Monday, October 4, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - VI



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

   
கரைந்து போன பரிணாம ஆதாரங்கள் - II

குரங்கு -> நியாண்டர்தல் (Neandertals or Neanderthals) -> மனிதன்? 

இந்த தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். "நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றல்லவா படித்ததாக நினைவிருக்கின்றது, அவர்கள் நமக்கு முன்னோர்கள் இல்லையா, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.  

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் "நியாண்டர்தல் மனிதர்கள் அறிவில் மனிதர்களை விட குறைந்தவர்கள் என்று கூட கேள்விப்பபட்டிருக்கின்றோமே?" என்றும் கேட்கலாம். 

ஆம், நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எந்த அளவுக்கு என்றால், நியாண்டர்தல் மனிதர்கள் நமக்கு முன்னோர்கள் என்ற கூற்று போய் இப்போது இவர்களுக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர் என்று கூறும் அளவிற்கு....

தற்போதைய பரிணாம புரிதல் (அ) முன்னர் கருதப்பட்டது (ஆ) தற்போது கருதப்படுவது 

"குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்னும் ஏன் குரங்குகள் இருக்கின்றன?" என்று பரிணாமவியலாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினால், உடனே "உங்களுக்கு பரிணாமம் பற்றி தெரியவில்லை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மாறாக நமக்கும் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர்" என்று பதில் சொல்லுவார்களே, அதுபோலத்தான் இப்போது மனிதனிற்கும் நியாண்டர்தல் மனிதர்களுக்கும் உள்ள உறவை விளக்குகின்றனர் பரிணாமவியலாளர்கள்.  

"Neandertals (Homo neanderthalensis) are currently believed to be our closest evolutionary relatives. Although some researchers once thought they were our immediate ancestors in Europe, most now agree that Neandertals and modern humans most likely shared a common ancestor within the last 500,000 years, possibly in Africa." --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org
நியாண்டர்தல் மனிதர்கள் பரிணாமப்படி நமக்கு நெருங்கிய உறவினர்களாக நம்பப்படுகின்றார்கள். அவர்கள் நம்முடைய immediate மூதாதையர் என்று சில ஆய்வாளர்களால் கருதப்பட்டிருந்தாலும், இப்போது பெரும்பாலான ஆய்வாளர்கள் நியாண்டர்தல் மனிதர்களும் தற்காலத்திய மனிதர்களும் பொதுவான மூதாதையர்களை கொண்டிருக்கலாம் என்று ஒப்புக்கொள்கின்றனர் --- (Extract from the original quote of) The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org 

நியாண்டர்தல் மனிதர்களில் இருந்து நாம் வந்ததாக இந்த பதிவை படிக்கும் வரை நீங்கள் நினைத்திருந்தால் (Ape like creatures --> Neandertals --> Modern Humans) இன்றோடு அந்த நம்பிக்கையை புதைத்து விடுங்கள். நமக்கும் அவர்களுக்கும் பொதுவான மூதாதையராம் (Common Ancestor --> Neardertals & Common Ancestor --> Modern Humans). 

அது சரி, குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக நியாண்டர்தல்களை காட்டி பரிணாமத்திற்கு இது ஆதாரம் என்று சந்தோஷப்பட்ட பரிணாம உலகத்திற்கு இந்த பலத்த அடி எப்படி ஏற்பட்டது?  

இதற்கு விடைக்காண நீங்கள் நியாண்டர்தல் குறித்த ஆய்வுகளை உற்று நோக்கினால் பரிணாமவியலாளர்களுக்கு அப்படி ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்பதை உணரலாம்.     

முதலில், யார் இவர்கள்?  

1829 ஆம் ஆண்டே நியாண்டர்தல் படிமங்கள் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகள் கற்கால மனிதர்களின் படிமங்களாக  அங்கீகரிக்கப்படவில்லை. பின்னர் 1856 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் தான் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களாக அங்கீகரிக்கப்பட்டன. இந்த படிமங்கள் நியாண்டர்தல்-1 என்று அழைக்கப்பட்டன. 

நியாண்டர்தல் மனிதன் - உருவகப்படம்  

1886 ஆம் ஆண்டு,  பெல்ஜியத்தில் கிட்டத்தட்ட முழுமையான இரண்டு நியாண்டர்தல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்று வரை பல நியாண்டர்தல் படிமங்கள் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தல்கள், சுமார் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததாக கணக்கிட்டுள்ளனர். அதாவது இந்த இனம் சுமார் 30,000-24,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து விட்டது. எப்படி அழிந்தன?...பதிவின் இறுதியில் பார்ப்போம்.      

சரி, நியாண்டர்தல்களுக்கும் தற்காலத்திய மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? 

உடலளவில் வித்தியாசங்கள் உண்டு. நியாண்டர்தல்களின் உயரம் தற்காலத்திய மனிதனை விட சுமார் 5-6 இஞ்சுகள் குறைவு. இதையே 20,000 ஆண்டுகள் முந்தைய ஐரோப்பிய மனிதர்களோடு ஒப்பிட்டால் நியாண்டர்தல்களும் அந்த மனிதர்களும் ஓரே மாதிரியான உயரம்தான். நியாண்டர்தல்கள் திடமான உடலமைப்பை கொண்டிருந்திருக்கின்றார்கள்.  அவர்களுடைய மண்டை ஓடு பெரியதாகவும், மூளை தற்காலத்திய மனிதர்களோடு ஒப்பிடுகையில் சற்று பெரிதாகவும் இருந்துள்ளது.

மனிதர்களுக்கு முன் வந்தவர்களா நியாண்டர்தல்கள் ? 

இல்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித படிமங்கள் காணக்கிடைக்கின்றன. நியாண்டர்தல்களோ சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் மறைந்திருக்கின்றனர். ஆக, ஒரே காலக்கட்டத்தில் இருவரும் வாழ்ந்திருக்கின்றனர்.

"A few years ago, they [Neandertals] were thought to be ancestral to anatomically modern humans, but now we know that modern humans appeared at least 100,000 years ago, much before the disappearance of the Neandertals. Moreover, in caves in the Middle East, fossils of modern humans have been found dated 120,000-100,000 years ago, as well as Neandertals dated at 60,000 and 70,000 years ago, followed again by modern humans dated at 40,000 years ago. It is unclear whether the two forms repeatedly replaced one another by migration from other regions, or whether they coexisted in some areas " --- Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006.
சில வருடங்களுக்கு முன்னால், அவர்கள் (நியாண்டர்தல்) உடல்ரீதியாக தற்காலத்திய மனிதர்களுக்கு முன்னோர்களாக கருதப்பட்டார்கள். ஆனால், இப்போது நமக்கு கிடைக்கும் தகவல்படி, தற்காலத்திய மனிதர்கள் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருக்கின்றார்கள், அதாவது நியாண்டர்தல்கள் மறைவதற்கு பல காலங்களுக்கு முன்னராகவே. 
அதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் உள்ள குகைகளில், 120,000-100,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும், 60,000-70,000 ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தல்களின் படிமங்களும், பிறகு மறுபடியும் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய தற்காலத்திய மனிதர்களின் படிமங்களும் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வகைகளும் மாறி மாறி குடியேறினார்களா அல்லது இருவரும் சேர்ந்தே வாழ்ந்தார்களா என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது --- (Extract of the original quote of) Francisco J. Ayala, Darwin and Intelligent Design, Fortress Press, Minneapolis, 2006. 

நியாண்டர்தல்கள், மனிதர்களுக்கு முன்வந்தவர்கள் என்றால் அல்லது குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் என்றால், எப்படி ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க முடியும்?....இது முதல் அதிர்ச்சி....

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருந்தால் மிக சமீபத்திய ஆய்வு முடிவுகள் இன்னும் வியப்பை தரும். ஆய்வாளர்களுக்கோ இது ஒரு மிகப்பெரிய ஷாக். என்னவென்றால், மனிதர்களும் நியாண்டர்தல்களும் ஒன்றோடு கலந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கவேண்டும் என்பதுதான் அது.



தற்காலத்திய மனிதர்களின் மரபணுக்களில் (ஆப்ரிக்கர்கள் தவிர) 1-4% நியாண்டர்தல்களிடமிருந்து வந்துள்ளவாம். அதாவது நியாண்டர்தல்கள் அழிந்து விடவில்லை, அவர்கள் இன்னும் நம்மில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்களாம்.

"Researchers sequencing Neandertal DNA have concluded that between 1 and 4 percent of the DNA of people today who live outside Africa came from Neandertals, the result of interbreeding between Neandertals and early modern humans" --- Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.   
நியாண்டர்தல் DNA வை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், ஆப்ரிக்காவிற்கு வெளியே வாழும் மனிதர்களிடம் 1-4% நியாண்டர்தல் DNAக்கள் இருப்பதாக முடிவு செய்திருக்கின்றனர். இது நியாண்டர்தல்களும் தற்காலத்திய மனிதர்களின் முன்னோர்களும் இணைந்ததால் ஏற்பட்டது --- (Extract from the original quote of) Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.         

அது ஏன் தற்காலத்திய ஆப்ரிக்கர்களிடம் நியாண்டர்தல்களின் மரபணுக்கள் காணப்படவில்லை?...இதற்கு எப்படி விளக்கம் சொல்லுகின்றார்கள் என்றால், தற்காலத்திய மனிதர்கள் ஆப்ரிக்காவில் தோன்றியவர்களாம், நியாண்டர்தல்களோ ஐரோப்பாவில் தோன்றி ஆசியா வரை சுற்றியவர்களாம். மனிதர்கள் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி மத்திய கிழக்கிற்கு குடியேறிய போது அங்கிருந்த நியாண்டர்களுடன் கலந்து விட்டார்களாம். அதனால் தான் ஐரோப்பியர்கள், ஆசியர்களது மரபணுக்களில் நியாண்டர்தல்கள் காணப்படுகின்றார்களாம். அதே சமயம் ஆப்ரிக்கர்களிடம் இவர்கள் காணப்படவில்லையாம்.

ஒரு நிமிஷம்........இந்த இருவரும் சேர்ந்து வாரிசுகளை உருவாக்கியிருக்கின்றார்கள் என்றால், பிறகு எப்படி நியாண்டர்தல்களை வேறு ஒரு உயிரினமாக பார்க்க முடியும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை மனித இனங்களில் ஒன்றாகத் தானே பார்க்கவேண்டும்?....

ஆம், அறிவியலாளர்கள் இப்போது இந்த கருத்தையும் ஆதரிக்க துவங்கியிருக்கின்றார்கள்.

மரபணு சோதனைகள் ஆரம்ப காலகட்டங்களில் இருப்பதால் பொறுத்திருந்து தான் இவை இன்னும் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்.

ஆக, குரங்கு போன்ற உயிரினத்திருக்கும் நமக்கும் இடைப்பட்டவர்கள் நியாண்டர்தல்கள் என்ற கூற்றும் தவறு, அதுபோலவே நியாண்டர்தல்கள் மனிதர்கள் அல்ல என்ற கூற்றும் தவறு....

நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களா? 

இதுவும் ரொம்ப காலமாக நம்பப்பட்டு வந்த ஒன்று. அதாவது மனிதர்கள் அறிவில் சிறந்தவர்களாம், நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாம். அதனால் தான் அவர்கள் அழிந்துவிட்டார்களாம்.

முதலில் அறிவில் குறைந்தவர்கள் (நியாண்டர்தல்), பிறகு அறிவில் சிறந்தவர்கள் (தற்காலத்திய மனிதர்கள்) என்று வந்திருப்பதால் இது பரிணாமத்திற்கு ஆதாரம் என்று காட்டினார்கள் பரிணாமவியலாளர்கள். அந்தோ பரிதாபம், அந்த ஆதாரமும் சுக்கு நூறாக நொறுங்கியிருக்கின்றது.

சமீபத்திய ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், நியாண்டர்தல்களுக்கு பின்னர் வந்த மனிதர்கள் உருவாக்கிய கருவிகள் நியாண்டர்தல்கள் உருவாக்கிய கருவிகளை விட சிறந்தவை இல்லையாம். இது பரிணாமவியலாளர்களுக்கு மற்றொரு அடி.

"Research by UK and American scientists has struck another blow to the theory that Neanderthals (Homo neanderthalensis) became extinct because they were less intelligent than our ancestors (Homo sapiens). The research team has shown that early stone tool technologies developed by our species, Homo sapiens, were no more efficient than those used by Neanderthals" --- New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008. 
நியாண்டர்தல்கள் அறிவில் குறைந்தவர்களாக இருந்ததால் மறைந்து விட்டார்கள் என்ற கோட்பாட்டிற்கு மற்றொரு அடியாக விழுந்துள்ளது பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு. மனிதர்கள் உபயோகப்படுத்திய ஆரம்ப கால கருவி யுக்திகள், நியாண்டர்தல்கள் உபயோகப்படுத்திய யுக்திகளோடு ஒப்பிடும் போது சிறந்ததாக இல்லை என்று இந்த ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது --- (Extract from the original quote of) New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.   

இது மட்டுமா, இவர்கள் உடல் ஆபரணங்களை செய்திருக்கின்றார்கள், இறந்தவர்களை புதைத்திருக்கின்றார்கள், தாங்கள் வாழும் இடங்களை ஒழுங்குபடுத்திருக்கின்றார்கள் என்று பல...

சுருக்கமாக சொல்லுவதென்றால் இவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நியாண்டர்தல்கள் பேசினார்களா? 

இது போன்ற கேள்விகளுக்கு படிம ஆதாரங்கள் மூலம் விடை கூறுவது கடினம். ஆனால், அவர்கள் பேசுவதற்குண்டான தகுதிகளை கொண்டிருந்தார்கள் என்கின்றன ஆய்வுகள். எப்படி?, மனிதர்கள் பேசுகின்றார்கள் என்றால் அதற்கு காரணமான மரபணுக்களில் FOXP2 என்ற மரபணு முக்கியமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களின் இந்த மரபணுவில் உள்ள வேறுபாடுகள் அப்படியே நியாண்டர்தல் மனிதர்களிடமும் உள்ளனவாம்.

"Neandertals and modern humans share the same variant of the language gene FOXP2" --- The Neandertal Genome, Scince Magazine, sciencemag.org

அதனால் அவர்கள் பேசக்கூடிய தகுதியை பெற்றிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

"Genetic studies hint Neanderthals were equipped for language" --- Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177
மரபணு ஆய்வுகள் நியாண்டர்தல்கள் பேசுவதற்குரிய தகுதியை பெற்றிருந்ததாக தெரிவிக்கின்றன --- (Extract from the original quote of) Modern speech gene found in Neanderthals, Kerri Smith, Nature, 18th October 2007, doi:10.1038/news.2007.177 

சரி, எப்படி இவர்கள் மறைந்தார்கள்?

இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. பல்வேறு யூகங்கள் உள்ளன. மற்றொரு மனித இனத்தால் இவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், மற்ற மனிதர்களோடு இணைந்ததால் காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்பது போன்ற யூகங்கள்...

ஆக, நியாண்டர்தல் மனிதர்கள்,

  • தற்காலத்திய மனிதர்களோடு ஒன்றாக வாழ்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் நமக்கு முன்வந்தவர்களோ அல்லது குரங்கிற்கும் நமக்கும் இடைபட்டவர்களோ கிடையாது.
  • அவர்கள் மனித இனம் தான். முன்னர் எண்ணப்பட்டது போல அவர்கள் ape-like கிடையாது...
  • அறிவில் சிறந்து விளங்கியிருக்கின்றாகள்.
  • பேசக்கூடிய தகுதியை பெற்றிருந்திருக்கின்றார்கள்.

இனியும் உங்களிடம் யாரும் வந்து நியாண்டர்தல்கள் நமக்கு முன்வந்தவர்கள் என்றோ, நமக்கும் குரங்கு போன்ற உயிரினத்திற்கும் இடைப்பட்டவர்கள் என்றோ, அவர்கள் அறிவுத்திறனில் நம்மை விட குறைந்தவர்கள் என்றோ கூறினால், ஆய்வு முடிவுகளை எடுத்துக் காட்டி விளக்கம் கொடுங்கள். அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டதாக எடுத்து கூறுங்கள்.

நீங்கள் விடைபெறுவதற்கு முன்னால் இதையும் கேட்டுவிட்டு செல்லுங்கள். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து தற்காலத்திய மனிதன் வந்ததாக படம் போட்டு காண்பிப்பார்களே...அதுவெல்லாம் சுத்த non-s****.... 

இன்ஷா அல்லாஹ் இது பற்றி எதிர்கால பதிவுகளில்... (மனித பரிணாம பதிவு வெளிவந்துவிட்டது. பார்க்க <<இங்கே>>)

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Pictures taken from:
Picture - 1: Designed by Aashiq Ahamed
Picture - 2: As appeared in Science Daily magazine dated 26th August 2008.
Picture - 3: As appeared in Max Planck Institute's website

My sincere thanks to: 
1. Max Planck Institute, Germany.
2. Science Magazine.
3. Science Daily.
4. Nature Magazine.
5. Scientific American.
6. Wikipedia.
7. New Scientist Magazine.

References: 
1. A Draft Sequence of the Neandertal Genome - Science 7 May 2010: Vol. 328. no. 5979, pp. 710 - 722, DOI: 10.1126/science.1188021.
2. The Neandertal Genome - Sciencemag.com.
3. New Evidence Debunks 'Stupid' Neanderthal Myth, Science Daily, dated 26th August 2008.
4. In praise of… Neanderthal man - The Guardian, Wednesday 13 January 2010
5. Neandertal Genome Study Reveals That We Have a Little Caveman in Us, Gate Wong, Scientific American, 6th May 2010.
6. Creationist Arguments: A Neandertal in Armor? - FAQs, talkorigins.org.
7. Neanderthals and Humans Likely Interbred - K. Kris Hirst, dated 6th May 2010, archaeology.about.com.
8. The Neandertal Genome Project - The Max Planck Institute for Evolutionary Anthropology. www.eva.mpg.de.
9. Neanderthal genome reveals interbreeding with humans - Ewen Callaway, New Scientist, 6th May 2010.
10. Neandertals, Humans Share Key Changes To 'Language Gene' - Science Daily, 21st October 2007.
11. Neandertals have the same mutations in FOXP2, the language gene, as modern humans - 18th October 2007, anthropology.net.
12. Neanderthal 'make-up' containers discovered - BBC, 9th January 2010.
13. Welcome to the family, Homo sapiens neanderthalensis - New Scientist, Magazine issue 2760, 13th May 2010.
14. Neanderthals, Francisco Ayala, FOXP2 gene - Wikipedia.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ






13 comments:

  1. அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹ்...

    நியாண்டர்தல் பற்றி தெளிவாக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். நல்ல பயனுள்ள விளக்கங்கள்.

    ஒரு சந்தேகம்: முதல் புகைப்படத்தில் இருப்பது நியண்டர்தல் மனிதனா?

    அப்புறம், //குரங்கு போன்ற ஒன்றிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நிமிர்ந்து தற்காலத்திய மனிதன் வந்ததாக படம் போட்டு காண்பிப்பார்களே//--இதுதான் நான் ஒன்பதாவது படிக்கும்போது என் சமூக அறிவியல் பாட புத்தகத்தின் அட்டைப்படமாக இருந்தது. டார்வின்/பரிணாமம் என்றாலே அதன் லோகோ இதுதான் எனும் அளவுக்கு மிக பிரபலம். அது- //அதுவெல்லாம் சுத்த non-s****.... //-தான்... சந்தேகமேயில்லை.

    இப்போது சமீபத்தில் அதே படத்தை கொஞ்சம் மாற்றங்களுடன் எங்கோ பார்த்தேன். அந்த நிமிர்ந்த மனிதன் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக புஸ்தக மூட்டைகளை சுமந்து குனிந்து குனிந்து... கடைசியில் தலைகூட சீவாம... மீசை/தாடி எல்லாம் ட்ரிம் பண்ணாம பெருசா வளர்த்து டெஸ்க்டாப் கணிப்பொறிக்குமுன் கவுந்து அடிச்சி கூன் விழுந்து உக்காந்து... கடைசியாய் படுக்கை மெத்தை மீது உள்ள லேப்டாப் முன்னாடி குரங்குபோல அகோரமாய் 'நான்குகாலில்' "நிற்பது" மாதிரி...செம காமடி. நீங்கள் இதை பார்த்ததுண்டா?

    ReplyDelete
  2. அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம்,

    //ஒரு சந்தேகம்: முதல் புகைப்படத்தில் இருப்பது நியண்டர்தல் மனிதனா?//

    அதாவது, ஒரு மண்டை ஓடு கிடைத்தாலே அதை வைத்து முகம், உடல் என்று வரைந்து தள்ளுவார்கள் பரிணாம கற்பனையாளர்கள். அப்படிப்பட்ட அற்புத கற்பனையில் உருவாகியது தான் அந்த படம். நமது பாட புத்தகங்களில் காணப்படும் அனைத்தும் மண்டை ஓட்டை (மற்றும் இதர படிமங்கள்) வைத்து இவர்கள் கற்பனையானால் வரைந்ததுதான்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ.

    ReplyDelete
  3. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தாங்கள் குறிப்பிட்டுள்ள படத்திற்கு கீழே தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. மனிதன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொது இந்த நியண்டர்தால் மனிதன் எங்கிருந்து வந்தான், இந்த மனிதர்களுக்குள் எதற்காக மரபணு மாற்றம் ஏற்பட்டது என்ற நியாயமான கேள்விகள் எழும். இதில் என்னுடைய சுய கருத்தை கூற விரும்புகிறேன்.

    அக்கால மனிதர்களுக்கு இடையில் போக்குவரத்துக்காக விலங்குகலையே பயன்படுத்திய கால கட்டம். வெகு தொலைவு போவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. வேறு வேறு இடங்களில் வாழ்ந்த மனிதர்களுக்குள் தொடர்புகள் துண்டிக்க பட்டிருக்க வேண்டும், மரபுகள் கலக்காதலால் இரு வேறு குழுக்களாக வாழ்ந்திருக்க வேண்டும், ஆகவே ஒரு சதவிதத்திற்கு குறைவான மாறுபட்ட மரபணுவை கொண்டுள்ளனர். போக்குவரத்து, வியாபாரம் அதிகமாக அனைத்தும் கலந்தது. நியாண்டர்தால்கள் மறைந்தனர்.

    தற்போதும் கூட மனிதர்களுக்கிடையே வித்தியாசம் உள்ளது, சீனர்கள் குள்ளமாகவும், ஜப்பானியர்கள் சப்பை மூக்கு உடையவர்கலாகவும் உள்ளனர், இதையே அடிப்படையாக வைத்து மனிதர்கள் அனைவரும் வேறு வேறு குரங்கிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறுவது என்பது எப்படி சரியானவை அல்லவோ (ஒரு குரங்கிலிருந்து வந்தான் என்பதையும் நாம் ஒப்பு கொள்ளவில்லை) அதே போன்று தான் நியண்டர்தாலும் வேறு ஒரு உயிரினம் என்று கூறுவதும்.

    ReplyDelete
  6. சகோதரர் கார்பன் கூட்டாளி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய உதவிக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

    அருமையான பதிவு ஜஸாக்கலாஹ் க்கைர் :-)

    ReplyDelete
  8. உங்களது கருத்துக்களை சரியென்றே வைத்துக்கொள்வோம்.ஆனால் தற்போது உள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை.நியாண்டர்தல் மனிதர்கள் தற்போது காணப் படுவதில்லையே ஏன்?

    ReplyDelete
  9. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    ///ஆனால் தற்போது உள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை.///

    சகோதரர், முதலில், குரங்குகள் மனிதர்களாக மாறுகின்றன என்பது தற்போதைய பரிணாம புரிதல் இல்லை. இருவருக்கும் பொதுவான மூதாதையர் என்பது தான் தற்போதைய புரிதல். அந்த பொதுவான மூதாதையர் யார், எப்படி, அதற்கு ஆதாரம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு கற்பனை வளம் மிகுந்த பரிணாமவியலாளர்கள் தான் பதில் கூறவேண்டும்.

    ///நியாண்டர்தல் மனிதர்கள் தற்போது காணப் படுவதில்லையே ஏன்?///

    இதற்கான பரிணாமவியலாளர்களின் பதில், இந்த பதிவில் தெளிவாக உள்ளதே சகோதரர்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  10. சகோ.ஆஷிக்,

    பரிணாமம் குறித்து இவர் கேள்விக்கேட்கிறார் என சுவனப்பிரியர் பதிவில் சார்வாகனிடம் சொல்லி இருந்தீர்கள். வந்து பார்த்தால் அவரும் இவரே :-))

    சரி சார்வாகன் உங்களுக்கு அவரது தொடர்ப் பதிவில் பதில் சொல்வாராக இருக்கும். உங்களது மாற்றுப்பரிமாணக்கொள்கை என்ன? உயிரின் தோற்ற வரலாறு என்ன? சுறுக்கமாக சொன்னால் நலம். பரிணாமவியல் தத்துவத்தை எதன் அடிப்படையில் இடப்பெயர உத்தேசம் என தெரிந்து கொள்ள உதவும்.

    உங்கள் தியரியை சொல்லுங்கள் கேட்போம், சரியா , தவறா என்று நானும் என் பங்கிற்கு தோண்டிப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. சகோதரர் வவ்வால்,

    அஸ்ஸலாமு அலைக்கும்...

    என்னுடைய பெயர் ஆஷிக் அஹமத். நான் இந்த தளத்தை நடத்துபவன். நீங்கள் குறிப்பிடுவது முஹம்மது ஆஷிக். அவர் பின்னூட்டவாதி என்னும் தளத்தை நடத்துகின்றார்.

    நாங்கள் இருவரும் வெவ்வேறு ஆட்கள்.

    இங்கே உள்ள பதிவுகளை, விவாதங்களை சற்றே பொறுமையாக நேரம் கிடைக்கும்போது படியுங்கள். மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க எனக்கு நேரம் இல்லை. தவறாக நினைக்க வேண்டாம். எங்கள் நிலைகளை பதிவுகளில் தெளிவாகவே கூறி இருக்கின்றோம்.

    ஒத்துழைக்க போகும் தங்களுக்கு நன்றி..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்க இறைவனை பிரார்தித்தவனாக,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  12. அண்ணே started answering for this questions , visit http://walkingdoctorcom.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete
  13. bro ,
    almost answered ,

    http://walkingdoctorcom.blogspot.in/2012/02/7.html

    if not please ask ur doubts regarding this issue

    ReplyDelete