Monday, October 18, 2010

இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின். 

சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......

முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை. 

இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....

இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).

பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................


"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது. 

இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை, 

  • என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும். 
  • அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும். 
  • எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும். 

என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.

இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.

என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,

"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது" 

இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.

ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.

"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"

அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.

மனதால் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றேன், அதிகாரப்பூர்வமாக இன்னும் இல்லை என்பது தான் என்னுடைய விளக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய இந்த அணுகுமுறை அவருக்கு மேலும் குழப்பத்தையே தந்தது. அவரை இஸ்லாத்தை ஏற்க வைக்க வேண்டுமென்ற என்னுடைய முயற்சியும் இதனால் தள்ளிப்போனது.

நாட்கள் சென்றன....

இந்த நேரத்தில் முஸ்லிம்களுடன் தொழக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அது ஒரு வார இறுதி நாள். ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து தொழுவதற்கான அழைப்பு விடப்பட்டது. அவ்வளவு தான், கடைகள் அடைக்கப்பட்டன. தெருவோர கடைகளின் பொருட்கள் துணிகளால் மூடப்பட்டன. வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் மக்கள் மசூதியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அது என்னை மிகவும் கவர்ந்தது.

முஸ்லிம்களின் தொழுகை எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்வதென முடிவெடுத்து விட்டேன்.

பள்ளிவாசலுக்கு சென்றவர்களை பின்தொடர்ந்தேன். நான் போவதற்குள் தொழுகையில் இரண்டு வரிசைகள் பூர்த்தியாகி விட்டன. வரிசையில் மக்கள் தோளோடு தோளாக நெருங்கி நின்றார்கள். அவர்களுடன் நானும் என்னை ஐக்கியப்படுத்தி கொண்டேன். அந்த வரிசையில் என்னோடு பல சிறுவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்று ஓரக்கண்ணால் கவனித்தபடியே இருந்தேன். அவர்கள் எப்படி குனிந்து நிமிர்ந்தார்களோ அப்படியே நானும் செய்தேன். அவர்களை அப்படியே பின்பற்றினேன்.

எனக்கு நன்றாக தெரியும், இவர்கள் என்னை விட அதிகமாக மனதை ஒருநிலைபடுத்துகின்றார்கள் என்று. அவர்கள் தொழுகையில் தங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மனதில் அப்போது என்ன வார்த்தைகள் தோன்றினவோ அதனைக்கொண்டு இறைவனை தொழுதேன்.         

"இறைவா, என் விருப்பம் நிறைவேற உதவி செய். என்னுடைய மனைவிக்கு நேர்வழி காட்டு. உன்னிடத்தில் மட்டுமே நான் உதவி கோருகின்றேன். உன்னால் படைக்கப்பட்டு இன்று கடவுள்களாக இருக்கின்றனரே, அந்த மனிதர்களிடத்தில் அல்ல"

இதனை நான் ஒரு மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தேன். என்னுடன் தொழுது கொண்டிருந்தார்களே அவர்கள் அளவுக்கு நான் இறைவனிடத்தில் தொடர்பு கொண்டிருந்தேனா என்று தெரியாது. ஆனால் தொழுகை முடிந்தவுடன் ஒருவிதமான மன அமைதியை உணர்ந்தேன்.

என்னுடைய காலணிகளை அணிய சென்றேன். ஷூவையும், காலுறையையும் எடுத்த போது இரு சிறுவர்கள் என் முன்னால் வந்து நின்றார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, எனக்கு அருகில் நின்று தொழுதவர்கள்.

"Anta Muslim? Limada tusalli? ‘adam wa’dha al yedduka al yameen ala shimal.” (நீங்கள் முஸ்லிமா? நீங்கள் எதற்காக தொழுகின்றீர்கள்? தொழும்போது வலது கையை, இடது கைக்கு மேல் வைக்க வேண்டும்)

ஆம், அந்த சிறுவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் முஸ்லிமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்து விட்டது.

பிறகு அவர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள். எப்படி ருக்கூ (How to Bow) செய்ய வேண்டுமென்று, எப்படி சஜிதா (How to Prostrate) செய்ய வேண்டுமென்று மற்றும் எப்படி கால்களை வைக்க வேண்டுமென்று. அவர்கள் அதோடு விடவில்லை. அவர்களை பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்தார்கள். எனக்கு இன்னும் நிறைய பயிற்சி வேண்டுமென்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

அவர்களது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார்கள். நான் வீட்டின் வெளியிலேயே நின்று விட்டேன். சங்கடம் தான் காரணம். முன்னே சென்றே அந்த சிறுவர்களில் ஒருவன் நான் தயங்கி நிற்பதை பார்த்து என்னருகில் வந்து "come on" என்று சைகை செய்து என்னை உள்ளே அழைத்து சென்றான். அங்கே 15-16 வயது மதிக்கத்தக்க டீனேஜ் இளைஞர் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் இந்த சிறுவர்களின் அண்ணனாம்.

என்னை மிக அன்பாக உபசரித்தார். அரேபிய காபியும், சில பேரித்தம் பழங்களையும் கொடுத்தார். ஆனால் எனக்கு புரியவில்லை, என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தார்கள் என்று. வீட்டை சுற்றிமுற்றி பார்த்தேன். இந்த சிறுவர்களை தவிர வேறு யாருமில்லை. பேச்சை ஆரம்பித்தேன்.

"உங்கள் தாய், தந்தையர் எங்கே?"

நான் கேட்ட கேள்விக்கு அவரால் சைகையால் பதில் சொல்ல முடியவில்லை. சற்று பொறுங்கள் என்பது போன்று சைகை செய்தார். நான், இருவரும் வெளியே போயிருப்பார்கள் போல என்று நினைத்து கொண்டேன்.

அப்போது மற்றொரு டீனேஜ் இளைஞர் வீட்டிற்கு வந்தார். இவரும் அவர்களது சகோதரர் தான். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். பின்னர், உள்ளே வந்த அந்த இளைஞர் என்னைப் பார்த்து கேட்டார்.

"அமெரிக்கி?" (அமெரிக்கரா?)

"இல்லை, நான் பிரிட்டிஷ்"

"காபி அருந்துகின்றீர்களா?"

இல்லை, நான் ஏற்கனவே அருந்தி விட்டேன் என்று சொல்வது போல தலையசைத்தேன்.
                   
"Tawadha" (உளு செய்யலாம் வாருங்கள்)

உளு (Wudu is the Islamic act of washing parts of the body using water) செய்ய சொல்லிக்கொடுத்தார்.

"வாருங்கள் தொழப்போகலாம்"...

மாலை நேர தொழுகைக்காக கிளம்பினோம்.

"கையை உயர்த்துங்கள்" என்று சொல்லியபடியே என்னுடைய வலது கையை மேலே எழுப்பினார். "பிறகு இப்படி வையுங்கள்" என்று என்னுடைய இடது கையின் மேல் வலது கையை வைத்தார். பிறகு இரு கைகளையும் மார்பில் படியுமாறு மேலே தூக்கினார்.

நாங்கள் நடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ரோட்டின் நடுவில் நின்று கொண்டே அடுத்த பாடத்தை சொன்னார், "நான் செய்வதை போல செய்யுங்கள்" என்று இரு கைகளையும் உயர்த்தி காதுகளுக்கு அருகில் வைத்து கொண்டார்.

பள்ளிக்குள் நுழைந்தோம். அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டேன். இப்போது முன்பை விட சரியான முறையில் தொழுதேன்.

பள்ளியிலிருந்து திரும்பியவுடன் இரவு நேர உணவு பரிமாறப்பட்டது. நான் மறுபடியும் கேட்டேன், 

"உங்கள் அம்மா எங்கே?"

அவர் தலையசைத்து விட்டு, தூங்குவது போல சைகை காட்டி கீழே பூமியை காட்டினார்.       

"Baba wa mama fiy mout, yarhamhummullah. Sister make" (மரணம் எங்கள் பெற்றோரை தழுவிவிட்டது. அவர்கள் இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவட்டுமாக. என் சகோதரி தான் உணவு தயாரித்தார்"

அப்போது தான் புரிந்தது, இவர்கள் பெற்றோரை இழந்த சிறுவர்கள் என்று. குடும்பத்தை காக்கவேண்டிய பொறுப்பை இந்த இளைஞரும் அவருடைய சகோதரியும் தான் ஏற்றிருக்கின்றார்கள். அந்த இளைஞனின் ஆங்கிலம் தெளிவாக இல்லை. அதனால் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.

"உங்களுக்கு இஸ்லாம் பிடித்திருக்கின்றதா?" அவர் கேட்டார்.

"ஆம்"

"பிறகு ஏன் நீங்கள் முஸ்லிமாகவில்லை"

"எனக்கு டைம் தேவை"

அவர் எனக்கு என் வீடு வரை லிப்ட் கொடுத்தார்.

"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள். எங்கள் வீட்டிற்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்"

நான் அவருக்கு நன்றி கூறினேன்.

அந்த குடும்பத்தின் அன்பு என்னை விட்டு விலகவில்லை. அவர்கள் என் மீது காட்டிய அக்கறையால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனக்கு நேர்வழி காட்ட அவர்கள் எடுத்த முயற்சியை பாராட்டினேன்.

இதற்கு பிறகு என் வாழ்வில் நுழைந்த மனிதர் என்னால் மறக்க முடியாதவர். அவர் பெயர் அலி ஜமீலி. ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர். உம்ரா (The Umrah is a pilgrimage to Mecca performed by Muslims that can be undertaken at any time of the year) செய்வதற்காக சவுதி அரேபியா வந்திருந்தார்.

எனக்கு இஸ்லாத்தை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உங்கள் புனித நூலை நான் படித்திருக்கின்றேன் என்று கூறினேன்.அவரது அடுத்த கேள்வி நான் எதிர்பார்த்ததுதான்...

"நீங்கள் முஸ்லிமாகவில்லையா?"

என்னுடைய மூன்று நிபந்தனைகளைப் பற்றி கூறினேன்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா?, அல்லாஹ்விடம் நிபந்தனைகள் விதிக்க கூடாது. இப்போதே சஜிதா செய்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள். இஸ்லாம் தான் இறைவனின் மார்க்கம் என்பதில் உங்களுக்கு ஐயங்கள் இல்லையென்றால் இப்போதே ஷஹாதா (Shahada is the testimony of faith indicating belief in one God, Allah, who has no partners and belief that the Prophet Muhammad (peace be upon him) is his final prophet and messenger) சொல்லுங்கள்"

"நான் ஏன் நிபந்தனைகள் போடக்கூடாது?, என் குடும்பமும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அது தவறா?"

"இங்கே பாருங்கள். இறைவன் யாரை நாடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுகின்றான். உங்கள் குடும்பத்தை காரணமாக காட்டி அவனுடைய வழிகாட்டுதலை அலட்சியப்படுத்துகின்றீர்களா?. இவ்வளவு ஏன்...நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கூட இறைவன் நேர்வழி காட்டவில்லையே!!! நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர்களது தந்தையின் சகோதரர் முஸ்லிமாகவில்லையே"

எனக்கு தெளிவாக விளக்கினார் ஜமீலி. ஆனால் நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.

"நான் என் குடும்பத்தினருடன் பேச வேண்டும்"

"நீங்கள் அதற்கு முன்னே இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?. நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டக்காரர் என்பது உங்களுக்கு புரியவில்லையா? உங்களை போல எல்லோருக்கும் இறைவன் நேர்வழி காட்டுவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை புறக்கணிக்க போகின்றீர்களா?"

அவருடைய அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. சிந்தித்து பார்த்தால் அவர் சொல்வது சரிதான். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் நான் ஒரு முட்டாள்.

உடனடியாக நான் அடுத்த அடியை எடுத்து வைத்தேன். இஸ்லாமிய தாவாஹ் சங்கத்திற்கு சென்று, அதிகாரப்பூர்வமாக இஸ்லாத்தை தழுவ என்ன செய்யவேண்டுமென்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.

என்னுடன் டேவிட், ஜான் என்ற இரு சகோதரர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இஸ்லாத்தை தழுவ நினைப்பவர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இஸ்லாம், உங்களுக்கான ஆன்மீக அடைக்கலம். 

இறைவன், நம்பிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சோதனைகளை தருவான். இவ்வுலகின் உங்கள் பிரச்சனைகளானது தானியங்கியாக தீர்ந்து விடாது. ஆனால் இறைவனின் உதவி இருந்தால் அவை ஒன்றன் பின் ஒன்றாக விலகிவிடும்.

அதனால் உங்களை அர்ப்பணியுங்கள், பிறகு பொறுமையோடு காத்திருங்கள், இறைவன் உங்களுக்கு அதிகமாக அருளை கொடுப்பானென்று"


சுபானல்லாஹ். இந்த பதிவின் மூலம், நான் இஸ்லாத்தை தழுவும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புவது...நீங்கள் இஸ்லாத்தை நன்றாக ஆய்வு செய்யுங்கள். அது தான் உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்கள் முடிவை தள்ளிப் போடாதீர்கள். முதலில் உங்களை அர்ப்பணித்து விடுங்கள், பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமென்று துஆ செய்யுங்கள். உங்களுக்காக நாங்களும் துவா செய்வோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சகோதரர் ஜெறோம் பௌல்டரை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் பின்வரும் முகவரியில் அவரை நீங்கள் சந்திக்கலாம்...

Jerome Boulter,
LTAP Language Teacher,
English Language Centre,
Faculty of Academic Services,
Taibah University,
PO Box 344
Medina 42353,
Kingdom Saudi Arabia
cel. +966 54 3328708
jerboulter@gmail.com


இதனை எழுதும்போது டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்களின் ஒரு உரையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகின்றது, நீங்களும் பார்த்திருக்கலாம்.

அந்த உரையின் கேள்வி பதில் நேரத்தில் ஒரு சகோதரி,

"குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" என்று கேட்க,

அதற்கு டாக்டர். ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கூறி விட்டு அந்த சகோதரியை பார்த்து கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வியை,

"சகோதரி, நீங்கள் என்னைப் பார்த்து கேட்டீர்கள், இப்போது நான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன். இஸ்லாத்தை ஏற்கவிடாமல் உங்களை தாமதப்படுத்துவது எது?" என்று கேட்க, அதன் பிறகு நடந்தது உணர்வுப்பூர்வமான நிகழ்வு. அதனை நீங்களே கீழே பார்க்கலாம்.


இறைவன் ஒருவருக்கு நேர்வழி காட்ட நினைத்து விட்டால் யார் தடுப்பது?

இறைவா, இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலுள்ள சகோதர/சகோதரிகளுக்கு மனபலத்தை தந்தருள்வாயாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
சகோதரர் ஜெறோம் பௌல்டர் குறித்த இந்த மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. பதிவிற்கு தேவைப்பட்ட தகவல்கள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிற்கு வந்த விதம் குறித்த அவரது கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரது இணையதள முகவரியை பயன்படுத்தவும்.    


My Sincere thanks to:
1. Brother Jerome Boulter..
2. Islam Religion Website.

Reference: 
1. Why I became Muslim - http://www.jboulter.com/index_files/Page987.htm


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






17 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரன் ஆஷிக்,
    இஸ்லாமிய அழைப்பை செய்பவர்களுக்கும் தேவையான தகவல்கள் இதில் இருக்கின்றன. இப்படி இஸ்லாத்தை ஆய்ந்து அறிந்தவர்கள் தான் அதை பிறருக்கும் கொண்டு செல்வதில் வீரியமாக இருக்கின்றனர். பிறப்பின் அடிப்படையில் முஸ்லிமாக இருப்பவர்கள் தஹ்வா விசயத்தில் அக்கறை செலுத்துவதேயில்லை.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரன் ஆஷிக்,

    மனதுக்கு சற்று கவலையாயிருந்தது.
    யூ ஆர் பேக் ஆன் யுவர் ஓன் யூஷுஅல் ட்ராக்..!
    மாஷாஅல்லாஹ். மகிழ்ச்சி.

    "இஸ்லாத்தில் இணைந்தேன்" என்ற அந்த இரு வார்த்தைகளுக்கு இடையில்தான் எத்தனை எத்தனை உணர்வுப்பூர்வமான போராட்ட வரலாறுகள் உள்ளன?

    அந்த சவூதி சிறுவர்கள்/இளைஞர்கள் புள்ளரிக்கவைத்து விட்டனர். அவர்களை அவர்கள் பெற்றோர்கள் மிகச்சிறப்பாக வளர்த்திருக்கின்றனர்.
    அல்ஹம்துலில்லாஹ்.

    'மேடையில் மக்கள் மத்தியில்'...
    'ஜும்மா தொழுகைக்காக'... என்றெல்லாம் காத்திருக்க எந்த அவசியமுமில்லை... இறப்பு அதற்காகவெல்லாம் காத்திருப்பதுமில்லை.
    'எந்த நொடியில் அல்லாஹ்வின் ஹிதாயத் கிடைத்ததோ அடுத்த நொடி இஸ்லாத்தில் இணைவதுதான் சிறந்தது' என்பதை ஈரான் நாட்டை சேர்ந்த அமெரிக்கர் அலி ஜமீலி அழுத்தந்திருத்தமாக உரைத்துள்ளார்.

    ReplyDelete
  3. ஒருவர் இறந்த பின் அவருடன் வருவதில் ஒன்று நல்ல முறையில் வளர்க்கப்பட்ட(தீனில்) பிள்ளையின் து'ஆவே. அந்த குழந்தைகளை எண்ணி மனம் சிலிர்ர்கிறது. என்ன ழகாய் ஒருவரின் இஸ்லாத்திற்கு மீடியமாய் இருந்து விட்டனர். அல்லாஹ் அவர்கள அனைவரையும் பொருந்திக் கொள்வானாக. ஆமீன். நல்ல பதிவிற்கு, தங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. அனானி முகவரியில் பின்னூட்டமிட்டிருக்கும் சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

    தங்கள் மீதும் தங்களது குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

    தங்களது பின்னூட்டத்தை என்னால் முழுமையாக வெளியிட முடியாது. படிக்கும் சிலருக்கு அது சங்கடத்தை தரும் என்ற காரணத்தினால்..

    உங்களுடைய பின்னூட்டம் edit செய்யப்பட்டு என்னுடைய பெயரில் வெளியிடப்படுகின்றது. நான் edit செய்த உங்களது கருத்துக்களை வேறு விதமாக பதியுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    உங்களுக்கு விருப்பம் என்றால் உங்களது மெயில் id யில் இருந்து எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்பவும். இது குறித்து (edit செய்யப்பட்ட கருத்துகள் குறித்து) என்னுடைய கருத்துக்களை தனிப்பட்ட முறையில் உங்களிடம் தெரிவிக்க விரும்புகின்றேன்.

    புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. Anonymous has left a new comment on your post "இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....":

    //நீங்கள் இஸ்லாம் என்னும் மார்க்கத்தை பற்றி அறிந்து கொண்ட பிறகு அதனை நிராகரித்து விட்டு இறந்தால் நீங்கள் செல்லும் இடம் நரகம் தான்.//

    குழந்தைகள் உணவு உண்ணாவிட்டால், தாய்மார்கள் பூச்சாண்டி பிடித்து கொண்டு போய் விடுவான் என்று பயம் காட்டி சாப்பிட வைப்பார்கள். அது போல ரொம்ப நன்றாகவே பூச்சாண்டி பயம் காட்டி அல்லாவை வணங்க அழைக்கிறீர்கள்.
    'அல்லா நினைக்காமல் எந்த செயலும் நடப்பதில்லை. நன்மை தீமை எல்லாமே அவன் விருப்பபடி தான் நடக்கும். ஒவ்வொரு மனிதனும் என்ன செயலை செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதும் அவனே' என்று என் முஸ்லிம் நண்பன் ஒருவன் கூறுவான்.
    இரண்டு மனிதர்களை படைத்து ஒருவனை நல்லது செய்வதற்கும் மற்றொருவனை பாவம் செய்வதற்கும் தூண்டும் அல்லா, மறுமை நாளில், பாவ காரியங்கள் செய்தவனுக்கு நரகத்தையும், நல்ல செயல்கள் செய்தவனுக்கு சொர்க்கத்தையும், ஹீருல் ஈன்களையும் பரிசாக கொடுக்கிறான். நான் கேட்பது- பாவ செயல்கள் செய்தவனை அப்படி செய்யுமாறு அவனுக்கு விதியை வகுத்தவனே அல்லா தானே, அவன் வெறும் அம்பு மட்டும் தான். எய்தவன் அல்லா அல்லவா,
    இதில் தண்டனை யாருக்கு கொடுக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு மிட்டாய் ஆசை காட்டுவது போல் இஸ்லாமிற்கு வந்தால் சொர்க்கம் கிடைக்கும், இல்லை என்றால் நரகம் கிடைக்கும் என்று மக்களின் மூளையை மழுங்கடித்து வளர்க்கபடுவது தான் இஸ்லாம். அல்லா சொர்க்கத்தில் தங்க மாளிகைகள் காட்டி வைத்திருப்பதையும் *********************************EDITED****************************************************************EDITED***************************************************EDITED******************************

    //குரான் இறைவேதமென்றால், இஸ்லாம் தான் உண்மையென்றால் அதனை ஏற்க ஏன் மக்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றார்கள்?" //

    குரான் இறைவேதம் என்றும், தன்னை இறை தூதர் என்றும் முஹம்மது என்பவர்தான் கூறிக்கொண்டார். குரான் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால், 'அல்லாவிடம் இருந்து வருகிறது' என்பார். அது எப்படி வருகிறது என்று கேட்டால் 'என் மூலமாக வஹீ வருகிறது' என்பார். 'நான் தான் இறை தூதர், அப்படி குரானில் சொல்லி இருக்கிறது' என்றும் அவரே சொல்லிக்கொண்டார். இப்படி அவரே தன்னை இறை தூதர் என்று சொல்லிக்கொண்டார். தன் மூலம் குரான் வருவதாக சொல்லிக்கொண்டார்.
    வேறு யாரும் அவரை இறை தூதர் என்றோ அவரிடம் குரான் வருகிறது என்றோ வேறு யாரும் கூறவில்லை. இப்படி இருக்கும்போது உலகத்தில் எல்லாரும் முட்டாள்கள் இல்லையே. சிறிதளவாவது சிந்திக்க மாட்டார்களா.

    M. JAYA PRAKASH
    KANYKUMARI

    Publish
    Delete
    Mark as spam

    Moderate comments for this blog.

    Posted by Anonymous to எதிர்க்குரல் at Tuesday, October 19, 2010

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

    //இப்படி அவரே தன்னை இறை தூதர் என்று சொல்லிக்கொண்டார். தன் மூலம் குரான் வருவதாக சொல்லிக்கொண்டார்.
    வேறு யாரும் அவரை இறை தூதர் என்றோ அவரிடம் குரான் வருகிறது என்றோ வேறு யாரும் கூறவில்லை. இப்படி இருக்கும்போது உலகத்தில் எல்லாரும் முட்டாள்கள் இல்லையே. சிறிதளவாவது சிந்திக்க மாட்டார்களா.//

    ----இதில்,--\\வேறு யாரும் கூறவில்லை\\--என்கிறீர்களே, எனில், அந்த 'வேறு யாரோவான அவரை' எப்படி, எந்த ஆதாரம் வைத்து வைத்து நம்புவீர்கள் ஜெயப்பிரகாஷ்...?!?!?

    சரி அதுபோகட்டும்....அனானி முகவரியில் பின்னூட்டமிட்டிருக்கும் சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களே...ஆஷிக் உங்களை நம்பிவிட்டார்.... ஆனால்... நீங்கள்தான் ஜெயப்பிரகாஷ் என்று நான் எப்படி நம்புவது? யாருமே என்கிட்டே வந்து தாங்கள்தான் ஜெயப்பிரகாஷ் என்று சொல்லவில்லையே? ஒருவேளை நீங்களே நேரில் வந்து என்முன்னே நின்றாலும்கூட நான் எப்படி நம்புவது? உங்கள் பெற்றோர்களோ, இந்திய அரசின் பாஸ்போர்ட்டோ வந்து உங்களுடன் சான்று பகன்றாலும் அந்த சான்றுகள் 'உண்மை' என்றும் 'மோசடி அல்ல' என்றும் எப்படி நம்புவது?

    ஒருமனிதன் தன் தந்தையை 'இன்னார்தான்' என்று நம்புவது தன் தாயின் வாக்கை நம்பித்தான். ஏனென்றால் அவன் தன் தாயை நம்புகிறான். அந்த நம்பிக்கைகளில், சந்தேகம் வந்துவிட்டால் இப்போதைய தலைமுறைக்கு அதிர்ஷ்டவசமாக DNA டெஸ்ட் செய்து கொள்ள வசதி உள்ளது. ஆயினும், அதில் ஏதும் பொய்யோ, குளறுபடியோ இல்லை என்றும், அந்த பரிசோதனை சாலையையும், அதில் வேலைபார்க்கும் ஆய்வறிஞறையும், அவர்தம் திறமையையும், அந்த பரிசோதனையை செய்தது சரி என்றும் எப்படி சந்தேகமற நம்புவது? முதலில் 'இந்த டெஸ்ட் செய்முறை சரியான ரிசல்டைத்தான் தருகிறது' என்று எப்படி நம்புவது?

    இதை உலக விஞ்ஞாணிகளெல்லாம் ஒன்றுகூடி சான்றிதழ் அளித்துவிட்டார்கள் அல்லவா? சரி. அப்போ நம்பலாமா? ஆனால், அந்த அனைத்து உலக விஞ்ஞாணிகளெல்லாம் தவறிழைக்கவில்லை என்றும் காசு வாங்கிக்கொண்டு ஊழல் சர்டிபிகேட் தரவில்லை என்றும் எப்படி நம்புவது? அதற்கு யாரும் ஒன்றும் சர்டிபிகேட்டுகள் தரவில்லையே?

    அடடா... இப்போது என்ன செய்வது?
    இவ்வுலகில் ஒவ்வொருவனும் தன் தந்தை இன்னார்தான் என்று ஐயம் திரிபற நூற்றுக்குநூறு சதம் சந்தேகமற நம்புவது எப்படி?

    சகோதரர் ஜெயப்பிரகாஷ் தயவு செய்து உங்கள் பதிலை இதற்கு அளிக்கவும்.

    ஏனென்றால், 'நம்பிக்கை' என்ற ஒரே அஸ்திவாரத்தில் தங்கள் குடும்பத்தையும் வாழ்க்கையையும் கட்டமைத்து இருக்கும் கோடானுகோடி உலக மாந்தர்களுக்கு உங்கள் பதில் கிஞ்சித்தும் பயனற்றதாக இருக்கலாம். ஆனால், உங்கள் கேள்விக்கு உங்கள் பதில்தான் பதிலாக அமையும்.

    பின்குறிப்பு:
    எதை நம்ப முடியாவிட்டாலும், இறைவன் என்று இருந்தாக வேண்டும் என்று இப்பிரபஞ்சம், அதன் இயக்கம், அதில் உள்ள உயிர்கள், அவை படைக்கப்பட்ட விதம், அவை இயங்கும் விதம் என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பகுத்தறிவுடன் நுண்நோக்கும்போது அது நம்பிக்கை என்பதையும் தாண்டி ஆதாரபூர்வமாகவே நம் அறிவிற்கு எட்டுவது இயற்கை.

    குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு அதுவே சான்றாக அமைந்திருக்கிறது. அதை பூரா படித்தால் இதை அறியலாம். அது உண்மையாகிவிட்டபடியால், இறைத்துதுத்துவமும் இறைத்துதரும் உண்மையாகிறார்கள்.

    இன்னும் நிறைய சிந்திக்க வேண்டுகிறேன் சகோதரர் ஜெயப்பிரகாஷ்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்,

    //வேறு யாரும் அவரை இறை தூதர் என்றோ அவரிடம் குரான் வருகிறது என்றோ வேறு யாரும் கூறவில்லை//

    அப்படியா...சரி, நீங்களே சொல்லுங்கள். ஒரு புத்தகம் எப்படி இருந்தால் நீங்கள் அதை இறைவேதமேன்று ஒப்புக்கொள்வீர்கள். அதற்கு என்ன அளவுக்கோல் வைத்திருக்கின்றீர்கள்?

    அதுபோலவே, ஒருவர் இறைதூதராக இருக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன அளவுக்கோல் வைத்திருக்கின்றீர்கள்? ஒருவரை நீங்கள் எந்த காரணங்களை அடிப்படையாக வைத்து அவரை இறை தூதரான ஒப்புக்கொள்வீர்கள்?

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    ஐரோப்பா இஸ்லாமிய மயமாகிறது என்று போப்பாண்டவர் ஒரு அறிக்கை விட்டார்
    அது இப்போது புரிகிறது சில நேரங்களில்
    போப்பாண்டவர் கூட உண்மையை பேசுகிறார்

    ReplyDelete
  9. திரு ஆஷிக்,
    உங்கள் தெளிவான பதிலுக்கு நன்றி, நம்பிக்கையின் அடிப்படையில் முகமது அவர்களை இறை தூதராகவும், குரானை இறை வேதமாகவும் ஏற்று கொண்டிருக்கிறீர்கள். நல்லது. இது போன்ற நம்பிக்கைதானே பிற மத மக்களுக்கும் இருக்கும். கிறிஸ்தவர்களுக்கு தங்கள் இறைவன் மீதும், இந்துக்களுக்கு தங்கள் கடவுள்கள் மீதும் இது போன்ற ஒரு நம்பிக்கையுடன் தானே வணங்குகிறார்கள். ஆனால் எந்த முஸ்லிமை எடுத்துக்கொண்டாலும் பிற மதங்கள் எல்லாம் போலி நாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்று கூறிக்கொள்கிறீர்கள். பிற மதங்களை ஒத்துக்கொள்வதும் இல்லை. கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக பார்ப்பதும், இந்துக்கள் பல தெய்வங்களை வணங்குவதும் அவர்கள் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையை குறை கூறி நாங்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள். சில கிறிஸ்தவர்கள் கூட இதையே கூறிக்கொள்கிறார்கள். உங்கள் நம்பிக்கை மீது கேள்வி எழுப்பினால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆனால் பிற நம்பிக்கையாளர்களை உங்கள் இஷ்டபடி வசை பாடுவீர்கள். என்ன சின்ன புள்ளதனம் இது .
    குரானின் காலபழமை வெறும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்புதான். ஆனால் அதற்கு முன்பே பெரிய ஞானிகளும், யோகிகளும் இந்த நாட்டில் தோன்றி வாழ்கைக்கு தேவையான அனைத்தையுமே கூறி சென்று விட்டார்கள்.
    உங்கள் நம்பிக்கைபடி நீங்கள் இருங்கள், எங்கள் நம்பிக்கைபடி நாங்கள் இருக்கிறோம் அப்படி இருந்தால் ஏன் குழப்பங்கள் வர போகிறது.

    பின்குறிப்பு : தயவு செய்து 'ஐயோ நாங்கள் பிற மதங்களை குறை கூறவில்லை எல்லா மதங்களையும் மதிக்கிறோம் எல்லா மதங்களையும் ஏற்று கொள்கிறோம்' என்று பச்சை பிள்ளைத்தனமாக பதில் கூற வேண்டாம்.

    http://www.youtube.com/watch?v=eIadXE2aZU4

    //அப்படியா...சரி, நீங்களே சொல்லுங்கள். ஒரு புத்தகம் எப்படி இருந்தால் நீங்கள் அதை இறைவேதமேன்று ஒப்புக்கொள்வீர்கள். அதற்கு என்ன அளவுக்கோல் வைத்திருக்கின்றீர்கள்?
    அதுபோலவே, ஒருவர் இறைதூதராக இருக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன அளவுக்கோல் வைத்திருக்கின்றீர்கள்? ஒருவரை நீங்கள் எந்த காரணங்களை அடிப்படையாக வைத்து அவரை இறை தூதரான ஒப்புக்கொள்வீர்கள்?//

    இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நிறய சொல்லலாம் திரு ஆஷிக் அவர்களே. ஆனால் இறைதூதரை பற்றி விமர்சித்தால் இளகிய மனம் படைத்த இஸ்லாமியர்களின் மனம் புண்பட்டு விடுமே. சிலர் சங்கடப்படுவதை தவிர்க்க முந்தைய எனது பதிலில் நீங்கள் எடிட் செய்த கருத்துகளுக்கு பதில் கூற என்னுடைய மெயில் ஐடிதருகிறேன்.

    jeyprksh@gmail.com

    M. JAYA PRAKASH
    KANYAKUMARI
    Mail : jeyprksh@gmail.com

    ReplyDelete
  10. சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய பதில்களுக்கு நன்றி. உங்களுக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். என்னுடைய பெயர் ஆஷிக் அஹ்மத்.

    //இதில்,--\\வேறு யாரும் கூறவில்லை\\--என்கிறீர்களே, எனில், அந்த 'வேறு யாரோவான அவரை' எப்படி, எந்த ஆதாரம் வைத்து வைத்து நம்புவீர்கள் ஜெயப்பிரகாஷ்//

    இப்படி ஆரம்பித்தது முஹம்மது ஆஷிக் அவர்கள். நாங்கள் இருவரும் ஒருவரல்ல. அதனால் உங்களுடைய

    //நம்பிக்கையின் அடிப்படையில் முகமது அவர்களை இறை தூதராகவும், குரானை இறை வேதமாகவும் ஏற்று கொண்டிருக்கிறீர்கள். நல்லது. இது போன்ற நம்பிக்கைதானே பிற மத மக்களுக்கும் இருக்கும். கிறிஸ்தவர்களுக்கு தங்கள் இறைவன் மீதும், இந்துக்களுக்கு தங்கள் கடவுள்கள் மீதும் இது போன்ற ஒரு நம்பிக்கையுடன் தானே வணங்குகிறார்கள்//

    இந்த கருத்துக்கு முஹம்மது ஆஷிக் பதில் சொல்லுவார் என்று எண்ணுகின்றேன். அவர் பதில் சொல்லாவிட்டால் இன்ஷா அல்லாஹ் நான் கூறுகின்றேன்.

    ReplyDelete
  11. @ஜெயபிரகாஷ்

    //பின்குறிப்பு : தயவு செய்து 'ஐயோ நாங்கள் பிற மதங்களை குறை கூறவில்லை எல்லா மதங்களையும் மதிக்கிறோம் எல்லா மதங்களையும் ஏற்று கொள்கிறோம்' என்று பச்சை பிள்ளைத்தனமாக பதில் கூற வேண்டாம்//

    ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள் சகோதரரே. இஸ்லாம் மட்டுமே இறைவனின் மார்க்கம் என்று நம்புவதால் தான் நான் முஸ்லிமாக இருக்கின்றேன். இறைவன் ஒருவனாக இருந்தால் அவனுடைய மார்க்கமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஒரே இறைவன் பல வாழ்வியல் நெறிகளை (மார்க்கங்களை) சொல்லுவானா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆக எந்தவொரு முஸ்லிமும் "இந்த மார்க்கமும் சரி, அந்த மார்க்கமும் சரி" என்ற எண்ணம் கொண்டவனாக இருக்க மாட்டான்.

    அதே நேரம், ஒரு உண்மையான முஸ்லிம் மற்ற மத மக்கள் பின்பற்றும் கடவுள்களை திட்டவும் மாட்டான்.

    "அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்" - குரான் 6:108 (Tamil Translation of meanings of Qur'an)

    ஆக, மற்ற மார்க்க மக்கள், இறைவனின் மார்க்கமல்லாத ஒன்றை பின்பற்றி கொண்டிருப்பதாக முஸ்லிம்கள் நினைத்தாலும் அந்த கடவுள்களை முஸ்லிம்களால் வசைபாட முடியாது, அப்படி ஒருவர் செய்தால் அவர் குரானுக்கு எதிராகத் நடக்கிறார் என்று அர்த்தம்.

    இஸ்லாம் மற்ற மார்க்க மக்களை அழகிய முறையில் அழையுங்கள் என்று சொல்கின்றது, அவர்களது கடவுகளை திட்டாமல் அவர்களுடன் அழகிய முறையில் உரையாடி அவர்களுக்கு உண்மையை புரிய வைக்க சொல்கின்றது.

    "உம் இறைவனின் பாதையில் விவேகத்துடனும், அழகிய உபதேசத்தை கொண்டும் நீர் அழைப்பீராக. இன்னும் அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் தர்க்கிப்பீராக" --- குரான் 16:125 ((Tamil Translation of meanings of Qur'an)

    ஆக, இறைவன் மாற்று மதத்தாருடன் அழகிய முறையில் விவாதிக்க சொல்கின்றான். இதைதான் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். மற்ற மத கடவுகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. அதற்கு எங்களுக்கு அனுமதியும் கிடையாது. அவர்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறுவது மட்டுமே எங்களின் மீது கடமையாகிறது.

    நாங்கள் மற்றவர்களை இஸ்லாத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது. சொல்லவேண்டியது எங்கள் கடமை, இஸ்லாத்தை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் இஷ்டம்.

    இங்கு வளவள கொலகொலவென்று நான் பேசவில்லை. இது தான் முஸ்லிம்களின் நிலைபாடு. புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.

    ReplyDelete
  12. @ஜெய பிரகாஷ்,

    //இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நிறய சொல்லலாம் திரு ஆஷிக் அவர்களே. ஆனால் இறைதூதரை பற்றி விமர்சித்தால் இளகிய மனம் படைத்த இஸ்லாமியர்களின் மனம் புண்பட்டு விடுமே//

    அழகிய முறையில் எல்லோரும் விவாதிக்கலாம்.

    //சிலர் சங்கடப்படுவதை தவிர்க்க முந்தைய எனது பதிலில் நீங்கள் எடிட் செய்த கருத்துகளுக்கு பதில் கூற என்னுடைய மெயில் ஐடிதருகிறேன்//

    இன்ஷா அல்லாஹ். மெயில் அனுப்புகின்றேன்...

    உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  13. பதிலுக்கு நன்றி திரு ஆஷிக் அஹமது அவர்களே

    // ஒரே இறைவன் பல வாழ்வியல் நெறிகளை (மார்க்கங்களை) சொல்லுவானா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.//
    ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் ஓவ்வொரு தூதர்களை அனுப்புகிறான். அவர்களை எல்லாம் வாழ்வியல் நெறிகளை சொல்ல அனுப்பவில்லையா? ஒரு தூதர் ஒரு கருத்தை சொல்கிறார். இன்னொருவர் அதற்கு மாற்றமாக சொல்கிறார். கடைசியாக ஒருவர் அவை எல்லாமே தவறு என்னிடம் கடவுள் சொன்னவை மட்டுமே சரி என்கிறார். மற்ற வாழ்வியல் நெறிகளில் மனித கரம் விளையாடிவிட்டது என்கிறார். எல்லாம் வல்ல கடவுள், தான் கொடுத்த வேதத்தில் மனித கரம் விளையாடும் வரை என்ன செய்து கொண்டு இருந்தாரோ தெரியவில்லை . ஒரே கடவுள் தானே இப்படி வேறு வேறு வாழ்கை நெறிகளுடன் பல தூதர்களை அனுப்பினார்.

    //அப்படி ஒருவர் செய்தால் அவர் குரானுக்கு எதிராகத் நடக்கிறார் என்று அர்த்தம்.//
    // மற்ற மத கடவுகளை திட்டுவது எங்கள் வேலை இல்லை. அதற்கு எங்களுக்கு அனுமதியும் கிடையாது.//
    . நீங்கள் அதை செய்யாமல் இருக்கலாம் திரு ஆஷிக் அவர்களே. ஆனால் பிற சமய மக்களையும் அவர்கள் வணங்கும் கடவுள்களையும் கேவலமாக வசை பாடும் முஸ்லிம்கள் அறவே இல்லை என்று 100 சதம் உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா? என்னால் அப்படிப்பட்டவர்களை படம் பிடித்து உங்களிடம் காட்டிக்கொண்டு இருக்க முடியாது. அப்படியே செய்தாலும் அவர்கள் குரானுக்கு எதிராக நடக்கிறார்கள் என்று அவர்களை மார்க்கத்தை விட்டு விலக்கி விடுவீர்களா?.

    //. இது தான் முஸ்லிம்களின் நிலைபாடு. புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.//

    எல்லா முஸ்லிம்களும் இந்த நிலைப்பாடுடன் தான் இருக்கிறார்களா? நிஜத்தில் அப்படி இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பே இல்லையே.

    M. Jayaprakash
    Kanyakumari

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயறால் ஆரம்பம் செய்கின்றேன்.
    ஒரு கேள்வி......
    ஒரு மகன் தன் தாயை திட்டுகிறான் அல்லது அவதூறாக பேசுகிறான் அல்லது அடிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் அதற்காக அந்த தாய் அவனை வெறுத்துவிடுவாளா அல்லது அவளுக்கு தண்டனை கொடுப்பாளா?
    இல்லை மாறாக, அவன்மீது பரிதாபப்படுவாள் ஆண்டவனிடம் அவனுக்காக ப்ரார்த்தனை செய்வாள். அதுவே தாயின் பண்பு.......
    அதைப்போல நம்மை படைத்த இறைவன் நாம் அவனையே இல்லை என்ற போதிலும் அதற்காக அவன் நம்மை தண்டிப்பானா மன்னிக்ககூடியவன் தானே கடவுள்?
    இப்பொழுது ஒரு சந்தேகம்....

    மேலே நான் கூறிய எடுத்துக்காட்டு தாய் , இது இறைவனுக்கு இனை வைத்ததாகுமா? இறைவனை பற்றி நாம் பேசும் போது ஏதெனும் எடுத்துக்காட்டு கூற வேண்டி உள்ளது... இது இணை வைப்பதாகுமா?

    ReplyDelete
  15. இஸ்லாம் ஒரு இடத்தில பரவுகிறது என்பது உண்மையானால் அங்கே மூடர்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம்,. உலக அளவில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதை வைத்தே இதை அறிந்து கொள்ளலாம். மூடனாக இருந்தால்தான் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியும். இந்த பதிவை வைத்து பார்த்தால் பிரிட்டன் விரைவில் முட்டாள்களின் தேசமாக ஆக போகிறது. பாவம்

    ReplyDelete
  16. Anony nanbar avargale ualagam muzhuvadhum islam miga vegamaga paravikkondu irukkiradhu.Appadiparthal ulagil ulla nadugal muttalgal nadugalaga marikondu irukkiradhu.arivaliyagiya neengal endha nattil vazhveergal.

    ReplyDelete
  17. நானும்

    ReplyDelete