் வாயிலாக இறைவனை அங்கீகரித்து மிகப்பெரிய தாக்கத்தை நாத்திகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டார்.  ஆனால் அவர் இத்தோடு நிறுத்தவில்லை. அடுத்த பூகம்பத்தை ஏற்படுத்த ஆயத்தமானார்.

2007-ஆம் ஆண்டு, ராய் வர்கீஸ் என்பவருடன் இணைந்து ப்ளு வெளிக்கொண்டு வந்த புத்தகம் நாத்திகர்களிடையே ஒரு கலக்கு கலக்கியது. அந்த புத்தகத்தின் பெயர் "There is a God (இறைவன் இருக்கின்றான்)" என்பதாகும். அதில் தான் நாத்திகனாகவும் மார்க்சிஸ்ட்டாகவும் இருந்தது பற்றி, பின்னர் மனம் மாறியது பற்றி விரிவாக விளக்குகின்றார் ப்ளு.


இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்த MIT-யின் அணுசக்தி பொறியியல் துறையின் தலைவரான இயன் ஹட்ஷின்சன் பின்வருமாறு கூறுகின்றார்.

“Antony Flew’s book will incense atheists who suppose (erroneously) that science proves there is no God.” - Ian H. Hutchinson, Professor and Head of the Dept. of Nuclear Science and Engineering, MIT (as found on Amazon review).
இறைவன் இல்லையென்று அறிவியல் நிரூபித்துவிட்டதாக (தவறாக) எண்ணிக்கொண்டிருக்கும் நாத்திகர்களை ப்ளுவின் இந்த புத்தகம் சினமூட்டுகின்றது - Ian H. Hutchinson, Professor and Head of the Dept. of Nuclear Science and Engineering, MIT (as found on Amazon review). 

தங்களின் வழிகாட்டியாக இருந்த ஒருவர் இப்படி தடம்மாறியது குறித்து தங்கள் மனதை சாந்தப்படுத்தியாக வேண்டுமே நாத்திகர்கள்?...என்ன செய்வது?...ஒருவேளை ப்ளு கிருத்துவதையோ அல்லது இஸ்லாத்தையோ ஏற்றிருந்தால் 'காசு கொடுத்துவிட்டார்கள், அதனால் ஏற்றுக்கொண்டுவிட்டார்' என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ப்ளு, இறைவன் இருக்கின்றான் என்று ஒப்புக்கொண்டாரே தவிர ஒருங்கிணைந்த மதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரம், தன் மீது மதப்பிரச்சாரங்கள் நடத்தப்பட்டால் அதற்கு தான் தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்.

ப்ளுவின் மனமாற்றத்தை பின்னர் எப்படித்தான் விளக்கம் கூறி தங்கள் மனதை சாந்தப்படுத்திக்கொள்வது?....இந்த நொடிப்பொழுதில் சில நாத்திகர்களது மனதில் உதித்ததுதான் சில அதிஅற்புதமான எண்ணங்கள். வயதாகிவிட்டதால் ப்ளு இப்படி பேசுகின்றார் என்றும், மனரீதியான பாதிப்பு (mentally declined) ஏற்பட்டுள்ளதால் இப்படி நடந்துக்கொள்கின்றார் என்றும் கூறினர். இதற்கும் சாட்டையடியாக விளக்கம் கொடுத்தார் ப்ளு.

டாகின்ஸ்கின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார். உயிர்த்தோற்றம் குறித்த டாகின்ஸ்சின் கருத்தை "காமெடி" என்று கூறிய ப்ளு, டாகின்ஸ்சின் வாதங்கள் இப்படித்தான் இருக்குமானால் கேம் முடிந்துவிட்டதாக கூறினார்.

"...Richard Dawkins' comical effort to argue in The God Delusion that the origin of life can be attributed to a "lucky chance." If that's the best argument you have, then the game is over" - Professor Flew's interview with Dr. Benjamin Wiker, dated 30th October 2007.
அதிர்ஷ்டவசமாக உயிர் உருவாக்கியிருக்கும் என்று தன்னுடைய புத்தகத்தில் டாகின்ஸ் கூறுவது ஒரு காமெடியான முயற்சியே ஆகும். இதுதான் உங்களுடைய மிகச்சிறந்த வாதம் என்றால், கேம் முடிந்துவிட்டது - (extract from the original quote of) Professor Flew's interview with Dr. Benjamin Wiker, dated 30th October 2007.

பரிணாம கோட்பாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் Intelligent Design (ID) கோட்பாட்டை ஒட்டியே தன்னுடைய எண்ண அலைகள் இருப்பதாக ப்ளு கூற, Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ப்ளு போன்ற ஒருவர், வேகமாக வளர்ந்து வரும் அவர்களது கோட்பாட்டிற்கு ஆதரவுக்கரம் நீட்டியதை பெரும் புத்துணர்ச்சியாக எண்ணினர் (ID குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

நாத்திகர்களின் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் ப்ளு. நாத்திகராக வாழ்ந்தவர் ஆத்திகராக மறைந்துவிட்டார்.

வரலாறு முழுக்க, ப்ளு போன்ற பிரபல நாத்திகர்கள் அல்லது நாத்திகர்களாக இருந்த ஆய்வாளர்கள் தங்களது மனதை ஆத்திகத்தின்பால் திருப்பியதற்கு அறிவியல் முடிவுகளும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை. (இன்ஷா அல்லாஹ், இம்மாதிரியான நாத்திகர்களை எதிர்க்கால பதிவுகளில் அவ்வப்போது பார்க்கவிருக்கின்றோம்)

அறிவியல் நாத்திகத்திற்கு வழிவகுக்கின்றது என்று தங்கள் அறியாமையால் சிலர் எண்ணினால் அது அறிவியலைப் பற்றிய அவர்களது தவறான புரிதலே அன்றி வேறொன்றும் இல்லை.

சிந்திக்க விருப்பமுள்ளவர்கள் சிந்திக்கட்டும். நடுநிலையோடு அறிவியல் முடிவுகளை ஆய்வு செய்யட்டும். உண்மையை அறிந்துக்கொள்ளட்டும். 

முடிவாக:

பிரிட்டனின் "The Guardian" பத்திரிக்கை, 2011-ன் டாப்-10 அறிவியல் செய்திகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் என்னுடைய கவனத்தை ஈர்த்தன இரண்டு செய்திகள்.

1. உலகின் முதல் பறவை என்று சுமார் 150 ஆண்டுகளாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்ட ஆர்க்கியாப்டெரிக்ஸ், தான் பறவையல்ல ஒரு டைனாசர் மட்டுமே என்று கூறி பரிணாமவாதிகளுக்கு bye bye காட்டிய செய்தி டாப்-10னில் இடம்பெற்றுள்ளது (ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

2. பல மருத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று கருதப்பட்ட ஸ்டெம் செல் ஆய்வுகள், இந்த நூற்றாண்டில் ஆர்வமிக்கதாக இருக்காது என்பது மற்றொரு செய்தி. நான்கு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள், அவர்களது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது பெரிய பின்னடைவை இந்த ஆய்வுகளுக்கு தந்திருப்பதாக குறிப்பிடுகின்றது கார்டியன். இதனால், மனிதர்களுக்கு ஸ்டெம் செல் செலுத்தி ஆய்வு செய்வது தற்காலிகமாக கைவிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொருளாதார பிரச்சனையும் மற்றுமொரு காரணம் என்றும் கார்டியன் மேலும் தெரிவிக்கின்றது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Famous Atheist Now Believes in God - AP report, 9th dec 2004. link
2. Exclusive Flew interview - Dr.Benjamin wiker, 30th Oct 2007. link
3. There Is a God: How the World's Most Notorious Atheist Changed His Mind - Amazon.com. link
4. The Turning of an Atheist - New York times, November 4, 2007. link
5. Intelligent Design: Atheists to the Rescue - First times, 29th Nov 2011. link
6. Science review of 2011: the year's 10 biggest stories - The Guardian, 17th Dec 2011. link
7. Antony Flew - Wikipedia. link
8. The First Gene: The Birth of Programming, Messaging and Formal Control - Amazon.com. link
9. Materialists Beware: The First Gene Defends a Strictly Scientific, Non-Materialist Conception of Biological Origins - Evolution News, 17 Nov 2011. link
10. There is a God - Antony flew, Preface and Introduction. link
11. The Central Dogma - RIKEN Omics Science Center, youtube. link
12. Antony Flew's There IS a God - the authorship controversy - ARN, 31st Dec 2007. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Sunday, August 28, 2011

ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

                       செயற்கை உயிரை உருவாக்கி ஆத்திகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர் என்று நாத்திகர்கள் குதூகலித்த நேரத்தில், தாங்கள் செயற்கை உயிரையெல்லாம் உருவாக்கவில்லை என்று அதிரடியாய் அறிவித்து, தன்னுடைய கையாலேயே நாத்திகர்களின் முகத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர். (செயற்கை உயிர் குறித்த இத்தளத்தின் பதிவை காண இங்கே சுட்டவும்)

இது சென்ற வருடம்.நடந்தது.

மறுபடியும் மண்ணை கவ்விய வேதனையில் நாத்திகர்கள் துவண்டு போயிருக்க, அவர்களை உற்சாகப்படுத்த நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் ஏழாம் தேதி (7th September 2010). 

இந்த முறை அவர்களை உற்சாகப்படுத்த வந்தவர் ஸ்டீபன் ஹாகிங். Leonard Mlodinov என்பருடன் சேர்ந்து ஸ்டீபன் ஹாகிங் எழுதியிருந்த "The Grand Design" புத்தகம் மேலே குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. 


"இந்த பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவையில்லை. இயற்பியல் கோட்பாடுகளே போதுமானது" என்று அந்த புத்தகத்தில் ஹாகிங் வாதிடுவதாக செய்தி தீ போல பரவ, நாத்திகர்கள் மறுபடியும் உற்சாகமடைந்தனர். 

"இப்போது தானே செயற்கை உயிர் விசயத்தில் அடிப்பட்டீர்கள், நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?" என்று ஆத்திகர்கள் கேட்க, "அது போன மாசம், நாங்க சொல்றது இந்த மாசம்" என்று சொல்லிவிட்டு ஆனந்த கூத்தாடினர் நாத்திகர்கள்.

நிச்சயம், ஸ்டீபன் ஹாகிங் நம்மை கைவிடமாட்டார் என்பது அவர்களது கணக்காக இருந்திருக்க வேண்டும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு பரப்பரப்பான சூழ்நிலையே. ஆத்திகர்களின் நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் மீண்டும் ஒரு சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை.

எதிர்ப்பார்த்தபடி புத்தகம் வெளியானது. எதிர்பார்த்தப்படி வசூலை அள்ளியது.

ஆனால்......................

மிக கடுமையான எதிர்மறை விமர்சங்களுக்கு உள்ளானது இந்த புத்தகம். சக ஆய்வாளர்களாலும், அறிவியல் ஆய்விதழ்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

விமர்சனங்கள் எப்படி இருந்தன என்பதற்கு சில கருத்துக்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

  • பணத்திற்காக எழுதப்பட்ட புத்தகம்.
  • போலியான அறிவியலை (Pseudo Science) ஊக்கப்படுத்தும் புத்தகம்.
  • இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கோட்பாடு முட்டாள்தனமாது  (Crap).
  • தத்துவவியலாளர்கள் (Philosopher) போல நடந்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த விஞ்ஞானிகள். 
  • ஹாகிங்கை நம்பினால் நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்தி கொள்கின்றோம் என்று அர்த்தம். 

ஆத்திகர்களுக்கோ இன்ப அதிர்ச்சி. பின்னே இருக்காதா என்ன?? "நாம விமர்சித்தால் கூட இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க முடியாது போல" என்றெண்ணி வேலை சுலபத்தில் முடிந்து விட்டதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தனர்.

இந்த புத்தகம் வெளிவரும், ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாத்தில் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியே ஆத்திகர்களை நோகடிக்கலாம் என்றிருந்த நாத்திகர்களுக்கு பலத்த அடி. மறுபடியும் மண்ணை கவ்வ நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டாலும், அடுத்து தங்களை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று கடந்த காலங்களில் காத்திருந்தது போல மறுபடியும் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

சரி, ஏன் இந்த புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும்?....

காரணம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை' என்பதை நிரூபிக்க இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் உபயோகித்த கோட்பாடு தான்.

M-Theory:

இந்த கோட்பாடு M-Theory என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோட்பாடானது, ஏற்கனவே இயற்பியல் உலகினரால் நன்கு அறியப்பட்ட கோட்பாடான string கோட்பாட்டின் (String theory) விரிவாக்கமாகும்.

M-Theory-யும் சரி, String Theory-யும் சரி, அறிவியல் உலகினரால் விமர்சனத்திற்கு உள்ளான கோட்பாடுகள். ஆய்வாளர்களால் ஒருசேர ஒப்புக்கொள்ளபடாத கோட்பாடுகள்.

இதற்கு காரணம், இந்த கோட்பாடுகள் முழுமையடையாதவை என்பது ஒருபுறமிருக்க, இவைகளை சோதனைக்கூட செய்துப் பார்க்க முடியாத நிலையில் தான் இன்றைய அறிவியல் உலகம் இருக்கின்றது.

M-theory (and string theory) has been criticized for lacking predictive power or being untestable - Wikipedia
M-Theoryயையும், String theory-யையும் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்ற காரணத்தால் இவை விமர்சிக்கப்படுகின்றன - Wikipedia

இதுதான் "The Grand Design" புத்தகத்தின் பிரச்சனை. ஒரு முழுமையடையாத, குளறுபடியான கோட்பாட்டை வைத்துக்கொண்டு, பிரபஞ்ச மர்மங்களை விளக்கிவிட்டேன் என்று கூறியதை சக ஆய்வாளர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

M-theory in either sense is far from complete. But that doesn't stop the authors from asserting that it explains the mysteries of existence - Craig Callender in New scientist Magazine.
எப்படி பார்த்தாலும், M-Theory முழுமையடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்த விஷயம், நாம் இவ்வுலகில் இருப்பதற்கான மர்மத்தை விளக்கிவிட்டதாக கூறும் ஆசிரியர்களை தடுக்கவில்லை - (Extract from the original quote of) Craig Callender in New scientist Magazine.

இதில் ஆச்சர்யமளிக்கும் இன்னொரு செய்தி என்னவென்றால், M-Theory என்றால் என்னவென்று கூட தெளிவாக விளக்க முயற்சிக்கவில்லை இந்த புத்தகம்.

ஒரு "நல்ல இயற்பியல் மாதிரி (A good physical Model)" எப்படியிருக்க வேண்டுமென்று இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர் ஹாகிங் மற்றும் Leonard Mlodinov.

A model is a good model if it:
1. Is elegant
2. Contains few arbitrary or adjustable elements
3. Agrees with and explains all existing observations
4. Makes detailed predictions about future observations that can disprove or falsify the model if they are not borne out.

இதில் துரதிஷ்டவசமான உண்மை என்னவென்றால் இவர்கள் முன்மொழியும் M-Theory மேலே சொன்ன எந்தவொரு கருத்தையும் திருப்திபடுத்தவில்லை என்பதேயாகும். இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

இந்த புத்தகம் குறித்த எதிர்மறை விமர்சனங்களில் என்னை மிகவும் ஈர்த்தன பின்வரும் தளங்களின் விமர்சனங்கள்.

1. Scientific American.
2. Columbia university.
3. Physics World (Institute of Physics).

இந்த மூன்று நிறுவனங்களும் ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் பாரம்பரியமிக்க நிறுவனங்கள். 

Scientific American:

உலக பிரசித்தி பெற்ற அறிவியல் ஆய்விதழான Scientific American-னில், ஜான் ஹோர்கன் எழுதிய விமர்சனம் மிகவும் காட்டமாக இருந்தது. தலைப்பே, "ஹாகிங்கின் 'புதிய' கோட்பாடு முட்டாள்தனமானது (crap)" என்றிருந்தது.
Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP - John Horgan in  Scientific American.
Scientific American-னில் இதுப் போன்ற கட்டுரையை பார்க்கும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது என்றால், இதனை காணும் நாத்திகர்களின் நிலையை நீங்கள் எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.

M-Theory மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஹாகிங்கின் நாத்திக நம்பிக்கையே இந்த புத்தகத்தின் மையமாக இருக்கின்றது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையை முடிக்கும்போது ஹோர்கன் பயன்படுத்திய வார்த்தைகள் காட்டமான விமர்சனத்தின் உச்சம்.
If we believe him, the joke's on us - Closing remarks of John Horgan in Scientific American.
ஹாகிங்கை நாம் நம்பினால், நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்திக் கொள்கின்றோம் என்று அர்த்தம் - (extract from the ) Closing remarks of John Horgan in Scientific American. 
Columbia University:

அமெரிக்காவின் தலைச்சிறந்த ஆய்வு நிறுவனங்களில் முதல் இடத்தை பெற்றுள்ள கல்வி நிறுவனமான கொலம்பியா பல்கலைகழகத்தின் தளத்தில், "The Grand Design" குறித்து வெளியான விமர்சனமும் படுசூடாக இருந்தது.

விமர்சனத்தை எழுதிய பீட்டர் வொய்ட் இயற்பியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். String Theory-யை கடுமையாக எதிர்ப்பவர்.

புத்தகத்தின் மீது பல விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக வைத்த வொய்ட், காசு பார்ப்பதற்காகவே மதம் உள்ளே இழுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், அறிவியல்/மதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது, நம்புவதற்கு தகுதியில்லாத கோட்பாடான M-Theoryயை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது தனக்கு புரியவில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார் வொய்ட்.

...if you’re the sort who wants to go to battle in the science/religion wars, why you would choose to take up such a dubious weapon as M-theory mystifies me - Peter Woit, math.columbia.edu

வொய்ட்டின் மற்றொரு குற்றச்சாட்டும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது, இந்த புத்தகத்தில் எவ்விதமான மேற்கோள்களும் (references to other sources) காட்டப்படவில்லை என்பதுதான் அது. 

உதாரணத்துக்கு, "ஒருவர் இப்படி சொன்னார்/செய்தார்" என்றால், "யார் அவர், எங்கு சொன்னார்" என்ற மூல தகவலை மேற்கோள் காட்டவேண்டுமல்லவா? அப்படி எந்தவொரு மேற்கோளும் இந்த புத்தகத்தில் இல்லை. 

புத்தகம் மீதான தன்னுடைய ஆதங்கத்தை மிக அழகான முறையில் தெளிவாக விமர்சித்திருந்தார் வொய்ட்.

Physics World (Institute of Physics):

உலகின் முன்னணி இயற்பியல் இதழ்களில் ஒன்றான "Physics World"-டின் தளத்திலும் ஹாகிங்கின் புத்தகம் குறித்த எதிர்மறையான விமர்சனம் வெளியாகி இருந்தது.

விமர்சனம் எழுதியிருந்த ஹமீஷ் ஜான்ஸ்டன், ஒரு உறுதிப்பாடில்லாத கோட்பாட்டை வைத்துக்கொண்டு தன்னுடைய நாத்திக நம்பிக்கையை நிரூபிக்க முயல்கின்றார் ஹாகிங் என்று கூறியிருந்தார்.

There is just one tiny problem with all this – there is currently little experimental evidence to back up M-theory. In other words, a leading scientist is making a sweeping public statement on the existence of God based on his faith in an unsubstantiated theory - Hamish Johnston, Physicsworld.com blog.
இங்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. M-Theoryயை உறுதிப்படுத்த தற்போதைய நிலையில் மிகக்குறைவான செயல்முறை ஆதாரங்களே உள்ளன. வேறுவிதமாக சொல்லுவதென்றால், உலகின் முன்னணி ஆய்வாளர், உறுதிப்பாடில்லாத ஒரு கோட்பாட்டை துணையாகக்கொண்டு தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் இருப்பை பற்றி வெளிப்படையாக தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றார் - (Extract from the original quote of) Hamish Johnston, Physicsworld.com blog. 

தங்கள் நம்பிக்கைக்கு ஏதுவாக அறிவியலை வளைக்கும் விஞ்ஞானிகள்:

ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாதத்தில் இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை என்று ஸ்டீவன் ஹாகிங்கே சொல்லிவிட்டார்' என்றெல்லாம் வாதித்து ஆத்திகர்களை மடக்கலாம் என்றிருந்த நாத்திகர்களை அறிவியல் உலகம் வாயடைக்க செய்துவிட்டது.

ஆனால் இதையெல்லாம் அறியாத சில அப்பாவி நாத்திகர்கள் இன்னும் இருக்கின்றனர். தங்களை ஹாகிங் கைவிட்டதை அறியாத இவர்கள், விவாதங்களில் இன்னும் இந்த புத்தகத்தை (அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாட்டை) மேற்கோள் காட்டி "பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை" என்று அறியாமை மிகுதியில் வாதாடுகின்றனர். பின்னர் இதுக் குறித்த எதிர்மறையான கருத்துக்களை காட்டியவுடன் அமைதியாகி விடுகின்றனர்.

இந்த பதிவின் நோக்கமும் இதுதான். அறியாமையில் உருளும் இம்மாதிரியான அப்பாவி நாத்திகர்களை நீங்கள் எதிர்காலத்தில் காண நேர்ந்தால் அவர்களுக்கு உங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துவிட்டு இதுக்குறித்த விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

நாத்திகர்களை விடுவோம். அவர்கள் மண்ணை கவ்வுவது என்பது புதிதல்ல. இன்றைக்கு இது போனது என்றால், நாளைக்கு வேறு எதையாவது கொண்டுவருவார்கள்.

நீங்கள் மேலே உள்ள செய்திகளை கூர்ந்து கவனித்திருந்தால் ஒரு அதிமுக்கிய விஷயத்தை கவனித்திருக்கலாம்.

அதாவது, தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அறிவியலை வளைத்துக்கொள்கின்றனர் விஞ்ஞானிகள் என்ற குற்றச்சாட்டு அரசல்புரசலாக உண்டு.

அந்த குற்றச்சாட்டை ஆய்வாளர்களே ஒப்புக்கொள்வது மிக மிக ஆரோக்கியமான ஒன்று.

A British journalist contacted me about this recently and we talked about M-theory and its problems. She wanted me to comment on whether physicists doing this sort of thing are relying upon “faith” in much the same way as religious believers. I stuck to my standard refusal to get into such discussions, but, thinking about it, have to admit that the kind of pseudo-science going on here and being promoted in this book isn’t obviously any better than the faith-based explanations of how the world works favored by conventional religions - Peter Woit, Columbia University. 
சமீபத்தில் ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் என்னை தொடர்புக்கொண்டிருந்தார். நாங்கள் M-Theory குறித்தும் அதனுடைய பிரச்சனைகள் குறித்தும் பேசினோம். மத நம்பிக்கையாளர்களை போல, இயற்பியலாளர்களும் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபது குறித்து என்னிடம் கருத்து கேட்டார் அவர்.   
நான் வழக்கம்போல கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டேன். ஆனால், பிற்பாடு இதுக்குறித்து சிந்திக்கையில், இதனை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். இங்கு நிலவும் போலியான அறிவியலும், அதனை இந்த புத்தகம் ஊக்கப்படுத்துவதும், மதங்கள் கூறும் உலக செயலாக்கத்திற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல -  (extract from the original quote of) Peter Woit, Columbia University.  

அறிவியல் உலகில் இது போன்ற மாற்றங்கள் பெருகி வருவது நிச்சயம் உற்சாகமளிக்கும் ஒன்று. தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆய்வாளர்கள் செயல்படுவார்களேயானால் அது நிச்சயம் அறிவியலை ஆரோக்கியமான திசைக்கு கொண்டு செல்லாது. 'தன்னுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றார்  ஹாகிங்' என்று ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துவது போல தான் சம்பவங்கள் நடந்தேறும்.

முடிவாக:

இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். சென்ற ஆண்டு, அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை பெருமளவில் குறைத்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 45% நிதி, தரமில்லாத ஆய்வுகளுக்கு செலவிடப்படுகின்றதாம்.

oopsssss...

இந்த செய்திக்கும், ஸ்டீபன் ஹாகிங் மற்றும் M-Theoryக்கும் சம்பந்தம் உண்டா??

உண்டு என்கின்றது Physics world தளம்.

எனினும், பதிவை மற்றொருமுறை படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்....

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்....

My sincere thanks to:
1. Peter Woit, Columbia University.
2. Br.Peer Mohamed (for his helpful points on the subject).

References:
1. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP -  John Horgan, Sep 13, 2010. Scientific Amaerican. link
2. Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. link
3. M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. link
4. The Grand Design (book) - Wikipedia. link
5. Is Hawking right to attack philosophy? - BBC Radio. link
6. The Grand Design - Roger Penrose, September 4 2010, Financial Times. link
7. Even Stephen Hawking doesn't quite manage to explain why we are here - The Economist. link
8. Why God Did Not Create the Universe -  STEPHEN HAWKING And LEONARD MLODINOW, Sep 3, 2010. The Wall Street Journal. link
9. Stephen Hawking says there's no theory of everything - Craig Callender, Sep 2, 2010. link
10. Stephen Hawking's big bang gaps - Paul Davies, Sep 4 2010, The Guardian. link
11. Many Kinds of Universes, and None Require God - DWIGHT GARNER, September 7, 2010, The New York Times. link
12. Our Spontaneous Universe -  LAWRENCE M. KRAUSS, Sep 8, 2010. The Wall Street Journal. link
13. M-Theory, String Theory, Institute of Physics, Physics world, Columbia University, Peter Woit - Wikipedia.
14. Transcript from The God Debate -Richarddawkins.net. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Wednesday, May 26, 2010

Agnosticism To இஸ்லாம்...




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.  


"ATHEISM (நாத்திகம்)" கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன "Agnosticism"?

உங்களில் சிலருக்கு இந்த கேள்வி எழுந்திருக்கலாம். அதனால், முதலில் "Agnosticism" என்றால் என்னவென்று பார்த்துவிட்டு பிறகு பதிவுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ். 

நாத்திகத்தை பின்பற்றுபவர் நாத்திகர் என்றால், "Agnosticism"தை பின்பற்றுபவர் "Agnostic (அக்னாஸ்டிக்)". 

(குறிப்பு: அக்னாஸ்டிக் என்பதற்கு சரியான தமிழ் பதம் தெரியாததால் அப்படியே பயன்படுத்தபடுகின்றது. அறிந்தவர்கள் தெரிவிக்கவும்) 

இவர்களும் நாத்திகர்களைப் போல கடவுளைப் பற்றி பேசும் மதங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், நாத்திகர்களைப் போல கடவுள் இல்லையென்று ஆணித்தரமாக மறுக்க மாட்டார்கள். கடவுள் இருந்தாலும் இருக்கலாம் என்பது இவர்களது கொள்கை. 

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் கிடையாது, கடவுளைப் பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்கள். 

Agnostic - One who is skeptical about the existence of God but does not profess true atheism      

ஏன் அக்னாஸ்டிக் பற்றி பேசுகிறோம்? 

ஏனென்றால், இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது அப்படியிருந்த ஒரு நபரைப் பற்றி தான். அவர் அக்னாஸ்டிக்காக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர். 

சகோதரர் ஹம்சா அன்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (Hamza Andreas Tzortzis) இங்கிலாந்தை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இவர், பிரிட்டனின் புகழ் பெற்ற தாவாஹ் அமைப்பான இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (Islamic Education and Research Academy, IERA) முக்கிய உறுப்பினர். 



பிரபல நாத்திகர்களுடன் தொடர்ந்து நேரடி விவாதத்தில் பங்கேற்றுவரும் இவரைப் பற்றி நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சிறிது பார்த்திருக்கின்றோம் (பார்க்க எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு). 

இன்ஷா அல்லாஹ் இந்த பதிவில் அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து One Legacy வானொலிக்கு அளித்த பேட்டி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.                  


"என்னுடைய தந்தை கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர், என் தாய் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தவர். என் பெற்றோர்கள் எந்தவொரு மதத்தின் மீதும் ஆர்வம் காட்டியதில்லை. நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை கூறியது இன்னும் நினைவிருக்கின்றது, 

"கடவுள் உனக்குள்ளேயே இருக்கின்றார்"

என் தந்தையின் அறிவுரைகள் பெரிதும் உதவின. சிறு வயதிலிருந்தே எதையும் கேள்வி கேட்டு, ஆராய்ந்து பார்த்து தான் ஏற்றுக்கொள்ள முயற்சிப்பேன். புது விஷயங்களை படிப்பதிலும் ஆர்வம் அதிகம். பல மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறேன். இஸ்லாம், பௌத்தம் என்று பல மதங்களை மேலோட்டமாக அறிந்து வைத்திருந்தேன். 

இவ்வுலகம், நாம் இங்கிருப்பதற்க்கான காரணங்கள் என்று இவற்றை தேடுவதில் தனி விருப்பம்.  
      
எனக்கு புத்த மதத்தின் மீது ஒருவித ஈர்ப்பிருந்தது. அதற்கு காரணம், அது அக்னாஸ்டிக் வகையான மதம் என்பதால் தான். உதாரணத்துக்கு, புத்தரிடம் ஒருவர் கேட்டாராம், 

"கடவுள் இருக்கிறாரா?" 

அதற்கு புத்தர் சொன்னாராம், 

"இருந்தாலும் பிரச்சனையில்லை (It does not matter if he exists)" என்று, “இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்" 

இது போன்றவற்றால் புத்த மதம் என்னை பெரிதும் வசீகரித்தது.

எனக்கு இஸ்லாம் நன்கு அறிமுகமானது பள்ளி காலங்களில் தான். என்னுடன் படிக்கும் முஸ்லிம் நண்பர்களிடம் பல கேள்விகளை கேட்பேன். 

"ஏன் இப்படி உடையணிகின்றீர்கள், ஏன் ஐவேளை தொழுகின்றீர்கள், ஏன் மற்றவர்களை சகோதரரென்று அழைக்கின்றீர்கள்" என்று பல கேள்விகள்.  

அவர்கள் எளிமையாக பதிலளித்துவிடுவார்கள், "இஸ்லாம் சொல்கிறது, செய்கிறோம்", அவ்வளவுதான் அவர்களது பதில். 

சில சமயங்களில் அவர்கள் இஸ்லாம் சொல்லாத செயல்களை செய்தால், "இது இஸ்லாமிய வழியில்லையே" என்று எடுத்துக் கூறுவேன். என்னுடைய இந்த அறிவுரைகள் அவர்களுக்கு வியப்பைத் தரும். 

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்தவொரு ஈடுபாடும் கிடையாது, “உங்கள் மதம் பற்றி எனக்கும் தெரியும்” என்று காட்டிக்கொள்ளவே இதெல்லாம். 


பல்கலைகழகத்தில் உளவியல் பாடத்தில் சேர்ந்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வருடம் விடுப்பு எடுத்துக்கொண்டு, காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் (Police IT Department) வேலைக்கு சேர்ந்தேன். இது பிரிட்டன் வெளியுறவுத் துறையின் கீழ் வருகின்றது. ஐரோப்பிய அலுவலக கலாச்சாரங்கள் அறிமுகமாயின. 

அது ஒரு கிறிஸ்துமஸ் சமயம். பார்ட்டிகள் களைகட்ட ஆரம்பித்திருந்தன. என் அலுவலகத்திலும் அது போன்ற ஒரு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெளியிலிருந்தும் பலரை அழைத்திருந்தார்கள். 

எனக்கு நடனமெல்லாம் வராது. ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். மது, ஆட்டம், பாட்டம்.           

அப்போது ஒரு பெண் என் அருகில் வந்தார். அவரது பெயரைக் கேட்டேன். சொன்னார். எனக்கோ ஆச்சர்யம். அது இஸ்லாமிய பெயராக தெரிந்தது. நான் மறுபடியும் அவரிடம் கேட்டேன். 

"நீங்கள் முஸ்லிமா?" 

"ஆம், முஸ்லிம்தான்" 

அதை கேட்டவுடன் எனக்கு மிகுந்த அதிர்ச்சி. 

என்ன? பார்ட்டிகளில் ஒரு முஸ்லிமா? 

"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் இங்கே? ஒரு முஸ்லிம் இங்கெல்லாம் வரக்கூடாதே?

நான் அப்படி கேட்டதும் அவரது முகம் சோர்ந்து விட்டது. அவரது கையில் இருந்த மதுவை வாங்கி அதற்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறை ஊற்றி கொடுத்தேன். முஸ்லிம்கள் தான் மது அருந்தக் கூடாதே. என்னுடைய செயல் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

"என்ன செய்கின்றீர்கள் நீங்கள்? என்னுடைய மார்க்கத்தை எனக்கே சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றீர்கள், அதுவும் இந்த சூழ்நிலையில்..." 

என்னுடைய செயல் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. 

இருவரும் உரையாடத் துவங்கினோம். கலாச்சாரங்கள், இஸ்லாம் என்று பலவற்றையும் பேசினோம். நிச்சயமாக இது போன்ற பேச்சுக்களுக்கு அது சரியான இடமல்ல. எங்களை சுற்றி மது, ஆட்டம், பாட்டம் தான். நீங்களே யூகித்து கொள்ளுங்கள் அந்த சூழ்நிலையை.   

அதற்கு பிறகு பல மாதங்கள் கடந்தன, அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருநாள் என் அலுவலகத்தின் மனிதவளத்துறையிலிருந்து அழைப்பு. 

"மிஸ்டர் ஜார்ஜியஸ், ஒரு பெண்மணியிடமிருந்து உங்களுக்கு அழைப்பு" 

யாரது? அலுவலக தொலைப்பேசியில் அழைப்பது?

தொலைப்பேசியை வாங்கினேன். அந்த பெண் தான். எங்களின் பழைய சந்திப்பின் போதே கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டோம். ஆனால் அவர் அதை தொலைத்திருக்கின்றார். இப்போது என் அலுவலக எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அழைத்து விட்டார்.

மறுபடியும் எண்களை பகிர்ந்துக் கொண்டோம். இந்த முறை எங்கள் நட்பு மேலும் வளர்ந்தது. அருங்காட்சியகம், சினிமா, பார்ட்டிகள் என்று ஒன்றாக செல்ல ஆரம்பித்தோம். ஐரோப்பிய கலாச்சாரத்தை நினைத்துக் கொள்ளுங்கள். 

ஆனால் நான் அவருடன் இருந்த நாட்களில் இஸ்லாமைப்பற்றி அதிகம் பேசியிருக்கின்றேன். ஆனால் அவருக்கோ அவையெல்லாம் விநோதமாக இருந்தது. நிச்சயமாக அவருக்கு அது பிடிக்கவில்லை. ஒரு ஆண் தோழர் இப்படி பேசுவதை அவர் விரும்பவில்லை. 

பிறகு நாங்கள் அவரவர் வழியே சென்று விட்டோம். அவர் ஆசிரியராக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார், அது நிமித்தமாக வட இங்கிலாந்திற்கு சென்று விட்டார். 

சுமார் ஒரு வருடம் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். கீழேயிருந்து என் தந்தை சத்தமாக அழைத்தார்,

"அன்ட்ரியஸ், உனக்கு ஒரு அழைப்பு" 

தூக்க கலக்கத்திலேயே கீழே இறங்கி வந்தேன்.    

"நான் தான் (It's me)" 

சுதாரித்து கொண்டேன். அதே பெண்தான். 

"ஒ................." 

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு ஏன் அவர் அழைக்க வேண்டும்?

"உங்களிடம் நான் ஒன்றை சொல்ல வேண்டும். தற்போது இஸ்லாமை முழுமையாக பின்பற்ற தொடங்கியிருக்கின்றேன். ஐவேளை தொழுகின்றேன். ஒரு இஸ்லாமிய பெண் எப்படி உடையணிய வேண்டுமோ அப்படி அணிகின்றேன்"

அவ்வளவுதான் பேசினார். என் பதிலுக்கு அவர் காத்திருக்கவில்லை, இணைப்பை துண்டித்து விட்டார். 

என்னால் நம்பவே முடியவில்லை. This is amazing.............  

எனக்கு இஸ்லாத்தின் மேல் எந்த காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண் தன் மார்க்கத்துக்குள் திரும்பி வர நான் காரணமாய் இருந்திருக்கின்றேன், எப்படி? 

என்னால் மறக்க முடியாத, என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு அது.  

பிறகு, வாழ்வின் அர்த்தங்களைப் (Purpose of Life) பற்றிய என்னுடைய தேடல் தீவிரமடைந்தது. சாதாரண நாற்காலியே ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும் போது, நாம் இவ்வுலகில் இருப்பதற்கு காரணமே இல்லையா? இது போன்ற கேள்விகள் என்னுள் அதிகம் எழ ஆரம்பித்தன. என் தேடல் விரிவடைந்தது. 

காட்டின் ஒரு மூலையில் வாழும் ஒரு வித அந்துப்பூச்சிகள் (Moth), மரத்திலிருந்து வழியும் பாலை (Sap) அருந்தி வாழுகின்றன. அதே மரத்தில் அவற்றிற்கு கீழே உள்ளே மற்றொரு வித அந்துப்பூச்சிகள், முதல் வித அந்துப்பூசிகள் வெளியேற்றிய கழிவுகளை பருகி வாழ்கின்றன. இவையெல்லாம் தானாகவே தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது போன்ற வாதங்களை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

நாமனைவரும் மிருகங்கள் என்றால் ஒழுக்கம் (Morale), எது சரி எது தவறு போன்றவை எப்படி தெரியும்? 

இவ்வாறாக, வாழ்வின் அர்த்தம் (Purpose of Life), தத்துவம் (Philosophy), அறிவியல் (Science), தர்க்கவியல் (Logic) என பல துறைகளை துணையாகக் கொண்டு எனது தேடல்கள் விரிவடைந்தது. 


கடவுள் என்ற ஒரு கோட்பாடு (concept) இல்லாமல் எதுவும் அறிவுக்கு ஒத்துவரவில்லை (This is the only thing that makes sense). மிக நீண்ட தேடல்களுக்கு பிறகு கடவுள் நிச்சயமாக இருக்கின்றார் என்ற முடிவுக்கு வந்தேன். 


இப்போது யார் என்னிடத்தில் வந்து கடவுள் இல்லையென்றாலும் அவர்களுடன் தர்க்கரீதியாக விவாதித்து கடவுள் உண்டு என்று நிரூபிக்கும் அளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

சரி, கடவுள் உண்டென்ற முடிவுக்கு வந்தாகி விட்டது. கடவுள் நம்மை படைத்து அப்படியே விட்டு விட்டாரா?, நமக்கு எதுவும் சொல்ல அவர் விரும்பவில்லையா? 

கடவுள் இருக்கிறாரென்றால் அவர் நமக்கு நிச்சயம் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் (He must have expressed something). அது தான் அறிவுக்கு ஒத்து வருகிறது.

இப்போது குரானை முழுமையாக படிக்கத் தொடங்கினேன். 

குரான், மற்ற எந்த ஒரு ஆவணங்களையும் விட முற்றிலும் வேறுபட்டது (It is a very fascinating document. It is unlike any other document). எந்தவொரு மத புத்தகங்களையும் விட குரான் எனக்கு சிறந்ததாக தெரிந்தது. 

ஏன்?, அது என்னுள் ஆழமாக ஊடுருவியது. அது ஒரு அற்புத உணர்வு. ஊடுருவியது மட்டுமல்லாமல் என்னிடத்தில் ஒரு நிறைவான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. என்னை அதனுடன் மிகவும் ஒன்ற வைத்தது.           

என்னை மிகவும் பாதித்த குரானுடைய வசனங்களென்றால், "நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஒன்றை கொண்டு வாருங்கள்" என்று மனித குலத்திற்கு அது விடும் சவால்கள் தான். இவை எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன. ஏனென்றால் இது போன்ற சவால்களை வேறு எந்தவொரு புத்தகத்திலும் நான் கண்டதில்லை. 

சரி, குரான் ஏன் இப்படியொரு சவாலை விட வேண்டும்?, குரானைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தின அந்த வசனங்கள். என் கேள்விகள் தெளிவுபெற ஆரம்பித்தன. முடிவாக குரானைப் போன்ற ஒன்றை உருவாக்க முடியாது என்றுணர்ந்தேன். இந்த புத்தகம் ஒரு அதிசயம், இது இறைவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். 

இப்போது, குரான் ஒரு அதிசயம் (Miracle) என்று வாதிக்குமளவு நம்பிக்கை பெற்றிருந்தேன். 

ஆக, இறைவனைப் பற்றியும் சரி, குரானைப் பற்றியும் சரி, விவாதிக்க நான் தயார்.

எல்லாம் தான் தெளிவாகி விட்டதே. நான் அப்போது முஸ்லிமாகி விட்டேனா என்று நீங்கள் கேட்டால்..... இல்லை.

அங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. இஸ்லாம் என்ற கொள்கை அந்நியமாக தெரிந்தது. என்னால் அதனுடன் ஒன்ற முடியவில்லை. இஸ்லாம் என்ற ஒரு வரையறைக்குள் என்னால் வர முடியவில்லை. எனக்குள் அறிவார்ந்த விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருந்தேன் (I started to play intellectual Gymnastics). இதுவென்ன புது குழப்பம்? புரியவில்லை.

குரானை எடுத்துக்கொண்டு கிரீசுக்கு என் தாத்தா பாட்டியுடன் சிறிது காலம் தங்கி வரலாம் என்று சென்றேன். அங்கு தான் தொழுகையை செயற்படுத்தி பார்த்தேன். 

இங்கிலாந்திற்கு திரும்பினேன். என்னுடைய குழப்பங்கள் அதிகமாகியிருந்தது. அப்போது ஒரு கல்லூரி மாணவர் சொன்னார்,

"நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், ஒருவர் சஜ்தாவில்  இருக்கும்போது இறைவனுடன் நெருக்கமாக இருக்கின்றார்"    

அப்படியா?, அடுத்த முறை நான் சஜ்தா செய்த போது, உரக்க கூறினேன்,

"இறைவா, தயவு கூர்ந்து எனக்கு உதவி செய் (come on, solve my problem). எனக்குள்ளே என்ன நடக்கின்றது? நீ இருக்கின்றாய் என்று என்னால் நிரூபிக்க முடியும். குரான் ஒரு Miracle என்று என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் என்னால் முஸ்லிமாக முடியவில்லை. இது மிகப் பெரிய குழப்பம். உதவி செய், தயவு கூர்ந்து உதவி செய்" 

ஒன்றும் நடக்கவில்லை...............Nothing was ticking......................finished. 

அக்னாஸ்டிக்காக தொடர்ந்து விட வேண்டியது தான்.

அது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி. அதிகாலை இரண்டு மணி. கதவு தட்டும் சத்தம். என் நண்பர். இந்த நண்பருடைய வீடு என் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை பயணத்தில் தான் இருக்கின்றது. ஆனால் அவர் என் வீட்டிற்கு அவ்வளவாக வந்ததே கிடையாது. ஆனால் இப்போதோ அதிகாலை இரண்டு மணி. எதற்கு வந்திருக்கின்றார்? 

வெளியே அழைத்தார். பேசிக்கொண்டே நடந்தோம். அவர் அன்று பேசியது மரணத்தைப் பற்றி. "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்" என்ற குரான் வசனம் தான் அன்றைய உரையாடலின் தலைப்பு. 

அந்த தலைப்பை அவர் விளக்கிய விதம் இருக்கின்றதே................

என்னால் அது எப்படியிருந்தது என்று இப்போது திரும்ப கூட சொல்ல முடியாது. மிக அற்புதமான விளக்கம் அது.

அவ்வளவுதான், வீட்டிற்கு விரைந்தேன். என் அறைக்குள் நுழைந்து தாளிட்டேன். 

"இறைவா, நீ என்னை அச்சுறுத்தி விட்டாய் அஹ் (You scared the beep out of me, ah)"            

அந்த கணம், என்னுள் இருந்த குழப்பம் ஒன்றுமில்லாமல் ஆனது. நான் எனக்குள் விளையாடிக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம் உளுத்து போயின. 

அடுத்த நாள். டாக்சியை பிடித்தேன். அருகிலிருந்த பள்ளிக்கு சென்றேன். அங்கிருந்த சுமார் ஐம்பது சகோதரர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்"
               

சுபானல்லாஹ்... 

சொல்ல வரும் கருத்துக்களை தெளிவாக, தர்க்க ரீதியாக சொல்ல விரும்புபவர் சகோதரர் ஹம்சா அவர்கள். நாத்திகர்களுடனான அவரது பல வாதங்கள் யுடியூபில் (You tube) கிடைக்கின்றன. அவரது தளத்திலும் (முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அவற்றை பார்க்கலாம். 

நாத்திகர்களுடனான உங்கள் உரையாடல்களுக்கு நிச்சயமாக சகோதரர் ஹம்சாவின் பதிவுகள் மற்றும் வீடியோக்களை பரிசீலிக்கலாம். 


வரும் ஜூன் பத்தொன்பதாம் தேதி (19th June, 2010)  லண்டனில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர் எட் பக்னோருடன் (Dr. Ed Buckner, President of American Atheists), "இஸ்லாமா, நாத்திகமா" என்ற தலைப்பிலான நேரடி விவாதத்தில் பங்கேற்கவிருக்கிறார் ஹம்சா அவர்கள்.


நீங்கள் லண்டனில் வசிப்பவராக இருந்தால், "Friends House, Main Hall, 173-177 Euston Road, London, NW1 2BJ" என்ற முகவரியில் நடக்கும் இந்த விவாதத்தை நேரில் சென்று பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.

சகோதரர் ஹம்சா அவர்களுக்கு இந்த விவாதத்தில் வெற்றிகரமாக செயல் படக்கூடிய  மனபலத்தையும், உடல் நலத்தையும், கல்வி ஞானத்தையும் இறைவன் அருள வேண்டுமென்று துவாச் செய்வோம். 

இறைவன் இஸ்லாமிய சமூகத்திற்கு ஹம்சா போன்ற சகோதர/சகோதரிகளை தொடர்ந்து அருள்வானாக...ஆமின்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின் 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


This article inspired by:
1. Br.Hamza's Interview to "One Legacy Radio" 

Source of Information and Br.Hamza's blog:
1. http://www.hamzatzortzis.blogspot.com/

Br.Hamza's Official website: 
1.http://hamzatzortzis.com

IERA official website: 
1. http://www.iera.org.uk

References: 
1. Meaning of the term "Agnostic" taken from thefreedictionary.com. 
             

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  







Tuesday, April 27, 2010

ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் - சொல்லப்படாத இரகசியங்கள்...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...  

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..  

ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் சொல்லப்படாத உண்மைகளை பார்ப்பதற்கு முன்னால், பரிணாம கோட்பாட்டை நம்புபவர்கள் பின்வரும் கேள்விகளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

a) உங்கள் முன் ஒரு கறுப்பின சகோதரர் வந்து நின்றால், நீங்கள் அவரை உங்களை விட ஒரு படி கீழே என்று நினைப்பீர்களா? 
b) அல்லது, நீங்கள் ஒரு ஐரோப்பிய சகோதரர் முன் சென்று நின்றால், அவர் உங்களை விட ஒரு படி மேலே என்று நினைப்பீர்களா? 

உலக மக்கள் அனைவரும் சமமல்லவா, இது என்ன கேள்வி? என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. டார்வினும், அவரால் பிரபலமான கோட்பாடும் தான் பொறுப்பு. 

அப்படியென்றால் டார்வின் ஒரு இன வெறியரா? என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்கிறேனென்றால், பலர் அவரை இனவெறியர் என்று முத்திரை குத்துவதால் தான். 

என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதாபிமானமிக்க மனிதர். ஐரோப்பிய வெள்ளையர் என்ற தன் இனத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் அதே சமயம், அடிமைகளாய் நடத்தப்பட்டவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறார், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்திருக்கிறார், அவர்களை அப்படி நடத்துவது சரியல்ல என்று சொல்லியிருக்கிறார். 

ஆக, தன்னுடைய இனம் தான் சிறந்தது என்ற எண்ணம் உடையவராக இருந்திருந்தாலும், அதற்காக மற்ற இனத்தவரை அடிமைப்படுத்துவது சரியல்ல என்று நினைத்தவர். 

ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் முன்வைத்த கருத்துக்கள் இனவெறிக்கு தூண்டுதலாய் அமைந்து விட்டது. 

குரங்கினத்திற்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே கறுப்பினத்தவர்களையும், ஆஸ்திரேலிய பழங்குடியினரையும் வைத்த அவரது செயல்,
  • ஒருவர் மற்றொருவரை விட சிறந்தவர், 
  • பரிணாம முறைப்படி ஐரோப்பியர்களே கடைசியாய் வந்தவர்கள், 
  • அதனால் அவர்களே மேம்பட்டவர்கள் 
என்பது போன்ற எண்ணங்களை உண்டாக்கிவிட்டது.

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், டார்வின் முன்வைத்த கோட்பாட்டின் மற்றொரு பக்கத்தைதான் (The Other Side of "Evolution Theory") பார்க்கப்போகிறோம்.  

டார்வின் இன வெறியரா ?

என்னைப் பொறுத்தவரை, இல்லை. அவருடைய கோட்பாட்டின் படி, அவர் தன்னுடைய இனம் தான் மேம்பட்டது என்று நம்பினார். அதே சமயம், தனக்கு கீழுள்ள இனத்தவர் கஷ்டப்படுவதை பார்த்து வருந்தியவர்.

உதாரணத்துக்கு, 1830-களில், அவருடைய கடற்பயணத்தின் போது, கப்பலில் அடிமைகள் நடத்தப்படும்விதம் குறித்து அந்த கப்பலின் (H.M.S Beagle) கேப்டனான Fitz Roy-யுடன் சண்டை போட்டிருக்கிறார் அவர்.

இது குறித்து அவர் எழுதும் போது:
"Those who look tenderly at the slave-owner, and with a cold heart at the slave, never seem to put themselves into the position of the latter;—what a cheerless prospect, with not even a hope of change! picture to yourself the chance, ever hanging over you, of your wife and your little children—those objects which nature urges even the slave to call his own—being torn from you and sold like beasts to the first bidder! And these deeds are done and palliated by men, who profess to love their neighbours as themselves, who believe in God, and pray that his Will be done on earth! It makes one’s blood boil, yet heart tremble, to think that we Englishmen and our American descendants, with their boastful cry of liberty, have been and are so guilty: but it is a consolation to reflect, that we at least have made a greater sacrifice, than ever made by any nation, to expiate our sin" --- Charles Darwin wrote in 1845 journal, "Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy", p. 499-500.
ஆக, என்னதான் அந்த அடிமைகளை தாழ்ந்தவர்களாக அவர் நினைத்தாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்த்து இரத்தம் கொதிப்பதாக எழுதியிருக்கிறார். இது அவரது மனிதாபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

அவரது கோட்பாடு இனவெறிக்கு வித்திட்டதா? 

ஆம். உண்மைதான். 

நிச்சயமாக அவர் இனவெறியை ஊக்கப்படுத்தவில்லை, ஆனால் அவர் முன்வைத்த கொள்கை இன வெறிக்கு காரணமாய் இருந்தது/இருக்கிறது (Darwin himself didn’t promote racism, But surely his theory of evolution did).

முதலில் மற்ற இனத்தவரை டார்வின் எப்படி அணுகினார் என்று பார்ப்போம். 

தன்னுடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் அவர்.
"At some future period not very distant as measured by centuries, the civilised races of man will almost certainly exterminate and replace the savage races throughout the world. At the same time the anthropomorphous apes…will no doubt be exterminated. The break between man and his nearest Allies will then be wider, for it will intervene between man in a more civilised state, as we may hope, even than the Caucasian, and some ape as low as the baboon, instead of as now between the Negro or Australian and the gorilla" --- Charles Darwin in his book "The Descent of Man", p-201 

மேலே உள்ள பத்தியின் ஆரம்பத்தில் அவர் ,
"நிச்சயமாக, எதிர்காலத்தில் நாகரிகமுள்ள மனித இனங்கள், நாகரிகமற்ற  (காட்டுமிராண்டித்தனமான) மனித இனங்களை முற்றிலும் அழித்து விடும்" 
என்று கூறுகிறார். 

அவர் யாரை காட்டுமிராண்டிகள் என்று சொன்னாரோ, அவர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அவர்கள் அழிந்துவிடவில்லை, அவர்களுடைய அறியாமை தான் அழிந்துவிட்டது. இன்று அவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்களில்லை.

அதே பத்தியின் கடைசியில் அவர், கறுப்பினத்தவரையும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரையும், மனித குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இவர்கள் "Less Evolved" மக்கள். நிச்சயமாக அவரது நம்பிக்கையின் படி, மனிதன், மனிதகுரங்கிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு இனமாக மாறி, பின்னர் கடைசியாக ஐரோப்பிய இனமாக மாறினான்.

ஆக, இயல்பாகவே, ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவருடன் ஒப்பிடும் போது தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர். அவர்களில் எல்லாம் உயர்ந்தவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள்.

இங்கு தான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். ஐரோப்பியர்களுக்கு பல காலங்களுக்கு முன்னரே எகிப்தியர்கள், இந்தியர்கள், அரேபியர்கள் (பார்க்க நாமென்ன செய்தோம் இவ்வுலகிற்கு?) மற்றும் சீனர்கள் அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஐரோப்பியர்களுக்கு எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை. இன்றும் எந்த இனத்தவரும் மற்ற இனத்தவருக்கு சளைத்தவர்களில்லை.

அப்படியிருக்க, மனிதன் பரிணாம முறைப்படி ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனமாக மாறி மாறி தற்போதைய ஐரோப்பிய இனமாக மாறினான் என்றால், ஒரு இனம் மற்றொரு இனத்தை விட சிறந்ததாகத்தான் இருக்க வேண்டும். அதைத்தானே டார்வினும் கீழ்க்காணும் பத்தியில் கூறுகின்றார்.
"Their mental characteristics are likewise very distinct; chiefly as it would appear in their emotional, but partly in their intellectual faculties" --- Charles Darwin in his Book, Descent of Man, Chapter Seven: On the Races of Man, p.343
இப்போது நம்முடைய கேள்வியெல்லாம், இன்றைய உலகை வைத்து யாரையும் சிறந்தவர்கள் என்று கூற முடியாதே?, அதுபோல டார்வினுடைய கருத்துப்படி "less Evolved" இனத்தவர் அழிந்து விட வில்லையே. இனி அழிவார்களா என்பதும் நிச்சயமில்லையே? 

டார்வினுடைய கோட்பாடு நிச்சயமாக புரியாதப் புதிர் தான்...      
  
டார்வினுடைய, "தாழ்ந்த இனங்கள் சீக்கிரமே அழிந்துவிடும்" என்ற கருத்தை தான் செயல்படுத்த நினைத்தாரோ ஹிட்லர்? 

எது எப்படியோ, ஹிட்லர் தன்னுடைய வெறியாட்டத்திற்கு துணையாகக் கொண்டது இந்த கோட்பாட்டை தான், அதன் "Struggle for Survival" என்ற கருத்தை தான்.

ஹிட்லருடைய புத்தகத்தில் (Mein Kampf) அவர் பலமுறை "EVOLUTION" (ஜெர்மனியில் "Entwicklung") என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். நாசி படைகள் தயாரித்த வீடியோக்களிலும், ஹிட்லருடைய பேச்சிலும் "Survival of the Fittest" என்ற கருத்து அடிக்கடி இடம்பெறும்.

"Those who want to live, let them fight, and those who do not want to fight in this world of eternal struggle do not deserve to live" --- Adolf Hitler, at his third public speech after taking power.
வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் சண்டையிடட்டும். சண்டையிட விருப்பமில்லாதவர்கள் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள் --- (Extract of the Speech of) Adolf Hitler, at his third public speech after taking power  

இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் அவர். இதையே தான் டார்வினும் சொன்னார். 

உதாரணத்துக்கு, ஹிட்லருடைய புத்தகத்தில் இருந்து:  
"If Nature does not wish that weaker individuals should mate with the stronger, she wishes even less that a superior race should intermingle with an inferior one; because in such a case all her efforts, throughout hundreds of thousands of years, to establish an evolutionary higher stage of being, may thus be rendered futile" ---Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.
இயற்கை, நிச்சயமாக உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தோடு சேருவதை விரும்புவதில்லை. அப்படி நடக்குமானால், இயற்கையினுடைய ஆயிரமாயிரம் ஆண்டு கால உழைப்பு வீணாகி விடும் --- (Extract from the original quote of) Adolf Hitler, Extracted from Mein Kampf, volume 1, chapter 11, Race and People.     
ஒரு இனம் மற்றொரு இனத்தை விட உயர்ந்தது என்றால் தன்னுடைய செயலில் என்ன தவறு  இருக்கிறதென்று கேட்டவர். தன்னுடைய உயர்ந்த குல இரத்தம் தனக்கு முன் வந்த இனத்துடைய இரத்தத்துடன் கலக்கக்கூடாது என்று வாதிட்டவர். தன்னுடைய உயர்ந்த (SUPERIOR) இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியவர்.  

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, டார்வினே இப்படி சொன்னவர் தானே, அதாவது Favoured Races பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். அவருடைய "Origin of Species" புத்தகம் முதலில் வெளியான போது (1859) அதனுடைய முழு தலைப்பு, " The Origin of Species by Means of Natural Selection—or The Preservation of Favoured Races in the Struggle for Life"


பின்னர் சில காலங்களுக்கு பிறகு இந்த தலைப்பு சுருக்கப்பட்டது. 

ஆக, சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு ஹிட்லர் காரணமென்றால், அவர் தன்னுடைய செயலை நியாயப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியான காரணமாய் கொண்டது பரிணாமவியலைத் தான்.
The leader of Germany is an evolutionist not only in theory, but, as millions know to their cost, in the rigor of its practice. For him, the 'national front' of Europe is also the 'evolutionary front” --- Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230. 
"ஜெர்மனியின் தலைவர் பரிணாமவியலை ஆதரித்தவர். அதனை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்துவதில் தீவிரமாய் இருந்தவர், இதற்கு இறந்து போன லட்சக்கணக்கான மக்களே சாட்சி" --- (Extract from the original quote of) Sir Arthur Keith in his book "Evolution and Ethics", 1947, p.230.    

பரிணாமவியலை, அறிவியல் காரணமாகக் (Scientific Racism) கொண்டு தங்களுடைய இனவெறியை நியாயப்படுத்தியவர்கள் பலர். இன்றும் அதை செய்துக் கொண்டிருக்கின்றனர். இன்றளவும் கறுப்பினத்தவர்களை குரங்குகளாக சித்தரிக்கும் செயல் சில இன வெறியர்களிடமிருந்து போகவில்லை.

இதையெல்லாம் விடுங்கள், இப்போது நான் பரிணாமத்தை நம்புபவர்களை கேட்க விரும்புவதெல்லாம்,

  • ஒரு மனித இனம், மற்றொரு மனித இனத்தை விட மேம்பட்டது என்ற பரிணாமவியலின் வாதத்தையும் நம்புகிறீர்களா? 
  • ஒரு ஐரோப்பியர் வந்து, "நான் உன்னை விட உயர்ந்தவன்" என்று சொன்னால், "ஆமாம், நீ சொல்லுவது சரிதான்" என்று ஆமோதிப்பீர்களா?  

இது என்ன கேள்வி, பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

அப்படியானால், இனிமேலும் தயவுக்கூர்ந்து "உலகில் உள்ள அனைத்து மக்களும் சமம்" என்று சொல்லாதீர்கள். அப்படி நீங்கள் சொன்னால் அது உங்கள் கொள்கைக்கு நீங்கள் செய்கிற துரோகம்...

நமது நாட்டில், கடவுளின் வெவ்வேறு உடற்பகுதிகளில் இருந்து வெவ்வேறு பிரிவினர் வந்ததாக சொன்னபோது, "இல்லை மக்கள் அனைவரும் சமம்" என்று அதை எதிர்த்த/எதிர்க்கும் பரிணாமவியலை ஆதரிக்கும் சிலர், அவர்களது நம்பிக்கையும் "மனிதர்களெல்லாம் சமமல்ல" என்று கூறுவதை ஏன் மறந்தார்கள்?

என்ன, அவர்கள் கடவுளை காரணமாக காட்டுகிறார்கள், இவர்கள் இயற்கையை காரணமாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு கடவுள் என்றால் இவர்களுக்கு இயற்கை தான் கடவுள்...

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

நாத்திகர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள், உங்கள் email id யைத் தாருங்கள். அல்லது என்னுடைய email id க்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புங்கள். நான் குரான் soft copy அனுப்புகிறேன். அதை நீங்கள் இறைவனின் வார்த்தைகள் என்றெண்ணி படிக்க வேண்டாம். யாரோ ஒருவர் எழுதியதென்று நினைத்து ஒரு நாவலைப்போல படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். தயவு கூர்ந்து இந்த முதல் அடியை எடுத்து வையுங்கள். இறைவன் நாடினால், நிச்சயமாக உங்களுக்குள் ஒரு மாற்றத்தை அது தரும். சொல்ல வேண்டியது ஒரு சகோதரன் என்ற முறையில் என் கடமை, ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் உங்கள் இஷ்டம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks To:
1. British Broadcasting Corporation (BBC)
2. New Scientist Website.

References:
1. The Origin of Species by Means of Natural Selection or The Preservation of Favoured Races in the Struggle for Life  --- Charles Darwin, 1859.
2. The Descent of Man --- Charles Darwin, 1971.
3. Journal of researches into the natural history and geology of the countries visited during the voyage of H.M.S. Beagle round the world, under the Command of Capt. Fitz Roy ---  Charles Darwin, 1845.
4. Was Charles Darwin a Racist? --- BBC, dated 13th February 2009.
5. Hatred of slavery drove Darwin to emancipate all life --- New Scientist, dated 29th January 2009.
6. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 --- Adolf Hitler
7. Scientific Racism - Wikipedia.
8. Evolution and Ethics --- Sir Arthur Keith, 1947.


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ