Sunday, August 28, 2011

ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

                       செயற்கை உயிரை உருவாக்கி ஆத்திகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர் என்று நாத்திகர்கள் குதூகலித்த நேரத்தில், தாங்கள் செயற்கை உயிரையெல்லாம் உருவாக்கவில்லை என்று அதிரடியாய் அறிவித்து, தன்னுடைய கையாலேயே நாத்திகர்களின் முகத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர். (செயற்கை உயிர் குறித்த இத்தளத்தின் பதிவை காண இங்கே சுட்டவும்)

இது சென்ற வருடம்.நடந்தது.

மறுபடியும் மண்ணை கவ்விய வேதனையில் நாத்திகர்கள் துவண்டு போயிருக்க, அவர்களை உற்சாகப்படுத்த நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் ஏழாம் தேதி (7th September 2010). 

இந்த முறை அவர்களை உற்சாகப்படுத்த வந்தவர் ஸ்டீபன் ஹாகிங். Leonard Mlodinov என்பருடன் சேர்ந்து ஸ்டீபன் ஹாகிங் எழுதியிருந்த "The Grand Design" புத்தகம் மேலே குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. 


"இந்த பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவையில்லை. இயற்பியல் கோட்பாடுகளே போதுமானது" என்று அந்த புத்தகத்தில் ஹாகிங் வாதிடுவதாக செய்தி தீ போல பரவ, நாத்திகர்கள் மறுபடியும் உற்சாகமடைந்தனர். 

"இப்போது தானே செயற்கை உயிர் விசயத்தில் அடிப்பட்டீர்கள், நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?" என்று ஆத்திகர்கள் கேட்க, "அது போன மாசம், நாங்க சொல்றது இந்த மாசம்" என்று சொல்லிவிட்டு ஆனந்த கூத்தாடினர் நாத்திகர்கள்.

நிச்சயம், ஸ்டீபன் ஹாகிங் நம்மை கைவிடமாட்டார் என்பது அவர்களது கணக்காக இருந்திருக்க வேண்டும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு பரப்பரப்பான சூழ்நிலையே. ஆத்திகர்களின் நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் மீண்டும் ஒரு சவாலை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை.

எதிர்ப்பார்த்தபடி புத்தகம் வெளியானது. எதிர்பார்த்தப்படி வசூலை அள்ளியது.

ஆனால்......................

மிக கடுமையான எதிர்மறை விமர்சங்களுக்கு உள்ளானது இந்த புத்தகம். சக ஆய்வாளர்களாலும், அறிவியல் ஆய்விதழ்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

விமர்சனங்கள் எப்படி இருந்தன என்பதற்கு சில கருத்துக்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

  • பணத்திற்காக எழுதப்பட்ட புத்தகம்.
  • போலியான அறிவியலை (Pseudo Science) ஊக்கப்படுத்தும் புத்தகம்.
  • இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கோட்பாடு முட்டாள்தனமாது  (Crap).
  • தத்துவவியலாளர்கள் (Philosopher) போல நடந்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த விஞ்ஞானிகள். 
  • ஹாகிங்கை நம்பினால் நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்தி கொள்கின்றோம் என்று அர்த்தம். 

ஆத்திகர்களுக்கோ இன்ப அதிர்ச்சி. பின்னே இருக்காதா என்ன?? "நாம விமர்சித்தால் கூட இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க முடியாது போல" என்றெண்ணி வேலை சுலபத்தில் முடிந்து விட்டதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருந்தனர்.

இந்த புத்தகம் வெளிவரும், ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாத்தில் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியே ஆத்திகர்களை நோகடிக்கலாம் என்றிருந்த நாத்திகர்களுக்கு பலத்த அடி. மறுபடியும் மண்ணை கவ்வ நேர்ந்ததை எண்ணி வருத்தப்பட்டாலும், அடுத்து தங்களை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று கடந்த காலங்களில் காத்திருந்தது போல மறுபடியும் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

சரி, ஏன் இந்த புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டும்?....

காரணம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை' என்பதை நிரூபிக்க இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் உபயோகித்த கோட்பாடு தான்.

M-Theory:

இந்த கோட்பாடு M-Theory என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோட்பாடானது, ஏற்கனவே இயற்பியல் உலகினரால் நன்கு அறியப்பட்ட கோட்பாடான string கோட்பாட்டின் (String theory) விரிவாக்கமாகும்.

M-Theory-யும் சரி, String Theory-யும் சரி, அறிவியல் உலகினரால் விமர்சனத்திற்கு உள்ளான கோட்பாடுகள். ஆய்வாளர்களால் ஒருசேர ஒப்புக்கொள்ளபடாத கோட்பாடுகள்.

இதற்கு காரணம், இந்த கோட்பாடுகள் முழுமையடையாதவை என்பது ஒருபுறமிருக்க, இவைகளை சோதனைக்கூட செய்துப் பார்க்க முடியாத நிலையில் தான் இன்றைய அறிவியல் உலகம் இருக்கின்றது.

M-theory (and string theory) has been criticized for lacking predictive power or being untestable - Wikipedia
M-Theoryயையும், String theory-யையும் சோதனைக்கு உட்படுத்த முடியாது என்ற காரணத்தால் இவை விமர்சிக்கப்படுகின்றன - Wikipedia

இதுதான் "The Grand Design" புத்தகத்தின் பிரச்சனை. ஒரு முழுமையடையாத, குளறுபடியான கோட்பாட்டை வைத்துக்கொண்டு, பிரபஞ்ச மர்மங்களை விளக்கிவிட்டேன் என்று கூறியதை சக ஆய்வாளர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

M-theory in either sense is far from complete. But that doesn't stop the authors from asserting that it explains the mysteries of existence - Craig Callender in New scientist Magazine.
எப்படி பார்த்தாலும், M-Theory முழுமையடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்த விஷயம், நாம் இவ்வுலகில் இருப்பதற்கான மர்மத்தை விளக்கிவிட்டதாக கூறும் ஆசிரியர்களை தடுக்கவில்லை - (Extract from the original quote of) Craig Callender in New scientist Magazine.

இதில் ஆச்சர்யமளிக்கும் இன்னொரு செய்தி என்னவென்றால், M-Theory என்றால் என்னவென்று கூட தெளிவாக விளக்க முயற்சிக்கவில்லை இந்த புத்தகம்.

ஒரு "நல்ல இயற்பியல் மாதிரி (A good physical Model)" எப்படியிருக்க வேண்டுமென்று இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர் ஹாகிங் மற்றும் Leonard Mlodinov.

A model is a good model if it:
1. Is elegant
2. Contains few arbitrary or adjustable elements
3. Agrees with and explains all existing observations
4. Makes detailed predictions about future observations that can disprove or falsify the model if they are not borne out.

இதில் துரதிஷ்டவசமான உண்மை என்னவென்றால் இவர்கள் முன்மொழியும் M-Theory மேலே சொன்ன எந்தவொரு கருத்தையும் திருப்திபடுத்தவில்லை என்பதேயாகும். இது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

இந்த புத்தகம் குறித்த எதிர்மறை விமர்சனங்களில் என்னை மிகவும் ஈர்த்தன பின்வரும் தளங்களின் விமர்சனங்கள்.

1. Scientific American.
2. Columbia university.
3. Physics World (Institute of Physics).

இந்த மூன்று நிறுவனங்களும் ஆய்வாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் பாரம்பரியமிக்க நிறுவனங்கள். 

Scientific American:

உலக பிரசித்தி பெற்ற அறிவியல் ஆய்விதழான Scientific American-னில், ஜான் ஹோர்கன் எழுதிய விமர்சனம் மிகவும் காட்டமாக இருந்தது. தலைப்பே, "ஹாகிங்கின் 'புதிய' கோட்பாடு முட்டாள்தனமானது (crap)" என்றிருந்தது.
Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP - John Horgan in  Scientific American.
Scientific American-னில் இதுப் போன்ற கட்டுரையை பார்க்கும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது என்றால், இதனை காணும் நாத்திகர்களின் நிலையை நீங்கள் எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.

M-Theory மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஹாகிங்கின் நாத்திக நம்பிக்கையே இந்த புத்தகத்தின் மையமாக இருக்கின்றது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையை முடிக்கும்போது ஹோர்கன் பயன்படுத்திய வார்த்தைகள் காட்டமான விமர்சனத்தின் உச்சம்.
If we believe him, the joke's on us - Closing remarks of John Horgan in Scientific American.
ஹாகிங்கை நாம் நம்பினால், நம்மை நாமே நகைச்சுவைக்கு உட்படுத்திக் கொள்கின்றோம் என்று அர்த்தம் - (extract from the ) Closing remarks of John Horgan in Scientific American. 
Columbia University:

அமெரிக்காவின் தலைச்சிறந்த ஆய்வு நிறுவனங்களில் முதல் இடத்தை பெற்றுள்ள கல்வி நிறுவனமான கொலம்பியா பல்கலைகழகத்தின் தளத்தில், "The Grand Design" குறித்து வெளியான விமர்சனமும் படுசூடாக இருந்தது.

விமர்சனத்தை எழுதிய பீட்டர் வொய்ட் இயற்பியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். String Theory-யை கடுமையாக எதிர்ப்பவர்.

புத்தகத்தின் மீது பல விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக வைத்த வொய்ட், காசு பார்ப்பதற்காகவே மதம் உள்ளே இழுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், அறிவியல்/மதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது, நம்புவதற்கு தகுதியில்லாத கோட்பாடான M-Theoryயை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது தனக்கு புரியவில்லையென்றும் குறிப்பிட்டிருந்தார் வொய்ட்.

...if you’re the sort who wants to go to battle in the science/religion wars, why you would choose to take up such a dubious weapon as M-theory mystifies me - Peter Woit, math.columbia.edu

வொய்ட்டின் மற்றொரு குற்றச்சாட்டும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதாவது, இந்த புத்தகத்தில் எவ்விதமான மேற்கோள்களும் (references to other sources) காட்டப்படவில்லை என்பதுதான் அது. 

உதாரணத்துக்கு, "ஒருவர் இப்படி சொன்னார்/செய்தார்" என்றால், "யார் அவர், எங்கு சொன்னார்" என்ற மூல தகவலை மேற்கோள் காட்டவேண்டுமல்லவா? அப்படி எந்தவொரு மேற்கோளும் இந்த புத்தகத்தில் இல்லை. 

புத்தகம் மீதான தன்னுடைய ஆதங்கத்தை மிக அழகான முறையில் தெளிவாக விமர்சித்திருந்தார் வொய்ட்.

Physics World (Institute of Physics):

உலகின் முன்னணி இயற்பியல் இதழ்களில் ஒன்றான "Physics World"-டின் தளத்திலும் ஹாகிங்கின் புத்தகம் குறித்த எதிர்மறையான விமர்சனம் வெளியாகி இருந்தது.

விமர்சனம் எழுதியிருந்த ஹமீஷ் ஜான்ஸ்டன், ஒரு உறுதிப்பாடில்லாத கோட்பாட்டை வைத்துக்கொண்டு தன்னுடைய நாத்திக நம்பிக்கையை நிரூபிக்க முயல்கின்றார் ஹாகிங் என்று கூறியிருந்தார்.

There is just one tiny problem with all this – there is currently little experimental evidence to back up M-theory. In other words, a leading scientist is making a sweeping public statement on the existence of God based on his faith in an unsubstantiated theory - Hamish Johnston, Physicsworld.com blog.
இங்கு ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. M-Theoryயை உறுதிப்படுத்த தற்போதைய நிலையில் மிகக்குறைவான செயல்முறை ஆதாரங்களே உள்ளன. வேறுவிதமாக சொல்லுவதென்றால், உலகின் முன்னணி ஆய்வாளர், உறுதிப்பாடில்லாத ஒரு கோட்பாட்டை துணையாகக்கொண்டு தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளின் இருப்பை பற்றி வெளிப்படையாக தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றார் - (Extract from the original quote of) Hamish Johnston, Physicsworld.com blog. 

தங்கள் நம்பிக்கைக்கு ஏதுவாக அறிவியலை வளைக்கும் விஞ்ஞானிகள்:

ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாதத்தில் இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை என்று ஸ்டீவன் ஹாகிங்கே சொல்லிவிட்டார்' என்றெல்லாம் வாதித்து ஆத்திகர்களை மடக்கலாம் என்றிருந்த நாத்திகர்களை அறிவியல் உலகம் வாயடைக்க செய்துவிட்டது.

ஆனால் இதையெல்லாம் அறியாத சில அப்பாவி நாத்திகர்கள் இன்னும் இருக்கின்றனர். தங்களை ஹாகிங் கைவிட்டதை அறியாத இவர்கள், விவாதங்களில் இன்னும் இந்த புத்தகத்தை (அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள கோட்பாட்டை) மேற்கோள் காட்டி "பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை" என்று அறியாமை மிகுதியில் வாதாடுகின்றனர். பின்னர் இதுக் குறித்த எதிர்மறையான கருத்துக்களை காட்டியவுடன் அமைதியாகி விடுகின்றனர்.

இந்த பதிவின் நோக்கமும் இதுதான். அறியாமையில் உருளும் இம்மாதிரியான அப்பாவி நாத்திகர்களை நீங்கள் எதிர்காலத்தில் காண நேர்ந்தால் அவர்களுக்கு உங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துவிட்டு இதுக்குறித்த விழிப்புணர்வை நீங்கள் ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

நாத்திகர்களை விடுவோம். அவர்கள் மண்ணை கவ்வுவது என்பது புதிதல்ல. இன்றைக்கு இது போனது என்றால், நாளைக்கு வேறு எதையாவது கொண்டுவருவார்கள்.

நீங்கள் மேலே உள்ள செய்திகளை கூர்ந்து கவனித்திருந்தால் ஒரு அதிமுக்கிய விஷயத்தை கவனித்திருக்கலாம்.

அதாவது, தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அறிவியலை வளைத்துக்கொள்கின்றனர் விஞ்ஞானிகள் என்ற குற்றச்சாட்டு அரசல்புரசலாக உண்டு.

அந்த குற்றச்சாட்டை ஆய்வாளர்களே ஒப்புக்கொள்வது மிக மிக ஆரோக்கியமான ஒன்று.

A British journalist contacted me about this recently and we talked about M-theory and its problems. She wanted me to comment on whether physicists doing this sort of thing are relying upon “faith” in much the same way as religious believers. I stuck to my standard refusal to get into such discussions, but, thinking about it, have to admit that the kind of pseudo-science going on here and being promoted in this book isn’t obviously any better than the faith-based explanations of how the world works favored by conventional religions - Peter Woit, Columbia University. 
சமீபத்தில் ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் என்னை தொடர்புக்கொண்டிருந்தார். நாங்கள் M-Theory குறித்தும் அதனுடைய பிரச்சனைகள் குறித்தும் பேசினோம். மத நம்பிக்கையாளர்களை போல, இயற்பியலாளர்களும் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபது குறித்து என்னிடம் கருத்து கேட்டார் அவர்.   
நான் வழக்கம்போல கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டேன். ஆனால், பிற்பாடு இதுக்குறித்து சிந்திக்கையில், இதனை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். இங்கு நிலவும் போலியான அறிவியலும், அதனை இந்த புத்தகம் ஊக்கப்படுத்துவதும், மதங்கள் கூறும் உலக செயலாக்கத்திற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல -  (extract from the original quote of) Peter Woit, Columbia University.  

அறிவியல் உலகில் இது போன்ற மாற்றங்கள் பெருகி வருவது நிச்சயம் உற்சாகமளிக்கும் ஒன்று. தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆய்வாளர்கள் செயல்படுவார்களேயானால் அது நிச்சயம் அறிவியலை ஆரோக்கியமான திசைக்கு கொண்டு செல்லாது. 'தன்னுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுகின்றார்  ஹாகிங்' என்று ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துவது போல தான் சம்பவங்கள் நடந்தேறும்.

முடிவாக:

இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். சென்ற ஆண்டு, அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதியை பெருமளவில் குறைத்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கு அவர்கள் கூறிய காரணம், 45% நிதி, தரமில்லாத ஆய்வுகளுக்கு செலவிடப்படுகின்றதாம்.

oopsssss...

இந்த செய்திக்கும், ஸ்டீபன் ஹாகிங் மற்றும் M-Theoryக்கும் சம்பந்தம் உண்டா??

உண்டு என்கின்றது Physics world தளம்.

எனினும், பதிவை மற்றொருமுறை படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்....

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்....

My sincere thanks to:
1. Peter Woit, Columbia University.
2. Br.Peer Mohamed (for his helpful points on the subject).

References:
1. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP -  John Horgan, Sep 13, 2010. Scientific Amaerican. link
2. Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. link
3. M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. link
4. The Grand Design (book) - Wikipedia. link
5. Is Hawking right to attack philosophy? - BBC Radio. link
6. The Grand Design - Roger Penrose, September 4 2010, Financial Times. link
7. Even Stephen Hawking doesn't quite manage to explain why we are here - The Economist. link
8. Why God Did Not Create the Universe -  STEPHEN HAWKING And LEONARD MLODINOW, Sep 3, 2010. The Wall Street Journal. link
9. Stephen Hawking says there's no theory of everything - Craig Callender, Sep 2, 2010. link
10. Stephen Hawking's big bang gaps - Paul Davies, Sep 4 2010, The Guardian. link
11. Many Kinds of Universes, and None Require God - DWIGHT GARNER, September 7, 2010, The New York Times. link
12. Our Spontaneous Universe -  LAWRENCE M. KRAUSS, Sep 8, 2010. The Wall Street Journal. link
13. M-Theory, String Theory, Institute of Physics, Physics world, Columbia University, Peter Woit - Wikipedia.
14. Transcript from The God Debate -Richarddawkins.net. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






64 comments:

  1. "ஆத்திகம்-நாத்திகம் குறித்த விவாதத்தில் இந்த புத்தகத்தை பயன்படுத்தலாம், 'பிரபஞ்சம் உருவாக இறைவன் தேவையில்லை என்று ஸ்டீவன் ஹாகிங்கே சொல்லிவிட்டார்' என்றெல்லாம் வாதித்து ஆத்திகர்களை மடக்கலாம் என்றிருந்த நாத்திகர்களை அறிவியல் உலகம் வாயடைக்க செய்துவிட்டது."

    ALLAHU AKBAR.JAZAKALLAHU HAIR FOR ANOTHER GREAT ARTICLE.

    இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //செயற்கை உயிரை உருவாக்கி ஆத்திகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர் என்று நாத்திகர்கள் குதூகலித்த நேரத்தில், தாங்கள் செயற்கை உயிரையெல்லாம் உருவாக்கவில்லை என்று அதிரடியாய் அறிவித்து, தன்னுடைய கையாலேயே நாத்திகர்களின் முகத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் கரியை பூசிவிட்டார்//

    இந்த நத்திகர்களை பார்த்து கோபப்படுவதை விட பரிதாபப்படுகிறேன் அவர்களின் அறியாமையால் அடிக்கடி கரியையும் சகதியையும் முகத்தில் பூசி கொள்கிற சூழலை நினைத்து.

    உலகின் ஒரே பறவை புட்டுக்கிருச்சு(இன்னாலில்லஹி)

    இப்ப செயற்கையாக கண்புடிக்க வில்லை.

    ஆழ்ந்த அனுதபங்கள்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.
    மற்றுமொரு அசத்தலான பதிவு.தவறான அறிவியல் ஆராட்சிகளை தக்க ஆதாரத்தோடு மறுக்கும் கட்டுரைகளை தொகுத்தவிதம் அருமை. இங்குள்ள நாத்திகர்கள் இம்மாதிரி உருப்படாத ஆராட்சிகளை தமிழ் படுத்தி பதிவிட்டு அந்த பதிவிட்டவரே பல கள்ளப்பெயர்களில் அதற்க்கு பின்னூட்டம் இடும் போக்கை என்னவென்று சொல்வது.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    எத்தனை முறை பரிணாமத்திற்கு ஆதரவாக விஞ்ஞானத்தை திரித்தாலும் அத்தனை முறையும் அந்த விஞ்ஞானத்தாலேயே பரிணாம வாதங்கள் முறியடிக்கப்படுகிறது.சுபஹானல்லாஹ்...! அதற்கு மற்றும்மோர் உதாரணம் இந்த இடுகை.,ஆனால் பரிணாம மதத்தை பின்பற்றும் அனேக நாத்திகர்கள் அறிவியல் பெயரில் இப்படிப்பட்ட அபத்தங்களை முன்னிறுத்துவது தான் உச்சக்கட்ட காமெடி.,

    இன்ஷா அல்லாஹ் உங்களின் அடுத்த ஆக்கத்திலும்
    "அது போன மாசம், நாங்க... " - இந்த வார்த்தை மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்றே எண்ணுகிறேன்

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மாஷா அல்லா
    நல்ல பதிவு சகோ....
    இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

    இறைவனே எல்லாம் அறிந்தவன்....

    ReplyDelete
  6. சகோதரர் Mohamed Himas Nilar,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்,

    எனக்கு ஒன்று புரியவே இல்லை, நேற்று பூமி சுற்றுவதை கண்டுபிடித்தனர், இன்று ஹப்ல் டேலஸ்கோப் வைத்து உலகை காண்கிறோம், நாளை பிரபஞ்ச எல்லை வரை சென்று ஒன்றும் இல்லை என்று திரும்பி வந்துவிடுவோம்., இவையெல்லாம் வைத்து எப்படி இறைவனை மறுக்க முடியும் என்பதே?

    சரி, நம்முடைய வேலை அவ்வப்போது பதிலடி கொடுப்பது....இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று பாப்போம்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள்(வணக்கம் சொல்லகூடாதாம்) சகோ
    நடுநிலையோடு எழுதியிருப்பதற்கு பாராட்டுகள். எந்த ஒரு கொள்கையும் ஒவொன்றும் விமர்சிக்கப் படவேண்டும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை. விமர்சிப்பவர்கள்,விமர்சனம் பற்றிய பதிவு நாளை வெளியிடுகிறேன்.இன்னைக்கு கொஞ்சம் வேறு வேலை.

    ReplyDelete
  9. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

    //இந்த நத்திகர்களை பார்த்து கோபப்படுவதை விட பரிதாபப்படுகிறேன்///

    பரிதாபம் தான் பட வேண்டும். ஒன்று போனால் இன்னொன்று, அது போனால் மற்றொன்று...என்றைக்காவது ஒருநாள் தாங்கள் எதிர்ப்பார்ப்பது கிடைக்கும் என்று நம்புகின்றார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் காத்திருப்போம். அதுவரை அவர்களுக்காக பரிதாபபடுவோம்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

    ReplyDelete
  10. சகோதரர் ரப்பானி,

    வ அலைக்கும் சலாம்,

    தங்களுடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரர்...எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவகாக...ஆமீன்

    ///இங்குள்ள நாத்திகர்கள் இம்மாதிரி உருப்படாத ஆராட்சிகளை தமிழ் படுத்தி பதிவிட்டு அந்த பதிவிட்டவரே பல கள்ளப்பெயர்களில் அதற்க்கு பின்னூட்டம் இடும் போக்கை என்னவென்று சொல்வது.///

    எனக்கு தெரிந்து நம்ம "உண்மையான" கம்யுனிஸ்ட்கள் தான் அப்படி செய்வர். வேறு யாராவது இருக்கின்றார்களா என்ன??

    இறைவனே எல்லாம் அறிந்தவன்...

    வருகைக்கு நன்றி ...

    ReplyDelete
  11. சகோதரர் குலாம்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

    ////எத்தனை முறை பரிணாமத்திற்கு ஆதரவாக விஞ்ஞானத்தை திரித்தாலும் அத்தனை முறையும் அந்த விஞ்ஞானத்தாலேயே பரிணாம வாதங்கள் முறியடிக்கப்படுகிறது.///

    அல்ஹம்துலில்லாஹ்....

    ////,ஆனால் பரிணாம மதத்தை பின்பற்றும் அனேக நாத்திகர்கள் அறிவியல் பெயரில் இப்படிப்பட்ட அபத்தங்களை முன்னிறுத்துவது தான் உச்சக்கட்ட காமெடி.///

    தொடர்ந்து துவா செய்வோம் குலாம். அவர்கள் நேர்வழி பெற வேண்டுமென்று....

    ///அடுத்த ஆக்கத்திலும்
    "அது போன மாசம், நாங்க... " - இந்த வார்த்தை மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்றே எண்ணுகிறேன்///

    :) :)

    ReplyDelete
  12. சகோதரர் ரியாஸ் அஹமது,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

    அல்ஹம்துலில்லாஹ்

    தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஆஷிக் கலைக்கிடிங்க போங்க! நாத்திகர்கள் வயிற்றை!
    உன்மையில் பரினாமம் என்னும் மூடனம்பிக்கையில் முத்துகுளிக்கும் இவர்களுக்கு இறைவன் பற்றிய அறிவை அல்லாஹ்தான் வழங்க வேண்டும்.

    2:6 إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

    நிச்சயமாக இறைவனை நிராகரிப்போரை நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் இறை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அல்-குர்ஆன்(2:6)

    அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்ட இந்த ரமழானில் பிரார்திப்போம்.

    அன்புடன்,
    காதர் மைதீன்.
    மாஸலாமா.

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

    //"அது போன மாசம், நாங்க சொல்றது இந்த மாசம்" //

    ஆனாலும் அவங்க விடா முயற்சி என்னை புல்லரிக்க வைக்கிறது.. :) :) :)

    இப்படி அறிவியல் பூர்வமாக பரிணாம கதைகளை முறியடிக்கும் சகோதரர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பதில் பெருமையாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..

    தங்கள் கல்வியறிவை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

    ReplyDelete
  15. சகோதரர் கார்பன் கூட்டாளி,

    வ அலைக்கும் சலாம்...

    ///எனக்கு ஒன்று புரியவே இல்லை, நேற்று பூமி சுற்றுவதை கண்டுபிடித்தனர், இன்று ஹப்ல் டேலஸ்கோப் வைத்து உலகை காண்கிறோம், நாளை பிரபஞ்ச எல்லை வரை சென்று ஒன்றும் இல்லை என்று திரும்பி வந்துவிடுவோம்., இவையெல்லாம் வைத்து எப்படி இறைவனை மறுக்க முடியும் என்பதே?///

    மறுக்க முடியாது. அதனை ஸ்டீபன் ஹாகிங்கே ஒப்புக்கொண்டிருக்கின்றார். அவர் சொல்லுவது என்னவென்றால் "பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவை இல்லை. அது இயற்பியல் விதிகளை கொண்டு தானாக உருவாகிக்கொள்ளும்" என்பதே...

    ஒருவேலை ஹாகிங் அவர்களின் கருத்து உண்மையாக இருந்தால் கூட அடுத்து ஒரு கேள்வி வரும் "அந்த விதிகள் எப்படி வந்தன??"....

    ஆனால் ஒரு சொதப்பலான கோட்பாட்டை முன்வைத்து இந்த கேள்விக்கு வேலை இல்லாமல் செய்திவிட்டார் ஹாகிங்.

    ///சரி, நம்முடைய வேலை அவ்வப்போது பதிலடி கொடுப்பது....///

    வரலாறு முழுக்க, இறைவன் கிருபையால் இதற்கு நமக்கு பிரச்சனையே வந்ததில்லை...அல்ஹம்துலில்லாஹ்.

    ///இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் என்று பாப்போம்.///

    இன்ஷா அல்லாஹ்..

    ReplyDelete
  16. சகோதரர் சார்வாகன்,

    உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    ///வணக்கம் சொல்லகூடாதாம்///

    :)

    ///வாழ்த்துகள் சகோ
    நடுநிலையோடு எழுதியிருப்பதற்கு பாராட்டுகள்.///

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...

    ///விமர்சிப்பவர்கள்,விமர்சனம் பற்றிய பதிவு நாளை வெளியிடுகிறேன்.இன்னைக்கு கொஞ்சம் வேறு வேலை///

    உங்கள் தளம் சகோதரர். என்னிடத்தில் இதையெல்லாம் சொல்ல வேண்டுமா??. தங்களால் முடிந்தால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து referenceகளையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள்...

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பதில் பதிவுக்கு ஒரு நல்ல பலமான பதிலடி பதிவு சகோ.ஆஷிக் அஹமத். வாழ்த்துக்கள் + நன்றிகள்.

    //தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அறிவியலை வளைத்துக்கொள்கின்றனர் விஞ்ஞானிகள்//


    ---இவர்கள் விஞ்ஞானிகள் அல்லர்..! .."தத்துப்பித்துவான்கள்"..!


    இந்த தத்துபித்து கும்பலில் விஞ்ஞானி எனப்படும் ஸ்டீபன் ஹாக்கிங்கும் சேர்ந்து விட்டது வருந்தத்தக்கது.


    இவர்களுக்கும் இந்த தத்துபித்து கும்பலை நம்பும் நாத்திக தமிழ் பதிவர்களுக்கும் ஏக இறைவன் நேர்வழி காட்ட வேண்டுவோம்..!

    வேறென்னத்த சொல்ல நான்..!

    ReplyDelete
  18. @ ரப்பானி:-
    //இங்குள்ள நாத்திகர்கள் இம்மாதிரி உருப்படாத ஆராட்சிகளை தமிழ் படுத்தி பதிவிட்டு அந்த பதிவிட்டவரே பல கள்ளப்பெயர்களில் அதற்கு பின்னூட்டம் இடும் போக்கை என்னவென்று சொல்வது.//
    ---சூப்பர் கமென்ட் சகோ..! :-)



    @ஆஷிக் அஹமத்:-
    //எனக்கு தெரிந்து நம்ம "உண்மையான" கம்யுனிஸ்ட்கள் தான் அப்படி செய்வர். வேறு யாராவது இருக்கின்றார்களா என்ன??//---நீங்க பச்ச புள்ள சகோ..!

    ---ஆக...

    எல்லா நாத்திகர்களும் இப்படியா...
    அல்லது...
    இப்படித்தான் எல்லா நாத்திகர்களுமா..?



    @சார்வாகன்
    //எந்த ஒரு கொள்கையும் ஒவொன்றும் விமர்சிக்கப் படவேண்டும் என்பதில் மற்றுக் கருத்து இல்லை.//

    ---அப்படியென்றால்...
    "நல்லது என்று நன்கு தெரிந்தாலும், எனக்கு பிடிக்காவிட்டால் விமர்சிப்பேன்" என்ற நிலை சரியா..?

    சரி இதை விடுங்கள்...

    இப்பதிவில்...

    விஞ்ஞானிகள் என்ற பெயரில் உலவும் நாத்திகர்கள் தங்கள் பொய்க்கதைகளுக்கு தோதாய் விஞ்ஞானத்தை வளைப்பது பற்றி உங்கள் விமர்சனம் என்னவோ..?

    சும்மா போனால் எப்படி..?

    பக்கம் பக்கமாய் பின்னூட்டம் எழுதும் பின்னூட்டவாதிதானே தாங்கள்..!

    இதுபற்றி ஏதாவது ரெண்டு வார்த்தை சொல்றதுக்கு என்ன சார்..?

    ReplyDelete
  19. Hi Aashiq,

    First I want to make it clear that I am not starting a debate. My debate with you on embryology is still active and I want you to complete that.

    You've just conclusively demonstrated that you don't actually know what his theories are. Have you actually read his book 'The Grand Design'?
    I bet 99% of people commenting here would have never heard of such a book. I am happy that at least Peer Mohammad read it cover to cover. Hats off to my friend Peer.

    Hawking is famous mainly for discovering that black holes emit radiation from just outside their event horizon and that, given enough time, they diminish in size and eventually disappear. This discovery is especially important because so far it is the only one to connect Einstein's theory of gravitation to quantum mechanics. Of course, you could argue that Hawking's theory is unimportant because it doesn't mention God. But by that standard, no scientific theory is important because no scientific theory mentions God. By definition, a theory that mentions God is not scientific.
    Professor Hawking doesnt have a personal opinion on heaven as such he has a considered opinion, this is always going to be attacked vehemently because you have no answer to a man of intelligence and learning who has no fear of your stone age god. The fact is that he wanted this backlash, if he didn't want it he wouldn't have made an announcement about what he believes, he would have just had his belief and that would be that.
    Scientists go by logic & proof, but religious people like you go by belief only. Unfortunately Ego of religious people is more and that leads to hate.
    Science concerns itself with how things happen, and religion concerns itself with why things happen.
    Saying religion disproves science is like saying the rules of grammar and punctuation disprove calculus. Religious people like you are all really insecure in the beliefs. And when a genius like Hawking says Heaven is a fairy tale it only brings your insecurities to the surface. Unless you can offer alternate theory and facts that can undermine his work in front of science community,he can say anything that he wants. That's how it works,one big pompous nerd game. Prove it that he's wrong, of course for that,you have to show him God him/herself.
    The fear of Allah is the beginning of wisdom. Ignorance is bliss, enjoy.
    Hating scientists just because reality doesn't agree with your silly beliefs is childish.
    Why only those who believe in stuff like global floods, talking snakes, angels, demons, jinns, moon splitting, and miracles hate scientists and their ideas?

    Thank You,
    Lord Voldemort.

    ReplyDelete
  20. சகோதரர் காதர் மைதீன்,

    வ அலைக்கும் ஸலாம்,

    ///அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்ட இந்த ரமழானில் பிரார்திப்போம்.///

    நிச்சயமாக சகோதரர்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  21. சகோதரர் பாஸித்,

    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///ஆனாலும் அவங்க விடா முயற்சி என்னை புல்லரிக்க வைக்கிறது///

    நம்பிக்கைய காப்பாற்றி ஆகணுமே...

    தங்களின் வருகைக்கும், துவாவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி

    ReplyDelete
  22. சகோதரர் ஸ்டாலின்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய முகமனுக்கு நன்றி...

    மிக அழகிய தகவலை கொடுத்திருக்கிண்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ்...மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி...

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரர்..

    ReplyDelete
  23. சகோதரர் சதாம்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நம் அனைவருக்கும் இந்த பெருநாள் இஸ்லாம் காட்டித்தந்த வழியில் அழகிய நாளாக அமைய என்னுடைய துவாக்கள்...

    ReplyDelete
  24. வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    ///பதில் பதிவுக்கு ஒரு நல்ல பலமான பதிலடி பதிவு சகோ.ஆஷிக் அஹமத். வாழ்த்துக்கள் + நன்றிகள்///

    அல்ஹம்துலில்லாஹ்..ஊக்கத்திற்கு நன்றி சகோதரர்....

    இந்த பதிவுக்கு எதிரா ஒரு பதிவுன்னு ஒருவர் பதிவு போட்டிருக்கார். அவர நினைத்தா பரிதாபம் தான் வருது.

    நான் பதிவில் சொல்ல வந்த விசயம் ரொம்ப எளிமையானது.

    1. M-Theory நிரூபிக்கபடாதாது..இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது. இப்படியான கோட்பாட்டை வைத்துக்கொண்டு இறைவன் தேவை இல்லை என்று சொல்வது அறிவியல் உலகில் எதிர் விமர்சனத்தை உருவாக்கி உள்ளது.

    2. மேலே கூறிய கருத்தை நானே சொல்லாமல், சில பிரபல தளங்களில் வந்த கட்டுரைகள் மூலம் கூறினேன். பாரம்பரிமிக்க நிருவனங்களில் வந்த கட்டுரைகள் என்பதாலேயே அவை முக்கியத்துவம் பெறுகின்றன.

    3. சரி, அந்த தளங்களில் எழுதிய ஆய்வாளர்கள் உங்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்றால் நான் வேறு நிறைய reference கொடுத்தேனே, அதிலும் இந்த புத்தகம்/கோட்பாடு வேறு ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டிருக்கின்றதே??.

    4. நம்பிக்கை சார்ந்து அறிவியல் செல்கின்றது. இதையும் நானே சொல்லவில்லை. ஆய்வாளர்கள் சொன்னதை தான் சொன்னேன்.

    ஆக, என்னுடைய கருத்து தெளிவானது, எளிமையானது.

    இதற்கு பதில் என்று சொல்லி, குழப்பி...அவரும் நாத்திகர் தான்..இவரும் நாத்திகர் தான்...அவர் இந்த கோட்பாட்டை கடுமையா விமர்சிக்கின்றவர்...etc etc என்று என்னென்லாமோ சொல்லி கடைசியில் என்னுடைய பதிவின் மையத்தை கண்டுக்காமலேயே போய் விட்டார்....

    விடுவோம்...இது என்ன நமக்கு புதுசா என்ன...

    ///இவர்களுக்கும் இந்த தத்துபித்து கும்பலை நம்பும் நாத்திக தமிழ் பதிவர்களுக்கும் ஏக இறைவன் நேர்வழி காட்ட வேண்டுவோம்..!///

    ஆமீன். ..

    ///வேறென்னத்த சொல்ல நான்..!///

    நாம அவ்வளவுதான் சொல்ல முடியும்...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  25. சகோதரர் Lord Voldemort,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    இந்த பதிவின் மையக்கருத்துக்கள் எதுவும் என்னுடைய பார்வையில் எழுதப்பட்டவை அல்ல. விஞ்ஞானிகளால் மதிக்கப்படும் பாரம்பரியமிக்க தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை அவை.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  26. /நம்பிக்கை சார்ந்து அறிவியல் செல்கின்றது/

    வாழ்க வளமுடன்!!!!!!!!!

    1.நம்பிக்கை சார்ந்து அல்ல பெரு விரிவாக்க கொள்கை சில சான்றுகளை மெய்ப்பிக்க முடியாத்தால் வேறு கொள்கைக்கு அவ்சியம் ஏற்படுகின்றது.
    இதையும் சொல்லுங்கள்.

    2.அந்த சான்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணமே நடக்கும் வாய்ப்புள்ள ,ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட இயற்கை விதிகளுக்கு முரண்படாமல் மாற்றுக் கொளகை முன் வைக்கப் படுகின்ற‌து.

    3.இதில் எம் தியரி,இன்ஃப்லேஷன் தியரி,குவாண்டம் ஃபீல்ட் தியரி,பல் பிரபஞ்ச கொள்கை போன்ற்வை போட்டியில் உள்ள்ன.இந்த அனித்து தியரிகளை பயன் படுத்தி இயற்பியல் விதிகள் மூலமே கடவுள்கள் இதை செய்தனர் என்று கூறாமலே விளக்க் முடியும்.இதில் ஒன்று பெரு வெடிப்பிற்கு மேலனதாக் ஏற்றுக் கொள்ளப் படலாம்.

    4. இதில் பீட்டர் வொய்ட் மட்டுமே குவாண்டம் ஃபீல்ட் தியரி கணித மேதை.
    ஜான் ஹோர்கன் ஒரு பத்திரிக்கையாளர்.

    நன்றி.

    ReplyDelete
  27. சகோதரர் சார்வாகன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //நம்பிக்கை சார்ந்து அல்ல///

    ப்ளீஸ்...இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. என்னுடைய கருத்துக்கள் தெளிவாக பதிவிலேயே உள்ளன. எப்படி என்றால்

    ///சமீபத்தில் ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் என்னை தொடர்புக்கொண்டிருந்தார். நாங்கள் M-Theory குறித்தும் அதனுடைய பிரச்சனைகள் குறித்தும் பேசினோம். மத நம்பிக்கையாளர்களை போல, இயற்பியலாளர்களும் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுபது குறித்து என்னிடம் கருத்து கேட்டார் அவர். நான் வழக்கம்போல கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டேன். ஆனால், பிற்பாடு இதுக்குறித்து சிந்திக்கையில், இதனை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். இங்கு நிலவும் போலியான அறிவியலும், அதனை இந்த புத்தகம் ஊக்கப்படுத்துவதும், மதங்கள் கூறும் உலக செயலாக்கத்திற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல - (extract from the original quote of) Peter Woit, Columbia University.///// ------- இப்படி

    ///ஜான் ஹோர்கன் ஒரு பத்திரிக்கையாளர்.///

    அதனால்???..அவருடைய கட்டுரை scientific Amaerican-இல் வந்ததாலேயே இங்கே பதிவில் வந்துள்ளது. எதற்காக அனுமதித்தார்கள்??

    அவர் யார் என்று ஆராய்வதை காட்டிலும் அவருடைய கருத்தை விமர்சிப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும். அவருடைய கருத்தை படித்து விட்டே தளத்தில் வர அனுமதித்திருப்பார்கள் அந்த ஆய்விதலின் எடிட்டர்கள் என்று நம்புகின்றேன். இல்லை நீங்கள் இப்படி தான் வாதிடுவீர்கள் என்றால், இதே அளவுகோலை நாளை நானும் உங்களிடம் பயன்படுத்துகின்றேன்.

    ஆக சகோதரர், ப்ளீஸ் உங்கள் நேரத்தை (கூடவே என்னுடைய நேரத்தையும்) வீணாக்க வேண்டாமே..பதிவு தெளிவாகவே உள்ளது...இதில் வாதிடுவதற்கு ஒன்றுமில்லை...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  28. Lord Voldemort has left a new comment on your post "ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?":

    Hi Aashiq,

    It's kind a funny with your articles. LMAO.

    \\நான் பதிவில் சொல்ல வந்த விசயம் ரொம்ப எளிமையானது\\
    “I think I can safely say that nobody understands Quantum Mechanics” Richard Feynman (The Nobel Prize in Physics 1965)
    Nobody can explain Theoritical Physics in simple language. Why are you cheating the audience with wrong notions and contexts?
    I always insist that if you want to solve an algebraic equation it is imperative that you learn algerbra first.... if you want to learn french literature it is imperative to learn french first... is it not a fair thing to do?
    Just copy-paste from book critiques and non reputed minor scientific communities will not do any good. Try to get some education on contemprory physics.

    Let me teach you some SCIENCE and M-Theory.

    The most elegant and most simplest theory to explain everything including the Bigbang is the M-Theory. M-Theory believes that our universe is just one of the infinite membranes contained in the 11th dimension. And because of these, multiverse exist or parallel universe. M-Theory believes that these floating membranes (our universe) are like waves in the ocean, that when smashed with each other will not necessarily collide with each other but will co-exist in the same space, independent of each other. Bigbang was the most nitpicking job to prove among theoretical physicist, but with the help of M-Theory they somehow did come up with a simple yet astonishing explanation, that bigbang was caused by the intersecting membranes contained inside the 11th dimension. They have somehow unfold the mystery of the beginning of time- w/c is bigbang...But come to think of it, if there is already membranes existing long before the bigbang, shouldn't it mean to say that there is time before bigbang, and another problem will cause headaches to these theorist...where, when, why and how do these membranes come into existence? It is science and scientists duty to get rid of these hinderences and not the science deniers like Aashiq's.
    M-theory explains this (Singularity) before the big bang came into existence (with the help of quantum mechanics,string), so fundies like Aashiq can't say 'goddidit'.lol. M-Theory/String theory has it's basis entirely in mathematics. I agree that it's PHYSICAL claims are not plausibly testable at this time. That is why you get the quote from theoretical physicists that it is 'either the theory of everything or the theory of nothing'.
    So, until M-theory produces some testable predictions which are confirmed to a high precision, it will not be accepted. Everybody in science community knew about this. M-theory may seem outlandish, and may be currently untestable, but it is still a "naturalistic" explanation. I don't see any theoritical physists denying this notion fo M-theory.
    If anyone agree your post as true, then it is till the time some other theory is there to replace it and that theory is not your GOD but it would be another scientific theory alone.

    Take this as a serious advice from Lord Voldemort.
    \\And when a genius like Hawking says Heaven is a fairy tale it only brings your insecurities to the surface. Unless you can offer alternate theory and facts that can undermine his work in front of science community,he can say anything that he wants. That's how it works,one big pompous nerd game. Prove it that he's wrong, of course for that,you have to show him God him/herself.\\

    Note: I am still waiting for your reply to prove Embryology in quran on http://ethirkkural.blogspot.com/2011/06/blog-post_13.html#comment-form

    Thank You Science Deniers,
    Lord Voldemort.

    Publish
    Delete
    Mark as spam

    ReplyDelete
  29. Dear Brother Lord Voldemort,

    Assalaamu Alaikum,

    Kindly relax...

    I didn't see any valid point in wasting your energy by 'typing' long comments. I already made everything very clear in the article (and in the last comment). The central theme of the article is not my point of view. They are taken from websites of most respected institutions.

    In case if you forgot what is the central theme, let me remind u again.

    'Hawking (and more other scientists also, according to woit) acted upon his faith. The point he has in his side is untestable and have to go a long way. He used such a dubious weapon to back up his points..What he tried to promote in the book is pseudo-science'

    Thats it. All the points stated above are taken from most respected institutions (I have given only three, More critics can be seen from the references i have given). So, this is just a article showing the other point of view. If you want to differ that depends on u.

    I don't see anything to discuss on this issue until otherwise u try to prove ur faith by using science.

    As far as the link you have given, the answer is there in that link itself. Anybody can refer to it...

    thanks and take care...

    Your brother,
    Aashiq Ahamed A
    kill atheism using Islam...

    ReplyDelete
  30. Hi Aashiq,

    Thanks for your diligent response.
    My point is why are you misguiding your audience with half baked science. Instead of critizising scientists and their ideas, educate your audience with real science.
    I insist you to go through the subject and pursue some knowledge before arriving to a biased conclusion on par to your God.
    Copy-pasting from book critiques is not fair to deal with a scientists and scientists are least bothered to those critiques.
    All I want from you people is to bring a alternative to Hawking and prove him wrong. As simple as it sounds.
    Take the challenge and work out. Don't waste your time with words, prove it by actions.(After all you got the revelation from God with all science stuff)lol.

    \\As far as the link you have given, the answer is there in that link itself. Anybody can refer to it...\\
    I didn't see any scientific proof to Quranic Embryology. One big issue with You:
    What the word 'evidence' actually means.:)
    Don't get yourself confused with Possible with Probable or Causation with Correlation.
    Act bold and reply to embryology comments. Don't hide in blame excuses and refrain from explanations.

    Thank You Science Deniers,
    Lord Voldemort.

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ ஆஷிக் தங்களுடைய பதிவுகளில் அதற்கேற்ற குர்ஆன் ஹதிஸ் ஆதாரங்கைளப் போட்டால் மிக நன்றாக இருக்கும் முயற்ச்சி செய்யுங்கள் இனஷா அல்லாஹ்
    abdulhakkim
    அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோ ஆஷிக் தங்களுடைய பதிவுகளில் அதற்கேற்ற குர்ஆன் ஹதிஸ் ஆதாரங்கைளப் போட்டால் மிக நன்றாக இருக்கும் முயற்ச்சி செய்யுங்கள் இனஷா அல்லாஹ்
    abdulhakkim

    ReplyDelete
  32. விதண்டாவாத நாத்திகமும் வேண்டாம். மூடத்தனமான ஆத்திக நம்பிக்கைகளும் வேண்டாம். பகுத்தறிந்த நிதர்ச்னமான உண்மைகளே தேவை. நடுநிலையான பகுத்தாய்விற்கு நன்றி

    ReplyDelete
  33. சகோ அஸிக்
    இங்கு உங்களை குழப்புவதுத்
    லார்ட் வோல்ட்மர்ட் என்ற தமிழன்.இந்த பெயர் ஹாரி பாட்ட கதையில் வரும் மந்திரவாதியின் பெயர்.இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
    ஹாரி பாட்டர்

    ReplyDelete
  34. வ அலைக்கும் சலாம் சகோதரர் அப்துல் ஹகீம்,

    ///சகோ ஆஷிக் தங்களுடைய பதிவுகளில் அதற்கேற்ற குர்ஆன் ஹதிஸ் ஆதாரங்கைளப் போட்டால் மிக நன்றாக இருக்கும் முயற்ச்சி செய்யுங்கள்///

    சகோதரர், என்னுடைய அனைத்து பதிவுகளையும் தாங்கள் பார்த்திருந்தால், தேவையான இடத்தில் குர்ஆன், நபிமொழிகளை சேர்த்திருப்பேன் என்பஹ்டு புலப்படும். தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி..ஜசாக்கல்லாஹு க்ஹைர்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  35. சகோதரர் அம்பலத்தார்,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    ///விதண்டாவாத நாத்திகமும் வேண்டாம். மூடத்தனமான ஆத்திக நம்பிக்கைகளும் வேண்டாம். பகுத்தறிந்த நிதர்ச்னமான உண்மைகளே தேவை.///

    அதிரடியாக சொன்னீர்கள்.

    ////நடுநிலையான பகுத்தாய்விற்கு நன்றி////

    புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்,

    ReplyDelete
  36. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ///இங்கு உங்களை குழப்புவதுத்///

    அவர் நம்மை குழப்பவில்லை. இறைவன் நாடினாலன்றி அது முடியாது. அவர் தன்னைத்தானே குழப்பிக்கொண்டு, தனக்கே துரோகம் செய்துக்கொண்டு இருக்கின்றார். ஆதாரம் வேண்டுமா, இந்த பதிவில் மேலே உள்ள அவருடைய கமெண்ட்டுகளையும், இங்கேயும் பாருங்கள்

    http://www.ethirkkural.com/2011/06/blog-post_13.html


    ///லார்ட் வோல்ட்மர்ட் என்ற தமிழன்.இந்த பெயர் ஹாரி பாட்ட கதையில் வரும் மந்திரவாதியின் பெயர்.//

    இந்த சகோதரரை எனக்கு தெரியும். இவர் நம் சகோதரர் ஒருவரின் கல்லூரி தோழர்.

    ///இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.//

    பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும். நான் அவருடைய கருத்தை மட்டுமே பார்க்கின்றேன். அவருடைய தனிமனித தாக்குதல்களை (வழக்கம்போல) சட்டை செய்வதில்லை. அதுபோல இவர்களிடம் எப்படி அனுகவேண்டும் என்பதை அறிந்தே இருக்கின்றேன் (அல்ஹம்துலில்லாஹ்). அந்த அணுகுமுறையை தாங்கள் மேலே மேலே நான் கொடுத்துள்ள லிங்கில் பார்க்கலாம்.

    தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பர்கள் இவர்கள். இவர்களிடம் பொறுமையாக இஸ்லாம் காட்டிய வழிமுறையுடன் அணுகுவதே சிறந்தது.

    தங்களுடைய வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி சகோதரர்...

    ReplyDelete
  37. Lord Voldemort to me
    show details 5:21 PM (11 minutes ago)
    Lord Voldemort has left a new comment on your post "ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?":

    Hi Anonymous (Harry Potter)& Aashiq: Thanks for the acknowledgement.

    No reply from anybody in this blog.

    http://ethirkkural.blogspot.com/2011/03/vs.html

    http://ethirkkural.blogspot.com/2011/08/bye-bye-birdie.html

    http://ethirkkural.blogspot.com/2011/06/blog-post_13.html#comment-form

    and this post.

    Thank You,
    Lord Voldemort

    Publish
    Delete
    Mark as spam

    ReplyDelete
  38. காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?
    ஜடாயு
    http://www.tamilhindu.com/2011/08/kaaba-is-shiva-temple-analysis/#comments

    இது உண்மையா?

    ReplyDelete
  39. Dear brother Lord Voldemort,

    Assalamu Alaikum,

    ====
    No reply from anybody in this blog.

    http://ethirkkural.blogspot.com/2011/03/vs.html

    http://ethirkkural.blogspot.com/2011/08/bye-bye-birdie.html

    http://ethirkkural.blogspot.com/2011/06/blog-post_13.html#comment-form

    and this post.
    =====

    what a joke.....what a joke...can't able to control my laughter.

    Kindly go ahead with your childish claims brother...

    On a serious note:

    I least bothered about (or taken you seriously) discussing with you after what happened in http://ethirkkural.blogspot.com/2011/06/blog-post_13.html#comment-form and i made my position very clear in that discussion.

    I didn't even enter into embryology discussion because you didn't allow me to do it (and still i am waiting for ur honest answer fro the last comment i made there). When no discussion happened on the subject of embryology and if you are going to claim as if i didn't answer, i don't have anything to say other than pitying you...

    Fine, to be very frank, you lost all my respect because of the way you debated there by making dishonest claims and failing to prove your claims (you showed atheism's moral values too).

    I am just a ordinary person who works for his creator and family. You wasted lot of my time just to find out that your claims are nothing but pure lies. I believe i am not deserved for this. Working a lot to answer you just to find out u are making absolute lies...what a heck...

    So brother if possible provide me a reply for the above given link.

    Until then i am not going to take you seriously or going to enter into any kind of discussion in other posts (until otherwise it is very necessary) as i done so-far.

    And i hope you will not make this as my last comment to you... And i am not going to waste my time anymore.

    thank you,

    Your brother,
    Aashiq Ahamed A
    A Atheist got killed...

    ReplyDelete
  40. அன்பு சகோதரர் ஹிந்து,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

    ====
    காபா முன்பு சிவாலயமாக இருந்ததா?
    ஜடாயு
    http://www.tamilhindu.com/2011/08/kaaba-is-shiva-temple-analysis/#comments

    இது உண்மையா?
    =====

    fine....இதற்கான பதில் அந்த தளத்திலேயே உள்ளதே சகோதரர்...எப்படியென்றால்

    //காபா ஒரு சிவாலயமாகத் தான் இருந்தது என்று அறுதியிட்டு இப்போதும் என்னால் கூறமுடியாது தான். ஆனால் சான்றுகளின் அடிப்படையில் பார்த்தால், காபா ஒரு புகழ்பெற்ற ஹிந்து புனிதத் தலமாக இருந்தது என்ற முடிபை ஒரேயடியாகத் தள்ளி விடமுடியாது. இந்த ஆய்வுத் தகவல்கள் எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடப் படட்டும். இந்தக் கட்டுரையில் அவற்றை முன்வைக்கிறேன்.// --- இப்படி

    மற்றும்

    ///எப்படியானாலும், காபாவை முன்வைத்து நான் எழுதிய இந்த விஷயங்கள் இத்துறையில் உள்ள வரலாற்றாசிரியர்களால் மேலும் தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப் படவேண்டும் என்பதில் ஐயமில்லை./// - இப்படி

    ஆக, அந்த கட்டுரையே இது உண்மையென்று சொல்லவில்லை....

    அப்படியே அது உண்மையாக இருந்தாலும் முஸ்லிம்கள் இது குறித்து ஏன் அலட்டிக்கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை....

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  41. Lord Voldemort has left a new comment on your post "உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...":

    Hi,

    \\what a joke.....what a joke...can't able to control my laughter.
    Kindly go ahead with your childish claims brother...\\

    Cut the SARCASM and act BOLD.

    \\and still i am waiting for ur honest answer fro the last comment i made there).\\

    I think I made a honest answer by giving you EVIDENCE to say Keith Moore is awarded from his OWN ORGANIZATIONS.
    You did not made any attempt to refute my claim. Please refer to my previous comment section.

    \\dishonest claims and failing to prove your claims\\

    Please point out the DISHONEST CLAIMS I made without proper evidence in this post.
    If you are right, I will correct them publicly.

    \\You wasted lot of my time just to find out that your claims are nothing but pure lies.\\

    Please point out my LIES.


    \\And i hope you will not make this as my last comment to you... And i am not going to waste my time anymore. \\

    A typical muslim who proves his in'competence by blank excuses.

    I need your reply to this.

    Thank You
    Lord Voldemort.

    Publish
    Delete
    Mark as spam

    ReplyDelete
  42. Lord Voldemort,

    Assalaamu Alaikum,

    ///I think I made a honest answer by giving you EVIDENCE to say Keith Moore is awarded from his OWN ORGANIZATIONS.///

    YOU LIAR.....you said he is a founding member and that is y he got the award. i proved he is not the founding member. then u shifted ur point to say he is a president that is y he got the award. what a dishonest person u are....I never seen this kind of stupid attitude. u don't even have the mentality to correct the mistake.

    Go and see ur lies i listed there (eg. even a dog can become a member, he is not a scientist, he claimed he is a member of those organisations, today thumma means then, tomorrow it means morever etc)

    ///I need your reply to this.///

    yeah..i will do for the last time...YOU ARE A LIAR....thanks for the visit. no more comments from my side. no more wastage of time

    thanks

    your brother,
    aashiq ahamed a
    a atheist got killed, yet again..

    ReplyDelete
  43. Hi Aashiq,

    I know how religious people try to escape the argument by inventing irony in the discussions.
    You are no different from those people. Read the meaning for EMPIRICAL EVIDENCE. Did you provide any one to back your claims?

    \\YOU LIAR.....you said he is a founding member and that is y he got the award. i proved he is not the founding member. then u shifted ur point to say he is a president that is y he got the award. what a dishonest person u are....I never seen this kind of stupid attitude. u don't even have the mentality to correct the mistake. \\

    I know I am not a LIAR.
    I said he was awarded from a organization where he is the founding member.
    Didn't he got award from AACA as a Distinguished Educator.

    I said he got award from his own organization. (President)
    Didn't he got award from Canadian Association of Anatomists CAA.

    I made a mistake by stating that HE IS THE FOUNDING MEMBER of CAA. I admit the mistake but my point is still valid.
    He got awards from his own organization.

    If you think that I made a mistake of associating him with CAA as founding member, I apoligise and admit my mistake.
    But can you prove me that "HE DID NOT RECIEVE AWARD FROM HIS OWN ORGANIZATIONS"
    NAAAAAAAAAAAAAAAAAAYYYYYYYYYYYYYYY

    \\Go and see ur lies i listed there (eg. even a dog can become a member, he is not a scientist, he claimed he is a member of those organisations, today thumma means then, tomorrow it means morever etc)\\

    Even a dog can become member--------------I apologise for wrong word but I say anybody with the credential of a prof.,author can become a member.
    He is not a scientist----------------------------True.
    He claimed he is a member of those organizations----------True.
    Thumma (then,moreover and etc.)-------------------------True.
    These are not lies Aashiq.

    I will tell what are called as lies.

    1. Adnan lied to PZ by quoting wrong verse with wrong interpretation.
    2. Adnan made a video to justify his lie with PZ and again used a wrong word Thumma. He should have explained Fa instead of Thumma in that video.
    3. Almost all Islamic Dawah sites associated Keith Moore with associations never exists.
    4. Claiming embryology in Quran is scientific.

    I ask you now,
    Do you have guts to admit your mistakes?
    Please point out mine, I will admit if i am wrong. I am not going to lose anything but I will prove Quran is not at all scientific.
    All you need is an OPEN MIND.
    You prove me that Quran is scienific and I promise (I Mean it) I will convert to your religion.
    Do you have the same confidence to promise me?

    Thank You,
    Lord Voldemort

    ReplyDelete
  44. மதிப்பிற்குறிய லார்ட் வல்டர்மார்ட் அவர்களே!
    தமிழ் தெரியாமல் எப்படி பதிவு படித்தீர்?.பதில் ஆங்கிலத்தில் சகோ சொன்னாலும் புரிய மாட்டேன் என்கிறீர்.லார்ட் லபக்தாஸ் என்று பெயரை மாற்றி வேற வேலை இருந்தா பாரும்
    ஹாரி பாட்டர்

    ReplyDelete
  45. Lord Voldemort to me
    show details 10:27 PM (3 minutes ago)
    Lord Voldemort has left a new comment on your post "ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?":

    Hi Anonymous,

    I am not தமிழன் but I can read Tamil.
    Your brother did not answer anything with evidence.
    He is criticizing the tone of the writing without attacking the substance of the argument. He is hiding behind the blank excuses and trying to prove a anatomist as a scientist and skipping to prove the embryology in Quran.(post_13)
    If you are competent enough, I ask you to answer my questions. Don't pretend smart by writing something humorous which is not at all humour.

    Thank You,
    Lord Voldemort.

    Publish
    Delete
    Mark as spam

    Moderate comments for this blog.

    ReplyDelete
  46. http://www.tamilhindu.com/2011/08/why_ambedkar_converted_to_buddhism-15/
    [பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்
    ________
    படியுங்கள் தமிழ் இந்து.மனித குலத்திற்கு தீங்கு விளைக்கும் ஆபிராஹாமிய மதங்களை விட்டு விலகுங்கள்

    தமிழ் இந்து

    ReplyDelete
  47. சகோதரர் தமிழ் ஹிந்து,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -------------
    http://www.tamilhindu.com/2011/08/why_ambedkar_converted_to_buddhism-15/
    [பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்
    -------------

    "இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது"

    -----
    படியுங்கள் தமிழ் இந்து.
    -------

    படித்துக்கொண்டு தான் இருக்கின்றேன். என்னுடைய நம்பிக்கையை அதிகரிக்கும் தளங்களில் தமிழ் ஹிந்துவும் ஒன்று. அல்ஹம்துலில்லாஹ். எனினும் தங்களுடைய அழைப்பிற்கு நன்றி.

    -------
    மனித குலத்திற்கு தீங்கு விளைக்கும் ஆபிராஹாமிய மதங்களை விட்டு விலகுங்கள்
    -------

    ???????.....

    எங்களை விலக சொல்லும் தாங்கள் நிச்சயம் இஸ்லாத்தை விட சிறந்த கொள்கையில்/மார்க்கத்தில் தான் இருக்க வேண்டும். தங்களின் கொள்கை/மார்க்கம் என்னவென்று சொல்லி அதனை நீங்கள் பின்பற்றும் புத்தகங்களின் வாயிலாக விளக்கினால்/லிங்க் கொடுத்தால் அறிந்துக்கொள்ள ஆர்வமுடன் இருக்கின்றேன்.

    அப்புறம் சகோதரர், உங்களுடைய இதே போன்ற மற்றொரு கமெண்டை நான் அனுமதிக்கவில்லை. ஏனென்றால் இப்படியே ஒரு ஒரு லின்க்க்காக கொடுத்துக்கொண்டு என்னுடைய நேரத்தை வீணாக்குவீர்களோ என்ற அச்சம் தான் காரணம்.

    உங்களுக்கு நேர்வழி காட்ட இறைவன் போதுமானவன்.

    தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் அமைதியும், மகிழ்ச்சியும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  48. வாழ்க வளமுடம் சகோ!!!!!!
    ____________

    1. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42
    _____________

    நண்பர் ஆஸிக் அகமதின் பதிவுகளை மிகவும் சிலாகித்து சில நண்பர்கள் கூறுவதால் அவர் என்ன பதிவுகளில் கூறியுள்ளார் என்பத்னை பார்க்க போகிறோம்.
    இவருடைய இந்த பதிவை எடுத்துக் கொள்வோம்.

    Evolution St(he)ory > Harry Potter Stories – II

    http://www.ethirkkural.com/2010/05/evolution-stheory-harry-potter-stories_29.html
    என்ன கூறுகிறார்?
    //1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, “பரிணாமம் என்றால் என்ன”வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால், //
    பரிணாம்த்தின் மிகப் பெரிய ஆதரவு தளம் Talk Origins.org!!!!!!!!!!!!

    Joke of the century!!!!!!!!!!!!

    இது தவறு. இது கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்களால் நடுநிலையான தளம் போன்ற முகமூடியுடன் நட்த்தப் படுகின்றது.

    http://en.wikipedia.org/wiki/TalkOrigins_Archive
    The TalkOrigins Archive is a website that presents mainstream science perspectives on the antievolution claims of young-earth, old-earth, and “intelligent design” creationists. With sections on evolution, creationism, and hominid evolution, the web site provides broad coverage of evolutionary biology and the socio-political antievolution movement.
    http://www.talkorigins.org/foundation/
    _____________
    கொஞ்சம் இணையத்தில் எழுதும் போது பல்முறை யோசித்து சரி பார்த்து எழுதவும்.
    ஆக்வே குரான் 2.42ஐ உண்மையாக் பின்பற்ற வேண்டுகிறேன்!!!!!!!!!!

    ReplyDelete
  49. சகோதரர் சார்வாகன்,
    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஏங்க என்னுடைய நேரத்தை வீனாக்குறீங்க....உங்ககிட்ட ஏதாவது கேட்டா அத அங்கேய வச்சுக்குங்க சகோதரர். எதுக்கு இங்கே வந்து அத பேஸ்ட் பண்ணுறீங்க...

    சரி வந்தது வந்துடீங்க..கேட்டுட்டு போங்க...

    talkorigins ஒரு die-hard evolutionist site. எனக்கு தெரிந்து இதுல யாருக்குமே இதுவரை குழப்பம் வந்தது கிடையாது. ஆனா நீங்க என்ன சொல்றீங்க,

    ///இது தவறு. இது கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்களால் நடுநிலையான தளம் போன்ற முகமூடியுடன் நட்த்தப் படுகின்றது.///

    what a crap.... இதுக்கு என்ன ஆதாரம்??

    நீங்க இப்படி சொன்னதுக்கு பரிணாம ஆதரவாளர்கள் உங்களை கோபித்து கொள்ளாமல் இருந்தால் சரி.

    நீங்க கொடுத்த விக்கிபீடியா லிங்க்க படிச்சீங்களா இல்லையா..அதுல எங்கேயுமே நீங்க மேல சொன்ன மாதிரி சொல்லப்படல. ஆனா அது என்ன சொல்லுதுன்னா...

    ////Talkorigins.org has gained many awards and achieved substantial recognition.[3]
    In August 2002 Scientific American recognized Talkorigins.org for its "detailed discussions (some of which may be too sophisticated for casual readers) and bibliographies relating to virtually any objection to evolution that creationists might raise."[4]
    The webpages of the National Academy of Science, Smithsonian Institution,[5] Leakey Foundation,[6] the National Center for Science Education[7] and other organizations recommend Talkorigins.org.
    Biomednet gave the Archive four stars.[specify]
    The Archive is also referenced in college-level textbooks[8] and has had material from the archive incorporated into over 20 college or university courses//////////////////////

    இந்த தளம், கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்களால் நடத்தப்பட்டால் ஏன் சகோதரர் Scientific American, NAS, NCSE போன்ற பரிணாம ஜாம்பவான்கள் இந்த தளத்த recommend பண்ண போறாங்க???

    =======
    கொஞ்சம் இணையத்தில் எழுதும் போது பல்முறை யோசித்து சரி பார்த்து எழுதவும்
    =====

    உங்கள நோக்கி சொல்லி கொள்கின்றீர்களா?

    ======
    ஆக்வே குரான் 2.42ஐ உண்மையாக் பின்பற்ற வேண்டுகிறேன்!!!!!!!!!!
    ======

    சரியாதானே பின்பற்றுகின்றோம்..இதில் என்ன குழப்பம். வேணும்னா, என்னோட பரிணாம பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டு, அதுல உள்ள reference-களை பார்த்துவிட்டு நான் பொய் சொல்றேன் என்று நிரூபியுங்கலேன் பார்ப்போம்.

    இப்ப கூட பாருங்க. நீங்க தான் பொய்ய கொண்டு வந்து தெளித்துவிட்டு போயிருக்கீங்க..

    அதெல்லாம் சரி, நீங்க இங்கே போட்ட கமெண்ட்ட எங்கே போய் உளறி கொட்டிநீங்க..இருங்க நானே தேடி கண்டுபிடித்து வரேன்...

    மேலே சொன்னத திருப்பி சொல்றேன். உங்க கிட்ட கேட்டா உங்களோட நிறுத்துங்க. இங்கே வந்து பேஸ்ட் பண்ணி என்னோட நேரத்த வீனாக்காதிங்க. ப்ளீஸ்..

    உங்களோட உளறலுக்கு பதில் சொல்ற அளவுக்கு எனக்கு நேரம் இல்ல.

    புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன்...

    உங்களுக்கு இறைவன் நேர்வழி காட்ட பிரார்த்திக்கும்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  50. சார்வாகன், என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தாங்கள் இதனை எங்கே உளறி கொட்டிநீர்கள் என்று லிங்க் கொடுக்கவும்

    ReplyDelete
  51. சார்வாகன்,

    சலாம்..

    கண்டுபிடிச்சுட்டேன்...கமெண்ட் போட்டுட்டேன்...

    ReplyDelete
  52. வணக்கம். ஸ்டீவன் ஹாகிங் ஒரு மகா அறிவாளி(வேடம்போட்ட முட்டாள்).. சரி அவரால் இதை http://news.bbc.co.uk/2/hi/8652837.stm விளக்க முடியுமா?.. இல்லை அவரால் இதுபோல இருக்க முடியுமா?.. இறைவன் அனைத்தையும் அனைவருக்கும் வைக்க மாட்டான்.. சரி ஜப்பானில் உள்ள அணு உலைகளை ஆராய்ந்து அவை இயற்க்கை சீற்றங்களால் எப்பொழுதும் அழியாது என்று தகுதி சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் புகுஷிமா அணு உலை கடந்த சுனாமியின்போது என்ன ஆயிற்று?.. தகுதி திறமை அறிந்து அளிப்பவன் இறைவன். அனைத்தையும் அறிந்தவன் இறைவன்.. அஹமத் உங்களின் கருத்து என்ன?..

    ReplyDelete
  53. அருமையான ஆக்கம் . இன்றுதான் படிக்கக் கிடைத்தது . பயனுள்ள உஷத் துணைகள் . தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  54. ஆசிக் அஹமத் ! வணக்கம் நண்பரே !
    உயரிய படைப்பாளி நம்மை படைத்தது , நம்மை பரிபாளிக்கிறது
    இது முற்றிலும் உண்மை !
    -------------------------------------------------------------------------------------------------
    ஒட்டு மொத்த இயங்கு விசையும் ,உயிரினங்கள் இயங்குவதற்கு
    ஏதுவாக உள்ளது . அதை அப்படியே மடை மாற்றி ஆன்மிகம் பல
    விழுமின்களை சேர்த்து , உயரிய தர்ம சிந்தனைகளை சொல்லி
    மனிதனால் ஏரப்படுத்தகூடிய ஒழுக்க விதிகளை சொல்லி
    எல்லையில்லா பெரும் சக்தி தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும்
    அல்லது , தான் அவதாரமாக தோன்றியதாகவும் மனிதத்தை ஏமாற்றி
    உள்ளது . ( பயன் பெரும்வகையில் இதை கணக்கு கூட்டினால் பல
    சமயம் , இவை மனிதத்திர்ற்கு பலனுள்ளதாக அமைந்துள்ளது )
    இறப்பிற்கு பின் என்ன வென்று தெரியாத ஒன்றை , வாழ்வின் நீட்சியை
    காட்டி எல்லா மதங்களும் - விடை தெரிந்ததுபோல் சொல்வது எந்த விதத்தில்
    நியாயம் ? நம்பிக்கை என்று வந்துவிட்டால் விவாதம் முற்று பெரும்
    அதற்க்கு நான் மதிப்பளிக்கிறேன் , இறையை நான் நம்புகிறேன் , அவனின்று ஒரு
    அணுவும் அசையாது அதற்க்கு மனித குணம் கிடையாது . வேதங்கள் மனிதனால் உற்பத்தியானவை என்று நம்புகிறேன் கற்பனை செய்யா முடியாத அப்பெரும் சக்தி , காலங்களை , மனிதர்களின் பெயரை
    ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு , ஒரு தனி மனிதருடன் பேசுவதோ ,
    இரு பெரும் கூட்டங்களுக்காக ( கிருஷ்ணன் ) போர்க்களங்களில் சண்டைஇடுவதோ
    என்னால் ஏட்ட்ருக்கொள்ள முடியவில்லை . வணக்க பொறுத்தத்துடன் வாழ்வதால்
    உடல் மனம் நிம்மதியடைகிறது அவை நிச்சயமாக வரவேர்க்ககூடியது.

    பெரியார் போல் கடவுள் மறுப்பும் கிடையாது , தெரியாத பதில் , தெரியாததுதான்
    அவர் இல்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. பரிணாமம் இருந்தால் என்ன ?
    பரிணாம வரிசையில் இறைவன் நம்மை உருவாக்கி இருக்கலாம் , பரிமாணமாக இல்லையென்றாலும்
    பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்திக்கு , தனி தனி உயிர்களை உருவாக்க வல்லமை
    உண்டு . இதில் நாத்தீகர்களும் , ஆத்தீகர்களும் போராடிக்கொள்வது வியப்பாக உள்ளது .
    ஒருவேளை பரிணாமம் நிரூபிக்கபட்டால் , அதற்க்குக்தகுந்தால் போல் வேதத்தில் உள்ள
    எதோ ஒரு வசனத்தை மக்கள் மேற்கோள் காட்டுவார்கள் அன்று நாம் இருக்கப்போவதில்லை.
    ஆத்தீகம் , நாத்தீகம் இரண்டுமே ஒரு விதமான நம்பிக்கை . உலகம் அழியும்வரை
    தொடரும் , இதுதான் எனது கருத்து .

    ReplyDelete
  55. https://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

    https://www.youtube.com/watch?v=SlE4TClniWw

    ஊழிற் பெருவலி யாதுள ?


    திட்டமிட்ட படைப்பு
    சி. ஜெயபாரதன், கனடா
    +++++++++++++++

    பிரபஞ்சக் காலவெளிக் குமிழி

    படைப்பாளியின்

    மாபெரும் நூலகம் !

    கடவுள் படிப்படி யாய்த் திட்டமிட்டு

    முடங்கும் கருங்குமிழி

    தானாய் எதுவும் தவழாது !

    வீணாய் இப்பேரண்டம்

    தோன்ற வில்லை !





    மூல வித்து

    ஒன்றி லிருந்து ஒன்று

    உருவாகிச் சீராகி வந்துள்ளது !

    இல்லாத ஒன்றி லிருந்து,

    எதுவும்

    எழாது, எழாது, எழாது !

    இயக்கும் சக்தி ஒன்று,

    இல்லாமல்,

    கட்டுப் படுத்தாமல்,

    திட்டமிடப் படாமல்

    எதுவும்

    கட்டப்பட வில்லை !





    பிரபஞ்சப் படைப் பனைத்தும்

    காரண–விளைவு

    நியதியில்

    சீரொழுங்கு இயக்கத்தில்

    நேரான மீளும் நிகழ்ச்சியில்

    வேராய்த் தொடர்பவை

    விழுது, கிளை விட்டு !

    தாறு மாறாகத்

    தாரணி உருவாக வில்லை !





    தேனெடுக்கும் தேனீக்கள்,

    அணி வகுக்கும் எறும்புகள்,

    கூடு கட்டும் தூக்கணாம் குருவி,

    ஈக்கள், ஈசல்கள்,

    காக்கை, கழுகு, பேசுங் கிளி

    நீந்தும் மீனினம்,

    ஊர்ந்திடும் இலைப்புழு,

    புழு மாறிப்

    பறக்கும் பட்டாம் பூச்சி,

    மரங்கள், காய் கனிகள்,

    மனிதம், விலங்கினம் யாவும்,

    உயிரியல்

    கணித விஞ்ஞானத்தில்

    திட்டமிடப் பட்டுத் தோன்றியவை.

    காலவெளி நூலகத்தில்

    கடவுள் படைத்திட்ட

    மனிதப் பிறவியே

    உன்னத

    மணி யந்திரம் !



    ++++++++++++++++++

    ReplyDelete
  56. “ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”

    கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)

    வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடிப் படைப்புகள், உயிரினங்கள் அகிலத்தில் வடிக்கப் பட்டு இயங்கி வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் மலர்மன்னன் சென்ற வாரம் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை. ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.

    அதாவது பிரபஞ்சம் உருவானதும், காலக்ஸி, பரிதி மண்டலங்கள், மற்றும் உயிரின, தாவர உட்பிறப்புப் தோற்றங்களும் ஒரு காரண-விளைவு நியதியைப் பின்பற்றிச், சுழலும் ஓர் தொடரியக் கத்தை முன்னிட்டு உண்டானவையே. இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது விஞ்ஞானிகளின் துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எந்த யுகத்தில் ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வியந்து நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளி மந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு சீராக, வகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன் என்று மொழிகிறார் ஐன்ஸ்டைன்.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கமும் இல்லை; முடிவுமில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்றாலும், கடவுள் படைத்தது என்றாலும் ஒன்றுதான்.

    ReplyDelete
  57. https://jayabarathan.wordpress.com/is-there-a-fate/

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். அதாவது பிரபஞ்சம் உருவானதும், காலக்ஸி, பரிதி மண்டலங்கள், மற்றும் உயிரின, தாவர உட்பிறப்புப் தோற்றங்களும் ஒரு காரண-விளைவு நியதியைப் பின்பற்றிச், சுழலும் ஓர் தொடரியக் கத்தை முன்னிட்டு உண்டானவையே. இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார். மெய்யாக அது விஞ்ஞானிகளின் துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாது உண்டானது எந்த யுகத்தில் ? எவற்றிலிருந்து எப்படிச் சேர்ந்து அந்தத் தாது விளைந்தது ? அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன. நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வியந்து நோக்குகிறார். அதன் விண்வெளியில் உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளி மந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே எழுதப் பட்டு சீராக, வகையாக அடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன் என்று மொழிகிறார் ஐன்ஸ்டைன்.

    ReplyDelete
  58. பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கமும் இல்லை; முடிவுமில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்றாலும், கடவுள் படைத்தது என்றாலும் ஒன்றுதான்.

    பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்கரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

    ReplyDelete
  59. இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை. தற்போதைய நவீனக் கணினி மேற் பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன. எலும்புக் கூடு போன்று ஹென்றி ஃபோர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ? ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலத்தைத் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது. கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ? சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?

    உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளை யாடல்கள் ! அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை. அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.

    ReplyDelete
  60. படைப்புக்கு ஓர் உதாரண மாடல் : கருப்பையில் உருவாகும் சிசுவுக்குத் தாய் காரணமாகிறாள். பிறந்த பிறகே சிசு தானாக விருத்தி அடைகிறது. அதுபோல் தானாக உருவாகும் பிரபஞ்சம் முதலில் ஒரு படைப்பாளியின் கைத்திறனால் தோன்றி உதயமானது.

    மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப் பாடுகளால் நிர்ணயம் ஆகிறது. ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது. விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார். கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது, இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம். அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.

    மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் ! ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் ! தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூற இயலாது. ஒரு தாயிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் டியென்ஏ 100% ஒருமையில் இருப்பதில்லை. அவையும் ஓரளவு வெவ்வேறாகத் தனித்துவம் கொண்டுள்ளன. ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன. மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை. கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே ! நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.

    மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து. பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான். கடவுளை அதன் படைப்புகளில் ஒன்றான புவி மனிதன் கண்ணால் காண முடியாது.

    எப்படி அதை விளக்குவது ?

    ReplyDelete
  61. உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. ஊர்ந்து செல்லும் இலைப்புழு எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

    300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

    மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ? வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடி அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.

    Monkey to Man

    குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? ஏன் இன்னும் குரங்குகள் வசிக்கின்றன ? ஏன் இப்போது குரங்குகளும், மானிடமும் தனித்தனியே பிறக்கின்றன ? ஐந்தறிவு மனிதக் குரங்கு எப்படி, எப்போது ஆறறிவு, ஏழறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

    100 ஆண்டுகட்கு முன்பு முதன்முதல் அமெரிக்க ஃபோர்டு அதிபர் ஆக்கிய பெட்டி மோட்டார் கார் எப்படிக் கூடாக இருந்தது ? இப்போது அது படிப்படியாக மேம்பட்டு 2015 இல் ஏரோ டைனாமிக் வடிவில், கணினி கண்காணித்து இயக்கும் நவீன மோட்டார் கார் எப்படி மாறி விட்டது !

    100 ஆண்டுக்கு முன்பு முதன்முதல் ரைட் சகோதரர் செய்த சைக்கிள் சக்கிர வானவூர்தி எப்படிப் படிப்படியாக மாறி ஜம்போ ஜெட் விமான மாகப் பறக்கிறது !

    குரங்கை முன்மாதிரியாக வைத்துக் கடவுள் படிப்படியாக மேம்படுத்தி, ஜிம்பான்சி மனிதக் குரங்கைப் படைத்தது. பிறகு மனிதக் குரங்கை மாதிரியாய் வைத்து, ஐந்தறிவுடன் ஆறாம் அறிவு, ஏழாம் அறிவும் சேர்த்து, கடவுள் மனிதப் பிறவியை உருவாக்கியது. தாய்மைப் பெண்ணே கடவுள் படைத்த இறுதி மனிதப் பிறவி.

    அதற்குப் பிறகு கடவுள் படைப்புத் தொழிலையே நிறுத்திக் கொண்டது !
    நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன ?

    இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

    +++++++++++++

    தகவல்:

    1. http://ogcwebb.hubpages.com/hub/WHAT-IS-DESTINY-SHOULD-WE-BELIEVE-IN-FATE-ARE-OUR-DOINGS-LEADING-US-TO-OUR-DESTINY-OR-WHAT-WE-DO-IS-AS-PER-OUR_1

    2. http://www.terradaily.com/reports/Earths_daily_rotation_period_encoded_in_an_atomic_level_protein_structure_999.html [June 28, 2015]

    +++++++++++++

    ReplyDelete
  62. உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை. உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து. ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது. ஊர்ந்து செல்லும் இலைப்புழு எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ? வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது. இப்படி செய்வது எது ? இது ஏன் நேர்கிறது ? இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ? சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ? மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

    300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

    மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ? வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடி அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.

    Monkey to Man

    குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ? நிகழ்வதில்லை ? ஏன் இன்னும் குரங்குகள் வசிக்கின்றன ? ஏன் இப்போது குரங்குகளும், மானிடமும் தனித்தனியே பிறக்கின்றன ? ஐந்தறிவு மனிதக் குரங்கு எப்படி, எப்போது ஆறறிவு, ஏழறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

    100 ஆண்டுகட்கு முன்பு முதன்முதல் அமெரிக்க ஃபோர்டு அதிபர் ஆக்கிய பெட்டி மோட்டார் கார் எப்படிக் கூடாக இருந்தது ? இப்போது அது படிப்படியாக மேம்பட்டு 2015 இல் ஏரோ டைனாமிக் வடிவில், கணினி கண்காணித்து இயக்கும் நவீன மோட்டார் கார் எப்படி மாறி விட்டது !

    100 ஆண்டுக்கு முன்பு முதன்முதல் ரைட் சகோதரர் செய்த சைக்கிள் சக்கிர வானவூர்தி எப்படிப் படிப்படியாக மாறி ஜம்போ ஜெட் விமான மாகப் பறக்கிறது !

    குரங்கை முன்மாதிரியாக வைத்துக் கடவுள் படிப்படியாக மேம்படுத்தி, ஜிம்பான்சி மனிதக் குரங்கைப் படைத்தது. பிறகு மனிதக் குரங்கை மாதிரியாய் வைத்து, ஐந்தறிவுடன் ஆறாம் அறிவு, ஏழாம் அறிவும் சேர்த்து, கடவுள் மனிதப் பிறவியை உருவாக்கியது. தாய்மைப் பெண்ணே கடவுள் படைத்த இறுதி மனிதப் பிறவி.

    அதற்குப் பிறகு கடவுள் படைப்புத் தொழிலையே நிறுத்திக் கொண்டது !
    நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும் பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?

    உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன ?

    இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

    +++++++++++++

    தகவல்:

    1. http://ogcwebb.hubpages.com/hub/WHAT-IS-DESTINY-SHOULD-WE-BELIEVE-IN-FATE-ARE-OUR-DOINGS-LEADING-US-TO-OUR-DESTINY-OR-WHAT-WE-DO-IS-AS-PER-OUR_1

    2. http://www.terradaily.com/reports/Earths_daily_rotation_period_encoded_in_an_atomic_level_protein_structure_999.html [June 28, 2015]

    +++++++++++++

    ReplyDelete