Friday, July 2, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - III



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
  

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில் நாம் "பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life)" குறித்து பார்க்கவிருக்கின்றோம்.   

பதிவிற்கு செல்லும் முன் பரிணாமவியல் குறித்த சில வார்த்தைகளை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகிறேன்.  

1. இயல்பு/இயற்கை தேர்வு (Natural Selection (NS))
2. தற்செயலான மாற்றங்கள் (Random Mutations (RM))

பரிணாமம் நடக்க நாம் மேலே பார்த்த இரண்டு உக்திகளும் அதி முக்கியமானது. அதாவது, இயற்கைக்கு ஏற்றவாறு, (பரம்பரை பரம்பரையாக) உயிரினங்களின் உடல்களில் (சிறுக சிறுக) தற்செயலாக ஏற்படும் (மரபணு) மாற்றங்களே புதிய உயிரினங்கள் உருவாக காரணம் (Origin of Species by means of natural selection and random mutations).

உதாரணத்துக்கு, ஒரு வகையான நிலவாழ் உயிரினம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவைகளுக்கு பறக்கும் தேவை ஏற்படுகிறது. (அவைகளில் பகுதியோ அல்லது முழு இனமோ) பறக்க முயற்சிக்கிறது. இப்படியாக பரம்பரை பரம்பரையாக முயற்சிக்கையில், சிறகுகள் (மற்றும் இதர மாற்றங்கள்) சிறிது சிறிதாக ஒவ்வொரு தலைமுறையாக வளர்ந்து, 100 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 1000 பரம்பரைகளுக்கு பிறகோ, அல்லது 10000 பரம்பரைகளுக்கு பிறகோ etc etc, அந்த உயிரினம் பறக்கும் சக்தியை பெற்று பறவையாகி விடும். 

3. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.    
Fossils are the remains or evidence of animals and plants which have been preserved naturally - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.   


4. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

5. செல் (Cell) -  உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. ஒரே ஒரு செல் கொண்ட உயிரினங்கள் மற்றும் பலசெல் கொண்ட உயிரினங்கள் என்று அவை பிரிக்கப்பட்டுள்ளன. பலசெல் உயிரினங்களான நம் உடம்பில் மட்டும் சுமார் 60-90 ட்ரில்லியன் செல்கள் (1 trillion = 100,000 crores or 1000 Billion) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
Cells are the building blocks of life - "Ask a Biologist" Website

பதிவிற்கு செல்வோம்... 

பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution): 

துரதிஷ்டவசமாக, பரிணாமவியலாளர்களிடையே இது குறித்து ஒருமித்த மற்றும் தெளிவான கருத்து இல்லாதபடியால் என்னால் இங்கு விளக்க முடியாத சூழ்நிலை. 

அதனால் நேரடியாக பரிணாமவியல் என்ன சொல்ல வருகிறது என்று கருத்துக்கு சென்று விடுவோம். 

பரிணாமவியலாளர்களின் எண்ணப்படி உலகம் தோன்றி பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு (உலகம் தோன்றி 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதாக கணக்கிடப்பட்டுள்ளது)  ஒரு வாழும் செல் (Living Cell) உருவாகி இருக்க வேண்டும் (Abiogenesis).

பிறகு அவற்றிலிருந்து பலசெல் உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும். பிறகு இவை முதுகெலும்பு இல்லாத உயிரினங்களாக, அவற்றிலிருந்து முதுகெலும்பு உள்ள உயிரினங்களாக என்று படிப்படியாக சிறுக சிறுக மாறி இப்போது நாம் பார்க்கக்கூடிய பல்வேறு உயிரினங்களாக வந்திருக்க வேண்டும்.


"No one knows how this happened. But Scientists think that energy from sunlight and lighting strikes triggered the formation of chemicals that could copy themselves. This may have taken place in the chemical "soup" that existed in the oceans, in shallow polls, or around volcanoes. The next crucial step was when the self-copying chemicals became trapped in "bubbles" of oil, which hold them together. These tiny blobs of chemicals were the beginnings of the first living cell. ....Over hundreds of millons of years, some simple animals without backbones, which looked like jelly fish or worms, developed into animals with backbones, including the first fish" - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.      


உதாரணத்துக்கு, பூமியின் வரலாற்றை 12 மணி நேர கணக்காக (0-12 ) எடுத்துக்கொண்டால், உலகின் முதல் எளிமையான பாக்டீரியாக்கள் 3 மணிக்கும், ஜெல்லி மீன்கள் போன்றவை 10 மணிக்கும், முதல் டைனாசர்கள் 11.45 க்கும், மனிதன் 11.59 மணிக்கும் தோன்றியதாக விளக்கம் கொள்ளலாம். (The Oxford Science Library, 2002 edition, Vol-2, p-5).



    
சுருக்கமாக சொல்லப்போனால், இன்று நாம் பார்க்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு பொதுவான மூதாதையர் தான்.               

இங்கு நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலான பரிணாமவியலாளர்களின் கருத்துப்படி, பரிணாமவியல் என்பது, முதல் வாழும் செல் எப்படி உருவானது என்பது பற்றிய கோட்பாடு அல்ல. வேறு விதமாக சொல்லுவதென்றால், பரிணாமவியல், முதல் செல் எப்படி உருவானது என்றெல்லாம் விளக்காது. 

மாறாக, முதல் செல் உருவானப் பிறகு, அதிலிருந்து உயிரினங்கள் எப்படித் தோன்றின என்று மட்டும் தான் கூறும்.

டெக்னிகலாக கூறுவதென்றால் Ribosomes+DNA (these are major components of a cell) உருவானப் பிறகு, NS+RM (Natural selection and Random Mutation) போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்களைத்தான் அது பேசும். 

"பரிணாமக் கொள்கை உயிரின் மூலத்தை விளக்கும் ஒரு கொள்கையல்ல, உயிரினங்களின் மூலத்தை விளக்க முற்படும் ஒரு கொள்கை" "It does not explain origin of life, it (tries to) explain(s) origin of species" - சகோதரர் இரஞ்சித், கையேடு வலைப்பூ.   

NS மற்றும் RM போன்றவை, Ribosomes+DNA உருவானப் பிறகுதான் செயல் பட ஆரம்பிக்கும் என்ற கூற்றை "NON-SENSE" என்று வர்ணிக்கிறது Uncommon Descent இணையதளம். இது பற்றி மேலும் படிக்க இங்கே...
   
ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும்? (Abiogenesis) என்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இன்றைய தேதிவரை, விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பிறகும் கூட, பரிணாமவியலாளர்களால் ஒரு வாழும் செல்லை உருவாக்க முடியவில்லை. 

ஒரு செல் எப்படி உருவாகி இருக்கும் என்று தெரியாததால் தான் அதை பரிணாமவியலில் ஒரு பகுதியாக சேர்க்கவில்லையோ? 

நாளையே ஒரு செல்லை இவர்கள் உருவாக்கிவிட்டால், அதை பரிணாமவியலின் ஒரு பகுதியாக சேர்த்து, "பரிணாமவியல் பூரணமடைந்து விட்டது" என்று கூறினாலும் கூறுவார்கள்.

இது குறித்து பிரபல அறிவியலாளரான Sir Fred Hoyle அவர்கள் கூறியது,

The random emergence of even the simplest cell is equal to "a tornado sweeping through a junk-yard might assemble a Boeing 747 from the materials therein." - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105. (Emphasis added)
ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது, ஒரு சூறாவளி, வேண்டாத பொருட்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு இடத்தை கடந்து சென்றதால் (அந்த பொருட்களை கொண்டு) Boeing 747 விமானம் உருவாகிவிட்டது என்று கூறுவதற்கு நிகரானது - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.   

அவர் இத்தோடு நிறுத்தவில்லை, ஒரு புரதம் (ஒரு செல் என்பது பல்வேறு புரதங்களால் ஆனது) கூட தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்று சொன்னவர்.
   
எது எப்படியோ, பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் Abiogenesisசை பரிணாமவியலின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளாதபடியால், அதை தற்போதைக்கு தள்ளி வைப்போம். பரிணாமவியலாளர்கள் எதை ஒப்புக்கொள்கிறார்களோ அதையே நாம் விமர்சிக்க முயல்வோம். இன்ஷா அல்லாஹ்...  

பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயமென்றால் அது பரிணாம மரம். 

பரிணாமத்தின் முக்கிய தூணான இதுவும் பரிணாமவியலாளர்களின் கற்பனைத் திறனால் வடிவமைக்கப்பட்ட ஒன்றே.  இதற்கும் எந்தவொரு ஆதாரமும் வரலாற்றில் இல்லை. 

பரிணாம மரம் என்றால் என்ன?

ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.

"ஒரு உயிர் முதலில் தோன்றி அதன் பின்னர் வெவ்வேறு காலத்தில் சூழல் மாற்றங்களுக்கேற்றவாறு வெவ்வேறு வகையான உயிர்த்தொகுப்புகளாக மாறியதைப் பற்றிய ஒரு விளக்கத்தையே இப்பரிணாம மரம் விளக்குகிறது" - சகோதரர் ரஞ்சித், கையேடு வலைப்பூ.  

உதாரணத்துக்கு கீழே உள்ள படங்களை பாருங்கள்.  





ஒரே மூதாதையரில் இருந்து அனைத்து உயிரினங்களும் வந்திருக்க வேண்டும் என்று விளக்கும் பரிணாம மரத்தில் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் இது ஒரு யூகத்தில் அமைந்த ஒன்று என்பது தான். இதற்கு ஆதாரம் என்று ஒன்றுமில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலான காலக்கட்டத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கின்றனர். உதாரணத்துக்கு...



Cambrian  - சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Ordovician - சுமார் 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம்.
Pre-cambrian - உலகம் தோன்றியதிலிருந்து cambrian வரையிலான காலக்கட்டம். உலகம் தோன்றியது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராம். ஆக precambrian காலக்கட்டம் என்பது சுமார் 4 பில்லியன் ஆண்டுகள் கொண்டது.

ஏன் பரிணாம மரம் தவறென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் இதற்கு எதிராகத்தான் உள்ளன. அதாவது, ஒரு மரத்தை தலைகீழாக திருப்பிபோட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் விவகாரங்கள் இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

இன்னும் தெளிவாக கூறப்போனால், மிகப் பழமையான உயிரினப்படிமங்களில் (Fossils) முதன் முதலாக தென்படும் (complex) உயிரினங்கள், முழுமையான உருவங்களில், திடீரென தோன்றியிருக்கின்றன.

உலகின் மிகப் பழமையான உயிரினப்படிமங்கள் என்றால் அவை cambrian காலக்கட்டத்தை சேர்ந்தவை (சுமார் 500-550 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை). அந்த படிமங்களின் படி, அந்த கால கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் அனைத்தும் திடீரென தோன்றியிருக்கின்றன.

"A half-billion years ago, ...the remarkably complex forms of animals we see today suddenly appeared" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
"அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நாம் இன்று பார்க்கக்கூடிய சிக்கலான வடிவமைப்பை கொண்ட விலங்குகள் திடீரென தோன்றியிருக்கின்றன" - Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.    

ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்கள் சொல்வதும் இதையேத்தான் பிரதிபலிக்கின்றது,

"we find many of them already in an advanced state of evolution, the very first time they appear. It is as though they were just planted there, without any evolutionary history" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229. 
"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்படும் போதே பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்தவொரு பரிணாம வரலாறும் இல்லாமல் அவைகள் அங்கே நட்டுவைக்கப்பட்டது போன்று உள்ளன" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.  

டாகின்ஸ் சொல்லுவது போல, இப்படி திடீரென்று தோன்றியிருக்கும் உயிரினங்கள் பரிணாமத்தை கடந்து வந்ததாக வரலாறு இல்லை.

  

இது குறித்து எழுதிய "Science" ஆய்விதழ், பின் வரும் தகவலை கூறுகிறது,

"The beginning of the Cambrian period, some 545 million years ago, saw the sudden appearance in the fossil record of almost all the main types of animals (phyla) that still dominate the biota today." - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 
சுமார் 545 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், Cambrian காலக்கட்டதின் துவக்கத்தில், இன்று நாம் பார்க்கக்கூடிய அனைத்து விதமான முக்கிய விலங்குகளும் உயிரின படிமங்களில் திடீரென தோன்றியிருக்கின்றன - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

அதே இதழ் மற்றொரு முக்கியமான செய்தியையும் சொல்கிறது. அதாவது இந்த காலக்கட்டத்திற்கு முன் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான (Gradual Increase) படிம  ஆதாரங்கள் இல்லை என்பது தான் அது.

"This differential evolution and dispersal, too, must have required a previous history of the group for which there is no fossil record" - Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439. 

பரிணாமம் உண்மையாக இருந்திருந்தால், cambrian காலக்கட்டத்தில் காணப்படும் உயிரினங்கள் சிறுகச் சிறுக வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இதுவரை இல்லை.

இது பற்றி குறிப்பிடும் "Science Daily",

"If Darwin’s theory of natural selection was right, life evolved gradually over millions of years. However, the Cambrian period, which began around 542 million years ago, seemed to herald a sudden rapid increase in species diversity, an event which has come to be known as the ‘Cambrian explosion’"- Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.
"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009.    

பரிணாமவியலாளர்கள் சொல்வது போன்று, ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் சிறுகச் சிறுக பெருகின என்பது போன்ற வாதங்கள் கற்பனை அளவில் மட்டுமே உண்மை. நம்மிடமிருக்கும் ஆதாரங்கள் அவர்களுடைய வாதங்களுக்கு நேர் எதிராகத்தான் இருக்கின்றன.      

ஆக, முதன் முதலாக காணப்படும் விலங்கினங்கள், பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவில்லை. பொதுவான மூதாதையர் என்ற கோட்பாடுக்கும் அவைகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.  







ஆக மொத்தத்தில் பரிணாம மரத்தின் அடிப்படையே தவறு. 

இன்ஷா அல்லாஹ், எதிர்க்காலத்தில், இந்த மரத்தின் கிளைகளையும் விமர்சிப்போம். அதாவது, மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின; அந்த நிலநீர்வாழ் உயிரினங்கள், ஊரும் பிராணிகளாக மாறின; அந்த ஊரும் பிராணிகள், பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின என்று கூறுவார்களே அதைத்தான் குறிப்பிடுகிறேன்.    (மீன்கள் நிலநீர்வாழ் உயிரினங்களாக மாறின, டைனாசரிலிருந்து பறவைகள் வந்தன என்று கூறப்படும் கதைகளெல்லாம் படு சுவாரசியமானவை).

அதெல்லாம் சரி, பரிணாமத்தின் அடிப்படையிலேயே இத்தனை கோளாறுகள் இருப்பது குறித்து பரிணாமவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள்? 

cambrian காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த உயிரினங்கள் மிக மிருதுவான தோல் அமைப்பை பெற்றுள்ள காரணத்தால் உயிரினப்படிவங்களில் பரிணாமம் தென்படாமல் இருந்திருக்கலாம் என்பது அவர்களது முக்கிய வாதம்.

ஆனால் இதுவும் அவர்களது கற்பனையே தவிர உண்மையில்லை. சுமார் மூவாயிரம் பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினப்படிவங்களில் ஒருசெல் பாக்டிரியாக்கள் காணக்கிடைக்கின்றன (Micro Fossils). இன்றைய தேதிவரை, cambrian காலத்திற்கு முற்பட்ட பல microfossils கிடைத்துள்ளன.

ஆக, இவைகள் மிருதுவாக இருப்பதால் பரிணாமம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற இவர்களின் வாதங்கள் அறிவியலுக்கு ஒத்துவராது.

இவர்கள் கூறும் மற்றொரு காரணமான "Molecular Phylogeny" யும், பரிணாமத்தை நிரூபிப்பதற்கு பதிலாக அதற்கு எதிரான தகவல்களையே தருகின்றது.

So, இவ்வளவு ஆதாரங்கள் பரிணாம மரம் என்ற கோட்பாட்டிற்கு எதிராக இருந்தும், இன்னும் ஏன் இதை பரிணாமவியலாளர்கள் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றனர்? 

இது, நாம் பரிணாமவியலாளர்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வி....

"1999 ஆம் ஆண்டு, சீனாவைச் சேர்ந்த, cambrian கால உயிரினப்படிவங்களில் தனித்துவம் பெற்ற தொல்லுயிரியலாளர் (Paleontologist) ஒருவர், அமெரிக்காவின் பல்வேறு பல்கலைகழகங்களில் உரை நிகழ்த்துவதற்காக வந்திருந்தார். அவருடைய ஒரு உரையை கேட்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.
     அந்த உரையில், cambrian கால உயிரினப்படிவங்கள், டார்வினின் கோட்பாட்டிற்கு எப்படி நேர் எதிராக உள்ளன என்று சுட்டி காட்டினார் அவர். 
      உரை முடிந்ததும், அந்த அரங்கத்தில் இருந்த பல்வேறு விஞ்ஞானிகள் அவரிடம் உயிரினப்படிவங்கள் குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் டார்வினின் கோட்பாடு குறித்து அவர் சொன்ன தகவல்கள் தொடர்பாக எந்தவொரு கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து விட்டனர். 
   நிகழ்ச்சி முடிந்ததும் அவர் என்னிடம் இது பற்றி கேட்டார். நான் கூறினேன்,"டார்வினின் கோட்பாடை விமர்சிப்பது அமெரிக்காவில் விரும்பத்தக்கதல்ல" என்று.
   இதை கேட்டவுடன் சிரித்து விட்டார் அவர். பிறகு அவர் கூறினார், " சீனாவில் டார்வினை விமர்சிக்கலாம், ஆனால் அரசாங்கத்தை தான் விமர்சிக்க கூடாது. ஆனால் இங்கே அமெரிக்காவில் அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் டார்வினை விமர்சிக்க கூடாது" - Jonathan Wells, Icons of Evolution, 2000, pp-58. 

என்ன?, பரிணாமம் இல்லையென்றால் உயிரியல் இல்லையென்று சிலர் சொல்லுகிறார்களா?.....................ஏனென்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்....

நிச்சயமாக, பரிணாமவியல் என்ற கதை, ஹாரி பாட்டர் கதைகளையெல்லாம் விட மேம்பட்டது..........  

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


குறிப்பு: 
           தயவுக்கூர்ந்து, நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் எந்தவொரு தகவலையும் அப்படியே ஏற்காமல், நீங்களும் இவை சரிதானா என்று ஆராய்ந்து பாருங்கள். இஸ்லாமும் நமக்கு அதைத்தான் கற்று கொடுக்கிறது.


My Sincere Thanks to:
1. Br.Ranjith.
2. Talk Origins Website.
3. Dr.Jonathan Wells.

Pictures Taken from: 
1. The young oxford library of science.
2. Academic American Encyclopedia.
3. Berkeley University (tailored).
4. Icons of Evolution.
5. Atlas of Creation.
6. Encyclopedia Brittannica.

References: 
1. Definition of fossils - Eyewitness guides in Association with The Natural History Museum, London. 1993 edition, p-6.
2. Cells, Building blocks of life - "Ask a Biologist" Website
3. Origin of Life - Plants and Animals, The young Oxford library of science, Volume 2, Oxford university press, 2002 edition, p-6.
4. "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.
5. Richard Monastersky, "Mysteries of the Orient," Discover, April 1993, p. 40.
6. Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229.
7. Richard Fortey, "The Cambrian Explosion Exploded?," Science, vol. 293, no. 5529, 20 July 2001, pp. 438-439.
8. Solution To Darwin's Dilemma Of 1859 - Science Daily Dated January 9, 2009.
9. Tree of life - Jonathan Wells, Icons of Evolution, pp-29-58.
10. Evolution - Encyclopedia Brittannica.
11. Evolution - Academic American Encyclopedia
12. Cells - Wikipedia.
13. The Fossil Record Refutes Evolution - alberteinstein.ro


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.







23 comments:

  1. அல்லாஹு அக்பர்! நிறைய ஆய்வு செய்திருக்கிறீர்கள். இந்த கதை பவுல் மற்றும் சிலர் சேர்ந்து கட்டமைத்த பைபிள் கதைகளை விஞ்சி நிற்கிறது. பகுத்தறிவு கொழுந்துகளின் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக.ஆமின்.

    ReplyDelete
  2. முதல் பின்னூட்டத்துல இன்னைக்கி வேற பேரு இருக்கு!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரன் ஆஷிக்,
    அல்ஹம்துலில்லாஹ். சகோதரர் ஷாநவாஸ் சொன்னது போன்று நிறைய ஆய்வு செய்து எழுதியிருக்கின்றீர்கள். பரிணாமம் பற்றிய உங்கள் தொடர் பல புதிய தகவல்களை எங்களுக்கு கிடைக்கச் செய்கின்றது. பரிணாமம் என்ற கட்டுக்கதைகளின் ஆணிவேரை பிடுங்கியிருக்கிண்றீர்கள். கூடிய விரைவில் பரிணாம மரம் முழுவதும் வெட்டப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். //பகுத்தறிவு கொழுந்துகளின் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.// ஷாநவாஸ் உங்கள் ஆசை நிராசையாக தான் வாய்ப்புகள் அதிகம்.

    ReplyDelete
  4. //"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்படும் போதே பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்தவொரு பரிணாம வரலாறும் இல்லாமல் அவைகள் அங்கே நட்டுவைக்கப்பட்டது போன்று உள்ளன" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229. //
    பரிணாமவியலாளர்களின் தற்போதைய கடவுள் ரிச்சர்ட் டாகின்ஸ் இப்படி சொல்லியிருக்கின்றார். துறை சார்ந்த வல்லுனர்கள் என்ன பதிலை இதற்கு தரப் போகின்றனர்?
    //"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009. //
    என்ன பதிலை தரப் போகின்றது பரிணாமவியல் ஆதரவு குழாம்? பரிணாமவியல் மரம் வேர் இல்லாமல் சாயும் நிலையிலிருக்கின்றது. முட்டுக் கொடுக்க துறை சார்ந்த வல்லுனர்கள் ஓடி வருவார்களா?

    ReplyDelete
  5. //ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது, ஒரு சூறாவளி, வேண்டாத பொருட்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு இடத்தை கடந்து சென்றதால் (அந்த பொருட்களை கொண்டு) Boeing 747 விமானம் உருவாகிவிட்டது என்று கூறுவதற்கு நிகரானது - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.//
    ஷாநவாஸ் Sir Fred Hoyle கூற்றை படித்தப் பிறகுமா பரிணாமத்தை நம்புவர்களை "பகுத்தறிவு கொழுந்துகள்" என்று சொல்கின்றீர்கள்? பொதுவாக நான் அவர்களை போலி பகுத்தறிவாளர்கள் என்றே சொல்லுவேன்.

    ReplyDelete
  6. //பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution):
    துரதிஷ்டவசமாக, பரிணாமவியலாளர்களிடையே இது குறித்து ஒத்த மற்றும் தெளிவான கருத்து இல்லாதபடியால் என்னால் இங்கு விளக்க முடியாத சூழ்நிலை. //
    எங்கே சென்றனர் பரிணாமவியல் துறை சார்ந்த வல்லுனர்கள்? அவர்களின் சுட்டிகளை தூக்கி கொண்டு அங்கங்கே கருத்து சொல்லுபவர்கள் எங்கே? அட இவர்களாவது இதற்கு விளக்கம் சொல்லலாமே?

    ReplyDelete
  7. @பி.ஏ.ஷேக் தாவூத்

    நாளைக்கு சென்னை குலுங்கப்போகுதாமே! சென்னைல இருக்குற மக்கள்லாம் பாதுகாப்பான இடத்துக்குப் போயிரலாமா?

    உலகக்கோப்பை கால்பந்து முடிஞ்ச உடனே, (பொதக்குடியில்) எழுவர் பந்தாட்டம் தொடங்குது போல! இந்த வருஷம் கோலாகலம்தான் போங்க.

    ReplyDelete
  8. முஹம்மது ஆஷிக்Monday, July 05, 2010

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் ஆஷிக் அஹமத்.

    மிக நன்றாக கோர்வையாக உண்மைகளை தொகுத்து ஆதாரத்துடன் எழுதி வருகிறீர்கள். மிக்க நன்று.

    இந்த பரிணாம வெத்து வேட்டு சரடு பீலாக்களுக்கு, அந்த ஹாரி பாட்டர் கதைகளாவது கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே லாஜிக்குடன் சிறிது நம்பும்படி இருக்குமே..!

    ReplyDelete
  9. அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம்.

    பரிணாமவியலில் லாஜிக்கா?, கிலோ என்ன விலை என்றுதான் கேட்க வேண்டும்...

    டாகின்ஸ் அவர்கள் கூறியதை கேட்டீர்களல்லவா?

    முதன் முதலாக தோன்றிய உயிரினங்கள் பரிணாம வரலாறு இல்லாமல் பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளனவாம்.

    ஆதாரம் இல்லையென்று அவரே கூறுகிறார். அப்புறம் எப்படி பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன என்று கூறுகிறார்?. ஆஹா, என்ன ஒரு லாஜிக்!!!!!!!!!!!!!!!!!!!!!

    ஒரு பரிணாமவியலாளர் கூறியது...

    "முதுகெலும்புள்ள உயிரினங்கள் முதுகெலும்பில்லாத உயிரினங்களிருந்து வந்தன என்பது சந்தேகமில்லாத உண்மை. ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லாதது தான் குழப்பத்தை உண்டாக்குகிறது"

    அதுதான் ஆதாரங்கள் இல்லையே, அப்புறம் எப்படி தெளிவாக கூறுகிறார்? இது என்ன லாஜிக்?

    பரிணாமவியலாளர்களை பொறுத்தவரை பரிணாமவியல் என்பது ஒரு நம்பிக்கை.

    அதில் லாஜிக் பார்த்தால், அவர்களது கடவுளான இயற்கை "கண்ணை குத்திவிடும்".


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  10. திரு. ஆஷிக் அவர்களுக்கு, இப்போதுதான் உங்களது கட்டுரையை முழுவதும் வாசிக்க முடிந்தது. பல தரவுகள் தரப்பட்டிருப்பதால் ஒவ்வொன்றாக வாசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    தற்போதைக்கு ஒன்று மட்டும்: குப்பையிலிருந்து போயிங் உருவாவதே சாத்தியம் அற்றது என்றால், ஒன்றும் இல்லாமல் திடீரென்று ஒரு போயிங் தோன்றுவது அதைவிட சாத்தியம் அற்றது இல்லையா.

    ReplyDelete
  11. கும்மியின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. வாதத்தை திசை திருப்ப என்ன பாடுபடுகிறார். பரிணாமம் என்பது ஒரு நம்பிக்கையே என்று இந்தப் பதிவில் நிருபிக்கப்பட்டு வருகிறது.

    ReplyDelete
  12. முஹம்மது ஆஷிக்Tuesday, July 06, 2010

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரர் ஆஷிக் அஹமத்.

    நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும்போது, எனக்கென்னமோ அந்த J.K. Rowling
    (Writer: Harry Potter stories) இந்த தலைப்பை கேள்விப்பட்டு... "பற்பல மாயாஜால லாஜிக்குகள் வைத்து நிறைய சிந்தித்து திறமையுடன் பல ஆண்டுகள் எழுதிய என்னுடைய படைப்புகளை எப்படி எந்த லாஜிக்குமே இல்லாத சும்மா அள்ளித்தேளிக்கப்பட்ட பரிணாமவியல் கதைகளுடன் ஒப்பிடபோச்சு" என்று கொதித்தெழுந்து உங்களுடன் சண்டைக்கு வராவிட்டால் நீங்க உண்மையிலேயே லக்கிதான்.

    ReplyDelete
  13. அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),


    1. //தற்போதைக்கு ஒன்று மட்டும்: குப்பையிலிருந்து போயிங் உருவாவதே சாத்தியம் அற்றது என்றால், ஒன்றும் இல்லாமல் திடீரென்று ஒரு போயிங் தோன்றுவது அதைவிட சாத்தியம் அற்றது இல்லையா//


    தங்களுடைய கேள்வி மிக நியாயமான ஒன்றே.

    ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். sir fred hoyle அவர்களுடைய கருத்துக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்? அவருடைய கருத்து நியாயமானதா இல்லையா?, இதற்கு பதில் சொல்லாமல் மற்றொரு கேள்வியை கேட்பது என்ன விதமான லாஜிக்? கேள்விக்கு கேள்விக்கு பதிலாகுமா?

    உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல போக, அந்த பதிலை வைத்துக்கொண்டு வாதத்தை திசை திருப்ப முயல்வார்கள் சிலர். நிறைய முறை இவற்றை பார்த்தாகி விட்டது.

    ஆக, பதிவிற்கு சம்பந்தமாக பேசுவதே உத்தமம் என்று நினைக்கிறேன்.

    ஒருவேளை நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி சரியென்று வைத்துக்கொண்டாலும் அதனால் பரிணாமம் சரியென்று ஆகாது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

    பரிணாமம் குறித்து எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு (இந்த பதிவுக்கு மட்டுமல்லாமல் பரிணாமம் குறித்த மற்ற பதிவுகளுக்கும் [நீங்கள் இந்த பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதாக முன்பு குறிப்பிட்டிருக்கின்றீர்கள்]) நேரம் எடுத்துக்கொண்டு தங்களுடைய ஓய்வு நேரத்தில் முடிந்தால் பதிலளியுங்கள். கேட்க ஆவலாக இருக்கின்றேன்.

    நன்றி...


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் ரஞ்சித்,
    //ஒன்றும் இல்லாமல் திடீரென்று ஒரு போயிங் தோன்றுவது அதைவிட சாத்தியம் அற்றது இல்லையா//
    சூன்யத்திலிருந்து தான் இந்த முழு பிரபஞ்சமே தோன்றியது என இன்றைய அறிவியலாளர்கள் சொல்லுகின்றார்கள். ஒன்றுமே இல்லாமல் தான் இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்கின்றது.

    ஆஷிக் உங்களின் கீழ்க்கண்ட கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
    //கேள்விக்கு கேள்விக்கு பதிலாகுமா? //
    சில சமயங்களில் கேள்விக்கு கேள்வி பதிலாக அமையும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  15. திரு ஆஷிக் அவர்களுக்கு,

    Hoyle என்ன குறிப்பிட்டார் என்பதை நீங்கள் "emphasis added" என்று எழுதியிருக்கிறீர்கள்.

    இனி அடுத்தவரின் கருத்தை எடுத்தாளும் போது உங்களது "emphasis" களை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அது சேர்க்கப்படும் விதமும் இடமும் பொருளைச் சிதைத்துவிடும் சாத்தியம் கொண்டது.

    Hoyle - அந்த நேசர் இதழின் பெட்டிச் செய்தியில் அவரது கருத்தைப் இப்படியாகக் குறிப்பிடுகிறார்.
    "The chance that higher life forms might have emerged in this way is comparable with a chance that" என்று போயிங்க் பற்றி தனது கருத்தை முன்வைக்கிறார்.

    நீங்கள் செல்லின் தோற்றத்தையே இப்படிக் குறிப்பிடுகிறார் என்று எழுதியிருக்கிறீர்கள், இந்தப் பொருட்சிதைவை ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையென்றால் விளக்கவும்.

    என்னளவில் ஹாயில் தனது காஸ்மாலஜியின் காலக்கணக்கீட்டோடு உயிரியலின் காலக் கணக்கீடுகளை ஒப்பிட்டு அதன் தவறை சுட்டிக் காட்ட முயல்கிறார். மேலும் எந்த இடத்திலும் பரிணாமக் கொள்கையே தவறு என்று சொல்லவில்லை. உயிரியலின் காலக் கணக்கீடு தவறு என்று குறிப்பிடுகிறார்.

    அதுவும் அவர் அந்த முடிவுக்கு வந்த விதம் அதாவது அவரது கணக்கீடு எனக்கு முழுவதும் புரியவில்லை. அதற்கான தேடுதலை இனிதான் செய்ய வேண்டும். அவரது கணக்கிடும் ஒப்பீடும் உங்களக்குப் புரிந்திருந்தால் விரிவாக விளக்குங்கள் எல்லோருக்கும் (எனக்கும்) உதவியாக இருக்கும்.

    நிற்க.

    எனது முந்தைய பின்னூட்டம் பதிவிற்கு சம்பந்தமில்லாதது கிடையாது. அதனால் அதற்கான விடையை உங்களிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

    அறிவியலே கேள்விகளால் வளர்வதுதான், கேள்விக்கான பதில்களை விட எதிர்கேள்விகள் அதிக புரிதலை தரக்கூடியவை.

    இனி கேம்பிர்யன் எக்ஸ்ப்லோஷன் குறித்து நீங்கள் அளித்துள்ள தரவுகளை வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  16. அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,

    தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

    தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி....

    1. //நீங்கள் செல்லின் தோற்றத்தையே இப்படிக் குறிப்பிடுகிறார் என்று எழுதியிருக்கிறீர்கள், இந்தப் பொருட்சிதைவை ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையென்றால் விளக்கவும்//

    Fred Hoyle அவர்களைப் பற்றி குறிப்பிடும் விக்கிபீடியா கீழ்வரும் தகவலை தெரிவிக்கின்றது....

    "Hoyle compared the random emergence of even the simplest cell to the likelihood that "a tornado sweeping through a junk-yard might assemble a Boeing 747 from the materials therein.""

    இதைத்தான் என்னுடைய பதிவில் பயன்படுத்தினேன்.

    விக்கிபீடியா மேலும் கூறுகிறது...

    "Hoyle also compared the chance of obtaining even a single functioning protein by chance combination of amino acids to a solar system full of blind men solving Rubik's Cube simultaneously"

    ஆக, ஒரு புரதம் கூட உருவாக வாய்ப்பில்லை என்று கூறியவர். மொழிபெயர்ப்பில் இருந்த பிரச்சனையால் இதனை மேலோட்டமாக சொல்லி கடந்து விட்டேன்.

    மொத்தத்தில், நான் எழுதியதில் பொருட்சிதைவு இருப்பதாக கருதவில்லை.

    விக்கிபீடியாவின் அந்த கட்டுரையை முழுவதுமாக படிக்க...

    http://en.wikipedia.org/wiki/Fred_Hoyle#Rejection_of_chemical_evolution


    2. //என்னளவில் ஹாயில் தனது காஸ்மாலஜியின் காலக்கணக்கீட்டோடு உயிரியலின் காலக் கணக்கீடுகளை ஒப்பிட்டு அதன் தவறை சுட்டிக் காட்ட முயல்கிறார். ************************************** உயிரியலின் காலக் கணக்கீடு தவறு என்று குறிப்பிடுகிறார்//

    நீங்கள் காலக்கணக்கீடு என்று எதை சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. தெளிவாக கூறினால் புரிந்து கொள்ள உதவும்.

    Chemical Evolution னை நிராகரித்தவர் அவர். அதாவது, ஒரு செல் தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்று கூறியவர். ஒரு செல் தற்செயலாக உருவாக probability 1040,000ஆக இருக்க வேண்டுமென்று சொன்னவர்.

    Hoyle calculated that the chance of obtaining the required set of enzymes for even the simplest living cell was one in 1040,000

    ஆக, ஒரு செல் தற்செயலாக உருவாகி இருக்கும் என்ற கருத்தை நிராகரித்தவர் அவர்.

    3. //மேலும் எந்த இடத்திலும் பரிணாமக் கொள்கையே தவறு என்று சொல்லவில்லை//

    உண்மைதான். நானும் என்னுடைய பதிவில் அவர் அப்படி குறிப்பிட்டதாக கூறவில்லை. அவர் abiogenesis தவறு என்று கூறியதை தான் சுட்டி காட்டியிருக்கின்றேன்.

    4. //அதுவும் அவர் அந்த முடிவுக்கு வந்த விதம் அதாவது அவரது கணக்கீடு எனக்கு முழுவதும் புரியவில்லை. அதற்கான தேடுதலை இனிதான் செய்ய வேண்டும். அவரது கணக்கிடும் ஒப்பீடும் உங்களக்குப் புரிந்திருந்தால் விரிவாக விளக்குங்கள் எல்லோருக்கும் (எனக்கும்) உதவியாக இருக்கும்//

    இன்ஷா அல்லாஹ், அவருடைய கருத்துக்களை முழுவதுமாக படிக்க முயலுங்கள். நானும் முயற்சிக்கின்றேன்.

    5. //இனி கேம்பிர்யன் எக்ஸ்ப்லோஷன் குறித்து நீங்கள் அளித்துள்ள தரவுகளை வாசிக்க வேண்டும்//

    முழுவதுமாக படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்...

    இறைவன் நாடினால் தொடர்கிறேன்...

    ReplyDelete
  17. அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,

    தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

    //எனது முந்தைய பின்னூட்டம் பதிவிற்கு சம்பந்தமில்லாதது கிடையாது. அதனால் அதற்கான விடையை உங்களிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்//


    நான் தெளிவாகவே சொல்லி இருப்பதாக நினைக்கின்றேன். முதலில் ஒரு boeing 747 விமானம் தற்செயலாக உருவாக வாய்ப்புண்டு என்று நீங்கள் கருதுகிறீர்களா? இல்லையா?

    இதற்கு தாங்கள் முதலில் பதில் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்.

    எது எப்படியோ, உங்களது கேள்விக்கு என்னுடைய பதில் தொடர்கிறது....

    ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

    நீங்கள் கடற்கரைக்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே, மணலில் வரிவரியாக சில அடையாளங்களை காண்கிறீர்கள். இது எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், நீங்கள் உடனே சொல்வீர்கள், "இது கடல் அலை மணலை தொட்டு சென்றதால் ஏற்பட்டது" என்று.

    அடுத்த நாள் அதே இடத்திற்கு செல்கிறீர்கள். இப்போது அங்கே, "Welcome" என்ற வார்த்தை மணலில் எழுதப்பட்டிருப்பதை பார்க்கின்றீர்கள். இது எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், நீங்கள் மறுபடியும், "கடல் அலை மணலை தொட்டு சென்றதால் இது ஏற்பட்டது" என்று சொல்வீர்களா? இல்லை "யாரோ வந்து இதை எழுதி சென்றிருக்கின்றார்கள்" என்று கூறுவீர்களா?

    நான் சொல்ல வருவது இதுதான், இயற்கை, அடையாளங்களை உருவாக்கலாம் ஆனால் தகவல்களை உருவாக்காது.

    Nature can create patterns but not the informations...

    உயிரினங்களில் உள்ள மரபணு தகவல்கள் எல்லாம் தானாக தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது இது போலத்தான் இருக்கிறது.

    ஒரு பொருள் இருக்கிறதென்றால் அதை உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும். இதோ நான் தட்டச்சு பண்ணும் இந்த சிக்கலான வடிவமைப்பை கொண்ட, பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய Keyboard தானாக தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நீங்கள் நம்பலாம். ஆனால் என்னால் முடியாது. இந்த keyboardடை உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டுமென்று சொல்லுவது தான் எனக்கு லாஜிக்காக தெரிகின்றது.

    ஆக, boeing 747 தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்பது என்னுடைய நிலை. அதனை உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்கவேண்டுமென்று எண்ணுவதுதான் என்னுடைய அறிவுக்கு ஒத்துவருகிறது.

    அறிவியல் ஆதாரங்களும் உயிரினங்கள் திடீரென தோன்றியதாகத் தான் கூறுகிறது. மொத்தத்தில், இந்த உலகம், அதன் உறுப்பினர்கள் என்று perfect ஆன இந்த அமைப்பு நம்மை மீறிய ஒரு சக்தியால் தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து.

    இது குறித்து, நீங்களெல்லாம் பெரிதும் மதிக்கக்கூடிய பிரபல பரிணாமவியலாளர் ஒருவர் கூறிய கருத்துக்கள் உங்களுடைய பதில்களை பார்த்த பிறகு பதியப்படும்.

    நன்றி...


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  18. திரு. ஆஷிக் அவர்களுக்கு,

    தற்போதைக்கு ஒன்று மட்டும். ஹாயில் அந்த சாத்தியக்கூறு எண்ணை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் விளங்கவில்லை என்று கூறினேன்.

    உங்களிடம் ஒரேயொரு கேள்வி இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள உயிரனங்கள் அனைத்து இறைவனால் படைக்கப்பட்டது என்று நம்புகிறீர்களா.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்
    //இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள உயிரனங்கள் அனைத்து இறைவனால் படைக்கப்பட்டது என்று நம்புகிறீர்களா.//

    பதிவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்பல்கள் ஆரம்பித்துவிட்டன ஆஷிக். இனி இந்த கேள்விகளுக்கு நீங்கள் சொல்லுகின்ற பதிலை வைத்து உரையாடல் திசை திருப்பபடலாம். இதுவரை பரிணாமவியல் பற்றி நீங்கள் எழுப்பிய எந்த ஒரு கேள்விகளுக்கும் பாரினாம்வியல் ஆதரவு முகாமிலிருந்து பதில் வராது. அவர்களிடம் நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இருந்தால் இந்நேரம் சொல்லியிருக்கலாமே. அது சரி சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.

    சகோதரர் ரஞ்சித்திடம் ஒரு கேள்வி: இதுவரை ஆஷிக் பரிணாமவியலுக்கு எதிராக எடுத்து வைத்த கேள்விகளுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லையே? அதற்கான பதிலை சொல்லாமல் பதிவின் மையப் போரோளை திசை திருப்பும் வண்ணம் உங்களின் கருத்துக்கள் அமைகின்றனவே. அது ஏன்?

    ஏற்கெனவே ஒருவர் பரிணாமவியலுக்கு பதில் சொல்லுகின்றேன் என்று சொல்லி இங்கு மொக்கையடித்துக் கொண்டிருக்கின்றார். தயவு செய்து நீங்களும் அந்த வரிசையில் சேர்ந்து விட வேண்டாம் சகோதரர் ரஞ்சித்.

    ReplyDelete
  20. "மையப் போரோளை" அல்ல மையப் பொருளை என்று திருத்தி வாசிக்கவும்.

    ReplyDelete
  21. //Nature can create patterns but not the informations//

    இதை முடிவான உண்மையாகக் கூறுகிறீர்களா அல்லது அறிவியல் இப்படி தீர்மானமாக அறிவித்துவிட்டதா..

    திரு. அஷிக் அவர்களுக்கு இப்படிப் பகுதிகளாக உரையாடுவதுதான் தற்போதைக்கு எனக்கு சாத்தியமாக இருக்கிறது. அதனால் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.



    திரு. ஷேக் தாவூத் அவர்களுக்கு.. நான் பரிணாமவியலை முற்றும் அறிந்தவன் கிடையாது. உங்கள் மொழியில் சொல்வதென்றால், சட்டியில் என்ன இருக்கிறது என்பதைத் துளாவிக்கொண்டிருக்கும் நிலையில் இருப்பவந்தான். அதனால்தான் அவரது தரவுகளில் இருந்தும் கருதுகோள்களிலிருந்தும் பகுதிகளாக உரையாடலைத் தொடங்கியிருக்கிறேன். ஒவ்வொரு தரவாக வாசித்துவிட்டு சீர்தூக்கிப் பார்த்துதான் வரவேண்டியிருக்கிறது. முதலில் நான் கையிலெடுத்தது ஹாயில் குறித்த தரவு. ஹாயிலின் முடிவுகளிலேயே சில புரிதல் குறைபாடுகள் இருக்கிறது அதற்கான விளக்கத்தைக் கேட்டிருக்கிறேன்.

    மேலும்,உரையாடலைத் தொடர்வதற்கு எனக்குத் தேவையான சிலவற்றைக் கேட்பதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அழைக்கும் ... சகோதர் ஆஷிக்

    மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ஆறிவை மேலும் அதிகபடுத்துவானாக !

    உங்களின் சத்திய தேடல்கள் தொடரட்டும் ...

    ReplyDelete