Saturday, October 6, 2012

கூரி முஸ்லிம்கள்...



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

ஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்). 

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது சிறந்ததாய் அமையும்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.

டாக்டர் ஸ்டீவன்சன், ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரிடையே இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவா?

2006-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும், அதற்கு முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளையும் நாம் பார்த்தோமேயானால் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறியலாம். 1996 மற்றும் 2001 ஆகிய கணக்கெடுப்புகளில் 600-க்கும் சற்றே அதிகமான பழங்குடியின முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

அதேநேரம், 2006-ஆம் ஆண்டு, இந்த தொகை சுமார் 60% அதிகரித்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கட்தொகையை கணக்கிடும்போது இது பெரிய அளவு இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.

இந்த இஸ்லாமிய தழுவல்களுக்கு பின்னணி காரணங்களாக நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டரிந்தவை?

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இவர்கள் கூறும் பல காரணங்கள் சர்வதேசரீதியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் கூறும் காரணங்களை ஒத்தே இருக்கின்றன.

தங்கள் அனுபவங்கள் குறித்து கூறும்போது, உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்ற உணர்வு மகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தங்களை மிகச் சிறந்த முறையில் உபசரிப்பதாகவும் கூறுகின்றனர்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்டதின் மூலம், பல வழிகளில், காலனி ஆதிக்கத்திற்கு முன்பான தங்களின் பழங்குடியின அடையாளத்திற்கும், பாரம்பரியத்திற்கும் திரும்புவதாக இவர்கள் எண்ணுகின்றனர். தங்களின் பழங்குடியின சமூகத்திற்கும்,  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, இஸ்லாம் அனுமதிக்கும் சிலதாரமணம், பெற்றோர்களால்   முன்னேடுத்து செல்லப்படும் திருமணங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பொறுப்புகள் போன்றவற்றை கூறலாம்.

முஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.

மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கிருத்துவ மிஷனரிகளை எதிர்க்கொண்டு இஸ்லாமை தழுவுகின்றனர். இஸ்லாம் என்பது இவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல, இவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்டது.

இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்துவராத தன்மை என்று எதையேனும் நீங்கள் காண்கின்றீர்களா?

அப்படியான எதையும் நான் காணவில்லை. சிலர், தாங்கள் முஸ்லிமானதின் மூலம் தங்களின் பழங்குடியின அடையாளம் கலைந்துவிட்டதாக எண்ணுகின்றனர். இன்னும் சிலரோ, நான் மேலே கூறியது போல, இஸ்லாம் தங்களின் பழங்குடியின அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக நம்புகின்றனர். ஏனென்றால் நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை ஏற்றுக்கொள்கின்றது.

இவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்றால், இவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் மக்களும் இவர்களின் இஸ்லாமிய தழுவலை புரிந்துக்கொள்ளாதது தான். இவர்களின் மனமாற்றத்தை வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

மால்கம் எக்ஸ் குறித்து என்ன சொல்ல போகின்றீர்கள்? அவருடைய பாதிப்பு இங்கே தெரிகின்றதா?

நான் பேசியவர்களில் பலரும், குறிப்பாக சிறைவாசம் அனுபவித்தவர்கள், மால்கம் எக்ஸ் என்ற மனிதர் மீதே முதலில் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அவரின் சுயசரிதையை படித்திருக்கும் இவர்களில் சிலர், தாங்கள் கோபக்காரர்களாகவும், தங்களின் கடுமையான அணுகமுறை மூலம் சட்டரீதியான பிரச்சனைகளை உருவாக்கியதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சொந்த நாட்டிலேயே அன்னியர்களாக தாங்கள் நடத்தப்படுவதாக உணர்ந்த இவர்கள், வெள்ளையர்களுக்கு எதிரானவராக நினைத்து மால்கம் எக்ஸ்சை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். (மால்கம் எக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்)

ஆனால், (மால்கம் எக்ஸ் மூலமாக) இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள ஆரம்பித்தவுடன் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். தங்களை ஏற்றுக்கொண்ட, வெள்ளையர்களில் இருந்தும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று புரிந்துக்கொண்ட, தங்கள் இனத்திற்காக தங்களை தீர்மானிக்காத ஒரு நம்பிக்கையை இஸ்லாமில் அவர்கள் கண்டனர். இஸ்லாமை பொருத்தவரை உலக மக்கள் அனைவரும் சமமே.

ஆகையால், எப்போது அவர்கள் தங்களை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போதே அவர்களிடம் இருந்த தவறான பண்புகள் விலகிவிட்டன.

இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும், தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமை தழுவியதின் மூலம் சிலருக்கு அவர்களது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று கூறுகின்றீர்களா?

ஆம், எல்லாருக்குமே, பல வழிகளில்.

பழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர்.

இஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் உண்டு.

குடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை பொருத்தவரை, மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.

பெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன.

--- End of Interview ---

ம்ம்ம்....அனைத்து தரப்பு மக்களையும் இஸ்லாம் எளிதாகவே கவர்ந்துவிடுகின்றது. பிரபல ஆஸ்திரேலிய குத்துச்சண்டை நட்சத்திரமான ஆண்டனி முண்டேன் ஒரு பழங்குடியின முஸ்லிமே. இவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் இருந்து அதன் பாதிப்பு சமூகத்தில் உணரப்பட்டே வருகின்றது. தற்போது இவர்களிடையே 'கூரி முஸ்லிம் அசோசியேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பழங்குடியின முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் எதிர்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கே இப்படி என்றால், அமெரிக்காவிலோ, கடந்த பத்து ஆண்டுகளில், முஸ்லிம் மக்கள்தொகை சுமார் 16 லட்சம் அதிகரித்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான மக்கட்தொகை ஆய்வு இதனை கூறுகின்றது. இதன் மூலமாக அமெரிக்காவின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வடக்கு மற்றும் தெற்கின் பல பகுதிகளில், வரலாற்றில் முதன் முறையாக யூதர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர்.

"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன" என்று இந்த ஆய்வுக்குறித்து கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிடுகின்றார் கென்டகி பல்கலைகழகத்தின் துணை பேராசிரியரான டாக்டர் பக்பி. (இந்த ஆய்வுக்குறித்த விரிவான கட்டுரையை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் காண்போம்).

அதிரடியா சொன்னீங்க சார் :-)

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
டாக்டர் ஸ்டீவன்சன் அவர்களின் நேர்காணல் பதிவின் நீளம் கருதி முழுமையாக மொழிப்பெயர்க்கப்படவில்லை. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.

References:
1. Q&A: Indigenous and Muslim 'a growing trend' - ABS. 20th July 2012. link
2. A new faith for Kooris - The Sydney morning herald. 4th May 2007. link
3. Koori - wikipedia. link
4. Number of Muslims in the U.S. doubles since 9/11 - New York Daily News, 3rd May 2012. link
5. Anthony Mundine - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ







33 comments:

  1. ஸலாம்

    //"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன"//

    இது 100 % உண்மை ...

    சிறந்த பதிவு ...

    என்னா ஒவ்வொரு ப்ளாக் ளையும் முஸ்லிம் ஆன செய்தியா வருதே !!! இதென்ன புது முஸ்லிம்களின் வாரமா !!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சுல்தான் மைதீன்,

      //என்னா ஒவ்வொரு ப்ளாக் ளையும் முஸ்லிம் ஆன செய்தியா வருதே !!! இதென்ன புது முஸ்லிம்களின் வாரமா !!//

      :-) :-)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

      Delete
  2. salam bro......!
    alhamdulilah puthiya visayam
    allah ungaluku narkuli tharuvanaga.....!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் ஜாபர் கான்,

      வருகைக்கும், துவாவிற்கும் நன்றி சகோ.

      Delete
  3. சலாம் சகோ ஆஷிக்!

    மற்றுமொரு அழகிய பதிவு. உலக உம்மாவில் ஐக்கியமாகியிருக்கும் சகோதரர்களை அரவணைப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் சுவனப்பிரியன் பாய்,

      ஊக்கத்திற்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அரவணைப்போம்...

      Delete
  4. "நபிவழி" என்ற பெயரில் கமெண்ட் இட்டிருக்கும் இஸ்லாமோபோபியாவிற்கு,

    தங்களின் தரமற்ற கமெண்ட்டை பாதுகாப்பாக குப்பை தொட்டிக்கு அனுப்பிவிட்டேன்.

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    ReplyDelete
  5. மகிழ்ச்சி தரும் செய்தி. நன்றி.

    - பாஹிம்

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் பாஹிம்,

      சலாம்,

      வருகைக்கு நன்றி..

      Delete
  6. #இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன" #

    சலாம் சகோ....

    எதிர்ப்புகள்,விமர்சனங்கள் போன்றவை என்றுமே இஸ்லாத்திற்கு உரம் போன்றுதான்....எல்லாம் நன்மைக்கே....

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் ஹாஜா மைதீன்,

      ஆம் சகோ, மிகச் சரியாக சொன்னீங்க. எல்லாம் நன்மைக்கே என்ற போதும் நம்முடைய அழைப்பு பணியை செய்துக்கொண்டே இருப்பதும் அவசியம்.

      Delete
  7. நோ..நோ... இத நான் ஏத்துக்க மாட்டேன்..

    இஸ்லாம் அழிந்து கொண்டு வருகிறது..அது தான் உண்மை...
    ஐரோப்பாவிலும் கூட அவ்வாறே.... உலக நிலையும் அது தான்.. இஸ்லாம் தீவிர வாதத்தை வளர்ப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. சலாம் சிராஜ் அண்ணே,

      :-) :-) இப்படியெல்லாமா சொல்லிக்கிட்டு இருக்காங்க. பார்த்து நீங்க வஞ்ச புகழ்ச்சியில் சொல்லிருப்பதை யாராவது நேரடியா அர்த்தம் எடுத்துக்க போறாங்க.

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    என்ன சொல்ல., வழக்கம் போல வித்தியாசமான & அசத்தல் பதிவு!
    உலகளாவிய சகோதரத்துவத்திற்கு வித்திடும் இஸ்லாம் தம் வெளிச்ச புள்ளிகளை எங்கெல்லாம் பரவ செய்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சாம்பிள்...

    ஜஸாகல்லாஹ் கைரா
    பகிர்ந்த பதிவுக்கு நன்றி சகோ.

    உங்கள் சகோதரன்
    குலாம்

    (எப்பா... இது உண்மையா என் ப்ரொபைல் ஐடி தான் ரிலிஸ் பண்ணிடுங்கப்பா...)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

      ஊக்கத்திற்கு நன்றி குலாம்...

      //எப்பா... இது உண்மையா என் ப்ரொபைல் ஐடி தான் ரிலிஸ் பண்ணிடுங்கப்பா...//

      :-) :-)

      Delete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ !

    மீண்டும் அருமையான இனிமையான பதிவு !
    பணிகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம்,

      மிக்க நன்றி இக்பால் பாய். தங்களின் துவாவிற்கு ஜசாக்கல்லாஹ்

      Delete
  10. அஸ்ஸலாம் அலைக்கும்....பாய்,
    மீண்டும் ஒரு கலக்கல் போஸ்ட்.......
    More Aborigines are finding similarities between their culture and Islamic principles,
    பாக்சர் அந்தோணி முண்டே இஸ்லாத்தில் ஐக்கியம் ..மாஷா அல்லா
    ஒருவேளை முகலாய மன்னர்கள் அங்கே படையெடுத்து இருக்கலாம் [கோவியார் ஸ்டைல் QUOTE] ஆவ்வ் ......

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம்,

      அல்ஹம்துலில்லாஹ் நன்றி நாசர் பாய்.

      //ஒருவேளை முகலாய மன்னர்கள் அங்கே படையெடுத்து இருக்கலாம்//

      ஹி ஹி....

      Delete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    அல்ஹம்துலில்லாஹ்..நன்மையை தேடி கொண்ட சகோதரங்கள் அனைவருக்கும் இறையின் கருணை கிடைக்க என்னுடைய துஆக்கள்..

    வழமை போலவே அருமையான,அறியாத செய்திகளை உடைய பதிவு.சகோதரருக்கு நற்கூலி வழங்க இறை போதுமானவன்..

    நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:-)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

      என்னுடைய துவாக்களும் சகோதரி ஆயிஷா...

      துவாவிற்கும் வருகைக்கும் நன்றி...

      Delete
  12. //
    "இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன"//

    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். குர் ஆன் 9:32

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஜெய்லானி,

      அஸ்ஸலாமு அலைக்கும்,

      அருமையான இறைவசனத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி...

      Delete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

    அறியாத தகவல், பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...,

      தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோ சையத் இப்ராஹீம் ஷா

      Delete
  14. வணக்கம் சேர்வாழ் எல்லாம் சிவ மயம்.....
    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் நீங்க சுவனப்பிரியன் என்பவரது பதிவொன்றில் " அதே நேரம், இவை படிப்படியாக தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்பதும் இந்த படைப்புகளுக்கு பின்னால் இறைவன் இருக்கின்றான் என்று நம்புவதுமே இஸ்லாமிய நம்பிக்கையாகும். அதனை நிரூபிக்கும்படியாகவே நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடைத்துள்ளன. " கூறியுள்ளீர்கள் அல்லவா அதற்கான ஆதாரங்களை தரமுடியுமா? குர்ரானை இழுக்கவேண்டாம் அது ஒரு புத்தகம் ....ஆதாரம் என்பது என்னவென்பது உங்களுக்கே தெரிந்திருக்கலாம் காத்திருக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் Kiruththikan Yogaraja,

      உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் அமைதி நிலவுவதாக,

      தவறான பதிவில் வந்துள்ள பின்னூட்டம். பதிவு திசை திருப்பப்படலாம் என்ற காரணத்தால் இந்த பதிவு குறித்த கருத்துக்கள் மட்டுமே இங்கே வரவேற்கபடுகின்றன. என்னுடைய எத்தனையோ பரிணாம பதிவுகள் இந்த தளத்தில் இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒன்றில் உங்கள் கேள்வியை பதியவும்.

      உதவிக்கு http://www.ethirkkural.com/p/blog-page.html இங்கே பார்க்கவும்.

      புரிதலுக்கு நன்றி

      Delete
  15. இதை கொஞ்சம் படிங்க
    http://tamil.oneindia.in/news/2012/10/21/world-first-human-ancestor-looked-like-squirrel-163502.html

    ReplyDelete
    Replies
    1. சகோ அதிரை இக்பால்,

      அஸ்ஸலாமு அலைக்கும்,

      ஜசாக்கல்லாஹ் சகோ. இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகுதோ? :-) பட் சகோ, இந்த செய்தியை தட்ஸ்தமிழ் சரியான கவர் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. இன்ஷா அல்லாஹ் இது குறித்து தேடி பார்க்கின்றேன்.

      Delete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் மணி பாரதி,

    நன்றி சகோ...

    ReplyDelete
  17. Prime Minister Julia Gillard - Australia Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia, as the government targeted radicals in a bid to head off potential terror attacks.
    தருமியில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது .ஆதாரங்ககள் காட்டப்படவில்லை .உண்மை அறிந்து எழுத வேண்டுகிறேன் .
    //
    "இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன"//
    உண்மையாக இருந்தால் இதுவே பதிலாக இருக்கும்

    ReplyDelete
  18. excellent article pls keep updating like this especially about Madagascar pls pls

    ReplyDelete