Tuesday, December 18, 2012

பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 

ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 



வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை எதிர்க்கொண்டு அபாரமான வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்லாம். இந்த கணக்கெடுப்பு மூலமாக, பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல ஊடங்களும் இஸ்லாமின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே செய்திகளை வெளியிடுகின்றன. 

மேலே கூறியதை ஆழமாக புரிந்துக்கொள்ள சென்சஸ் தகவல்களுக்கு இப்போது செல்வோம். 

பிரிட்டனின் மொத்த மக்கட்தொகை 2001-2011 காலக்கட்டத்தில் 7% அதிகரித்து 5.6 கோடியாக உள்ளது. 

பிரிட்டனை பொருத்தமட்டில், அதிக மக்களால் பின்பற்றப்படும் மதம் என்றால் அது கிருத்துவம் தான். ஆனால் கிருத்துவத்துவர்களின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டு சென்சசை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. 2001-ல் 3.7 கோடியாக இருந்த கிருத்துவ மக்களின் எண்ணிக்கை தற்போது நாற்பது லட்சம் குறைந்து 3.3 கோடியாக உள்ளது.  சதவித கணக்கில் சொல்லப்போனால் 71%-மாக இருந்த கிருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது 59%-மாக குறைந்துள்ளது. 

இது ஆய்வாளர்களுக்கு பலத்த ஆச்சர்யத்தை தந்துள்ளது. 

அதே நேரம், நாத்திகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2001-ல் 14%-மாக இருந்த நாத்திகர்களின் எண்ணிக்கை இப்போது 25%-மாக உயர்ந்துள்ளது. ஆக, பிரிட்டன் மக்கட்தொகையில் நான்கில் ஒருவர் நாத்திகர். 

கிருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம், இப்போதெல்லாம் கலாச்சாரம் சார்ந்து தங்களை கிருத்துவர்கள் என்று அடையாளப்படுத்துவோர் குறைந்துள்ளதாக இங்கிலாந்து சர்ச் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

கிறித்துவத்தின் வீழ்ச்சிக்கும், நாத்திகத்தின் வளர்ச்சிக்கும் ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு பெரும் பங்கிருப்பதாக கருதப்படுகின்றது. 

இங்கு தான், ஆய்வாளர்களை வியப்பூட்டும் அந்த செய்தி வருகின்றது. ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்று பிரபல "டெய்லி மெயில்" ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏன் என்பதற்கு சென்சஸ் தகவல்களை பார்த்தால் விடை சொல்லிவிடலாம். 

பிரிட்டன் முஸ்லிம்களின் மக்கட்தொகை கடந்த பத்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2001-ல் 15 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 12 லட்சம் அதிகரித்து தற்போது 27 லட்சமாக உயர்ந்துள்ளது. சதவித கணக்கில் சொல்ல வேண்டுமானால் 2001-ல் 3%-மாக இருந்த முஸ்லிம்கள் இப்போது சுமார் 5% இருக்கின்றனர். இஸ்லாமின் இந்த வளர்ச்சி மற்ற எந்த மார்க்கத்தை விடவும் மிக அதிகமாகும். இதனாலேயே 'பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம்' என ஊடகங்கள் தலையங்கம் வெளியிடுகின்றன. 



இந்த செய்தி குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் பன்முகத்தன்மையில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 

முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பு மேலும் பல முக்கிய விசயங்களுக்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஈத் விடுமுறைகள் குறித்தும், ரமலான் மாதம் அணுகப்படும்விதம் குறித்தும், பள்ளிகளில் இஸ்லாம் போதிக்கப்படும்விதம் குறித்தும் சிந்திக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் இஸ்லாம்-கிருத்துவ மன்றத்தின் தலைவரான ஜூலியன் பான்ட். 

இப்படியான அபார வளர்ச்சிக்கு தெளிவான காரணங்கள் அலசப்படவில்லை. குடியேற்றம் (Immigration) ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது (பார்க்க <<இங்கே>> மற்றும் <<இங்கே>>). 

இப்போது இந்த பதிவின் தலைப்புக்கு வருவோம். 

சில மாதங்களுக்கு முன்பு தான், கடந்த பத்து ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரித்து, அமெரிக்காவில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்ற ஆய்வு முடிவுகள் வெளிவந்தன (பார்க்க <<இங்கே>>). 

இப்போது பிரிட்டனிலும் அதே நிலைமை உருவாகியிருப்பது குறித்து டெய்லி மெயில் ஊடகம் கருத்து தெரிவிக்கும் போது, 'பிரிட்டன் வாழ்க்கையில் இருந்து கிருத்துவத்தை வெளியேற்ற உற்சாகமாக செயல்படும் நாத்திகர்கள், தங்களின் இச்செயல் இஸ்லாமிற்கான காலியிடத்தை மட்டுமே உருவாக்கியுள்ளதை உணர்ந்துக்கொள்வார்கள். இஸ்லாம் என்னும் நம்பிக்கையை ரிச்சர்ட் டாகின்ஸ்சால் ஒன்றுமே செய்ய முடியவில்லை' என்று தெரிவித்துள்ளது. 

You struck the nail on head regarding dawkins dear DAILY MAIL. :-) :-)

நீங்க முஸ்லிமல்லாதவரா? குர்ஆனில் அப்படி என்ன தான் இருக்கின்றதென்று பார்க்க விருப்பமா? aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். குர்ஆன் தமிழ் மொழிப்பெயர்ப்பை மின்னூல் வடிவில் பெற்றுக்கொள்ளுங்கள். 

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Download census report at:
1. Office of National Statistics. link

Picture taken from:
1st Picture - Page 1 of census report 
2nd Picture - Page 7 of Census report 

References:
1. British Census: Islam Fastest-Growing Faith in England; Christians Drop to 59% of Population - CNS News, 12th Dec 2012. link
2. Christians could be minority by 2018, census analysis reveals - The guardian. 11th Dec 2012. link
3. Alien nation: The new census reveals a Britain that would be unrecognisable even to our grandparents - Daily Mail, 15th Dec 2012. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






51 comments:

  1. Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ faizeejamali,

      வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

      Delete
  2. அல்ஹம்துலில்லாஹ்....

    மிக அருமையானா செய்தி... சொர்க்கத்திற்கு செல்லும் சகோக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது..

    இவ்வுலகில் இருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளும் சத்திய இஸ்லாத்தை ஏற்று சொர்க்கம் செல்லும் மக்களாக ஆக இறைவன் அருள் செய்வானாக...

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ் பாய்,

      //சொர்க்கத்திற்கு செல்லும் சகோக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது.. //

      உண்மை.

      //இவ்வுலகில் இருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளும் சத்திய இஸ்லாத்தை ஏற்று சொர்க்கம் செல்லும் மக்களாக ஆக இறைவன் அருள் செய்வானாக...//

      ஆமீன்..ஆமீன்..

      மனங்களில் மாற்றம் ஏற்பட இறைவன் உதவுவானாக...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

      Delete
  3. ஜஸாக்கல்லாஹ் கைர். அற்புதமான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஜபருல்லாஹ்,

      வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

      Delete
  4. சலாம் சகோ!

    அழகிய பதிவு. இஸ்லாத்தின் மகிமைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சுவனப்பிரியன் அண்ணன்,

      //இஸ்லாத்தின் மகிமைகள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது//

      புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...

      தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி

      Delete
  5. Replies
    1. வாங்க பைசல், அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஊக்கத்திற்கு நன்றி.

      Delete
  6. அல்ஹம்துலில்லாஹ்....

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி பாசித்,

      நிச்சயம் புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்

      Delete
  7. நண்பர் ஆஜிக்,
    நல்ல நகைச்சுவை பதிவு,

    மூமின் பெரும்பானமை நாடுகளில் நிலவும் வன்முறை,வறுமை போன்ற்வற்றில் இருந்து தப்ப மேலை நாடுகளுக்கு முஸ்லிம்கள் புலம் பெயர்வது இயல்பான விடயம். எப்படியாவது அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகளில் இடம் கிடைப்பது சுவனத்தில் இடம் கிடப்பதை விட சிறப்பானது என உணர்ந்தே இருக்கின்றனர். இது தவறும் இல்லை.
    அமெரிக்க மேலை நாட்டு சட்டங்கள் ஷரியா போல் பாரபட்சமில்லாதவை . இஸ்லாமியர்களின் தொகை உயர்வுக்கு காரணம் அதிக குழந்தைகள் பெறுவதும் ,புலம் பெயர்வதுமே!! ஆகவே மூமின்களின் தொகை அதிகரிப்பு, குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது.. பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவற்றில் இந்துக்களின் மக்கள் தொகை குறைவதையும் சொல்லலாம்.
    http://en.wikipedia.org/wiki/Hinduism_in_Pakistan

    **
    எனினும் உலக மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒருவர்தான் சுவனம் செல்ல முடியும் என நபி(சல்) ஹதிதில் கூறிவிட்டார். ஆகவே உலக மக்கள் தொகையான 700 கோடியில் 70 இலட்சம் மட்டுமே செல்ல முடியும்.
    குடியுரிமை காஃபிர்கள் மூமின்களுக்கு பாவ, பரிதாபப் பட்டு கொடுக்கலாம்.ஆனால் அல்லாஹ் சுவனம் 999/1000 பேருக்கு கொடுப்பது இல்லை.
    3348. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, 'ஆதமே!" என்பான். அதற்கு அவர்கள், 'இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்" என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவன், 'ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)" என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்" (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)" என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)" என்று கூறினோம். உடனே அவர்கள், 'சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) 'அல்லாஹ் அக்பர்" என்று கூறினோம். அவர்கள், 'சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), 'அல்லாஹு அக்பர்" என்று கூறினோம். அப்போது அவர்கள், 'நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
    என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
    Volume :4 Book :60
    மூமின்கள் பெரும்பானமை நாடுகளில் காஃபிர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் நடத்தினாலும், காஃபிர் பெரும்பானமை நாடுகளில் அனைவரும் சரிசமமே!!
    காஃபிர்களே மிகைத்தவர்கள்!!
    டிஸ்கி: சீக்கிரம் பரிணாம எதிர்ப்பு பதிவு போடவும்,போரடிக்கிறது!!
    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் (ஓடிப்போகும்) சாவர்கான்,

      அஸ்ஸலாமு அலைக்கும்,

      1. //நண்பர் ஆஜிக்,
      நல்ல நகைச்சுவை பதிவு,//

      அப்படியா ரொம்ப சந்தோசம் சகோ. அடுத்தவரை இன்புற வைத்ததற்காக எனக்கு இறைவன் நற்கூலிகளை அதிகப்படுத்தி தருவானாக..

      2. //இஸ்லாமியர்களின் தொகை உயர்வுக்கு காரணம் அதிக குழந்தைகள் பெறுவதும் ,புலம் பெயர்வதுமே!!//

      இதுக்கு பேர் தான் 'என்ன பேசுரோம்னு தெரியாமையே உளறுவது" என்பது. நீங்கள் இன்னும் திருந்தாதது கொஞ்சம் வருத்தமே :-) அப்புறம் மக்கள் தொகை அதிகரிப்புக்கு நான் காரணத்தை பதிவுளையே சொல்லிருக்கேன். எப்படின்னா இப்படி

      ****இப்படியான அபார வளர்ச்சிக்கு தெளிவான காரணங்கள் அலசப்படவில்லை. குடியேற்றம் (Immigration) ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது***

      நான் ஆய்வுகளை மேற்கோள் காட்டி தான் என் யூகத்தை சொல்லிருக்கேன், உங்கள போல போற போக்குல விட்டு அடிச்சிட்டு போகல. நீங்க சொன்ன காரணத்துக்கு சென்சசில் இருந்து ஆதாரம் கொண்டு வாங்க. ஒத்துக்குவோம். இல்லேன்னா, உங்க கருத்த சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு என்ற அளவுல அதை கவனிச்சிக்கலாம். :-) ஓகேவா?

      3. //எனினும் உலக மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒருவர்தான் சுவனம் செல்ல முடியும் என நபி(சல்) ஹதிதில் கூறிவிட்டார். ஆகவே உலக மக்கள் தொகையான 700 கோடியில் 70 இலட்சம் மட்டுமே செல்ல முடியும்//

      உங்க இஸ்லாமிய அறிவு (?) ஊரறிந்த விசயம் தான் :-). அப்புறம், பல பிரிவுகள் உண்டாகும் அதில் ஒரு பிரிவுதான் சுவர்க்கம் செல்லும்னும் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னாங்களே, அத விட்டுட்டீங்களே. இன்னா ஒரு இஸ்லாமிய அறிவு பாஸ் உங்களுக்கு. இது மட்டுமா, மனதில் கடுகளவு இறையச்சம் கொண்டவர்கள் கூட சுவர்க்கம் செல்லாமல் இருப்பதில்லை என்றும் நாயகம் (ஸல்) கூறுனாங்களே, அதையும் விட்டுட்டீங்களே. ஹி ஹி...உங்க இஸ்லாமிய அறிவ அது சம்பந்தப்பட்ட பதிவுல போய் கேளுங்க, பதில் சொல்றேன் இன்ஷா அல்லாஹ். இந்த பதிவு பிரிட்டன் சென்சஸ் பத்தி பேசுது. அத பத்தி மட்டும் பேசுறது உத்தமம்.

      4. //டிஸ்கி: சீக்கிரம் பரிணாம எதிர்ப்பு பதிவு போடவும்,போரடிக்கிறது!!//

      ஹி ஹி..இதுவரை போட்ட பரிணாம பதிவு ஒன்னுக்காவது பதில சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம். மேலும், ஓடிப்போன பதிவுகளுக்கும் வந்து பதில் சொல்லுங்க. உதாரணம் ஒன்று இங்கே http://www.ethirkkural.com/2012/03/blog-post.html

      எனினும் உங்க வேண்டுகோள் ஏற்கபட்டது :-)

      தங்களின் வருகைக்கும் (வழக்கம் போல) உளறலுக்கும் நன்றி :-)

      Delete
    2. சகோ ஆஜிக்,
      1.//அப்படியா ரொம்ப சந்தோசம் சகோ. அடுத்தவரை இன்புற வைத்ததற்காக எனக்கு இறைவன் நற்கூலிகளை அதிகப்படுத்தி தருவானாக.. //
      காஃபிர்களைக் குஷிப் படுத்த குரான்,ஹதிதொடு உங்கள் பதிவுகளும் நல்ல பொழுது போக்கு!!.

      அப்புறம் எழுத்துப் பிழை நீங்கிய குரான் எப்போது அண்ணன் பி.ஜே வெளியிடுவார்?
      ***
      2./சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது***//
      உலகை அடிமைப்படுத்தியவர்களுக்கு சரியான தண்டனை என சொல்வேன். எனினும் பிரிட்டனின் மதமாற்றம் சார்ந்து அதிகரிக்கும் தொகை குறைவுதான். அதிக குழந்தை பெறுவதும், வறுமை ,வன்முறையினால் பிழைக்க குடிபெயர்வதுமே!!. அரபு நாடுகள் குடியுரிமை வழக்ஙாவிட்டாலும் பரிதாபப் பட்டு மூமின்களுக்கு காஃபிர்கள் குடியுரிமை வழங்குவதை நன்றியுடன் நினைவு கூறுங்கள்!!

      காஃபிர்களின் தயவு மூமின்களுக்கு தேவை!!
      ***
      3.// இந்த பதிவு பிரிட்டன் சென்சஸ் பத்தி பேசுது. அத பத்தி மட்டும் பேசுறது உத்தமம். / நான் அல்லாவின் சென்சஸ் 999/1000 என்பதைக் கூறுகிறேன். அத்வாது உலகமே மூமின்கள் ஆனாலும் கூட அதில் 999/1000 பெயர்தாங்கிகளாக மட்டுமே இருக்க முடியும்!!

      என நபி(சல்) கூறுகிறார் .

      இப்படி பெயர்தாங்கிகளின் சதவீதம் உயர மகிழ்ச்சி கொள்ளலாமா? அதுவும் குடியுரிமைப் பிச்சை காஃபிர்களிடம் எடுப்பவர்கள் பற்றி!!!

      ***
      4.//ஹி ஹி..இதுவரை போட்ட பரிணாம பதிவு ஒன்னுக்காவது பதில சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம். மேலும், ஓடிப்போன பதிவுகளுக்கும் வந்து பதில் சொல்லுங்க. உதாரணம் ஒன்று இங்கே http://www.ethirkkural.com/2012/03/blog-post.html

      எனினும் உங்க வேண்டுகோள் ஏற்கபட்டது :-)
      //
      இதுக்கு மறுப்பு போட்டது தெரியாதது போலவே தக்கிய பண்ணுகிறீர்களே!!
      பரிணாமத்தை பொய்யாக்குமா சோம்பேறி ஜீன்கள்!!!!!!

      http://aatralarasau.blogspot.com/2012/03/blog-post_20.html
      இந்தப் பதிவு தொடர்பா எத்த்னை விவாதம்!!.சாதிக்குனு ஒருத்தர்(நீங்களா) வந்து குப்பை என்பது உண்டா என கேட்டு ஹா ஹா ஹ
      5. இப்படி ஹோமோ சேஃபியன் படிமம் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது காட்டுவேன் என்றீர். ஏதோ
      //laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள்???//
      laetoli footprints பத்தி பதிவு போடுவேன் என்றீர். வித்தை காட்டும் சகோ காத்து இருக்கிறோம்!!

      நன்றி!!

      Delete
    3. பெரியவர் சார்வர்கன்,

      நான் முந்தைய பின்னூட்டத்தில் கேட்ட எந்த கேள்விக்கும் தாங்கள் வழக்கம் போல பதில் சொல்லவில்லை என்பதை தாழ்மையுடன் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். குப்பை ஜீன்கள் குறித்த என்னுடைய பதிவின் பின்னூட்டத்தில் தாங்கள் பின்னங்கால் பிடரியில் அடித்துக்கொண்டு ஓடிய விசயத்தை நினைவுப்படுத்தி அதில் வந்து தொடருங்கள் என்று கூறினால், நீங்கள் போட்ட காமெடி பதிவை பத்தி பேசிக்கொண்டிருக்கிண்றீர்கள். அந்த காமெடி பதிவில் நீங்கள் உளறிக்கொட்டியத்தை தான் பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் எஸ்கேப்.

      உங்களை போல எனக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. அதனால் கேட்கப்பட்ட கேள்விகளை விட்டுவிட்டு எதையாவது உளறிக்கொண்டிருக்க நேரமில்லை/விருப்பமும் இல்லை. இனி அப்படியாக வரும் பின்னூட்டத்தை அனுமதிக்கவும் முடியாது. மறுபடியும் சொல்கின்றேன், http://www.ethirkkural.com/2012/03/blog-post.html முடிந்தால் வந்து ஓடிப்போன இடத்தில் இருந்து தொடருங்கள்.

      எதிர்க்குரல் தளத்தில் பரிணாமம் ஆதரவாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டே வந்திருக்கின்றன. அந்த வகையில் lateoli குறித்தும் இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றப்படும்.

      அந்த கேப்பில் இந்த தளத்தில் உள்ள பரிணாம எதிர்ப்பு பதிவு ஒன்றுக்காவது முடிந்தால் மறுப்பு வெளியிட்டு காட்டுங்கள். :-)

      நன்றி...

      Delete
    4. மகா பெரியவர் ஆஜிக்கு,

      //தாங்கள் பின்னங்கால் பிடரியில் அடித்துக்கொண்டு ஓடிய விசயத்தை நினைவுப்படுத்தி அதில் வந்து தொடருங்கள் என்று கூறினால், நீங்கள் போட்ட காமெடி பதிவை பத்தி பேசிக்கொண்டிருக்கிண்றீர்கள். அந்த காமெடி பதிவில் நீங்கள் உளறிக்கொட்டியத்தை தான் பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் எஸ்கேப். //

      சரி காமெடியாக பேசுகிறீர்கள். குரானில் அல்லா,ஹதிதில் முகமதுவும் நகைச்சுவையாக சொல்வதை சீரியசாக எடுப்பதால் வந்த வினை.

      மீண்டும் அப்பதிவு குறித்து விவாதிப்போமா?? ஹி ஹி நான் தயார்.
      **
      //உங்களை போல எனக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. அதனால் கேட்கப்பட்ட கேள்விகளை விட்டுவிட்டு எதையாவது உளறிக்கொண்டிருக்க நேரமில்லை/விருப்பமும் இல்லை. இனி அப்படியாக வரும் பின்னூட்டத்தை அனுமதிக்கவும் முடியாது. மறுபடியும் சொல்கின்றேன், http://www.ethirkkural.com/2012/03/blog-post.html முடிந்தால் வந்து ஓடிப்போன இடத்தில் இருந்து தொடருங்கள்.

      எதிர்க்குரல் தளத்தில் பரிணாமம் ஆதரவாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டே வந்திருக்கின்றன. அந்த வகையில் lateoli குறித்தும் இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றப்படும்.

      அந்த கேப்பில் இந்த தளத்தில் உள்ள பரிணாம எதிர்ப்பு பதிவு ஒன்றுக்காவது முடிந்தால் மறுப்பு வெளியிட்டு காட்டுங்கள். :-)
      //

      எல்லாப் பதிவுகளுக்கும் பதில் இட்டாகி விட்டது!!

      பரிணாமம் குரான் முரண்படுகிறது சரியா? அதாவது பரிணாமம் சரி எனில் இந்த 1400 வருடமாக ஆட்சி அதிகாரம் கைப்பற்ற மட்டுமே முஸ்லிம்களுக்கு மதம் என்னும் ஏமாற்று வேலை பயன்பட்டது என்பது உண்மை ஹி ஹி


      படிம வரலாற்றுக்கு இஸ்லாமிய விளக்கம் என்ன?

      மூன்றாம் பாலினம் என்பது உண்டா?

      ஆதம்(அலை) ஹோமோரக்டசு ஆ?

      **8
      அடுத்த பதிவில் 1கோடி வருட ஹோமோசேஃபியன் படிமம் கிடைத்த தகவல் பகிர முடியுமா??

      காலடித்தடம் பத்தி எப்போ பதிவு ?

      நன்றி!!!

      Delete
    5. பெரியவர் சார்வர்கான்,

      மறுபடியும் அதே பல்லவியா...ரொம்ப கஷ்டம். இதுதான் கடைசி. இனி உங்களின் பின்னூட்டம் பதிவுக்கு சாராமல் வந்தால் பிரசுரிக்கப்பட மாட்டாது. அந்தந்த கருத்துக்களை அந்தந்த பதிவுகளில் இடவும். இந்த பதிவு பிரிட்டனில் இஸ்லாம் வளருவதை பேசுகின்றது. அது சார்ந்து மட்டும் கருத்தை கூறவும்.

      1. //மீண்டும் அப்பதிவு குறித்து விவாதிப்போமா?? ஹி ஹி நான் தயார்.//

      ஆண்டவா, இதை தானே அந்த பதிவில் நீங்கள் ஓடியதில் இருந்து கூறுகின்றேன். இப்போதாவது உரைத்ததே. வாங்க அந்த பதிவுக்கு. என்னுடைய கடைசி பின்னூட்டத்தில் நான் உங்களை நோக்கி கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க.

      2. //எல்லாப் பதிவுகளுக்கும் பதில் இட்டாகி விட்டது!!//

      ஹி ஹி. பதில் சொன்னீங்களா இல்லையான்னு எல்லா பதிவையும் வேணாம், கடைசி நாளே நாலு பதிவ பார்ப்போமா. ரெடி ஸ்டார்ட்.

      a) National Geographic குறித்த பதிவு - இந்த பதிவின் மைய கருத்து, தங்கள் நம்பிக்கையை நிரூபிக்க ஆய்வாளர்கள் தெரிந்தே தவறு செய்தனர் என்பது. இதனை நீங்கள் மறுக்க வேண்டுமானால், அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று நிரூபித்து இருக்கவேண்டும். இது இல்லாத எதுவும் மறுப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. அதனை நீங்கள் செய்திருந்தால் உங்கள் பதிவில் இருந்து எடுத்து என்னுடைய அந்த பதிவில் உங்கள் மறுப்பை பதியுங்கள்.

      b) மனித பரிணாமம் - இந்த பதிவின் மைய கருத்து, மனிதன் எதிலிருந்து வந்தான் என்ற கேள்விக்கு "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்ற பொதுவான பதில் மட்டுமே உள்ளதே தவிர எந்த படிமத்தை நோக்கியும் இது தான் மனித மூதாதையர் என்று ஒருமித்த கருத்தோடு கூறமுடியாத நிலையில் தான் பரிணாம உலகம் இருக்கின்றது. ஆக ஆதாரங்கள் இல்லாமலே ஒரு யூகத்தை உண்மை என்று சொல்லி வருகின்றனர். இதனை நீங்கள் மறுக்க வேண்டுமானால், இது தான் மனித மூதாதையர் என்று அட்லீஸ்ட் ஒரு படிமத்தை நோக்கியாவது கை நீட்டி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. இது இல்லாத எதுவும் மறுப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதனை நீங்கள் செய்திருந்தால் உங்கள் பதிவில் இருந்து எடுத்து என்னுடைய அந்த பதிவில் உங்கள் மறுப்பை பதியுங்கள்.

      c) தென் கொரியாவில் பரிணாம பாடங்கள் தூக்கப்பட்டது - இந்த பதிவின் மைய கருத்து, தென் கொரியாவில் படைப்புவாதிகளின் கோரிக்கைக்கு, அதாவது தவறான பரிணாம பாடங்கள் தூக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசாங்கம் அந்த பாடங்களை நீக்கியது. இதனை நீங்கள் மறுக்க வேண்டுமானால், இல்லை இல்லை தென் கொரிய அரசாங்கம் அப்படி செய்யவில்லை என்று மறுத்து இருக்க வேண்டும். அட்லீஸ்ட் அந்த தவறான பரிணாம பாடங்களில் அறிவியல் உலகில் சர்ச்சைகள் இல்லை என்றாவது நிரூபித்து இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. இவை இல்லாத எதுவும் மறுப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதனை நீங்கள் செய்திருந்தால் உங்கள் பதிவில் இருந்து எடுத்து என்னுடைய அந்த பதிவில் உங்கள் மறுப்பை பதியுங்கள்.

      d) இந்த பதிவு இரண்டு கருத்துக்களை கொண்டது

      (i) பாக்டிரியாக்கள் - இதனுடைய மைய கருத்து, பாக்டிரியாக்களில் தடுப்பாற்றல் என்பது நாம் நினைப்பது போல சமீபத்திய நிகழ்வு அல்ல, 30000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கின்றது என்பது. இதனை நீங்கள் மறுக்க வேண்டுமானால், இல்லை இல்லை தடுப்பாற்றல் இப்போது உருவானது தான் என்று நிரூபித்து இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. இது இல்லாத எதுவும் மறுப்பாகாது. அதனை நீங்கள் செய்திருந்தால் உங்கள் பதிவில் இருந்து எடுத்து என்னுடைய அந்த பதிவில் உங்கள் மறுப்பை பதியுங்கள்.

      (ii) பரிணாமமும் உயிரியலும் - இதனுடைய மைய கருத்து, பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது என்ற கருத்து அறியாமையால் உருவான ஒன்று, இதில் உண்மை இல்லை என்பது. இதனை நீங்கள் மறுக்க வேண்டுமானால், பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது என்று நிரூபித்து இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. இது இல்லாத எதுவும் மறுப்பாகாது. அதனை நீங்கள் செய்திருந்தால் உங்கள் பதிவில் இருந்து எடுத்து என்னுடைய அந்த பதிவில் உங்கள் மறுப்பை பதியுங்கள்.

      மொத்தத்தில் நீங்க எந்த பதிவுக்கும் மறுப்பே சொல்லவில்லை. நானும் ரவுடி தான் என்பது போல, நானும் பதிவு போடுறேன் என்று நீங்கள் போடுவதை எல்லாம் மறுப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

      So Issues are open. I am waiting for somebody to answer my posts. Hope someday i will find a person, Insha allah.

      மத்தப்படி உங்க கருத்துள பதில் சொன்ன ஒண்ணுமில்ல. அதே ரிபீட் புலம்பல். இப்ப மறுபடியும் இந்த பின்னூட்டத்தின் முதல் பத்திய படிச்சிக்குங்க...அந்தந்த கருத்த அந்தந்த பதிவுல போடுங்க...இந்த பதிவு சம்பந்தமா மட்டும் இங்கு கருத்து சொல்லுங்க...

      நன்றி அய்யா

      Delete
  8. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோ

    எதிர்பார்க்கப்பட்ட நல்ல தகவல் இதில்
    ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
    உலக மயமாக்கல் பண்டமாற்றுவதட்குதானா ..!!!
    இஸ்லாமிற்கு அந்த தகுதியில்லையா...!!!!
    ஆம் ...இருக்கிறது என்று பிரிட்டன் சொல்கிறதே ..
    இன்னும் ஒரு பத்து வருடங்களில் அதாவது அடுத்த
    சென்சசில் பிரிட்டனில் 'கிறிஸ்டியானிட்டி' 'மைனாரிட்டி'
    ஆகும் என்று தகவல் ....
    You struck the nail on head regarding dawkins dear DAILY MAIL. :-) :-)
    ஏன் பாய் டாகின்ஸ் மேல இவ்வளவு கொலவெறி ....ஹா ஹா --

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் நாசர் பாய்,

      பிரிட்டன் மக்கள் தொகை இந்த வகையில் சென்றால் 2018 ஆம் ஆண்டு வாக்கில் கிருத்துவம் மைனாரிட்டி ஆகிவிடும் என்று தி கார்டியன் ஊடகம் தெரிவிப்பது ஆச்சர்யமாகவே இருக்கின்றது.

      எனக்கு என்னங்க கொலைவெறி டாவ்கின்ஸ் மேல. அவர் யுக்தி முஸ்லிம்கள் கிட்ட பலிக்கல. அவ்ளோதான் :-)

      வஸ்ஸலாம்.

      Delete
  9. உங்களை மாற்றவே முடியாது ஏனென்றால் பிறந்தது முதலே காட்டுமிராண்டி பொம்மை போலேவே வளர்ந்து விடுகிறீர்கள் / வளர்த்துவிடுகிரார்கள். அதோடு கணக்கில்லாமல் பெற்று கொள்கிறீர்கள் அதனால் உங்கள் மக்கள் தொகையும் அளவுக்கு அதிகமாக வளர்ந்துவிடுகிறது. இதுதான் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் Hot Blogs,

      தாங்கள் சாந்தமடைந்து உண்மையை உணர வேண்டியவனாக, வருகைக்கு நன்றி.

      Delete
  10. @ ஆஷிக் பாய்
    ** எனக்கு என்னங்க கொலைவெறி டாவ்கின்ஸ் மேல. அவர் யுக்தி முஸ்லிம்கள் கிட்ட பலிக்கல. அவ்ளோதான் :-) **
    கரெக்ட் ....சரியா சொன்னிங்க ...முஸ்லிம்களிடம் விவாதம் செய்யமாட்டேன்,சபதம் எடுத்துவிட்டேன் என்று சகோ சார்வாகனின் காட் ஃபாதர் டாகின்ஸ் ஜகா வாங்கும் போது இவர் எம்மாத்திரம் ....!?
    மகரிஷி வவ்வால் கொஞ்ச நாளா கானோம் ,எங்கே போய்ட்டார் ??
    தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா .....

    ReplyDelete
    Replies
    1. @ நாசர்,

      ஆமாங்க, டாகின்ஸ் முஸ்லிம்கள் கூட வாதத்துக்கு வராமயே எஸ்கேப். டைம்ஸ் பத்திரிக்கை முதற்கொண்டு வெளிப்படையா விவாதத்திற்கு அழைப்பு விடுத்தாச்சு. பலனில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது அவரால் என்ன மாற்றத்தை முஸ்லிம்களிடையே ஏற்படுத்த முடியும்? ஒருவேளை விவாதம் செய்து வென்றால் ஏதாவது எதிர்பார்க்கலாம். ஆனா அதுக்கு வாய்ப்புண்டா...:-)

      அப்புறம் இந்த லோக்கல் நாத்திகர் குறித்தெல்லாம் அதிகம் சட்டை செயாதிங்க. அவங்க எங்கிருந்து மேட்டர் எடுத்துட்டு வராங்கலோ அங்கேயே அட்டாக் பண்ணுவோம். அதான் சரியான அணுகுமுறை. :-)

      Delete
  11. அல்ஹம்துலில்லாஹ்....
    மிக அருமையானா செய்தி.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் ஹிமாஸ் நிளர்,

      அல்ஹம்துலில்லாஹ். தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி

      Delete
  12. அல்ஹம்துலில்லாஹ்...

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் Islamiclinks,

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  13. அஸ் ஸலாமு அலைக்கும் ஆஷிக்,

    வழக்கம் போல அருமையான பதிவு, அசைக்கமுடியா புள்ளிவிவரங்கள். மாஷா அல்லாஹ், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. :)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ அன்னு,

      தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி..

      Delete
  14. நந்தன்Thursday, December 20, 2012

    ஆமாம் இசுலாம் வேகமாக வளர்ந்து வருகிறது. சன்னி, ஷியா, அகமதியா, பஞ்சகுட்டி, விரலை ஆட்டும் கூட்டம் என்று மிக வேகமாக 72 கூட்டத்தை எட்டிப்பிடிக்க வளர்ந்துகொண்டே இருக்கிறது. நல்லா தண்ணி ஊத்தி வளருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பறையோசை நந்தன்,

      உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

      ஷியா என்பது அரசியல் காரணத்தால் உருவான பிரிவு, அறிவேன். அது என்ன பஞ்சுக்குட்டி, அறிசிக்குட்டி மற்றும் இத்தியாதிகள்??? அப்புறம், நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துல எந்த பிரிவும் இல்ல. மனிதன் தன் நிலைமறந்து செய்த/ஏற்படுத்திய பிரிவுக்கெல்லாம் இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது சகோ.

      ஆமாம், உண்மை என்னும் தண்ணி ஊற்றப்பட்டு நல்லாவே அது வளர்ந்து வருகின்றது. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வளரும், ஏன் தெரியுமா?

      தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அனைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32) - இதனால் தான் :-)

      அப்புறம் பதிவுக்கு சம்பந்தமா டென்ஷன் ஆகுங்க. அடுத்தமுறை இப்படி ஏதாவது பதிவுக்கு சம்பந்த இல்லாதத தூக்கிகிட்டு வராதிங்க. கமெண்ட் நேரா குப்பை தொட்டிக்கு போயிடும்.

      இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

      கருத்துக்கு நன்றி..

      Delete
    2. @ நந்தன்,

      less tension, more work. more work, less tension. நான் சொன்னத நீங்க கேட்காததால உங்க கமெண்ட் குப்பைக்கு போயிடுச்சு. போய் வேறு எங்காவது பிதற்றி மன ஆற்றமையே வெளிப்படுத்திக்குங்க...

      நன்றி

      Delete
  15. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு ஆஷிக் அண்ணா...

    ---இஸ்லாம் என்னும் நம்பிக்கையை ரிச்சர்ட் டாகின்ஸ்சால் ஒன்றுமே செய்ய முடியவில்லை'---

    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அனைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..

      அருமையான குர்ஆன் வசனத்திற்கும், தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி தம்பி...

      Delete
  16. Jazakallahu haiyr,,,,,,, For your article...

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் Mohamed Faizal சகோ,

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  17. சலாம் சகோ ஆஷிக்,

    மாஷா அல்லாஹ் கலக்கல் பதிவு.இவ்வாறு படு வேகமாக இஸ்லாம் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்தால்

    இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகளின் ஆட்சி இஸ்லாமியர்களின் கையில்.


    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோ முஹம்மத்,

      ஊக்கத்திற்கு நன்றி. எண்ணிக்கையை விட மனதால் மாற்றம் கண்ட, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றும் ஒரு முழுமையான சமுதாயம் உருவாக வேண்டுமென்பதே என் வேண்டுதல்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ...

      Delete
  18. Message from your friend.

    http://www.aljazeera.com/programmes/general/2012/12/2012121791038231381.html

    - Shueib

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் Shueib,

      லிங்க்கிற்கு நன்றி.

      Delete
  19. சலாம் சகோ.ஆசிக் அஹ்மத்

    இஸ்லாமிய வளர்ச்சியை ஆதாரப்பூர்வமாக அருமையாக சொல்லியுள்ளீர்கள்..பாருங்கள் நமது சார்வாகனின் வைத்தெரிச்சலை..அதிக குழந்தை பெறுவதுதான் வளர்ச்சிக்கு காரணம் என அத்வானி மாதிரி பேசுகிறார்.. சார்வகனும் இனி வதவதவென குழந்தைகளை பெற்றுக்கொண்டு நாத்திகம் வளர்ந்து விட்டது என காட்டுவாரோ என அஞ்சுகிறேன்.. மிகவும் மகிழ்ச்சி சகோ...சார்வகனை இல்லாமல் ஆக்குவதற்கு நீங்கள் ஒருவரே போதும் என நினைக்கிறேன்...மனுஷன் அப்பிடி ஓடுறாரு..அடுத்த ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு கோல்ட் மெடல் கன்பார்ம்...

    சகோ...அப்பறம் நாஸ்டர்டாம் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் நாகூர் மீரான்,

      ஆமாங்க சகோ. கோல்ட் மெடல் கிடைக்கலாம். அவர் ஓடுவது இது பலவாவது முறை. அதனால் தான் நான் அவரை சட்டை கூட செய்வதில்லை. வந்தால் "ஆஹா நல்லா டைம் பாஸ் ஆக போகுது" என்று நினைத்து என்ஜாய் பண்ணுவேன். இதுல இப்ப புதுசா 'என் கட்டுரைகளுக்கு பதில் அளிக்கின்றேன்" என்று வேறு சொல்லிகொள்கின்றாராம்..ஹா ஹா ஹா. ஒன்னுக்கு கூட பதில் சொல்லமால் நானும் பதிவு போடுகின்றேன் என்று கணக்கு சேர்த்துக்கொள்கின்றார்.

      உண்மையான, ரோசமுள்ள மனிதனாக இருந்தால் ஓடிப்போன இடத்தில் இருந்து தொடர்ந்திருக்கனுமா இல்லையா..இதுல "மறுபடியும் ஆரம்பிப்போமா" என்று சவால் வேறு. அத தானே நான் அப்போதிலிருந்து சொல்றேன் வாங்கன்னு சொன்னா மறுபடியும் எஸ்கேப்.

      விடுங்க விடுங்க..

      //அப்பறம் நாஸ்டர்டாம் பற்றி ஒரு பதிவு போடுங்களேன்....//

      இத பத்தி என்ன எழுதுறதுன்னு தெரில. :-)

      வஸ்ஸலாம்..

      Delete
  20. அஸ்ஸலாமு அலைக்கும்!
    இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளின் சதிக்கும், வன்மையை தீர்க்கும் வீடியோக்களிற்கும் மத்தியில் இந்தளவு வளர்ச்சி உண்மையிலே ஆச்சர்யமான தகவல்தான்.
    அல்லாஹ் தன் கூற்றை மெய்ப்பிக்கிறான், அல்லாஹு அக்பர்!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சகோதரி அஷ்பா,

      உண்மை தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  21. SALAM,

    நாத்திகம் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது என்பது கண்கூடான உண்மை.தகவல்கள் அனைத்தும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது..வெகு நாட்களாக ஏன் புது பதிவுகள் இல்லை சகோ?

    என் தளத்தில் இன்று:முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?
    tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  22. வாங்க மதுரைத்தமிழன்,

    அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி.

    ReplyDelete
  23. வ அலைக்கும் சலாம் திருவாளப்புத்தூர் முஸ்லிம்,

    தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோ.

    //.வெகு நாட்களாக ஏன் புது பதிவுகள் இல்லை சகோ?//

    குடும்ப மற்றும் அலுவலக வேளைகளில் பிஸியாக இருப்பதால் நேரப்பிரச்சனை. இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்க துவா செய்யுங்க சகோ.

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ ...
    உங்களுக்கு அறிமுகம் தேவை இல்லை மாஷா அல்லா ...நான் நன்மையை கொள்ளைஅடிக்க இன்று வலைச்சரத்தில் உங்களை குறிபிட்டுள்ளேன் ஏக இறைவன் நம் அனைவருக்கும் நல்ல வழியை காட்டுவானாக ஆமின் ,,,நேரம் இருந்தால் வந்து பாருங்கள் இங்கே http://blogintamil.blogspot.com/2013/01/2516.html

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும்!

    இன்று 8.01,2012 உங்களின் படைப்பு வலைச்சரத்தில் வெளிவந்துள்ளது அருமையான படைப்பு நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள் அண்ணா வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. Dear Ashik brother...welldone ur job...am a new commender of ur block but am following ur posts past 1 year like against ehiyist...may almighty vavs gud place on u at jennath...insha allah
    Assalamu alaikum...

    ReplyDelete