Monday, October 11, 2010

வினவின் பித்தலாட்டம் அம்பலம்...



அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

முதலில் வினவு தளத்தினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 

இந்த பதிவில் உங்களது பித்தலாட்டம், தில்லுமுல்லு ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவர பட்டுள்ளது. உங்களுடைய நேர்மையின்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இதற்காக தாங்கள் தனி நபர் விமர்சனங்களிலோ அல்லது பதிவை திசை திருப்பும் விதமாகவோ இறங்க வேண்டாம். இங்கு தரப்பட்டுள்ள ஆதாரங்கள் தவறு என்று தாங்கள் நினைத்தால் தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். திருத்தி கொள்கின்றேன்.  

பதிவிற்கு செல்வோம்..

இரு நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்னையை என் கவனத்திற்கு கொண்டு வந்தது சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்கள் (நெத்தியடி முஹம்மத் என்ற பெயரில் வினவு தளத்தினருக்கு அறிமுகமானவர்).

வினவு தளத்தை பின் தொடர்பவர்களுக்கு தெரிந்திருக்கும், சில நாட்களுக்கு முன்னர் வினவு தளத்தில் "மாக்சிய ஆசான்கள், பகத்சிங் படங்கள் சூழ ஒரு இசுலாமியத் திருமணம்!!" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. 

இது சம்பந்தமாக விவாதங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக நடந்து கொண்டிருக்கின்றன. 

இரு நாட்களுக்கு முன்னர் முஹம்மது ஆஷிக் வினோதமான இரு பின்னூட்டங்களை கண்டிருக்கின்றார் (அக்டோபர் 8 ஆம் தேதி). அதாவது, நந்தன் என்பவர் பின்வரும் பின்னூட்டத்தை இடுகின்றார். 

1.மணமகனும் மணமகளும் தங்களின் கருத்துக்களை கூறினால் இன்னும் பல உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.

இந்த பின்னூட்டம் இடப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு "மணமகன் அலாவுதீன்" என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வருகின்றது. 

என்ன ஆச்சர்யம் என்றால், நந்தனுக்கு பக்கத்தில் இருக்கும் படமும் (ரோஸ் கலர் படம்), அலாவுதீனுக்கு பக்கத்தில் இருக்கும் படமும் ஒன்றாக இருந்திருக்கின்றது. ஒரே மெயில் ஐடியில் இருந்து பின்னூட்டம் வந்தால் தான் இரண்டு படமும் ஒன்றாக இருக்கும். ஆக, இந்த இரண்டு பின்னூட்டத்தையும் இட்டது ஒரே நபர். அது நந்தன். அலாவுதீன் என்ற பெயரில் எழுதிய போது மெயில் ஐடியை மாற்ற மறந்திருக்கின்றார் நந்தன். அதனால் தான் ஒரே படம் வந்து விட்டது.

அடுத்து வந்தது மிகப்பெரிய அதிர்ச்சி. அதாவது, சில நிமிடங்கள் கழித்து refresh செய்து பார்த்தால் அலாவுதீனுடைய படம் மாறியிருக்கின்றது. இப்போது, பின்னர் வந்த "மணமகள் சப்னா அஸ்மி" என்ற பின்னூட்டத்தின் படமும், அலாவுதீனுடைய படமும் ஒன்றாக இருக்கின்றது. அதாவது, மணமகளும் மணமகனும் ஒரே ஐடியில் இருந்து பின்னூட்டம் இட்டது போன்ற எண்ணத்தை கொடுப்பதற்காக.

சரி, யார் பின்னூட்டத்தின் படங்களை மாற்ற முடியும்? தள moderator தானே? அப்படியென்றால் நந்தன் என்பவர் moderator பொறுப்பில் இருப்பவரா? வினவின் adminகளில் ஒருவரா நந்தன்?

மணமகன் பெயரில் வினவே ஒரு பின்னூட்டமிட வேண்டிய அவசியமென்ன? யாரை முட்டாளாக்குகின்றது வினவு? படிப்பவர்களுக்கு வினவு செய்யும் துராகமல்லவா இது?

இதையெல்லாம் முஹம்மது ஆஷிக் தெளிவாக விளக்கினார். நான் "இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, உங்களிடம் screen shot இருக்கின்றதா?" என்று கேட்டேன். "இல்லை" என்றார். "அப்படியென்றால் ஒன்றும் செய்ய முடியாது, விஷயத்தை இத்தோடு தள்ளி வைத்துவிடுவோம்" என்று கூறினேன்.

என்னிடம் கூறிய இந்த விஷயத்தை ஹைதர் அலியுடமும், ஷேக் தாவுத்திடமும் கூறியிருக்கின்றார் முஹம்மது ஆஷிக்.  

விஷயம் முடிந்து விட்டது, அரிய வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்று நினைத்தால், நேற்று வினவு அடித்தார்கள் பாருங்கள் மற்றொரு கூத்தை... ஒருவர் ஒருமுறை தில்லுமுல்லு செய்யலாம். ஆனால் மறுபடியுமா?

ஆம், முஹம்மது ஆஷிக் சொன்னது போன்ற ஒன்றை மறுபடியும் அரங்கேற்றி காட்டியது வினவு. இந்த முறை அனைத்தையும் screen shot எடுத்துவிட்டேன்.

சில நாட்களாக மணமகனிடமும், மணமகளிடமும் ஒரு கேள்வியை கேட்டு வருகின்றேன் நான். அதற்கு பதில் என்று "அலாவுதீன்" (பின்னூட்டம் நம்பர் - 29) என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்தது.

இந்த முறை மாட்டுவார்களா என்று போய் பார்த்தால் வசமாக சிக்கிக்கொண்டார்கள். மறுபடியும் நந்தனுக்கு வந்த அதே படம். இந்த முறையும் மெயில் ஐடியை மாற்ற மறந்து விட்டார் நந்தனாகிய வினவு. அனைத்தையும் screen shot எடுத்து வைத்து கொண்டேன். 


(நந்தனுடைய படமும், அலாவுதீனின் படமும் ஒன்று தான் என்பதை கவனியுங்கள்..)



அந்த பக்கத்தை அப்படியே வைத்து கொண்டு மற்றொரு tabபில் மற்றொரு வினவு பக்கத்தை திறந்து வைத்துக்கொண்டேன். எப்படியும் சில நிடங்களில் தன் தவறை உணர்ந்து மறுபடியும் அலாவுதீனின் படத்தை மாற்றுவார்கள், screen shot எடுக்கலாம் என்ற எண்ணம்தான்.

இந்த நேரத்தில் ஹைதர் அலி என்ன செய்தாரென்றால் வினவில் பின்வரும் பின்னூட்டத்தை இட்டார் (அவருக்கு தான் முன்னமே இவர்களுடைய பித்தலாட்டம் தெரியுமே). 

....ஒரு சின்ன கேள்வி ரொஸ் கலர்ல வந்த நீங்க புளு கலர்ல எப்புடி மாறிங்க மாப்புள்ளகாரரு இப்ப ரொஸ் கலர்ல மாறியிட்டாரு என்ன நடக்குது?

ஹைதர் அலி இப்படி சொன்னது தான் தாமதம். தங்கள் அறியாமையை உணர்ந்த வினவு மறுபடியும் அலாவுதீனுடைய படத்தை மாற்றி விட்டது.

இந்த தருணத்திற்காக காத்திருந்த நான் அதனையும் screen shot எடுத்து விட்டேன்.

(அலாவுதீனின் படம் மாற்றப்பட்டிருப்பதை கவனியுங்கள்)


இதற்கு பிறகு நடந்தது தான் இன்னும் நகைச்சுவை. அதாவது, முதலில் வெளியான அலாவுதீனின் படமும் (பின்னூட்டம் நம்பர் - 18) பின்னர் வெளியான அலாவுதீனின் படமும் ( பின்னூட்டம் நம்பர் - 29) வேறு வேறாக இருந்தன. அதனால் என்ன செய்தார்கள் என்றால், 29 ஆம் நம்பர் பின்னூட்டத்தில் உள்ள படத்தை போலவே 18 ஆம் நம்பர் பின்னூட்ட படத்தை மாற்றி விட்டார்கள். அதுவும் அழகாக screen shot எடுக்கப்பட்டது.

(முன்னர் இருந்த 18 ஆம் நம்பர் பின்னூட்ட படம்)

(பின்னர், 29 ஆம் நம்பர் பின்னூட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட 18 ஆம் நம்பர் பின்னூட்ட படம்)


ஆக, இவர்கள் செய்ததெல்லாம் பித்தலாட்டம், தில்லுமுல்லு. அலாவுதீன் என்ற பெயரிலும், சப்னா பெயரிலும் பின்னூட்டமிட்டு மக்களை முட்டாளாக்கி இருக்கின்றது வினவு.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்,
நந்தன்=அலாவுதீன்=சப்னா அஸ்மி=வினவு 

எதற்காக வினவு இப்படியொரு கீழ்த்தரமான செயலை செய்ய வேண்டும்? அலாவுதீன் என்ற பெயரில் வினவு போட்ட பின்னூட்டங்களை கவனித்தால் விஷயம் புரியும். "இஸ்லாமியர்களே கம்யுனிசத்தின் பின்னே வந்து விடுங்கள்" என்று சொல்லுவதாகவே அமைந்தன பின்னூட்டங்கள். 

வினவிற்கு ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். உங்களுக்கும், எங்களுக்கும் அடிப்படையிலேயே பிரச்சனைகள். அதனால் உங்களது எண்ணம் (இறைவன் நாடினாலன்றி) நிறைவேறாது. ஆன்மீகத்திற்கு இஸ்லாமும், வாழ்க்கைக்கு கம்யுனிசமும் என்பது போன்ற வாதங்கள் எல்லாம் அறிவுக்கு ஒத்துவராத ஒன்று. இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. எங்களுக்கு ஆன்மீகமும் இஸ்லாம் தான், வாழ்க்கை நெறியும் இஸ்லாம் தான். அதனால் உங்களது எண்ணங்கள் நிறைவேற போவதில்லை.

நான் மறுபடியும் கூறிக்கொள்கின்றேன். இந்த பதிவு உங்களது நேர்மையின்மையை வெளி உலகிற்கு எடுத்து காட்டும் ஒரு முயற்சியே.  நாங்கள்தான் உண்மையான கம்யுனிஸ்ட்கள் என்று தம்பட்டம் அடிப்பீர்களே,  அப்படியென்றால் உண்மையான கம்யுனிஸ்ட்கள் எப்படியிருப்பார்கள் என்று எங்களுக்கு அறிய தந்ததற்கு மிக்க நன்றி. இனிமேலாவது நேர்மையுடன் நடக்க முயற்சியுங்கள்.

இந்த பதிவில் தவறிருந்தால் சுட்டி காட்டவும். திருத்தி விடுகின்றேன்.

உங்களுக்கு இறைவன் நேர்வழியை காட்டட்டும்...ஆமின்.

பின் குறிப்பு: 

இன்னொரு தமாஷ் இருக்கின்றது, அதையும் கேட்டு விட்டு செல்லுங்கள். அதாவது, இந்த நந்தன் இருக்கின்றாரே, அவருடைய கடைசி (இப்போதைக்கு) பின்னூட்டத்தின் (பின்னூட்டம் நம்பர் - 28) படம் மட்டும் வேறாக இருந்தது. அதாவது, அவருடைய மற்ற பதினோரு பின்னூட்டங்களுக்கும் ரோஸ் கலர் படம் இருந்தது, இந்த கடைசி/பனிரெண்டாம் பின்னூட்டத்திற்கு மட்டும் நீல கலர் படம் வந்து விட்டது.  வேறொரு idயில் இருந்து எழுதி இருப்பார் போல.

இதையும் பின்னர் அறிந்து கொண்ட வினவு சகோதரர்கள், குழப்பம் ஏற்படுத்துவதற்காக, நந்தனுடைய எட்டு பின்னூட்டங்களுக்கு ரோஸ் கலர் படத்தையும், நாலு படங்களுக்கு நீல கலர் படத்தையும் போட்டுவிட்டார்கள். அவை அனைத்தையும் screen shot எடுத்தாகி விட்டது. அனைத்தையும் இங்கே போட முடியாது என்பதால் சாம்பிளுக்கு ஒன்று.

(முன்னர் எடுத்தது)


(பின்னர் எடுத்தது)


இன்னும் எத்தனை பொய் பெயரில் வினவே பின்னூட்டம் இடுகின்றதோ...இறைவனே அறிவான். புரட்சி புரட்சி என்கின்றார்களே...ஆமாம் ஆமாம், உண்மையிலேயே புரட்சிதான்...   

இறைவா, வினவு போன்ற பித்தலாட்டகாரர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுவாயாக...ஆமின்.

--------------------------------
இப்பதிவின் தொடர்ச்சியை ("திருந்த மாட்டீர்களா வினவு?") படிக்க இங்கே சுட்டவும்.
--------------------------------

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






112 comments:

Anonymous said...

அண்ணே நீங்க ஒரு துப்பறியும் புலிண்ணே... அப்படியே புல்லரிக்குது... பயங்கரமா ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரன் ஆஷிக்,
வினவின் மறுபெயரே பித்தலாட்டம் தான். இவர்கள் மொத்தமாக ஒரு பத்து பேரு கூட இணையத்தில் தேற மாட்டார்கள். ஆனால் இவர்கள் கட்டுரைக்கு ஓட்டுக்களை பார்த்தால் அசந்து தான் போவோம். இதை கூட இணையதளத்தில் பல்வேறு சகோதரர்கள் கண்டுபிடித்து நாரடித்தும் இவர்கள் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. வினவே பல அவதாரங்கள் எடுத்து பின்னூட்டத்தில் வருவது மிக மிக கேவலமான செயல். இன்று கையும் களவுமாக மாட்டியிருக்கின்றார்கள்.

வினவு - நந்தன்- அலாவுதீன் எல்லாம் ஒன்னு
புரட்சி புரட்சி என்று சொன்னவங்க வாயில மண்ணு.

கிருத்திகன் said...

என்ன சொல்லி என்ன பிரயோசனம். தள மட்டுறுப்பவர்கள்தான் ஜார்ஜ் புஸ்ஸூ போன்ற பெயர்களில் கும்மியடிப்பவர்கள். பச்சைக் கோழமை இது வினவு

Anonymous said...

ஒரு பக்கம் சோபா சக்தி, இன்னொரு பக்கம் ஜெயமோகன், இன்னொரு பக்கம் இஸ்லாமிய பதிவர்கள் என எல்லோரும் ஒரே சமயத்தில் இப்படி துவைத்து எடுத்தால் என்னதான் செய்யும் வினவு, பாவம் வினவு..

நெத்தியடி முஹம்மத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரன் ஆஷிக்,

நந்தனிடம் மேற்படி கோல்மாலை கண்டுபிடித்து கேட்ட சகோதரர் ஹைதருக்கு உடனடியாக 'வெந்நீர் ஊற்றிக்கொண்ட காலுடன்' ஓடிவந்து வினவு('?') சொன்னது: "க.க.க.போ".

///"க ள்ளத்ததனத்தை க ண்டுக்காம க ப்சிப்புன்னு
போ ய்டுங்க"///

ஆனால், நீங்க இப்படி வினவின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி வினவோட மானத்தை (அப்படி ஒன்று இருக்கும் என்று வைத்துக்கொள்ளும் பட்சத்தில்) சந்தி சிரிக்க வைத்து விட்டீர்களே.

சுகுணாதிவாகரின் அதிரடி பதிவின் பயனாய், ஏற்கனவே வினவில் எந்த பதிவு வந்தாலும் அவற்றை நம்பாமல் 'இது வினவு எழுதுனதா அல்லது மண்டபத்துல யாராவது (பார்ப்பனர்) எழுதுனதா' என்று சந்தேகம் மக்களுக்கு...!

உடன்பிறப்பின் உபயத்தால், வினவு திரட்டிகளின் ஓட்டுப்பட்டையில் செய்த திருட்டுத்தனம் அம்பலமாகியது. அதனால், வினவில் ஓட்டுக்கள் செல்லாக்காசாகி விட்டன. வினவின் ஓட்டுக்களை யாரும் பொருட்படுத்துவதில்லை.

இனிமேல் உங்கள் உபயத்தால்... இனி 'சொந்த பிளாக்கர் லோகோ' இல்லாமல்... 'வினவு தரும் வெத்து பொம்மைப்படம்' கொண்டு வினவில் எந்த பின்னூட்டம் வந்தாலும் 'இது வினவே தனக்குத்தானாகவே போட்டுக்கொண்டதோ' என்ற சந்தேகம் வந்து விட்டது.

'வினவின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறுவது இது எத்தனையாவது முறை' என்று யாராவது குறிப்பெடுத்துக்கொள்ளுங்களேன்.

குட்டுடைபட்ட கேள்விக்குறி ஜூன் மாதம் தனி பிளாக் ஆரம்பித்து, மூன்று பேரை நக்கலடித்து ஒரே ஓர் பதிவிட்டு... 'நான் வினவு இல்லீங்கோ' என்றும், அதற்கு வாழ்த்தி வினவு முதல் பின்னூட்டம் இட்டு 'நான் கேள்விக்குறி இல்லீங்கோ' என்று பதிவுலகிற்கு ப்ரூவ் பண்ணியதுபோல போல, இப்போது நந்தனும் ஆஷிக் அஹ்மதை திட்டி ஒரு தனி பிளாக் ஆரம்பிச்சி 'ஒரே ஓர் பதிவு' போட்டுட்டா போச்சு...! என்ன இப்ப...? அப்புறம் நந்தனும் தனி பதிவர்... வினவுக்கு ஓட்டுக்கு ஓட்டும் ஆச்சு... பின்னூட்டத்துக்கு பின்னூட்டமும் ஆச்சு...!

க.க.க.போ.
:) :)) :)))

ஏழர said...

படு மொக்கையான ஆதாரம், கிருத்திகன், மேலே அலாவுதின் பெயரில் உங்கள் படம் தெரியுமளவுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் செய்து தரவா 5 நிமிடம் கூட அதுக்கு தேவையில்லை.... பாவம் நெத்தியடி... இவ்வளவு சீப்பாக போயிருக்க வேணாம்

ஜமீல் said...

எதிர்க்குரல் நன்றாக இருக்கிறது.

இன்னும் தீவிரமாக எழுத வாழ்த்துகள்!

ஏழர said...

இதை நெத்தியடி முகம்மது செய்திருப்பது நல்ல முரண். ஏனென்றால் வினவில் ஆள்மாறாட்டம் செய்து, போலி பெயர்களில் வந்து அம்பலப்பட்டு போய், மன்னிப்பு கேட்டு பிறகு மறுப்டியும் வேறு பெயரில் வந்து இதுக்கு மேல் அசிங்கப்பட ஒன்றுமில்லை எனும் அளவுக்கு போனவர் இந்த நெத்தியடி. ஆக பகையை தீர்த்துக்கொள்ள எப்படி பிராடு வேலை செய்திருக்கிறார் பாருங்கள். போகட்டும். இப்படிப்பட்ட ஒரு அயோக்கிய சிகாமணியான நெத்தியடி முகம்மதை எப்படி நீங்கள் சகோதரர் என்கிறீர்கள் ஆஷிக்

Aashiq Ahamed said...

Dear brother ஏழர,

//படு மொக்கையான ஆதாரம், கிருத்திகன், மேலே அலாவுதின் பெயரில் உங்கள் படம் தெரியுமளவுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் செய்து தரவா 5 நிமிடம் கூட அதுக்கு தேவையில்லை.... பாவம் நெத்தியடி... இவ்வளவு சீப்பாக போயிருக்க வேணாம்//

heee...heeee....

your brother,
aashiq ahamed a

ஏழர said...

heee...heeee....///////

அதான், அதேதான்,, அவ்வளவு சிரிப்பாய் சிரிக்குது இந்த பதிவும் ஓட்டை ஆதாரமும்

Aashiq Ahamed said...

Dear brother ஏழர,

assalaamu alaikum,

//இதை நெத்தியடி முகம்மது செய்திருப்பது நல்ல முரண். ஏனென்றால் வினவில் ஆள்மாறாட்டம் செய்து, போலி பெயர்களில் வந்து அம்பலப்பட்டு போய், மன்னிப்பு கேட்டு பிறகு மறுப்டியும் வேறு பெயரில் வந்து இதுக்கு மேல் அசிங்கப்பட ஒன்றுமில்லை எனும் அளவுக்கு போனவர் இந்த நெத்தியடி. ஆக பகையை தீர்த்துக்கொள்ள எப்படி பிராடு வேலை செய்திருக்கிறார் பாருங்கள். போகட்டும். இப்படிப்பட்ட ஒரு அயோக்கிய சிகாமணியான நெத்தியடி முகம்மதை எப்படி நீங்கள் சகோதரர் என்கிறீர்கள் ஆஷிக் //


did you ever read the post?...don't joke. all these things are done by me and not mohammed ashik.

Better read the post and comment...

your brother,
aashiq ahamed a

ஏழர said...

done by me and not mohammed ashik.//// ஓ நீங்க நெத்தியடி இல்லையா... நிஜம்மாவா... நம்பிட்டேன்!

fa said...

Dear Mr. Asik ahmed,

Assalamu alikkum,

I find so many frauds and lies in 'vinavu' posts, i expect the time to show their frauds with the correct proof, now i am very happy to see your post.

i request you to allow me to publish this post in my blog with your name.

Fa.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் ஏழர,
தப்பு செய்து விட்டு நீங்கள் அதை சமாளிக்க அடிக்கும் லூட்டிகள் இருக்கிறதே எங்களுக்கெல்லாம் டைம் பாஸ் தான். ஆனால் இவ்வளவு கேவலமாகவா புரட்சி செய்ய வேண்டும்? இந்த லட்சணத்தில் நீங்கள் தான் இந்தியாவை உண்மையான சனநாயக நாடாக்க போகின்றீர்களா? படு கேவலம். உங்களுடைய புரட்சி இப்படியா பல்லிளிக்க வேண்டும்? வினவு இவ்வளவு கேவலமான வேலையை செய்து விட்டும் ஒன்றுமறியாதது போல நடிக்கிறதே. கள்ள ஒட்டு போடும் அரசியல் கட்சிகளை விட கேவலமான ஆட்களையா நீர். நெத்தியடி முஹம்மத் சொன்னது போல உங்கள் புரட்சி படு ஜோரு தான் ஏழர.

Aashiq Ahamed said...

wa alaikkum salaam,
//i request you to allow me to publish this post in my blog with your name.//
ok brother. publish this post in ur bolg and spread their frauds as much as possible.

ஏழர said...

ஹிஹி பிரதர்.ஆஷிக்,உங்க கருத்துக்கு அங்க வச்ச ஆப்புக்கு பதில் சொல்ல முடியாமல் இது மாதிரி எழுதி எஸ்கேப்பாகும் நோக்கம் உங்களுக்கு இருக்கலாம்.. ஆனாலும் உங்களால பொம்மையாதான் மாத்த முடிஞ்சது, அலாவுதின் எழுதின எழுத்தை மாத்த முடியலியே, அதுக்கு பதில்சொல்லுங்கப்பு.. இல்லேன்னா எழுத்த மாத்தி ஒரு ஸ்கிரீன்ஷாட் போடுங்க..

ஏழர said...

தாவூத் ஜி, உங்க பதிவுல நீங்க வினவை திட்டி எழுதுன அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் ஐ விமரிசனம் கூட பண்ணதில்லையே, அவங்களோட எதாவது அன்டர்ஸ்டாண்டிங்கா?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
இப்படி தவறையும் செய்து விட்டு இந்த சப்பைக்கட்டு கட்டுவது தேவையா? ஒரு வேளை நாங்கள் சொல்லுவது பொய் என்றால் , உங்களுடைய (யார் கண்டது. இந்த ஏழர கூட வினவாக இருக்கலாம்) வினவு தளத்தில் சகோதரர் ஹைதர் அலி நந்தனிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கின்றாரே? அது பொய்யா? அடேங்கப்பா இதுக்கும் எதாச்சும் சப்பைக்கட்டு இருக்கா ஏழர?
வினவில் ஹைதர் அலி போட்டிருக்கின்ற பின்னூட்டம்

{{ஹைதர் அலி
போகதே நந்தா போகதே, ////இது வீண். ஏனெனில் அவர் ஒரு புளுகர். புஜ மீதான அவரது ”புளுகுமூட்டை” குற்சாட்டுக்கு எங்களின் ஆணித்தரமான பதிலுக்கு மறு மொழி கூறவில்லையே!///// கண்டிப்பாக பதில் கூறுகிறேன் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கேள்வி ரொஸ் கலர்ல வந்த நீங்க புளு கலர்ல எப்புடி மாறிங்க மாப்புள்ளகாரரு இப்ப ரொஸ் கலர்ல மாறியிட்டாரு என்ன நடக்குது?}}

ஏழர said...

அதுக்கு கேள்விக்குறி பதில் சொல்லியிருக்காறே தாவூத்ஜி, பாக்கலையா?

ஏழர said...

இந்த ஓட்டை பதிவிலேயே நந்தன் பூளு கலர்ல வரமாதிரி ஒரு படமும் இருக்கே.. வினவு பதிவிலேயும் இருக்கே..அப்புறம் என்ன இதுல பித்தலாட்டம்,நீங்க சொல்ற மாதிரி மோசடியின்னா எல்லா படமும் மாறியிருக்கனுமில்ல...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஆர்.எஸ்.எஸ் ஐ விமர்சனம் பண்ணவில்லையா? என்னுடைய பதிவில் சமீபத்தில் கூட ஆர்.எஸ் எஸ் பிதாமகர் கோல்வால்கரை பற்றி எழுதியிருக்கின்றேனே. அதை கவனிக்க வில்லையா? ஆர்.எஸ்.எஸ் முஸ்லிம்களை பொறுத்தவரை தெளிவான எதிரி. அவர்களை யாரும் நண்பர்கள் என்று புரிந்து கொள்வது கிடையாது. ஆனால் நீங்கள் மறைமுக எதிரி. நண்பர்கள் வேடமிட்டு திட்டமிட்டு முஸ்லிம்களை ஏமாற்ற கூடியவர்கள். ஆகையால் உங்களைப் பற்றி முஸ்லிம்களுக்கு தெரியபப்டுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அதிகமாக விமர்சிக்கின்றேன். இது தவறல்லவே.

ஏழர said...

எண்ணிக்கை தாவூத்ஜி எண்ணிக்கை, வினவை திட்டி எழுதிய பதிவும், ஆர்.எஸ்.எஸ் பற்றி எழுதிய பதவின் எண்ணிக்கையும் ஒப்பிட்டு பாருங்க ஜி

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//இந்த ஓட்டை பதிவிலேயே நந்தன் பூளு கலர்ல வரமாதிரி ஒரு படமும் இருக்கே.. வினவு பதிவிலேயும் இருக்கே..அப்புறம் என்ன இதுல பித்தலாட்டம்,நீங்க சொல்ற மாதிரி மோசடியின்னா எல்லா படமும் மாறியிருக்கனுமில்ல..//
இந்த கேள்விக்கு பதிவிலேயே பதில் சொல்லப்பட்டிருக்கு ஏழர. மீண்டும் ஒருமுறை பதிவை நன்றாக வாசிக்கவும். இப்போது சாப்பாட்டு இடைவேளை. இது சம்பந்தமாக என்னோட கருத்தை என்னுடைய வலைப்பூவில் இன்ஷா அல்லாஹ் சொளுகிறேன். அப்போது வினவின் முகத்திரை இன்னும் கிழியும்

ஏழர said...

ஒவ்வொரு முறை நீங்க கிழிக்கும் போது கிழிவது என்னவோ உங்க டவுசர்தான் தூவூத்ஜி

mohamed ashik said...

//இப்படிப்பட்ட ஒரு அயோக்கிய சிகாமணியான நெத்தியடி முகம்மதை எப்படி நீங்கள் சகோதரர் என்கிறீர்கள் ஆஷிக்//

:))) :)) :)

// Dear brother ஏழர,
assalaamu alaikum,

your brother,
aashiq ahamed a //---->!?!?!?

இதை நான் கண்டிக்க வில்லை பிரதர் 7 1/2.
:) :)) :)))


வினவின் பின்னூட்ட ஜனநாயகம் பாரீர்
வினவின் பின்னூட்ட ஜனநாயகம் பாரீர்
என்று எப்போதும் பெருமித கூப்பாடு.

ஆனால், எதிர்கருத்தை இட்டால் அதை மட்டுறுத்தி கிடப்பில் போட்டு சாவதானமாய் விவாத ஆட்டம் அடங்கியபின் வெளியிடுதல்.

பிற்பாடு வேறு பெயரில் வந்து உடனடி பிரசுரம் ஆகவேண்டி மீண்டும் கருத்திட்டால், "ஒத்துவராத மறுமொழி" என்று ஹிட்லரின் 'கான்செண்டிறேஷன் செல் கேம்ப்' போல ஒரு பக்கத்தை நிறுவி அங்கே தூக்கி அனைத்தையும் அமுக்கி விவாதமின்றி சாகடிப்பது.

சரி, 'அங்காவது காண்பவர் படித்து செல்லட்டுமே' என்று தொடர்ந்து கருத்து போட்டால் எப்போதுமே எங்குமே காண முடியாதபடி ஐடியை ஒரேயடியாய் தடுத்து கருத்துக்களை காணாப்பிணமாக்க வேண்டியது.

அப்புறம், வேறு வழியின்றி வேறு ஐடியில் வந்தால்... இப்போது செய்த அதே கயவாளித்தனத்தை அப்போது செய்து காட்டி 'நீ ஏன் உன் சொந்த ஐடியில் வர வில்லை?' என்று கொக்கரிப்பது.

///ஆனாலும் உங்களால பொம்மையாதான் மாத்த முடிஞ்சது, அலாவுதின் எழுதின எழுத்தை மாத்த முடியலியே, அதுக்கு பதில்சொல்லுங்கப்பு/// ---இதத்தானே அப்பு நான் அன்று கேட்டேன்? மீண்டும் மீண்டும் மீண்டும் 'எப்படி வேறு ஐடியில் வந்து கேள்வி கேட்பாய்' என்றீரே அப்பு, பதிலே சொல்லாமல்...!

'இனி இந்த ஃபிராடிடம் நமக்கு வேலை இல்லை' என்று ஒதுங்கினாலும்... உங்கள் பித்தலாட்டத்துக்கு அளவில்லாமல் போய் விட்டதால், அம்பலப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை... சகோதரர்... வினவு... சாரி... அரடிக்கட்டு... சாரி... ரியல் என்கவுண்டர்... சாரி... ஜார்ஜ் புஸ்ஸு... சாரி... பூச்சாண்டி... சாரி... MamboNo8... சாரி... NoGod7... சாரி... ளிமாகோ... சாரி... மரண அடி... சாரி போதம்கின்... சாரி... காட்டரபி... சாரி... கேள்விக்குறி... சாரி... நந்தன்... சாரி... அலாவுதீன்... சாரி... சப்னா அஸ்மி... சாரி...ஏழர.!(அப்பாடா... இப்பவாவது உங்க பெயர் நியாபகம் வந்துச்சே!)

mohamed ashik said...

எதற்காக அலாவுதீன்/ஆஸ்மி என்ற பெயரில் வினவு பின்னூட்டி இப்படியொரு கீழ்த்தரமான செயலை செய்ய வேண்டும்?

இப்படித்தான் திருட்டுத்தனம் செய்து உங்கள் 'ஒரிஜினல் கம்யூனிசத்தை' வளர்க்க வேண்டுமா?

அப்படி இன்னொரு '--இசத்தை' கொன்று அதன் உறுப்புக்களை திருடி எடுத்து பொருத்தித்தான் பிழைக்க வைக்க முடியும் என்ற அளவுக்கு நோயுற்று போய் சாக உள்ளதோ உங்கள் 'ரியல் கம்யுனிசம்'?

ஆம்-எனில் அப்படி ஒரு 'பித்தலாட்ட பிழைப்பு வெங்காய-இசம்' உழைக்கும் மக்களுக்கு அவசியமே இல்லை.

அடுத்த '--இசத்தை' கொன்று பிழைப்பதைவிட தானாகவே பிறர்க்கு தொல்லை இன்றி சாவது எவ்வளவோ மேல்.

அது செத்து தொலையட்டும்.

குறிப்பு: அடுத்த மதங்களை/கொள்கைகளை திட்டி மற்றதை தாழ்த்தி அதன் மூலம் இஸ்லாத்தை போலியாக உயர்த்திக்காட்டி எந்த இஸ்லாமிய தளங்களும் மார்க்கத்தை வளர்க்க வில்லை.

(நெத்தியடி முஹம்மத்)

ஏழர said...

முரண்பாட்டின் மூட்டை ஆஷிக் அவர்களே, அதே மணமகன் அலாவுதீனுக்கு (நம்பர் 18)நீங்கள் போட்ட பதில் பின்னூட்டம் அங்கதானே இருக்கு, அப்ப இந்த படம் மாறிய கதை உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு? இப்ப திடீர் ஞானம் எப்படி வந்ததுன்னும் கொஞ்சம் சோல்லுங்க

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
உண்மையில் உங்களுக்கு மூளை கொஞ்சமாவது வேளை செய்கின்றதா இல்லையா? இப்படி மடத்தனமாக கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
//முரண்பாட்டின் மூட்டை ஆஷிக் அவர்களே, அதே மணமகன் அலாவுதீனுக்கு (நம்பர் 18)நீங்கள் போட்ட பதில் பின்னூட்டம் அங்கதானே இருக்கு, அப்ப இந்த படம் மாறிய கதை உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு? இப்ப திடீர் ஞானம் எப்படி வந்ததுன்னும் கொஞ்சம் சோல்லுங்க//

இந்த கேள்விக்கு பதில் இந்த பதிவிலேயே இருக்குதே. பதிவை ஒழுங்கா படிக்காம இப்படி அறிவுக் கொழுந்து மாதிரி ஒரு கேள்வியா?
ஆஷிக்கின் பதிவிலிருந்து கீழேயுள்ள வரிகள்

சில நிமிடங்கள் கழித்து refresh செய்து பார்த்தால் அலாவுதீனுடைய படம் மாறியிருக்கின்றது. .........

விஷயம் முடிந்து விட்டது, அரிய வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்று நினைத்தால், நேற்று வினவு அடித்தார்கள் பாருங்கள் மற்றொரு கூத்தை... ஒருவர் ஒருமுறை தில்லுமுல்லு செய்யலாம். ஆனால் மறுபடியுமா? .................

ஆம், முஹம்மது ஆஷிக் சொன்னது போன்ற ஒன்றை மறுபடியும் அரங்கேற்றி காட்டியது வினவு. இந்த முறை அனைத்தையும் screen shot எடுத்து விட்டேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அய்யா ஏழர,
உங்க கேள்வி கேட்கும் தெறமையை நெனச்சா எனக்கு மலைப்பா இருக்குதுங்க. இப்படியே டெவெலப் பண்ணுங்க. நம்ம சுப்புரமனிய சாமியை மிஞ்சிடுவீங்க. என்னமோ போங்க ஏழர

ஏழர said...

அது எப்படிங்க தாவூத்ஜி, ஒரு மணிநேரம் கழித்து கமெண்ட் எழுதியிருக்காரு.. சில நிமிடத்துல மாறியிடுச்சுன்னா அதை குறிப்பிட்டிருக்கலாமே... ஏன் இப்படி வாயை கொடுத்து மாட்டிகிறீங்க

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அய்யா ஏழர,
//அது எப்படிங்க தாவூத்ஜி, ஒரு மணிநேரம் கழித்து கமெண்ட் எழுதியிருக்காரு.. சில நிமிடத்துல மாறியிடுச்சுன்னா அதை குறிப்பிட்டிருக்கலாமே... ஏன் இப்படி வாயை கொடுத்து மாட்டிகிறீங்க//
ஆஷிக்குக்கும், எனக்கும் ஹைதர் அலிக்கும் இந்த விசயத்தை (அதாவது வினவின் கோல்மால் மேட்டரை) சொன்னவர் நெத்தியடி. ஆனால் ஆதாரத்தை (அதாவது ஸ்க்ரீன் சாட்டை) அவர் எடுத்து வைக்க வில்லை. அப்போது ஒரு வேளை நாங்கள் இதை பிரச்ச்சனையாக்கியிருந்தால் மிக சுலபமாக வினவு ஆதாரமில்லை என்று தப்பித்து கொண்டிருக்கும். ஆகையால் எப்படியும் மீண்டும் வினவு இதே மாதிரி பித்தலாட்டத்தில் ஈடுபடும் என்ற அதீத நம்பிக்கையில் எதிர்க்குரல் ஆஷிக் காத்திருக்க (உங்க பாசையில் சொன்னால் விளக்கெண்ணையை கண்ணில் விட்டு காத்துக் கொண்டிருக்க) வினவு (அதாவது நந்தன் அதாவது அலாவுதீன் ) தவறு செய்ய அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து விட்டார் எதிர்க்குரல் ஆஷிக். விளக்கம் ஓகே வா.

ஏழர said...

பரவாயில்லை தாவூத்ஜி, போலி பின்னூட்டங்கள் போட்டு மாட்டிய நெத்தியடி என்கிற ஒரு உலகமகா பிராடுடன் கூட்டனி வைத்திருப்பதை ஒத்துக்கொண்டதற்கு. அப்படியே இந்த போலி ஸ்கிரீன் ஷாட் கிரியேட் பண்ணதையும் ஒத்துகங்க

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஆட்டை திருட போகின்றவனை திருடுவதற்கு முன்னாலேயே பிடித்தால் நான் திருடவே வரவில்லை. நான் திருடவே இல்லை என்று சாதிப்பான். ஆனால் ஆட்டை திருடிய பின்னர் கையும் களவுமாக திருடனை பிடித்தால் வசமாக சிக்குவான். இப்போது சுனா பானா வடிவேல் கேரக்டர் தான் ஞாபகம் வருகிறது நீங்கள் இங்கு விவாதிக்கும் போது. ஆனாலும் உங்க ஜமாளிப்பு சூப்பருங்க.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இது போலி ஸ்க்ரீன் சாட் என்றால் உங்க தளத்தில் சகோதரர் ஹைதர் அலி படம் (அதாங்க வினவு = நந்தன்= அலாவுதீன்) சம்பந்தமா எப்படி கேள்வி எழுப்ப முடியும்? ஆறாவது அறிவை யோசிச்சு பதில் சொல்லுங்க ஏழர.

ஏழர said...

இங்கே இப்ப சமாளிபிகேஷன் நடத்துவது நீங்கள்தான்... ரொம்ப பாவமா இருக்கு தாவூத்ஜி.. நெத்தயடிக்குதான் கோனல் புத்தி உங்களுக்காவது நல்ல புத்தியிருந்தா இந்த பிராடுதனத்துக்கு ஒத்து போகாம இருந்திருக்கலாமில்ல.. என்னவோ போங்க

mohamed ashik said...

//ஆஷிக்குக்கும், எனக்கும் ஹைதர் அலிக்கும் இந்த விசயத்தை (அதாவது வினவின் கோல்மால் மேட்டரை) சொன்னவர் நெத்தியடி. ஆனால் ஆதாரத்தை (அதாவது ஸ்க்ரீன் சாட்டை) அவர் எடுத்து வைக்க வில்லை.//---யாரோ ஒரு வினவின் அடிப்பொடி அல்லக்கை வினவிடம் நல்லபேர் வாங்க இதுபோல கேவலமான வேலை பார்த்து இருக்கும். கூடிய சீக்கிரம் வினவே இதனை பார்த்து கண்டிக்கும் அல்லது டெலிட் பண்ணிவிடும் என்று எதோ ஒரு பழைய கால நப்பாசையில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்காமல் ரெப்ரெஷ் போட்டுவிட்டேன். மகா தவறுதான். ஆனால், அந்த அல்லக்கையே தும்பிக்கை வினவு தான் என்று அறிந்து கொண்ட பின்னர் கூட உஷாராகாவிட்டால் என்ன செய்றது பிரதர் ஏழர?

///(உங்க பாசையில் சொன்னால் விளக்கெண்ணையை கண்ணில் விட்டு காத்துக் கொண்டிருக்க) வினவு (அதாவது நந்தன் அதாவது அலாவுதீன் ) தவறு செய்ய அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து விட்டார் எதிர்க்குரல் ஆஷிக். விளக்கம் ஓகே வா.///---செம ஷாட் ...!

ஏழர said...

கரெக்டா பின்னூட்டம் போட்ட அந்த அஞ்சு நிமிசத்துக்காக இவங்க 5 நாளா வேலை வெட்டியை விட்டு காத்திருந்து
டபக்குன்னு ஸ்கீரின் ஷாட் எடுத்தாங்களாம் கொஞ்சம் நம்பும்படியா எதனா சொல்லுங்கப்பா விட்டா அலாவுதீனுக்கு கல்யாணமே ஆகையின்னு சொல்லுவீங்க பல

mohamed ashik said...

//இங்கே இப்ப சமாளிபிகேஷன் நடத்துவது நீங்கள்தான்... ரொம்ப பாவமா இருக்கு தாவூத்ஜி.. நெத்தயடிக்குதான் கோனல் புத்தி உங்களுக்காவது நல்ல புத்தியிருந்தா இந்த பிராடுதனத்துக்கு ஒத்து போகாம இருந்திருக்கலாமில்ல.. என்னவோ போங்க//

--->>>சில திருத்தங்களுடன்:-

////இங்கே இப்ப சமாளிபிகேஷன் நடத்துவது நீங்கள்தான்... ரொம்ப பாவமா இருக்கு ஏழரஜி.. வினவுக்குத்தான் கோனல் புத்தி உங்களுக்காவது நல்ல புத்தியிருந்தா இந்த பிராடுதனத்துக்கு ஒத்து போகாம இருந்திருக்கலாமில்ல.. என்னவோ போங்க////

அட... என்கிட்டேயேவா? நான் தாங்க வினவுங்கிறீங்க்களா...

ஸ்ஸ்ஸ்...முடியல...

ஏழர said...

இசுலாமிய முறைப்படி கலியாணம் பண்ணலைன்ன ஒடனே அவங்க முசுலீமே இல்லேன்னு பின்னூட்டம் போட்ட பாஸிஸ்டுகள் கிட்டேயிருந்து வேற என்ன எதிர்பார்க்கமுடியும்னு தெரியல

mohamed ashik said...

//கரெக்டா பின்னூட்டம் போட்ட அந்த அஞ்சு நிமிசத்துக்காக இவங்க 5 நாளா வேலை வெட்டியை விட்டு காத்திருந்து டபக்குன்னு ஸ்கீரின் ஷாட் எடுத்தாங்களாம்கொஞ்சம் நம்பும்படியா எதனா சொல்லுங்கப்பா//---இதை எங்கள் அதிர்ஷ்ட்டம் என்பார்கள் மற்றவர்கள்.

உங்கள் பித்தலாட்டத்தை தோலுரிக்க தக்க சமயத்தில் உங்கள் தளத்தை எங்கள் மூலம் திறக்க வைத்த இறைவனுக்கே எல்லா புகழும் என்போம் நாங்கள்.

ஏழர said...

எழுதியிருக்குற கருத்துக்கு பதில் சொல்லமுடியாம நீங்க படற பாடு புரியுது.. எழுதியது அலாவுதினா இல்ல நந்தனா இல்ல வினவா இருந்தாலும் உங்க்கிட்ட பதிலே இல்லை.. அதை மறைக்கத்தான் இப்படி ஒரு ஒட்டு வேலையை செய்திருக்கீங்க என்ற உண்மையை எப்ப ஒத்துக்கப்போறீங்க

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அப்புறம் ஏழர,
நீங்க என்னதான் இங்கே சுனா பானா ஸ்டைல சமாளிச்சாலும் அப்பட்டமா வினவின் பித்தலாட்டம் வெளியே தெரியுது பாருங்க. இனிமேலாவது வினவை ( கேள்விக்குறியை, நந்தனை, அலாவுதீனை மற்றும் இன்னும் பலரை) அலர்ட்டா இருக்க சொல்லுங்க.

உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. அலாவுதீன் போட்டதா வினவு போட்டிருக்கின்ற பின்னூட்டத்திலேயே ஆயிரத்தெட்டு ஓட்டை இருக்கு. அதைப் பற்றி விலாவாரியா ஒரு பதிவை இன்ஷா அல்லாஹ் நாளைக்கு போடுகிறேன். முரண்பாடுகளின் மூட்டைகளாக ம.க இ. க காரர்கள் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுங்க அந்த பதிவு.

mohamed ashik said...

///இசுலாமிய முறைப்படி கலியாணம் பண்ணலைன்ன ஒடனே அவங்க முசுலீமே இல்லேன்னு பின்னூட்டம் போட்ட பாஸிஸ்டுகள்///---சரி நீங்களே சொல்லுங்க தோழர்...

அவங்க(மணமக்கள்) திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்ததா?

அவங்க திருமணம் புரட்சி கம்யுனிச முறைப்படி நடந்ததா?

அவங்க நாத்திகர்களா?

அவங்க ஆத்திகர்களா?

ஏழர said...

நல்லவேளை சங்பரிவாரங்களை எதிர்த்து களத்தில் நிற்பதும் எழுதுவதையும் கம்யூனிஸஸ்டுகள் செய்கிறார்கள் உங்களை மாதிரி டுப்பாக்கூர் பார்ட்டிகளிடம் அந்த பணியை ஒப்படைக்காத காரணத்துக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்லிவிடுங்க!

mohamed ashik said...

///எழுதியது அலாவுதினா இல்ல நந்தனா இல்ல வினவா இருந்தாலும் உங்க்கிட்ட பதிலே இல்லை..///--ஹலோ... எழுதியது அலாவுதினா இருந்தாதானே பதில் அளிக்கனுமா வேண்டாமா என்ற கேள்விக்கே போக முடியும்..? எழுதியதே வினவுன்னதும் அப்புறம் அதப்படிக்க என்ன இருக்கு?

'ஆளே செத்துபோய் ஒரு நாளாச்சுன்னு' டாக்டர் சொல்றார்... நீங்கள் என்னடான்னா, 'பிளட் டெஸ்ட் எடுங்க டாக்டர், யூரின் டெஸ்ட் எடுங்க டாக்டர்'-னு கத்திக்கிட்டு இருக்கீங்களே... ஏழர..?

mohamed ashik said...

தோழர் ஏழர....

"தம்பீ...! டீ இன்னும் வரலை....!!!"

/////////
எதற்காக அலாவுதீன்/ஆஸ்மி என்ற பெயரில் வினவு பின்னூட்டி இப்படியொரு கீழ்த்தரமான செயலை செய்ய வேண்டும்?

இப்படித்தான் திருட்டுத்தனம் செய்து உங்கள் 'ஒரிஜினல் கம்யூனிசத்தை' வளர்க்க வேண்டுமா?

அப்படி இன்னொரு '--இசத்தை' கொன்று அதன் உறுப்புக்களை திருடி எடுத்து பொருத்தித்தான் பிழைக்க வைக்க முடியும் என்ற அளவுக்கு நோயுற்று போய் சாக உள்ளதோ உங்கள் 'ரியல் கம்யுனிசம்'?

ஆம்-எனில் அப்படி ஒரு 'பித்தலாட்ட பிழைப்பு வெங்காய-இசம்' உழைக்கும் மக்களுக்கு அவசியமே இல்லையே?

அடுத்த '--இசத்தை' கொன்று பிழைப்பதைவிட தானாகவே பிறர்க்கு தொல்லை இன்றி சாவது எவ்வளவோ மேல் அல்லவா?

அது செத்து தொலையட்டுமே?!

குறிப்பு: அடுத்த மதங்களை/கொள்கைகளை திட்டி மற்றதை தாழ்த்தி அதன் மூலம் இஸ்லாத்தை போலியாக உயர்த்திக்காட்டி எந்த இஸ்லாமிய தளங்களும் மார்க்கத்தை வளர்க்க வில்லையே?

/////////

ஏழர said...

வினவுதான் எதழுதியது என்பது உங்கள் குற்றச்சாட்டு, அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை அண்ணே.. ஆதாரம் கொடுங்க, டீ என்ன பூஸ்டே கொண்டுவறேன்..

அட இந்த ஸ்கிரீன்ஷாட்டுதான் ஆதாரம்னு உளரப்பிடாது, அப்புறம் உங்க படம் போட்ட ஸ்கிரீன்ஷாட்டை நானும் தருவேன்...

கிருத்திகன் said...

ஏழர, எனக்கு இந்த அரசியலெல்லாம் தெரியாது. என்னுடைய ஒரு பின்னூட்டத் தொடரை வினவு நீக்கினார்கள். அதற்கு ஜார்ஜூ புஸ்ஸூ என்கிற பெயரில் பதிலுறுத்த நபர் என்னுடைய பின்னூட்டங்களை மட்டுறுத்த நபர் என்பது மட்டும் உறுதி. என்னுடைய பின்னூட்டம் அனுமதிக்கப்பட்ட அடுத்த நொடி ஜார்ஜூ புஸ்ஸூ பதிலிட்டுக்கொண்டிருந்தார்.

mohamed ashik said...

தெரியுமே..! நீங்கள் மிகப்பெரிய லும்பன் என்று!

இவை ஆதாரங்கள் இல்லை எனில் வேறு என்ன ஆதாரங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆகக்குறைந்தபட்ச நேர்மை கூட அறவே இல்லாத நீங்களெல்லாம் என்னத்த... புரட்சி பண்ணி... என்னத்த புண்ணாக்கு ஆட்சி அமைத்து... அடப்போங்கய்யா... பிழைப்புவாத லும்பன்களா...

mohamed ashik said...

மிக்க நன்றி சகோதரர் கிருத்திகன் அவர்களே...

///கிருத்திகன் said...

ஏழர, எனக்கு இந்த அரசியலெல்லாம் தெரியாது. என்னுடைய ஒரு பின்னூட்டத் தொடரை வினவு நீக்கினார்கள். அதற்கு ஜார்ஜூ புஸ்ஸூ என்கிற பெயரில் பதிலுறுத்த நபர் என்னுடைய பின்னூட்டங்களை மட்டுறுத்த நபர் என்பது மட்டும் உறுதி. என்னுடைய பின்னூட்டம் அனுமதிக்கப்பட்ட அடுத்த நொடி ஜார்ஜூ புஸ்ஸூ பதிலிட்டுக்கொண்டிருந்தார்.
Monday, October 11, 2010 ////


----தோழர் ஏழர...!
இதுவும் கூட ஒரு சாட்சி / ஆதாரம் தான்.
என்ன சொல்கிறீர்கள் இப்போது?

ஏழர said...

நல்ல கதை கிருத்திகன், உங்கள் பதிலுக்கு உடனடியாக பதில் சொன்னால் அவர்கள்தான் வினவா? இது பயங்கர காமெடி. அப்போ ஜார்ஜு புஷ்ஷுக்கு பதிலுக்கு பதில் நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் அப்போது நீங்கள்தான் வினவா... எனக்கு எப்படிதெரியும் என்று கேட்கவேண்டாம், நான் மின்மடலிம் மறுமொழி பெற்றதால் அந்த பிட்டபடம் பற்றிய நீக்கப்பட்ட விவாதத்தை படித்தேன்

ஏழர said...

ஆஷீக் யாரு லும்பன், போலியான ஆதாரத்தை ஜோடிக்கப்பட்ட ஒரு ஸ்கீரீன்ஷாட்டை போட்டது நீங்கள், அதை போலி என்று நிரூபிக்க என்னாக் முடியும்.. உங்கள் படத்தை போட்டு தயாரித்து வெளியிட்டால் அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

ஏழர said...

நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும் சில மதவாத மொக்கைகளுக்கு ஒரு விளக்கம்.

தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால்அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து. தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது. தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம். பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில் இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள். இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி. மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான். http://bit.ly/9RdwtD

mohamed ashik said...

அடாடா...அடா...அடா...தோழர் வினவு சாரி... ஏழர அவர்களே..... எப்டி இப்டில்லாம்...

http://www.vinavu.com/2010/10/07/islam-progressive-marriage/#comment-31078

என்னால் சிரிப்பை அடக்கி அடக்கி அடக்கி பார்த்தாலும் ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம் அடக்க அடக்க அடக்க மீண்டும் மீண்டும் மீடண்டும் மீண்டும் சிரிப்பு வந்துகொண்டே வந்துகொண்டே வந்துகொண்டே இருப்பதால்... நன்றாக சிரி சிரி சிரி என ஆசை தீர முழு மூச்சாய் சிரித்து விட்டு சிரித்து விட்டு ....என்னால் சிரிப்பை அடக்கி அடக்கி அடக்கி பார்த்தாலும் ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம் அடக்க அடக்க அடக்க மீண்டும் மீண்டும் மீடண்டும் மீண்டும் சிரிப்பு வந்துகொண்டே வந்துகொண்டே வந்துகொண்டே இருப்பதால்...

ஹா... ஹா... ஹா....

ஏழர said...

இப்ப உங்களை நினைச்சாத்தான் சிப்பு சிப்பா வருது ஆஷிக் பாய்... மாப்பிள்ளையே அவர் எழுதியதுன்னு ஒத்துகிட்டாரு.. இப்ப என்ன கதை சொல்லுவீங்க, இவங்க எழுதி அவரு சொன்னாருன்னா இல்ல இவங்க சொல்லி அவங்க எழுதுனத்துன்னா இல்ல இப்ப வினவு எழுதியது வினவே எழுதலேன்னா பிளீஸ் சீக்கிரம் முடிவு பண்ணுங்க

ஏழர said...

ஆ ஒரு ஐடியா கிடச்சு போச்சு.. வினவு தளத்திலேருந்து நான் ஒரு பின்னூட்டத்தை இங்க போட்டதனால நான்தான் வினவு..ஹைதர் அலி பின்னூட்டத்த நீங்க போட்டதனால நீங்கதான் ஹைதர்

இப்படியே ஒன்னொன்னா குறைச்சு ஏக இறைவன் மாதிரி ஏக மனுசனாக்கிடலாம்

Anonymous said...

முதலில் இந்துத்துவ வெறியர்களிடம் இருந்து இஸ்லாமியர்களை காக்க வந்த ஆபத்தாண்டவன் போல எழுதும் வினவு மற்றும் அதன் தோழர்கள், அதற்கான 'விசுவாசத்தையும்' இஸ்லாமியர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் இப்போது தெளிவாகியிருக்கிறது.

இஸ்லாமியர்களின் உற்ற நண்பன் போல எழுதும் வினவு & தோழர்களின் இந்து (அ) ஆதிக்க மனோபாவம், இஸ்லாமிய பதிவர்கள் எதிர்த்து கேள்வி கேட்கும் பட்சத்திலோ அல்லது முரண்படும் பட்சத்திலோதான் இப்படி வெளிப்படையாக தெரிகிறது, 'ஆர்.எஸ்.எஸ்சும், இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒன்றுதான் என்று ஆகக்கேவலமான ஒரு குற்றச்சாட்டை வினவு ஆதரவு பதிவர் ஒருபுறம் எழுதியிருக்கிறார், இன்னொருபக்கம், இங்கு வந்து நீங்கள் ஆர்.எஸ்.எஸ் நீங்கள் கண்டிக்கவே இல்லையே எதாவது இரகசிய உடன்பாடா என்று ஒருவர் வக்கிரமாக 'வினவிக்கொண்டிருக்கிறார்', இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு தலையாட்டினால் இஸ்லாமியன் தோளில் கை போடுவார்கள், அதுவே அவன் கேள்வி கேட்டால் நீ ஒரு அடிப்படைவாதி, ஆர்.எஸ்.எஸ் காரனும் நீயும் ஒன்னு என்று பேசுவார்கள்(இதையேத்தான் ரெண்டு நாளைக்கு முன்னால இராகுல் காந்தியும் சொன்னான், சிமியும், ஆர்.எஸ்.எஸ்ம் ஒன்னுன்னு). இவர்கள் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவது குறித்து இவர்கள் பேசுவது அக்கறையினால் அல்ல ஆள்பிடிப்பதற்கு.,

ஏழர said...

அனானி அண்ணே, TNTJ வுக்கும் RSS க்கும் என்ன வித்தியாசம், ரெண்டும் அடிப்படைவாத கிருமிகள்தான்

fa said...

ஏழர said...
//படு மொக்கையான ஆதாரம், கிருத்திகன், மேலே அலாவுதின் பெயரில் உங்கள் படம் தெரியுமளவுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் செய்து தரவா 5 நிமிடம் கூட அதுக்கு தேவையில்லை.... பாவம் நெத்தியடி... இவ்வளவு சீப்பாக போயிருக்க வேணாம் //

//கரெக்டா பின்னூட்டம் போட்ட அந்த அஞ்சு நிமிசத்துக்காக இவங்க 5 நாளா வேலை வெட்டியை விட்டு காத்திருந்து
டபக்குன்னு ஸ்கீரின் ஷாட் எடுத்தாங்களாம் கொஞ்சம் நம்பும்படியா எதனா சொல்லுங்கப்பா விட்டா அலாவுதீனுக்கு கல்யாணமே ஆகையின்னு சொல்லுவீங்க பல//

//எழுதியிருக்குற கருத்துக்கு பதில் சொல்லமுடியாம நீங்க படற பாடு புரியுது.. எழுதியது அலாவுதினா இல்ல நந்தனா இல்ல வினவா இருந்தாலும் உங்க்கிட்ட பதிலே இல்லை.. அதை மறைக்கத்தான் இப்படி ஒரு ஒட்டு வேலையை செய்திருக்கீங்க என்ற உண்மையை எப்ப ஒத்துக்கப்போறீங்க //

//அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால்அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து//

Dear Mr. ஏழர,

Which one is right, you only told the comment made by alaudeen, finaly you have agreed that the comment posted by vinavu as told by alaudeen,

So you are agreeing this is not posted by alaudeen. Mr. Asik point is also the same, it is not posted by alaudeen.

So you agreed your people are posting the comments in the different different name, it is showing your fruad work in your site against islam. indirectly you are accepting that your people are fraud.

fa said...

//அனானி அண்ணே, TNTJ வுக்கும் RSS க்கும் என்ன வித்தியாசம், ரெண்டும் அடிப்படைவாத கிருமிகள்தான் //

RSS demolishing the mosques, Does TNTJ demolishing anything.

RSS kills thounsands of people in Gujrat and continuing all over india, Does TNTJ kills anybody.

RSS not obeying the law of india, you have any proof that TNTJ not obeying the law.

TNTJ organizing more blood donation camp not like anyother group, RSS have credit like that?

Dont compare blindly.

ஏழர said...

Fa, we are not against islam... we are are against fascists like TNTJ. Look what Taliban did when they had power, similarly if TNTJ weild the power they would do the same as RSS.....OKAY

Now for the issue, I still maintain the screen cap was a forged one..I dont trust Nethiyadi Mohammed as he is a fraud who was already caught by readers vinavu several times.. for examples look here http://www.vinavu.com/2010/06/02/suguna-narsim/#comment-24320

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
//Fa, we are not against islam... we are are against fascists like TNTJ.//
இஸ்லாத்தை தூய முறையில் மக்களுக்கு சொல்லுகின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் ஏழர சொல்லுகின்ற "இஸ்லாத்திற்கும்" என்ன வித்தியாசம்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பே தூய்மையான முறையில் இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. எனவே இரண்டுக்குமிடையில் இருக்கின்ற வித்தியாசத்தை அடேங்கப்பா என்று எல்லோரும் வியக்கும் வண்ணம் இப்போ ஏழர சொல்லுவார்.

//Look what Taliban did when they had power, similarly if TNTJ weild the power they would do the same as RSS.....ஒகே//
நாளை நடப்பதை இன்றே சொல்லி விட்ட "ஏழர" இப்போது தீர்க்கதரிசியாக மாறி விட்டார் போங்கள். இனிமேல் ஏழர அவர்களை தீர்க்கதரிசி என்றே இனிமேல் அழைப்போம்.

ஏழர said...

நீங்க மட்டும் ஸ்டாலின் அப்பிடி இப்பிடின்னு திர்க்கதரிசி ஆகலாம் நாங்க ஆகப்பிடாதா..

உங்க அமைப்பு தூய்மைதான் அலாவுதின் குடும்பத்தை ஒத்தி வச்சதிலேயே தெரிஞ்சு போச்சே..இனிமே உங்களை முஸ்லிம் அமைப்புன்னு சொல்லாதீங்க, முஸ்லீம் மதவெறி அமைப்புன்னு சொல்லுங்க

Anonymous said...

//Fa, we are not against islam... we are are against fascists like TNTJ. Look what Taliban did when they had power, similarly if TNTJ weild the power they would do the same as RSS.....OKAY//


யோவ் ஏழர, என்ன பேசுறோம்னு புரிஞ்சுத்தான் பேசுறீயா, இந்தியாவுல டி.என்.டி.ஜே பவருக்கு வரமுடியுமா, வந்து இங்குள்ள பெரும்பாண்மையான ஹிந்துக்களுக்கு எதிரா தலிபான்கள் போல மதவாத ஆட்சியை நிறுவமுடியுமா, இங்கு முஸ்லீம்கள் சிறுபாண்மை என்கிற ஒரு சிறு புரிதல் கூட இல்லாம, தலிபான்கள் போல ஆட்சிக்கு வந்தா மாறிடுவாங்க சொல்றீங்களே இது நியாயமா?

ஆர்.எஸ்.எஸ்ம், டி.என்.டி.ஜேவும் எங்களுக்கு ஒன்னுதாங்கற ஒங்க மதிப்பீட்ட கேட்டு எங்களூக்கு புல்லரிக்குது.

நெத்தியடி முஹம்மத் said...

நான் சிரிச்சது உங்களைப்பார்த்தும்தான் தோழர் ஏழர,

அரை நாளாய் நீங்கள் வாதாடியதெல்லாம் ஒரே பின்னூட்டத்தில் பிசுபிசுக்க வைத்து விட்டதே 'வினவு'. மீண்டும் ஒருமுறை நீங்கள் எழுதியதை எல்லாம் படித்து பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எவ்வளவு ஒரு படு கேவலமான நிலைமையை உண்டாக்கிய 'வினவு'க்காக இன்னும் வக்காலத்து வாங்குகிறீர்களே...!

அரசியல்வாதிகளின் அடிபொடிகளை எல்லாம் தூக்கி சாப்டுட்டீங்க போங்க...!

அப்டியே போயிருக்கலாம்...!
ஆனாலும் விதி யாரை விட்டது...?
அர்த்தம் இல்லா உங்கள் இரட்டை வரிகளால், fa-விடமும் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

இதுவரை 'வினவு' என்ற பெயரில் எத்தனை பேர் கிருக்குகிறார்கள் என்பது போய்,
பினாமியாய் 'வினவு'க்கு எத்தனை பிளாக்குகள் என்பதும் போய்,

இப்போது,

'வினவி'ல் மொத்தம் எத்தனை மாடரேட்டர்கள் என்ற புதிய சர்ச்சையை நீங்களே ஆரம்பித்து வைத்துள்ளீர்கள்.

இன்றைக்கு உங்களின் நிலை கண்டு, நீங்கள் இன்னும் வினவில் உயர்ந்த மாடரேட்டர் அல்லது ஒரு கட்டுரையாளர் அந்தஸ்து கூட பெறாத அடிமட்ட தோழர் என்று புரிந்து கொண்டேன்.

'வினவு' உங்களை அனுப்பி இருக்க வேண்டாம். உங்கள் நிலையை எண்ணி ரொம்ப பாவமாக இருக்கிறது. என்ன செய்ய? அரசியலில் இதெல்லாம் சகஜம்ங்க. இன்னும் சில ஆண்டுகளில் கோல்மால் பண்ணாத 'வினவின்' மாடரேட்டர் அந்தஸ்து பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஏழர said...

யோவ் அனானி, ஆர்.எஸ்.எஸ் உம் தாலிபானும் ஒன்னுன்னா நீங்களும் தாலிபானும் ஒன்னுதானே.. அப்ப நீங்களும் ஆர்.எஸ்எஸ்ம் ஒன்னா இல்லையா

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
//நீங்க மட்டும் ஸ்டாலின் அப்பிடி இப்பிடின்னு திர்க்கதரிசி ஆகலாம் நாங்க ஆகப்பிடாதா..//
ஸ்டாலின் என்று ஒருவர் பிறப்பார். அவர் அப்படி இப்படி இருப்பார் என்று நாங்கள் சொன்னால் உங்களுடைய வாதங்கள் சரி. ஏற்கெனவே சர்வாதிகார ஆட்சி புரிந்து மறைந்த ஒருவரை அவருடைய சர்வாதிகார குணத்தை எடுத்து சொன்னால் அதற்கு எப்படி இந்த வாதம் ஒத்து வரும்?. அது மட்டுமில்லாமல் இது இங்கு பேசுபொருளும் அல்ல. பேசுபொருள் வினவின் பித்தலாட்டத்தை பற்றியது.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
//உங்க அமைப்பு தூய்மைதான் அலாவுதின் குடும்பத்தை ஒத்தி வச்சதிலேயே தெரிஞ்சு போச்சே..இனிமே உங்களை முஸ்லிம் அமைப்புன்னு சொல்லாதீங்க, முஸ்லீம் மதவெறி அமைப்புன்னு சொல்லுங்க//
அது எப்படிங்க இரண்டு நாளில் மாற்றி பேச முடிகின்றது ம.க இ.க வினரால்? இதுக்காக ஏதும் டிரைனிங் எடுப்பிங்களோ? அந்த பகுதியில் கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லாத அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று உங்க ( அது நீங்களாகவும் கூட இருக்கலாம்) வினவு சொல்லுகிறது. ஆனால் நீங்க அலாவுதீன் என்பவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒதுக்கி வைத்து விட்டது என்று கதையடிக்கிண்றீர்கள். எந்த செல்வாக்கும் இல்லாத அமைப்பு எப்படிங்க ஒதுக்கி வைக்க முடியும்? ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே. இதுல இவங்க மணமேல்குடி போய் வேற லைவ் ரிலே பண்ண போறாங்களாம். இன்னும் என்ன என்ன கூத்து அரங்கர் போகுதோ?

ஏழர said...

/////மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது./////

இந்த சின்ன பத்தித்திக்கு என்ன பொருள்ளு உங்களுக்கு புரியலியே தாவூதுஜி

fa said...

//Look what Taliban did when they had power, similarly if TNTJ weild the power they would do the same as RSS.....OKAY//

who told taliban is an terrorist organization, what wrong they have made? they are all freedom fighters.their biggest mistake is joining with al qoida which is the terrorist organization, that is the situation, we are not behind taliban.

You know only for that mistake all the muslim countries seperated taliban. Taliban also not telling the islam in a pure way, but TNTJ doing that work.

ஏழர said...

பித்தலாட்டம் செஞ்சது நெத்தியடி என்பதுதான் என்வாதம்... உங்கள் பதிவுகள் அவதூறுதானே அன்றி வேறல்ல

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
/////மற்றபடி இந்த திருமணத்திற்கு வந்திருந்த இசுலாமிய மக்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என அந்த இயக்கத்தினர் வேறு வழியின்றி வாதிடுகிறார்கள். அது உண்மையாயின் அந்த பகுதியில் இந்த கடுங்கோட்பாட்டு மத அமைப்புக்கு கிஞ்சித்தும் செல்வாக்கு இல்லை என்று தெரிகிறது./////
இந்த சின்ன பத்தித்திக்கு என்ன பொருள்ளு உங்களுக்கு புரியலியே தாவூதுஜி //

பொருள் தெரிந்த பெரும்புலவர் ஏழர இதற்கு விளக்கமளிப்பார்.

ஏழர said...

அது உண்மையாயின்>>> அது உண்மையான்னு நீங்கதான் சொல்லனும் தாவூத்ஜி

ஏழர said...

fa, is your opinion about Taliban is also the opinion of TNTJ? Find out from your nearest jamad

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
//பித்தலாட்டம் செஞ்சது நெத்தியடி என்பதுதான் என்வாதம்... உங்கள் பதிவுகள் அவதூறுதானே அன்றி வேறல்ல//
இந்த ஆதாரங்கள் அவதூறு என்றால் பின்னர் எவ்வாறு சகோதரர் ஹைதர் அலி வினவு தளத்தில் நந்தன் மற்றும் அலாவுதீன் போட்டோ சம்பந்தமாக கேள்வி எழுப்பியிருக்க முடியும்? அதுவும் கலர் மாறிய விவகாரத்தை அழகாக கேள்வி கேட்டிருகின்றாரே? பதில் பிளீஸ்.

கிருத்திகன் said...

///நல்ல கதை கிருத்திகன், உங்கள் பதிலுக்கு உடனடியாக பதில் சொன்னால் அவர்கள்தான் வினவா? இது பயங்கர காமெடி. அப்போ ஜார்ஜு புஷ்ஷுக்கு பதிலுக்கு பதில் நீங்கள் கூடத்தான் சொன்னீர்கள் அப்போது நீங்கள்தான் வினவா... எனக்கு எப்படிதெரியும் என்று கேட்கவேண்டாம், நான் மின்மடலிம் மறுமொழி பெற்றதால் அந்த பிட்டபடம் பற்றிய நீக்கப்பட்ட விவாதத்தை படித்தேன் ///
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறீர்கள் ஏழரை. ஜார்ஜூ புஸ்ஸூ என்கிற பெயரில் பின்னூட்டம் போட்டுக்கொண்டிருந்தவர் நிச்சயமாக ஒரு வினவு moderator என்பது உங்களுக்கும் சர்வ நிச்சயமாகத் தெரியும். என்ன வினவு நியாயப்படுத்துகிற சில தலைவர்களை இழுத்ததும் ‘சம்பந்தமில்லை’ என்று நீக்கிவிட்டார்கள். அந்த உரிமை அவர்களுடையது. அந்தப் பின்னூட்டங்கள் இருந்திருந்தாலாவது ஜார்ஜு புஸ்ஸூ வினவுக் குழுமத்தில் ஒருவர் என்பதை நிறுவமுடியும்.

ஏழர said...

கிருத்திகன், இப்போது உங்கள் பின்னூட்டம் வந்தவுடன் என் பின்னூட்டம் வருகிறது. எனவே நான் எதிர்குரல் மாடரேட்டர்

உங்கள் பின்னூட்டம் எதிர்குரலுக்கு ஆதரவாயிருக்கிறது எனவே நீங்கள் எதிர்குரல் மாடரேட்டர்

அப்புறம்...........

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
ஏன் சமாளிக்கின்றீர்கள்? அது எப்படி கிருத்திகன் கேட்ட கேள்விக்கு கன நேரத்தில் "ஜார்ஜு புஷ்ஷு" என்ற பெயர்கொண்டவரால் பதிலை தயார் செய்ய முடிகின்றது? கேள்வி புரிகின்றதா இல்லை புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா? ஒருவேளை வினவு கன நேரத்தில் பதில் கொடுக்கும் ரோபோக்களை தனது வாசர்களாக வைத்திருக்கின்றதா?

கிருத்திகன் said...

ஏழர.. நீங்கள் செய்துகொண்டிருப்பது விதண்டாவாதம். அவ்வளவுதான் சொல்லமுடியும். எனக்குத் தெரிந்த வரையில் ஜார்ஜு புஸ்ஸூ என்பது ஒரு வினவு moderatorஇன் வம்புப் பெயர். அவ்வளவுதான். இந்த விஷயத்தில் உங்களோடு இனியும் பேச நான் தயாராயில்லை.. ஜார்ஜூ புஸ்ஸூ வினவுகாரர் இல்லை இல்லை இல்லை இல்லை. போதுமா ஜனநாயகவாதிகளே?

ஏழர said...

தாவூது ஜி, கண நேரம்னு கிருத்திகன் சொன்னா அதை அப்படியே நம்பனுமா..
நீங்க பாத்தீங்களா என்ன? ரொம்ம்ம்ம்மபத்தான் கதையளக்காதீங்க.. உங்க நெத்தயடி பண்ணா ஆள்மாறாட்ட மோசடியெல்லாம் மறந்து போச்சா, அத பத்தி பேச்சையே காணோம்

ஏழர said...

உங்களால நிரூபிக்க முடியாதுன்னா சும்மா இருக்கனும் கிருத்திகன், அவதூறு பேசாதீங்க

fa said...

//fa, is your opinion about Taliban is also the opinion of TNTJ? Find out from your nearest jamad //

Be clear in the point "What wrong made by taliban to the people of afghan or the people of world" First tell me the answer to this question.

ஏழர said...

fa, can you tell me the difference between the destruction of buddhist statues and destruction of babri masjid?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

சில நாட்கள் தொடர்ச்சியாக ஆட்டை பறிகொடுத்து விட்டு ஒரு நாள் ஆட்டை திருடிய திருடனை கையும் களவுமாக ஆட்டு மந்தைக்கு சொந்தக்காரர் பிடித்து விடுவார். அந்த திருடனை மக்களுக்கு அடையாளப்படுத்த பஞ்சாயத்தை கூட்டுவார் ஆட்டு மந்தையின் உரிமையாளர். ஆனால் ஆட்டை திருடிய திருடனோ ஆட்டு மந்தையின் சொந்தக்காரரை ஒரு மாதிரியாக பேசி சமாளித்து விடுவார். இந்த கதை சும்மா ஞாபகத்தில் வந்தது. அவ்வளவு தான்.

ஏழர said...

கிருத்திகன் பின்னூட்டத்துக்கும் என்னுடைய பதிலுக்கும் இடையில் 1 நிமிடம்தான் இடைவேளை, எனவே கிருத்திகனின் அளவு கோலின்படி நான் எதிர்குரலின் மாடரேட்டர். என்ன சொல்றீங்க தாவூத்ஜி

ஏழர said...

இந்த கதையெல்லாம் வேண்டாம் தாவூத்ஜி, நெத்தியடியின் யோக்கிதை பற்றி நீங்க பேசாம மறைப்பதிலேயே தெரியுது உங்க கூட்டத்தின் நேர்மை.. அது ஒன்னு போதும் உங்க ஆதாரத்தோட மதிப்புக்கு..

கிருத்திகன் said...

ஏழர... அதான் சொல்லியாச்சே. வினவு குழுமம் சொக்கத் தங்கம். நாங்கள் எல்லாம் சாக்கடை. விட்டுடுங்க

Aashiq Ahamed said...

சகோதரர்கள் அனானி மற்றும் எட்டரை அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுடைய பின்னூட்டங்களை என்னால் வெளியிட முடியாது. தயவுக்கூர்ந்து வார்த்தைகளில் கண்ணியம் காத்து கொள்ளுங்கள். இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ஏழர,
//கிருத்திகன் பின்னூட்டத்துக்கும் என்னுடைய பதிலுக்கும் இடையில் 1 நிமிடம்தான் இடைவேளை, எனவே கிருத்திகனின் அளவு கோலின்படி நான் எதிர்குரலின் மாடரேட்டர். என்ன சொல்றீங்க தாவூத்ஜி //
நீங்க வினவுக்கு மட்டும் மாடரேட்டரா இருங்க அது போதும். எதிர்குரல் தளமாவது முரண்பாடுகள் இல்லாம ரன் ஆகட்டுமே. அதுவும் வினவு மாதிரி முரண்பாடுகளின் மூட்டையாக மாறனுமா.

ஏழர said...

நீங்க யோக்கியமா இருந்தா ஒரு அவதூறை பறப்பியிருக்க மாட்டீங்க, நீங்க சொன்னது உண்மையில்லை கண நேரம்னு சொன்னதே பெரிய பொய்.. அதை ஒத்துகங்க, நீங்களும் சொக்கச் சொக்கத் தங்கமாயிடலாம்

ஏழர said...

பாத்தீங்களா தாவூத்ஜி, இப்ப நீங்க என்னை வ்வினவுக்கு மாடரேட்டர் ஆக்கிட்டீங்க.. ஆக அவதூறு சொல்வதுதான் உங்க பிழைப்பா,
இப்படித்தான் சத்தியத்தை அசத்தியத்தை கொண்டு அழிக்கிறீங்களா
விளங்கிடும்!

Aashiq Ahamed said...

சகோதரர் ராவணன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுடைய பின்னூட்டத்தை என்னால் வெளியிட முடியாது. இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

mohamed ashik said...

//நெத்தியடியின் யோக்கிதை பற்றி நீங்க பேசாம மறைப்பதிலேயே தெரியுது உங்க கூட்டத்தின் நேர்மை.. ///---மறைக்கலியே...உங்களுக்கெல்லாம் முந்தியே நானே சொன்னேனே...

நீங்க கேட்ட 'டீ அப்போவே வந்துருச்சே'... சாப்பிடலையா ஏழர...? சரி மறுபடியும் சூடுகாட்டி....

/////////////////////
வினவின் பின்னூட்ட ஜனநாயகம் பாரீர்
வினவின் பின்னூட்ட ஜனநாயகம் பாரீர்
என்று எப்போதும் பெருமித கூப்பாடு.

ஆனால், எதிர்கருத்தை இட்டால் அதை மட்டுறுத்தி கிடப்பில் போட்டு சாவதானமாய் விவாத ஆட்டம் அடங்கியபின் வெளியிடுதல்.

பிற்பாடு வேறு பெயரில் வந்து உடனடி பிரசுரம் ஆகவேண்டி மீண்டும் கருத்திட்டால், "ஒத்துவராத மறுமொழி" என்று ஹிட்லரின் 'கான்செண்டிறேஷன் செல் கேம்ப்' போல ஒரு பக்கத்தை நிறுவி அங்கே தூக்கி அனைத்தையும் அமுக்கி விவாதமின்றி சாகடிப்பது.

சரி, 'அங்காவது காண்பவர் படித்து செல்லட்டுமே' என்று தொடர்ந்து கருத்து போட்டால் எப்போதுமே எங்குமே காண முடியாதபடி ஐடியை ஒரேயடியாய் தடுத்து கருத்துக்களை காணாப்பிணமாக்க வேண்டியது.

அப்புறம், வேறு வழியின்றி வேறு ஐடியில் வந்தால்... இப்போது செய்த அதே கயவாளித்தனத்தை அப்போது செய்து காட்டி 'நீ ஏன் உன் சொந்த ஐடியில் வர வில்லை?' என்று கொக்கரிப்பது.

///ஆனாலும் உங்களால பொம்மையாதான் மாத்த முடிஞ்சது, அலாவுதின் எழுதின எழுத்தை மாத்த முடியலியே, அதுக்கு பதில்சொல்லுங்கப்பு/// ---இதத்தானே அப்பு நான் அன்று கேட்டேன்? மீண்டும் மீண்டும் மீண்டும் 'எப்படி வேறு ஐடியில் வந்து கேள்வி கேட்பாய்' என்றீரே அப்பு, பதிலே சொல்லாமல்...!

'இனி இந்த ஃபிராடிடம் நமக்கு வேலை இல்லை' என்று ஒதுங்கினாலும்... உங்கள் பித்தலாட்டத்துக்கு அளவில்லாமல் போய் விட்டதால், அம்பலப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை... சகோதரர்... வினவு... சாரி... அரடிக்கட்டு... சாரி... ரியல் என்கவுண்டர்... சாரி... ஜார்ஜ் புஸ்ஸு... சாரி... பூச்சாண்டி... சாரி... MamboNo8... சாரி... NoGod7... சாரி... ளிமாகோ... சாரி... மரண அடி... சாரி போதம்கின்... சாரி... காட்டரபி... சாரி... கேள்விக்குறி... சாரி... நந்தன்... சாரி... அலாவுதீன்... சாரி... சப்னா அஸ்மி... சாரி...ஏழர.!(அப்பாடா... இப்பவாவது உங்க பெயர் நியாபகம் வந்துச்சே!)
//////////////////////////////

அனைத்து அதிகாரமும் பெற்ற ஒரு தள உரிமையாளர் -மாடேறேட்டார், பல ஐடிக்களில் ஆதிக்க உணர்வுடன் தன் கருத்தை வலுக்கட்டாயமாய் திணிக்க வருவதும்....

ஒரு 'ஒடுக்கப்பட்ட' - 'நசுக்கப்பட்ட' - 'கருத்துரிமை மறுக்கப்பட்ட' - உங்கள் 'பிராடுத்தனத்தால் வஞ்சிக்கப்பட்ட' அப்பாவி வாசகன் ஒவ்வொருமுறையும் அதிலிருந்து மீண்டு புத்துயிர்-(புது ஐடி) பெற்று புரட்சியாய் மீண்டு வருதல் என்பதும்......

ஒன்றா? ஒன்றா? ஒன்றா?

mohamed ashik said...

சகோதரர்களே...அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னை பற்றி நான் ஏற்கனவே இருமுறை சொல்லிவிட்டேன். நான் செய்ததும் வினவு செய்ததும் ஒன்றாகாது. எப்படியெனில்,

ஒரு தளம்... அதில் ஒரு மாடரேட்டர்... அவரே பல பெயர்களில் பின்னூட்டம் இட்டுக்கொள்வது... 'சரி, பிரபலம் ஆக இப்படி சில்லரைத்தனமாய் செய்கிறார் போலும்' என்று கருதி சும்மா சென்று விட முடியாது. அதை 'எதற்கு செய்கிறார்', 'ஏன் செய்கிறார்', 'அதனால் கருத்தியல் ரீதியில் என்ன நன்மை அவருக்கு'... என்பதை வைத்து விஷயம் விபரீதமாகிறது.

இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால்...

ஒரு நீதிமன்றம்...(ஒரு இணையதளம்)

ஒரு நீதிபதி (தள மட்டுறுத்துனர்) அவரின் நீதி அரியாசனத்தில் இருக்க...

பார்வையாளர்கள் அனைவர் பார்வையும் கட்டப்பட்டிருக்க... கும்மிருட்டில்... அந்த நீதிபதியே... குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவான வக்கீலாகவும், எதிரான வக்கீலாகவும், ஆதரவான சாட்சியாகவும், எதிரான சாட்சியாகவும் தனக்கு தெரிந்த வித்தியான பலகுரலில் பேசி மக்களையல்லாம் ஒரு சிறந்த வாத பிரதிவாத சபையில் இருப்பதுபோன்ற மாயையில் மூழ்க வைத்து விட்டு ஏமாற்றி...கடைசியில் தான் விரும்பிய முன் முடிவான தீர்ப்பை இப்படி அளிக்கிறார்.

...."ஆகவே இரு தரப்பு வக்கீல்களில் வாதங்களையும் சாட்சிகளையும் தீர விசாரித்ததில் என் தீர்ப்பு என்னவெனில் குற்றம் சாட்டப்பட்டவர்..." ----என்று தீர்ப்பை வாசித்துக்கொண்டே சென்றால்... எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது காட்டுமிராண்டி 'லும்பன் வினவு தர்பார்'.

ஒரு வலைத்தளத்திலேயே இந்த அட்டூழியம் செய்கிறார்கள் எனில், இவர்கள் கையில் எல்லாம் ஒரு நாடும் அதன் ஆட்சியும் அதிகாரமும் சிக்கினாலோ...

இறைவா, வினவு போன்ற நேர்மையற்ற பிழைப்புவாத பித்தலாட்டகாரர்களிடமிருந்து மக்களை என்றென்றும் காப்பாற்றுவாயாக...ஆமின்.

fa said...

//fa, can you tell me the difference between the destruction of buddhist statues and destruction of babri masjid?//

your comparisons are crazy, destruction of buddhist statues because of buddist population no longer exist in afghanistan.that was in the goverment control, government can do anything.

But babri masjid is muslim property which is for prayer, demolished by the terrorist group.

Dont compare the babri masjid and buddist statue.

ஏழர said...

ஷாஜஹானாவது நெத்தியடியை ஆள்மாறாட்டம் பண்ணதுக்கு மன்னிப்பு கேட்க வச்சார்.. அப்புறமும் அவர் திருந்தாதது வேற விசயம், ஆனா நீங்க அந்த நடத்தை கெட்ட நெத்தியடி போன்ற பிராடுகளுக்கு சப்போர்ட் பண்ணும் உங்க ஓட்டை ஆதாரம் போல 100 காப்பி வேணாலும் யாராலையும் தரமுடியும்.. ...விரைவில் அடுத்த ஆப்பு உங்களுக்கு வினவு வைப்பாங்க, அதுக்குள்ளவாவது இப்ப செருகுனத பிடுங்கி வெளிய போட டிரை பண்ணுங்க.. பை பை...

mohamed ashik said...

///விரைவில் அடுத்த ஆப்பு உங்களுக்கு வினவு வைப்பாங்க, அதுக்குள்ளவாவது இப்ப செருகுனத பிடுங்கி வெளிய போட டிரை பண்ணுங்க.. பை பை...///

சகோதரா... ஆஷிக்... பார்த்து கவனமா இருந்துக்குங்க... உங்க வீடு அட்ரஸ் தெரிஞ்சா வினவுக்காரவுக ஆட்டோவெல்லாம் அனுப்புவாங்களாம்... கேள்விப்பட்டிருக்கிறேன்...

வேலியே போனா தனியா போவாதீங்க... பாடிகார்டுடன் போங்க...

உடன் எப்போதும் 'பொருள்' கொண்டு போனாலும் நல்லதுக்குத்தான்...

Aashiq Ahamed said...

சகோதரர் ஏழர,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//விரைவில் அடுத்த ஆப்பு உங்களுக்கு வினவு வைப்பாங்க//

இன்ஷா அல்லாஹ்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமின்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

smart said...

அருமையான ஆராய்ச்சி. வாழ்த்துக்கள்.
என் பெயரில் கூட சில மறுமொழிகள் இட்டுக் கொண்டு முன்பு இருந்தனர் அவர்களின் மானம் சந்திக்கும் மீண்டும் வந்ததற்கு உங்களுக்கு நன்றிகள்.

அடுத்தமுறை screenshot எடுத்து ஏழர போன்ற ஆதாரத்தை மறுப்பவர்களுக்கு வாய்ப்பளிக்காமல். http://www.web2pdfconvert.com இங்கு சென்று pdf ஆக மாற்றிக்கொண்டு பின்பு வந்து இவர்களின் மூக்குடையுங்கள்

smart said...

//படு மொக்கையான ஆதாரம், கிருத்திகன், மேலே அலாவுதின் பெயரில் உங்கள் படம் தெரியுமளவுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் செய்து தரவா 5 நிமிடம் கூட அதுக்கு தேவையில்லை....//
ஏழர proved himself as a cheat

கிருத்திகன் said...

///நீங்க யோக்கியமா இருந்தா ஒரு அவதூறை பறப்பியிருக்க மாட்டீங்க, நீங்க சொன்னது உண்மையில்லை கண நேரம்னு சொன்னதே பெரிய பொய்//
அது பொய்யே இல்லை ஏழர..
தேவையில்லாமல் அவதூறு செய்ய எனக்கும் வினவுக்கும் என்ன வாய்க்காத் தகராறா. அதுக்குப் பிறகு வந்த வினவு பதிவுகளிலும் பின்னூட்டியிருக்கிறேன். ஆனால் அந்த ஜார்ஜு புஸ்ஸூ என்பவர் வினவு குழுமத்தைச் சேர்ந்தவரில்லை என்பது பச்சைப் புழுகு. நான் திரும்பவும் சொல்கிறேன், என்னுடைய பின்னூட்டம் அனுமதிக்கப்பட்ட அடுத்த கணம் அந்த ஜார்ஜு புஸ்ஸூ பதிலளித்தார். ’அடுத்த கணம் என்பது ASAP என்கிற பொருளில் இங்கே பாவிக்கப்படுகிறது. உடனே அடுத்த கணம் என்பதை கால அளவையோடு நிரூபி என்றெல்லாம் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். நான் திரும்பவும் சொல்கிறேன், வினவில் moderatorகள் நேர்மையாக இல்லை.

இரண்டாவது என்னுடைய யோக்கியத்தைப் பற்றிக் கதைக்க எவருக்கும் அருகதை இல்லை, காரணம், எனக்கு முகமூடி இல்லை. சொந்தப் பெயரில், சொந்த முகத்தோடுதான் வினவு மீதான குற்றச்சாட்டை வைக்கிறேன். இல்லை, நீ சொன்ன குற்றச்சாட்டு சரியானதில்லை என்று விதண்டாவாதம் பண்ணாமல் விளக்கினால் அது குறித்து மன்னிப்புக் கேட்க நான் என்றைக்கும் பின்னிற்கப்போவதில்லை.

Abdul Basith said...

//ஏழர said...
வினவுதான் எதழுதியது என்பது உங்கள் குற்றச்சாட்டு, அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை அண்ணே.. ஆதாரம் கொடுங்க, டீ என்ன பூஸ்டே கொண்டுவறேன்..//

//ஏழர said...

...அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து.//


முதலில் வினவு எழுதவில்லை, மணமகன் தான் பின்னூட்டம் போட்டார் என்று சொன்னீர்கள். இப்பொழுது மணமகன் சொல்ல தோழர்கள் போட்டார்கள் என்று சொல்கிறீர்கள்.

இப்ப சொல்லுங்க, யார் //முரண்பாட்டின் மூட்டை // என்று?

இல்லைன்னா இப்படி வச்சிக்கலாமா?

அவர் சொல்ல, இவர் சொல்ல, அவரோட அவர் சொல்ல, இவரோட இவர் சொல்ல, அதை தோழர்கள் சொல்ல, அதை வினவு போட்டிருக்கிறது.

எனது யூகம் சரி என்றால் உங்கள் அடுத்த பதில் இப்படிதான் இருக்கும்.

தோழர்கள் is not equal to வினவு.

Abdul Basith said...

ஏழரை அவர்களுக்கு,

வினவின் பதில்:
//மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்.//

தொலைபேசியில் அவர் கூறியது என்றால் அலாவுதீன் என்ற பெயரில் ஏன் போட வேண்டும். வினவின் பெயரிலேயே "அலாவுதீன் கூறியதாக" போடலாமே?

அலாவுதீனின் படத்தை மாற்ற காரணம் என்ன?

திரும்பவும் நீங்கள் //படு மொக்கையான ஆதாரம், மேலே அலாவுதின் பெயரில் உங்கள் படம் தெரியுமளவுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் செய்து தரவா 5 நிமிடம் கூட அதுக்கு தேவையில்லை....// என்று சொன்னால், சரி செய்து தாருங்கள். நீங்கள் கொடுக்கும் படத்திற்கும் ஆஷிக் அவர்கள் கொடுத்திருக்கும் படத்திற்கும் உள்ள வித்தியாசங்களை பார்ப்போம்.

கடைசியாக, உங்கள் பதில் உங்களுக்காக:

//ஒவ்வொரு முறை நீங்க கிழிக்கும் போது கிழிவது என்னவோ உங்க டவுசர்தான்..//

Anonymous said...

/மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்.//

இவ்வாறு வினவு ஒத்துக்கொண்டிருக்கிறது, எனவே மேலே போட்டிருக்கும் படங்கள் எல்லாம் போலியான ஸ்கிரீன்சாட் அவற்றை ஐந்து நிமிடத்தில் ரெடி செய்துவிடமுடியும் என்று வெட்கங்கெட்டதனமாக, அபான்டமாக, அவதூறாக பேசிய அய்யா ஏழர இப்போது என்ன சொல்ல போகிறார்.

mohamed ashik said...

நேத்து ஆரம்பிச்ச சிரிப்பு ஒரு வழியா இன்னிக்குதான் அடங்க்கிச்சு...

http://www.vinavu.com/2010/10/07/islam-progressive-marriage/#comment-31078

/////நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும்

[[அத நீங்க சொல்றீங்களாக்கும், வெனவு?]]

சில மதவாத மொக்கைகளுக்கு

[[ஓஹோ! ஆதாரமில்லாம பிறர்மீது அவதூறு மழை பொழியும் உங்க பதிவுங்கதானுங்க மொக்கைகள்.. மொக்கை வெனவே]]

ஒரு விளக்கம்.

தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு

(?!?)

[[ஒரு புது மணமக்களை ஹனிமூன் மூடுலகூட இருக்க விடாம.. ச்சே.. என்ன ஒரு கொலைவெறி!?]]

கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால் அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து.[[---இதை 'x' என்க]].

தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு
(!?)
உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது.

[[அங்கெ அவர்களுக்கு மவுசே இல்லை என்று சொன்னது நீங்கள்தானே? இதெப்படி சாத்தியம்? தவ்ஹீத் ஜமாஅத் சொன்னால் சுன்னத் ஜமாஅத் அப்படியே கட்டுப்பட்டுவிடுமா? வினவின் ரீலுக்கு அளவே இல்லையா?]]

தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.

[[அதுதான் 'ஏற்கனவே நன்கு கம்யுநிஸ்டாக அறியப்பட்டவர்' என்று கூறிவிட்டீர்களே?இன்னும் என்ன விசாரணை வேண்டிக்கிடக்கிறது?]]

வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

[[அதாவது உங்கள் தோழர் பிரச்சினையை வைத்து மீண்டும் ஒருமுறை வினவின் கல்லாவை நிரப்ப பார்க்கிறீர்கள். பலே.நடத்துங்க!]]

பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது

[[சிரிப்புவருகிறது...ர்ர்ர்ரோம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டு அடக்கிட்டு... மேலே போறேன்]]

மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில்

[[சீரியஸா போகும்போது கூட அப்பப்ப இந்த காமடிய வேற கலக்க மறக்காதே, இந்த வெனவு!]]

இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள்.[[மீண்டும்சிரிப்புவருகிறது ...ர்ர்ர்ரோம்ம்ம்ம்ப]]

இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

[[யப்பா.. புரிஞ்சுக்கங்கப்பா... நாட்டாம தீர்ப்பு சொல்லிபுட்டாரு.]]

எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி.[[ஆரு கேட்டா இத]]

மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல்[[---இதை 'y' என்க]] சொன்னதுதான்

[[[என்னங்க வெனவு... மறுபடியும் திடீர்னு குழப்புறீங்க... மேலே வேறமாதிரி ஆரம்பிச்சிட்டு... 'x' is not equal to 'y'-ன்னு வருதே..! அப்புறம் சப்னா ஆஸ்மி பின்னூட்டம் பத்தி கதையளக்க...சாரி... சொல்ல மறந்துட்டீக வெனவு. போன் போட்டாகளா? எஸ் எம் எஸ் அடிச்சாகளா?]]

எப்பப்பாத்தாலும் நீங்க எழுதறத ஒரு தடவை படிச்சு பாக்க மாட்டீகளா வெனவு? ர்ர்ர்ரெம்ம்ப அவசரம்? --->நீங்க செம காமடி பீஸு வெனவு.

Aashiq Ahamed said...

சகோதரர் smart அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//http://www.web2pdfconvert.com இங்கு சென்று pdf ஆக மாற்றிக்கொண்டு//

மிக உபயோகமான தகவல்...நன்றி சகோதரர்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

வஜீர் அலி அஹ்மத் said...

ஏழரை அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அழைக்கும்

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஓட்டலன்னு சொல்ல்ரிங்கலே ............

ஒருவேளளளளளளள மீசைய வலிசிடிங்கள இல்ல மீசையே இல்லையான்னு தெரியவில்லை.

எவள்ளவு அடிச்சாலும் தாங்ரியே நீ ரொம்ப நல்லவன் பா.........

உங்களின் அறியாமையை கண்டு வருந்துகிறேன் நண்பரே.....நீங்கள் இதற்கு மேலும் என்ன உண்மையை(Proof) வேண்டுகிறிர் என்று எனக்கு புரியவில்லை

உங்கள் முதல் மற்றும் கடைசி பின்னூட்டல்-ஐ நீங்களே படித்து பாரும் உங்கள் முரண்பாட்டின் மூட்டைகள் புரியும்.

குவைத் தமிழன் said...

நான் கூட அந்த பதிவுக்கு சில பின்னோட்டங்கள போட்டேன்.அப்புறம் நேரம் இல்லாம விட்டுட்டேன்.பதிவின் ஆரம்பத்துல பாருங்க தெரியும்.

Anonymous said...

வினவின் முகத்திரை கிழிக்கப்பட்டது .
இவர்கள் மற்றவர்களை போலி என்று கிண்டல் அடிப்பார்கள் இவர்களின் வண்டவாளம் இப்படியா ?
நன்றி தோழரே!

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

-------
வினவின் முகத்திரை கிழிக்கப்பட்டது .
--------

எல்லாப் புகழும் இறைவனிற்கே....

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anonymous said...

Hey brothers you don't have work !!!!!!!!!! do your job......

ribnas said...

mohamed ribnas
@ vinavu(7.5)

eanya unaku intha pulapu waya koduthu semaya wangekura வஜீர் அலி அஹ்மத் solramathere எவள்ளவு அடிச்சாலும் தாங்ரியே நீ ரொம்ப நல்லவன் பா.........

Post a Comment