Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, January 25, 2016

'ஆக்டோபஸ் எனும் வேற்றுக்கிரகவாசி'





நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

"Not to send you into a meltdown or anything but octopuses are basically ‘aliens’ – according to scientists. Researchers have found a new map of the octopus genetic code that is so strange that it could be actually be an “alien” " -  Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com 
"உங்களை நிலைக்குலைய செய்வது எங்களின் நோக்கமல்ல. அதே நேரம், விஞ்ஞானிகளை பொருத்தமட்டில் ஆக்டோபஸ் ஒரு வேற்றுக்கிரகவாசியாக கருதப்படுகின்றது. ஆக்டோபசில் நடைபெற்ற சமீப கால ஆய்வுகள், அவை மிக வினோதமான மரபணுக்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இதனாலேயே வேற்றுக்கிரகவாசியாக அவை அறியப்படுகின்றன" - (extract from the original quote)  Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com.  

நில்லுங்கள். உங்கள் கற்பனைக் குதிரைகளை தட்டிவிடாதீர்கள். உலகில் யாருமே ஆக்டோபஸ்சை வேற்றுக்கிரகவாசியாக கருதுவதில்லை. ஆம், ஆக்டோபசின் மரபணுக்களில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் நம் கற்பனைக்கு எட்டாத, நீண்ட கால நம்பிக்கைகளுக்கு சவால் விடும் செய்திகளை நமக்கு கொண்டு வந்திருக்கின்றன. அதே நேரம், நீங்கள் மேலே படித்த, பிரபல BT ஊடகத்தின் வர்ணனை சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே எனக்கு தோன்றுகின்றது.

ஆக்டோபஸ்: 

சாக்குக்கணவாய் என்பது இவற்றுடைய தமிழ் பெயர் என்கிறது விக்கிப்பீடியா. எல்லோரும் புரிந்துக்கொள்ள ஏதுவாக நாம் ஆக்டோபஸ் என்றே அழைப்போம். 

ஆக்டோபஸ் பற்றிய பல உண்மைகள் வியப்பாகவே உள்ளன. எட்டு கைகள் கொண்ட இவற்றிற்கு மூன்று இதயங்கள் உண்டு. உங்களை ஆபத்தாக அது கருதினால் உங்கள் கண்களுக்கு முன்பாக, நேருக்கு நேராகவே மறைந்திருக்கும். இல்லை, நான் வார்த்தைகளை தவறாக போடவில்லை, சரியாக தான் சொல்லியிருக்கின்றேன். ஆம், உங்கள் முன்பு தான் நின்றிருக்கும், ஆனால் நீங்கள் பார்க்க முடியாது. ஆபத்தான நேரங்களில், சுற்றுச்சூழலின் நிறம் மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் அசாத்திய திறன் கொண்டவை ஆக்டோபஸ்கள். பல நேரங்களில், இவற்றின் எதிரிகளான ஷார்க் மீன்கள், டால்பின்கள், ஈல்கள் போன்றவை ஆக்டோபஸ்சின் பக்கத்திலேயே நீந்தி செல்லும். ஆனால் இவற்றை கண்டுபிடிக்க அவற்றால் முடியாது. 

ஒருவேளை எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், கறுப்பு நிற மையை பீச்சியடித்து தப்பிவிடும். இந்த மையானது மேகம் போல பரவி எதிரிகளை குழப்பமடைய வைக்கும். மேலும், வெறுமனே குழப்புவதற்கு மட்டுமல்லாமல் எதிரிகளின் நுகரும் தன்மையை தற்காலிகமாக மழுங்கடிப்பதற்கும் இந்த மை பயன்படுகின்றது. அதனால், இவை தப்பிய பிறகு, தங்களின் நுகரும் தன்மையால் இவற்றை தொடர்ந்து வர எதிரிகளால் முடியாது. 

மெல்லுடல் (Mollusca) உயிரினங்களான இவை, கடல் பாறைகளின் சின்னஞ்சிறிய விரிசல்களுக்குள் கூட தன் உடலை புகுத்திக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும். தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்விடைந்து விட்டதா, எதிரி நெருங்கிவிட்டதா, கடைசி முயற்சியாக, தன் எட்டு கைகளில் ஒன்றை அறுத்துவிட்டு விடும். இதன் மூலம் எதிரிகளின் கவனத்தை சிதறடிக்கும். ஆச்சர்யம் என்னவென்றால், அந்த கையானது சில நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும். 

உயிரியலின்படி, தலைக்காலிகள் (Cephalopod) என்ற வகுப்பில் வரும் இவை, தங்களுடைய ஒவ்வொரு கையிலும், இரண்டு வரிசையில் உறிஞ்சு குப்பிகளை கொண்டிருக்கும். இந்த குப்பிகள், தன்னிச்சையாக சுவைகளை உணரக்கூடியவை என்பது மற்றுமொரு கவனிக்கத்தக்க செய்தி.

Fig 1. ஆக்டோபஸ் உறிஞ்சு குப்பிகளை காட்டும் படம் 
கணவாய் என்று நாம் பேச்சு வாக்கில் கூறும், உணவிற்கு பயன்படுத்தும் ஊசிக்கணவாய்களும் (squid), தலைக்காலிகள் என்ற இந்த வகுப்பில் தான் வருகின்றன என்ற போதும், அவற்றுடன் ஒப்பிடும் போது, ஆக்டோபஸ் மிக அறிவார்ந்த உயிரினமாக கருதப்படுகின்றது. இவ்வளவு ஏன், எலும்பு இல்லா (invertebrates) உயிரினங்களிலேயே மிக புத்திசாலியானவை என்ற பெருமையும் ஆக்டோபஸ்களுக்கு உண்டு. ஒருமுறை, இவற்றிற்கு பிடித்த உணவான நண்டுகளை ஜாடியில் போட்டு மூடிய போது, ஜாடியை திறந்து நண்டுகளை பிடிக்கும் அளவு அறிவார்ந்தவையாக இவை செயல்பட்டன. 

Fig 2. a) ஆக்டோபஸ்                                                     b) கணவாய்
ஆக, ஆய்வாளர்களை பொருத்தமட்டில், உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் இருந்தும் பெரிதும் வித்தியாசப்பட்டவை ஆக்டோபஸ்கள். இதன் காரணமாகவே, பிரபல பிரிட்டிஷ் உயிரியலாளரான மார்ட்டின் வெல்ஸ், ஆக்டோபஸ்களை 'ஏலியன் (வேற்றுக்கிரகவாசி)' என்று குறிப்பிட்டார். 

மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தி (Gene Sequence technique):

உயிரினங்களின் விசித்திர நடவடிக்கைகளின் பின்னணியை எப்படி அறிந்துக்கொள்வது? மரபணுக்களை ஆராய்வதே பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று எண்ணினர் ஆய்வாளர்கள். இப்படியான சூழலில் தான் 'மரபணு வரிசைப்படுத்துதல்' தொழில்நுட்பம் வந்தது. உயிரினங்களின் மரபணுக்களை ஆராயும் வழிகளை அது எளிதாக்கியது. இன்றோ, பல்வேறு உயிரினங்களின் பின்னணியை இந்த தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து வருகின்றனர் உயிரியலாளர்கள்.

இந்த யுக்தியைக் கொண்டு, ஆக்டோபஸ்சில் முதன் முதலாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக பாரம்பரிய 'நேச்சர் (Nature)'  ஆய்விதழில் வெளிவந்தன. இந்த உயிரினத்தை போலவே ஆய்வு முடிவுகளும் விசித்திரமான செய்திகளை கூறின. அதன் பிரதிபலிப்பு தான் 'இவை வேற்றுக்கிரகவாசிகள்'  என்றுக் கூறி வெளிவந்த தலையங்கங்கள். அறிவியல் உலகை மட்டுமல்லாமல், சாமானியர்களின் உலகையும் சேர்த்து ஆட்கொண்டது இந்த செய்தி. தமிழில் கூட, சில தளங்களில் இதுக்குறித்து செய்திகள் வெளியானதாக நியாபகம்.

"The octopus appears so utterly different from all other animals, even ones it’s related to, that the British zoologist Martin Wells famously called it an alien. In that sense, you could say our paper describes the first sequenced genome from an alien," -  Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.
"ஆக்டோபஸ்கள், மற்ற உயிரினங்களில் இருந்து மிகவும் வேறுபடுகின்றன. இவை தொடர்புடைய (கணவாய் போன்ற) மற்ற உயிரினங்களில் இருந்தும் கூட இவை வேறுபடுகின்றன. அதனாலயே, பிரிட்டிஷ் உயிரியலாளர்  மார்டின் வெல்ஸ் இவற்றை 'ஏலியன்' என்று அழைத்தார். அப்படி பார்த்தால், நாங்கள், இந்த வேற்றுக்கிரகவாசியின் மரபணு தொகுப்பை முதல் முறையாக ஆய்வு செய்து வரிசைப்படுத்தியுள்ளோம்" - Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.

இந்த ஆய்வுக் குறித்து செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் பலவும், வேற்றுக்கிரகவாசி போன்ற வர்ணனைகள் மூலம் மக்களின் கவனத்தை கவர நினைத்தனவே தவிர, ஆய்வாளர்கள் இந்த உயிரினத்தை அப்படி அழைக்க பின்னால் இருந்த காரணங்களின் ஆழத்தை, காலங்காலமாக நம்பப்பட்டுவரும் பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆக்டோபஸ்சின் மரபணுக்கள் சவால் விட்டதை எடுத்துரைக்க ஏனோ மறந்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லின ஆய்வு முடிவுகள்?

மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தியைக் கொண்டு எந்தவொரு உயிரினத்தின் மரபணுக்களை பரிணாமவியலாளர்கள் ஆராய்ந்தாலும், பரிணாமத்திற்கு ஆதரவான விசயங்களை அதில் தேடுகின்றனர். உதாரணத்திற்கு, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக இவர்கள் நம்புகின்றனர். அதனால் இன்றைய மனிதனும், குரங்கின் சில இனங்களும் தொடர்புடையவை (அல்லது உறவினர்கள்) என்று கூறுகின்றனர்.

இதனை மனதில் கொண்டு,  மனித மரபணுக்களில் சோதனை நடத்தி, முடிவுகளை குரங்கின் சில இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அப்படி ஒற்றுமை (??) இருந்தால், 'பார்த்தீர்களா, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் மனிதன் வந்தான் என்று நாங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது" என்பார்கள்.

ஒருவேளை இவ்விரு உயிரினங்களின் மரபணுக்களுக்கும் தொடர்பில்லை என்றால்? மனிதனின் தோற்றம் குறித்த இவர்களின் புரிதல் தவறு என்று தானே அர்த்தம்? ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மர்மமான முறையில் பரிணாமம் வேலை செய்திருக்கின்றது என்று இவர்கள் கூறும் விளக்கத்தை கண்டு நாம் நம் விதியை நொந்துக்கொள்ள வேண்டும் :-) :-).

சரி விடுங்க விசயத்திற்கு வருவோம். ஆக்டோபஸ்சில் நடத்தப்பட்ட மரபணு ஆய்விலும் இத்தகைய தொடர்பை தேடினர். அதாவது, மற்ற மெல்லுடல் மற்றும் எலும்பில்லா உயிரினங்களை ஆக்டோபஸ் ஒத்திருக்கும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையோ, பரிணாமவியலாளர்களின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'ஆச்சர்யம், திகைப்பு, எதிர்ப்பார்க்காதது' போன்ற வர்ணனைகள் தான்.

எப்போது இவர்கள் 'எதிர்பார்க்காதது' போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறார்களோ அப்போதே நாம் உஷாராகிக் கொள்ள வேண்டும். எங்கோ பிரச்சனை வந்துவிட்டது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். 

1. இவர்கள் எதிர்பார்த்திராத முதல் விசயம், ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க அளவு, இவை தொடர்புடைய மெல்லுடல் உயிரினங்களுடன் ஒத்திராமல், முதுகெலும்பு உள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்த மரபணுக்களுடன் ஒத்திருந்தன (அட).

"What's more, they saw a massive expansion in a family of genes that's involved in setting up brain circuits. These genes have been studied in mice and were previously thought to be numerous only in animals with backbones. "We were really surprised as we were poking through the octopus genome to see that there were just 150 [or] 160 of these genes," Albertin says. She says they're completely absent in the invertebrates that scientists normally work on, like flies or nematode worms" - Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs , Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
"இன்னும் என்ன வேண்டும், ஆக்டோபஸ்சின் மூளை அமைப்புகளுடன் தொடர்புடைய சுமார் 150, 160 மரபணுக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இப்படியான மரபணுக்களை எலிகளில் அவர்கள் கண்டுள்ளனர். மேலும், இந்த மரபணுக்கள் முதுகெலும்புள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்தனர். ஆய்வாளர்கள் இதுவரை ஆய்வு செய்துள்ள எலும்பில்லாத உயிரினங்களில் இவை முற்று முழுவதுமாக காணப்படவில்லை  - (Extract from the original quote of) Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
ஒரு உயிரினத்தின் மரபணுக்கள், அது சார்ந்த உயிரினங்களுடன் ஒத்துப்போகாமல், எங்கோ தூரமாக உள்ள உயிரினங்களுடன் ஒத்துப்போவதான காட்சிகளை, நிச்சயம், பரிணாம ஆதரவாளர்கள் விரும்புவதில்லை. பரிணாமக் கோட்பாட்டின் யூகங்களுக்கு முற்றிலும் மாறான செய்திகள் இவை. இந்த விவகாரத்தை நோக்கும் சாதாரண மனிதனுக்கு கூட இது புரியும். ஆனால், நம்பிக்கையின் பால் சுழலும் பரிணாமவியலாளர்கள், இவற்றை ஏற்க மறுத்து, இந்த நிகழ்வுகளுக்கு வேறு காரணங்களை தேடி அலைகின்றனர்.

அப்படி கண்டுபிடித்த ஒரு காரணம் தான் 'தன்னிச்சையாக பரிணமித்தல் (Convergent Evolution)'. அதாவது, தொடர்பில்லாத இரண்டு உயிரினங்களிடையே மரபணுக்கள் ஒத்திருக்கின்றனவா, அப்படியானால், இந்த மரபணுக்கள் இரண்டு உயிரினங்களிலும் தன்னந்தனியாக பரிணமித்து விட்டதாக அர்த்தமாம். ஆக, மரபணுக்கள் தொடர்பிருந்தாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம், தொடர்பில்லை என்றாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம். what a pity !!!

சரி, இந்த தன்னிச்சையாக பரிணமித்தலுக்கு ஆதாரம்? அட, பரிணாமத்தின் மற்ற விசயங்களுக்கு மட்டும் ஆதாரம் இருக்கா என்ன? அப்படித்தான் இதுவும். லூஸ்ல விடுங்க.

2. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது தகவல் இன்னும் விவகாரமானது. ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவை தனித்துவம் வாய்ந்தவையாம். அப்படியென்றால், இதுப்போன்ற மரபணுக்கள் உலகில் வேறு எந்த உயிரினங்களிலும் காணப்படவில்லை என்று அர்த்தம் (அப்படி போடு).

We identified hundreds of cephalopod-specific genes, many of which showed elevated expression levels in such specialized structures as the skin, the suckers and the nervous system  - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668
நூற்றுக்கணக்கான தனித்துவமான மரபணுக்களை நாங்கள் ஆக்டோபஸ்சில் கண்டறிந்துள்ளோம். தோல், உறிஞ்சு குப்பிகள் மற்றும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவாக இவை இருக்கின்றன - (Extract from the original quote of) Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668

பரிணாம ஆதரவாளர்களுக்கு இன்னும் சோகமான செய்தி என்னவென்றால், இப்படி புதிய மரபணுக்கள் தென்பட்டால் கூறும் வழக்கமான காரணத்தை கூட கூற முடியாதபடி செய்துவிட்டது ஆக்டோபஸ் :-). எப்படி என்கின்றீர்களா? எப்போதெல்லாம் புதிய மரபணுக்கள் உயிரினங்களில் தென்படுகின்றவோ, அப்போதெல்லாம் ரெடிமேடாக இவர்கள் வைத்துள்ள பதில், "மரபணு நகலெடுத்தல்" என்பதாகும். அப்படின்னா என்ன?

மரபணு நகலெடுத்தல் (Gene Duplication):

உங்களிடம் ஒரு ஆவணம் (டாகுமென்ட்) இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதனை நகல் (ஜெராக்ஸ்) எடுக்கின்றீர்கள். எடுக்கப்பட்ட நகலில் சில மாற்றங்களை செய்து புது வேலைக்கு பயன்படுத்துகின்றீர்கள். அதே நேரம், உங்கள் ஒரிஜினல் ஆவணம் அப்படியே இருந்து, தொடர்ந்து பழைய வேலைக்கே பயன்படுகின்றது. 

புதிய மரபணுக்கள் எப்படி உருவாகின என்பதற்கும் இப்படியான ஒரு விளக்கத்தையே காலங்காலமாக கொடுத்து வந்தனர் பரிணாமவியலாளர்கள். அதாவது, ஒரு உயிரினத்தில் உள்ள மரபணு, தன்னை நகல் எடுத்துக்கொள்கின்றது. நகல் எடுக்கப்பட்ட மரபணு காலப்போக்கில் மாற்றமடைந்து புதிய மரபணுவாக உருவெடுக்கின்றது. இந்த மரபணுவானது உயிரினத்தில் புதிய வேலைகளை செய்கின்றது. அதே நேரம், பழைய மரபணுவோ தொடர்ந்து தன்னுடைய பழைய வேலையை செய்துக்கொண்டிருக்கின்றது. 

Fig 3. மரபணு நகலெடுத்தல் முறை செயல்படும் விதம்

ஆக, பழைய மரபணுக்கள் பழைய வேலையையும், அவற்றில் இருந்து நகல் எடுக்கப்பட்டு உருவான புதிய மரபணுக்கள் புதிய வேலைகளையும் செய்ய ஆரம்பித்தன. ஒரு உயிரினத்தில் புதிய மரபணுக்கள் காணப்படுவதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த விளக்கமானது "மரபணு நகல் எடுத்தல்" என்றழைக்கப்படுகின்றது. 

ஆனால், எப்போது உயிரினங்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பம் (Gene Sequence) வந்ததோ, அப்போதே பிரச்சனைகள் தலைக்கு மீறி போக ஆரம்பித்தன. புதிய மரபணுக்கள் எனப்படுபவை குறித்த ஆழ்ந்த பார்வையை இவை கொடுக்க ஆரம்பித்தன. நிச்சயம் பரிணாமவியலாளர்களுக்கு இது இக்கட்டான நிலையே. 

எப்படி என்றால், உங்களின் புதிய ஆவண நகல், ஒரிஜினல் ஆவணத்தை ஒத்து தானே இருக்கும்? அல்லது குறைந்தபட்ச ஒற்றுமைகளாவது இருக்கும் அல்லவா? 'நகலெடுத்தல்' வழிப்படி புதிய மரபணுக்கள் வந்திருந்தால், அந்த புதிய மரபணுக்கள், தங்களின் மூதாதையரான பழைய மரபணுக்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது கொண்டிருக்க வேண்டுமல்லவா? 

இங்கு தான் விவகாரம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. மரபணு வரிசைப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வகையான உயிரினங்களின் மரபணு தகவல்களை சேமித்து வைத்துள்ளனர் ஆய்வாளர்கள். (அவற்றில்) தேடித்தேடி பார்த்தார்கள், புதிய மரபணுக்களுடன் தொடர்புடைய பழைய மரபணுக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒரு உயிரினத்தின் புதிய மரபணுக்கள்  வேறு எந்தவொரு உயிரினத்திலும் காணப்படவில்லை. காணப்படவே இல்லை. இவை புத்தம் புதியவை, வேறு எங்கும் இல்லாதவை. 

சரி போகட்டும். இப்படியான மரபணுக்கள் காணப்படுவது மிக அரிதான நிகழ்வு என்று தங்களை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்ற தருணத்தில், தொடர்ந்து, பல்வேறு உயிரினங்களில் புதிய மரபணுக்களை கண்டறிய ஆரம்பித்தனர். புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருந்தன. 

"For most of the last 40 years, scientists thought that this was the primary way new genes were born — they simply arose from copies of existing genes. The old version went on doing its job, and the new copy became free to evolve novel functions. Certain genes, however, seem to defy that origin story. They have no known relatives, and they bear no resemblance to any other gene. They’re the molecular equivalent of a mysterious beast discovered in the depths of a remote rainforest, a biological enigma seemingly unrelated to anything else on earth" - Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015. 
"கடந்த நாற்பது வருடங்களாக, புதிய மரபணுக்கள் பிறந்ததற்கு நகல் எடுத்தலே பிரதான காரணம் என்று ஆய்வாளர்கள் நினைத்தனர் - அதாவது, ஏற்கனவே இருக்கும் மரபணுக்களின் நகல் மூலம் இவை பிறந்ததாக. பழைய மரபணுக்கள் தங்களின் வழக்கமான வேலைகளை பார்க்கும், நகலோ பரிணமித்து புதிய வேலைளை பார்க்கும். ஆனால், குறிப்பிடத்தக்க மரபணுக்கள் 'நகல் எடுத்தல்' என்ற விளக்கத்திற்கு உடன்படவில்லை. அவற்றிற்கு மூதாதையர் இல்லை, வேறு எந்த மரபணுக்களை போலவும் அவை இல்லை. தொலைத்தூர மழைக்காட்டில், உலகில் உள்ள எந்த உயிரினத்தோடும் ஒப்பிட முடியாத ஒரு மர்ம விலங்கு கண்டுபிடிக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படியான சூழலே இது" -  (extract from the original quote of) Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015.

இந்த பிரச்சனையில் தான் ஆக்டோபஸ்சும் பரிணாமவாதிகளை தள்ளி விட்டுவிட்டது. ஆக்டோபஸ்சில் காணப்படும் புதிய மரபணுக்கள் 'நகலெடுத்தல்' மூலம் வந்தவை என்று கூற முடியாத அளவு தனித்துவமாக இருக்கின்றன. இதனால் தான் இவை எப்படி வந்தன என்பதை விளக்காமல் கமுக்குமாக கட்டுரையை முடித்துவிட்டார்கள் ஆய்வை நடத்தியவர்கள். இவ்விவகாரத்தின் வீரியத்தை இதிலிருந்தே நாம் உணரலாம். அவர்கள் சொல்லவில்லை என்றால் என்ன , நாம் சொல்லுவோமே. உண்மைகள் நெடுநேரம் உறங்காதே...

பைனல் பன்ச்:

விசித்திரமாகவும், வேறு எந்த உயிரினத்திலும் காணப்படாத மரபணுக்கள் ஆக்டோபஸ்சில் காணப்படுவதாலும் அவை வேற்றுக்கிரகவாசிகள் என்றால், உலகில் இப்படியான பல வேற்றுக்கிரகவாசிகள் உண்டு. மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களில் தனித்துவமான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு வகையில் விசித்திரமானது தான். அது புரியாத வரை சிலருக்கு எதுவும் புரியாது :-) :-)

"ஹலோ நாசாவா, நீங்க ஏலியன்களை எங்கெங்கோ தேடுறீங்களே, நம்ம பரிணாம பங்காளிகள் கிட்ட கேட்டா, இந்த பூமியிலேயே புடிச்சு தருவாங்க. ஆவண பண்ணுங்க"

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Pictures taken from:
Fig 1 - Scientific American.
Fig 2 - Google
Fig 3 - Designed by Aashiq Ahamed

References:
1. The octopus genome and the evolution of cephalopod neural and morphological novelties - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668. link
2. Octopus genome surprises and teases - Dennis Normile. Science Magazine, Aug. 12, 2015. link
3. Octopus genome holds clues to uncanny intelligence - Alison Abbott, Nature, 12 August 2015. link
4. Octopus Genome Reveals Secrets to Complex Intelligence - Katherine Harmon Courage, Scientific American, August 12, 2015. link
5. Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105. link
6. Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study - BT, 13 August 2015. link
7. The Octopus Genome: Not "Alien" but Still a Big Problem for Darwinism - Casey Luskin, Evolution News and Views, August 24, 2015. link
8. Amazing facts about Octopus - One kind. link
9. A Surprise Source of Life’s Code - Emily Singer, Quanta Magzine, August 18, 2015. link
10.  சாக்குகணவாய் - விக்கிப்பீடியா. link
11. ஆக்டோபஸ் - கல்வி சோலை. link
12. Common Octopus (Octopus vulgaris) - National Geographic. link

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ.







Tuesday, July 23, 2013

பிரிட்டிஷ் முஸ்லிம்கள் - அறக்கொடைகள் - கடைசியில் நாத்திகர்கள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

பிரிட்டனின் பிரபல ஊடகமான "தி டைம்ஸ்", நன்கொடை/அறக்கொடை அளிப்பதில், சமயரீதியாக மக்களுக்கு உள்ள ஆர்வத்தை பிரதிபளிக்கும் ஆய்வொன்றின் முடிவுகளை சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. அந்த கட்டுரைக்கு தி டைம்ஸ் வைத்த தலையங்கம் இதுதான், 

Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013
அறக்கொடை அளிப்பதில் பிரிட்டனில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்கின்றனர் - (Extract from the original article of) The Times, 20th July 2013.

இன்று பரவலாக பல்வேறு ஊடங்களும் பகிர்ந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் கவனிக்கத்தக்க தகவல்களை நமக்கு தருகின்றன. அதில் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம். 

பிரிட்டனில், சாரிட்டி (charity) எனப்படும் அறக்கொடை அளிப்பதில் முஸ்லிம்கள் முதல் நிலையிலும், நாத்திகர்கள் கடைசியிலும் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 371 யூரோக்களை கொடுத்துள்ளனர் (இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் 29,000 ரூபாய் ஆகும்). இதுவே மற்ற சமயத்தவர்களை பொருத்தமட்டில் பின்வருமாறு உள்ளது. 

யூதர்கள் - 270 யூரோக்கள் 
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள் 
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே அதிகமாக
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே குறைவாக
நாத்திகர்கள் - 116 யூரோக்கள் 


இதுமட்டுமல்லாது, நன்கொடை/அறக்கொடை கொடுக்காதவர்கள் பட்டியலிலும், யூதர்களுடன் இணைந்து நாத்திகர்கள் முன்னிலையில் உள்ளனர். சென்ற ஆண்டில், பத்தில் நான்கு நாத்திகர்கள் எவ்விதமான தர்மத்தையும் மேற்கொள்ளவில்லை. யூதர்களை பொருத்தமட்டில், இது, நான்கிற்கும் சற்றே அதிகமாக உள்ளது.

ரிச்சர்ட் டாகின்ஸ் போன்ற பிரித்தானியர்கள், நாத்திகத்தின் மூலம் ஆரோக்கியமான/கருணையான உலகத்தை உருவாக்க முடியும் என்று முயற்சிகள் செய்துவரும் நிலையில் இப்படியான முடிவுகள் நிச்சயம் பெரும் பின்னடைவே. தங்களின் செல்வத்தை எப்படி செலவழித்தால், செலவழித்தவருக்கு எப்படியான நன்மைகள் உண்டாகும் என்பதை நாத்திகர்கள் மனதில் பதிய வைத்து அறக்கொடைகளை அதிகரிக்க வேண்டியது டாகின்ஸ் போன்றவர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாகும். 

நாம் பதிவிற்கு வருவோம்.

முஸ்லிம்களின் நன்கொடை யாருக்கு அதிகமாக சென்றுள்ளது?

இது பலரும் அறிந்துக்கொள்ள விரும்பும் கேள்வியாகும். இதற்கும் இந்த ஆய்வு பதிலளிக்கின்றது. முஸ்லிம்களின் நன்கொடைகள், இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களான Muslim Aid மற்றும் Islamic Relief போன்றவற்றிற்கு அதிகப்படியாக சென்றுள்ளது. அதே போல, பின்வரும் மருத்துவ நிறுவனங்களுக்கும் முஸ்லிம்கள் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளனர். 

1. புற்றுநோய் ஆய்வுக்கழகம் (Cancer Research) 
2. மேக்மில்லன் & பிரிட்டிஷ் இருதய கழகம் (MacMillan & British Heart Foundation)

சந்தேகமில்லாமல், இப்படியான ஆய்வுகள் மூலம் முஸ்லிம்கள் ஆச்சர்யமடைய ஒன்றுமில்லை. இஸ்லாம் அதிகப்படியாக வலியுறுத்தும் நன்மைகளில் (கடமையான) ஜகாத் மற்றும் தர்மங்களுக்கு முக்கிய பங்குண்டு. பொருளாதார வசதியுள்ள முஸ்லிம்கள் அதிகப்படியாக வழங்கி தங்களின் நன்மைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த ஆய்வு முடிவுகள் சிறு அளவிலாவது ஊக்கமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Infographics:
1. By Aashiq Ahamed

My sincere thanks to:
1. The Times Faith. 
2. Just Giving. 

References:
1. Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013. link
2. UK Muslims Top Charity Givers - On Islam, 21st July 2013. link
3. Muslims 'Give Most To Charity', Ahead Of Christians, Jews And Atheists, Poll Finds - The Huffington Post, 21st July 2013. link
4. Justgiving - Wikipedia. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Wednesday, April 10, 2013

FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பெfமன் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.

முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?

சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த படங்கள், துனிசிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. விளைவோ, கொலை மிரட்டல் முதற்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கொண்டார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட பெfமன் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரமில்லை (??), அவர்கள் நினைத்ததை செய்யும் உரிமை இல்லை (!!) என்று கூறி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதியை "அரை நிர்வாண ஜிஹாத் நாள் (Topless Jihad Day)" என்று குறிப்பிட்டு, இந்த தேதியில், முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் விதமாக (???!!!), உலகின் பல்வேறு பகுதிகளில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்தது.

இவர்களின் போராட்டமே விரும்பத்தகாத வகையில் தான் இருக்கின்றது என்றாலும் இதனைத் தாண்டிய நடவடிக்கைகளிலும் பெfமன் அமைப்பினர் ஈடுபட்டனர். அதாவது, பிரெஞ்சு தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளிவாசலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையை விளக்கும் "இறைவன் ஒருவனே, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் (லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலல்லாஹ்)" என்ற வாசகத்தை தாங்கிய பேனரை தீயிட்டு கொளுத்தினர்.

பேனரை எரிக்கும் பெfமன் அமைப்பினர்.

நிச்சயம் இவர்களுடைய நடவடிக்கைகள் பெண்ணுரிமையை மீட்டெடுக்கும் செயல்களல்ல, மாறாக ஒரு மார்க்கத்தின் மீதான வெறுப்புணர்வு மட்டுமே. இதனை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தவும் செய்தன. இஸ்லாமொபோபியாவால் பெfமன் அமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டின.

இப்படியான சூழலில் தான் பெfமனுக்கு எதிரான தீவிர பதிலடியை கொடுக்க ஆயத்தமாயினர் முஸ்லிம் பெண்கள். பதிலடி என்றால் சும்மா இல்லை, அது ஒரு அதிரடியான திட்டம். பெfமனை வெலவெலுத்து போகச்செய்யும் திட்டம்.

அப்படி என்ன திட்டம் என்று பார்ப்பதற்கு முன், இந்த திட்டத்திற்கு பின்னால் இருந்த சகோதரியை பார்த்து விடுவோம். இவருடைய பெயர் சோபிfயா அஹ்மத். பிரிட்டனின் பெர்மிங்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இவர். "அரைநிர்வாண ஜிஹாத் நாள்" என்று அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தினால் கண்ணியமான முறையில் போராட நாம் ஒரு நாளை ஏற்படுத்துவோம். அதற்கு பெயர் "பெருமைமிகு முஸ்லிம் பெண்கள் (Muslimah Pride Day) தினம்".

இந்த திட்டத்தின்படி, தாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக்கொள்ளும் பெண்கள், அதற்கேற்றப்படி வாசகங்களை அமைத்து தங்கள் புகைப்படத்துடனோ அல்லது இல்லாமலோ, muslimahpride@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பினால், இந்த நிகழ்வுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகப்பக்க பக்கத்தில் அந்த செய்தியை பதிவேற்றி விடுவார்கள் (அந்த பக்கத்தை <<இங்கே>> காணலாம். போராட்டம் குறித்த தகவல்களை <<இங்கே>> பெறலாம்).

இதுபோல, ட்விட்டரிலும் #MuslimahPride மற்றும் #Femen என்ற ஹாஷ்டேக்குடன் தங்கள் செய்திகளை அனுப்புமாறு முஸ்லிம் பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இப்படியாக அறிவிக்கப்பட்டது தான் தாமதம், இந்த முயற்சிக்கு அளப்பரிய ஆதரவை அள்ளி வழங்கிவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். "பெfமனுக்கு எதிரான முஸ்லிம் பெண்களின் போராட்டம்" என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடங்கி நம்மூர் ஜீ நியூஸ் வரை இந்த செய்தியை பெரிய அளவில் பேசின.

இந்த போராட்டத்திற்கு வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு..

எங்களின் குரலை பெfமன் திருடிக் கொண்டது. 


சுதந்திரத்தின் உண்மையான பொருளை இஸ்லாமை தழுவியதிலிருந்து உணர்ந்துக் கொண்டேன். 


நிர்வாணம் என்னை விடுவிக்காது. மேலும், நான் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் இல்லை.


எனது அறிவாற்றலைக் கொண்டு என்னை எடைப்போடுங்கள் 


என் உரிமையை நிலைநாட்ட நீங்கள் தேவையில்லை


இவர் என்னுடைய சகோதரி. ஹிஜாப் அணிவது அவருக்கான சுதந்திரம்.


எனக்கு சுதந்திரமளித்தது இஸ்லாம். 


என் உடலை மறைக்க எனக்குள்ள சுதந்திரத்தை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் என்னை அடிமைப்படுத்துகின்றீர்கள் என்றே பொருள்.


நான் அடிமைப்படுத்தப்படுவதாக உங்களுக்கு தெரிந்தால் அதற்காக வருந்துகின்றேன். அதே நேரம், என்னை மன்னித்து விடுங்கள், ஏனென்றால், அப்படியாக அடிமைப்பட்டு இருப்பதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.  


நிர்வாணம் சுந்தந்திரமில்லை. உங்களின் ஒழுக்கத் தத்துவம் எங்களுக்கு தேவையுமில்லை.


சுதந்திரம் என்பது உடல் சார்ந்ததல்ல, அது உள்ளம் சார்ந்தது. நாங்கள் முஸ்லிம்கள், இஸ்லாமை விரும்புபவர்கள்.


நீங்கள் என்னை விடுவிக்க தேவையில்லை. நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.

சுதந்திரமானவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க முடியாது. 

இதுமட்டுமல்லாமல், பெfமன் அமைப்புக்கு முஸ்லிம் பெண்கள் எழுதிய வெளிப்படையான கடிதம் அவர்கள் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. பெண்களின் விடுதலை என்ற போர்வையில் காலனி ஆதிக்க இனவெறியை மட்டுமே பெfமன் வெளிப்படுத்துவதாக சாடியுள்ள அந்த கடிதம், நாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக் கொள்வதாகவும் கூறியது (அந்த கடிதத்தை முழுமையாக <<இங்கே>> படிக்கலாம்). 'இஸ்லாமில் பெண்களின் நிலை' குறித்த வெளிப்படையான உரையாடலுக்கும் பெfமன் அமைப்பினரை அழைத்துள்ளனர் முஸ்லிம் பெண்கள்.  

ஆனால் இந்த நிகழ்வுகளில் எனக்கு புரியாத விசயங்கள் இரண்டு. நிர்வாண போராட்டங்கள் எப்படி ஒருவருடைய இலக்கை அடைய வழிவகுக்கும்? முகம் சுளிக்க வைத்து இலக்கிலிருந்து தூரப்படுத்த மட்டுமே உதவும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், முஸ்லிம் பெண்களை விடுவிக்க செய்யும் போராட்டம் என்று கூறிவிட்டு, தங்களை எதிர்க்கும் பெண்களை குர்ஆனினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று தூற்றுவது எப்படி பெண்களை மதிப்பதாய் அல்லது அவர்களுக்கான உரிமையை வழங்குவதாய் மையும்?

முஸ்லிம் பெண்களின் அதிரடியான செயல்திட்டத்தால் பெfமன் அமைப்பின் கண்ணியமற்ற போராட்டங்கள் வீழ்த்தப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சகோதரிகளே, உங்களின் விவேகமான அணுகுமுறையால் நாங்கள் பெருமைக் கொள்கின்றோம். KEEP GOING....

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Please Note:
இந்த நிகழ்வு இன்னும் முடிவடையவில்லை. தங்கள் செய்திகளை அனுப்ப விரும்பும் சகோதரிகள், மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

My sincere thanks to:
1. Sister Asma (for french and Italy translations)

References:
1. Topless Jihad vs. Muslimah Pride - Loonwatch, 6th April 2013. link
2. Muslim women send message to Femen - Aljazeera stream, 5th April 2013. link
3. Muslim Women Against Femen - Facebook page. link
4. Muslim Women Against Femen..Muslimah Pride Day - Event page. link
5. Muslim Women Against FEMEN - Facebook group. link 
6. Muslimah Pride against Femen. Neocolonialism, stereotypes and choices - Another kind of communication. 5th April 2013. link
7. Femen - Wikipedia. link
8. Femen's Topless Jihad Day protested by Muslim women group - Zee News, 7th April 2013. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.







Sunday, March 24, 2013

'அநாதை' மரபணுக்கள்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியையும் சமாதானமும் நிலவுவதாக...
"NOT having any family is tough. Often unappreciated and uncomfortably different, orphans have to fight to fit in and battle against the odds to realise their potential. Those who succeed, from Aristotle to Steve Jobs, sometimes change the world. Who would have thought that our DNA plays host to a similar cast of foundlings? When biologists began sequencing genomes, they discovered that up to a third of genes in each species seemed to have no parents or family of any kind" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
குடும்பம் இல்லாமல் இருப்பது கடினமானது. ஊக்கமில்லாமலும், அசௌகர்ய உணர்வோடும், இப்படியான ஆதரவற்றவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கின்றது. வெற்றிகரமாக இதிலிருந்து மீண்டவர்களோ, அரிஸ்டாட்டில் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை, சில நேரங்களில், உலகை மாற்றியமைத்திருக்கின்றார்கள். 
யார் தான் நினைத்திருப்பர், நம்முடைய மரபணுக்களும் இப்படியான அநாதைகளை தன்னிடத்தே கொண்டிருக்குமென்று? மரபணு வரிசைமுறை ஆய்வுகளை மேற்கொண்ட உயிரியல் விஞ்ஞானிகள், ஒவ்வொரு உயிரினத்திலும், 30% வரையிலான மரபணுக்களுக்கு பெற்றோரோ அல்லது குடும்பமோ இல்லாததை கண்டுபிடித்தார்கள் - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. 

'நியூ சயின்டிஸ்ட்' இதழில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கட்டுரையின் முதல் பத்தியை தான் நீங்கள் மேலே படித்தீர்கள். எதைப் பற்றி பேசுகின்றார் கட்டுரையாளர்? 'அநாதை' மரபணுக்களா, அப்படியென்றால் என்ன? - உங்களுக்குள் சுவாரசியத்தை கூட்டியிருக்கும் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றது இந்த பதிவு.

உயிரியல் உலகம் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துவருகின்றது. சில நேரங்களில் ஆச்சர்யம் என்ற வார்த்தைக்கு பதிலாக அதிர்ச்சி என்ற வார்த்தையை போட்டும் நிரப்பிக் கொள்ளலாம். ஆம், அத்தகைய அதிர்ச்சிகளில் ஒன்று தான் 'அநாதை' மரபணுக்கள்.

'அநாதை' மரபணுக்களா, அப்படின்னா???

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வுலகில் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும், பின்னர் அந்த உயிரினத்தில் இருந்து சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, காலப்போக்கில், இன்று (வரை) காணப்படும் உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாமக் கோட்பாடு. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களையும் சேர்த்து, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே பொதுவான மூதாதையர் தான். இதனை வரைப்படம் வாயிலாக விளக்குவதற்கு பெயர் பரிணாம மரம் என்பார்கள்.

அறிவியலின் ஒரு பிரிவினர் பரிணாம மரத்தை ஏற்றுக்கொண்டாலும் மற்றொரு பிரிவினர் இதுக்குறித்த மாற்றுக்கருத்தை கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, பாக்டீரிய ஆராய்ச்சியில் பெரும் புரட்சி ஏற்படுத்திய கிரேக் வென்டர், பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்).

ஓகே...பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம்?  மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள். அதாவது ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணுக்களின் மூதாதையரை, காலங்கள் பின்னோக்கி செல்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு.

இப்படியான நம்பிக்கைக்கு தான் அண்மை கால ஆய்வுகள் மிகப்பெரிய இடியை இறக்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஈஸ்ட் எனப்படும் உயிரினத்தில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள் பல ஆச்சர்யமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. இவற்றின் சுமார் 30% மரபணுக்கள் தனித்துவமாக இருந்தன. அதாவது, இந்த மரபணுக்கள் போல வேறு எந்த உயிரினத்திலும் மரபணுக்கள் இல்லை. பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்திருந்தால், இந்த 30% மரபணுக்களுடன் தொடர்புடைய மரபணுக்கள், ஈஸ்ட்டுடன் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களிலாவது தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலவரங்கள் அப்படி இருக்கவில்லை. இப்படியான மரபணுக்கள் இந்த உயிரின பிரிவிற்கு மட்டுமே உரித்தானவையாக இருந்தன.

ஒரே வரியில் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மரபணுக்களுக்கு பெற்றோரோ, மூதாதையரோ அல்லது பரிணாம வரலாறோ இல்லை.    இவை 'அநாதை' மரபணுக்கள் என்று அழைக்கப்படுவதின் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 


'அநாதை' மரபணுக்கள் (உருவகப்படம்) Image courtesy: New Scientist Magazine

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். சரி, தனித்துவமான மரபணுக்கள் உள்ளன, ஆனால் இந்த உயிரினம் விதிவிலக்காக இருக்கலாம் அல்லவா? இந்த உயிரினத்தில் மட்டும் எப்படியோ(??) இத்தகைய மரபணுக்கள் வந்திருக்கலாம் இல்லையா? - நல்ல கேள்விகள் தான். ஆனால் இங்கு தான் ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகளாக உருமாறிக் கொண்டிருந்தன.

இந்த உயிரினத்திற்கென்று இல்லை, அதன் பிறகு பல்வேறு உயிரினங்களில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள், இப்படியான 'அநாதை' மரபணுக்கள் ஒவ்வொரு உயிரின பிரிவிலும் இருப்பதை உறுதி செய்தன. புழுக்களில் இருந்து எலி வரை, கொசுவிலிருந்து மனிதன் வரை - இந்த வரிசை நீண்டுக்கொண்டே போகின்றது.

"every group of animals also possesses a small proportion of genes which are, in contrary, extremely variable among closely related species or even unique. For example, a gene may be present in one species or animal group, but not in any other. Such genes are referred to as "novel," "orphan" or "taxonomically restricted" 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.
ஒவ்வொரு விலங்கின பிரிவிலும், வழக்கத்திற்கு மாறாக, சிறிய அளவிலான மரபணுக்கள் முற்றிலும் வேறுபட்டவையாக அல்லது தனித்துவமாக காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணு வேறெந்த உயிரினத்திலும் காணப்படவில்லை. இப்படியான மரபணுக்கள் 'அநாதை', 'விசித்திரமான' அல்லது 'வகுப்பு தொகுப்புமுறை கட்டுப்படுத்திய' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன - (Extract from the original quote of) 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.

இப்படியான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டப்போது, எதிர்காலம் இதற்கு பதில் சொல்லுமேன்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் பரிணாமவியலாளர்கள். ஆதிகால மரபணுக்களின் கடைசியாக பிழைத்திருக்கக்கூடிய மரபணுக்களே இவை என்றும், இவற்றில் ஒரு சிறப்பும் இல்லை எதிர்கால ஆய்வுகள் இவற்றின் மூதாதையர் குறித்த விளக்கத்தை தரும் என்றும் சிலர் எண்ணினார்கள். ஆனால் நடந்ததோ நேர்மாறாக இருந்தது. மேற்கொண்டு இவற்றில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கினவே தவிர, பரிணாமவியலாளர்கள் எதிர்பார்த்த விடையை தரவில்லை.

'அநாதை' மரபணுக்களால் என்ன பயன்?

இந்த மரபணுக்களின் பயன்பாடுகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அதே நேரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள், இவை மிக முக்கிய பணிகளை செய்வதாக கூறுகின்றன. எப்படி? விஷம் நிறைந்த பெட்டகங்களை தங்கள் இரையை நோக்கி செலுத்தி அவற்றை உணர்விழக்கச் செய்கின்றன ஜெல்லி மீன்கள் . இந்த பெட்டகங்களை கட்டமைக்கும் அதிநவீன செல்களின் உருவாக்கத்தில் 'அநாதை' மரபணுக்களே வழிகாட்டுகின்றன.

ஜெல்லி மீன். Image Coutesy: underwater.com.au

மற்றொரு உதாரணத்தையும் கூறலாம். ஆர்ட்டிக் பிரதேசங்களில் வாழும் ஒருவகை மீன்கள் (Polar Cod), அங்கு நிலவும் கடும் குளிரில் பிழைத்திருக்க அவற்றில் இருக்கும் 'அநாதை' மரபணுவே உதவி செய்கின்றது. மனித மூளையின் செயல்பாடுகளிலும் இந்த மரபணுக்கள் பங்காற்றலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆக, இவை தனித்துவமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான செயல்பாடுகளையும் உயிரினங்களில் செய்கின்றன.

எப்படி தோன்றின 'அநாதை' மரபணுக்கள்?

இதுவொரு மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை படித்த நீங்களும் வியந்திருப்பீர்கள். இந்த மரபணுக்களுக்கு பரிணாம வரலாறும்(?) இல்லை. பின்பு எப்படி உருவாகின? உருவானதோடு நில்லாமல் முக்கிய செயல்களையும் செய்கின்றனவே, அது எப்படி?

'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பதற்கு 'சைன்ஸ் டெய்லி' தளத்தின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் அது "obscure" என்பதாகும். புரியவில்லை/விளக்கமில்லை என்பது தான் இதன் அர்த்தம்.

மற்றொருமுறை பரிணாமக் கோட்பாட்டின் கணிப்பு தவறாகியிருக்கின்றது. அதனால் என்ன? கோட்பாடு எதிர்பார்க்கும்படி ஆதாரம் இல்லையென்றால், ஆதாரத்திற்கு ஏற்றப்படி கோட்பாட்டை உருவாக்கி/மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது தான்.

"where do they come from? With no obvious ancestry, it was as if these genes had appeared from nowhere, but that couldn’t be true" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
இவை எங்கிருந்து வருகின்றன? தெளிவான மூதாதையர் இல்லாமல், இவை திடீரென தோன்றியிருப்பது போல தெரியலாம். ஆனால் இது உண்மையாக இருக்க முடியாது - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.

ஆம், உண்மையாக இருக்க முடியாது :-) :-). அடுத்த என்ன, கற்பனைத் திறனை கட்டவிழ்த்துவிட வேண்டியது தான்.

மூதாதையர் இல்லை, பின்பு எப்படித்தான் இந்த மரபணுக்களின் தோற்றத்தை விளக்குவது? 'அநாதை' மரபணுக்கள் இருவழிகளில் தோன்றியிருக்க'லாம்' (Possibility) என்று கருதுகின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.

1. உயிரினங்களின் DNA-க்களில் உள்ள மரபணுக்களை இருவகையாக பிரிக்கின்றனர். ஒன்று, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை தன்னகத்தே கொண்ட மரபணுக்கள் ( 'அனாதை' மரபணுக்களும் இந்த பிரிவில் அடக்கம்). பல்வேறு புரதங்கள் ஒன்று சேர்ந்து உயிரினங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன. இவை Coding DNA என்றழைக்கப்படுகின்றன.

மற்றொரு பிரிவோ, புரதங்களை உருவாக்காத மரபணுக்களாகும். இவை Non-coding DNA அல்லது 'குப்பை' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த குப்பை மரபணுக்கள் என்பவை உயிரினங்களில் பரிணாமம் ஏற்படுத்திய எச்சம்/மிச்சம் என்று நம்புகின்றார்கள் பரிணாமவியலாளர்கள். அதாவது, இவை ஒருகாலத்தில் பயனுள்ளதாக இருந்து இப்போது பயனற்றவையாக மாறிவிட்டன என்பது அவர்களது யூகம் (இதனால் தான் இவற்றிற்கு பெயர் 'குப்பை' மரபணுக்கள்).


ஆனால் 'குப்பை' மரபணுக்கள் என்பவை மிக முக்கியமான செயல்பாடுகளை உயிரின செல்களில் செய்கின்றன என்ற ஆய்வு முடிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு, புரதங்களை உருவாக்கும் மரபணுக்களை இந்த 'குப்பை' மரபணுக்கள்  ஒழுங்குபடுத்துகின்றன என்பது இவற்றின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும். ('குப்பை' மரபணுக்கள் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

அதெல்லாம் சரி, நான் மேலே குறிப்பிட்ட 'குப்பை' மரபணுக்களும், 'அநாதை' மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம்?

'அநாதை' மரபணுக்களுக்கு மூதாதையர் யாரும் இல்லாததால், ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள இவை, அந்த உயிரினத்திலேயே, 'குப்பை' மரபணுக்களில் ஏற்படும் தற்செயலான மாற்றங்களால், ஆரம்பத்திலிருந்து (from the scratch) உருவாகியிருக்க வேண்டும் என்கின்றார்கள் பரிணாமவியலாளர்கள். 

எளிதாக சொல்ல வேண்டுமென்றால், 'குப்பை' மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் புதிதாக உருவாகியிருக்க வேண்டும். இதனை 'de Novo origin from Non-coding DNA" என்கின்றார்கள். De Novo என்றால் "ஆரம்பத்திலிருந்து" என்று அர்த்தம். புதிதாக உருவானதால் தான் இவற்றின் மூதாதையரை வேறு உயிரினங்களில் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இது என்னடா விசித்திரமா இருக்கே என்று பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால் இயற்கையின் வல்லமையை :-) :-) நன்குணர்ந்த பரிணாமவியலாளர்களுக்கும் இது விசித்திரமாகத் தான் தோன்றியது. பின்னே இருக்காதா? எது நடக்க வாய்ப்பே இல்லை என்று முன்பு கூறி வந்தார்களோ அதனை நம்பி தொலைக்க வேண்டிய அல்லது வேறு வழியே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு 'அநாதை' மரபணுக்கள் தள்ளிவிட்டனவே...

சில ஆய்வாளர்களின் பார்வையில், 'குப்பை' மரபணுக்களில் இருந்து புரதங்களை உருவாக்கும் 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் சைபர் மட்டுமே (practically zero). மற்றவர்களின் பார்வையிலோ இப்படியான உருவாக்கத்திற்கு மிக அற்பமான (infinitesimally small) வாய்ப்புகளே உள்ளன.

"If de novo emergence does indeed have a large role in orphan evolution, one has to explain how a new functional protein can emerge out of a previously non-coding sequence. This would seem highly unlikely a priori, particularly when one considers our current knowledge of protein evolution - The evolutionary origin of orphan genes" - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692.
'அநாதை' மரபணுக்கள் புதிதாக (அல்லது துவக்கத்திலிருந்து) உருவாக முடியும் என்றால், பயனுள்ள புரதங்களை 'குப்பை' மரபணுக்கள் எப்படி உருவாக்கியிருக்கும் என்பதை ஒருவர் விளக்க வேண்டி வருகின்றது. கோட்பாடு ரீதியாக, தற்போதுள்ள நம்முடைய புரத பரிணாம அறிவுப்படி, இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே தெரிகின்றன - (Extract from the original quote of) Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. 

ஆக, எதனை நம்புவது கடினமாக இருந்ததோ, அதனை வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. சரி போகட்டும், 'குப்பை மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் உருவாகலாம் என்ற இப்போதைய புரிதலிலாவது தெளிவு இருக்கின்றதா என்றால் 'இல்லை' என்பதையே பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.

இந்த பதிவிற்காக, இந்த தலைப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டியிருந்தது (அந்த ஆய்வுக் கட்டுரைகளை கீழே மேற்கோள் காட்டியுள்ளேன். பதிவிற்கு எதிர்வினையாற்ற விரும்புபவர்கள் அனைத்து மேற்கோள்களையும் முழுமையாக பார்த்துவிட்டு செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்). அவற்றில் எதுவுமே 'அநாதை' மரபணுக்கள் இப்படித்தான் உருவாகின என்று அறுதியிட்டு கூறவில்லை. மாறாக எல்லாமே அனுமானம் தான். இப்படி நடந்திருக்கலாம் (may be), வாய்ப்பிருக்கலாம் (possible) என்று எல்லாமே 'லாம்' தான்.

அதுமட்டுமல்லாமல், இப்படியாக 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கு மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்பதால் இந்த யூகத்தை டெஸ்ட் செய்வதும் கடினமாகின்றது.

ஸ்ப்பா...... வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டதற்கு இன்று வாய்ப்பிருக்கின்றது, இன்று வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுவதற்கு நாளை வாய்ப்பில்லாமல் போகலாம்...என்னவோ போங்க :-) :-)

2. மேலே சொன்னதே கண்ண கட்டுது, இதுல அடுத்தது வேறயா? அதிக நேரம் எடுக்காது, இதையும் கேட்டுவிடுங்கள். 'அநாதை' மரபணுக்கள் என்பவை ஒரிஜினல் மரபணுக்களில் இருந்து நகல் எடுக்கப்பட்டு, பின்னர் நகல் எடுக்கப்பட்ட மரபணுக்களில் வேகமாக பரிணாமம் நடந்ததால் மூதாதையருடன் உள்ள ஒற்றுமைகள் துடைத்தெரியப்பட்டுவிட்டன என்கின்றது இரண்டாவது யூகம். இதனை 'Duplication followed by quick divergence' என்கின்றார்கள்.

இப்படியான விளக்கம் அனைத்து 'அனாதை' மரபணுக்களுக்கும் ஒத்துவராது என்று பரிணாமவியலாளர்களே கூறுவதால் இங்கு அதிகம் அலசப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னூட்டங்கள் வாயிலாக அல்லது தனி பதிவாக பார்ப்போம் (இறைவன் நாடினால்).

முடிவாக..

தன்னுடைய 'அநாதை' மரபணுக்கள் குறித்த கட்டுரையில், நான் மேலே கூறியுள்ள இரண்டு வழிமுறைகளையும் மிக சுருக்கமாக ஒரே வரியில் குறிப்பிட்டுள்ள விக்கிப்பீடியா, அந்த கட்டுரையின் கடைசி பத்தியை இப்படி தொடங்கி நிறைவுச் செய்கின்றது.

"It is still unclear how orphan genes arise" - Wikipedia.
'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பது இன்னும் தெளிவாகவில்லை - (extract from the original quote of) Wikipedia.

Yeah, it is still unclear :-) :-) இந்த பதிவின் முதல் படத்தில் இருக்கும் 'அநாதை' மரபணுக்கள் சிரிப்பது தெரிகின்றதா???

மூடநம்பிக்கைகளில் இருந்து காத்து, இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to:
1. Nature education
2. DNA learning Center.
3. New Scientist Magazine.
4. Science Daily.
5. Dr.Paul Nelson.
6. Tamil cube dictionary website.

References:
1. All alone -  Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. link
2. A happy ending for orphan genes -  Helen Pilcher, Science Monkey, 17th Jan 2013. link
3. Orphan Gene - Wikipedia. link
4. 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008. link
5. Biological Common Descent is a Doctrine in Crisis - Dr. Paul Nelson. link
6. Ribosomes, Transcription, and Translation - Nature Educaton. link
7. Transcription and Translation Tool - Attotron.com. link
8. Phylogenetic patterns of emergence of new genes support a model of frequent de novo evolution - Rafik 9. Neme and Diethard Tautz, BMC Genomics 2013, 14:117 doi:10.1186/1471-2164-14-117, 21st Feb 2013. link
10. The evolutionary origin of orphan genes - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. link
11. The Evolutionary Origin of Orphan Genes - Dr.Cornelius Hunter, Darwin's God, 30th Dec 2012. link
12. De-novo Evolution of Genes - Max Planck Institute for Evolutionary Biology. link
13. Must a Gene Have a Function? - LAURENCE A. MORAN, Sandwalk, 8th feb 2012. link
14. Orphan Genes and the Myth of De Novo Gene Synthesis - Designed DNA, 6th March 2012. link
15. Gene Birth, de novo - Biobabel. 4th July 2012. link
16. How Can There Be Orphan Genes? -  Molecular Evolution Forum, 29th May 2009. link
17. Mechanisms and Dynamics of Orphan Gene Emergence in Insect Genomes - Genome Biology and Evolution, Oxford journals, Volume 5, Issue 2, Page No. 439-455. doi: 10.1093/gbe/evt009, 24th Jan 2013. link
18. Orphans as taxonomically restricted and ecologically important genes - Microbiology, 10.1099/mic.0.28146-0, August 2005, vol. 151 no. 8 2499-2501. link
19. De Novo Genes: The Evolutionary Explanation -  Dr.Cornelius Hunter, Darwin's God, 23rd Nov, 2009. link
20. De Novo Origin of Human Protein-Coding Genes - PLoS Genet 7(11): e1002379, doi:10.1371/journal.pgen.1002379, 20th Nov 2011. link 
21. Recent de novo origin of human protein-coding genes - Genome Res.  2009 October; 19(10): 1752–1759, doi:  10.1101/gr.095026.109. link
22. Gene - Wikipedia. link
23. Darwinian alchemy: Human genes from noncoding DNA - Adam Siepel, Genome Res. 2009. 19: 1693-1695, doi:10.1101/gr.098376.109. link
24. Unique “Orphan Genes” Are Widespread; Have No Evolutionary Explanation - Creation Evolution Headlines, 19th Nov 2008. link
25. New Genes, New Brain - The Scientist, 19th Oct 2009. link
26. Orphan Genes - Youtube. link
27. Assessing the NCSE's Citation Bluffs on the Evolution of New Genetic Information - Evolution News, 25th Feb 2010. link
28. Fighting about ENCODE and junk -  Brendan Maher, NATURE NEWS BLOG, 6th Sep 2012. link
29. Gene duplication - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Tuesday, December 18, 2012

பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 

ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 



வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை எதிர்க்கொண்டு அபாரமான வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்லாம். இந்த கணக்கெடுப்பு மூலமாக, பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல ஊடங்களும் இஸ்லாமின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே செய்திகளை வெளியிடுகின்றன. 

மேலே கூறியதை ஆழமாக புரிந்துக்கொள்ள சென்சஸ் தகவல்களுக்கு இப்போது செல்வோம். 

பிரிட்டனின் மொத்த மக்கட்தொகை 2001-2011 காலக்கட்டத்தில் 7% அதிகரித்து 5.6 கோடியாக உள்ளது. 

பிரிட்டனை பொருத்தமட்டில், அதிக மக்களால் பின்பற்றப்படும் மதம் என்றால் அது கிருத்துவம் தான். ஆனால் கிருத்துவத்துவர்களின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டு சென்சசை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. 2001-ல் 3.7 கோடியாக இருந்த கிருத்துவ மக்களின் எண்ணிக்கை தற்போது நாற்பது லட்சம் குறைந்து 3.3 கோடியாக உள்ளது.  சதவித கணக்கில் சொல்லப்போனால் 71%-மாக இருந்த கிருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது 59%-மாக குறைந்துள்ளது. 

இது ஆய்வாளர்களுக்கு பலத்த ஆச்சர்யத்தை தந்துள்ளது. 

அதே நேரம், நாத்திகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2001-ல் 14%-மாக இருந்த நாத்திகர்களின் எண்ணிக்கை இப்போது 25%-மாக உயர்ந்துள்ளது. ஆக, பிரிட்டன் மக்கட்தொகையில் நான்கில் ஒருவர் நாத்திகர். 

கிருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம், இப்போதெல்லாம் கலாச்சாரம் சார்ந்து தங்களை கிருத்துவர்கள் என்று அடையாளப்படுத்துவோர் குறைந்துள்ளதாக இங்கிலாந்து சர்ச் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

கிறித்துவத்தின் வீழ்ச்சிக்கும், நாத்திகத்தின் வளர்ச்சிக்கும் ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு பெரும் பங்கிருப்பதாக கருதப்படுகின்றது. 

இங்கு தான், ஆய்வாளர்களை வியப்பூட்டும் அந்த செய்தி வருகின்றது. ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்று பிரபல "டெய்லி மெயில்" ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏன் என்பதற்கு சென்சஸ் தகவல்களை பார்த்தால் விடை சொல்லிவிடலாம். 

பிரிட்டன் முஸ்லிம்களின் மக்கட்தொகை கடந்த பத்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2001-ல் 15 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 12 லட்சம் அதிகரித்து தற்போது 27 லட்சமாக உயர்ந்துள்ளது. சதவித கணக்கில் சொல்ல வேண்டுமானால் 2001-ல் 3%-மாக இருந்த முஸ்லிம்கள் இப்போது சுமார் 5% இருக்கின்றனர். இஸ்லாமின் இந்த வளர்ச்சி மற்ற எந்த மார்க்கத்தை விடவும் மிக அதிகமாகும். இதனாலேயே 'பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம்' என ஊடகங்கள் தலையங்கம் வெளியிடுகின்றன. 



இந்த செய்தி குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் பன்முகத்தன்மையில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 

முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பு மேலும் பல முக்கிய விசயங்களுக்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஈத் விடுமுறைகள் குறித்தும், ரமலான் மாதம் அணுகப்படும்விதம் குறித்தும், பள்ளிகளில் இஸ்லாம் போதிக்கப்படும்விதம் குறித்தும் சிந்திக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் இஸ்லாம்-கிருத்துவ மன்றத்தின் தலைவரான ஜூலியன் பான்ட். 

இப்படியான அபார வளர்ச்சிக்கு தெளிவான காரணங்கள் அலசப்படவில்லை. குடியேற்றம் (Immigration) ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது (பார்க்க <<இங்கே>> மற்றும் <<இங்கே>>). 

இப்போது இந்த பதிவின் தலைப்புக்கு வருவோம். 

சில மாதங்களுக்கு முன்பு தான், கடந்த பத்து ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரித்து, அமெரிக்காவில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்ற ஆய்வு முடிவுகள் வெளிவந்தன (பார்க்க <<இங்கே>>). 

இப்போது பிரிட்டனிலும் அதே நிலைமை உருவாகியிருப்பது குறித்து டெய்லி மெயில் ஊடகம் கருத்து தெரிவிக்கும் போது, 'பிரிட்டன் வாழ்க்கையில் இருந்து கிருத்துவத்தை வெளியேற்ற உற்சாகமாக செயல்படும் நாத்திகர்கள், தங்களின் இச்செயல் இஸ்லாமிற்கான காலியிடத்தை மட்டுமே உருவாக்கியுள்ளதை உணர்ந்துக்கொள்வார்கள். இஸ்லாம் என்னும் நம்பிக்கையை ரிச்சர்ட் டாகின்ஸ்சால் ஒன்றுமே செய்ய முடியவில்லை' என்று தெரிவித்துள்ளது. 

You struck the nail on head regarding dawkins dear DAILY MAIL. :-) :-)

நீங்க முஸ்லிமல்லாதவரா? குர்ஆனில் அப்படி என்ன தான் இருக்கின்றதென்று பார்க்க விருப்பமா? aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பை மின்னூல் வடிவில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Download census report at:
1. Office of National Statistics. link

Picture taken from:
1st Picture - Page 1 of census report 
2nd Picture - Page 7 of Census report 

References:
1. British Census: Islam Fastest-Growing Faith in England; Christians Drop to 59% of Population - CNS News, 12th Dec 2012. link
2. Christians could be minority by 2018, census analysis reveals - The guardian. 11th Dec 2012. link
3. Alien nation: The new census reveals a Britain that would be unrecognisable even to our grandparents - Daily Mail, 15th Dec 2012. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Saturday, October 6, 2012

கூரி முஸ்லிம்கள்...



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

ஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்). 

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது சிறந்ததாய் அமையும்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.

டாக்டர் ஸ்டீவன்சன், ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரிடையே இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவா?

2006-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும், அதற்கு முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளையும் நாம் பார்த்தோமேயானால் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறியலாம். 1996 மற்றும் 2001 ஆகிய கணக்கெடுப்புகளில் 600-க்கும் சற்றே அதிகமான பழங்குடியின முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

அதேநேரம், 2006-ஆம் ஆண்டு, இந்த தொகை சுமார் 60% அதிகரித்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கட்தொகையை கணக்கிடும்போது இது பெரிய அளவு இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.

இந்த இஸ்லாமிய தழுவல்களுக்கு பின்னணி காரணங்களாக நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டரிந்தவை?

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இவர்கள் கூறும் பல காரணங்கள் சர்வதேசரீதியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் கூறும் காரணங்களை ஒத்தே இருக்கின்றன.

தங்கள் அனுபவங்கள் குறித்து கூறும்போது, உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்ற உணர்வு மகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தங்களை மிகச் சிறந்த முறையில் உபசரிப்பதாகவும் கூறுகின்றனர்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்டதின் மூலம், பல வழிகளில், காலனி ஆதிக்கத்திற்கு முன்பான தங்களின் பழங்குடியின அடையாளத்திற்கும், பாரம்பரியத்திற்கும் திரும்புவதாக இவர்கள் எண்ணுகின்றனர். தங்களின் பழங்குடியின சமூகத்திற்கும்,  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, இஸ்லாம் அனுமதிக்கும் சிலதாரமணம், பெற்றோர்களால்   முன்னேடுத்து செல்லப்படும் திருமணங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பொறுப்புகள் போன்றவற்றை கூறலாம்.

முஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.

மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கிருத்துவ மிஷனரிகளை எதிர்க்கொண்டு இஸ்லாமை தழுவுகின்றனர். இஸ்லாம் என்பது இவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல, இவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்டது.

இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்துவராத தன்மை என்று எதையேனும் நீங்கள் காண்கின்றீர்களா?

அப்படியான எதையும் நான் காணவில்லை. சிலர், தாங்கள் முஸ்லிமானதின் மூலம் தங்களின் பழங்குடியின அடையாளம் கலைந்துவிட்டதாக எண்ணுகின்றனர். இன்னும் சிலரோ, நான் மேலே கூறியது போல, இஸ்லாம் தங்களின் பழங்குடியின அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக நம்புகின்றனர். ஏனென்றால் நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை ஏற்றுக்கொள்கின்றது.

இவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்றால், இவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் மக்களும் இவர்களின் இஸ்லாமிய தழுவலை புரிந்துக்கொள்ளாதது தான். இவர்களின் மனமாற்றத்தை வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

மால்கம் எக்ஸ் குறித்து என்ன சொல்ல போகின்றீர்கள்? அவருடைய பாதிப்பு இங்கே தெரிகின்றதா?

நான் பேசியவர்களில் பலரும், குறிப்பாக சிறைவாசம் அனுபவித்தவர்கள், மால்கம் எக்ஸ் என்ற மனிதர் மீதே முதலில் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அவரின் சுயசரிதையை படித்திருக்கும் இவர்களில் சிலர், தாங்கள் கோபக்காரர்களாகவும், தங்களின் கடுமையான அணுகமுறை மூலம் சட்டரீதியான பிரச்சனைகளை உருவாக்கியதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சொந்த நாட்டிலேயே அன்னியர்களாக தாங்கள் நடத்தப்படுவதாக உணர்ந்த இவர்கள், வெள்ளையர்களுக்கு எதிரானவராக நினைத்து மால்கம் எக்ஸ்சை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். (மால்கம் எக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்)

ஆனால், (மால்கம் எக்ஸ் மூலமாக) இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள ஆரம்பித்தவுடன் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். தங்களை ஏற்றுக்கொண்ட, வெள்ளையர்களில் இருந்தும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று புரிந்துக்கொண்ட, தங்கள் இனத்திற்காக தங்களை தீர்மானிக்காத ஒரு நம்பிக்கையை இஸ்லாமில் அவர்கள் கண்டனர். இஸ்லாமை பொருத்தவரை உலக மக்கள் அனைவரும் சமமே.

ஆகையால், எப்போது அவர்கள் தங்களை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போதே அவர்களிடம் இருந்த தவறான பண்புகள் விலகிவிட்டன.

இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும், தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமை தழுவியதின் மூலம் சிலருக்கு அவர்களது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று கூறுகின்றீர்களா?

ஆம், எல்லாருக்குமே, பல வழிகளில்.

பழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர்.

இஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் உண்டு.

குடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை பொருத்தவரை, மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.

பெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன.

--- End of Interview ---

ம்ம்ம்....அனைத்து தரப்பு மக்களையும் இஸ்லாம் எளிதாகவே கவர்ந்துவிடுகின்றது. பிரபல ஆஸ்திரேலிய குத்துச்சண்டை நட்சத்திரமான ஆண்டனி முண்டேன் ஒரு பழங்குடியின முஸ்லிமே. இவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் இருந்து அதன் பாதிப்பு சமூகத்தில் உணரப்பட்டே வருகின்றது. தற்போது இவர்களிடையே 'கூரி முஸ்லிம் அசோசியேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பழங்குடியின முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் எதிர்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கே இப்படி என்றால், அமெரிக்காவிலோ, கடந்த பத்து ஆண்டுகளில், முஸ்லிம் மக்கள்தொகை சுமார் 16 லட்சம் அதிகரித்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான மக்கட்தொகை ஆய்வு இதனை கூறுகின்றது. இதன் மூலமாக அமெரிக்காவின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வடக்கு மற்றும் தெற்கின் பல பகுதிகளில், வரலாற்றில் முதன் முறையாக யூதர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர்.

"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன" என்று இந்த ஆய்வுக்குறித்து கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிடுகின்றார் கென்டகி பல்கலைகழகத்தின் துணை பேராசிரியரான டாக்டர் பக்பி. (இந்த ஆய்வுக்குறித்த விரிவான கட்டுரையை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் காண்போம்).

அதிரடியா சொன்னீங்க சார் :-)

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
டாக்டர் ஸ்டீவன்சன் அவர்களின் நேர்காணல் பதிவின் நீளம் கருதி முழுமையாக மொழிப்பெயர்க்கப்படவில்லை. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.

References:
1. Q&A: Indigenous and Muslim 'a growing trend' - ABS. 20th July 2012. link
2. A new faith for Kooris - The Sydney morning herald. 4th May 2007. link
3. Koori - wikipedia. link
4. Number of Muslims in the U.S. doubles since 9/11 - New York Daily News, 3rd May 2012. link
5. Anthony Mundine - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ