Monday, February 14, 2011

துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

சகோதரி யுவான் ரிட்லி, பெயரை கேட்டாலே புத்துணர்ச்சி வருமளவு இன்றைய இஸ்லாமிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவர் (இவரைப் பற்றிய கட்டுரையை படிக்க <<இங்கே>> சுட்டவும்). 

சமீபத்தில், துனிசிய புரட்சி குறித்து இவர் எழுதிய "துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்(1)" என்ற கட்டுரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.     

"மக்கள் புரட்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மிக அற்புதமான விஷயம் ஒன்று நடந்தது.

கண்களில் கண்ணீர் மல்க ஒரு பெண் எனக்கு பக்கத்தில் நின்றிருந்தார். தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் துனிசியா திரும்ப பாஸ்போர்ட் எடுக்க அன்று காலையிலிருந்து தூதரகத்தினுள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது முகம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றாக தெரிந்தது, ஆனால் எங்கு பார்த்தேனென்று நினைவுக்கு வரவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரை இவரை உள்ளே கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் தூதரக அதிகாரிகள். ஆனால் இன்றோ, தொலைந்து போன மகளை கண்டது போல சிகப்பு கம்பள மரியாதை கொடுக்கின்றனர். ஒரு அதிகாரி "தூதரை சந்திக்க விருப்பமா?" என்று கூட கேட்டிருக்கின்றார். 

நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க, இவரை நான் ஏற்கனவே சந்திருக்கின்றேன் என்ற எண்ணமும் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் எங்கே?

முன்னாள் துனிசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பென் அலி மற்றும் அவரது மனைவி லீலா குறித்து பேச்சு திரும்பியது. தன்னுடைய கணவருக்கு பிறகு அதிபர் பதவியை அடைய லீலா திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்தோம்.

இவர்களது தற்போதைய இருப்பிடம், இரண்டு புனித பள்ளிவாசல்களின் இருப்பிடமான சவூதி அரேபியா. இதனை எண்ணி நாங்கள் இருவரும் சிரித்தோம். ஐந்து வேலையும் பாங்கு(2) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் நாட்டில், அதனை தாங்கி கொண்டு பென் அலியும் லீலாவும் எப்படி இருக்கப்போகின்றார்கள்?

இவர்கள் இருவரும் தேசிய தொலைக்காட்சியில் பாங்கு சொல்லப்படுவதை தடை செய்தவர்கள், ரமலான் நோன்பை புறக்கணித்தவர்கள், அந்நிய நாட்டு கலாச்சாரம் என்று ஹிஜாபை தடை செய்தவர்கள். சுருக்கமாக சொல்லுவதென்றால், தாங்கள் விரும்பியது போல நடந்து கொண்டவர்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்வா(3) கொடுக்க தங்களுக்கு அடிபணிந்த அறிஞர்களையும் வைத்து கொண்டவர்கள்.

நாகரிகமற்ற தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்தவர் பென் அலி. சித்திரவதை, விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளுவது, அரசியல் மற்றும் மத ரீதியான அடக்குமுறை என இவை அனைத்தும் துனிசியாவில் சர்வ சாதாரணமாய் நடந்தவை. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்கள் கிழித்தெறியப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் பென் அலி. பள்ளிகள், மருத்துவமனைகள், பல்கலைகழகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தவர் அவர்.

சிறைகளில் குரான் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து வேறு நேரங்களில் தொழுதால் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

அவரையும், அவரது ஊழல் மிகுந்த அரசாங்கத்தையும் புகழ்த்து பேசும் இமாம்களை அவரது ஆட்சிமுறை கொண்டு வந்தது. இதன் மூலமாக அவர்கள் என்ன எதிர்ப்பார்த்தார்களோ அது நடந்தது. இறையச்சம் கொண்டோரை பள்ளிவாசல்களில் இருந்து அது தள்ளியிருக்கச் செய்தது.

வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம் இளைஞர்கள் விரைவாக பள்ளிவாசலுக்கு செல்லாததில் ஆச்சர்யமொன்றுமில்லை. (ஏனென்றால்) குத்பாவின்(4) பாதி நேரத்தை, பென் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களின் புகழ் பாடி செலவழித்து கொண்டிருந்தவர்கள் அந்த இமாம்கள்.

முன்னாள் சிகை அலங்காரரான லீலாவை நினைத்து நானும் அந்த சகோதரியும் ஆச்சர்யப்பட்டோம். ஜித்தாவில் இருக்கும் தன்னுடைய புதிய வீட்டிலிருந்து ஒவ்வொருமுறை வெளியேறும் போதும் அவர் கருப்பு நிற அபாயா அணிய வேண்டுமே? இது குறித்த அவரது பார்வை எப்படியிருக்கும்? மார்க்க பற்றுள்ள சவூதி காவல்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன்.

துனிசியாவில் இருந்து அவர்கள் புறப்படும் பொழுது, அவர்கள் சென்றடைய விருப்பப்பட்ட இடங்களின் பட்டியலில் நிச்சயம் சவூதி இருந்திருக்காது.

"சாரி, லண்டன், பாரிஸ், நியூயார்க், மொனாகோ அல்லது ஜெனிவாவில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை, ஜித்தா எப்படி?" என்று அந்த கெட்ட செய்தியை விமானி அவர்களிடம் தெரிவித்த போது அவர்களது உணர்வுகள் எப்படி இருத்திருக்கும் என்பதை நான் பார்க்காமல் போய் விட்டேன்.

பென் அலியின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களுமே என்னை முதன் முதலாக, 2006ல், லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்தின் முன் நிற்க வைத்தது. இஸ்லாமை பின்பற்ற என்னுடைய சகோதரிகளுக்கு இருக்கக்கூடிய உரிமைகளுக்காக போராட வைத்தது.

அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.

எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்?, தங்களை திருப்திபடுத்தவா?, அல்லது தங்களுக்கு பாதுகாவலாய் விளங்கி வந்த, உற்ற நண்பர்கள் போல் நடித்து வந்த மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்தவா?

பிப்ரவரி 2009ல், துனிசியாவில் நான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்கின்றேன். அப்போது நூற்றுக்கணக்கான பென் அலியின் ஆதரவாளர்கள் நாங்கள் தொழுவதையும், வெள்ளிக்கிழமை தொழுகைகளில் நாங்கள் கலந்து கொள்வதையும் தடுக்க தங்களால் முடிந்த வரை முயன்று பார்த்தார்கள்.

நாங்கள் எங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தி அந்த தெருவிலேயே தொழுதோம். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மிரட்சி இருக்கின்றதே, அதனை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி அந்த சகோதரியிடம் கூறிக்கொண்டிருந்தேன். பென் அலி மற்றும் லீலாவின் தற்போதைய நிலையை எண்ணி மீண்டும் சிரித்தோம்.

என்னவொரு உணர்ச்சிகர நிலை, மேற்குலகின் நிலையில்லாத நண்பர்களால் கைவிடப்பட்ட பிறகு இவர்களது உதவிக்கு வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். மன்னிப்பதென்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய பண்பு. ஆனால், அந்த பண்பை இவர்களை நோக்கி காட்ட நினைக்ககூடிய நிலையில் கூட தற்போது துனிசியர்கள் இல்லை.

தங்கள் மக்களிடம் இவர்கள் காட்டாத கருணையை இன்று சில முஸ்லிம்கள் இவர்களிடம் காட்டியிருக்கின்றார்கள். இதற்கு நன்றியுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிந்த பெண்கள், இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றிய சகோதரர்கள், மனித உரிமை இயக்கத்தினர் என இவர்கள் அனைவர் குறித்தும் பென் அலி தனக்குள்ளாக பிரதிபளித்து கொள்ள வேண்டிய தருணம் இது.

தன்னுடைய மக்களுக்கு இவர் கொண்டு சென்ற திரித்த, நீர்த்து போன இஸ்லாத்தை போலல்லாமல், இனியாவது இவர் தூய இஸ்லாத்தை கண்டெடுப்பாரா என்றெண்ணி அதிசயக்கின்றேன்.

அந்த சகோதரியை நோக்கி திரும்பி, இனியாவது ஹிஜாபின் மகிமையை லீலா புரிந்து கொள்வாரா என்று இன்னும் அதிகமாக ஆச்சர்யப்படுகின்றேன்.

இதனை கூறிக்கொண்டிருக்கும் போதே, என்னருகில் இன்று கொண்டிருக்கும் இந்த பெண் யாரென்று நினைவுக்கு வந்தது. நாங்கள் 2006ல், துனிசிய தூதரகத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்திருக்கின்றோம்.

சிறைக்காவலில் வைக்கப்பட்டு, பென் அலியின் குண்டர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகளை என்னிடத்தில் அப்போது விவரித்தார் இவர். குரலில் நடுக்கத்துடன் அன்று இவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.
"லண்டனுக்கு வந்த பிறகும் என்னுடைய ஹிஜாப் இன்னும் என் சட்டைப்பையில் இருக்கின்றது" 
இவருடைய கதையை கேட்டு அன்று நான் கண்கலங்கியது எனக்கு நன்கு நினைவிருக்கின்றது.

தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்..."


அல்ஹம்துலில்லாஹ்....

யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்: 
1. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் மற்றும் கை மணிகட்டுகளை தவிர்த்து உடல் முழுவதும் மறைக்கும் விதமாக உடையணியும் முறையை குறிக்கின்றது.
2. பாங்கு - தொழுகைக்காக பள்ளிவாசல்களிலிருந்து எழுப்பப்படும் அழைப்பு.
3. பத்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
4. குத்பா - பிரசங்கம்/சொற்பொழிவு.  
5. உம்மத் - நம்பிக்கையாளர்களின் சமூகம் (Community of Believers).

Sister Yvonne Ridley's official website:
i. http://yvonneridley.org

References:
i. Hijab Makes a Return in Tunisia - Yvonne Ridley, 25th January 2011. link.
ii. துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம் - சகோதரர் முஹம்மது ஆஷிக். link.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






30 comments:

  1. masha allah.

    very good article bro.aashiq. jazk. indeed it is a pleasure to read this in tamil. :)

    wa salam,
    annu

    ReplyDelete
  2. //தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்..." //

    so sad

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்

    அருமையான பதிவு

    இறைவன் உங்களுக்கு நற்கூலியளிப்பானாக

    ReplyDelete
  4. சகோதரி அன்னு அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களது துனிசிய புரட்சி குறித்த பதிவின் reference மூலமாக தான் சகோதரி யுவான் ரிட்லியின் இந்த கட்டுரை அறிமுகமானது. அருமையாக இருந்த இந்த கட்டுரையை தமிழ்ப்படுத்தி பகிர்ந்து கொள்வோமே என்ற எண்ணத்தின் பிரதிபளிப்பே இந்த பதிவு. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே..

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  5. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹ்..

    தங்களுடைய துவாவிற்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //so sad//

    ????????????????

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. assalamu alikkum , thanks my dear brother for good article .

    ReplyDelete
  8. சகோதரர் சாதிக்,

    வ அலைக்கும் ஸலாம்,

    எல்லாப் புகழும் அல்லாவிற்கே...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. Assalamualeykum dear brother,
    Masha'allah, what a wonderful article !!!
    May ALLAH(swt) bless you for your works... Ameen... Jazakkallaahu khair.
    Your sister,
    M.Shameena

    ReplyDelete
  10. Dear Shameena,

    Wa alaikum salaam,

    thanks for the wishes..all praise due to allah(swt)..

    Your brother,
    aashiq ahamed a

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.ஆஷிக் அஹ்மத்,

    பொறுமையுடன் ரசித்து செய்யப்பட்ட அம்சமான மொழிபெயர்ப்பு. தமிழில் படிக்க இனிமை.

    ///தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்.../// -so much happy..!

    //யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...//--ஆமீன்.

    அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  12. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் ஸலாம்,

    ----------
    பொறுமையுடன் ரசித்து செய்யப்பட்ட அம்சமான மொழிபெயர்ப்பு.
    ------------

    ஆம், மிகவும் விரும்பி மொழிபெயர்த்த பதிவு. அல்ஹம்துலில்லாஹ்.

    தங்களுடைய கருத்துக்கு நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  13. Hello,
    People in tunisia fought against the dictator for Roti and Jobs.
    Noone in the world cares about burkha except you and your gumbal!!!

    ReplyDelete
  14. Dear brother anony,

    Assalaamu alaikum,

    ------------
    Noone in the world cares about burkha except you and your gumbal!
    ------------

    immmmmmm.....that "gumbal" includes tunisians and they care about hijab and all the other muslims care about it too........

    thanks,

    may Allah(swt) show you the straight path...

    your brother,
    aashiq ahamed a

    ReplyDelete
  15. alhamthulillah,only one way(true way)THATS way ofISLAM

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நல்ல பதிவு.
    இந்தியாவிலும் இப்படி ஒரு புரட்சி நடந்து இஸ்லாமிய நாடாகும் நாள் தான் இன்ஷா அல்லாஹ் மிக மிக மகிழ்ச்சியான நாளாகும்.

    எல்லா புகழும் இறைவனுக்கே
    மாஷா அல்லாஹ்

    -இஸ்மாயில்

    ReplyDelete
  17. சகோதரர் அனானி இஸ்மாயில் அவர்களுக்கு,

    வ அலைக்கும் ஸலாம்...

    உங்களது பின்னூட்டம் எது மாதிரியானது என்று புரியவில்லை. நன்கு சிந்தித்து தான் எழுதினீர்களா என்பதும் புலப்படவில்லை.

    புரட்சி நடந்தால் இந்தியா இஸ்லாமிய நாடாகி விடுமா?

    உள்ளங்களில் புரட்சி நடந்து முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமை ஏற்க வேண்டும். அதற்கு நீங்கள் (??, நீங்கள் முஸ்லிம் நபர் தானா என்ற சந்தேகம் என்னுள் வந்து விட்டது. அதற்கு தான் கேள்வி குறி. எனினும் அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்), நான் என்று அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாம் காட்டிய வழி படி வாழ்ந்து அடுத்தவர்களை சத்திய மார்க்கத்தின்பால் அழைக்க வேண்டும்.

    மேலும், இந்த நாடுகளில் நடந்தது சர்வாதிக்காரத்துக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சி. இதற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

    இன்னொரு முறை உங்கள் பின்னூட்டத்தை நீங்களே நிதானமாக படித்து பாருங்கள்.

    இறைவன் அருளால் நம் சகோதர/சகோதரிகள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றால் மிக்க மகிழ்ச்சி தான். அதற்கு நீங்களும் நானும் நேரான வழியில் மக்களை அழைக்க வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  18. மாஷா அல்லாஹ்


    மன்னிக்கவும் சகோ.

    சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்ல தெரியவில்லை.
    மற்றபடி நீங்கள் தந்த பதிலில் உள்ளபடியே மக்கள் உள்ள புரட்ச்சி அடைந்து இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும் என்பதை தான் சொல்ல வந்தேன்

    எல்லா புகழும் இறைவனுக்கே

    --இஸ்மாயில்

    ReplyDelete
  19. சகோதரர் இஸ்மாயில்,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    உங்களது கருத்தை நான் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல. எதுவாகினும், உங்களது கருத்தை அப்படியே படிக்கின்றவர்களுக்கு நான் சொன்னது போலத்தான் தோன்றும். திருத்தி கொண்டதற்கு நன்றி.

    --------
    நீங்கள் தந்த பதிலில் உள்ளபடியே மக்கள் உள்ள புரட்ச்சி அடைந்து இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும்
    ---------

    இன்ஷா அல்லாஹ்...அழைப்பு பணியை தீவிரமாக கொண்டு செல்ல, நமக்கு, அதற்குண்டான கல்வி ஞானத்தையும், உடல் மற்றும் மன பலத்தையும் இறைவன் தந்தருளவேண்டும்...

    தங்களது உடனடி விளக்கத்திற்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும்!

    நன்கு எழுதியிருக்கிறீர்கள்.

    துனீஷியா,எகிப்து, இன்னும் சில நாட்களில் ஏமன் என்று இஸ்லாமிய புரட்சி தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    ReplyDelete
  21. வ அலைக்கும் ஸலாம் சகோதரர் சுவனப்பிரியன்,

    அல்ஹம்துலில்லாஹ். மக்களை ஏய்த்து ஆட்சி நடத்தி வந்த ஆட்சியாளர்கள் பலருக்கு இது போதாத காலம் போலும்....

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும்,மாஷா அல்லாஹ்
    very good job bro.இறைவன் உங்களுக்கு நற்கூலியளிப்பா by jaffer

    ReplyDelete
  23. வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஜாபர்,

    தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  24. இந்த காலத்தில் இப்படியும் சர்வதிகாரமா... பாரோன் தான் நினைவிற்கு வருகிறான்:( தமிழாக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என்றென்றும்16,

    சர்வாதிகாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அல்லாஹ்வின் கிருபையால் ஒவ்வொன்றாக ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  26. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களது மறுமொழியை என்னால் வெளியிட முடியாது. அதற்கான காரணத்தையும் தாங்களே சொல்லிவிட்டீர்கள். என்னுடைய தளம் விளம்பரம் போல அமைய வேண்டுமா?

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  27. அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.


    ***************

    இஸ்லாமிய நாடு எல்லாம் செகுலர் ஆகா கூடாது ,அங்கு மக்கள் தங்கள் விருப்ப பட்ட மதத்தை தேர்ந்து எதுக்க கூடாது , விருபிய உடையை அணிய கூடாது ஆனால் இந்திய மட்டும் செகுலர் நாடக இருக்க வேண்டும் . என்று ஹிந்துக்களும் உங்களை போன்றே சிந்திகிரார்களோ அன்று தான் உங்களுக்கு இருக்கு . அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை , அதற்க்கு முழு முதற் காரணம் ஹிந்து இயக்கங்களாக இருக்காது , அது ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை பற்றி புரிது கொள்ளும் நாளாக இருக்கும் , என்று அப்படி ஹிந்துக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றே இந்தியாவிலும் செகுலர் இசம் செத்து போய்விடும்

    ReplyDelete
  28. Anony neenga super comedy panreenga enna? hindukkal islathai purindhu kondadhinalthan indiavil islam valarndhu kondu varukiradhu. Hindukkal ennum nandraga purindhukollattum.

    by
    kalam

    ReplyDelete
  29. Mr anony neenga super comedy panreenga. eanna? Hundukkal islathai purindhukonduthan kootamkootamaga islathirkku thirumbukirargal. hindukkal innum nanraga islathai purindhukollattum.

    by
    kalam

    ReplyDelete
  30. Kalam nee athaveeda comedy piece isreal karan veppapam paru appu

    ReplyDelete