Monday, January 10, 2011

"இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்"



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.

இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.


----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  

ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர், "பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 

இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன.

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப்பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link 
3. Federation of Student Islamic Societies. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ







16 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரன் ஆஷிக்,
    இஸ்லாத்தை தம்முடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்பவர்கள் பற்பல ஆய்வுகளுக்கு பின்னர் தான் வருகிறார்கள் என்பதே இது இறைவனின் மார்க்கம், இயற்கை மார்க்கம் என்பதற்கான ஒரு அளவுகோல் ஆகும். ஆகையால் தான் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கில் ஆய்வு செய்வோரை இஸ்லாம் தன்னகத்தே ஈர்க்கிறது. ஆனால் இந்த தலைப்பை பிரிட்டன் மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் தான் தி இண்டிபெண்டன்ட் நாளிதழ் தேர்வு செய்துள்ளது என்பது எனது கருத்து. ஏனெனில் "யுரோப்பை" "யுரோபியா" என்ற சொல்லாடலை கொண்டு அழைக்க வைத்து இஸ்லாம் அல்லாத பிற மக்களிடம் பீதியை கிளப்புகின்ற சிலர் ஐரோப்பிய கண்டத்தில் உண்டு.

    ReplyDelete
  2. IERA (Islamic Education and Research Academy) என்ற அமைப்பின் நான்கு திட்டங்களை பற்றி சொன்னீர்கள். மிக அருமையானதொரு செயல் திட்டமிது. இதே செயல் திட்டத்தை நம் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். அழைப்பு பணியை குர்ஆன் சுன்னா அடிப்படையில் செய்து, இஸ்லாம் அல்லாத பிற மக்களுக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்து செல்வதோடு மட்டுமில்லாமல் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொல்லும் சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி மற்றும் இதர உதவிகளையும் செய்து வருகிறது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள், முஸ்லிம்களை பற்றிய காழ்ப்புணர்ச்சிகள் களையப்படுகின்றன. கிறித்தவம், நாத்திகம் உட்பட பல சித்தாந்தங்களை சார்ந்தவர்களுடன் பற்பல விவாத களங்களை ஏற்படுத்தி மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்து சொல்லி இஸ்லாம் தான் வாழ்வியலுக்கு ஏற்ற ஒரே மார்க்கம் என்பதை ஏக இறையின் உதவியோடு நிருபித்து வருகிறது. நம்மில் எத்தனை சகோதர சகோதரிகள் இவர்களின் அழைப்பு பணிக்கு தோள் கொடுக்கிறோம்? சகோதரர் காலித் யாசின் குறிப்பிட்டது போல அழைப்பு பணி என்பது உள்ளத்தை ஊடுருவும் வலுவானதொரு ஆயுதம். ஆனால் அதைப் பற்றிய எந்த ஒரு ஞானமுமின்றி நம்மில் பலபேர் இருக்கின்றோம் என்பது தான் நிதர்சனம். இதற்கு பிறகாவது இஸ்லாத்தை அதன் தூய வடிவிலும் அதை பிறருக்கு எடுத்து சொல்வதிலும் அதன் படி வந்து காட்டுவதிலும் முன்மாதிரியாக நாம் இருக்க இறைவன் உதவி புரிவானாக.

    ReplyDelete
  3. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 4, 2011, 17:25[IST]

    இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமு மாறி வருகின்றனராம்.

    இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர் என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ஆனால் பெய்த் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தில் சேர்வதால் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் என்று கூறுகிறது.

    செப்டம்பர் 11 மற்றும் லண்டனில் ஜூலை 7ல் நடந்தத தாக்குதல்களால் இங்கிலாந்தில் இஸ்லாமோபோபியா பரவியது. எனினும் இதனால் இஸ்லாமிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

    SOURCE:இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்

    ReplyDelete
  4. உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    சகோ. ஆஷிக் அஹமத்,
    நிறைவான கட்டுரை. அருமையான மொழிபெயர்ப்பு. பாராட்டுக்கள் உரித்தாகுக.
    -----------------------------------------------
    //இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும்,//--->இதுதான்... இதுதான்... பிற சார்பற்ற 'பொது'மக்களை "இச்சித்தரிப்புகள் உண்மையிலேயே உண்மைதானா?" என்று அறிந்து கொள்ள தூண்டுகின்றன.

    //எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்//-->பொன்னெழுத்துக்கள்.

    இப்படி புதிதாக இணைபவர்களுக்கான...

    //IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.//-->ஆமாம்.

    //இதே செயல் திட்டத்தை நம் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (=சகோ.ஷேக் தாவூத்)//-->ஆமாம்.

    -->இவைதான் பிற சமய அல்லது சித்தாந்தம் மூலம் கல்லாகட்டும் சுயநலன் பேணும சிலருக்கு(இதில் தர்காவில் உண்டியல் வைத்து சந்தனக்கூடு நடத்தி பிழைப்போரும் அடக்கம்)பற்றிக்கொள்கிறது. உடனே இஸ்லாம் பற்றி பொய்கள், அவதூறுகள், சில முஸ்லிம்கள் தவறை இஸ்லாம் சொல்வதாக படம்காட்டி எதிர்மறை பிரச்சாரம் செய்ய வேண்டியது என எல்லாமே கட்டாயமயமாகிவிடுகிறது....

    ...go top... ...திரும்ப இந்த பின்னூட்டத்தை ஆரம்பத்திலிருந்து படியுங்கள்..!
    -----------------------------------------------

    இப்படியொரு "பீதியை கிளப்பும்" ஒரு தலைப்பு வைத்து... //ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.//

    உதவிக்கு நன்றி... "தி இண்டிபெண்டன்ட்" ..!

    ReplyDelete
  5. சகோதரர் ஷேக் தாவுத் அவர்களுக்கு,

    ------
    இதே செயல் திட்டத்தை நம் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
    ------

    அல்ஹம்துலில்லாஹ்....தொடர்ந்து சகோதரர்கள் வீரியமாக செயல்பட இறைவன் துணை புரிவானாக...ஆமின்.

    த.த.ஜ போன்ற இயக்கங்கள் தொடர்ந்து நம்மிடமிருந்து உருவாக வேண்டும்...சுபானல்லாஹ்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. சகோதரர் ஷேக் தாவுத்,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    -----
    ஆனால் இந்த தலைப்பை பிரிட்டன் மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் தான் தி இண்டிபெண்டன்ட் நாளிதழ் தேர்வு செய்துள்ளது என்பது எனது கருத்து.
    -------

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன்...பல தளங்களில் சூடான விவாதங்களுக்கு வழிவகுத்து விட்டது தி இன்டிபென்டென்ட்...


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. சகோ அஹமது ஆஷிக்,
    //த.த.ஜ போன்ற இயக்கங்கள் தொடர்ந்து நம்மிடமிருந்து உருவாக வேண்டும்...சுபானல்லாஹ்.//
    இருக்கின்ற இவ்வியக்கம் (த.த.ஜ) குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படுகின்ற வரை வேறு இயக்கம் தேவையில்லை ஆஷிக். ஒருவேளை தடம் புரண்டால் வேறு இயக்கம் வருவதில் தவறில்லை சகோ. இப்போது வேறு இயக்கங்கள் தேவையில்லை என்பது என் கருத்து.

    ReplyDelete
  8. Not time to panic or exalt. http://www.guardian.co.uk/commentisfree/belief/2011/jan/08/islam-uk-growth-muslims

    ReplyDelete
  9. வஜீர் அலி அஹ்மதுWednesday, January 12, 2011

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)..
    சகோதரர் ஆஷிக் அஹமத் அவர்களுக்கு,

    وَقُلْ جَاء الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
    (Al-quran: 17:81)
    (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சியமாக அசத்தியமானது அழிந்தது போவதேயாகும்”என்று கூறுவீராக.(திரு-குரான்: 17:81)

    என்ற இறைவசனதின் விளக்கத்தை இப்பதிவில் நீங்கள் எழுதியதாக நான் எண்ணுகிறேன்..

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக என்ற எனது துஆ-உடன்,....

    ReplyDelete
  10. சகோதரர் வஜீர் அலி அஹ்மத்,

    வ அலைக்கும் சலாம் (வரஹ்),

    அசத்தியம் அழிந்தே போகும். அருமையான இறைவசனத்தை மற்றொரு முறை நினைவு படுத்தியதற்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்...

    உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி சகோதரர்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)..
    http://pinnoottavaathi.blogspot.com/2011/01/vs.html

    ஒரு முக்கிய பிற்சேர்க்கை(13-01-2011, 11:45 am -IST):-

    சகோதரர்களே...!

    நம் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காத்து அமைதிப்பூங்காவாக்க நம்மால் ஆன ஒரு சிறு முயற்சி.

    அதன் அடிப்படையில்.... பயங்கரவாதத்துக்கு காரணமான அனைத்து ஹிந்துத்வா அமைப்புக்களையும் முழுவிசாரனைக்குட்படுத்தகோரியும், (தடைசெய்யக்கோரியும் - இதை தனி comment காலத்தில் நீங்கள் எழுதலாம்), அப்பாவி முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தி சிறையிலடைத்து வழக்கு தொடர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட அனைத்து நிரபராதி முஸ்லிம்களையும் விடுவித்து ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கக்கோரியும் மரியாதைமிகு இந்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனு.

    உங்கள் அனைவரையும்....

    http://www.petitiononline.com/megha00/petition.html

    இந்த சுட்டியில் சென்று அந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட அன்புடன் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. அல்ஹம்துலில்லாஹ்,
    தங்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அருமை, உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் வழங்குவானாக.

    ReplyDelete
  13. யுத்தமற்ற, இரத்தமற்ற இஸ்லாமிய மயமாதலை மேற்குலம் உண்மையாகவே ஏற்றுக்கொண்டுள்ளது, எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்ற யதார்த்தத்தையும் உண்மையாக நம்புகிறார்கள், அதனால் தான் சமாதானம் என்ற லேபல்களுடன் வலைகுடா நாடுகளில் ஆயுதங்களின் எண்ணிகையையும் மோதல்களின் சதவீதங்களையும் அதிகரித்துவருகிறார்கள். சாத்வீகமான ஒரு எழுத்துப் புரட்சி அதற்கு பதிலடியாக அமையட்டும்.

    ReplyDelete
  14. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  15. சகோதரர் ரில்வான்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    --------
    எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்ற யதார்த்தத்தையும் உண்மையாக நம்புகிறார்கள்,
    ---------

    அல்ஹம்துலில்லாஹ்... உலகம் முழுதும் சத்திய மார்க்கத்தின் கீழ் வர வேண்டுமென்று இறைவனை மனமுருகி வேண்டுவோம்...

    -------
    சாத்வீகமான ஒரு எழுத்துப் புரட்சி அதற்கு பதிலடியாக அமையட்டும்.
    --------

    இன்ஷா அல்லாஹ்...

    தங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி...

    வஸ்ஸலாம்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  16. //"இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" //
    இறைவன் ஒருவனே என்று சொன்னாலே அவர் முஸ்லிம் ஆகிவிடுகிறார்; இரண்டாவது பகுதி அவரை சுன்னி ஆக்குவதற்கு. சரியா?

    ReplyDelete