Friday, December 23, 2011

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம். 

அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை. 

அறிவியல் கடவுளை மறுக்கின்றது என்று அவர்கள் எப்படி எண்ணுகின்றார்களோ, அதுபோலவே, அறிவியல் வளர்ச்சி இறைவனை மெய்ப்பிக்கின்றது என்று ஆத்திகர்கள் நம்புகின்றனர். 

இதில் கவனிக்கப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், உலகின் செல்வாக்கு மிகுந்த நாத்திகர்கள் என்று கருதப்பட்டவர்கள் ஆத்திகத்திற்கு தங்கள் எண்ணங்களை மாற்றியதற்கு காரணம் இதே அறிவியல் வளர்ச்சி தான்.  

பேராசிரியர் ஆண்டனி ப்ளு (Antony Flew) - இன்று எப்படி நாத்திகர்களினால் ரிச்சர்ட் டாகின்ஸ் கொண்டாடப்படுகின்றாரோ, அதுபோல இருபதாம் நூற்றாண்டில் நாத்திகர்களால் கொண்டாடப்பட்டவர். 


நாத்திகத்தின் முன்னணி சாம்பியனாக கருதப்பட்ட இவர், சுமார் ஐம்பது ஆண்டு காலம் நாத்திகத்திற்காக தன் வாழ்நாளை கழித்தவர். விவாதங்கள், புத்தகங்கள், பல்கலைகழக சொற்பொழிவுகள் என்று நாத்திகம் குறித்து பேசினாலே இவர் பெயர் தவிர்க்க முடியாது என்று கூறும் அளவிற்கு நாத்திகர்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்தார்.

இறைநம்பிக்கை ஏன் அர்த்தமற்றது என்பது குறித்து இவர் எழுதிய "Theology and Falsification" என்ற கட்டுரை, சென்ற நூற்றாண்டின் அதிகம் மறுபதிப்பு செய்யப்பட்ட தத்துவ கட்டுரையாகும். 

இதுவரையிலான இவருடைய அறிமுகத்தை வைத்து, இவர் எந்த அளவு நாத்திகர்களிடையே முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள். 

இப்படியான ஒருவர் ஆத்திகத்தின்பால் திரும்பினால்? தன் திசை மாற்றத்திற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளே காரணம் என்று கூறினால்?

Dec 9, 2004-ஆம் ஆண்டு, Associated Press ஊடகம், நாத்திகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கும்விதமாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்தியின் தலைப்பு இதுதான், 

"Famous Atheist Now Believes in God" - AP report, 9th Dec 2004. 
"பிரபல நாத்திகர் தற்போது கடவுளை நம்புகின்றார்" - AP report, 9th Dec 2004.

Associated Press ஊடகத்தின் அந்த கட்டுரையின் நாயகன் ப்ளு அவர்கள் தான். இது நாத்திகர்களால் நம்பவே முடியாத செய்தி. 

ஆத்திகராக மாறினார் ப்ளு என்பது மிக அதிர்ச்சியான தகவல் என்ற போதிலும் அதனை அவர்கள் காலப்போக்கில் கடந்து வந்துவிடலாம். ஆனால், அந்த கட்டுரையின் உபதலைப்பு தான் நாத்திகர்களை கடுமையான கோபத்திற்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கியிருக்கும். அந்த உபதலைப்பு இதுதான். 

"One of World's Leading Atheists Now Believes in God, More or Less, Based on Scientific Evidence" - AP report, 9th Dec 2004.
"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்" - (Extract from the original quote of) AP report, 9th Dec 2004.

ooopppsss....

எதிர்ப்பார்த்தது போலவே இந்த செய்தி நாத்திகர்களிடையே பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. டி.வி, ரேடியோ, நாளிதழ்கள் என்று அனைத்து தரப்பட்ட ஊடங்கங்களிலும் இந்த செய்தி பெரிதாக பேசப்பட்டது. ப்ளு ஆத்திகரானது எந்த அளவு முக்கியத்துவம் பெற்றதென்றால், Associated Press ஊடகம் மட்டுமே இதுக்குறித்து தொடர்ச்சியாக மூன்று கட்டுரைகளை வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

நாத்திகத்திற்காக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ப்ளு. தன் ஐம்பது ஆண்டு கால பிரச்சாரத்தில் எத்தனை வாதங்களை நாத்திகத்திற்கு எதிராக பார்த்திருப்பார்? எத்தனை விதமான சவால்களை சந்தித்திருப்பார்? அப்படிப்பட்டவர் ஆத்திகத்தின்பால் திரும்புகின்றார் என்றால் மிக  வலிமையான வாதங்கள் ஆத்திகத்திற்கு ஆதரவாக, நாத்திகத்திற்கு எதிராக அவருக்கு கிடைத்திருக்க வேண்டும்.

எதற்காக ஆத்திகத்தின்பால் திரும்பினீர்கள் என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் "Follow the evidence, wherever it leads" என்பதாகும். அதாவது, ஆதாரங்களை பின்தொடர்ந்து செல்லுங்கள், அவை என்ன சொல்கின்றனவோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதாகும்.

Dec, 2004-ல், இறைவனை தான் நம்புவதாக ப்ளு வெளிப்படையாக அறிவித்தாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே "Philosopy Now" இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையில் தன் நிலை குறித்து பின்வருமாறு க்ளூ கொடுத்திருந்தார்,

"It has become inordinately difficult even to begin to think about constructing a naturalistic theory of the evolution of that first reproducing organism," - Antony flew on August-September issue of Britain's Philosophy Now magazine (As reported by AP)
(இனப்பெருக்கம் செய்யும்) உலகின் முதல் உயிரினம், இயற்கையாக பரிணாமம் அடைந்திருக்கும் என்பதை நம்புவது குறித்து யோசிப்பது கூட வர வர கடினமாக இருக்கின்றது - (extract from the original quote of) Antony flew on August-September issue of Britain's Philosophy Now magazine (As reported by AP)

உயிர் குறித்து வெளிவரும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் இந்த பிரபஞ்சத்தின் சிக்கலான வடிவமைப்பு போன்றவை தன் நாத்திக நம்பிக்கையை பதம் பார்த்துவிட்டதாக கூறினார் ப்ளு.

குறிப்பாக, DNA-க்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள், நம்பவே முடியாத அளவுக்கு சிக்கலான  வடிவமைப்பை அவை கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாகவும், இவையெல்லாம் தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை எனவும், நிச்சயம் ஒரு அறிவார்ந்த சக்தியாலேயே இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் தன் நிலையை தெளிவாக அறிவித்தார் ப்ளு.

இதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. உயிரியல் உலகை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாய் புரியும் உண்மை என்னவென்றால், உயிர் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை நாளுக்கு நாள் அறிவியல் முடிவுகள் தெளிவுபடுத்தி வருகின்றன என்பதுதான்.

பேராசிரியர் ப்ளு, அறிவியல் முடிவுகளின் வாயிலாக இறைவனை அங்கீகரித்து மிகப்பெரிய தாக்கத்தை நாத்திகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டார்.  ஆனால் அவர் இத்தோடு நிறுத்தவில்லை. அடுத்த பூகம்பத்தை ஏற்படுத்த ஆயத்தமானார்.

2007-ஆம் ஆண்டு, ராய் வர்கீஸ் என்பவருடன் இணைந்து ப்ளு வெளிக்கொண்டு வந்த புத்தகம் நாத்திகர்களிடையே ஒரு கலக்கு கலக்கியது. அந்த புத்தகத்தின் பெயர் "There is a God (இறைவன் இருக்கின்றான்)" என்பதாகும். அதில் தான் நாத்திகனாகவும் மார்க்சிஸ்ட்டாகவும் இருந்தது பற்றி, பின்னர் மனம் மாறியது பற்றி விரிவாக விளக்குகின்றார் ப்ளு.


இந்த புத்தகம் குறித்து கருத்து தெரிவித்த MIT-யின் அணுசக்தி பொறியியல் துறையின் தலைவரான இயன் ஹட்ஷின்சன் பின்வருமாறு கூறுகின்றார்.

“Antony Flew’s book will incense atheists who suppose (erroneously) that science proves there is no God.” - Ian H. Hutchinson, Professor and Head of the Dept. of Nuclear Science and Engineering, MIT (as found on Amazon review).
இறைவன் இல்லையென்று அறிவியல் நிரூபித்துவிட்டதாக (தவறாக) எண்ணிக்கொண்டிருக்கும் நாத்திகர்களை ப்ளுவின் இந்த புத்தகம் சினமூட்டுகின்றது - Ian H. Hutchinson, Professor and Head of the Dept. of Nuclear Science and Engineering, MIT (as found on Amazon review). 

தங்களின் வழிகாட்டியாக இருந்த ஒருவர் இப்படி தடம்மாறியது குறித்து தங்கள் மனதை சாந்தப்படுத்தியாக வேண்டுமே நாத்திகர்கள்?...என்ன செய்வது?...ஒருவேளை ப்ளு கிருத்துவதையோ அல்லது இஸ்லாத்தையோ ஏற்றிருந்தால் 'காசு கொடுத்துவிட்டார்கள், அதனால் ஏற்றுக்கொண்டுவிட்டார்' என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ப்ளு, இறைவன் இருக்கின்றான் என்று ஒப்புக்கொண்டாரே தவிர ஒருங்கிணைந்த மதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேரம், தன் மீது மதப்பிரச்சாரங்கள் நடத்தப்பட்டால் அதற்கு தான் தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்.

ப்ளுவின் மனமாற்றத்தை பின்னர் எப்படித்தான் விளக்கம் கூறி தங்கள் மனதை சாந்தப்படுத்திக்கொள்வது?....இந்த நொடிப்பொழுதில் சில நாத்திகர்களது மனதில் உதித்ததுதான் சில அதிஅற்புதமான எண்ணங்கள். வயதாகிவிட்டதால் ப்ளு இப்படி பேசுகின்றார் என்றும், மனரீதியான பாதிப்பு (mentally declined) ஏற்பட்டுள்ளதால் இப்படி நடந்துக்கொள்கின்றார் என்றும் கூறினர். இதற்கும் சாட்டையடியாக விளக்கம் கொடுத்தார் ப்ளு.

டாகின்ஸ்கின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார். உயிர்த்தோற்றம் குறித்த டாகின்ஸ்சின் கருத்தை "காமெடி" என்று கூறிய ப்ளு, டாகின்ஸ்சின் வாதங்கள் இப்படித்தான் இருக்குமானால் கேம் முடிந்துவிட்டதாக கூறினார்.

"...Richard Dawkins' comical effort to argue in The God Delusion that the origin of life can be attributed to a "lucky chance." If that's the best argument you have, then the game is over" - Professor Flew's interview with Dr. Benjamin Wiker, dated 30th October 2007.
அதிர்ஷ்டவசமாக உயிர் உருவாக்கியிருக்கும் என்று தன்னுடைய புத்தகத்தில் டாகின்ஸ் கூறுவது ஒரு காமெடியான முயற்சியே ஆகும். இதுதான் உங்களுடைய மிகச்சிறந்த வாதம் என்றால், கேம் முடிந்துவிட்டது - (extract from the original quote of) Professor Flew's interview with Dr. Benjamin Wiker, dated 30th October 2007.

பரிணாம கோட்பாட்டிற்கு எதிராக முன்வைக்கப்படும் Intelligent Design (ID) கோட்பாட்டை ஒட்டியே தன்னுடைய எண்ண அலைகள் இருப்பதாக ப்ளு கூற, Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ப்ளு போன்ற ஒருவர், வேகமாக வளர்ந்து வரும் அவர்களது கோட்பாட்டிற்கு ஆதரவுக்கரம் நீட்டியதை பெரும் புத்துணர்ச்சியாக எண்ணினர் (ID குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

நாத்திகர்களின் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் ப்ளு. நாத்திகராக வாழ்ந்தவர் ஆத்திகராக மறைந்துவிட்டார்.

வரலாறு முழுக்க, ப்ளு போன்ற பிரபல நாத்திகர்கள் அல்லது நாத்திகர்களாக இருந்த ஆய்வாளர்கள் தங்களது மனதை ஆத்திகத்தின்பால் திருப்பியதற்கு அறிவியல் முடிவுகளும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியா உண்மை. (இன்ஷா அல்லாஹ், இம்மாதிரியான நாத்திகர்களை எதிர்க்கால பதிவுகளில் அவ்வப்போது பார்க்கவிருக்கின்றோம்)

அறிவியல் நாத்திகத்திற்கு வழிவகுக்கின்றது என்று தங்கள் அறியாமையால் சிலர் எண்ணினால் அது அறிவியலைப் பற்றிய அவர்களது தவறான புரிதலே அன்றி வேறொன்றும் இல்லை.

சிந்திக்க விருப்பமுள்ளவர்கள் சிந்திக்கட்டும். நடுநிலையோடு அறிவியல் முடிவுகளை ஆய்வு செய்யட்டும். உண்மையை அறிந்துக்கொள்ளட்டும். 

முடிவாக:

பிரிட்டனின் "The Guardian" பத்திரிக்கை, 2011-ன் டாப்-10 அறிவியல் செய்திகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் என்னுடைய கவனத்தை ஈர்த்தன இரண்டு செய்திகள்.

1. உலகின் முதல் பறவை என்று சுமார் 150 ஆண்டுகளாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்ட ஆர்க்கியாப்டெரிக்ஸ், தான் பறவையல்ல ஒரு டைனாசர் மட்டுமே என்று கூறி பரிணாமவாதிகளுக்கு bye bye காட்டிய செய்தி டாப்-10னில் இடம்பெற்றுள்ளது (ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

2. பல மருத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று கருதப்பட்ட ஸ்டெம் செல் ஆய்வுகள், இந்த நூற்றாண்டில் ஆர்வமிக்கதாக இருக்காது என்பது மற்றொரு செய்தி. நான்கு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள், அவர்களது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது பெரிய பின்னடைவை இந்த ஆய்வுகளுக்கு தந்திருப்பதாக குறிப்பிடுகின்றது கார்டியன். இதனால், மனிதர்களுக்கு ஸ்டெம் செல் செலுத்தி ஆய்வு செய்வது தற்காலிகமாக கைவிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு பொருளாதார பிரச்சனையும் மற்றுமொரு காரணம் என்றும் கார்டியன் மேலும் தெரிவிக்கின்றது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

References:
1. Famous Atheist Now Believes in God - AP report, 9th dec 2004. link
2. Exclusive Flew interview - Dr.Benjamin wiker, 30th Oct 2007. link
3. There Is a God: How the World's Most Notorious Atheist Changed His Mind - Amazon.com. link
4. The Turning of an Atheist - New York times, November 4, 2007. link
5. Intelligent Design: Atheists to the Rescue - First times, 29th Nov 2011. link
6. Science review of 2011: the year's 10 biggest stories - The Guardian, 17th Dec 2011. link
7. Antony Flew - Wikipedia. link
8. The First Gene: The Birth of Programming, Messaging and Formal Control - Amazon.com. link
9. Materialists Beware: The First Gene Defends a Strictly Scientific, Non-Materialist Conception of Biological Origins - Evolution News, 17 Nov 2011. link
10. There is a God - Antony flew, Preface and Introduction. link
11. The Central Dogma - RIKEN Omics Science Center, youtube. link
12. Antony Flew's There IS a God - the authorship controversy - ARN, 31st Dec 2007. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






37 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    //"Follow the evidence, wherever leads" என்பதாகும். அதாவது, ஆதாரங்களை பின்தொடர்ந்து செல்லுங்கள், அவை என்ன சொல்கின்றனவோ அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்//

    இறை ஆதார உண்மைகளை, அத்தாட்சிகளை உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் உள்ளமும் இறைக்கருணை அல்லவா!

    ReplyDelete
  2. Assalamu alikum! Bro naathigarkaluku matrum oru savukadi! Super post bro keep it up!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம் கேட்டிருக்கலாம்.//

    என்ன கேட்டிருக்கலாம்? அவர்கள் குழப்பம் ஏற்படுத்த பயன்படுத்துகிற முக்கியமான வார்த்தைகள் இவை

    ஆனால் இந்த அறிவியல் யூகத்தில் அதிகமான இறைநம்பிக்கை தனிமனித ஒழுக்கமும் தேவைப்படுகிறது அன்றிருந்தவர்களுக்கு பயன்பட்டதை விட இன்று அதன் பயன்பாடு வழிகாட்டல் மிக தேவைப்படுகிறது

    அறிவியல் வளர்ச்சியினால் நண்மைகளை பண்மடங்கு பெற்றது போலவே தீமைகளின் உச்சகட்டத்தையும் பெற்று இருக்கிறோம். உதாரணத்திற்கு அக்கால மது வகைகள் கள், சாராயம் இப்படி ஐந்து விரல்களுக்குள் என்னும் அளவுக்கு இருந்த போதை வஸ்துக்கள் இன்று பாருங்கள் அபின், பிரவுன் சுகர் போதை ஊசி,மாத்திரை இவைகள் கள்ளை விட படமடங்கு வீரியமானவைகளை தந்ததும் இந்த அறிவியல் தான்.

    விபச்சாரம் சமபந்தப்பட்ட வழக்குகள் போக்குகள் வடிவங்கள் அன்று குறைவு இன்று? இதனிடமிருந்தும் பாதுகாப்பு பெற வேண்டும் என்றால் இவைகளை மூர்க்கமாக எதிர்க்கிற தனிமனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற மார்க்கத்தின் தேவை அதிகரிக்கிறது இதுதான் முக்கியமான தேவையும் கூட

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  4. Let's wait and see what do they reply on this post ...

    ReplyDelete
  5. இரு இறை மறுப்பாளர் இறை நம்பிக்கை கொள்வது அவரின் சொந்த விஷயம் என்றாலும் இதில் ஆபிரஹாமிய கடவுளை கும்பிடுபவர்களுக்கு எநத விததிதிலும் பயன் அளிக்காது.
    //Flew was particularly hostile to Islam, and said it is "best described in a Marxian way as the uniting and justifying ideology of Arab imperialism."[5] In a December 2004 interview he said: "I'm thinking of a God very different from the God of the Christian and far and away from the God of Islam, because both are depicted as omnipotent Oriental despots, cosmic Saddam Husseins".[17]//
    http://en.wikipedia.org/wiki/Antony_Flew

    ஆண்ட்ரு ஃப்ளூ கொடுமையான ஆபிரஹாமியக் கடவுள்களை நம்பாத ஒரு மனிதரே.ஒரு மேற்பட்ட சக்தி இருப்பதாக ஏற்ற அவரை அவரை இந்து மதத்தின் கொள்கைகளை ஏற்பவராக வேண்டுமானால் கூறலாம்.
    அகவே இந்துவாக மாறிய ஆண்ட்ரு ஃப்ளூவின் வழியில்
    பாலைவன‌ அரபி அல்லாவை விட்டு அனைத்து முஸ்லிம்களும் தாய் மதமான இந்து மததிற்கு திரும்புங்கள்.

    kafir

    ReplyDelete
  6. //பாலைவன‌ அரபி அல்லாவை விட்டு அனைத்து முஸ்லிம்களும் தாய் மதமான இந்து மததிற்கு திரும்புங்கள்.

    kafir//

    காபிர். பாகன் மதங்களை அழித்த ஒரு கடவுள் தேவையா?

    ReplyDelete
  7. அண்ணே அனானி தாய் மதத்துக்கு அழைக்கும் போது கூட சொந்த பெயரில் வர முடியவில்லை ஒங்களா நம்பி.... வெளங்கிரும் என்னத்தே சொல்றது சரி அது கிடக்கட்டும்

    //ஆபிரஹாமியக் கடவுள்களை//

    இப்படி பண்மையான கடவுள்களும் இல்லை அப்புறம் ஆபிரஹாமுக்கு மட்டும் இந்த கடவுள்கள் சொந்தமும் இல்லை ஆபிரஹாமியர்கள் முஹம்மதியர்கள் என்ற சொல்லாடலும் தவறு அனானி இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஆபிரஹாமுக்கு முன்பே தொன்றிய ஆதம் நபியிலிருந்து தொடர்கிறது இடையில் ஆபிரஹாமுவை மட்டும் பிடித்து நீங்கள் தொங்க வேண்டாம்.

    //ஆண்ட்ரு ஃப்ளூ கொடுமையான ஆபிரஹாமியக் கடவுள்களை நம்பாத ஒரு மனிதரே.//

    ஆதம் நபியின் வழிவந்த ஒரு கடவுளை நமபக்கூடிய நல்ல மதத்தை பின்பற்றுபவராக இருக்கட்டுமே

    கவனிக்க
    அவர் கூட கட்டுரையில் இப்படி சொல்கிறார்

    (இனப்பெருக்கம் செய்யும்) உலகின் முதல் உயிரினம், இயற்கையாக பரிணாமம் அடைந்திருக்கும் என்பதை நம்புவது குறித்து யோசிப்பது கூட வர வர கடினமாக இருக்கின்றது.

    அதாவது ஆதமை படைத்து வெறுமனே விட்டு விடவில்லை அவருக்கு வழிகாட்டலையும் இனம் பல்கி பல்கி பெருகுவதற்கான வசதிகளையும் இறை சக்தி தான் ஏற்படுத்தியது என்று நம்புகிறார்

    நீங்களும் இதனை சொந்த பெயரோடு வந்து பரீசிலிக்குமாறு கேட்டு கிரனுங்கோவ்

    ReplyDelete
  8. சகோதரர் காபிர்,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    தமிழ்ஹிந்து என்ற பெயரில் கமெண்ட் போட்டவரிடம் ஏற்கனவே கூறிய பதில் தான் (அவர் தான் விடையளிக்கவில்லை நீங்களாவது செய்கின்றீர்களா என்று பாப்போம்).

    ஹிந்து மதம் என்றால் என்ன, அதன் வேதங்கள் எவை, அதன் வரையறைகள், ஒழுக்க பண்புகள் என்னென்ன என்று அனைத்தையும் தெளிவாக விவரித்து எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) அனுப்புங்கள். நீங்களாக எதையும் கூறாமல், உங்கள் வேதங்கள் மட்டுமே பேச வேண்டும். ஆராய்ந்து பார்க்கின்றேன். உங்கள் மதம் இஸ்லாத்தை விட சிறந்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எவ்வித தயக்கமுமில்லை.

    நான் இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு முன்னமே இந்து மத வேதங்கள் குறித்து சற்று தெளிவாக ஆராய்ந்தவன் தான் என்று போதிலும், என்னுடைய கணிப்பு தவறாக கூட இருக்கலாம். ஆகையால், வெறுமனே "தாய் மதத்திற்கு திரும்புங்கள்" என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போகாமல் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுங்கள். எனக்கு நான் கேட்டவற்றை மெயில் செய்யுங்கள்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....(குறிப்பு: ஆபிரகாமிய மதங்கள் என்பதை விட ஆதாமிய மதங்கள் என்ற சொல்லாடல் சரியாக இருக்கும்)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன்

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. நண்பர் jaisankar jaganathan அவர்களுக்கு

    //காபிர். பாகன் மதங்களை அழித்த ஒரு கடவுள் தேவையா?//

    சரியான கேள்வி

    இஸ்லாம் மதமற்றத்தை கட்டாயப்படுத்துவதை எதிர்க்கிறது.

    பார்க்க:

    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    ”முஸ்லிமல்லாத குடிமகன் ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்துவிட்டாலோ- அவனது உரிமைகயைப் பறித்தாலோ அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான் மறுமைநாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக வாதாடுவேன் “(நூல்:அபூதாவூத்)

    இஸ்லாமிய வரலாற்றில் இதனை பார்க்கலாம்

    பாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது கிருஸ்த்துவ மற்றும் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்த பத்திரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது

    அதனை பார்க்க;
    உமர் பைத்துல் முகத்தஸ்வாசிகளுக்கு எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:

    ’அவர்களுடைய உயிர்கள் உடைமைகள் அவர்களுடைய தேவாலயங்கள் மடாலயங்கள் அவர்களிலுள்ள நலமுள்ளவர்கள் நோயுள்ளவர்கள் அனைவருக்கும் அபயம் அளிக்கப்படும் “எலியா”வின் சமயத்தவர் அனைவருக்குமே! அவ்ர்களுடைய வழிபாட்டிடங்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்படமாட்டாது அவை தகர்க்கப்பட மாட்டாது. அவற்றின் கட்டுமானத்திலும் சுற்றுச் சுவர் களிலும் எத்தகைய மாறுதலும் மேற்கொள்ளப்பட மாட்டாது.அவர்களுடைய சிலுவைகளுக்கோ சொத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படாது. சமய விவகாரங்களில் அவர்கள் வற்புறுத்தப்பட மாட்டார்கள்.அவர்கள் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்.-என்று உறுதிமொழி அளிக்கப்படுகின்றது.

    எடுத்துக்காட்டாக திருச்சபை குறித்த வரலாற்றூசிரியரான ரெனேயுட் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

    ”எகிப்தில் முதல்வர்கள், பிசப்புகள் மத குருக்கள் அகியோரின் பதவிகளும் அவர்களின் சட்டக் காப்புரிமைகளுக்கும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம் நீதிபதிகள் பாதுகாப்புத் தந்திருந்தனர். படித்த கிருஸ்த்துவர்களுக்கு செயலர், மருத்துவர் ஆகிய பதவிகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.இந்த ஆதாயமான பணி வாய்ப்புகள் மூலம் அவர்கள் தங்கள் செல்வ செழிப்பை வளமாக்கி கொண்டனர். மாநிலம் அல்லது நகரத்தை அதிகாரம் செய்யுமளவிற்கு இவர்களின் மதிப்பு உயர்த்தப்பட்டிருந்தது”
    (நூல்:ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்)

    ReplyDelete
  10. அருமையான பதிவு ஆஷிக். இதுக்கு பின்னாடியும் வெட்கமில்லாமல் நாத்திகம் பேசுவார்களானால், அவர்களுடன் பேசுவதை விட ஒதுங்கிப் போய் விசுவது மேல். தூங்குர போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது...

    ReplyDelete
  11. அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் நிகழ்த்தியது?

    ReplyDelete
  12. ஸலாம் சகோ.ஆஷிக்,
    அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் "there is a (ஒரு) God" என்று கூறி நாத்திகத்தின் நெத்தியில் மீண்டும் ஒரு அறிவியல் கும்மாங்குத்து.

    இவரைப்பார்த்தா... சொனார்கள்.. mentally declined என்று..!?!

    தங்களிடம் பதில் இல்லை என்றால் இவர்கள் இறுதியாக கூறுவது... "நீ ஒரு லூசுடா... போடா மெண்டல் ஹாஸ்பிடலுக்கு" என்பதுதான்..!

    இன்று கூட, 'தம்மை மதங்களை வெறுப்பவர்' என்று கூறிக்கொண்ட 'நிகழ்வுகள்'கந்தசாமி என்பவர் என்னிடம் இப்படித்தான் நாற்று குழுமத்தில் சொன்னார். ஆனால், கடைசி வரை என் கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவே இல்லை. அவரை அங்கே ஆதரித்தோரும் அப்படியே. ஆபாசத்தை விட மதம் அசிங்கம் என்றும் அந்த விவாதம் மலம் என்றெல்லாம் கூட சொல்லிவிட்டனர். :-((

    பாவம்... இவர்கள் நிலை..! எப்படித்தான் தன்னிடமே பொய் சொல்லி தன்னையே ஏமாற்றி தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டு தன்னை வெற்றியாளர்கள் என்று பெருமிதத்துடன் எண்ண முடிகிறதோ..?!?

    அப்புறம்...

    kafir கமென்ட்... இதுதான் செம காமடி... நம்மை இந்து(?)மதத்துக்கு அழைக்கும் அவர் இந்த குர்ஆன் வசனத்தை முதலில் படிக்கட்டும்...!

    ""அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்!இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு (இப்ராஹீம் நபி இம்மார்க்கத்தை எடுத்து சொல்வதற்கு) முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு 'முஸ்லிம்கள்' எனப்பெயரிட்டான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வை பற்றிப்பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்."" (அல்குர்ஆன் 22:78) (இங்கே அறப்போர் என்பதற்கு விரிவான அர்த்தம் உண்டு... இப்படி பின்னூட்டம் போட்டு உண்மையை ஏனைய மக்களுக்கு எடுத்துச்சொல்லி விளக்கிக் கொண்டு இருப்பதும் கூட அந்த வசனத்தில் வருவது போல அறப்போர்தான்)

    அப்புறம்... நம்ம 'kafir' சகோ...

    'இந்து' என்ற அந்த பெயர் முதலில் எந்த இந்து(?)வேதத்தில் இருக்கிறது என்றோ...
    எந்த நூற்றாண்டு அந்த பெயர் கண்டுபிடிக்க பட்டது என்றோ...
    யார் அந்த பெயரை அந்த மதத்தினருக்கு வைத்தது என்றோ...
    ஆராய்ந்த பிறகு அழைக்கட்டும்..! :-))

    ReplyDelete
  13. //ஆபிரஹாமிய//
    @kafir,

    முதல் மார்க்கம் இஸ்லாம் என்பதை அறிக.

    இஸ்லாம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று உங்களைப்போன்றே பலரும் தவறாகவே நினைக்கின்றனர்.

    ஆனால் இஸ்லாம் என்பது...

    இவ்வுலகின் முதல் மனிதர் ஆதம் நபி காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற ஒரு வாழ்வியல் நெறியுடன் கூடிய இறைக்கொள்கையாகும்.

    'அகில உலகுக்கும் ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான்; இறப்புக்கு பின்னர் மறுமை இருக்கிறது; அதில்... இவ்வுலகில் செய்த நன்மை தீமை அடிப்படையில் நியாயத்தீர்ப்பு நாளில் நற்கூலியாக சுவர்க்கம்/தண்டனையாக நரகம் தரப்படும்' என்பன போன்ற அடிப்படையான கொள்கைகள், முதல் மனிதர் காலத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) வரை அனைத்து இறைத்தூதருக்கும் ஒரே விதமாகவே வழங்கப்பட்டன.

    ஒரு சில உட் பிரிவுகளில் மட்டுமே வித்தியாசமான இவ்வுலக வாழ்வியல் சட்டங்கள் அவ்வப்போது அந்தந்த சூழலுக்கு ஏற்ப சில நபிமார்களின் கூட்டத்தினருக்கு அருளப்பட்டன.

    எனவே,

    இறுதி நபியான நபிகள் நாயகத்திற்கு முன் உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் எல்லாரும் எந்த மார்க்கத்தைப் போதித்தார்களோ அந்த மார்க்கமும் இஸ்லாம் மார்க்கமே. இஸ்லாம் மார்க்கமே. இஸ்லாம் மார்க்கமே.

    திருக்குர்ஆன் 22:78 வசனம் இக்கருத்துக்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

    முந்தைய நபிமார்களின் சமுதாயமும் முஸ்லிம் சமுதாயமே என்பதற்குக் கீழ்க்கண்ட வசனங்களும் சான்றாக உள்ளன.(பார்க்க: திருக்குர்ஆன் 2:132, 3:64, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 22:78, 43:69, 46:15)

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆஷிக்!

    சிறந்த இடுகை. மனமாற்றத்தைக் கொடுக்கும் அந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

    ReplyDelete
  15. அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் நிகழ்த்தியது?
    பிரதர் ஜெய்சங்கர்,
    நீங்கள் முகலாய, பாரசீக, துருக்கிய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட காலம் குறித்து தான் கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    மதன் எழுதி விகடனில் வெளிவந்த "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகம் படியுங்கள். பின்னர் பதிலை நீங்களே இந்த வலைப்பூவில் பதியலாம்.

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அலஹம்துலில்லாஹ்!

    வழக்கம்போல் நல்ல இடுகை

    நேற்று வரை Antony Flew சொன்னதை வேதமாக எண்ணிக்கொண்டவர்கள் அவர் ஆத்திகரானதும் மன நலம் பாதிக்கப்பட்டவராக குற்றம் சுமத்தும் நாத்திகம்

    இறை நாட்டத்தால் நாளை ஹாக்கின்ஸூம் (Dawkins) ஆத்திகரானால்....

    இதை குற்றச்சாட்டை தான் வைக்குமோ நாத்திகம்...?

    (மதங்கள் கூட தம்மிடமிருந்து விலகுபவர்களை நோக்கி இப்படியான குற்றச்சாட்டுக்கள் வைப்பதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது)

    ReplyDelete
  17. jaisankar jaganathan said...
    அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் நிகழ்த்தியது?

    ஒரு சின்ன செய்தி.,
    ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு அனானி சகோதரர் இஸ்லாம் குறித்த பதிவில் Ali Sina மற்றும் MA Khan கட்டுரைகள் படித்து இருக்கீறீர்களா என கேட்டார்..

    இஸ்லாத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டுமானால் குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களை தானே படிக்க வேண்டும்..

    இப்படி தான் "அனானிகளின்" ஆத்திக புரிதல்கள் இருக்கிறது. அதைப்போல தான் சகோதரின் மேற்கண்ட கேள்வியும்!

    இஸ்லாம் படுகொலைகளை நடத்தவில்லை. வரலாற்று திரிபுகள் படுகொலைகளை நடத்தியது.

    :)

    ReplyDelete
  18. நான் வந்தார்கள் வென்றார்கள் முழுசா படிச்சிருக்கேன் நன்பரே. அதனால தான் கேக்குறேன். நாதிர்ஷா பண்ணாத படுகொலையா? தைமூர் பண்ணாத கொலையா?

    ReplyDelete
  19. ஸலாம்

    நான் அப்புறமா வந்து கமெண்ட் போடுறேன் ...

    ReplyDelete
  20. நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது, ஆண்டனி ப்ளு ஆத்திகராக மாறியது அவருடைய அறியான்மை என்று சொல்லாம் .. உண்மை என்ன வென்றால், நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு, நாம் எந்த மதம் ,சார்ந்தோ இருக்க வேண்டிய அவசியம், இல்லை, இறை நம்பிக்கையும் தேவை இல்லை, நமக்கு நம் சிந்தனை, எண்ணம் தான் நமக்கு கடவுள் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது,

    ReplyDelete
  21. சகோதரர் ஜெய்ஷங்கர்,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

    முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இங்கே இந்த பதிவு நாத்திகம் குறித்தானது. இதில் திசை திருப்பல்கள் தேவை இல்லாதது. சகோதரர் காபிரின் கருத்துக்கு பதில் என்ற பெயரில் நீங்கள் விசயத்தை திருப்பி தற்போது பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் உரையாடல் செல்கின்றது.

    அதற்கும் சகோதரர் ஹைதர் அலி, இஸ்லாமை சரிவர பின்பற்றியவர்களின் வாழ்க்கையில் இருந்து தான் ஆதாரம் காட்டினார். இஸ்லாத்தின் பெயரில் யாரேனும் தவறாக ஈடுபட்டிருந்தால் அதற்கு இஸ்லாமிய கோட்பாடு பொறுப்பாகாது. நீங்கள் குறிப்பிடும் நபர்களை பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. இன்ஷா அல்லாஹ் படித்து விட்டு கருத்து தெரிவிக்க தேவை இருந்தால் தெரிவிக்கின்றேன்.

    நாங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவது இறை வார்த்தையையும், நபிவழியையும் வைத்து தான். வேறு எவரையும் இது குறித்து பார்க்க எங்களுக்கு அவசியமில்லை.

    நான் ஏற்கனவே தெரிவித்தப்படி உங்கள் உரையாடலுக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த தளத்தில் இஸ்லாம் குறித்து நிறைய பதிவுகள் உள்ளன. அங்கே உங்களின் இதுப்போன்ற கருத்துக்களை முன்வையுங்கள். இன்ஷா அல்லாஹ் பதில் சொல்கின்றோம். இனியும் இந்த பதிவிற்கு தேவை இல்லாத கருத்துக்களை முன்வைக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

    உங்களுக்கும் நாங்கள் "தாய் மதம் (??) திரும்ப வேண்டும்" என்ற ஆவல் இருந்தால், காபிரிடம் நான் கேட்டவற்றை எனக்கு அனுப்ப முயற்சியுங்கள். பிறகு என்னுடன் நட்பு வளர்த்துக்கொண்டு நீங்கள் அனுப்பதிளிருந்து நான் கேட்கும் கேள்விகளுக்கு வேதங்கள் சார்ந்து பதில் சொல்லவும் ஆயத்தமாக இருங்கள். இன்ஷா அல்லாஹ்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  22. சகோதரர் சுரேஷ்,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

    //நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது//

    இதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தவறாக நினைக்கவேண்டாம்.இதற்கு பெயர் தான் "நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால்" என்பார்கள்.

    //ஆண்டனி ப்ளு ஆத்திகராக மாறியது அவருடைய அறியான்மை என்று சொல்லாம் .. //

    இப்படி திரும்ப உங்களைப்பார்த்து எதிர்மறையாக சொல்வதற்கு அதிக நேரம் ஆகாது சகோதரர்....எனினும் அது உங்கள் கருத்து. அப்படியே எண்ணிக்கொள்ளுங்கள்.

    // உண்மை என்ன வென்றால், நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு, நாம் எந்த மதம் ,சார்ந்தோ இருக்க வேண்டிய அவசியம், இல்லை, இறை நம்பிக்கையும் தேவை இல்லை//

    தவறு...இறைவன் படைத்த இவையெல்லாம் இல்லையென்றால், அவற்றையெல்லாம் துணையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வைத்துகொண்டு உங்களால் இப்படி பேசிகொண்டிருக்க முடியாது. படைத்தவனை அங்கீகரிப்பது, அவன் சொன்னது போன்று வாழ்வது நிலையான ஒழுக்கமான வாழ்க்கைக்கு தேவை. இறைநம்பிக்கை மிக அவசியமான, அர்த்தமான ஒன்றே.

    இந்த பதிவின் மையம் என்னவென்றால் //அறிவியல் நாத்திகத்திற்கு வழிவகுக்கின்றது என்று தங்கள் அறியாமையால் சிலர் எண்ணினால் அது அறிவியலைப் பற்றிய அவர்களது தவறான புரிதலே அன்றி வேறொன்றும் இல்லை.// - இதுதான்....இதுகுறித்து தங்களின் பதிலில் ஏதும் இல்லை...

    நன்றி.... சிந்திக்க விருப்பமுள்ளவர்கள் சிந்திக்கட்டும். நடுநிலையோடு அறிவியல் முடிவுகளை ஆய்வு செய்யட்டும். உண்மையை அறிந்துக்கொள்ளட்டும்.

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக...ஆமீன்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  23. சகோதரர்கள் முஹம்மது ஆஷிக் மற்றும் குலாம்,

    உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    //இவரைப்பார்த்தா... சொனார்கள்.. mentally declined என்று..!?!// //நேற்று வரை Antony Flew சொன்னதை வேதமாக எண்ணிக்கொண்டவர்கள் அவர் ஆத்திகரானதும் மன நலம் பாதிக்கப்பட்டவராக குற்றம் சுமத்தும் நாத்திகம்//

    ஒருவேளை, ப்ளு, திரும்ப நாத்திகத்திற்கு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்க்கின்றேன். அப்போதும் இப்படியே மனப்பிறழ்வு ஏற்பட்டதால் நாத்திகராகிவிட்டார் என்று சொல்லிருப்பார்களா?? :) :)

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலலைக்கும் சகோ..

    அற்புதமான கட்டுரை ஒனறை எழுதியதற்கு முதலில் நன்றிகள்.

    ReplyDelete
  25. தமிழ்மண மகுடத்தை பிடிதததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. ///அப்புறம் ஏன் இஸ்லாம் இந்தியாவில் நிறைய படுகொலைகள் நிகழ்த்தியது?///----கவனிக்கவும். இங்கே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது இஸ்லாம் மீது.

    ///நாதிர்ஷா பண்ணாத படுகொலையா? தைமூர் பண்ணாத கொலையா?///----கவனிக்கவும். இங்கே குற்றம் சுமத்தப்பட்டிருப்பது இரண்டு நபர்கள் மீது.

    மிகப்பெரிய முரண்பாடு..!

    இதில் முரண்பாடு தெரியவில்லை என்றால்...

    ஜெர்மனியில் யூதர்களை கொன்றழித்தது கிருஸ்த்துவம். ?

    பாலஸ்தீனர்களை கொன்றழிப்பது யூதம். ?

    ஈழத்தமிழர்களை கொன்றழிப்பது பவுத்தம். ?

    சேரர்...சோழர்...பாண்டியர்...பல்லவர்...சாளுக்கியர்...குப்தர்...மெளரியர்...மராட்டியர்... இவர்கள் எல்லாம் இரத்தம் ஆறாய் ஓடும் அளவுக்கு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டதற்கு...காரணம் சைவம்... ? வைணம்... ?

    சோவியத் சோஷலிஸ ரஷ்ய படுகொலைகளுக்கு காரணம் நாத்திகம். ?

    ....

    ....

    இன்னும் புரியவில்லை என்றால்...

    last but not least....

    ஜப்பானில் அணுகுண்டு போட்டு நொடியில் ஒரு நகரையே சுடுகாடாக்கியது விஞ்ஞானம். !

    ...சரியா சகோ.ஜெய்சங்கர் ஜெகனாதன் ..?

    ReplyDelete
  27. //மிகப்பெரிய முரண்பாடு..!

    இதில் முரண்பாடு தெரியவில்லை என்றால்...

    ஜெர்மனியில் யூதர்களை கொன்றழித்தது கிருஸ்த்துவம். ?

    பாலஸ்தீனர்களை கொன்றழிப்பது யூதம். ?

    ஈழத்தமிழர்களை கொன்றழிப்பது பவுத்தம். ?

    சேரர்...சோழர்...பாண்டியர்...பல்லவர்...சாளுக்கியர்...குப்தர்...மெளரியர்...மராட்டியர்... இவர்கள் எல்லாம் இரத்தம் ஆறாய் ஓடும் அளவுக்கு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டதற்கு...காரணம் சைவம்... ? வைணம்... ?

    சோவியத் சோஷலிஸ ரஷ்ய படுகொலைகளுக்கு காரணம் நாத்திகம். ?

    ....

    ....

    இன்னும் புரியவில்லை என்றால்...

    last but not least....

    ஜப்பானில் அணுகுண்டு போட்டு நொடியில் ஒரு நகரையே சுடுகாடாக்கியது விஞ்ஞானம். !

    ...சரியா சகோ.ஜெய்சங்கர் ஜெகனாதன் ..?//

    Wow!!!!!!!!!!!!!!!!! Super.

    ReplyDelete
  28. @Suresh
    //நீங்கள் என்னதான் சொன்னாலும் இறைநம்பிக்கை என்பது அர்த்தமற்றது//

    சரி

    // நமக்கு நம் சிந்தனை, எண்ணம் தான் நமக்கு கடவுள்//

    என்ன சார் நீங்க, இறைவன், இறைநம்பிக்கை எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் எண்ணம் மற்றும் சிந்தனைகளைக் கடவுளாக்கிட்டீங்களே!

    அப்படியானால் ஏதோ ஒரு வகையில் நீங்கள் (நமக்கு நம் சிந்தனை, எண்ணம் தான் நமக்கு கடவுள்)என்ற கடவுளை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்.

    இறைவனே இல்லை என்று கூற வந்த நீங்கள், புது விதமான சித்தாந்தத்துடன் ஏதோ ஒன்றை கடவுளாக்கிக் கொள்கிறீர்களே! சிந்தித்தீர்களா?.

    நீங்கள் கூறுகின்றபடி எண்ணம் மற்றும் நம் சிந்தனைகளைக் கடவுளாக்கினால், என்ன விபரீதம் நிகழும், ஒவொருவரும் தற்பொழுது செய்கின்ற அனைத்துக் காரியங்களுமே அவரின் கடவுளாகிய எண்ணம் மற்றும் சிந்தனையின் வெளிப்பாடாகிவிடும், நல்லது செய்கின்ற சிந்தனைகள் நல்ல கடவுளாகவும், கெட்டது செய்கின்ற எண்ணம் கெட்ட கடவுளாகவும் உருவாகி பல கடவுள்களாகி விடும் என்பதை எவ்வாறு உங்கள் மனம் ஏற்றுக் கொள்கிறது எனக்கு விளங்கவில்லை.

    இறைவனை மறுப்பதற்கு எந்த ஒரு சரியான காரணமும் உங்கள் பின்னூட்டத்தில் இல்லை, ஆனால் நீங்கள் கொண்டுள்ள உங்களின் கடவுற்கொள்கையை வாதத்திற்க்காக கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    இறைவனே இல்லை என்று கூற வந்த நீங்கள் பல கடவுளுக்கு வழி வகுத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  29. //உங்களுக்கும் நாங்கள் "தாய் மதம் (??) திரும்ப வேண்டும்" //

    மத மாற்றம் எனக்கு பிடிக்காத ஒன்று நன்பா. சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்

    ReplyDelete
  30. masha allah ... may allah will reward all ur works
    .....
    assalamu alaikum

    ReplyDelete
  31. சலம் சகோ ஆசிக்,

    இவங்க எப்போதுமே இப்படி தான் சகோ. நாத்திகத்தை விட்டுவிட்டால் உடனே அவரின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்து விடுவார்கள்.

    வேண்டுமென்றால் இப்படி சொல்லலாம். பைத்தியமாக இருக்கும் பொது நாத்திகத்தை ஆதரித்த "ஆண்டனி ப்ளு" இப்பொழு பைத்தியம் தெளிந்துள்ளார் என்று கூறலாம்.

    ReplyDelete
  32. அஸ்ஸலாமு அழைக்கும்!
    மிக அருமையான பதிவு சகோ. ஆஷிக் அவர்களே!, பேராசிரியர் ஆண்டனி ப்ளு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைக்கு வந்ததே ஆத்திகத்திற்கு கிடைத்த வெற்றி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் இஸ்லாத்தில் நுழைந்திட, இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இறைவனிடம் பிரதிப்போம்.

    ReplyDelete
  33. ansari baai

    //மேலும் அவர் இஸ்லாத்தில் நுழைந்திட//

    he dead..

    //நாத்திகர்களின் மனதில் நீங்காத பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் ப்ளு. நாத்திகராக வாழ்ந்தவர் ஆத்திகராக மறைந்துவிட்டார்.//

    HE DEAD .. /ANSARI//

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பதிவுகள் நன்றாக உள்ளது,முயற்சி தொடரட்டும்.தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி 1),இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete
  35. நல்ல இடுகை. மேலும் சிலரையும் இது சென்றடைய என் கூகிள் ப்ளஸ்ல் இந்த இடுகையைப் பற்றிய தகவல் அளித்துள்ளேன்.

    ReplyDelete
  36. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    நேரமின்மையால் தனித்தனியாக பதிலளிக்க இயலவில்லை..

    கருத்து தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி..

    ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதீரா...

    ReplyDelete
  37. மாஷாஅல்லாஹ் .. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக...

    நாத்திகர்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க ஜி .. யோசிக்கணும்ல...

    உண்மை ஆரம்பிக்கும் போது - பொய் பாதி உலகை சுற்றி வந்து விடும் என்பார்கள்..

    அது போல பொய்யிலும் - அனுமானதிலும் காலத்தை ஆரம்பித்த ஆண்டனி ப்ளு இன்று உண்மையின் பக்கம் நெருங்கிஇருகிறார்...

    இன்ஷாஅல்லாஹ் அடுத்து அவரின் தேடல் மதங்களை பற்றி இருக்கட்டும் , சத்திய மார்க்கத்தை ஏற்கட்டும்..

    ஜஸாகல்லாஹ்...

    ReplyDelete