Wednesday, June 1, 2011

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...





நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப்பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும். 

இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. 

அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்? 

பின்வருவது தான் அந்த விளம்பர பலகைகளில் உள்ள வாசகம், 
Jesus: A Prophet of Islam - இயேசு : ஓர் இஸ்லாமிய இறைத்தூதர்
மேற்கண்ட வாசகத்திற்கு பக்கத்தில் இந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் மற்றும் வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு "குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை" இலவசமாக பெற தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.             



இந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளிக்கும் இத்திட்ட அமைப்பாளர் தியா முஹம்மத் (Diaa Mohamed), முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் ஒரு பொதுவான பார்வையின் கீழ் கொண்டுவரவும், முஸ்லிம்கள் ஏசுவை நம்புகின்றவர்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த விளம்பரங்கள் என்று கூறியுள்ளார். 

வரும் நாட்களில் மேலும் சில வாசகங்களை கொண்ட விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாசகங்கள்,  

  • Holy Qur'an: The Final Testament - புனித குர்ஆன் : கடைசி ஏற்பாடு.    
  • Muhammed (s): A Mercy to Mankind - முஹம்மது (ஸல்): மனிதகுலத்தின் கருணை. 
  • Islam: Got Questions? Get Answers - இஸ்லாம்: கேள்விகளா? பதிலை பெற்று கொள்ளுங்கள். 

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார். 

மேலும், சேதப்படுத்தப்பட்ட அந்த பலகை விரைவிலேயே சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்நிறுவனத்தின் முதல் செயற்திட்டம் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகின்றது. 

அதாவது, நான்கு வார காலத்திற்கு, சிட்னியின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் சுமார் நாற்பது பேருந்துகள் தங்களது இஸ்லாமிய விளம்பரங்களை தாங்கி செல்லும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.

பேருந்துகளின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் இருக்கும் இந்த விளம்பரங்கள், "இஸ்லாம் குறித்த கேள்விகளா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த எண்களில்" என்று இருக்குமாம். இது குறித்த மாதிரியை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது "My Peace".      



நீங்கள் மேலே பார்த்தது மட்டுமின்றி, தங்களின் அடுத்தக்கட்ட திட்டமாக, தொலைக்காட்சிகள் வழியாகவும் தங்களது இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்நிறுவனத்தின் வலைத்தளம் பல்வேறு தகவல்களை கொண்டதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). தங்களது செயற்பாடுகளாக இவர்கள் கூறியுள்ளது, 

  • இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வுகளை கையாள்வது, 
  • சக ஆஸ்திரேலியர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து சொல்வது, 
  • இஸ்லாம் குறித்த எவ்விதமான கேள்வியையும் முஸ்லிமல்லாதவர்கள் கேட்க முன்வருமாறு அழைப்பது,   
  • குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை இலவசமாக அளிப்பது, 
  • பள்ளிவாசல்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை அழைத்து செல்வது, 
  • எந்தவொரு தலைப்பிலும் சொற்பொழிவாற்ற தயாரான நிலையில் அறிஞர்களை வைத்திருப்பது,

மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி புதிய முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மிக மும்முரமாக செயல்படுகின்றனர் இந்த இயக்கத்தினர். அல்ஹம்துலில்லாஹ். பெண்களுக்கான பகுதியும் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் பல இஸ்லாமிய இயக்கங்களை கண்டு நான் வியந்துண்டு. தங்கள் மார்க்கத்தின் மீதான ஆழ்ந்த பற்று, எவ்வித கேள்விக்கும் தங்களிடம் பதில் உண்டு என்ற அசராத நம்பிக்கை, அதனை வெளிப்படுத்தும் விதமான விவாதங்கள், நேர்த்தியான முறையில் வடிவமைப்பட்ட செயற்திட்டங்கள் என்று இந்த இயக்கங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது "My Peace"சும் சேர்ந்துள்ளது. மாஷாஅல்லாஹ்...

குறிப்பு: 

நாம் மேலே பார்த்தது போன்ற செயல்திட்டத்தை "Gain peace" என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் செயல்படுத்தி வருவது இங்கே நினைவுகூறத்தக்கது

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

MY PEACE official website:
1. mypeace.com.au. link

Gain Peace official website:
1.gainpeace.com. link

References:
1. Press release - mypeace.com.au. link 
2. He's not the son of God, just the support act - Sydney Morning Herald, dated 28th May, 2011. link
3. Billboard loses prophet margin - Sydney Morning Herald, dated 30th May, 2011. link


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ






86 comments:

வாஞ்ஜூர் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு ஆஸ்திரேலியாவில்

தொடங்கும் இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ் (S.W.T) நல்லருள் பாலிப்பானாகவும்.

வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்
..

Aashiq Ahamed said...

Dear Vanjoor appa,

Wa alaikum salaam (varah)

thanks for ur visit and duaa

your brother,
aashiq ahamed a

zumaras said...

ஸலாம்.
இஸ்லாமிய அழைப்பு பணி செய்வோருக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக உண்டு.

Aashiq Ahamed said...

அன்பு சகோதரி Zumaras,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

------
இஸ்லாமிய அழைப்பு பணி செய்வோருக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக உண்டு.
------

ஆம்...நிச்சயமாக உண்டு...

தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

சுவனப்பிரியன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

புதிய செய்தியை அறிய தந்திருக்கிறீர்கள். அழைப்புப் பணியில் இதுவும் ஒரு வகை.

Anonymous said...

அண்ணே,

My-piece அப்படிங்கற அமைப்பு இந்து மதத்தப் பத்தி அரபு நாடுகளில் உள்ள மக்களுக்கு விளக்க விரும்புகிறது. அரபு அரசுகளிடம் அனுமதி வேண்டின் நீங்கள் ஆதரிப்பீங்களா?

இறைநேசன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ்வின் மார்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல சாமானிய முஸ்லிமும் ஆசை கொள்வான் என்பதர்க்கு உதாரனம் நம் சகோதரர்கள் இனையதலத்தில் செய்யும் பிரசாரம் சிறந்த எடுத்துகாட்டாகும்.நம் ஆஸ்திரேலிய முஸ்லிம் சகோதர்களின் முயற்சிகளுக்கு எல்லாம் வல்ல் இறைவன் நல் அருள் புரிவனாக ஆமீன்.

Anonymous said...

ஆஸ்திரேலியா, கூடிய விரைவில் இந்தியாவாக, மத வன்முறையில் சிக்கி சின்னபின்னாமாக போகுது. அப்போ அந்த மக்களை காப்பாற்ற யேசுவாலும் முடியாது, எந்த இறைதூதராலும் முடியாது.

இக்பால் செல்வன் said...

இயேசுவை கடவுள் இல்லை என இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் நிரம்பிய நாட்டில் விளம்பரம் செய்ய முடியும். ஆனால் மகமதுவை இறைத் தூதர் இல்லை என இஸ்லாமியர் நிரம்பிய நாடொன்றில் பிரச்சாரம் செய்ய முடியுமா ? அப்படிப் பார்த்தால் கிறித்தவர்கள் நிரம்பிய நாடுகளில் அல்லவா சகிப்புத் தன்மையும், சுதந்திரமும். சமத்துவமும் அதிகமாக இருக்கின்றன - அவர்களுக்கு அந்த சகிப்புத் தன்மையையும், சுதந்திர, சமத்து உணர்வை யார் கொடுத்தது.

ஷர்புதீன் said...

மத ரீதியான ஒரு விவாதத்திற்குரிய இன்றைய அடியேனின் பதிவை பார்வை இட அழைக்கிறேன்

Aashiq Ahamed said...

சகோதரர் சுவனப்பிரியன்,

வ அலைக்கும் சலாம்,

----
புதிய செய்தியை அறிய தந்திருக்கிறீர்கள். அழைப்புப் பணியில் இதுவும் ஒரு வகை.
----

ஆம்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன்.

----
My-piece அப்படிங்கற அமைப்பு இந்து மதத்தப் பத்தி அரபு நாடுகளில் உள்ள மக்களுக்கு விளக்க விரும்புகிறது. அரபு அரசுகளிடம் அனுமதி வேண்டின் நீங்கள் ஆதரிப்பீங்களா?
----

ஆதரிப்பேன் சகோதரர்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் இறைநேசன்,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

---
அல்லாஹ்வின் மார்கத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல சாமானிய முஸ்லிமும் ஆசை கொள்வான் என்பதர்க்கு உதாரனம் நம் சகோதரர்கள் இனையதலத்தில் செய்யும் பிரசாரம் சிறந்த எடுத்துகாட்டாகும்.
---

ஆம். நிதர்சனமான உண்மை. சகோதர சகோதரிகள் மேலும் சிறப்பாக செயல்பட துவா செய்யுங்கள்.

----
நம் ஆஸ்திரேலிய முஸ்லிம் சகோதர்களின் முயற்சிகளுக்கு எல்லாம் வல்ல் இறைவன் நல் அருள் புரிவனாக
----

ஆமீன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

----
ஆஸ்திரேலியா, கூடிய விரைவில் இந்தியாவாக, மத வன்முறையில் சிக்கி சின்னபின்னாமாக போகுது. அப்போ அந்த மக்களை காப்பாற்ற யேசுவாலும் முடியாது, எந்த இறைதூதராலும் முடியாது.
----

அப்படியொரு நிலை வரக்கூடாதென்று பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரர்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Ibnu Halima said...

ஏக இறையின் அருள் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக,
ஆஸ்திரேலிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, சிலரால் தாக்கப்படுவோம் என்று தெரிந்திருந்தாலும் தம்முடைய மத பிரசாரத்தை செய்கின்ற ஆஸ்திரேலியாவை சார்ந்த மைபீஸ் அமைப்பினர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் தன்னுடைய அருளையும் கருணை மழையையும் பொழிவானாக. அவர்களின் செயல் திட்டத்தில் உள்ள ஆறு விசயங்களையும் சரியாக பின்பற்றுவார்களேயானால் இஸ்லாம் பற்றிய நல்லதொரு புரிந்துணர்வை ஆஸ்திரேலியர்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

Ibnu Halima said...

@இக்பால் செல்வன்,
இயேசு கடவுள் இல்லை. அவர் இறைவனின் தூதர். முகமது நபியை போல அவரும் இறைவனின் தூதர் என்று அந்த அமைப்பினர் பிரசாரம் செய்திருகிறார்கள். முஸ்லிம்கள் தமது உயிரை விட மேலாக மதிக்கின்ற முகமது நபிக்கு சரிசமமாக தான் இயேசுவை குரிப்பிற்றுக்கின்றனர். இயேசுவை பற்றி தவறாக வேறெதுவும் சொல்லவில்லையே. மேலும் அது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அழைக்க வேண்டிய தொலைபேசி என்னையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே இதில் எந்த தவறை கண்டீர்கள் இக்பால் செல்வன். அதுகுறித்து திறந்த மனதுடன் விவாதிக்க நீங்கள் தயாரா?

நீங்கள் குறிப்பிட்ட சகிப்புத்தன்மை என்றால் என்ன? என்பதை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும் இக்பால் செல்வன்.

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

-----
இயேசுவை கடவுள் இல்லை என இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் நிரம்பிய நாட்டில் விளம்பரம் செய்ய முடியும். ஆனால் மகமதுவை இறைத் தூதர் இல்லை என இஸ்லாமியர் நிரம்பிய நாடொன்றில் பிரச்சாரம் செய்ய முடியுமா ?
-----

இவர்கள் தங்கள் நிலைப்பாட்டை சொல்லி இருக்கின்றார்கள். இயேசு - ஓர் இஸ்லாமிய இறைத்தூதர் என்று சொல்லி இருக்கின்றார்கள். இதில் என்ன பிரச்சனை? இஸ்லாம் இயேசுவை இறைத்தூதர் என்று சொல்கிறது, அதனை பிரச்சாரம் செய்கின்றார்கள். அரசாங்கமும் இதனை எதிர்க்கவில்லை.

முஹம்மது இறைத்தூதர் இல்லை என்று பைபிளில் கூறப்பட்டுள்ளதா?? பின் எதற்கு அவர்கள் அப்படி பிரச்சாரம் செய்யவேண்டுமென்று தாங்கள் நினைக்கின்றீர்கள்? பைபிளில் உள்ள வாக்கியங்களை கொண்டு பிரச்சாரம் செய்யட்டுமே? கிருத்துவம் என்ன போதிக்கின்றதோ அதனை சொல்லட்டுமே??

நீங்கள் கேட்ட கேள்வியை போன்ற ஒன்றை நானும் கேட்கின்றேன் பாருங்கள். முஸ்லிம்கள் யாரும் ஏசுவை இகழ்வதில்லை. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களை கிருத்துவர்கள் (சிலர்) இகழ்கின்றார்களே? உங்கள் பாசையில் இதற்கு கிருத்துவர்களிடம் சகிப்பு தன்மை இல்லை என்று அர்த்தம் கொள்ளலாமா?

Aashiq Ahamed said...

------
அப்படிப் பார்த்தால் கிறித்தவர்கள் நிரம்பிய நாடுகளில் அல்லவா சகிப்புத் தன்மையும், சுதந்திரமும். சமத்துவமும் அதிகமாக இருக்கின்றன - அவர்களுக்கு அந்த சகிப்புத் தன்மையையும், சுதந்திர, சமத்து உணர்வை யார் கொடுத்தது.
--------

ஓ. அப்படியா அப்படியா. Islamophobia என்ற வார்த்தை வருவதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியாது போல.

சகிப்புதன்மை பற்றி பேசுகிண்றீர்களா? பேசுவோம். முதலில் சகிப்புத்தன்மை என்றால் என்ன? அதனுடைய அளவுகோல் என்னவென்று சொல்லுங்கள்.

நீங்கள் என்னை தூண்டுவதால் நான் சிலவற்றை சொல்ல வேண்டியதாக உள்ளது. கிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். தாங்கள் கூறிய கிருத்துவர்களின் சகிப்பு தன்மையை பாருங்கள்

http://www.smh.com.au/nsw/billboard-loses-prophet-margin-20110529-1faz4.html

http://www.loonwatch.com/category/loon-politics/ இந்த தளத்தை பொறுமையாக பாருங்கள். 'சகிப்புத்தன்மைக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன'.

இன்னும் தேவையென்றால் சொல்லுங்கள். 'சகிப்புத்தன்மைக்கு எக்கச்சக்க லிங்க்குகளை தருகின்றேன்.

மேலும் இதனையும் பாருங்கள்,

http://www.tampabay.com/news/politifact-most-muslim-countries-allow-churches-synagogues/1126477/

ஒருவேளை 'மை பீஸ்' இதுபோன்ற விளம்பரத்தை தாங்கள் செய்யப்போகின்றோம் என்று அறிவித்து ஒட்டேட்டுப்பு நடத்தி இருந்தால் அப்போது தெரிந்திருக்கும் சகிப்புத்தன்மையை பற்றி.

அது சரி, உங்கள் பதிவில் ஏதோ விலங்குகளின் படத்தை போட்டிருக்கிண்றீர்கலாமே??? அந்த பதிவிற்கும் அந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

இல்லை இதற்கு பெயர் தான் சகிப்புதன்மையா???????????

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹமத்,

'மை பீஸ்' அமைப்பு சத்தியமான விஷயத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் செயலுக்கு வெற்றி கிட்ட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இயேசு இறைத்தூதரா...? அல்லது இறை மகனா...?

கிறிஸ்த்தவர்களில் ஒரு சாரார் இயேசுவை இறைமகன் என்றும் இன்னொரு சாரார் கடவுள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

//''அல்லாஹ் (தேவன்) சந்ததியை(குமாரனை) ஏற்படுத்திக் கொண்டான்'' என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் (தேவன்/கர்த்தர்)மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? (அல்குர்ஆன் 10:68)//

ஆனால், இயேசு கொல்லப்படவுமில்லை.. உயிர்த்தெழவுமில்லை. மேலும், 'இயேசு இன்னும் இறைவனிடம் உயிரோடு இருக்கிறார்' என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

//(இயேசுவாகிய) அவரை அவர்கள்(யூதர்கள்) கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.(அல்குர்ஆன் 4:157)//

///வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! கர்த்தர்் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா(இயேசு) எனும் மஸீஹ் கர்த்தரின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே கர்த்தரையும்், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(இயேசு எனும் ஈசா)மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.(அல்குர்ஆன் 4:171-172)///

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

தொடர்ச்சி....

மேலும், கிருத்துவர்களில் இன்னொரு ஒரு சாராரும்,

முஸ்லிம்களும்,

இயேசுவை இறைத்தூதர் என்றே நம்புகிறார்கள்.

ஆனால்... இந்த இருவருக்கும் ஒரே வித்தியாசம்... என்னவெனில்,

அந்த கிருத்துவர்கள் 'இயேசுதான் இறுதித்தூதர்' என்று நம்புகிறார்கள்.

மாறாக, முஸ்லிம்களுக்கு இயேசு (ஈசா அலை...) முஹம்மத் (நபி ஸல்...) எனும் இறுதித்தூதருக்கு முந்தய இறைத்தூதர். அவ்வளவுதான்.


கிருத்துவர்களே..! இயேசு இறுதித் தூதரா..?

\\\நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்கு வெறொரு தேற்றவாளரை அவர் உங்களுக்கு தந்தருள்வார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கின்ற படியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. (யோவான்14:15-16)\\\

ஆக, உங்கள் பைபிளின்படியே... இயேசு இறுதுதித்தூதர் அல்லர். யார் அந்த தேற்றவாளர்..?

விடை இங்கே...

http://www.youtube.com/watch?v=GpsEod7ODh0

In the 5th chapter of the Shir haShirim which is one of the five megilot or Sacred Scrolls that are part of the Hebrew Bible or for short the "Song of Solomon" .
That chapter is giving a prophecy about an individual to come, a mystery man.

Here is the name written in ancient Hebrew as it appears in verse sixteen: מחמד .
It is read as : "Mahammad".

According to Ben Yehuda's Hebrew-English Dictionary, it is correctly pronounced as "Muhammad".
go this link ... paste the name מחמד and then translate it into English.

You will see that מחמד is translated as "Muhammad".
http://www.freetranslation.com/

Read more: http://www.city-data.com/forum/religion-philosophy/1274377-name-muhammad-bible-original-hebrew-language.html#ixzz1O7RcL8Gn

Aashiq Ahamed said...

சகோதரர் ஷர்புதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----
மத ரீதியான ஒரு விவாதத்திற்குரிய இன்றைய அடியேனின் பதிவை பார்வை இட அழைக்கிறேன்
------

பார்த்தேன் ஷர்புதீன். தாங்கள் சீரியசாக எழுத ஆரம்பித்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

தாங்கள் கொடுத்துள்ள தலைப்பிற்கு இன்னும் உள்ளே செல்லவில்லை என்று நினைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் தாங்கள் அப்படி நுழையும் போது என்னுடைய கருத்தை சொல்லவேண்டிய தேவை இருந்தால் இன்ஷா அல்லாஹ் வந்து சொல்கின்றேன் சகோதரர்.

தங்களின் வருகைக்கும் அழைப்புக்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் இப்னு ஹலிமா,

வ அலைக்கும் சலாம்,

---
அவர்களின் செயல் திட்டத்தில் உள்ள ஆறு விசயங்களையும் சரியாக பின்பற்றுவார்களேயானால் இஸ்லாம் பற்றிய நல்லதொரு புரிந்துணர்வை ஆஸ்திரேலியர்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.
---

உண்மை.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

இக்பால் செல்வன் said...

@ ஆசிக் அகமது - கோப படாதீர்கள் .. ஒன்றே ஒன்றுக் கேட்கின்றேன் ...

கிருத்தவம் குறித்தோ இந்து மதம் குறித்தோ அல்லது பௌத்தம் குறித்தோ மத்தியக் கிழக்கு நாடுகளில் பிரச்சாரம் செய்ய அனுமதித் தரப்படுமா ????

மற்றவை பற்றி பிறகு பேசுவோம் .. அனுமதித் தருவார்களா? இல்லை எனில் ஏன் தருவதில்லை கூறுங்கள் ...

இக்பால் செல்வன் said...

// தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார். //

எதை எங்கு செய்தாலும் எதிர்ப்பவர் இருக்கத் தான் செய்வார்கள்... ஆஸ்திரேலியாவில் இவ்வமைப்புக்கு கிடைத்த எதிர்ப்பு மிகவும் குறைவானதே என்பதை தாங்கள் தான் பதிவிட்டு இருக்கின்றீர்கள் அல்லவா?

இதே போல வேற்று மதத்தவர் பிரச்சாரம் செய்ய மத்தியக் கிழக்கு உட்பட இஸ்லாமிய சமய நாடுகளில் அனுமதிக் கிடைக்குமா? அப்படி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? சிந்தித்துப் பாருங்கள் .... சகோ....

தம்மைப் போலவே பிறரை எண்ணு என இதனைத் தான் சொன்னார்கள் .... !!!

இக்பால் செல்வன் said...

// உங்கள் பதிவில் ஏதோ விலங்குகளின் படத்தை போட்டிருக்கிண்றீர்கலாமே??? அந்த பதிவிற்கும் அந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா ? //

அந்தப் படத்துக்கும் இஸ்லாமோபோபியாவோ - சகிப்புத் தன்மையற்றத் தனமோ காரணம் இல்லை.. இறைவனின் படைப்பில் எந்த விலங்கும் இழிவும் இல்லை. உயர்வும் இல்லை. அனைத்தும் சமமே... ஒன்றை உயர்த்தியும் மற்றவற்றை தாழ்த்தினால் அவர் இறைவனே அல்ல .... என்பதைக் குறிக்கவே சகோ...

எனது மனதில் வன்மம் இல்லை. நியாயங்களைக் கேட்கின்றேன் ... !!!

எனது கேள்விகள் எல்லாம் இஸ்லாமியர் மதப் பிரச்சாரம் செய்யவும் - கிறித்தவ சமயிகளின் நம்பிக்கைகளை இல்லை எனவும் கூட கூற முடிகின்றது. இதே போலோ அல்லது சிவன் தான் கடவுள், புத்தன் தான் கடவுள் எனவோ பிரச்சாரப் பலகைகள் வைக்கவோ - அமைப்புகள் நடத்தவோ ஏன் இஸ்லாமிய நாடுகள் அனேகம் அனுமதித் தருவதில்லை ...

தந்தால் என்ன ??

இக்பால் செல்வன் said...

இயேசு கடவுளா ? இல்லை இறைத் தூதரா ? மகமது இறைத் தூதரா ? இல்லையா என்பதல்ல விவாதம் .. இஸ்லாமியர்கள் மதப் பிரச்சாரம் செய்ய இஸ்லாமியர் அல்லாத நாடுகள் பலவும் அனுமதி தந்துள்ளன - ஆனால் இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமிய நாடுகளில் தத்தமது மதங்களைப் பிரச்சாரங்கள் செய்ய அனுமதி தராமல் இருப்பது ஏன் ???? தருவதற்கு என்னத் தயக்கம் அல்லது அக்சம் ??? பதில் இருந்தால் கூறுங்கள் ...

இக்பால் செல்வன் said...

இயேசு கடவுளா ? இல்லை இறைத் தூதரா ? மகமது இறைத் தூதரா ? இல்லையா என்பதல்ல விவாதம் .. இஸ்லாமியர்கள் மதப் பிரச்சாரம் செய்ய இஸ்லாமியர் அல்லாத நாடுகள் பலவும் அனுமதி தந்துள்ளன - ஆனால் இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமிய நாடுகளில் தத்தமது மதங்களைப் பிரச்சாரங்கள் செய்ய அனுமதி தராமல் இருப்பது ஏன் ???? தருவதற்கு என்னத் தயக்கம் அல்லது அக்சம் ??? பதில் இருந்தால் கூறுங்கள் ...

இக்பால் செல்வன் said...

The Anglican Bishop of South Sydney, Rob Forsyth, said it was ''complete nonsense'' to say Jesus was a prophet of Islam. ''Jesus was not the prophet of a religion that came into being 600 years later.''

But the billboard was not offensive, he said. ''They've got a perfect right to say it, and I would defend their right to say it [but] … you couldn't run a Christian billboard in Saudi Arabia.''

Read more: http://www.smh.com.au/national/hes-not-the-son-of-god-just-the-support-act-20110527-1f8j2.html#ixzz1O9Pp6JBP

அன்னு said...

அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.ஆஷிக்,

Gainpeace.com அமைப்பு இந்த ப்ராஜெக்ட்டை துவக்கியபோது சிகாகோவில் நாங்கள் வசித்துக் கொண்டிருந்தோம். அல்ஹம்துலில்லாஹ், அப்பொழுதிருந்த எண்ண அலைகளும், எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் அப்பப்பா....சுப்ஹானல்லாஹ் மறக்க முடியாத நிமிடங்கள் அது. நாங்களும் அதில் பங்கு வகித்ததாலும், என் கணவரும் டோல்ஃபிரீ அழைப்பில் பதில் சொல்பவராக இருந்ததாலும் தினசரி வித்தியாசமான அழைப்புகளையும், வித்தியாசமான கோணங்களில் கேள்விகளையும் எதிர்கொண்டது, தாவாவிற்கு மிக மிக ஊக்கமளித்த ஒரு தருணம். எங்களையும் அதிகம் படிக்க, ஆராய வைத்தது எனலாம். மாஷா அல்லாஹ். எனினும் தடைகளை தாண்டி முதல் மாதத்திலேயே, சிகாகோ, ஃப்ளோரிடா மற்றும் இந்தியானா மாநிலங்களை சார்ந்த சகோதர-சகோதரிகள் 40 பேர் இஸ்லாத்தை தழுவியது எங்களுக்கு இன்னும் தெம்பை தந்த விஷயமாகும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா ஆஸ்திரேலியாவிலும் இதே போன்ற வெற்றியை தருவானாக. ஆமீன். யா ரப்பில் ஆலமீன்.

பகிர்வுக்கு நன்றி. :)

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

----------
இஸ்லாமியர்கள் மதப் பிரச்சாரம் செய்ய இஸ்லாமியர் அல்லாத நாடுகள் பலவும் அனுமதி தந்துள்ளன - ஆனால் இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமிய நாடுகளில் தத்தமது மதங்களைப் பிரச்சாரங்கள் செய்ய அனுமதி தராமல் இருப்பது ஏன் ???? தருவதற்கு என்னத் தயக்கம் அல்லது அக்சம் ??? பதில் இருந்தால் கூறுங்கள் ...
-------

ச்சே...ச்சே....இவ்வளவுதான் விசயமா? தாங்கள் இதனை முன்னமே கேட்டிருந்தால் தெளிவாக அனானிக்கு சொன்னது போன்ற பதிலை சொல்லி இருப்பேனே. நம் இருவரது நேரமும் மிச்சமாகி இருக்குமே.

அதை விட்டு விட்டு முஹம்மது (ஸல்), ஏசு (அலை), சகிப்புத்தன்மை என்று எங்கெங்கோ சென்று விட்டீர்களே!!!!

சரி விசயத்துக்கு வருவோம்.

மேலே அனானி கேட்ட கேள்வி

-----
My-piece அப்படிங்கற அமைப்பு இந்து மதத்தப் பத்தி அரபு நாடுகளில் உள்ள மக்களுக்கு விளக்க விரும்புகிறது. அரபு அரசுகளிடம் அனுமதி வேண்டின் நீங்கள் ஆதரிப்பீங்களா?
----

நான் நேரடியாக சொன்ன பதில்

----
ஆதரிப்பேன் சகோதரர்.
----

அவ்வளவுதான். விஷயம் முடிந்தது. உங்களுக்கும் அது போன்ற பதிலை தந்துவிட்டு என் வேலையை பார்க்க சென்றிருப்பேன். தேவை இல்லாமல் இப்படி செய்துவிட்டீர்களே சகோதரர்.

சரி போகட்டும்...

முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடுகள் அப்படி நடந்து கொண்டால் அது தவறு தான் சகோதரர். மக்கா மதினா (வாடிகன் போல) தவிர்த்து மற்ற நாடுகளில்/பகுதிகளில், மற்ற மத பிரச்சாரங்களை அனுமதிப்பதில் என்ன பிரச்சனை என்று விளங்கவில்லை.

நான் கொடுத்த லிங்கில் பார்த்தால் அரபு நாடுகளில் முஸ்லிமல்லாத மக்களின் வழிபாட்டு விபரம் தெரிய வரும். அவர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்றால் அது இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் மாறும்.

என்னால் இஸ்லாம் குறித்து மட்டுமே பேச முடியும் சகோதார். அந்த நாடுகள் ஏன் இப்படி இருக்கின்றன என்பது போன்ற கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளா?. அவர்கள் (அப்படி செய்தால்) இஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்கின்றார்கள் என்பது தான் என்னுடைய பதிலாக இருக்க முடியும்.

நன்றி,

சகோதரர் உங்களுக்கு ஒரு சிறு ஆலோசனை. பேச வேண்டிய விஷயத்தை மட்டும் பேசுங்கள். அதை தவிர்த்து சகிப்புத்தன்மை etc என்று போனீர்கள் என்றால் அது நேர விரயமாகக்கூடிய ஒர் வேலையே.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

@சகோ.இக்பால் செல்வன்,

வழக்கம்போலவே
அரைகுறை...
அரைவேக்காடு...
அவசரகொடுக்கி...

ஒன்றை மட்டுமாவது விளங்கிக்கொள்ளுங்கள்.

நானும் என் மனைவியும் சேர்ந்து என் வீட்டில் இன்றைய லஞ்ச் மட்டன் பிரியாணி என்று முடிவு செய்து இருக்க, என் மகள், 'இல்லை இல்லை மீன் தான் வேண்டும்' என கேட்க மகளுக்கு உரிமை உள்ளது. ஆனால், ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் எவனோ ஒருவன் வந்து, "இல்லை இல்லை இன்னிக்கு உங்கள் வீட்டில் புளிக்கொழம்பும் பாவக்காய் கூட்டும் தான் இன்னிக்கு வெச்சு நீங்க சாப்பிடனும்" என்று சொல்ல உரிமை இருக்கிறதா...? கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

"அப்படி கொடுப்பது கட்டாயம் இல்லை. அவசியம் இல்லை." என்று சில நாடுகள் (சவூதி,வாடிகன்,இஸ்ரேல்...) கருதுகின்றன.

ஏனெனில், இங்கே ரோட்டில் போபவன் எவனும் இல்லை. எல்லாருமே வீட்டில் இருப்போர்தான்.


ஆஸ்திரேலியாவில் பிரச்சாரம் செய்வது ரோட்டில் போகும் கண்டவனா? அல்லது அந்த வீ(நா)ட்டின் குடிமகனா..?

அதேநேரம்...

கத்தார், ஓமான், அமீரகம் இங்கெல்லாம் அங்கே நம் நாட்டில் இருந்து சம்பாரிக்கப்போன ஹிந்துக்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி பூஜைகள் செய்து சாமி கும்பிட்டு வருகிறார்கள். இவர்கள் அந்நாட்டின் சிட்டிசன்கள் அல்லர். (அதாவது ரோட்டில் போபவர்கள் தனியாக சமைத்துக்கொள்கிறார்கள்... ...அடுத்தவர் வீட்டில் அல்ல.)

அமெரிக்காவும் உங்கள் கனடாவிலும் கூட அங்கே சிட்டிசன் ஆகிவிட்ட பின்னர்தான் கிருஸ்துவர்கள் அல்லாத மற்ற மதத்வர்களால் இதே செயல்கள் செய்யப்படுகின்றன என்று படித்திருக்கிறேன்.

தயவு செய்து விஷயங்களை நுணுக்கமாக சிந்தித்து பின்னர் விவாதம் புரியுங்கள்.

சவூதி--பெண்கள் கார் ஓட்டும் பதிவுக்கும் பன்றிகளுக்கும் இருக்கும் பெர்ஃபெக்ட் கனெக்ஷனில் பாதிகூட... உங்களுக்கும் உங்கள் பின்னூட்டங்களுக்கும் இடையே இல்லையே சகோ.இக்பால் செல்வன்...?!

இக்பால் செல்வன் said...

@ ஆஷிக் அகமது - தங்கள் பொறுமையான பதிலுக்கும், கருத்துக்கும் நன்றிகள் சகோ.

இஸ்லாமிய அமைப்புகள் ஆஸ்திரேலியா மட்டுமல்ல பல நாடுகளிலும் பிரச்சாரங்களும், விளக்கங்களும் கொடுக்க வேண்டும் - ஏனெனில் அப்போது தான் புரிந்துணர்வும் பகைமையும் மறையும்.

அதே போல பாகிஸ்தான் முதல் மொரோக்கோ வரையிலும் இஸ்லாமியர் அல்லாதோரும் தத்தமது மதங்களை இஸ்லாமியர் வாழும் நாடுகளில் பின்பற்றவும் .. பிரச்சாரம் செய்யவும், விளக்கங்கள் கொடுக்கவும் அனுமதித் தரவேண்டும் .... !!!

உங்களைப் போலவே பலரும் புரிந்துக் கொண்டால் சமாதானம் என்பது நிச்சயம்.

இஸ்லாத்தின் ஒரு சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடில்லை தான் .. ஆனால் பலநேரங்களில் இஸ்லாமிய கலாச்சார ஆதிக்க சக்திகள் குர்-ஆனின் உண்மை விளக்கங்களை மறைத்தும் - இல்லாதவைகளை எல்லாம் சட்டமாக்கி தமது ஆதிக்கங்களை நிலை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனைத் தான் நான் கண்டிக்கின்றேன் ... !!!? உங்களைப் போன்றோரிடம் முதலில் கேட்பது நம்மவர்கள் எப்படி பதில் தருகின்றார்கள் என்பதை அறியவே ..

இங்கேப் பாருங்கள் சுவனப் பிரியன் ஒன்றைச் சொல்லிவிட்டு அவற்றை நியாயப்படுத்த எங்கோ சென்றுவிட்டார் - அடுத்தது கீழே முகம்மது ஆசிக் பொறிந்து தள்ளிக் கொண்டிருக்கின்றார்.

அனைவருக்கும் அமைதியான மனநிலையயும், புதிய உலகில் பயணிக்கவும் - பன்முகத் தன்மையாக அனைவரும் வாழவும் வழிகோல முயலவேண்டும் ...

இங்கு பிரச்சனை இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாத்தை பிரதிநிதித்துவம் செய்வோரில் தான் உள்ளது என்பதே எனதுக் கருத்து ...

அரபு நாடுகளின் - இஸ்லாமிய நாடுகளின் போக்குகள் மாறவேண்டியவை.. அவற்றை இங்குள்ள எமது இஸ்லாமிய தோழர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது அவா?

யார் மீதும் எனக்கு கோபமோ? குரோதமோ ? ISLAMOPHOPIA-வும் கிடையாது ?

காரணம் இந்த உலகம் இஸ்லாமியருக்கும் - இஸ்லாமியர் அல்லாதோருக்கும் உரியது. ஒருவர் மற்றவரை நிராகரித்தோ - களவாடிக் கொள்ளவோ இயலாது என்பதை உணரவேண்டும்.

நம்பினால் நம்பலாம் ........... !!!

இக்பால் செல்வன் said...

@ முகம்மது ஆசிக் - பொறுமை பொறுமை .. எனது கேள்விகளை தாங்கள் புரிந்துக் கொள்ளவே இல்லை ..

ஒரு இஸ்லாமியர் அல்லாதோர் மத்தியக் கிழக்கில் 30 வருடம் வாழ்கிறார் -அவருக்கு அங்கே குடியுரிமைக் கொடுத்தது உண்டா ?

அப்படிக் கொடுத்தால் அவன் ரோட்டில் போகின்றவன் ஆக மாட்டான் வீட்டில் ஒருவன் ஆவான்.

வீட்டில் ஒருவன் ஆனப் பின்னர் அவன் அவனது பாடுகளைப் பார்க்க அனுமதிப்பீர்களா ?

நீங்கள் அமெரிக்காவிலோ, கனடாவிலோ மூன்றாண்டு வசித்தால் நீங்கள் வீட்டுக் காரன் ஆகலாம்.

அத்தோடு இல்லாமல் நீங்கள் இங்கு குடியுரிமை வாங்கினால் தான் இங்கு மதப் பிரச்சாரத்திலோ, மத அமைப்புகளிலோ, சாமிக் கும்பிடவோ அனுமதிப்பார்கள் என்றில்லை. இங்கே எப்படி நீங்கள் வந்திருந்தாலும் உங்களுக்கான அனைத்து உரிமைகளும் கொடுக்கப்படுகின்றன .... !!!

நீங்கள் இங்கு வந்து இறங்கிய அடுத்த நொடியே பள்ளிகளில் தொழத் தடை இல்லை .. அமைதி வழி என எந்த அமைப்பையும் தொடங்கவும், பிரச்சாரம் செய்யவும் தடை இல்லை ... !!!

இதே அனுமதியை இஸ்லாமிய நாடுகள் அனுமதிக்காமல் இருப்பது ஏன் ???

மெக்கா நகரை விடுங்கள் ( புனிதம் கருதி ) - ரியாத்தில் நான் ஒரு மதப் பிரச்சார போர்டு வைக்க அனுமதி வாங்கித் தருவீர்களா?

என்னை விடுங்க - ரோட்டில் போறவன் நான் .. எனது மாமா 35 ஆண்டுகள் அங்கு வசித்து வருகின்றார் .. அவருக்கு குடியுரிமையும், ஒரு மத பிரச்சார அமைப்புக்கான அனுமதியும், ஒரு பில் போர்டும் வைக்க அனுமதி வாங்கித் தரமுடியுமா ?

நான் அரைவேற்காடாகவே, அல்லது அவசரக் கொடுக்கியாகவே இருந்துவிட்டுப் போகின்றேன் .. !!!

புரிந்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன் . சகோ. ஆசிக் அகமது புரிந்துக் கொண்டார் .. புரியவில்லை என்றால் அவரைக் கேட்டுப் பதில் எழுதுங்கள் சகோ.

இக்பால் செல்வன் said...

@ ஆசிக் அகமது - சகிப்புத்தன்மை குர்-ஆனில் இருக்கு ஆனால் பல இஸ்லாமிய நாடுகளிலும், சில இஸ்லாமியர்களிடம் இல்லாமல் போய்விட்டது என்பது ஆணித்தரமான உண்மை ... !!! மறுக்க முடியாத செய்தி தானே சகோ .... !!!

இக்பால் செல்வன் said...

@ ஆசிக் அகமது - முஸ்லிமல்லாத மக்களின் வழிபாட்டு விபரம் தெரிய வரும். அவர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்றால் அது இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் மாறும். //

அந்த மாற்றம் வேண்டிய குரல்கள் எழுப்புகின்றோம் ... அந்த மாற்றத்துக்கு நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என எமது தமிழ் சகோதர முஸ்லிம்களிடம் கேள்வி கேட்பது தவறா ?

ஆம் சரி தான்.

இல்லை மாற்றம் கூடாது என இரண்டில் ஒன்றை சொன்னால் விசயம் முடியுது.

கூடாது என்றால் ஏன் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை.

கூடாது குர்-ஆன் தடை செய்கின்றது என்றோ ? இல்லை அரபிகள் விரும்புவதில்லை என்றோ சொல்லிவிட்டால் அடுத்தடுத்து நகர்ந்து போய்க் கொண்டே இருப்போம் ... !!! புரிதலும் வரும் அல்லவா?

Aashiq Ahamed said...

சகோதரர் தமிழன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-------
இதெலாம் சும்மா, அது எல்லாம் கோபுரம் இல்லா ஒரு கட்டிடம். அவ்வளவுதான் கோவில் இல்லை.
----------

வார்த்தைகளாக பேசாமல் ஆதாரங்களோடு நிரூபியுங்கள் சகோதரர்.

-----
இங்கெ கேள்வியே, அனைத்து முஸ்லிம் நாட்டிலும் இருக்கும் இந்த கெடுபுடி இஸ்லாமினால் வந்தது தானே அன்றி வேற ஒன்றும் இல்லை.
------

தவறான புரிதல்.

அப்புறம் ஒரு முக்கிய விசயம், உங்கள் பின்னூட்டங்களை என்னால் வெளியிட முடியாது. உங்கள் தளம் எவ்விதமான அருவருப்பான,ஆபாசமான ஒன்று என்பதால் நான் வெளியிடுவது மூலமாக கூட யாரும் உங்களை அடைந்து விடக்கூடாது என்ற எண்ணமே காரணம்.

தாங்கள் உங்கள் தளத்தில் உள்ள அத்தகைய ஆபாசமான விஷயங்களை நீக்கிவிட்டு, ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை வைப்பீர்கலேயானால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிடுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----
அந்தப் படத்துக்கும் இஸ்லாமோபோபியாவோ - சகிப்புத் தன்மையற்றத் தனமோ காரணம் இல்லை.. இறைவனின் படைப்பில் எந்த விலங்கும் இழிவும் இல்லை. உயர்வும் இல்லை. அனைத்தும் சமமே... ஒன்றை உயர்த்தியும் மற்றவற்றை தாழ்த்தினால் அவர் இறைவனே அல்ல .... என்பதைக் குறிக்கவே சகோ...
-------

அருமை சகோதரர்...அருமை. மிகச் சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள் சகோதரர்.

ஆனால் எதற்காக அந்த படங்கள் அந்த பதிவிற்கு? பதிவிற்கும் அந்த படத்திற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்???

பதிவு ஒரு திசையில் இருக்கின்றது நீங்கள் போட்ட படத்திற்கான விளக்கம் வேறொரு திசையில் இருக்கின்றதே??

எனக்கு தெரிந்து பதிவிற்கு சம்பந்தமாகத்தான் ஒருவர் படம் போடுவார். அப்படித்தான் நான் இதுவரை பார்த்திருக்கின்றேன்.

இப்படி பதிவிற்கும், பதிவில் உள்ளவற்றிற்கும் சம்பந்தமே இல்லாமல் படம் இருந்தால் படிப்பவர்கள் குழம்பி அல்லவா போய் இருப்பார்கள்?

பதிவிற்கு சம்பந்தமில்லாத அந்த படத்தை எடுத்து விட்டு பதிவிற்கு சம்பந்தம் உள்ள படத்தை போடவீர்களா???

ஒரு வாசகம் என்ற முறையில் சிறிய விண்ணப்பம் இது...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒன்றை விட்டு விட்டேன்...
----
அந்தப் படத்துக்கும் இஸ்லாமோபோபியாவோ - சகிப்புத் தன்மையற்றத் தனமோ காரணம் இல்லை.. இறைவனின் படைப்பில் எந்த விலங்கும் இழிவும் இல்லை. உயர்வும் இல்லை. அனைத்தும் சமமே... ஒன்றை உயர்த்தியும் மற்றவற்றை தாழ்த்தினால் அவர் இறைவனே அல்ல .... என்பதைக் குறிக்கவே சகோ...
-----

நீங்கள் சரியாக, அருமையாக [:)] சொல்லி இருக்கக்கூடிய இந்த கருத்தில் எனக்கு சில கேள்விகள் உண்டு. இன்ஷா அல்லாஹ். அது பேச்சை திசை திருப்பலாம் என்று எண்ணுவதால் பிறிதொரு சமயத்தில்....

இப்போதைக்கு நான் மேலே கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் இருந்தால், அதை எழுதவதற்கு நேரமிருந்தால் சொல்லவும். இன்ஷா அல்லாஹ்

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

@சகோஸ்.இக்பால் செல்வன்ஸ்...

நான் கத்தார், ஓமான், எமிரேட் பற்றி சொன்னபோதும்... "இஸ்லாமிய நாடுகள்" என்ற பன்மை அடைமொழி சவூதி அரேபியா என்ற ஒருமைக்கு மட்டும்தானா..!

---அநியாயம்..! அக்கிரமம்..!

'ரோட்டில் போபவனுக்கு' எல்லாம் சவூதியில் குடியுரிமை தரச்சொல்வதற்கு முன்னர் அவனுக்கு வாடிகனில் குடியுரிமை தரச்சொல்லி கனடாவில் நீங்கள் ஒரு போராட்டத்தை துவக்கலாமே சகோ...!? அதைப்பற்றி ஒரு பதிவாவது போட்டு விட்டு வாருங்கள்.. பேசுவோம்..!

எந்த ஒரு மாற்று மதத்தவரின் உயிருக்கும் துன்புறுத்தல்கள் தராமல் மாறாக வசதிகளும் உயர்வான சம்பளமும் தந்து பலர் முதுமை அடைந்தாலும் அறுபது வயதுக்கு மேலும் கூட பணியில் அமர்த்தி சந்தோஷப்படுத்தும் சவூதியை எதிர்ப்பதற்கு முன்னர் இஸ்ரேலிய அரசிடம் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத படுகொலையை தடுக்க என்றாவது முறையிட்டீர்களா..? போராட்டம் நடத்திணீர்களா..?

அவசர கொடுக்கியில் இதுபற்றி ஒரு பதிவாவது போட்டீர்களா..?

அப்புறம் வந்து பின்னூட்டம் இடுங்கள்..!

பதில் சொல்கிறேன்..! முதலில் கேள்வி கேட்கும் தகுதியை உருவாக்கிக்கொள்ளுங்கள்.. சகோ..!

Aashiq Ahamed said...

சகோதரி அன்னு,

வ அலைக்கும் ஸலாம்,

---------
எனினும் தடைகளை தாண்டி முதல் மாதத்திலேயே, சிகாகோ, ஃப்ளோரிடா மற்றும் இந்தியானா மாநிலங்களை சார்ந்த சகோதர-சகோதரிகள் 40 பேர் இஸ்லாத்தை தழுவியது எங்களுக்கு இன்னும் தெம்பை தந்த விஷயமாகும்.
---------

அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

NAGORE FLASH said...

அஸ்ஸலாமு அழைக்கும்... இன்ஷாஅல்லாஹ் australia peace குழுவிற்கு அழைப்புப்பணியில் அல்லாஹ் உதவிப்புரிவானாக !

எதிர்ப்பில் தான் இஸ்லாத்தின் வளர்ச்சியே இருக்கிறது...

அருமையான பதிவி நன்றி சகோதரே.

Aashiq Ahamed said...

சகோதரர் அப்துல்லாஹ்,

வ அலைக்கும் சலாம்,

---
இன்ஷாஅல்லாஹ் australia peace குழுவிற்கு அழைப்புப்பணியில் அல்லாஹ் உதவிப்புரிவானாக !
---

ஆமீன்.

----
எதிர்ப்பில் தான் இஸ்லாத்தின் வளர்ச்சியே இருக்கிறது...
----

நிதர்சனமான உண்மைகளுள் ஒன்று.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

இக்பால் செல்வன் said...

@ முகம்மது ஆசிக் - தங்கள் பதிலுக்கு நன்றிகள்.

கத்தார், ஓமான், அமீரகத்தில் ஒரு இந்து, கிறித்த, பௌத்த கோயில் கட்டவும் - சும்மா இல்லை கோபுரங்களோடு கட்ட அனுமதி வாங்கித் தர முடியுமா?

சௌதி அரேபியா, இரான், பாகிஸ்தான் இவற்றில் ஒரு நாட்டில் இந்து, கிறித்தவ, பௌத்த சமயங்கள் பிரச்சாரம் செய்ய ஒரு பில்போர்ட் அனுமதி வாங்கித் தர முடியுமா?

வாடிகனில் குடியுரிமைக் கோருகின்றீர்கள் சரி - அவர்களும் உங்கள் சௌதியைப் போன்று தான் ... !!!

கனடாவில், ஆஸ்திரேலியாவில், பிரிட்டனில், என எங்கும் நீங்கள் குடியுரிமை வாங்கிக் கொள்ள தடை இல்லை. எங்களுக்கு கத்தாரிலோ, ஓமானிலோ, குவைத்திலோ, குடியுரிமை வாங்கிக் கொள்ள முடியுமா? முடியும் எனில் அரசு குடியுரிமை விண்ணப்பத் இணையத் தொடுப்பினை எனக்கு அளிக்கவும் - குடியுரிமைக் கொண்டு அங்கேயே வாழ பலர் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றார்கள்.

இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்துக்கக போராடினீர்களா என வினவுகின்றீர்கள் ?

தாங்கள் தென் சூடானியரை சூடான் கொன்றுக் குவித்தப் போது போராடினீர்களா? எனத் திருப்பிக் கேட்கலாம் ... !!!

சௌதியின் உப்பினைத் தின்ற நன்றிக்காக தாங்கள் பேசுகின்றீர் - சரி பிரச்சனை இல்லை. ஆனால் நியாயத்தின் பக்கமாக நின்றுப் பேச வேண்டும் சகோ. தீர்ப்பெழுதும் நாள் என்ற ஒன்றை தாங்கள் நம்புவீர்களானால் நியாயம் எதுவென விரைவில் உணர்வீர்கள் சகோ.

// கேள்வி கேட்கும் தகுதியை உருவாக்கிக்கொள்ளுங்கள் //

அன்புக்கு மிக்க நன்றிகள். இக்கேள்வியின் ஊடாக தங்களின் தகுதியை எமக்கு உணர்த்திவிட்டீர்கள் சகோ. வருகின்றேன். எதாவது சந்தேகங்கள் இருப்பின் எனது தளத்திலோ அல்லது மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள் - விவாதிக்கத் தயார் .... !!!

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

@இக்பால் செல்வன்,
///எதாவது சந்தேகங்கள் இருப்பின் எனது தளத்திலோ அல்லது மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள் - விவாதிக்கத் தயார் .... !!!///
---நன்றி, எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை..!

ஒரே ஒரு விளக்கத்தை தவிர..!

///சௌதியின் உப்பினைத் தின்ற நன்றிக்காக தாங்கள் பேசுகின்றீர்///---இல்லை..!

பாபநாசம்,அதிராம்பட்டினம், தூத்துக்குடி,கல்கத்தா,ஜுபைல்... இங்கெல்லாம் நான் சாப்பிட்ட உப்பு எல்லாமே ஒரே உப்புதான்...

இறைவன் கொடுத்த அருள்..!

என்றும் இறைவனுக்கு மட்டுமே என் நன்றிகள்..!

சவூதியில் தவறுகளை பின்னூட்டங்களிலும் பின்னர் வலைப்பூ ஆரம்பித்து பதிவு எழுதியும் தாளித்து உள்ளேன்..!

எனக்கு என்ன கோபம் என்றால்...

சவூதி ஒரு தப்பை செய்தால் பொத்துக்கொண்டு வரும் ஆத்திரம் அதையே வேறு ஒருவர் செய்தால்... இருக்கும் இடம் தெரிவதில்லையே உங்களிப்போன்றவர்களுக்கு..!?
அது ஏன்..?
இதைத்தான் நான் எதிர்க்கிறேன்..!

இது மிக கொடிது..!

அப்புறம்,

///இக்கேள்வியின் ஊடாக தங்களின் தகுதியை எமக்கு உணர்த்திவிட்டீர்கள் சகோ.///
---பன்றிப்பட பதிவு வியாபாரம்....

அப்புறம் 99% பின்னூட்டக்கருத்தை ஒழித்துவிட்டு இடையில் ஒரு வரியை வைத்து ஒரு பதிவு போட்டு

நயவஞ்சக வியாபாரம் செய்பவர்...

என் தகுதி பற்றி சொல்வது அநியாயமாக இல்லை..?

Ibnu Halima said...

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்களின் கவனத்திற்கு,
இக்பால் செல்வன் கிறிஸ்தவ மிஷனரிகளின் வார்ப்பாக இருக்க தான் அதிக வாய்ப்பு. அவருடைய பின்னூட்டங்களை நுண்ணறிவோடு வாசித்து பார்த்தால் அவருடைய உள்மனதின் ஆசையை அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பாலஸ்தீன் பிரச்சனையை பற்றி அவர் ஒரு தளத்தில் இட்ட பின்னூட்டம் "முன்னர் தம்பி அண்ணனை விரட்டினானம். இப்போது அண்ணனின் பிள்ளைகள் தம்பியின் பிள்ளைகளை விரட்டுகிறார்களாம்." இந்த அளவிற்கு தான் அவருடைய அறிவு இருக்கிறது. எனவே அவர் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க தேவையில்லை என்பது என் கருத்து.

இக்பால் செல்வன் said...

// சவூதி ஒரு தப்பை செய்தால் பொத்துக்கொண்டு வரும் ஆத்திரம் அதையே வேறு ஒருவர் செய்தால்... இருக்கும் இடம் தெரிவதில்லையே //

முகம்மது ஆசிக் - வேறு ஒருவர் செய்த தவறானாலும் கேட்கப்படவேண்டியவையே ... சௌதியைப் பற்றி ஒரே ஒரு பதிவு தான் போட்டேன். அதுக்குள்ளேயே பொங்கி எழுந்துவிட்டீர்களே .. நான் கேட்டதில் எங்கேயேயாவது தப்பு இருக்கா ?

நயவஞ்சக வியாபாராமா? ஹிஹி

வியாபாரம் செஞ்சு நான் என்ன லட்சக் கணக்காவா சம்பாதிக்கிறேன் .. போங்க பாஸ் .. காமெடி பண்ணாதீங்க ...

தப்புனு மனசுல பட்டுச்சு சந்தேகங்களை உள்வாங்கி எழுதினேன் ... !!!

இக்பால் செல்வன் said...

@ இப்னு ஹலிமா - கிறிஸ்தவ மிசனரியின் வளர்ப்பா - காமெடி பண்ணாதீங்க சார். உண்மை தான் சில காலம் எல்லோரைப் போலவும் ஒரு கிறித்தவப் பள்ளியில் தான் படித்தேன். அவ்வளவு தான். நான் படித்தக் கல்லூரி எல்லாம் இஸ்லாமிய கல்வி நிறுவனம் ஆகும் ...

இங்கு யாரும் என்னை வளர்க்க வேண்டியதில்லை. எனக்குத் தோன்றியதை எழுதுகின்றேன் ... இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என கும்மி எழுதிய போது எனக்கு அது சரியாகப் படவில்லை அதனால் அவற்றை கடுமையாக விமர்சித்து இருந்தேன் ... அதெல்லாம் உங்கக் கண்ணுக்குப் படாது பாஸ் ...

அதே போல பாலஸ்தீன பிரச்சனையில் யூதர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதே எனது முடிவு. அதில் மாற்றுக் கருத்து இல்லை . இன்று அந்த யூதர்கள் அரபிகளி விரட்டுகின்றார்கள் ... !!! நிச்சயம் இரண்டுமே தவறான அணுகுமுறையே. பாலஸ்தீன தனிநாடு அமைந்து அமைதியாக அனைவரும் வாழவேண்டும் அது தான் எனது நிலைப்பாடு.

இரான் சொல்வது போல இஸ்ரேலே அழிக்க வேண்டும், உதைக்க வேண்டும் என சொல்வது எல்லாம் சுத்த முட்டாள் தனப் பேச்சுக்கள் ... !!! என்பதையும் பதிவு செய்கின்றேன் ...

சும்மா நீங்களே என்னைப் பற்றி ஆய்வு செய்து பின்னூட்டம் எழுதாதீர்கள். சந்தேகம் இருந்தால் நேரிடையாக என்னிடமே கேளுங்கள்... பதில் சொல்ல தயங்க மாட்டேன் சகோதரர்.

Ibnu Halima said...

@இக்பால் செல்வன்
// பாலஸ்தீன பிரச்சனையில் யூதர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதே எனது முடிவு// உங்களது முடிவுக்கு ஆதாரம் என்னவோ? அதை கொஞ்சம் இங்கு தருகிறீர்களா? யூதர்கள் யாரால் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதை கொஞ்சம் வரலாற்று (புராணத்தை அடித்து விடாதீர்கள்) ஆதாரத்தை கொடுங்கள் இக்பால் செல்வன்.
அதற்கு பிறகு சொல்கிறேன் நீங்கள் எப்படி கிறிஸ்தவ வார்ப்பு என்று.

Ibnu Halima said...

இக்பால் செல்வன் வீட்டில் யாராவது ஒரு ரவுடி குடும்பத்துடன் வந்து வம்படியாக ஒரு மாதம் தங்கி விட்டு, பின்னர் தங்கியவர் கொஞ்சம் வலிமையானவராக இருந்து விட்டால் அவருக்கு வீட்டின் பெரும்பகுதியை கொடுத்து விட சொல்வாரா இக்பால் செல்வன்?

ஷர்புதீன் said...

சலாம்! இன்றைய எனது
இஸ்லாமிய - வாதிகளிடம் எனது கேள்விகள்
என்ற பதிவினை படிக்க அழைக்கிறேன் - நன்றி

Ibnu Halima said...
This comment has been removed by a blog administrator.
ஷர்புதீன் said...

என்னை மிக சரியாக புரிந்து வைத்திருக்கும் ஹலிமாவின் மகனை உளமார பாராட்டுகிறேன்,

காரணம் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைப்பதால் நான் திருந்தி விட போவதாக நினைக்கவில்லை, ஒரு விவாதம்தான்., அதோடு கடவுள் சம்பந்தப்பட்ட எனது வருகின்ற இடுக்கைக்கு மட்டும் நீங்களோ அல்லது வினவு போன்றவர்களோ பதில் சொல்லிவிடுங்கள், அதன் பின் ப்ளாக்கில் "இஸ்லாமியர்களிடம் எனது மன்னிப்பு" என்ற ஒரு இடுக்கையை போட்டுவிட்டு ஓடி போய்விடுகிறேன் !

உண்மையாகவே நான் எட்டு புள்ளி கோல புக்கு மனவாதிதான் ! என்னோடு பதினைந்து வருடம் நெருங்கி பழகிய மூன்று பேர் இஸ்லாமியர்கள் இங்கே இருக்கிறார்கள் ,அவர்களிடம் வேண்டுமானால் பேசி பாருங்கள். எண் வேண்டுமா?

Ibnu Halima said...

என்ன சொன்னாலும் சரி ஷர்புதீன் எழுப்பியிருக்கும் விவாதத்திற்கு எனது பதிலில் எந்த மாற்றமும் இல்லை.
:) :) :) :) :)
//இந்த கேள்விகளுக்கு பதில் கிடைப்பதால் நான் திருந்தி விட போவதாக நினைக்கவில்லை, ஒரு விவாதம்தான்.// விவாதம் என்பதே சரியான ஒன்றை தெரிந்தவுடன் குறைந்தபட்சம் மாறவாவது முயற்சி செய்வேன் என்பதற்கு தான். ஆனால் பதில் தெரிந்தாலும் மாற போவதில்லை என்று உறுதியுடன் இருக்கிறார் ஷர்புதீன். பின்னே எதற்கு விவாதம்??? டைம் பாஸுக்கா?

அப்புறம் "பகிரங்க மன்னிப்பு" என்பதெல்லாம் மனமாற்றம் ஏற்பட்டவர்கள் கேட்க வேண்டியது. மாறவே மாட்டேன் என்று சொல்கின்ற நீங்கள் கேட்க வேண்டிய அவசியமென்ன? ஆமா எட்டு புள்ளி கோல மாவு புத்தகம் எங்கு விற்கும்? சொல்லவேயில்லை இன்னும் நீங்கள்?

Ibnu Halima said...

இக்பால் செல்வன் ஒரு கிறிஸ்தவ புராடக்ட் என்பதற்கு அவர் இன்றைக்கு போட்டிருக்கும் பதிவே சாட்சி. பாவம் சுய புத்தியில்லாமல் கிறிஸ்தவ மிஷனரிகள் சொல்வதை வாந்தி எடுக்கிறார். அவை உண்மையாக இருப்பின் தாரளமாக வரவேற்கலாம். ஆனால் எதையும் படித்து புரியாத இக்பால் செல்வன் அந்த பதிவு குறித்து இங்கே விவாதிக்க தயாரா? (அவருடைய தளத்திற்கு என்னை கூப்பிடலாம். ஆனால் என்னை பொறுத்தவரை அங்கே சென்று விவாதிப்பதில் விருப்பமில்லை) எனவே பொதுவான இந்த தளத்தில் நின்று விவாதிக்கலாம். இக்பால் செல்வன் தயாரா?

Aashiq Ahamed said...

சகோதரர்கள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலுவலக வேலைகள் அதிகமிருந்ததால் இந்த பக்கம் வரமுடியவில்லை. கமெண்ட்களை அனுமதித்த சகோதரர் பாசித்துக்கு நன்றி...

@சகோதரர் இப்னு ஹலிமா, சகோதார் ஷர்புதீன் அவ்வாறு நடந்து கொண்டால் நீங்களும் நடந்து கொள்வீர்களா?. பொறுமை உடையவர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்பது உங்களுக்கு தெரியாதா? உங்களுடைய கமெண்ட் எனக்கு வேதனை தருகின்றது. அதனால் அதனை நீக்குகின்றேன். மன்னிக்கவும்..

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் உங்களிடம் கேட்ட கேள்விக்காக வெயிட் செய்து கொண்டிருக்கின்றேன். ப்ளீஸ் வந்து பதில் சொல்லுங்கள்.

------
எதற்காக அந்த படங்கள் அந்த பதிவிற்கு? பதிவிற்கும் அந்த படத்திற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்???

பதிவு ஒரு திசையில் இருக்கின்றது நீங்கள் போட்ட படத்திற்கான விளக்கம் வேறொரு திசையில் இருக்கின்றதே??

எனக்கு தெரிந்து பதிவிற்கு சம்பந்தமாகத்தான் ஒருவர் படம் போடுவார். அப்படித்தான் நான் இதுவரை பார்த்திருக்கின்றேன்.

இப்படி பதிவிற்கும், பதிவில் உள்ளவற்றிற்கும் சம்பந்தமே இல்லாமல் படம் இருந்தால் படிப்பவர்கள் குழம்பி அல்லவா போய் இருப்பார்கள்?

பதிவிற்கு சம்பந்தமில்லாத அந்த படத்தை எடுத்து விட்டு பதிவிற்கு சம்பந்தம் உள்ள படத்தை போடவீர்களா???
-------

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Anonymous said...

ஆஸ்திரேலியர்கள் இன்னும் இதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார்கள் என்றால் பல விதங்களில் அவர்கள் நஷ்ட பட நேரிடும், இந்த புரட்டு கோஷங்களை முழு வீச்சில் அவர்கள் எதிர்ப்பது தான் அவர்கள் நாட்டின் எதிர் காலத்துக்கு நல்லது. இல்லை என்றால் பிற காலத்தில், சொந்த நாட்டிலேயே அவர்கள் பயந்து பயந்து வாழும் நிலை தான்ஏற்படும்,

இக்பால் செல்வன் said...

@ இப்னு ஹாலிமா - அப்படியா சகோ. கிறித்தவ வாந்திய.. ஹிஹி .. அப்புறம் வேறென்ன .. எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.. நம்மலையும் ஒரு ஆளாக நினைத்து ஒருவர் வினைக் கெட்டு ஆராய்ந்து தவறாகப் பரப்புரை செய்கின்றார் எனில் .. எனது முக்கியத்துவத்தை என்னால் உணரமுடிகின்றது..


மற்றப்படி கிறித்தவத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மிசனரிகளோடு தொடர்பும் இல்லை. ஓரிரு முறை சில உலிமாக்களோடும், சில பாதிரிகளோடும் நேரில் பேசியது உண்டு அவ்வளவே ...

மற்றப்படி என்னைக் குறித்த ஆய்வுகளை தாங்கள் தொடரலாம்.. என்னை ஒரு யூதன் என்றுக் கூட சொன்னாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.. ஹிஹி .. செம காமெடி பாஸ் நீங்க.. ஐ லைக் யு ...

இக்பால் செல்வன் said...

@ ஆசிக் அகமது - ஏன் அந்தப் படம் தங்களை நெருடுகின்றது ?

நான் ஒரு பன்றியையோ, அல்லது பன்றிக் கூட்டத்தையோ, அல்லது கருப்புப் பன்றியையோ போட்டிருந்தால் தங்களவர்களின் கோபம் நியாயமானது.. அது இழிவுக் குறியாகக் கருதலாம் ..

நான் போட்டது மூன்றுப் அழகான பன்றிக் குட்டிகள், வெள்ளைப் பன்றிகள் ..

மூன்றுப் பன்றிக் குட்டிகளின் கதையின் நியாபகத்தால் அவற்றைப் போட்டேன்.. என்னக் கதை என்பதை கார்ட்டூன் சானல் பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள்.. அத்தோடு நிற்க...

பன்றிகள் நற்பயனின் குறியீடு, மூன்றுப் பன்றிகள் புத்திசாலித்தனத்தின் - ஒற்றுமையின் கதை வடிவம்.. மற்றப்படி வேறொன்றுமில்லை..

மண்வீடு நீருக்கு இரையாகும், ஓலை வீடு காற்றுக்கு இரையாகும், கல்வீடு ஒன்றே நிலையானது - கல்வீடு என்பது நிரந்தரத் தன்மையையும், அதனைக் கட்டிய பன்றிக் குட்டியின் அறிவின் செழுமையையும் குறிக்கும் என்பதற்காகத் தான்..

பன்றி, நாய், கழுதை எல்லாம் எம்மைப் போன்ற அற்ப மனிதருக்குத் தான் இழிவோ ஒழிய.. இறைவன் என்ற ஒருவனுக்கு அவை அனைத்தும் ஒன்றே தான்.. உயர்வும் அல்ல, தாழ்வும் அல்ல ...

நிச்சயம் இதனை பலரின் மனதினை ரணப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் சகோ.. நெஞ்சில் வேறொரு விதர்வமும் இல்லை ..

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

---
ஏன் அந்தப் படம் தங்களை நெருடுகின்றது?
---

ஹா ஹா ஹா....இஸ்லாமிய அழைப்பு பணியில் இருக்கும் நாங்கள் இதனையெல்லாம் சட்டை கூட செய்ய மாட்டோம் சகோதரர்.

நான் அந்த கேள்வியை கேட்பதற்கு மனதை நெருடினால் தான் என்று இல்லை. பதிவிற்கு சம்பந்தமில்லாமல் இருந்ததால் கேட்டேன் அவ்வளவே.

இன்னும் என்னுடைய கேள்வி அப்படியே இருக்கின்றது. பதிலை காணோம்.

பதில் சொல்ல வந்த தாங்கள் என்னென்னவோ சொல்லிவிட்டு நான் கேட்டதற்கு பதில் சொல்லாமலே போய் விட்டீர்கள்.

கார்டூன் சேனல் எல்லாம் நான் பார்ப்பதில்லை சகோதரர். நீங்கள் தான் படம் போட்டீர்கள். நீங்கள் தான், "கார்டூன் சேனலில் இப்படி இருக்கின்றது. அதற்கான விளக்கம் இது. இதனால் இந்த பதிவுடன் இது சம்பந்தபடுகின்றது" என்று விளக்க வேண்டும்.

-----
நான் ஒரு பன்றியையோ, அல்லது பன்றிக் கூட்டத்தையோ, அல்லது கருப்புப் பன்றியையோ போட்டிருந்தால் தங்களவர்களின் கோபம் நியாயமானது.. அது இழிவுக் குறியாகக் கருதலாம் ..

நான் போட்டது மூன்றுப் அழகான பன்றிக் குட்டிகள், வெள்ளைப் பன்றிகள் ..

பன்றிகள் நற்பயனின் குறியீடு, மூன்றுப் பன்றிகள் புத்திசாலித்தனத்தின் - ஒற்றுமையின் கதை வடிவம்.. மற்றப்படி வேறொன்றுமில்லை..

மண்வீடு நீருக்கு இரையாகும், ஓலை வீடு காற்றுக்கு இரையாகும், கல்வீடு ஒன்றே நிலையானது - கல்வீடு என்பது நிரந்தரத் தன்மையையும், அதனைக் கட்டிய பன்றிக் குட்டியின் அறிவின் செழுமையையும் குறிக்கும் என்பதற்காகத் தான்..

பன்றி, நாய், கழுதை எல்லாம் எம்மைப் போன்ற அற்ப மனிதருக்குத் தான் இழிவோ ஒழிய.. இறைவன் என்ற ஒருவனுக்கு அவை அனைத்தும் ஒன்றே தான்.. உயர்வும் அல்ல, தாழ்வும் அல்ல ...
--------

நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?? எதற்காக இப்படி சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிண்றீர்கள்.

அதனால் என்னுடைய கேள்வி அப்படியே நிற்கின்றது. தாங்கள் உண்மையாலராய் இருக்கும்பட்சத்தில் உங்கள் பதிவிற்கும் அந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுங்கள்.

-----
நிச்சயம் இதனை பலரின் மனதினை ரணப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் சகோ.
-----

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

ஓவர் கற்பனை நல்லது இல்லை சகோதரர்..ஹி ஹி ஹி

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

இக்பால் செல்வன் said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி உங்களுக்கும் நல்ல நகைச்சுவை ...

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

---
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி உங்களுக்கும் நல்ல நகைச்சுவை ...
---

நன்றி சகோதரர். எல்லாப் புகழும் இறைவனிற்கே.

அப்புறம் இன்னும் பதில் வரவில்லை. வெயிடிங். பதில் சொல்ல முடியாததால தான் பதிவா எழுதி உங்க மனதை சாந்தப்படுத்தி கொள்கிண்றீர்களோ?

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

***வாஞ்ஜூர் போஸ்ட்*** said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


>>>
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? IN “நிலமெல்லாம் ரத்தம்" BY திரு. பா.ராகவன்.,கிழக்கு பதிப்பகம்,16/37, Karpagambal Nagaர்,Mylapore,Chennai 600 004
<<<


..

வாஞ்ஜுர் said...

"ஏசு(அலை) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை காட்டிலும் அற்புதங்கள் நிகழ்த்துபவராக இருந்தார்கள் என்ற‌ கருத்தை உள்ளடக்கிய இக்பால் செல்வனின் பதிவில்

// “ சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

>>>
சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. – இஸ்லாம் வாள்முனையில் பரவியதா? IN “நிலமெல்லாம் ரத்தம்" BY திரு. பா.ராகவன்.,கிழக்கு பதிப்பகம்,16/37, Karpagambal Nagaர்,Mylapore,Chennai 600 004
<<<
“ //

என்ற எனது பின்னூட்டத்தை இக்பால் செல்வன் ஜீரணிக்கமுடியாமல் நீக்கி இவ்வாறு பதில‌ளிக்கிறார்.

//இக்பால் செல்வன் said...
@ வஞ்சூர் - பதிவுக்கு சம்பந்தப்படாத தொடுப்புகளும், விளம்பரங்களும் நீக்கப்படுகின்றன.. மன்னிக்கவும்.
June 5, 2011 10:44 PM //

புரிந்திருக்குமே

வாஞ்ஜுர் said...

யூதர்களை விரட்டி விரட்டி கொன்று குவித்தது கிறிஸ்துவர்களே.
---------------------

Saturday, June 04, 2011
//இக்பால் செல்வன் said...

......யூதர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதே எனது முடிவு. அதில் மாற்றுக் கருத்து இல்லை . இன்று அந்த யூதர்கள் அரபிகளி விரட்டுகின்றார்கள் ... !!! .//

இக்பால் செல்வனின் மேற்கண்ட கருத்து ஏதோ முன்னாட்களில் அரபிகளால் யூதர்கள் விரட்டப்பட்டது போன்று தோற்றமளிக்க முயலும் முயற்ச்சியாக பிரதிபலிக்கிறது.
-----------------------
முஹம்மது நபி (ஸல்) யூதர்களிடம் நல்லுறவு பேணியும் யூதர்கள் எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகளுடன் நம்பிக்கை துரோகம் செய்தார்கள்,

கிறிஸ்துவர்களால் விரட்டபட்ட யூதர்களை இஸ்லாமியார்கள் எவ்வாறெல்லாம் ஆதரித்தார்கள்.

இஸ்லாமிய ஆட்சிகளில் யூதர்கள் எவ்வாறெல்லாம் சுதந்திரத்துடன் வாழ்ந்தார்கள்,

அகதிகளாக ஐரோப்பாவில் குடியேறிய யூதர்களை ஐரோப்பா முழுதும் கிறிஸ்துவர்கள் எப்படி வேட்டையாடி கொன்று குவித்தார்கள்.

ஹிட்லர் எப்படி லட்சக்கணக்காண யுதர்களை விஷ வாயு வைத்து கொன்றான்,

ஹமாஸ் ஏன் தோன்றியது.

எப்படியெல்லாம் இன்றுவ‌ரை ப‌ல‌ஸ்தினிய‌ர்க‌ளை
கொத்து கொத்தாக‌ யூதர்க‌ள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்க‌ள்

என்ற‌ விப‌ர‌ங்க‌ளை “குமுதம் ரிப்போர்ட்டர்” ல் வாரம் தோறும் தொடராக‌ வெளியிடப்பட்ட

(இஸ்லாமிய‌ர் அல்லாத ஒருவ‌ர்) திரு பா.ராகவன் “ நிலமெல்லாம் ரத்தம் " என்ற பெயரிட்டு எழுதியிருக்கும் நூலை படித்து தெளிவடையவும்

>> “ நிலமெல்லாம் ரத்தம் " இங்கே << சொடுக்கி படிக்கவும்.

..

வாஞ்ஜூர் said...

மேலே கொடுக்கப்பட்ட சுட்டியின் CODE சரியாக செயல்படவில்லை.

சரியான சுட்டி இதோ

நிலமெல்லாம் ரத்தம் - இங்கே சொடுக்கி படிக்கவும்.


http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html

.

Aashiq Ahamed said...

வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----
என்ற எனது பின்னூட்டத்தை இக்பால் செல்வன் ஜீரணிக்கமுடியாமல் நீக்கி இவ்வாறு பதில‌ளிக்கிறார்.
------

பதிவிற்கு சம்பந்தமில்லாதா???

நீங்கள் சரியான பாதையில் செல்கின்றீர்கள் என்று தெரிகின்றது. பழுத்த அனுவபசாலி அல்லவா??? தங்களின் பயணம் தொடர்ந்து சிறப்பாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனின் உதவுவானாக...ஆமீன்.

Aashiq Ahamed said...

@ வாஞ்சூர் அப்பா,

-----
இக்பால் செல்வனின் மேற்கண்ட கருத்து ஏதோ முன்னாட்களில் அரபிகளால் யூதர்கள் விரட்டப்பட்டது போன்று தோற்றமளிக்க முயலும் முயற்ச்சியாக பிரதிபலிக்கிறது.
-----

இதற்கு தான் இப்னு ஹலிமா பின்வருமாறு மேலே பதிலளித்து இருக்கின்றார்.

// @இக்பால் செல்வன்
// பாலஸ்தீன பிரச்சனையில் யூதர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதே எனது முடிவு// உங்களது முடிவுக்கு ஆதாரம் என்னவோ? அதை கொஞ்சம் இங்கு தருகிறீர்களா? யூதர்கள் யாரால் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதை கொஞ்சம் வரலாற்று (புராணத்தை அடித்து விடாதீர்கள்) ஆதாரத்தை கொடுங்கள் இக்பால் செல்வன். //

ஆதாரத்தை கேட்டு காத்து கொண்டிருக்கின்றார் இப்னு ஹலிமா. கூடிய விரைவில் இக்பால் செல்வன் ஆதாரத்துடன் வருவார் அப்பா. பொறுத்திருங்கள்.

"நிலமெல்லாம் ரத்தம்" - அல்ஹம்துலில்லாஹ். எவ்வளவு அற்புதமான தொடர். நேரான பார்வையில் எழுதப்பட்ட நேர்த்தியான தொடர்.

நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் என்னை மிகவும் பாதித்த தொடர்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

கேள்வி கேட்டு காத்து கொண்டிருக்கின்றேன் சகோதரர். வந்து பதில் இருந்தால் சொல்லுங்கள். அந்த பன்றி படத்திற்கும், பதிவிற்கும் என்ன சம்பந்தம்??

பதிவு எழுதி நான்கு-ஐந்து நாட்களுக்கு பிறகு தாங்கள் குத்திய மைனஸ் ஓட்டுக்கு நன்றி. மிக்க நன்றி..மிக்க மிக்க நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

காதர் மைதீன் said...

இறைநேசன் என்ற என் மறைமுகப்பெயரில் இருந்து என் சொந்த பெயரில் பின்னூட்டம் இடவைத்த இறைவனுக்கு அனைத்து புகழும். ஏன் நான் இவ்வாறு சொல்லுகிரேன் என்றால் சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் மறைமுகபெயரில் பின்னூட்டம் இட்ட ஒரு சகோதரரை அந்த தளத்தின் உரிமையாளர் உங்கள் சொந்த பெயரில் பின்னூட்டம் இட தைரியம் இல்லாத நீங்கள் ஏன் பின்னூட்டம் இடுகிரீர்கள் என்று கேட்டது என் மனதில் சுருக்கென்று குத்திவிட்டது,பின்பு மறைமுகப்பெயரில் பின்னூட்டம் இடுவது கோழைதனமாகவும் இருந்தது,என் சொந்த பெயரில் பின்னூட்டம் இடும் முதல் பின்னூட்டம் இது, என்னடா தலைப்புக்கும் இவன் சொல்லும் கதைக்கும் சம்பந்த்ம் இல்லை எங்குரீர்களா, என்னை போன்றவனையும் இஸ்லாத்திற்காக சில வரிகள் எழுதவைக்க இறைவன் எனக்கு அறிமுகம் செய்து வைதத முதல் தளமும் இதுதன் முதல் மனிதரும் நீங்கள்தான், எல்லா புகழும் நம்மைபடைத்து பராமரிக்கும் அந்த ஏகனுக்கே!
மாஸலாமா.

காதர் மைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்


//கேள்வி கேட்டு காத்து கொண்டிருக்கின்றேன் சகோதரர். வந்து பதில் இருந்தால் சொல்லுங்கள். அந்த பன்றி படத்திற்கும், பதிவிற்கும் என்ன சம்பந்தம்??

பதிவு எழுதி நான்கு-ஐந்து நாட்களுக்கு பிறகு தாங்கள் குத்திய மைனஸ் ஓட்டுக்கு நன்றி. மிக்க நன்றி..மிக்க மிக்க நன்றி...//

பதில் தன்னிடம் இல்லை என்று தெரிந்துதான் அவர் மைனஸ் ஓட்டு போடுகிரார், விடுங்கள் சகோதரரே! பாவம் என்ன செய்ய!

Aashiq Ahamed said...

சகோதரர் காதர் மைதீன்,

வ அலைக்கும் சலாம்,

வாங்க அண்ணே/தம்பி வாங்க. நீங்க தானா அது!!!. சுப்ஹானல்லாஹ்.

புனைப்பெயரில் எழுதுவது என்னை பொறுத்தவரையில் தவறில்லை சகோதரர். Anyhow, அல்லாஹ் தங்களின் முடிவை செம்மையாக்கி தங்களின் தாவாஹ் பணியை மேலும் சிறப்புற வைப்பானாக...ஆமீன்.

அப்புறம் அந்த கடைசி இரண்டு வரிகளில் என்னை உணர்ச்சிவசப்பட வைத்து விட்டீர்கள். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன்.

நன்றி,

உங்கள் சகோதரர்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதர் காதர் மைதீன்,

வ அலைக்கும் சலாம்,

----
பதில் தன்னிடம் இல்லை என்று தெரிந்துதான் அவர் மைனஸ் ஓட்டு போடுகிரார், விடுங்கள் சகோதரரே! பாவம் என்ன செய்ய!
----

சரி விட்டுடுவோம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Mohamed Himas Nilar said...

புதிய தகவலுக்கு நன்றி.அவர்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் நீங்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் மற்றும் உலகில் யார் யார் இஸ்லாமிய பிரச்சாரரத்தை பல இடைஞ்சலுக்கு மத்தியில் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உறுதியான ஈமானையும் தைரியத்தையும் கொடுப்பானாக.ஆமீன்
உங்கள் பதிவுக்கு கிடைத்த COMMENT களே சாட்சி ஒரு இஸ்லாமிய பிரச்சாரகன் எவ்வளவு எதிர்ப்பை சம்பாதிப்பான் என்று.தொடருட்டும் இஸ்லாமிய பிரச்சாரம் அதுபோல் உங்களிடமும் தொடர்ந்து இஸ்லாமிய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.சீன முஸ்லிம்கள் பற்றிய தொடர் இன்னும் வரவில்லையே.இன்ஷா அல்லா எதிர்பார்க்கிறேன். சலாம்

Mohamed Himas Nilar said...

சகோதரர் காதர் மைதீன் சொன்ன அந்த கடைசி இரு வார்த்தைகள் என்னை பொருத்தவரையிலும் உண்மையே.நானும் ஒரு BLOG துவங்கி என்னால் இயன்ற சிறு இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்ய தூண்டிய முதல் BLOG உங்களின் இந்த எதிர்குரலே. புகழ் அனைத்தும் அல்லாவுக்கே.நன்றி.தலைப்புக்கு பொருத்தமில்லை என்றாலும் என் தாழ்மையான நன்றியை ஏற்றுக்கொள்ளவும் நானும் என் சொந்த ஆக்கம் ஒன்றை எழுத அல்லாவிடம் துவா செய்யவும்.நன்றி

Aashiq Ahamed said...

சகோதரர் Mohamed Himas Nilar,

அஸ்ஸலாமு அலைக்கும்,

----
அவர்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் நீங்கள் செய்யும் இஸ்லாமிய பிரச்சாரத்துக்கும் மற்றும் உலகில் யார் யார் இஸ்லாமிய பிரச்சாரரத்தை பல இடைஞ்சலுக்கு மத்தியில் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உறுதியான ஈமானையும் தைரியத்தையும் கொடுப்பானாக.
-----

ஆமீன்...


--------
.சீன முஸ்லிம்கள் பற்றிய தொடர் இன்னும் வரவில்லையே.
-------

சகோதரர் அதை ஏன் கேட்கின்றீர்கள். நினைத்தாலே பயமாக இருக்கின்றது. நிறைய படிக்க வேண்டி இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் முயற்சி செய்கின்றேன். துவா செய்யுங்கள்.


----
நானும் ஒரு BLOG துவங்கி என்னால் இயன்ற சிறு இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்ய தூண்டிய முதல் BLOG உங்களின் இந்த எதிர்குரலே. புகழ் அனைத்தும் அல்லாவுக்கே
---

எல்லாப் புகழும் இறைவனுக்கே உரித்தாவதாக. தாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட இறைவன் துணை புரிவானாக...ஆமீன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

s.jaffer.khan said...

alhamdulilah good post friend

காதர் மைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

என் முதல் பதிவினை படித்து துஆ செய்ய அழைக்கிறேன்.

மஸலாமா..

அன்புடன்,

காதர் மைதீன்.

காதர் மைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் மன்னிக்கவும் லிங்க் தரவில்லை
http://quran-contradiction.blogspot.com/

Aashiq Ahamed said...

சகோதரர் ஜாபர் கான்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

நீதிமான் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
சஹோ.ஆசிக் அஹமது,
ஆஸ்திர்லியாவில் ஆஸ்திர்லியா வாசிகளின் இஸ்லாமிய பிரச்சாரம் பற்றி அருமையான ஒரு தகவலை தந்துள்ளீர்கள். இதனை குற்றம் சாட்டி இக்பால் செல்வன் ஒரு பதிவு போட வேட்ன்டிய அவசியம்தான் என்ன? இவர்களுக்கு என்ன நஷ்டம் அதனால்? அதிலும் பதிவுக்கு சிறிதும் தொடர்பே இல்லாமல் பன்றிப்படம் போட்டு நையாண்டி புரிந்து இருப்பது வேதனை.

அடுத்ததாக, இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை காலில் தூக்கிப்போட்டு மிதிப்பது போல நபிப்படம் போடுவது என்பது, இவர்களுக்கு உண்மைலேயே மதி இருக்கா என்று சந்தேகம் கொள்ள வெக்கிறது. மெய்யாலுமே இது நபியின் படமாக இருக்க வாய்ப்புள்ளதா என்று சிந்தித்திருக்க வேண்டும். இனி பகுத்தறிவு பற்றி எல்லாம் எவர்கள் பேச யோக்யதை இல்லை. இதுபோன்ற வக்கிர உள்ளத்தோடு பதியப்படும் தனிமனித தாக்குதல் பதிவுகளை எப்படி இன்டலி,தமிழ்மணம் போன்ற திரட்டிகள் அனுமதிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. கட்டுப்பாடற்ற தனிமனித உரிமை கலவரத்துக்கே வித்திடும்.

இங்கேயும், சுவனப்ரியம், மு.ஆஷிக் தளத்திலேயும் , இக்பால் செல்வன் தளத்திலும் இவ்வளவு எதிர்ப்புகள், அறிவுரைகள், கண்டங்கள், மைனஸ் ஓட்டுக்கள் நடந்தபின்னும், இக்பால் செல்வன் இன்னும் பன்றிப்படங்களியும், நபி என்று கூறி எவர் படத்தையோ போட்டு அதனை தூக்காமல் இருப்பதும அவரது மண்டை கர்வத்தையே காட்டுகிறது. நாத்திகர்கள் இப்படி மதஎதிர்ப்புவெறி பிடித்து அலைவது நாட்டு அமைதிக்கு ஆபத்தானது. மிகுந்த வேதனை அளிக்கிறது.

[[[[அப்படி அவர் செய்தால் அது எங்களுக்கு தெரிந்த அடுத்த கணமே எங்களின் பதிவு தூக்கப்படும்...இன்ஷா அல்லாஹ்.

நம்பிக்கையாலர்களிடம் ஈகோ இருக்க முடியாது சகோதரர்.]]]]

மதவெறியர்கள், அடிப்படைவாதிகள் என்று துற்றப்படும் தீவிர முஸ்லிம்கள் மிக சாந்தமாக அன்புடன் பதில் அலிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.ரொம்ப தேங்க்ஸ் சகோ.ஆசிக் அகமது.

மிக்க நன்றி சஹோ ஆசிக் அகமது.

Anonymous said...

Islam is only goods for arabs. Period.

Aashiq Ahamed said...

சகோதரர் நீதிமான்,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

Brother Anony,

Assalaamu alaikum,

Islam is good for everyone...period.

Your brother,
aashiq ahamed a

R.Puratchimani said...

தோழரே,
எனக்கு சிறு சந்தேகம்... பதில் தர விரும்பினால் தாருங்கள்...
எதற்காக இஸ்லாத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இஸ்லாத்தை கிண்டல் செய்வதோ உங்கள் வாதத் திறனை சோதிப்பதோ என் நோக்கமன்று....சரியான காரணத்தை
தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமே .
நன்றி

Aashiq Ahamed said...

சகோதரர் R.புரட்சிமணி,

உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

----------
இஸ்லாத்தை கிண்டல் செய்வதோ உங்கள் வாதத் திறனை சோதிப்பதோ என் நோக்கமன்று....சரியான காரணத்தை
தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டுமே .
---------

சகோதரர், தவறான வார்த்தைகள் பயன்படுத்தாமல் எப்படி வேண்டுமென்றாலும் கேட்கலாம். ஆகையால் தாங்கள் அப்படியெல்லாம் நினைக்கவேண்டாம். தாராளமாக மனதில் பட்டதை கேளுங்கள். காரமாக கூட கேளுங்கள். ஆனால் கண்ணியமற்ற வார்த்தைகளை மட்டும் உபயோகப்படுத்தாதீர்கள்.


--------
தோழரே,
எனக்கு சிறு சந்தேகம்... பதில் தர விரும்பினால் தாருங்கள்...
எதற்காக இஸ்லாத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
---------

Fine. இதற்கு திரும்ப ஒரு சில கேள்விகளை கேட்பது மூலமாக எங்களுடைய நிலையை விளக்க முயற்சிக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில் அது வேண்டாமென்று நினைக்கின்றேன். தாங்கள் மேற்கொண்டு கேள்விகள் கேட்கும்பட்சத்தில் அந்த சில கேள்விகளை கேட்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.

ஏன் மற்றவர்களும் முஸ்லிமாக வேண்டுமென்று நினைக்கின்றோம்????

பதில் எளிமையானதுதான். நாங்கள் மட்டும் சுவர்க்கம் செல்ல கூடாது, உங்களைப்போன்ற அனைத்து சகோதர சகோதரிகளும் எங்களுடன் வரவேண்டும் என்றுதான் அழைப்பு பணியை செய்கின்றோம்.

தாங்கள் குரானை முழுமையாக படிக்க முன்வருமாறு உங்களை அழைக்கின்றேன். என்னுடைய மெயில் முகவரிக்கு தாங்கள் ஒரு மெயில் அனுப்பினால் குரான் தமிழ் மொழிபெயர்ப்பு soft copy அனுப்பிவைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்).

தங்களுடைய வருகைக்கும், மிக கண்ணியமான முறையிலான கேள்விக்கும் நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வல்ல இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Post a Comment